Monday, March 31, 2008

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் முதல் ரேங்க் பெற்ற மாணவி


கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் முதல் ரேங்க் பெற்ற மாணவி

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் யு.கே.ஜியில் முதலிடம் பெற்ற பாத்திமா ரீஸ்மாவுக்கு ஆண்டுவிழாவில் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

இவரது தந்தை ஹமீது யாசின் துபாய் ஈடிஏ ஜீனத் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மேலும் இவர் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

ஹமீது யாசின் தந்தை கீழக்கரை தினகரன் செய்தியாளராவார்.

திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா





Dear Brother
Assallamu Allaikum Wa Rahmathullahi wa Barakathuhu

Please find in the attachment the scanned copy of the
Invitation for the AIMAN WOMEN COLLEGE'S
5th Annual Convocation to be held on 3rd April 2008.

Kindly forward this message to all.

Kindly include in your Duaas for the successful
completion of all the events scheduled between
3 rd and 5th April 2008.

In case if you are unable to attend, please make Duaas for its success.

Regards
Seyed JAAFAR
Secretary
AIMAN EDUCATION AND WELFARE SOCIETY

My contact number in India: (91) 94860 14192
In UAE : (971 50) 49 29 184

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் எதிர்வரும் மே 18,2008 ஞாயிறன்று
இஸ்லாமிய இலக்கிய கழகம் மாநில மாநாட்டை நடத்த இருப்பதாக அதன்
பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகம் இதுவரை ஏழு அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய
மாநாடுகளை நடத்தியிருக்கிறது. ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்த வேண்டும்
என்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தீர்மானத்தின்படி, முதல் மாநில மாநாடு
மே 18, 2008 அன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நிகழ இருக்கிறது.

சிறப்பு நிகழ்வுகள்

கருத்தரங்கம் : கருத்தரங்கக் கரு

தமிழக இலக்கிய, சமூக, கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியில்
முஸ்லிம்களின் பங்கு என்பது இம்மாநாட்டுக் கருத்தரங்கப் பொருளாக ( Theme
of the Conference ) இருக்கும்.

1. இதுவரை ஆய்வு செய்யப்படாத இஸ்லாமிய இலக்கியங்கள்
2. தமிழகக் கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பாடுபட்ட
முஸ்லிம் சான்றோர்கள்
3. கல்வி வளர்ச்சியில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு
4. மார்க்கக் கல்வி வளர்ச்சியில் மதரஸாக்களின் பங்களிப்பு
5. தமிழகப் பண்பாட்டு ( உணவு, உடை,அணி,இசை, கட்டிடக் கலை, கைவினைப்
பொருள், நாடகம், பிறப்பு, திருமணச் சிறப்புச் சடங்குகள், ஈத், கந்தூரி,
விளையாட்டு, குடிப்பெயர், தொழில், வணிகம், மொழி) வளர்ச்சியில்
முஸ்லிம்களின் பங்கு
6. முஸ்லிம்களின் மத நல்லிணக்கப் பணிகள்
7. நாட்டுப்புறவியல்
8. மார்க்க இலக்கியம்
9. நவீன இஸ்லாமிய இலக்கியம்

பேராளர் :

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களும், புரவலர்களும் மட்டுமே
பேராளர்களாகக் கலந்து கொள்ள முடியும். பேராளர்களுக்கும்,
வெளியூர்க்காரர்களுக்கும் உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்து
தரப்படும்.

பேராளர்களுக்கெனத் தனிக் கட்டணம் இல்லை

கட்டுரைகள் ஏ4 அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல், கணினி அச்சு செய்து
அனுப்ப வேண்டும்.
கட்டுரைகளைத் திருத்த ஆய்வரங்கக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

மாநாட்டுச் சிறப்பு மலர் :

சிறப்பு மலருக்குப் பொருத்தமான வகையில் ஏ4 அளவில் 6 பக்கங்களுக்கு
மிகாமல் ஒளியச்சு செய்த கட்டுரைகள், 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதைகள்
வரவேற்கப்படுகின்றன.

விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரக் கட்டணப்பட்டியல்

மலர் அளவு : 22 செ மீ x 28 செ மீ

ஒரு பக்க வண்ண விளம்பரம் ரூ 8000
ஒரு பக்க கறுப்பு வெள்ளை விளம்பரம் ரூ 5,000
அரைப் பக்க விளம்பரம் ரூ. 3,000

மாநாட்டு மலருக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பரக் குழு

அல்ஹாஜ் நூர் முஹம்மது, ஒலிம்பிக் கார்ட், சென்னை
அல்ஹாஜ் அஹ்மது ரிபாயி
அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லா
அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஷாஜஹான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
ஹாஜியானி பாத்திமா முஸாஃபர்
அல்ஹாஜ் பி. அப்துல் காதர், எம்.எம்.எஃப் லெதர்ஸ்

வரைவோலை / காசோலை : ISLAMIA ILAKKIYA KHAZHAGAM
என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க அளவில் அனுப்பப்பட வேண்டும்
( விளம்பரச் செய்தியைத் தனியாகத் தட்டச்சு செய்து தர வேண்டுகிறோம் )





செயல்திட்டங்கள்

1 திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 'இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப்
பண்பாட்டு இருக்கை'யினை நிறுவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

2. இயங்காமல் இருந்த தஞ்சைப் பல்கலைக்க கழக 'இஸ்லாமிய ஆய்வு இருக்கை'யை
பிரசிடெண்ட் ஓட்டல் தலைவர் ஜனாப் அபுபக்கர் வாயிலாகப் ( துணைத்தலைவர்,
இஸ்லாமிய இலக்கியக் கழகம்) புதிதாக நிதி உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு
விட்டது.

3. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக வேண்டுகோளின்படி,
பினாங்கு டத்தோ ஜனாப் பரக்கத் அலி அவர்கள் நிறுவிய மர்ஹூம் ஹாஜி 'மாயின்
அபூபக்கர்' பெயரில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டுச்
சொற்பொழிவிற்கான அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.

4. முனைவர் பேராசிரியர் ஜனாப் நெயினார் முஹம்மது பெயரில் ஏதேனும் ஒரு
பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச்
சொற்பொழிவு நிறுவப்பட உள்ளது.

5. அறங்கக்குடி வள்ளல் ஒய்.எம்.எச். ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் பெயரில்
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறுவ ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

6. நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா, சேலம் ஈ.வெ.ரா.,
கோவை பாரதியார், அண்ணாமலை, அன்னை தெரசா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்,
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய எஞ்சியுள்ள பல்கலைக்கழகங்களில்
இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிறுவ
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. வருகிற மே 18 ஆம் தேதி 2008 இல் இவ்விழாவில் சதாவதானி சேகுத்தம்பிப்
பாவலரின் நினைவு அஞ்சல் தலையினை மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமிகு.
ராசா அவர்கள் ( தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ) வெளியிடுகிறார்.

8. இவ்வாண்டும் 'அல்ஹாஜ் மர்ஹூம் பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா
அறக்கட்டளை' சார்பாக உமறுப்புலவர் விருதும், ரூபாய் ஒரு இலட்சமும்
வழங்கப்படுகிறது.

9. கல்வித்தந்தை சமூக வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் அவர்களுக்கும்,
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தை நிறுவிய பெரும்புலவர் சி.நயினார் முஹம்மது
அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

10. பொற்கிழியுடன் கூடிய சிறப்பு விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.

நூல் வெளியீடு

மாநாட்டில் புதிய நூல்கள் வெளியிடப்படும். நூல்களை வெளியிட விரும்புவோர்
இப்போதே பதிவு செய்ய வேண்டுகிறோம். நூல்கள் 2007,2008 ஆம் ஆண்டுகளில்
வெளிவந்ததாக இருக்க வேண்டும். 80 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க
வேண்டும். 100 படிகள் பேராளர்களுக்கு வழங்க 2008 ஏப்ரல் இறுதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டும்.

நூல் அன்பளிப்பு

பேராளர்களுக்குத் தங்கள் நூல்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புவோர் 300
படிகளுக்குக் குறையாமல் மாநாட்டு அலுவலகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

அரிய நூல் பதிப்பு

இதுவரை அச்சு வடிவம் பெறாத அரிய இஸ்லாமிய இலக்கியங்கள் இம்மாநாட்டில்
வெளியிடப்படவிருக்கின்றன.

இஸ்லாமிய இலக்கியக் கழகம்

சிறப்பு நெறியாளர்கள்

பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முஹம்மது
நீதியரசர் சி.மு. அப்துல் வகாப்
டாக்டர் சே.சாதிக்


நெறியாளர் : கவிக்கோ அப்துல் ரகுமான்
தலைவர் : கேப்டன் என்.ஏ. அமீர் அலி
துணைத்தலைவர் : பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர்
பொதுச்செயலாளர் : எஸ்.எம். ஹிதாயத்துல்லா - 044 2846 0128 / 98 400 40067
பொருளாளர் : எஸ்.எஸ். ஷாஜஹான்

அமீரக ஒருங்கிணைப்பாளர்

முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் 050 452 4990
முதுவை ஹிதாயத் 050 51 96 433


விளம்பரம் அனுப்ப வேண்டிய முகவரி :

எஸ்.எம். ஹிதாயத்துல்லா
பொதுச்செயலாளர்
இஸ்லாமிய இலக்கிய கழகம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணா சாலை
சென்னை 600 002
தொலைபேசி : 044 2846 0128 / 98 400 40067




மாநாட்டுப் புரவலர்கள்

1. அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன்
மேலாண் இயக்குநர், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்கள்
2. அல்ஹாஜ் எஸ்.எம். ஹமீது அப்துல் காதர்
தலைவர், சதக் அறக்கட்டளை
3. அல்ஹாஜ் டி.இ.எஸ். பத்ஹுர் ரப்பானி
தாளாளர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
4. அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துல் காதர் புஹாரி ( சீதக்காதி அறக்கட்டளை )
5. அல்ஹாஜ் முஹம்மது இல்யாஸ், பேங்காங்
6. அல்ஹாஜ் சேகு நூர்தீன், ஏ.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை
7. அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தபா, ரஹ்மத் அறக்கட்டளை
8. அல்ஹாஜ் ஒய்.எம். ஹபீபுர் ரஹ்மான், அரங்கக்குடி
9. அல்ஹாஜ் எஸ். அஹமது மீரான், புரபஷனல் கொரியர்
10. அல்ஹாஜ் ஆர். தாவூத் பாட்சா , நிறுவனர் ஆர்.டி.பி.கலை அறிவியல் கல்லூரி
11. அல்ஹாஜ்.எல்.கே.எஸ். சையது அஹமது, திநகர் எல்கேஎஸ். கோல்டு ஹவுஸ் பி லிட்
12. அல்ஹாஜ் எஸ் முஹம்மது ஜலீல், தாளாளர் , சேது பொறியியல் கல்லூரி
13. அல்ஹாஜ் ஏ. அபூபக்கர், தலைவர், பிரசிடெண்ட் ஹோட்டல்
14. அல்ஹாஜ் ஹெச். நூர் முஹம்மது, எம்.டி, ஒலிம்பிக் கார்ட்,சென்னை
15. அல்ஹாஜ். பஷீர் அஹமத்,யூசிமாஸ்
16. அல்ஹாஜ். ஷாகுல் ஹமீது, நோபிள் மரைன்
17. அல்ஹாஜ். பி. அப்துல் காதர், எம்.எஃப்.லெதர்ஸ்
18. அல்ஹாஜ் ராஜா ஹசன் ( ஐக்கிய ஜமாஅத் தலைவர், மதுரை )
19. டாக்டர் எஸ்.ஏ. சையது சத்தார் ( ரப்பானி வைத்திய சாலை )
20. அல்ஹாஜ் எஸ்.எம். அப்துல் வாஹித், தலைவர் அல்ஹாஜ் மர்ஹும்
பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா அறக்கட்டளை
21. வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது
அறங்காவலர், வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளை
22. சீனாதானா அல்ஹாஜ் எஸ்.எம். செய்யது அப்துல் காதர்
தலைவர், ஸ்கை நிறுவனம்,
23. அல்ஹாஜ். சபியுல்லாஹ் ( நிஜாம் பாக்கு, புதுக்கோட்டை )
24. அல்ஹாஜ். ஒயிட் ஹவுஸ் பாரி
25. அல்ஹாஜ் ரபீக் ( தாஜ்மஹால் புகையிலை, புதுக்கோட்டை )
26. அல்ஹாஜ் அமானுல்லாஹ், ஈரோடு
27. அல்ஹாஜ் கே.கே.எஸ்.கே. ஹைதர், ஈரோடு
28. கே. செய்யது முஹம்மது ( இலாஹி இண்டர்னேஷனல் )

Islamic Summer Classes for Boys and Girls

இது பெண்களுக்கான கோடைக்கால வகுப்பின் தகவல் - நாகர்கோவில்
இது ஆண்களுக்கான கோடைக்கால வகுப்பின் தகவல் - குளச்சல்.

உங்களது பிள்ளைகளை இந்த கோடைக்காலத்தில் பயனுள்ள மார்க்க
கல்வியை பயில இந்த அரிய குறுகிய கால வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.
www.darulsafa.com

Sunday, March 30, 2008

துபாய் ஈமான் அமைப்பு நிகழ்ச்சியில் மௌலவி ஓ.எம்.அப்துல் காதிர் பாகவி ஹஜ்ரத்


துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு

துபாய் ஈமான் அமைப்பு சிறப்பு மார்க்கச் சொற்பொழிவினை 31.03.2008 திங்கட்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் ( சின்ன ஜர்வூனி மஸ்ஜித் ) நடத்த இருக்கிறது.


சிறப்புச் சொற்பொழிவாளர்

மௌலவி அல்ஹாஜ் ஓ.எம். அப்துல் காதிர் பாகவி


தலைவர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
தலைவர், மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா எனும் தமிழக அரபிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு
முதல்வர், வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி
முன்னாள் முதல்வர், நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி
முன்னாள் இமாம், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசல்

நிகழ்ச்சி ஏற்பாடு

விழாக் குழுவினர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்

தொடர்புக்கு : 050 2533212 / 050 58 53 888


http://niduronline.com/?p=501
http://satrumun.com/localnews/
www.muduvaihidayath.blogspot.com
www.indianmuslimassociation.blogspot.com

Saturday, March 29, 2008

இந்து பாசிசத்தின் உளவியல் - டாக்டர்.ருத்ரன்

தெகல்கா வாக்குமூலங்கள் :இந்து பாசிசத்தின் உளவியல்!

""உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்'', என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது. குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி; தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி; யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.

"எதைச் செய்வது சரி, எப்படிச் செய்வது சரி' என்பதெல்லாம், மனித மனம் நாளும் கற்றுத் தேர்பவை. மனவியல் கருத்தின்படி, ஊக்குவிக்கப்படுவன (மிட்டாயோ? கைதட்டலோ?) சரியானவை என்றும், தண்டிக்கப்படுவன (அடிக்கப்படுவதோ? ஒதுக்கப்படுவதோ?) தவறானவை என்றும், மனம் கற்றுக் கொள்கிறது. "தண்டிக்கப்பட மாட்டோம், தப்பிப்போம்' என்று மனதுக்குத் தெரிந்தால் — தவறானதாகத் தெரிந்து வைத்தவற்றைக் கூட முயன்று பார்க்கத் துணியும். தண்டனை கிடைக்காது எனும் தைரியமும், ஓர் ஊக்குவிப்புதான். இப்படி மிருகத்தனமான செயல்கள், நேரடியாகவோ? மறைமுகமாகவோ? ஊக்குவிக்கப்பட்டால், மனம் "இதுவே நியாயம்' என்றும் நம்பியிருக்கும்.

சரியான காரியங்களைச் செய்தபின் இயல்பாகவே மனதுக்குள் மகிழ்ச்சியும், பெருமையும் நிலவும். "வெட்டினேன், கொளுத்தினேன், கொன்றேன், கொள்ளையடித்தேன், கற்பழித்தேன்' என்று பெருமையோடு பேசும் குஜராத் இந்து மதவெறியர்களின் மனங்கள், "அந்தக் காரியங்கள் நியாயமானவை, அவசியமானவை, சரியானவை' என்று தீர்மானித்து விட்டதால்தான், இத்தனை ஆண்டுகள் கழித்தும் தங்களது வெறிச் செயல்களை "வீர சாகசங்களாகவும், வெற்றிச் சரித்திரங்களாகவும்' அவர்கள் கொக்கரிக்கிறார்கள். அவர்களின் மனங்களுக்கென்றே ஒரு "கோணலான கல்வி' தொடர்ந்து பாடமாகப் பதியவைக்கப்பட்டுள்ளது.

"திருடுவது, கொல்வது, கற்பழிப்பது போன்றவை சரி'யென்று, பொதுவாக எந்த மதத்திலும் கூறப்படுவதில்லை. ஆனாலும், அந்தக் கலவரமும், வெறியாட்டமும் மதத்தின் சார்பாகவே நடந்தது. "மிதமானவை, மூர்க்கக் கட்டமைப்பு இல்லாதவை' என்று சொல்லிக் கொள்ளும் எல்லா மத மார்க்கங்களிலும் தாம் உயர்ந்தவர், கடவுளுக்கு அருகிலுள்ளவர் — தமது வழி வராதவரெல்லாம் தீயவர், தாழ்ந்தவர் என்ற மறைமுக போதனைகளும் உண்டு.

மேலோட்டமாகவேனும் நெறி புகட்டுவதாய் கருதப்படும் மதவரம்புகளை மீறி, அதைச் சார்ந்த ஒரு கூட்டம் வெறியாடுகிறது என்றால் — அந்தக் கும்பல் கயவர்களாலானது அல்லது அந்த மதநெறியே கோணலானது என்றே அர்த்தம். மேல் கீழ் எனும் பேதவெறியை தொடர்போதையாக ஊட்டி விட்டால், "தர்மம்' என்பதற்கே ஒரு புதிய அர்த்தம் தோன்ற ஆரம்பிக்கும்.

சமூக சட்ட அங்கீகாரமற்ற கோரச் செயல்களில் இவர்கள் ஈடுபடுவதற்குக் காரணம், உள்ளே வேரூன்றிக் கிடக்கும் "தான் உயர்ந்தவன்' எனும் ஆணவம். இந்தப் போலி சமூகச் செல்வாக்கு "தன்னைவிடத் தாழ்ந்தவனை மிதிக்கலாம்' என்பதற்கு ஒரு அனுமதி போன்றே அவர்களது மனத்திற்குள் தோன்றும். இப்படியொரு கோணலான கண்ணோட்டத்தில் செய்த வன்முறை, வெறி, வரம்பு மீறல், கேவலம், கொடூரம் — எல்லாமே தக்க நேரத்தில் செய்த, சரியான காரியமாகவே அவர்களுக்குப் படும்.

அதனால்தான் அவர்களிடம் இது குறித்து வருத்தமும் இல்லை, வெட்கமும் இல்லை; குற்றமும் புரிந்து விட்டு, குறுகுறுப்பும் இல்லாதது மட்டுமல்ல, இவர்களிடம் சாதித்து விட்ட மமதையும் வெளிப்படுகிறது. இது வெறி மட்டுமல்ல, தண்டிக்கப் படாததால் வந்த தைரியம். கொலையும், கற்பழிப்பும், மனிதத்தன்மையே அல்ல என்பதை உணரக்கூட முடியாத அளவுக்கு உள்ளே மதவெறியும், ஆதிக்கத் திமிரும் வளர்ந்திருக்கிறது. இது ஆபத்தானது.

பொதுவாக, ஒரு போரின் முடிவில், வென்றவர்கள் தோற்றவர்களின் உடைமைகளை (பொருள்களை, பெண்களை) கொள்ளையடிப்பது, காலங்காலமாய் இருக்கும் ஒரு கோணலான நியதி. வெற்றிபலம், தோல்விபலவீனம் என்று ஏற்றுக் கொள்ளப்படுவதால், "பலவீனமானவர்களைக் கொள்ளையடிப்பதும், கொல்வதும், கற்பழிப்பதும், தவறு' என்பதற்குப் பதிலாக, "யுத்த தர்மம்' என்றே இது போற்றப்பட்டு வந்துள்ளது. குஜராத்தில் நடந்தது யுத்தமா?

"எதிரிகள் மனிதர்களேயல்ல' என்ற மூர்க்க சித்தாந்தம்தான் ஒரு படையைத் தூண்டிவிட முடியும். குஜராத்தில் சேர்ந்தது ஒரு பரிதாபகரமான படை. இதுநாள்வரை, ஒதுக்கித் தாழ்த்தி வைக்கப்பட்ட ஒரு கூட்டம், சண்டைபோட மட்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. "தாங்கள் தாழ்வாகக் கருதப்பட்டவர்கள்', என்பதை மறந்து, "தம்மிலும் தாழ்ந்தவனாக ஒரு எதிரியை அவர்கள் பார்த்தார்கள். இந்தப் போலி தர்மத்திற்கான யுத்த நேரத்தில் "ஆதிக்கம் செலுத்தியவன் தன் தோளோடு தோள் நிற்கிறானே' என்ற பொய்யான மகிழ்ச்சி, கூட்ட மனப்பான்மையில் "கொலைவெறி'யாகவும் மாறிவிட்டது. போர்ப்படை என்பதும் ஒரு கூட்டம்தான்.

எல்லாக் கூட்டங்களிலும், எப்போதுமே ஒரு தலைவன் உண்டு. அவனது ஆணைப்படியே அந்தந்த கூட்டம் இயங்கும். யதேச்சையாகத் திரளும் கூட்டங்களைத் தவிர, ஒரு இயக்கமாக, கட்சியாக, மதமாக அமையும் கூட்டங்கள், தலைவனை நேரில் பார்க்காத போதும் ஆணைகளைப் பின்பற்றும். இவ்வகைக் கூட்டங்களுக்கு "தலைவன் சொல்வதே சரி, அவன் ஆணைப்படி நடப்பதே சரி' எனும் ஒரு மூர்க்கப் பின்பற்றுதல் சிந்தனை அமையும். இவ்வகைத் தலைவன், எதிரியை அடையாளம் காட்டித் தன் கூட்டத்தையே போரிட வைக்க முடியும்.

தான் அடையப் போகும் பெரிய லாபத்திற்காக, இந்தக் கூட்டத்திலுள்ள வேலைக்காரர்கள் அடையும் அற்ப சந்தோஷங்களை அவன் கண்டு கொள்ள மாட்டான். சில எலும்புத் துண்டுகளை, அவனது வெறிநாய்கள் தாங்களாகவே பொறுக்கிக் கொள்வதும், அவனுக்கு வசதியாகவே அமையும். போர் முடிந்து, வெற்றி கிடைத்த பிறகுதான் "கூட்டத்துக்குத் தலைவன்' கொஞ்சம் தெரிவான். ஒன்றாக வெறியாடி, அவனுக்கு வெற்றி தேடித் தந்தவர்களில் சிலரே உயர்வார்கள். தற்காலிகக் கூலியாக மட்டுமே மற்றவர்கள் ஒதுக்கப்படுவார்கள். சாணக்கிய ரீதியில், இது "ராஜநீதி' என்றும் கூட ஏற்கப்படும்.

இவ்வளவு யுத்த தந்திரங்களோடு செயல்பட்டு ஒடுக்குமளவு, குஜராத்தில் யார் எதிரி? அடிபட்டவன், என்ன தவறுகள் செய்தான்? இது பழிவாங்குதல் என்றால், பழிதான் என்ன? தொடர் தவறுகளின் ஆரம்பம் எது? மதவெறியே அடிப்படைக் காரணமென்றால், வெறியூட்டும் மதத்திலுள்ள தவறுகள் எவை? நேற்றுவரை தெருவில் சந்திக்கும்போது சிரித்துப் பழகிய பெண்ணை, இன்று துரத்திக் கற்பழிப்பதும், கொல்வதும் சாத்தியம் என்றால் அவ்வெறியை ஊட்டியது யார்? ஊக்குவிப்பது யார்?

தொலைக்காட்சியிலும் பத்திரிக்கையிலும், இது குறித்து மேலோட்டமாகத் தெரிந்து கொண்டு, கொஞ்சமாக முகம் சுளித்து, மிகக் குறைந்த அளவில் வருத்தப்படும் நடுத்தர வர்க்கத்திற்கும், இதிலுள்ள வக்கிரமும் உக்கிரமும் புரியவே செய்கிறது. வழக்கமான கோழைத்தனம் வாயை மூடிவைத்தாலும், தேர்தலில் வரக்கூடிய தைரியம் என்ன ஆனது?

வெறிச் செயல்களுக்கு ஆதரவாக வாக்களிப்பதும், அச்செயல்களை ஊக்குவிப்பதேயாகும். நடுத்தர வர்க்கத்தின் இந்த மௌனமான மறைமுகமான ஊக்குவிப்பிற்குக் காரணம், சுயநலம் மிகுந்த அச்சம்; "ஜெயிக்கும் குதிரை மேலேயே பணம் கட்டலாமே' எனும் சூதாட்ட மனப்பான்மை; வெல்பவன் பலசாலி – அவனை எதிர்ப்பதை விட கூட்டு சேர்ந்து கொள்ளலாமே, என்ற கோழைத்தனமான "குயுக்தி'. இந்த நடுத்தர வர்க்கமும் ஒரு கூட்டம்தான்.

மூர்க்க வெறியோடும் மூட பக்தியோடும், ஒரு தவறான தலைவனைப் பின்பற்றும் கூட்டம், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெறியாட்டம் போடும். வேடிக்கை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் மௌனமே, இந்தக் கூட்டத்தை இன்னும் உரக்கச் சப்தமிட வைக்கும். "தன்னலக் குறிக்கோள்' மட்டுமே கொண்ட தலைவனிடம் அடிமைப்பட்டுக் கிடக்கும் இந்தக் கூட்டம், "வெறியாடும் வாய்ப்பி'லேயே விடுதலையின் திருப்தியை அடையும். ஒரு முறை ருசித்த பிறகு, அடுத்த வெறியாட்ட வாய்ப்புக்குக் காத்திருக்கும். இந்தக் கூட்டத்தை, ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம், வெறியலையில் ஒருநாள் சுலபமாக உள்ளிழுக்கப்பட்டுவிடும்.

தனி மனிதனுக்கு "தன் வீடு, தன் இடம்' எனும் பாதுகாப்பான எல்லைகள் தேவைப்படுகின்றன. வெளியே ஒரு கூட்டத்துக்குள் நுழையும்போது, அவனுக்குத் "தன் இடம்' என்பதில்லாததால், ஒரு பாதுகாப்பின்மை உணர்வு ஏற்படுகிறது. இது ஒரு பயமாகவும் மாறுகிறது. இந்தப் பாதுகாப்பின்மையின் பயத்தை, அவன் கூட்டத்தின் எண்ணிக்கையில் சரி செய்ய முயலுகிறான். தன்னைப் போலவே, பல தனிமனிதர்கள் இருக்கும் கூட்டத்தாலேயே தைரியம் பெறுகிறான். கூட்டத்தின் அளவு அதிகரிக்கும்போது தனது தனித்தன்மையை மீறி, கூட்டத்தின் ஒட்டுமொத்தத் தன்மையில் கலக்கிறான். பெரும்பான்மை மக்கள் கூட்டத்தில் செம்மறியாடுகள் போலிருந்தாலும், அதில் ஒரு கும்பல் தலைவனின் கூலிப்பட்டாளமாகச் செயல்படும்.

இந்தக் கும்பல்தான் கொள்ளையடித்து, "யுத்தம்' எனக் கூறி மற்றவர்களை இழுத்தும் செல்லும். எதிரியைத் தலைவனும், அவனுடைய கும்பலும் அடையாளம் காட்டும்போதே, கூட்டத்தில் "கொல்லப்படுமுன் கொல்' எனும் ஆதி மனிதத் தற்காப்பு எண்ணம் ஊட்டப்படும். குஜராத்தில் எதிரிகளாகக் கூறப்பட்டவர்கள் கொல்ல வரவில்லை, பயந்தே ஓடினார்கள். கும்பலோடு கூட்டம் அவர்களை வேட்டையாடியது. சாதாரணக் கோழைகளுக்கு, "கூட்டம்' ஊக்க மருந்தாக மட்டுமல்ல, பாதுகாப்புக் கவசமாகவும் மாறுகிறது.

கோழைகள் பயந்தவர்கள். "தண்டனையைத் தவிர்ப்பதே!' அவர்களது அடிப்படை நோக்கம். ஆனால், கோழைகளுக்கு ஆசைகள் அதிகம். தண்டிக்கப்படாத வரை, எப்படியாவது ஆசைகளை அடையத் துடிப்பதே, அவர்களது சிந்தனைக்கோணம். நெறிகளின் பால், சமூகத்தின் மேல் அக்கறை என்பதை விடவும், சமூகத்தின் அனுமதியே அவர்களுக்கு முக்கியம்.

குஜராத்தில் அவர்களுக்கு சமூக அனுமதி, அரசியல் சலுகை, ஆசைகளுக்குத் தீனி, வெறிக்கு வடிகால், குற்றங்களுக்கு நியாயம் எல்லாமே கிடைக்கும் என்று தெரிந்த உடன், கோழைகளின் கூட்டம் "வீரர்களின் சேனை'யாகத் தன்னை நினைத்துக் கொண்டது. வெறியாட்டத்தைப் "போர்' என்றும், அரசு பலத்தை "வீரமெ'ன்றும் கருதியவர்கள், பெருமையோடு இன்றும் திரிவது, அந்தச் சமூகம் தந்த அனுமதியோடுதான்.

அறிவும், பண்பும் இல்லாதது வீரமே அல்ல. மௌன கோழைத்தனம், இந்தப் போலி வீரத்தை மீண்டும் தூண்டும். முட்டாள்களும், கோழைகளும் இருக்கும் வரை, ஆதிக்க வெறியும், ஆணவமும் மிகுந்த அயோக்கியன் தலைவனாகவே தொடர்வான். வெறியூட்டினால், தனக்கே இறுதி வெற்றி, என்ற இறுமாப்பில், அவன் மேலும் பல திசைகளில், தன் பார்வையைத் திருப்புவான்.

போதையால் ஊட்டப்படும் வெறி, வெட்கப்படக்கூடிய அறிவை மழுங்கடிக்கும். சுயநலக் கோழைகள் மிகுந்த சமுதாயமும், அதைச் சுலபமாய் ஆட்டி வைக்கும் மோசடித் தலைமையும் "தொற்று நோய்' போல நாடு முழுவதும் பரவும். அந்த ஆதாரக் கிருமியை அழித்தால்தான் வருங்காலத்திற்குப் பாதுகாப்பு –இது அவசியமானது மட்டுமல்ல, அவசரமாகவும் செய்ய வேண்டிய காரியம்.

· ருத்ரன்,

மனநல மருத்துவர்.

நன்றி : தமிழரங்கம்

நபிகள் நாயகமும் அன்புத்தோழர்களும் (VIDEO)

"நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும்"

அஷ்ஷேய்க். அலாவுதீன் பாக்கவி அவர்கள..

Al-Sheikh. Alavudeen Bakavi


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். அலாவுதீன் பாக்கவி அவர்கள்

Friday, March 28, 2008

பஹ்ரைனில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி

பஹ்ரைனில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி

பஹ்ரைன் தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டர் சார்பில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி 29.03.2008 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை முஹர்ரக் அல் இஸ்லாஹ் சொசைட்டியில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியினை துபாய் ஜலாலுதீன் ஒருங்கிணைத்து நடத்த இருக்கிறார்.

மேலதிக விபரங்களுக்கு 3 9 0 3 2 2 2 3 மற்றும் 3 9 0 7 3 4 6 4
ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Thursday, March 27, 2008

பொய்ச்செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியருக்கு 3 மாத சிறை


தமிழ் முஸ்லிம் பதிவுகள் - புதிய திரட்டி

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று சிறை தண்டனை

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை பள்ளியில் பொதுத் தேர்வின் போது காப்பியடிக்க உதவியதாக பள்ளித் தலைமையாசிரியர் சேதுராமன் குறித்து செய்தி வெளியிட்டது. இதனை அவதூறு வழக்காக சேதுராமன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெளியீட்டாளர் இலட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியிட்டது.

தகவல் : மக்கள் தொலைக்காட்சி

செய்தி : முதுவை ஹிதாயத்

மார்க்கத்தை விற்கும் மனநோயாளி!

மார்க்கத்தை விற்கும் மனநோயாளி!


மூஸா முபாரக் அலி, சென்னை-1

கேள்வி: களவாடப்பட்ட பத்திரி கையில் கேட்கப்பட்ட கேள்விகளுக் கெல்லாம் தமுமுகவினர் பதில் அüக்க இயலவில்லை என்று ஒருவர் சொன்னதுடன், தனிப்பட்ட முறையில் தமுமுக தலைமையைப் பொதுக்கூட்டத்திலும் சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதனை அவர்கள் தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் ஒüபரப்பியுள்ளார்கள். தமுமுக ஏன் இன்னும் இதற்கு பதில் அüக்காமல் மவுனம் சாதிக்கிறது.?

பதில்: பொதுக்கூட்டத்தில் மட்டும் அல்ல, தொலைக்காட்சியிலும் பகற் கொள்ளை அடிக்கப்பட்ட பத்திரிகை யிலும் தாதா கலாச்சாரத்தைப் பின்பற்றும் அவர் தமுமுக மீது அவதூறுகளை சுமத்தித் தமுமுகவிற்கு நன்மை சேர்த்து வருகிறார். அவரது பேச்சையும் எழுத்தை யும் இப்போதெல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு மன நோயாüயின் முனகலாகவே அதனைப் பெரும்பாலும் மக்கள் கருதுகிறார்கள்.

3 மாதத்தில் தமுமுகவை அழித்துக் காட்டுவேன் என்று சபதம் செய்தவருக்கு இன்று தமுமுக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கüலும், அனைத்து ஊர்க üலும், அனைத்து தரப்பினர் நெஞ்சங் கüலும் நீக்கமற நிறைந்து விட்டதைப் பார்த்துப் பொறுக்க இயலாமல் ஒரு மனநோயாளி போல் உளறிக் கொட்டு கிறார். பொதுமக்கüடம் வசூல் செய்யப் பட்ட பணம், தவ்ஹீத் பிரச்சாரம் செய்கிறோம் என்ற பெயரில் திரட்டப் பட்ட பணம் இறைவன் கூறுவது போல் (திருக்குர்ஆன் 49:12) சொந்த சகோதரர் கüன் மாமிசத்தை உண்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இறைவனிடம் வெகுமதி பெறும் நோக்கில் இந்தப் பேச்சு வியாபாரிக்கு நன்கொடை அüக்கும் சகோதரர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும், நன்மைக்குப் பதில் பாவச் சுமையை துôக்குவதற்கு உங்கள் பணம் பயன்படுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று தமுமுக நாம் குறிப்பிட்டது போல் அனைத்துத் தரப்பு மக்கள் உள்ளத்தில் நீக்கமற நிறைந்து விட்டது. மக்கள் பல வகையில் தங்கள் பாதுகாப்பு பேரியக்கமான தமுமுகவிற்கு தங்கள் அன்பைக் காட்டி வருகின்றார்கள். பெரும் தொழில் அதிபர்கள் முதல் சாதாரண சாமானிய மக்கள் வரை தமுமுகவிற்குத் தங்கள் அன்பை, ஆதரவை நல்கி வருகின்றார்கள்.

நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அரசிடம் எடுத்து உரைத்து அதனை நாம் எவ்வித பிரதி உபகாரமுமின்றி நிறை வேற்றி வருகிறோம். நமது சமுதாயத் தைச் சேர்ந்த பல அரசு ஊழியர்கüன் நியாயமான பிரச்சனையையும் எவ்வித பிரதி உபகாரமுமின்றி தீர்த்துவைத்து வருகிறோம். இவற்றில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை. மனநோயாளி குறிப்பிட்டதுபோல் பரங்கிப்பேட்டையிலும் எந்தவொரு ரகசிய சந்திப்பும் நடைபெறவில்லை. ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் ஒரு தலைசிறந்த மருத்துவர் இந்தச் சமுதாயம் பயன்பெறுவதற்காகப் பல்வேறு கல்வி நிறுவனங்களை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தனது சொந்த ஊரான பரங்கிப்பேட்டையில் நடத்தி வருகிறார்.

தமுமுக தலைவர் 22 ஆண்டு காலம் அனுபவம் பெற்ற ஒரு கல்வியாளர். அதாவது அந்த மனநோயாü பேச்சாளரின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு வாத்தியார். ஆம் கண்ணியமான தொழில் என்று போற்றப் படுகின்ற கல்வியைப் பிறருக்குப் போதிக்கும் வாத்தியார் தொழில் செய்து வருபவர். ஏன் இந்த மனநோயாü கூட ஒருகாலத்தில் வாத்தியாராக இருந்தவர் தான்.. தமுமுக தலைவர் கடலுôர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகüல் பங்குகொள்ளச் சென்றபோது தனது பள்üக்கூடம், ஆசிரியர் பயிற்சிப் பள்ü, செவிலியர் பள்ü போன்றவற்றைப் பார்க்க வருமாறு ஆஸ்திரேலிய டாக்டர் அழைப்பு விடுத்தார். ஒரு கல்வியாளர் என்ற முறையில் தனது கல்வி நிலையங் களைப் பார்வையிடவும், ஆலோசனை களைப் பெறவும் ஆஸ்திரேலிய டாக்டர் தமுமுக தலைவரை அழைத்திருந்தார். இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது கடலுôர் மாவட்டத் தலைவர் ஜின்னா விடம் இந்த அழைப்பை ஏற்கலாமா என்று ஆலோசனைக் கேட்டு அவர் ஒப்புதல் அüத்த பிறகுதான் தமுமுக தலைவர் அங்கு சென்றார். தமுமுக தலைவர் ரகசியமாக அங்கு செல்ல வில்லை. அவருடன் கடலுôர் மாவட்டத் தலைவர் ஜின்னா தலைமையில் மாவட்ட நிர்வாகிகளும் சென்றனர். பூட்டிய அறையில் மன நோயாü பிரமுகர் உளறி வருவதுபோல் எவ்வித பேச்சு வார்த்தையும் நடைபெற வில்லை. பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் தலைவர் யூனுஸ் உட்பட தமுமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் பேசினார்கள் விருந்து சாப்பிட்டார்கள். இதனைக் குற்றம் என்று சொல்பவரை மனநோயாü என்றுதானே சொல்ல வேண்டும்.

வக்ஃப் நிலம் எதுவும் தாரை வார்க்கப் படவில்லை என்பதை வக்ஃப் ஆவணங் களே பதில் சொல்லும். பரங்கிப்பேட்டை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, இன்று தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் தமுமுக தலைவர் அழைக்கப்பட்டுச் சென்று வருகிறார். மனநோயாü பிரமுகர் வசதிக்காக அதனை இங்கே பட்டியலிடுகிறோம்.

கடந்த இரண்டு மாத இடைவெüயில் சென்னை புதுக்கல்லுôரி நிர்வாகமும் ஆசிரியர் சங்கமும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுவதற்கு தமுமுக தலைவரை அழைத்தார்கள். தமுமுக தலைவர் சென்று வந்தார். பிறகு ஒரு நாள் ஆசிரியர் சங்கம் தனியாகத் தங்கள் சங்க மாடத்திற்கு அழைத்து தமுமுக தலைவருடன் நமது கல்லுôரிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துக் கலந்துரையாடினார்கள். அவருக்கு விருந்தும் அüத்தார்கள். குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1981 முதல் இயங்கி வரும் முஸ்லிம் கலைக் கல்லுôரி நிர்வாகம் தமுமுக தலைவரை அழைத்து, கல்லுôரி வளாகத்தில் அமைந்துள்ள பள்üவாசலில் ஜும்ஆ உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதன் பிறகு தமுமுக தலைவருக்கும் குமரி மாவட்ட தமுமுக நிர்வாகிகளுக்கும் விருந்தும் அüத்தார்கள். இதன் பிறகு இக்கல்லுôரி வளாகத்தில் புதிதாகத் தொடங்கப் பட்டுள்ள பி.எட். கல்லுôரியை தமுமுக தலைவர் தொடங்கி வைத்தார். திருவிதாங் கோடு இஸ்லாமிய மாதிரிப் பள்ü நிர்வாகிகள் தங்கள் பள்üக்கு தமுமுக தலைவரை அழைத்துச் சென்று தங்கள் நிறுவனத்தைப் பார்வையிட வைத்து ஆலோசனைகளைப் பெற்றனர். பிறகு அப்பள்üக்கூடத்தின் ஆண்டு விழா வில் தமுமுக தலைவர் உரையாற்றினார்.


சேலத்திற்கு சமீபத்தில் தமுமுக தலைவர் சென்றிருந்த போது கே.வி. ஹாஜியார், தான் நடத்தும் கல்வி நிறுவனங்கள் குறித்து தமுமுக தலைவரிடம் எடுத்துரைத்தார், சேலத்தில் இயங்கும் தாருல்சலாம் பள்ü நிர்வாகி கள் தமுமுக தலைவரைத் தங்கள் பள்üக்கூடத்திற்கு அழைத்துச் சென்று ஆலோசனைகளைப் பெற்றார்கள். மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லுôரி நிர்வாகமும் தமுமுக தலைவரை சீரத்துன் நபி சிறப்புரை ஆற்ற அழைத்தது. அப்போது அந்த கல்லுôரி நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு நிறுவனமான பொறி யியல் கல்லுôரி நிர்வாகிகள் தமுமுக தலைவரிடம் கல்வி தொடர்பான பல ஆலோசனைகளைச் செய்தனர். கடந்த டிசம்பர் மாதம் இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லுôரி தமுமுக தலைவரை அழைத்து வட்டியில்லா வங்கி குறித்து வணிகவியல் துறை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்த சந்தர்ப்பத்தில் கல்லுôரியை சுற்றிக்காட்டிப் பல ஆலோசனைகளை அக்கல்லுôரி நிர்வாகம் தமுமுக தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டது. தேநீர் விருந்து அüத்தார்கள். இதுமட்டுமின்றி அதே டிசம்பர் மாதம் வேலுôரில் உள்ள புகழ்பெற்ற ஆக்சிலியம் கல்லுôரியில் மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற நாடு தழுவிய கருத்தரங்கத்தில் இஸ்லாமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் தமுமுக தலைவர் உரையாற்றினார். வேலுôர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் வந்தனர். அக்கல்லுôரியிலும் தேநீர் விருந்து தமுமுக நிர்வாகிகளுக்கு அüக்கப் பட்டது. விரைவில் இன்ஷாஅல்லாஹ் சென்னை பல்கலைக்கழகத்தில் வட்டி யில்லா வங்கிகள் குறித்த தனது ஆய்விற் காக டாக்டர் பட்டம் பெறவுள்ள தமுமுக தலைவர் தன்னை வாத்தியார் என்று அழைத்துக் கொள்வதைச் சிறப்புக்குரிய தகுதியாகவே கருதுகிறார். எம்.பி.ஏ. படித்தவர்கள் வணிக நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்வது இயல்பாக இருந்த காலக்கட்டத்தில் தானே விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்ட தொழில் இந்த வாத்தியார் தொழில் என்பதை அறிந்தவர் கள் புரிந்தவர்கள் விளங்கிக் கொள்வார் கள். அந்தத் தொழிலை இளக்காரமாக விமர்சிப்பது அவர்கள் உள்ளத்தில் நிரம்பி வழியும் பொறாமையையும் வஞ்சக உணர்வையும் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.

விருந்துக்கு அழைத்தால் செல்ல வேண்டும் என்பது தான் நபிவழி. யூதர்கள் அழைத்த விருந்திலும் நபிகள் நாயகம் (ஸல்) பங்குகொண்டார்கள். இதனைக் கொச்சைப்படுத்திப் பேசும் இவர்கள் உண்மையான தவ்ஹீத்வாதிகளா?

ஈரோட்டில் நமது சமுதாயத்தவர்கள் நடத்தும் தோல் தொழிற்சாலைகளுக்கு அதிகார வர்க்கம் தேவையில்லாத தொல்லைகளை அüத்து வந்தனர். இதனை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவரும் ஒரு உயர் அதிகாரியின் தலைமையில் இப்பிரச்ச னையை ஆய்வுசெய்து நமது மக்கüன் நலன் பாதுகாக்கப்பட வழிவகைச் செய்தார். எவ்வித பிரதி உபகாரமுமின்றி நாம் செய்த இந்த உதவியைக் குற்றம் என்று பேசுபவர் மனநோயாüயாகத் தானே இருக்க இயலும்.

இன்று தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயற்பாடுகள் திறந்த புத்தகமாக ஆக்கப்பட்டுள்ளது. ஈலிகவர்னன்ஸ் என்று சொல்லப்படும் மின் நிர்வாக முறை தமுமுக பொதுச் செயலாளர் தலைமை யில் வக்ஃப் வாரியத்தில் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு வருகிறது. வக்ஃப் வாரியத்தின் நிலத்தின் ஒரு அடி கூட சட்டத்திற்கு புறம்பாகப் பயன்பட அனுமதிக்கப்படவில்லை. முந்தைய காலங்களைவிட தற்போது வக்ஃப் வாரியத்தின் நிர்வாகம் தமுமுக பொதுச் செயலாளர் தலைமையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு ஜமாஅத் நிர்வாகிகளே சான்று வழங்குவார்கள். கடந்தகால நிர்வாகச் சீர்கேடுகளை யெல்லாம் சரிப்படுத்த ஓர் ஆண்டு காலம் பிடித்துள்ளது. இனி மேலும் சிறப்பாக வக்ப் வாரியம் இயங்க உள்ளது. இவ்வாறு வக்ப் நிர்வாகத்தில் சிறந்த முறையில் செல்வதைப் பார்த்து மனம்போன போக்கில் பேசினால் அதனைப் பைத்தியக் காரனின் முனகல் என்று தான் குறிப்பிட முடியும்.

தமுமுகவின் சமுதாயப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இரண்டு அவசர சிகிச்சை ஊர்திகளை அüத்தது போல் நமது சமுதாயப் பிரமுகர்களும் கார்களையும், ஏன் விமானங்களையும் கூடத் தமுமுகவிற்கு இன்ஷாஅல்லாஹ் வழங்குவார்கள். இதனைக் குற்றம் என்று பேசுபவரை மனநோயாளி என்றுதானே குறிப்பிட வேண்டும். தமுமுக பொதுச் செயலாளர் செய்துவரும் தொழிலையும் கொச்சைப்படுத்தியுள்ளார் அந்த மன நோயாளி. ஆனால் தமுமுக பொதுச் செயலாளர் ஹலாலான வியாபாரத்தை செய்துவருகிறார். ஆனால் மனநோயாளி யோ, தான் மார்க்கத்தைக் காட்டி பிழைப்பு நடத்தவில்லை என்று நெஞ்சு நிமிர்த்தி கூற முடியுமா?

ஊர்தோறும் இஸ்லாத்தை அறிமுகப் படுத்துகிறோம் என்ற சாக்கில், தான் எழுதிய புத்தகங்களை குர்ஆன் தமிழாக்கத்தை நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்படும் அனைவருக்கும் இலவசமாகத் தருகிறேன் என நிகழ்ச்சி நடத்துபவர் களிடமும் வெளிநாட்டில் உள்ளவர் களிடமும் கட்டாய வசூல் செய்து பணம் சம்பாதிப்பது இதில் வேதனையானது என்னவெனில் பாதி புத்தகங்களை வினியோகித்துவிட்டு, மீதியை மீண்டும் கடைசரக்கு ஆக்குவது, தான் நடத்தும் அமைப்பின் சார்பாக வெளியிடப்படும் துண்டுப் பிரசுரம் முதல் எல்லாவகை யான அச்சு வேலைகளையும் தனது மனைவியின் தம்பியிடம் மட்டுமே தந்து மைத்துனர்களுக்கும் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்.

தொலைக்காட்சியில் முதலீடு செய் வதற்காக மக்கள் பணத்தைத் திரட்டி, போட்ட முதலை விட மும்மடங்கு அதிகத் தொகையை வெற்றி தொலைக் காட்சியின் அதிபர் தெய்வ முதல்வனை மிரட்டி உருட்டி வாங்கிக்கொண்டு முதலீடு செய்த ரசிகர் கூட்டத்திற்கு அற்பசொற்பத்தைக் கொடுத்து ஏமாற்றிய நூதன ஏமாற்றுக் காரர்களின் சிதம்பர ரகசியம் இன்னும் பல உண்டு.

இந்த அளவிற்கு அந்த அப்நார்மல் மனிதனின் உளறல்களுக்கு பதிலலிக்க பக்கத்தை வீணாக்கியதற்காக வருந்து கிறோம். எனவே அந்த அப்நார்மல் மனிதர் நம்மை ஏசினால், நாம் மக்கள் உள்ளத்தில் அதிகமாக இடம்பிடித்து விட்டோம் என்று பொருள். அதேசமயம் அவர் மவுனமாக இருந்துவிட்டாலோ நாம் பலவீனமடைந்து விட்டோம் என்று அர்த்தம்.


நன்றி : தமுமுக இணையத்தளம்

Wednesday, March 26, 2008

IFT ன் மானுட வசந்தம் தற்போது இணையத்திலும்...

அஸ்ஸலாமு அலைக்கும்!

இஸ்லாத்தை பற்றியும், முஸ்லிம்களின் வாழ்க்கை முறை பற்றியும் நமது சகோதர சமுதாய மக்களுக்கு ஏன் முஸ்லிம்களுக்கும் கூட எத்தனையோ கேள்விகளும் சந்தேகங்களும் உண்டு. அவற்றை தீர்த்து வைக்கும் முகமாக மருத்துவர்.K.V.S.ஹபீப் முஹம்மது அவர்கள் IFT (Islamic Foundation Trust) மூலமாக தொலைகாட்சியில் மானுட வசந்தம் என்ற நிகழ்சியை ஒளி பரப்புகிறார்கள்.

இந்த நிகழ்ச்சி இணையதள பயன்பாட்டாளர்களுக்காக http://www.youtube/ ல் கீழ்காணும் இணைப்புகளில் முதல் கட்டமாக பதிவேற்றம் செய்யப்பற்றுள்ளது, அதனை கண்டு பயன் பெற்று , நமது சகோதர சமுதாய நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் இந்த இணைப்புகளை இ-மெயில் அனுப்பினால் பயனுள்ளதாக அமையும். இனி இன்ஷா அல்லாஹ் பதிவேற்றம் செய்யப்படும் நிகழ்சிகளை தங்களுக்கு இ-மெயில் மூலம் தெரியப் படுத்த விரும்பினால் இந்த இணைப்பில் உறுப்பினராக சேரவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இதனை "தா:.வா" என்ற முறையில் அங்கீகரித்து இதனை உருவாக்கியவர்களுக்கும், துணை புரிந்தவர்களுக்கும், உங்களுக்கும் , எனக்கும் நல்லருள் புரிவானாக!


(சுவாமி தத்வபோதானந்தா அவர்கள் இஸ்லாத்தை பற்றி )

(A.அன்பரசு I.A.S அவர்கள் இஸ்லாத்தை பற்றி )

(புதுவை சட்டமன்ற துணைத்தலைவர் A.V.S. சுப்பிரமணியம் இஸ்லாத்தை பற்றி)

(Dr. K.V.S. ஹபீப் முஹம்மது அவர்கள் துவக்கவுரை)

(முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்கிறார்களா?)

(இன்றைய சூழ்நிலையில் இனி ஒரு இறைதூதர் வருவாரா?)

(இஸ்லாத்தில் ஜீவனாம்சம்)

(உலகை இறைவன் படைத்தது விளையாட்டிற்காகவா?)

(ஒற்றுமையாக இருக்க வழி)

குறிப்பு : மேலே உள்ள தகவல் thamizhmuslim <thamizhmuslim@gmail.com> என்ற முகவரியில் இருந்து மின்னஞ்சல் மூலமாக பெறப்பட்டது. தகவலுக்காக இங்கு பதியப்பட்டுள்ளது.

Tuesday, March 25, 2008

முஸ்லிம் இளைஞன் மீது காவல்துறை கட்டுமிரான்டி தாக்குதல்

வாசுதேவநல்லூரில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட
முஸ்லிம் இளைஞன்.



காவல்துறையால் தாக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்


நெல்லை மாவட்டம், புளியங்குடியை அடுத்துள்ள ஊர் வாசுதேவநல்லூர். இங்கு சுமார் 2,000 முஸ்லிம் மக்கள் வசித்து வருகிறார்கள். வாசுதேவநல்லூரில் கோட்டை தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது 13 வயது மகன் பாதுஷா அவ்வூரைச் சார்ந்த சில இளைஞர்களுடன் எப்பொழுதும் பேசிக் கொண்டிருப்பது பிடிக்காத அப்துல் காதர் பலமுறை தனது மகனின் நண்பர்களான நிஜாம் சேக் உள்ளிட்டோரை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று மதியத்திற்கு மேல் பாதுஷா, நிஜாம் சேக் மற்றும் 6 நபர்களுடன் ஊரில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். தன் பேச்சை தொடர்ந்து மதிக்காமல் நடந்து வரும் தன் மகன் மற்றும் நண்பர்கள் மீது ஆத்திரமுற்று தன் நண்பரான வாசுதேவநல்லூர் உளவுத்துறை தலைமைக் காவலர் கண்ணனிடம் தன் மகனின் நண்பர்களை கண்டிக்குமாறு வாய்மொழியாக புகார் செய்துள்ளார். உடனே கண்ணன் குளக்கரைக்கு வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த நிஜாமை வலுக்கட்டாயமாக காவல் நிலையம் கொண்டு சென்று சங்கிலியால் பிணைத்து வைத்துள்ளார். அப்போது அங்கிருந்த கணேசன். பண்டாரம் ஆகிய இரு காவலர்களும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.


இம்மூவரும் சேர்ந்து நிஜாமை கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், இவரிடம் நாளை அழைக்கும்போது வர வேண்டும் என்று கூறி அனுப்பியுள்ளனர். வீட்டிற்கு வந்த நிஜாமின் வாயிலிருந்து இரத்தம் வர தொடங்கியுள்ளதோடு, மூச்சு விடவும் அவதிப்பட்டுள்ளார். இவருடைய தந்தையார் ஏற்கனவே விபத்தில் காயமுற்று நடக்க இயலாத நிலையில் உள்ளார். இவருடைய உறவினர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்க முற்பட்டபோது அவர்கள் சிசிக்கை அளிக்க மறுத்துள்ளனர். இவ்விஷயம், புளியங்குடி த.மு.மு.க.நகர நிர்வாகிகளுக்கு தெரிய வர அவர்கள் தலையிட்டு நிஜாமை புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர். தற்போது நிஜாம் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.


சம்பவம் கேள்விப்பட்ட அவ்வூர் மக்கள் ஞாயிறு இரவு வாசுதேவநல்லூர் மெயின் ரோட்டில், குற்றம் இழைத்த காவலர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் செய்தனர். உடனடியாக அங்கு விரைந்த புளியங்குடி நகர நிர்வாகிகளிடம், புளியங்குடி துணை கண்காணிப்பாளர் திரு.அசோக்குமார் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. உடனடியாக 3 காவலர்களும் ஆயுதப் பிரிவிற்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் வாசுதேவநல்லூரில் திங்களன்று கூடிய த.மு.மு.க.உள்ளிட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் செவ்வாயன்று (25.03.2008) கடை அடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உட்பட்ட உளவுப் பிரிவினர் தங்களது பணியை மறந்து சட்டம், ஒழுங்கு காவல்துறையினருடன் கை கோர்த்து கொண்டு சில இடங்களில் கட்டப் பஞ்சாயத்து, பணம் வசூல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதோடு உண்மை தகவல்கள் கண்காணிப்பாளருக்கு தெரியாமல் மறைத்து விடுகின்றனர். துடிப்புடன் செயல்படுபவர் என்று பெயர் பெற்ற நெல்லை மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளர் திரு.தினகரன் அவர்கள் இதுபோன்ற நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதோடு உளவுத்துறைக்கு தகுதியான நபர்களை பணி அமர்த்த வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


செய்தி தொகுப்பு : நெல்லை உஸ்மான்.

Monday, March 24, 2008

அமீரக செய்திகள்

அபுதாபியில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி

அபுதாபி கேரள சோஷியல் செண்டரில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி அல்ஹம்துலில்லாஹ் எனும் தலைப்பில் 04.04.2008 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 12 வணி வரை நடைபெற இருக்கிறது. நிகழ்ச்சியினை ஜலாலுதீன் ஒருங்கிணைத்து நடத்துகிறார்.

முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலதிக விபரம் பெற 050 6142633 / 050 4567487 / 050 315 6141 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம் என் ஏ )


முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா


ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஆதரவுடன் முதுகுளத்தூரில் நடத்தப்பட்டு வரும் இஸ்லாமிய பயிற்சி மையத்தின் ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா 22.03.2008 சனிக்கிழமை மாலை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் தலைமை தாங்கினார். அமீரகப் பிரதிநிதி எம். பக்ருதீன் பாதுஷா முன்னிலை வகித்தார். திடல் பள்ளிவாசல் இமாம் எஸ். முஹம்மது ரபியுத்தீன் ஃபைஜி பாஜில் மன்பஈ இறைவசனங்களை ஓதினார்.

இஸ்லாமிய பயிற்சி மைய முதல்வர் ஹெச்.ஏ. சுல்தான் அலாவுதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாணாக்கர்கள் பி. பாவா பக்ருதீன், என். நஜிமா கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மார்க்க போதனைத் தேர்வில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி தேசிய நல்லாசிரியர் எஸ்.அப்துல் காதர் வாழ்த்துரை வழங்கினார்.

குர் ஆன் ஓதும் போட்டியில் முதலாம்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி முதுவைக் கவிஞர் உமர் ஜஹ்பர் வாழ்த்துரை வழங்கினார்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களுக்க்கு பரிசுகளை அரசு மருத்துவர் டாக்டர் எம். ஷேக் முஹம்மது மைதீன் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார்.

ஒன்பதாம் வகுப்புத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களுக்கு பரிசுகளை பெரிய பள்ளிவாசல் உதவித் தலைவர் எம்.எம்.கே.எம். காதர் முகையதீன், பெரிய பள்ளிவாசல் உதவி இமாம் மௌலவி எஸ்.டி.ஷேக் முகைஅதீன் மன்பஈ, திடல் பள்ளிவாசல் உதவித் தலைவர் எம்.ஜஹ்பர் சாதிக் அலி, ஆசிரியர் ஏ. ஹபிப் முஹம்மது உள்ளிட்டோர் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

உதவித் தலைமையாசிரியர் என். காஜா நிஜாமுதீன் குறைசி நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல் : முதுவை ஹிதாயத்

ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா

ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா


கடந்த 22.03.2008 அன்று நெல்லை மாவட்டம், ஏர்வாடி ஓ.கே.திருமண மண்டத்தில் ஏர்வாடி த.மு.மு.க.மகளிர் பிரிவு சார்பாக பெண்கள் இஜ்திமா சகோதரி பாத்திமா தலைமையில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தொடங்கிய நிகழச்சி இரவு 8 மணி வரை நடைபெற்றது.

இதில் வரதட்சணை, இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் போன்ற பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏர்வாடி சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதன் முடிவில் பெண்களுக்கு எதிரான சமுதாயக் கொடுமைகளை தீவிரமாக எதிர்த்து போராடுவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கான தண்டனைகளை கடுமையாக்க மத்திய அரசை கோருவது, ஏர்வாடியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையை அகற்றக் கோருவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏர்வாடி த.மு.மு.க.வினர் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி: நெல்லை உஸ்மான்.

ஈமானில் உறுதி வேண்டும் - மெளலவி.அலி அக்பர் உமரி(வீடியோ)

"ஈமானில் உறுதி வேண்டும்"

அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்.

Al-Sheikh. Ali Akbar Umari


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்

Sunday, March 23, 2008

மாநிலங்களவை எம்.பி. பதவி: தமுமுகவுக்கு ஏமாற்றமா?

எம்.அஹ்மது, இளையான்குடி
கேள்வி : முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல் உள்ளதாக முதல்வரை சந்தித்து முறையிட்டுள் ளீர்கள். இச்சிக்கல் குறித்து ஆரம்பத் தில் நீங்கள் மறுத்ததாகவும், பிறகு ஏற்றுக் கொண்டதாகவும் உங்களை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். உண்மை நிலை என்ன?

பதில் : முஸ்லிம்களுக்கு அüக்கப் பட்ட 3.5% இடஒதுக்கீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் செய்த சில பணிகüல் முழுமையாக கிடைக்கவில்லை என்பதை நாம் மறுக்க வில்லை, டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை யம் வெüயிட்ட விளம்பரத்தை பார்த்த பிறகு, அந்த பாரபட்சத்தை அந்த ஆணையத்திற்கு சுட்டிக்காட்டி முதல் கடிதத்தை அன்று எழுதி உடன் முறையிட்டது தமுமுகதான் என்பதை சொல்லிக் கொள்கிறோம். ஒரு வார பத்திரிக்கையில் இது பற்றிய செய்தி வந்த அதே வாரம் நமது மக்கள் உரிமையிலும் (4:32) அதை சுட்டிக்காட்டி, போராடத் தயங்க மாட்டோம் என்று எழுதியிருந் தோம். அதன் பிறகு உயர் அதிகாரிகளை எல்லாம் சந்தித்து கிருத்தவர்களுக்கு சரியான எண்ணிக்கையில் இடஒதுக்கீடு அமலாகும்போது முஸ்லிம்களுக்கு ஏன் இப்படி சிக்கல் உள்ளது என்று வினவினோம்.

அதன்பிறகுதான், ''ரோஸ்டர் சிஸ்டம்' என்ற ஒன்று இருப்பதாகவும், அதன் வழியாகத்தான் இதை செயல்படுத்து கிறோம் என்றும் அதிகாரிகள் விளக்கி னார்கள். அதன் பிறகுதான் ரோஸ்டர் சிஸ்டம் என்றால் என்ன? இடஒதுக் கீட்டில் அது எந்த வகையில் தலையிடு கிறது என்பதையெல்லாம் விளக்கி மக்கள் உரிமையில் 4:33 எழுதியிருந்தோம்.

நாம் இப்படி உண்மை நிலையை விளக்கிய பிறகுதான் களவாடப்பட்ட பத்திரிக்கையில் (உரிமை 12, குரல் 20), நம்மை விமர்சிப்பவர்கள் கூட அதை ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு விளக்கத்தை எழுதியிருந்தார்கள்.

மிகவும் நுட்பமான இந்த விவகா ரத்தை எப்படி கையாள்வது? அதை எப்படி தீர்ப்பது? என்பது பற்றி தமுமுக நிர்வாகக் குழுவில் ஆலோசித்தோம். நீதிமன்றத்திற்குப் போனால் அது இடஒதுக்கீட்டிற்கே ஆபத்தாக முடிந்து விடக்கூடும். போராட்டம் நடத்துவது என்பது விளம்பரத்திற்காக இருக்கக் கூடாது. மாநில அரசோடு நல்ல புரிந்துணர்வு உள்ளதால், மீண்டும் முதல்வரை சந்தித்து, ரோஸ்டர் முறையை நீக்கக் கோருவது என்றும், எதுவுமே நடக்காத பட்சத்தில்தான் இறுதியாக போராட்டம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆலோசிக்கப்பட்டது.

எனவே இந்த பாரபட்சத்தை நீக்குவதற்கு மாற்று வழி என்ன என்பதை ஆய்வு செய்வதற்காக தமுமுக தலைவர் தலைமையில், ஓய்வுபெற்ற நமது சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் குழு ஒன்றை நியமித்தோம். பழுத்த அனுபவசாலிகளைக் கொண்ட அந்தக் குழு மாற்று திட்டத்தை வகுத்தது. பிறகு அந்த திட்டத்தை ரோஸ்டர் முறையை வடிவமைத்த பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கான அரசு செயலாளர். அத்துறைக்கான அமைச்சர் திரு. ஆற்காடு வீராசாமி, தமிழக அரசின் சட்டத்துறைச் செயலாளர் ஆகியோரிடம் எடுத்துச்சென்று அüத்ததுடன் மட்டுமில் லாமல் ரோஸ்டர் முறையில் யூனிட் என்பது குறிப்பிட்ட பணியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர மாவட்டங் களாகப் பிரிந்த பிறகு அதிலுள்ள அலுவலகங்களை யூனிட்டாக கருதக் கூடாது என்பதை எடுத்துரைத்தோம். அவர்களும் நமது ஆலோசனை சரியானது என்பதை ஒத்துக் கொண் டார்கள். ஆனால் இந்த மாற்றத்தை எப்படி கொண்டு வருவது என்று யோசித்தார்கள். இச்சூழலில் ராஜ்யசபா தேர்தல் குறித்த வேட்பாளர்கள் அறிவிப்பெல்லாம் முடிந்து அந்த அரசியல் பரபரப்பு ஓய்ந்தபிறகு கடந்த 07.03.2008 அன்று தமிழக முதல்வரை தமுமுக தலைவரும், பொதுச் செலாளரும் சந்தித்தார்கள்.


ரோஸ்டர் முறை குறித்து தமுமுக நிர்வாகிகள் முதல்வரிடம் உரிய ஆதாரங்களுடன் விளக்கிய பொழுது, அவர் அதிர்ந்து விட்டார். ''இது நீதி கட்சி கால நடைமுறை. அது இன்னுமா நடைமுறையில் உள்ளது'' என்று அதிர்ச்சியாக முதல்வர் கேட்டார். (அதை முதல்வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒப்புக்கொண்டு பேசிய செய்தியைப் பார்க்கவும்) ''''நான் உடனே அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கüன் கூட்டத்தைக் கூட்டி விசாரித்து சரி செய் கிறேன்'' என்று கூறினார். அதன்பிறகு ரோஸ்டர் முறையை நீக்குவது குறித்து உரிய அதிகாரிகüடம் பேசியிருக்கிறார்.

இதனிடையே அருந்ததியின மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது குறித்து 12.03.2008 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர்கள், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு முழு அளவில் அமல் படுத்தப்படவில்லை என்றும், இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை தேவை என்பதையும் வலியுறுத்தி அதிரடியாகப் பேசினார். இதை முதல்வர் உட்பட பலரும் எதிர்பார்க்கவில்லை. பொதுச் செயலாளரை மேற்கோள்காட்டி அங்கு பேசிய விஜய டி.ராஜேந்தரும் அதையே வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய ஹைதர் அலி அவர்கள், '''முஸ்லிம் களுக்கு 3.5% இடஒதுக்கீட்டை அரசு கொடுத்திருக்கிறது, ஆனால் அதிகாரிகள் அதை பல்வேறு காரணங்களை கூறி முழுமையாக பயன்பெற விடாமல் செய்கிறார்கள்'' என்று குற்றம்சாட்டினார். எந்த நோக்கத்திற்காக அங்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்ததோ, அதையும் பேசிவிட்டு, அங்கே சமுதாயத்தின் உரிமைக் குரலையும் உரக்கப் பதிவு செய்தார்.

அதற்கு தமிழக முதல்வர், பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி அவர் களின் பேச்சுக்கு பதிலüத்துப் பேசும் போது, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு குழப்பத்தைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகப் பேசியது உள்üட்ட அனைத்து விபரங்களும் தமிழக அரசின் இணையதளத்திலும், 13.03.2008 அன்று வெüயான நாüதழ்கüலும் வெüவந்திருக்கிறது.

ஆக தமுமுகதான் இப்பிரச்சனையை முதன்முதலில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு கொண்டு சென்று தொடர்ந்து அதிகாரி களை சந்தித்து முறையிட்டது. மேலும் முதல்வரை சந்தித்து இதுகுறித்து நேரில் முறையிட்ட ஒரே முஸ்லிம் அமைப்பும் தமுமுகதான்! இவை அனைத்தையும் தூய உள்ளத்தோடுதான் செய்து வருகிறது.

அதனால்தான் முதல்வரே தமுமுகவை குறிப்பிட்டு, அவர்களால்தான் இந்த ரோஸ்டர் சிக்கல் தீர்க்கப்பட உள்ளது என்பதையும் தெüவுபடுத்தியுள்ளார். (அல்ஹம்துலில்லாஹ்)

இடஒதுக்கீடு பாரபட்சம் குறித்து நாம் இதையெல்லாம் முன்பு மறுத்ததாக சிலர் வதந்தியை கிளப்புவதாகக் கேள்வி கேட்டுள்ளீர்கள். கருணாநிதி முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டார் என்றும், முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீடு கொடுக்கவில்லை என்றும், முஸ்லிம்களுக்கு 1.5% இடஒதுக்கீடுதான் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் 'புளுகு' பிரமுகர் அவதூறு கிளப்பினார். தமுமுகவையும் சீண்டினார். நாம் இதையெல்லாம் மறுத்தோம். இந்த சிக்கலுக்கும் முதல்வருக்கும் சம்பந்த மில்லை என்றும், இது அதிகாரிகள் செய்த குழப்பம் என்றும், நமக்கு 3.5% இடஒதுக்கீடுதான் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், அதை பெறுவதில் 'ரோஸ்டர்' முறையில்தான் சிக்கல் உள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தோம். நமது நிலையை தெüவாகப் புரிந்து கொள்ளாதவர் கள்தான் பரபரப்பு கிளப்பினார்கள்.

ஆனால் பாவம்! நீதிமன்றத்தால் ''விளம்பரத்திற்காக செயல்படுபவர்கள்'' என்ற பட்டத்தையும் வாங்கி, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்தையும் கட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். சமுதாயம் இதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.

இறைவன் மிகப்பெரியவன்! விளம் பரத்திற்காக செயல்படுபவர்களையும், உள்ளத்தூய்மையோடு செயல்படுவர் களையும் அவனே நன்கு அறிந்தவன்!


பி. முகம்மது அலி ஜின்னா, கோவை

கேள்வி : மாநிலங்களவை எம்.பி. பதவி தமுமுகவுக்கு கொடுக்கப்படும் என்று ஒரு செய்தி உலவியது. ஆனால் திமுக தலைவர் கருணாநிதி, தன்னிடம் சீட் கேட்ட கட்சிகளைப் பற்றி குறிப்பிடும்போது ஒரு இடத்தில் கூட தமுமுக கேட்டதாக சொல்லவில்லை. இது பற்றி சரியான விளக்கம் தேவை.

பதில் : உங்கள் கேள்வியின் இறுதிப் பகுதியில் பாதி பதில் இருக்கிறது. இப்போது மட்டுமல்ல சில மாதங்களுக்கு முன்பு கனிமொழி மற்றும் திருச்சி சிவா ஆகியோர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இதே வதந்தி பரவியிருந்தது. தற்போது மாநிலங்களவைக்கான தேர்தலில் தமிழகத்திலிருந்து 6 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட இருப்பதும், அதில் திமுக கூட்டணியிலிருந்து ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதும், இச்செய்திகள் கடந்த இரண்டு மாதமாக கூட்டணிக் கட்சி களும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டதும் யாவரும் அறிந்ததே. கடந்த ஆறு மாதத்தில் சமுதாய மக்களின் பல்வேறு பிரச்சனைகளுக்காக முதல்வரை சந்தித்து நாங்கள் பேசியுள்ளோம். அவரிடம் 'வருகின்ற ராஜ்யசபா தேர்தலில் எங்களுக்கு ஒரு இடம் ஒதுக்குங்கள்' என்று தமுமுக கேட்கவில்லை,
அரசிடம் சமுதாய பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே பேசி வருகிறோம். சமீபத்தில் இடஒதுக்கீடு சிக்கல் குறித்து பேசுவதற்காக முதல்வரை சந்தித்தோம். 05.03.2008 அன்று முதல்வர் தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி அனைத்தையும் அறிவித்த பிறகு 07.03.2008 அன்றுதான் அவரை சந்தித்தோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அப்போது மாநிலங்களவையில் முஸ்லிம் ஒருவருக்கு வாய்ப்பüக்க வேண்டும் என்று மட்டுமே கோரிக்கை வைத்தோம். சிறுபான்மையினர் குரலை ஒலிக்க வைப்போம் என்று நம்மிடம் தெரிவித் தார். நமது கோரிக்கையை ஏற்று திமுக சார்பில் வழக்குறைஞர் ஜின்னா அவர்கள் திமுகவின் வேட்பாளராக மார்ச் 9ம் தேதி அறிவிக்கப்பட்டார். வழக்குறைஞர் ஜின்னா அவர்களும், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான் தனக்கு இப்பொறுப்பு தரப்பட்டுள்ள தாகவும், இதனை மனதில் வைத்து செயல்படுவேன் என்றும் தினத்தந்தி நிருபரிடம் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை நிலை இப்படியிருக்க, சில விஷமிகளும் பிறரை குறைகூறியே வளர நினைப்பவர்களும் பரப்பும் வதந்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என சமுதாய மக்களை தமுமுக கேட்டுக் கொள்கிறது.

எஸ்.ஆதம் மாலிக், காயல்பட்டினம்

கேள்வி : பழனி அருகே உள்ள பாலநத்தத்தில் தமுமுக சகோதரர்கள் தேவையற்ற விஷயங்களுக்காக வாழ்த்து சுவரொட்டி அடித்துள்ளார்கள். இதை தலைமை கண்டிக்கவில் லையா...?

பதில் : இச்செய்தி வந்தவுடன் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் அன்சாரியை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அதை உண்மை என்றவர், அவர்கள் இயக்கத்திற்கு மிகவும் புதியவர்கள் என்றும், நமது கொள்கை கோட்பாடுகளை முழுமையாகப் புரியாமல் ஆர்வத்தில் வந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், இயக்கத் திற்கு நன்மை செய்கிறோம் என நினைத்து தவறு செய்துவிட்டார்கள் என்றும் மாவட்ட நிர்வாகிகள் விளக்கமüத்தனர். மேலும் இந்த செய்தி வந்த சில மணி நேரத்திற்குள் சுவரொட்டி ஒட்டப்பட்ட அந்த கிராமத்திற்கு மேல்மட்ட நிர்வாகிகள் சென்று விளக்கங்களை அüத்தார்கள் என்றும், அதன்பிறகு உடனடியாக, ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை அவர்களே கிழித்து விட்டதாகவும் அவர்கள் கூறினர்.

நாம் நடந்த சம்பவங்களைக் கண்டித்த தோடு, அங்கு தர்பியா வகுப்புகளை எடுத்து புதியவர்களை ஒழுங்குபடுத்து மாறும் கேட்டுக்கொண்டோம். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் சென்ற பிறகு இதனை பரப்பி விடுபவர்கள் தமுமுகவை மூன்று மாதத்தில் அழித்துவிடுவேன் என்று அல்லாஹ்வை மறந்து சாபமிட்டு, அந்தக் கனவு நிறைவேறாமல் இரவெல் லாம் தூக்கமில்லாத நிலையில் இது போன்ற ஃபித்னாக்களை பரப்புவதை தங்கள் வாழ்வின் இலட்சியமாக்கிக் கொண்டு நமக்கு நன்மைகளை சேர்த்து தருகிறார்கள்.

நாள்தோறும் பெருகிவரும் புதிய கிளைகüல் சில சகோதரர்கள் அறியாமை யின் காரணமாக தவறு செய்துவிடுகிறார் கள். அவர்களை அரவணைத்து திருத்து வதுதான் நமது பணி. தெரிந்து பல அநியாயங்களை செய்பவர்களைவிட தெரியாமல் தவறு செய்யும் அப்பாவிகள் இரக்கத்திற்குரியவர்கள். அவர்களை நேர்வழிப்படுத்தும் பணியை இன்ஷா அல்லாஹ் நாம் செய்வோம்.. இதனை அரசியலாக்கி லாபத்தைப் பெற முயல் பவர்கள் லாட்ஜ், சொகுசு பேருந்து, தொலைபேசி லீலைகள் இத்தியாதி என நிரம்பி வழியும் தங்களது மற்றும் தங்களது இன்னாள் சகாக்கüன் முகத்தையும், முதுகையும், ஈனச் செயல்களையும் உற்றுப்பார்ப்பது நல்லது.

நன்றி : தமுமுக இணையத்தளம்

Saturday, March 22, 2008

தமுமுக மீது பொய்வழக்கு போடும் காவல் துறை

தமுமுக மீது பொய்வழக்கு போடும் காவல் துறை


தினமலர் நாளிதழுக்கு நமது மக்கள் தமிழகத்தில் வைத்துள்ள பெயர்த் தினமலம். முஸ்லிம்கள் தொடர்பான பொய் செய்திகளைப் பிரசுரிப்பது அதன் அன்றாட வாடிக்கை, அத்தகைய ஒரு செய்தி தான் கீழக்கரை பெண் தொடர்பான செய்தி. அந்தப் பெண் பெரியப்பட்டணத்தைச் சேர்ந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் உடனே தமுமுக நகரத் தலைவர் உட்பட நிர்வாகிகள் அந்த இருவரையும் கட்டி வைத்து அடித்ததாகவும், அப்பெண்ணைப் மானபங்கம் படுத்தியதாகவும், தமுமுக நிர்வாகிகளைக் காவல்துறை கைதுச் செய்யததாகவும் தினமலர்ப் பொய் செய்தி வெளியிட்டுள்ளது. தவறு செய்த பெண்ணையும் ஆணையும் கீழக்கரை கிழக்குத் தெரு ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் தமுமுக விடம் ஒப்படைத்தார்கள். தமுமுக அவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்தது. கீழக்கரை காவல்நிலையத்திற்கு அன்று பொறுப்பில் இருந்த சிக்கல் ஆய்வாளர் இம்மானுவேல் ராசகுமார் என்பவர் வேண்டுமென்றேத் தமுமுகவினர் மீதுள்ள தனது சொந்தப்பகையைத் தீர்த்துக் கொள்ளத் தமுமுகவினர் மீது வழக்குப்போட்டுத் தினமலருக்குச் செய்தியை அளித்துள்ளார். சம்பவம் நடைபெறும் போது கீழக்கரை தமுமுக தலைவர் சிராஜுத்தீன் சென்னையில் இருந்தார். அவர் மீதும் வழக்கு. தற்போது பொறுப்பில் இல்லாத முன்னாள் மாவட்டச் செயலாளர் நிஸ்பர் மீதும், தற்போது வளைகுடாவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் இரண்டு தமுமுக சகோதரர்கள் மீதும்; பொய் வழக்கப் போட்டுள்ளார். ராமநாதபுர காவல்துறை கண்காணிப்பாளரிடம் தமுமுக புகார் தெரிவித்து வழக்கு வாபஸ் வாங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் கீழக்கரை எஸ். ஐ.யின் நச்சரிப்பால் பொய் புகார் அளித்தேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். பொய் செய்தியைப் பிரசுரித்த தினமலருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி : Dravida Muslium

Friday, March 21, 2008

கடவுளின் தூதர் முகம்மது நபி (வீடியோ)

"கடவுளின் தூதர் முகம்மது(ஸல்)"

பொறியாளர் ரஃபீக் ஜக்கரியா அவர்கள்

Engineer. Rafiq Zakariya


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



பொறியாளர் ரஃபீக் ஜக்கரியா அவர்கள்

Thursday, March 20, 2008

இன இழிவு தீர இஸ்லாமே நன்மருந்து!.

இன இழிவு தீர இஸ்லாமே நன்மருந்து!.

விழுப்புரம் மாவட்டம் எறையூர் வன்னிய கிறித்தவர்கள் மற்றும் தலித் கிறித்தவர்கள் அதிகமாக வாழும் ஊர். இவ்வூரில் வன்னிய கிறித்தவர்களுக்கும், தலித் கிறித்தவர்களுக்கும் இடையே நீண்ட காலமாக தொடர்ந்து வந்த மனப்புழுக்கம், ஒரு பேரிடியாக வெடித்து ரத்த மழையை கொட்டியிருக்கிறது.

எறையூரில் வன்னியர்கள் மத்தியில் வாழும் தலித் கிறித்தவர்களுக்கு மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் உயர் சாதி கிறித்தவர்கள் நடுவில் வாழும் தலித் கிறித்தவர்களுக்கு அவலமும், கேவலமும் தொடரத்தான் செய்கின்றன. இதன்காரணமாக பல ஊர்களில் தலித் கிறித் தவர்கள் தங்களுக்கென தனி தேவாலயங்களை கட்டிக் கொள்கிறார்கள். அதுபோலவே தனி கல்லறைத் தோட்டங்களும் உண்டு.

தலித் கிறித்தவ மக்கள் மத்தியிலும் கூட, பள்ளர் கிறித்தவர், பறையர் கிறித்தவர், அருந்ததியின கிறித்தவர் என்றும், இன்னும் பலவுமான அடுக்குகளில் பிரிவுகளும், கசப்புணர்வு களும் இருக்கத்தான் செய்கின்றன.

16ம் நூற்றாண்டில், ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழகம் வந்த கிறித்தவ மத போதகர் களின் ஈர்ப்பால் தமிழகத்தில் சொற்பமானவர் கள் கிறித்தவ மதத்தைத் தழுவினார்கள். அக்காலத்தில் கிறித்தவத்திற்கு மதம் மாறியவர் கள் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிர்முகாமாக கிறித்தவ மதத்தைப் பார்த்ததில்லை. ஆதிக்க சாதியினரும், அடக்குறைக்கு உள்ளான சாதி யினரும் சமகாலத்தில்தான் மதம் மாறினார்கள் கூடவே, அவர்கள் தங்கியிருந்த இந்து மதத்தில், தேங்கியிருந்த சாதிய எண்ணமும், வடிவமும் எந்த சிதைவுக்கும் உட்படாமல் மதம் மாறிக் கொண்டன. இதனால் வழிபாட்டு முறை, தேவாலய உரிமை, குடியிருப்பு விதிமுறைகள், சமூக பழக்கவழக்கங்கள் எல்லாவற்றிலும் இருந்துவந்த உணர்வுப்பூர்வமான சாதியம் கிறித் தவத்திலும் தொற்றிக் கொண்டது.

சடங்குகளும், சம்பிரதாயங்களும், மதகுரு மார்களுக்கு அளிக்கப்பட்டுவந்த கடவுளுக்கு இணையான கௌரவமும் இந்து மதத்தில் இருப்பதைப் போன்றே, கிறித்தவத்திலும் தொடர்ந்து வந்ததால், சமூக அமைப்பில் மாற்றம் உண்டாக வழியில்லை.

இதனால்தான், இஸ்லாம் என்ற தளத்தில் இந்த சாதிப் புற்று வளராமல் இருக்க மிக விழிப்புணர்வுடன் முஸ்லிம் அமைப்புகள் செய லாற்றி வருகின்றன. முஸ்லிம் சமூகத்தில் தலித் முஸ்லிம், தாழ்த்தப்பட்ட முஸ்லிம் என்ற சொல் அடுக்குகள் சொருகப்படுவதை மிகக் கவனமாக முஸ்லிம்கள் எதிர் கொண்டு வருகின்றனர். 2001ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் மாநில சட்டசபைக்கான பொதுத்தேர்தலில், தமுமுக வைத்த முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக் கீட்டை தருவதாக ஜெயலலிதா வாழ்வுரிமை மாநாட்டில் வாக்குறுதி அளித்தார். பின்னர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 'தலித் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு' என்று விஷமத் தனம் செய்தார். நாம் விழித்துக் கொண்டு கேள்வி எழுப்பிய போது, அச்சுப் பிழை என்று தன் 'நச்சு' எண்ணத்தை மாற்றிக் கொண்டார். திருத்தம் செய்கிறேன் பேர்வழி என்று, முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ரத்து செய்தார். சமுதாய முன்னேற்றத்திற்காக சமூகத்தைப் பிளவுபடுத்துவதை இஸ்லாமிய நெறி ஒரு போதும் ஒப்புக்கொள்ளாது. முஸ்லிம் சமுதாயமும் ஏற்காது. சமத்துவத்தை பரப்பவும், நிலை நாட்டவும்தான் இஸ்லாம் உலகளாவிய பணியாற்றி வருகிறது. மனித மனங்களின் உள் உணர்ச்சிக்கு இந்த மார்க்கத்தில் என்றுமே இடம் இருப்பதில்லை. இறைகட்டளையை நடை முறைப்படுத்துவது மட்டுமே சமூக நடவடிக் கைகளின் முதல் திட்டம். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையே மனித குலத்தில் சமத்துவத்தை ஏற்படுத்துவது தான், யூதமும், கிறித்தவமும், ஆரியமும், இந்துத்துவமும் மனிதகுல சமத்துவத்துக்காக உருவான மதங்கள் என்று எந்தப் பதிவுகளும் இல்லை. சமத்துவமாக வாழ்ந்த ஒரு காலக்கட்டம் இருந்ததாக வரலாறும்கூட இல்லை.

இதனால்தான் தமிழகத்திலும், கிறித்தவ மதமாற்றத்தில் கரைந்து போன தலித்துகள் உயர் சாதி கிறித்தவர்களுடன் இரண்டற கலந்து போக இயலவில்லை. காரணம், தலித்துகளது கிறித்தவ மத மாற்றம் என்பது சமூக விடுதலைக்கான நடவடிக்கையாக ஒரு போதும் இருந்ததில்லை. அதை கிறித்தவ திருச்சபைகளும் ஒப்புக் கொண்டதில்லை. கிறித்தவ சமூகம் உருவான காலக்கட்டத்தில் இருந்தே உட்பூசல்களும், மோதல்களும் அதன் உள்கட்டமைப்பில் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. அது இன்று வெளிப்பட்டிருக்கிறது.

இந்து மதத்தில் இருக்கும் தலித்துகளுக்கு சமூக விடுதலை வேண்டி மாநில, தேசிய அளவில் போராட்டங்களை தலித் அமைப்புகள் வீரியமாக நடத்த தொடங்கியதன் பின்னணியில் தான், கிறித்தவ சமுதாயத்தில் தனித் தொகுதியாக நிற்கும் தலித் கிறித்தவர்களும் உரிமை குரல் எழுப்பத் தொடங்கினர். இந்து மதத்தில் இருந்து வெளியேறும் பொழுது எந்த மதத்திற்குச் சென்றாலும் சமூக விடுதலை கிடைக்கும் என்று எண்ணுவது ஒரு கற்பனை அல்லது திரிபுவாதம். மத நம்பிக்கை ஆதிக்க சக்திகளின் முகமூடியாக இருக்கும் வரை ஒடுக்கப்பட்டவனின் தப்பிப் பிழைக்கும் ஓட்டம் ஓர் தொடர் போராட்ட மாகத்தான் இருக்கும். இஸ்லாம் மட்டுமே அந்த துப்புரவுப் பணியை திறம்பட செய்கிறது. காரணம், இஸ்லாம் தன் நெறியை ஒப்புக் கொள்பவர்களின் சொல், செயல், எண்ணம், பெயர், நடை, உடை, பாவனை, உறவு முறை, உணவு முறை, தோற்றப் பொலிவு, வாழிடம், வாழ்நிலை, அங்க சுத்தி, சுகாதாரம், உடல் நலம் என அத்தனை திக்குகளிலும் ஒரு மனிதனை மறுவடிவம் செய்கிறது. ஒரு மனிதனிடத்தில் இத்தனை மாற்றங்களையும் மொத்தமாக செய்து முடிக்க இஸ்லாம் தவிர்த்து எந்த கொள்கையிலும் சக்தி இல்லை.

அதனால்தான் தந்தை பெரியார், 'இன இழிவு தீர இஸ்லாமே நன்மருந்து' என பரிந்துரைத் தார். அவரது அன்றைய பரிந்துரை இன்றைக் கும், என்றைக்கும் இம்மண்ணுக்குத் தேவையாக இருக்கிறது! ஒரே இறைவன் உலக மக்களுக் காக வழங்கிய இஸ்லாமிய நெறியில்தான் உண்மையான சமத்துவம், சகோதரத்துவம் அடங்கியுள்ளது. எனவே சமத்துவம் தேடும் மக்களை நோக்கி தன் கரங்களை விரித்து 'இணைய வாரீர்' என இஸ்லாம் வரவேற்கிறது.

திருநெல்வே­ நகரம், 51வது வார்டு கிளை சார்பில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமிற்கு நகர மருத்துவர் அணிச் செயலர் கபீர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஐ. உஸ்மான்கான் முகாமை தொடக்கி வைத்தார்.

மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலர் தாஹிர், நிர்வாகிகள் ஜின்னா, வாஹித்அ­, சாதிக் ஆகியோர் கலந்துகொண்டனர்.

முகாமில் 30க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

நன்றி : தமுமுக இணையத்தளம்

கீழக்கரை தமுமுக அலுவலகத்தில் பென்னை கட்டி வைத்து சித்திரவதையா?

02. இளம் பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை : வேறு நபருடன் பேசியதால் கொடூரம்



ராமநாதபுரம் : வேறு நபருடன் பேசி கொண்டிருந்த இளம் பெண் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கட்டி வைத்து அடித்து உதைத்து மானபங்கம் செய்த த.மு.மு.க., பிரமுகர்கள் உட்பட 36 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த கமால் ஜலாலுதீன் மகள் தஸ்லிமா(25). விவாகரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் கீழக்கரையில் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பெரியபட்டினத்தை சேர்ந்த நயினாமுகம்மதுவுடன் பேசிகொண்டிருந்தார்.சந்தேகமடைந்த த.மு.மு.க., நகர தலைவர் சிராஜூதீன் தலைமையில் நகர் செயலர் மனாசீர் உட்பட த.மு.மு.க.,வினர் தஸ்லிமா, நயினாமுகம்மது ஆகியோரை த.மு.மு.க., அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை என்ற பெயரில் அடித்துள்ளனர். இருவரையும் பள்ளிவாசல் அருகே மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமை செய்தனர். தஸ்லிமாவை மானபங்கம் செய்து துன்புறுத்தி உள்ளனர். கீழக்கரை போலீசார்இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தஸ்லிமா புகாரின் படி, த.மு.மு.க., நகர் தலைவர் சிராஜூதீன், செயலர் மனாசீர் உட்பட 36 பேர் மீது பெண் வன்கொடுமை உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் த.மு.மு.க.,துணை தலைவர் வாபாசா துணை செயலர் ஜலால் ஆகியோர் தலைமையில், ஏராளமானோர் கீழக்கரை போலீஸ் நிலையம் முன் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்

Wednesday, March 19, 2008

அன்றாட வாழ்வே வழிபாடாக (வீடியோ)

"அன்றாட வாழ்வே வழிபாடாக"

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Al-Sheikh. Jamal Mohamed Madhani.


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

தமுமுக மீது விமர்சனம் - MNP கண்டனம்

மனித நீதிப் பாசறையையும், த.மு.மு.க வையும் தரக்குறைவாக விமர்சித்த பத்திரிகையாளர் பிரான்சிஸ் ஐ மனித நீதிப் பாசறை வன்மையாக கண்டிக்கின்றது.

பத்திரிகையாளர் பிரான்சிஸ் முகலாய மன்னர்களின் வரலாற்றை திரித்து தன் கற்பனையை சேர்த்து முகலாயர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு கண்காட்சியை கடந்த 03.03.2008 அன்று ஏற்பாடு செய்திருந்தார்.

வரலாற்று கண்காட்சியை பார்வையிட்ட பொதுமக்கள் அதில் புதைந்து கிடந்த வகுப்புவாதத்தை கருத்தில் காண்டு கண்காட்சி நிர்வாகத்திடம் எடுத்துரைத்தனர் தெர்ாந்து அந்த கண்காட்சிக்கு எதிர்ப்பு வலுக்கவே கண்காட்சிக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர் பிரான்சிஸ் , மத ஒற்றுமைக்கு சான்றாக இருக்கும் ஆர்காட் நவாபையும் மக்க் இயக்கமான மனித நீதிப் பாசறையையும் சாடியிருப்பது கண்டிக்கதக்கது.

பத்திரிகையாளர் பிரான்சிஸ் போன்ற மதவாத சக்திகளை அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தில் இது போன்ற எந்த ஒரு நிகழச்சியை ஏற்பாடு செய்ய அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசை மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கின்றது.

இவன்

ஏ.ஃபக்ருத்தீன்
மாநில செயலாளர்
மனித நீதிப் பாசறை

Monday, March 17, 2008

இறையச்சம் - மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி(VIDEO)

"இறையச்சம்"

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

துபாயில் தமிழக இளைஞர் தற்கொலை

துபாயில் தமிழக இளைஞர் தற்கொலை

துபாய் புளு ஸ்கை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த அப்பாஸ் ஷேக் ( வயது சுமார் 21 ) 16.03.2008 ஞாயிறன்று பிற ஊழியர்கள் பணிக்குச் சென்ற நேரத்தில் பேனில் கயிறை மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக சக ஊழியர்கள் தெரிவித்தனர்.

எக்ககுடியைச் சேர்ந்த இவர்களது குடும்பம் தற்பொழுது முதுகுளத்தூரில் வசித்து வருகின்றனர்.

தனது மகன் துபாய் சென்று குடும்பத்திற்கு உதவியாக இருப்பான் என நினைத்த இவரது குடும்பத்தினருக்கு ஷேக்கின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷேக்கிற்கு தகப்பனார், தாய், இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி ஆகியோர் இருக்கின்றனர்.

பிற ஊழியர்கள் பகலில் பணிக்குச் சென்று திரும்பி விட்டு அறைக் கதவைத் திறந்ததும் ஷேக் தூக்கில் தொங்கியது கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

துபாய் காவல்துறை சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக இந்திய தூதரக அலுவலகங்கள் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இந்தியர் தற்கொலை விகிதம் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடின்றி அதிகரித்து வருவது அதிர்ச்சியலைகளை இந்திய சமூகத்தினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

செய்தி தொகுப்பு : முதுவை ஹிதாயத்

புளியங்குடி கொலை வழக்கில் அரசிற்கு தமுமுக கெடு

கடையநல்லூரில் கவன ஈர்ப்பு பொதுக் கூட்டம்.



7 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் தப்லீக் பணியில் ஈடுபட்டிருந்த புளியங்குடி சகோதரர் அப்துல் ரஷீது பள்ளியில் வைத்து வெடிகுண்டு வீசியும் வெட்டியும் கொல்லப்பட்டார். இதில் புலன் விசாரணை செய்த நெல்லை மாவட்ட காவல்துறை, அப்துல் ரஷீது மகன் மைதீன் பிச்சை அவருடைய நண்பருடன் சேர்ந்து தனது தந்தையை படுகொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட கருணைத் தொகை ரூ.2,00,000ஃ- திரும்ப பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்த த.மு.மு.க.சிறை நிரப்பும் போராட்டம் அறிவித்ததை தொடர்ந்து C.B.C.I.D.S.I.T. பிரிவிற்கு மாற்றப்பட்டது. SIT யின் விசாரணையில் மைதீன் பிச்சை குற்றவாளி இல்லை என நிருபணம் ஆகியுள்ளது.

உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவருக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்ட கருணைத் தொகையை அவரது குடும்பத்திற்கு கிடைத்திட வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நெல்லை மாவட்ட த.மு.மு.க. 16.03.2008 ஞாயிறு அன்று கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாபெரும் கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடத்தியது.

இதில் உரையாற்றிய மாநில துணைப் பொதுச் செயலாளர் மௌலவி J.S..ரிபாயி ரஷாதி த.மு.மு.க.அனைத்து தரப்பு முஸ்லிம்களுக்கும் பொதுவானதாக எவ்வாறு செயல்படுகிறது என விளக்கிப் பேசினார். இறுதியாக சிறப்புரையாற்றிய மாநிலத் தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஹ், மேற்கூறப்பட்ட இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற அரசிற்கு இரண்டு மாத கால அவகாசம் அளிப்பதாகவும், தவறினால் நெல்லை மாவட்டம் ஸ்தம்பிக்க கூடிய அளவிற்கு போராட்டம் நடைபெறும் என எச்சரித்தார்.


மேலும், அவர் குறிப்பிடுகையில் கடந்த 2004 ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து அக்கூட்டணியின் வெற்றிக்காக தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் த.மு.மு.க.சுழன்று சுழன்று களப்பணி ஆற்றியது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்ட குறைந்தபட்ச செயல் திட்டத்திலும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதுகுறித்து விரிவான அறிக்கை அளிப்பதற்காக தேசிய மதம் மற்றும் மொழி சிறுபான்மை ஆணையம் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இட ஒதுக்கீடு கமிஷன் அமைத்தது. இந்த ஆணையம் 22.05.2007 அன்று தனது அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தது.

அந்த அறிக்கையில் சிறுபான்மையினருக்கான 15 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10 சதவிகிதம் முஸ்லீம்களுக்கு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 9 மாதங்கள் ஆகியும் இன்னும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே, நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இவ்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து அதை நடைமுறைப் படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டதோடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் அனைத்து எம்.பிக்களுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதப்படும் என்றும் குறிப்பிட்;டார்.

மேலும், அவர் பேசுகையில் தமிழகத்தில் தி.மு.க.தலைமையிலான அரசு அறிவித்த முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக முஸ்லிம்களுக்கு சென்;றடையாமல் உள்ளதை முதல்வரை சந்தித்து பேசியுள்ளோம். இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் இப்பிரச்சினை தீர்வு செய்யப்படும் என்று நம்புவதாக குறிப்பிட்ட அவர் மேலும் பேசுகையில் தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 8 பேர் தவிர, இதற்கான சதித் திட்டத்திற்கு பின்னணியாக செயல்பட்ட முக்கிய தலைவர்கள் விசாரிக்கப்பட வேண்டும், இராம கோபாலன் உண்மை அறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக்குறிப்பிட்டதோடு, கடையநல்லூரில் ஆர்ப்பாட்;டம் செய்ய முயன்ற மனித நீதி பாசறை அமைப்பினர் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார். இறுதியாக நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் குறிப்பாக மேலப்பாளையம், தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தால் சில அதிகாரிகள் அதைக் கிடைக்க விடாமல் செய்துள்ளனர். பாஸ்போர்ட் பெறுவது என்பது ஒரு இந்திய குடிமகனின் உரிமையாகும். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படும்போது முஸ்லிம்களுக்கு மட்டும் மறுக்கப்படுவது சட்ட விரோதம் ஆகும். இந்த நிலை தொடர்நதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நீதிமன்றத்தில் சந்திப்போம் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டு தினங்களாக நெல்லை மாவட்டத்தில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்தனர்.

செய்தி தொகுப்பு : திரு.நெல்லை உஸ்மான்.

தெறிந்து கொள்ளுங்கள் இதுதான் தமிழ் முஸ்லிம் அரசியல்

நான் எழுதிய ஒரு கட்டுரையில், " இன்றைய முஸ்லிம் சமூகம் வலப்பக்கம் திரும்புவதா, இடப்பக்கம் போவதா, நேரே செல்வதா அல்லது வந்த இடத்துக்கே திரும்புவதா என்று புரியாமல் நாற்சந்தியில் நின்று தவித்துக்கொண்டிருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தேன். இதற்கு உடனடியாக ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்பினேன் - ஆதங்கப்பட்டேன். ஆனால் அது நடப்பதுபோல் தெரியவில்லை என்பது மட்டுமல்ல; நடப்பதற்கான அறிகுறிகள் கூடத் தென்படக்காணோம்.

மகள் கட்டுமான நிறுவனத்தின் அதிபர் அமீர் ஜவஹர், தமிழன் தொலைகாட்சியில், "ஒற்றுமையை நோக்கி.." என்கிற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் பல்வேறு துறைகளைச் சார்ந்த நம் முஸ்லிம் பிரமுகர்கள் கலந்து கொண்டு ஒற்றுமையின்மையின் காரண காரியங்கள், அது எற்படுவதற்கான வழி வகைகள் என்று பல தரப்பட்ட கருத்துக்களை கூறி வருகிறார்கள் இதில் என்னுடைய பேட்டியும் இரண்டு பகுதிகளாக இடம் பெற்றுள்ளது

இந்த நிகழ்ச்சி பற்றி கருதுச் சொன்ன மவுலவி பீஜே இதை ஒரு கோமாளிக்கூத்து என்று ஆரம்பத்தில் கூறியதாக வருத்தப் பட்ட அமீர், பிறகு பீஜே தன் கருத்தை மாற்றிக் கொண்டதாகவும் சொன்னார்.

ஆனால் சில தினங்களுக்கு முன் வின் தொலைக்காட்சியில் நடந்த அவரது கேள்வி-பதில்'நிகழ்ச்சியில் "பிரிவு ஏற்படத்தான் செய்யும். ஒரே குழுவாக இருப்பது நடக்காத காரியம். நடப்பது தவறு. அதைச்சுட்டிக் காட்டி நல்லதுகளை எடுத்துச் சொல்கிறோம். அப்போ கொஞ்சம் பேர் அங்கிருந்து பிரிந்து நம்மகிட்டே வரத்தான் செய்வாங்க. அதைத் தடுக்க முடியாது. அப்படி பிரிஞ்சி, பிரிஞ்சி வந்து கடைசியிலே நாமெல்லாம் ஒண்ணாயிடுவோம். ரசூலுல்லா காலத்தில் குறைஷிகள் ஒண்ணாத்தான் இருந்தாங்க, பிறகு பிரிஞ்சி, பிரிஞ்சி வந்து கடைசியிலே ஒண்ணாயிடல்லியா" என்று ஒரு வினோதமான காரணத்தை முன் வைத்ததன் மூலம் தன்னைப் பொறுத்தவரை ஒற்றுமைக்கான வாசற்கதவை இழுத்து மூடி விட்டார் என்றே கொள்ள வேண்டியதாக இரூக்கிறது.

இன்னொரு நிகழ்ச்சியில் பேசிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலச் செயலர் ஹக்கிம் சத்தார் பாப்ரி மஸ்ஜித் இடிப்பை எதிர்த்து நடைபெற்ற பேரணியைக் குறித்துப் பேசுகையில், "உணர்ச்சி வசப்பட்டு என்ன பிரயோஜனம் ? அறிவு பூர்வமாகச் சிந்தியுங்கள். முஸ்லிம் லீக் காரர்கள் அறிவு பூர்வமாகச் சிந்திக்கக் கூடியவர்கள்" என்று தங்கள் கையாலாகத் தனத்துக்கு சப்பைக்கட்டு கட்டினார். பொதுவாக முஸ்லிம் லீக் கட்சியினர் Easy-chair intellectuals - சாய்வு நாற்காலி சண்டப்பிரசங்கிகள் என்கிற ஒரு கருத்து நிலவுகிறது.

அதை நிரூபிப்பது போலவே ஹக்கிம் சத்தாரின் பேச்சும் அமைந்தது. அதைவிட கலிமாச் சொன்ன ஒவ்வொரூ முஸ்லிமும் முஸ்லிம் லீக் தான் என்று அவர் அடித்த ஜோக்கை நினைத்து யாரும் வாயால்(?) சிரிக்க மாட்டார்கள் என்பது என்னவோ உண்மை.

ஒரு 'இஃப்தார்' நிகழ்ச்சி. நான் தொகுத்து வழங்கினேன். அநேகமாக எல்லா முஸ்லிம் தலைவர்களும் ஆஜர். எல்லோருமே ஒற்றுமையை வலியுறுத்தியே பேசினார்கள். கடைசியாக தேசீய லீகைச் சேர்ந்த அப்துல் காதர் என்கிற பெரியவர் பொட்டார் ஒரு குண்டு, "என்ன எல்லாரும் ஒத்துமை ஒத்துமைன்னு பேசிக்கிட்டு இருக்கீக. எல்லாரும் அவங்க, அவங்க அமைப்பை கலச்சிப்புட்டு எங்க கட்சிக்கு வந்துடுங்க எல்லாம் சாரியாப் போகும் ஒத்துமை வந்துடும் என்றார்." - கனவு காண்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா ?

இப்போது அந்த தேசிய லீகுக்குள்ளேயே பிளவு. 'கோனிக்கா' பஷீர், தான் தான் இன்னமும் தலைவர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் கட்சியின் பெரும்பாலான முக்கியஸ்தர்கள் செய்யது இனாயத்தூல்லா சாகிபை தலைவராக அறிவித்துள்ளார்கள். இவர் பல்வேறு இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்படுத்தும் முகமாக எடுக்கப்பட்ட முயற்சிகளில் முனைந்து முன் நின்றவர். தன்னுடைய நோக்கம் பதவியல்ல; ஒற்றுமைக்கான தொடர்ந்த முயற்சிதான் என்று தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார்.

ஒற்றுமை பற்றி ஒரு தலைவரிடம் நான் பேசியபோது, "நானும் ஒற்றுமையின் அவசியத்தை உணர்கிறேன். ஆனால் அபூ ஜஹில்களோடு யாருங்க சேருவா" என்று என்னை அதிர வைத்தார்.

நான் இதற்கு முன்பு 'தஃப்ரகில்' எழுதிய கட்டுரையைத் தொடர்ந்து வந்த பின்னூட்டங்கள் ஒற்றுமை என்கிற விஷயத்தில் மக்கள் எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எந்த அளவுக்கு ஆசைப்படுகிறார்கள். ஆதங்கப் படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் தலைவர்கள் மத்தியிலோ அல்லது தொண்டர்கள் மத்தியிலோ இப்போதுள்ள நிலையிலிருந்து மாறுவதற்கான எந்தவிதமான அறிகுறிகளையும் காணோம். .

ஆக, We are back to square one - நாம் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி இருக்கிறோம். and we are at the cross-roads - நம் சமூகம் நிற்பது நாற்சந்தியில்.

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்.

Sunday, March 16, 2008

வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்பு தடுத்த முஸ்லிம்கள் மீது தாக்குதல், பொய்வழக்கு கண்டித்து MNP ஆர்ப்பாட்டம்

அநீதிக்கெதிராக ஆர்பரிக்கும் மனிதநீதிப்பாசறையினர்


16.03.2008 அன்று காலை 11 மணியளவில் மனித நீதிப் பாசறை மதுரை மாவட்ட தலைவர் திரு. ஏ.முகம்மது காலித் அவர்க் தலைமையில் மதுரை மாவட்டம் சேழவந்தான் அருகே உள்ளது திருவாலவாயநல்லூர் கிராமத்தில் ஃபாசிச வெறியர்களான ஆர்.எஸ்.எஸ் இந்து முன்னணி தீவிரவாத கும்பல் மரணமடைந்த பென்னின் உடலை அடக்க சென்ற அப்பாவி முஸ்லிம்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலைவெறி கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் தாக்குதலுக்குள்ளான அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ள மதவெறி படித்த மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. டி.எஸ் அன்பு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும், பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதியோர்களையும், அப்பாவி முஸ்லிம்களையும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யக் கோரியும் மதுரை தெற்கு வாசல் பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித நீதிப் பாசறையி்ன் மாநில பேச்சாளர் திரு. கே. சையது இப்றாஹிம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். சட்டக் கல்லூரி மாணவர் திரு. ராஜா முகம்மது நன்றியுரை கூறினார். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஜமாத்துகளில் இருந்தும் நூற்றுக்காணக்கானோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.



திருவாலவாயநல்லூர் முஸ்லிம் ஜமாத்தினர் அனைவரும் மதவெறி கொண்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. அன்பு அவர்களால் பொய் வழக்கு போட்டு சிறைப்படுத்தப்பட்டிருப்பதால் ஜமாத்தின் முன்னால் செயலாளர் திரு. சேட் அவர்கள் நடந்த சம்பவம் குறித்து நமக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதன் நகல் கீழே தரப்பட்டுள்ளது. உடனடியாக வக்ஃப் வாரியத் தலைவர் திரு. ஹைதர் அலி அவர்களும், அரசில் இசுலாமியர்களின் பிரதிநிதிகளாக இருக்கும் தமுமுக வும் தலையிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்டு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய முயற்சி செய்ய வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், இஸ்லாமியர்கள் மீது கொலைவெறி தாக்குதல் தொடுத்த ஃபாசிச வெறியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அரசை வலியுருத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


இறைவன் மிகப் பெரியவன்
முஸ்லிம் ஜமாத்

திருவாலவாயநல்லூர் - 625221
திருவாலவாயநல்லூர் அஞ்சல் -
வாடிப்பட்டி தாலுகா - மதுரை மாவட்டம்


மதுரை மாவட்டம் சேழவந்தான் அருகே உள்ளது திருவாலவாயநல்லூர் கிராமம். இந்த கிராமத்தில் பள்ளிவாசலுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான அடக்கஸ்த்தளமான கப்ரஸ்தான் உள்ளது. இந்த இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஏற்பாடு செய்தபோது ஆர்.எஸ்.எஸ் ஃபாசிச சிந்தனை கொண்ட சில விஷமிகளா எதிர்த்து வந்தனர். இந்த எதிர்ப்பை மீறி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இது தற்போது ஆர்.டி.ஓ விசாரனையில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் 14.03.2008 அன்று முஸ்லிம் பெண்மணி ஒருவர் வஃபாத்தானார் (மரணித்தார்). அந்த ஜனாஸாவை(பிரேதத்தை) 15.03.2008 அன்று அடக்கம் செய்ய எடுத்துச் சென்றோம். அப்போது அர்.எஸ்.எஸ மற்றும் இந்து முன்னணியை சோந்த சங்பரிவார ஃபாசிஸக் கும்பல் முஸ்லிம்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 1 சிறுவார் உட்பட 5 முஸ்லிம்க் படுகாயமடைந்துள்ளனர்.

இதன் பின்பு காவல் துறைக் கண்காணிப்பாளர் அன்பு, ஜமாத் தலைவர் மற்றும் அனைத்து நிர்வாகிகள் உட்பட 28 முஸ்லிம்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 307 ன் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார். இதில் பலர் வயோதிகர்கள். ஆனால் எதிர் தரப்பில் ஒருவர் மீது கூட வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆகவு அன்பு இந்து முன்னணிக்கு ஆதரவாகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார். முஸ்லிம்களுக்கு நடக்கும் இத்தகைய கொடுமைகளையும் பல அதிகாரிகளிடம் கொண்டு சென்றுள்ளோம்.


குறிப்பாக வக்ஃபு வாரியத்திடம் இந்த பிரச்சினையை கொண்டு சென்று பல மாதமாகி விட்டது வக்ஃபு வாரிய சேர்மன் ஹைதர் அலியை நேரடியாக சந்தித்து வக்ஃபு நிலத்தை மீடு்க வேண்டும் என்று மனு நாம் கொடுத்துள்ளோம். மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெறியவில்லை.


எனவு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பொய்வழக்குகளையும் கவணத்தில் கொண்டு பள்ளிவாசல் இடத்தில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கும் ஒருதலைப்பட்சமாக நடக்கும் காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ் அன்பு மீது நடவடிகடகை எடுக்கவும் தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஜமாத்தின் கோரிக்கையாக இருந்து வருகின்றது.


இவன்
சேட்
முன்னாள் செயலாளர்

Saturday, March 15, 2008

ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவி - மஸ்கட் அமைப்பு வழங்குகின்றது

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

மஸ்கட் வாழ் தமிழ் முஸ்லிம்கள் சார்பாக ஆண்டு தோறும் தாய்த்தமிழகத்திலுள்ள வசதி குறைந்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி செய்து வருகின்றார்கள்.

பள்ளிப் படிப்பு முடிந்து மேல்நிலைப் பள்ளிப்படிப்பு (+2), பட்டயப்படிப்பு (Diploma), பட்டப் படிப்பு (Degree), தொழில் கல்வி, மார்க்க கல்வி பயில பொருளாதார வசதி குறைந்த முஸ்லிம் மாணவ - மாணவியர் தங்கள் விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பித் தறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

கல்வி நிதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவோர் தவறாமல் தங்களுடைய மதிப்பென் சான்றிதழின் (Mark Sheet) புகைப்பட நகல், அவர்கள் சார்ந்திருக்கும் ஜமாஅத் தலைவர் / செயலாளரிடமிருந்து வசதியின்மை குறித்து பரிந்துரைக் கடிதம், எந்த படிப்பு படிகக இருக்கிறார்கள், அதற்கு எதிர்பார்க்கப்படும் கல்விக் கட்டணம் எவ்வளவு ஆகியவைகளை இணைத்து அனுப்புதல் வேண்டும். இந்த இணைப்புகள் இல்லாத விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட மாட்டாது.

தகுதியும் ஆர்வமும் இருந்தும் வசதிக் குறைவால் படிக்க இயலாத தமிழ் முஸ்லிம் மாணவ மாணவியருக்கு உதவிட இந்த படிவத்தை முடிந்த வரை நகல் எடுத்து பள்ளிவாயில், கல்விக் கூடங்கள், பொதுநல அமைப்புகளுக்கெல்லாம் அனுப்பிக் கொடுத்து பயன்பெறச் செய்யுங்கள்!! இறையருள் பெருங்கள்!!.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

TAMAM
P.O BOX 1263
MUTTRAH - 114
SULTANATE OF OMAN


விண்ணப்பங்கள் மஸ்கட் வந்து சேர வுண்டிய கடைசி தேதி : 30-05-2008

முஸ்லிம் பண்டிகைகளுக்கு விடுமுறை இல்லாத அரசு ஆணை

அரசு ஆணையில் முஸ்லிம் பண்டிகைகளுக்கு விடுமுறை இல்லை.



அரசு ஆணை


தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் 1000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். சமீபத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் 2008ம் ஆண்டிற்கு நியாய விலை கடைகளுக்கு அரசு பொது மற்றும் பண்டிகை விடுமுறை தினங்கள் என்று வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 1776(15.11.2007)ல் இஸ்லாமியர்களுக்கான ரமலான் மற்றும் பக்ரீத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இவ்விரு பண்டிகைகளும் உலகத்தில் வாழும் எல்லா முஸ்லிம்களும் கொண்டாடுவதாகும். அந்த நாட்களை வேலை நாட்களாக அறிவித்து இருப்பது முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, தமிழக அரசு உடனே தலையிட்டு இக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமென தமிழக முஸ்லிம்கள் எதிர்பார்க்கிறார்கள்.


செய்தி : நெல்லை உஸ்மான் கான்.

Thursday, March 13, 2008

சமூக முன்னேற்றத்தில் பென்களின் பங்கு (VIDEO)

"சமூக முன்னேற்றத்தில் பென்களின் பங்கு"

அஷ்ஷேய்க். மன்சூர் மதனி அவர்கள்

Al-Sheikh. Mansoor Madhani.


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். மன்சூர் மதனி அவர்கள்

Wednesday, March 12, 2008

பஹ்ரைனில் மார்க்க கல்வி அரங்கம்

பஹ்ரைன் தமிழ் தஃவா கமிட்டி மற்றும் அல்ஹீஸ்னயைன் மீடியா இணைந்து வழங்கும்

மார்க்க கல்வி அரங்கம்

வழங்குபவர்
மெளலவி. அலி அக்பர் உமரி

நபிவழியில் நஃபிலான வணக்கங்கள்
இடம் : முஸ்தபா மஸ்ஜித் (குதைபியா)
நாள் : 13.03.2008 வியாழன்
நேரம் : இஷா தொழுகைக்கு பின்

நபிகளாரை நேசிப்பது எவ்வாறு?
இடம் : ஃபாறூக் மஸ்ஜித் (மனாமா)
நாள் : 14.03.2008 வெள்ளி
நேரம் : ஜீமுஆ தொழுகைக்கு பின்

முஸ்லிமின் அடையாளம்
இடம் : முஸ்தபா மஸ்ஜித் (குதைபியா)
நாள் : 15.03.2008 சனி
நேரம் : இஷா தொழுகைக்கு பின்

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
மேலும் விபரங்களுக்கு : 39535709, 36687150, 39120141

Sponsored By : The Islamic Center For Da'awa

Tuesday, March 11, 2008

ஈமானை பலப்படுத்துவோம் (VIDEO)

"ஈமானை பலப்படுத்துவோம்"

அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Al-Sheikh. Jamal Mohamed Madhani.


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்

Sunday, March 09, 2008

துபாயில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

துபாயில் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு


துபாயில் திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக செயலாளர் துறைமுகம் காஜா அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி வளைகுடா தமிழர் பேரவை சார்பில் சனிக்கிழமை மாலை லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

துபாய் தமிழ்நாடு பண்பாட்டுக்கழக புரவலர் அஷ்ரப் அலி தலைமை தாங்கினார்.ஆல்பர்ட் வரவேற்புரை நிகழ்த்தினார்.அஷ்ரப் அலி தனது உரையில் இந்திய தூதரக அதிகாரிகள் தமிழர்கள் பிரச்சனைக்காக அணுகும் போது மாற்றந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்டார். ஒரு தமிழர் காணாமல் போய் பல நாட்கள் ஆகியும் இதுவரை எவ்வித முயற்சியும் செய்யாமல் இருந்து வருவதற்கு வருத்தம் தெரிவித்தார். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மூலம் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக செயலாளர் துறைமுகம் காஜா அவர்கள் தனது ஏற்புரையில் சிறுபான்மை மக்களின் ஒரே தலைவர் தமிழக முதல்வர் கலைஞர் தான் என்றார். அதனால் தான் பலர் முயற்சி மேற்கொண்டும் கலைஞர் அவர்கள் மட்டுமே சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கினார். அமீரகத்தில் தமிழர்களுக்கு எவ்வித இன்னல்கள் ஏற்பட்டாலும் அதனை தனது கவனத்துக்கு கொண்டு வரும் பட்சத்தில் முதல்வர் கலைஞர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து அப்துல் ஜப்பார்,தமிழ்நாடு பண்பாட்டுக் கழக புரவலர் முஹம்மது ஃபாரூக் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர். முஹம்மது சபீர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் புரவலர் நடராஜன், அமீரக தமிழ்க் கவிஞர்கள் பேரவை தலைவர் கவிஞர் அப்துல் கத்தீம், கவிஞர் இசாக், தொழிலதிபர்கள் முஹம்மது ஃபாரூக், காஜா முகைதீன், முஹம்மது முஸ்லிம், சங்கமம் தொலைக்காட்சி இயக்குநர் கலையன்பன், ஆசியாநெட் வானொலி தமிழ் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஆசிப் மீரான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அன்வர் பாஷ நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.

செய்தி தொகுப்பு : முதுவை ஹிதாயத்