Showing posts with label மானபாங்கம். Show all posts
Showing posts with label மானபாங்கம். Show all posts

Thursday, March 20, 2008

கீழக்கரை தமுமுக அலுவலகத்தில் பென்னை கட்டி வைத்து சித்திரவதையா?

02. இளம் பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை : வேறு நபருடன் பேசியதால் கொடூரம்



ராமநாதபுரம் : வேறு நபருடன் பேசி கொண்டிருந்த இளம் பெண் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கட்டி வைத்து அடித்து உதைத்து மானபங்கம் செய்த த.மு.மு.க., பிரமுகர்கள் உட்பட 36 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த கமால் ஜலாலுதீன் மகள் தஸ்லிமா(25). விவாகரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் கீழக்கரையில் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பெரியபட்டினத்தை சேர்ந்த நயினாமுகம்மதுவுடன் பேசிகொண்டிருந்தார்.சந்தேகமடைந்த த.மு.மு.க., நகர தலைவர் சிராஜூதீன் தலைமையில் நகர் செயலர் மனாசீர் உட்பட த.மு.மு.க.,வினர் தஸ்லிமா, நயினாமுகம்மது ஆகியோரை த.மு.மு.க., அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை என்ற பெயரில் அடித்துள்ளனர். இருவரையும் பள்ளிவாசல் அருகே மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமை செய்தனர். தஸ்லிமாவை மானபங்கம் செய்து துன்புறுத்தி உள்ளனர். கீழக்கரை போலீசார்இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தஸ்லிமா புகாரின் படி, த.மு.மு.க., நகர் தலைவர் சிராஜூதீன், செயலர் மனாசீர் உட்பட 36 பேர் மீது பெண் வன்கொடுமை உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் த.மு.மு.க.,துணை தலைவர் வாபாசா துணை செயலர் ஜலால் ஆகியோர் தலைமையில், ஏராளமானோர் கீழக்கரை போலீஸ் நிலையம் முன் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்