Showing posts with label தினமலர். Show all posts
Showing posts with label தினமலர். Show all posts

Friday, May 30, 2008

மனித நீதிப் பாசறை அணிவகுப்பு - தினமலர் மறுப்பு செய்தி

கடந்த 25.05.2008 அன்று தினமலரில் ""தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி பின்னனி குறித்து போலிஸார் விசாரனை" என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது அதில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தறித்து எழுதியிருந்த அந்த செய்திக்கு மனித நீதிப் பாசறை தனது கண்டனங்களை பதிவு செய்திருந்தது அது குறித்து 27.05.2008 அன்றைய தினமலர் கீழக்கண்டவாறு மறுப்பு வெளியிட்டுள்ளது.


மனித நீதிப் பாசறை எதிர்ப்பு

சென்னை, மே 27- மனித நீதிப் பாசறை சார்பில் சுதந்திர தினத்தன்று அணிவகுப்பு நிகழச்சி நடக்கவுள்ளதாக அந்த அமைப்பு தெறிவித்துள்ளது.

மனித நீதிப் பாசறை மாநிலத் தலைவர் முகமது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கை :

மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் தேசிய இயக்கமான "பாப்புலர் பிண்ட் ஆப் இந்தியா" சார்பாக ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின அணிவகுப்பு நடத்த திட்மிட்டுள்ளோம். தமிழகம் கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களிலும் இந்த அணிவகுப்பு நடக்கிறது. அதற்கான அணிவகுப்பு பயிற்சி மற்றும் ஒத்திகைகளை தமிழகம் முழுவதும் நடததி வருகின்றோம்.

இது குறித்து மாநிலம் முழுவதும் சுவர் விளம்பரமும் செய்துள்ளோம். காவல் துறை அதிகாரிகளிடம் இது குறித்து அதிகாரப்பூர்வமாக தெறிவித்துள்ளோம். இந்துக்களுடன் இணைந்து போராடிப்பெற்ற சுதந்திரத்தில் ஒற்றுமையை நிலை நிறுத்தும் முகமாகவும் இந்த சுதந்திர தின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது. நாங்கள் எப்போதும் வெளிப்படையான அமைப்பாகத்தான் செயல்பட்டு வருகின்றோம். பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிப்பதில்லை. இவ்வாறு முகம்மது அலி ஜின்னா தெறிவித்துள்ளார்.

தினமலர், சென்னை பதிப்பு
செவ்வாய்கிழமை, 27.05.2008
பக்கம் 14

Thursday, March 27, 2008

பொய்ச்செய்தி வெளியிட்ட தினமலர் ஆசிரியருக்கு 3 மாத சிறை


தமிழ் முஸ்லிம் பதிவுகள் - புதிய திரட்டி

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியருக்கு மூன்று சிறை தண்டனை

பொய்ச் செய்தி வெளியிட்டதாக தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு ஊத்துக்கோட்டை பள்ளியில் பொதுத் தேர்வின் போது காப்பியடிக்க உதவியதாக பள்ளித் தலைமையாசிரியர் சேதுராமன் குறித்து செய்தி வெளியிட்டது. இதனை அவதூறு வழக்காக சேதுராமன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதுகுறித்து தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வெளியீட்டாளர் இலட்சுமிபதி ஆகியோருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு வெளியிட்டது.

தகவல் : மக்கள் தொலைக்காட்சி

செய்தி : முதுவை ஹிதாயத்