Showing posts with label கீழக்கரை. Show all posts
Showing posts with label கீழக்கரை. Show all posts

Sunday, March 01, 2009

கீழக்கரை நகராட்சியை சீர்படுத்துவோம் வாரீர்!!

கீழக்கரை நகராட்சியை சீர்படுத்துவோம்
வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

தொன்மையும் வரலாற்று சிறப்பும் மிக்க சமூக நல்லினக்கமும் மனித நேயமும் உயிர் மெய் எழுத்தாய் உறவு பாராட்டும் கீர்த்திமிகு கீழக்கரை. நகராட்சியாக உயர்வு பெற்று அரசு நிதிநிலையில் தன்னிறைவு பெற்று விளங்குகின்றது. தமிழகத்தில் அதிக வருமானம் உள்ள முதல் மூன்றாம் நிலை நகராட்சி என்ற பெருமைக்குறியது. இன்று லஞ்ச லாவன்ய நிர்வாக சீர்கேட்டால் சீரழிந்து நிற்கிறது. சாக்கடை நிரம்பி தெருக்களின் வழியாக ஓடுகிறது.குப்பைகள் முறையாக அள்ளுவதில்லை. தர்நாற்றம் மூக்கை துளைக்கிறது. கொசுத்தொல்லை ஊரையே சிக்கித் தினற வைத்தள்ளது. வீட்டிற்கு ஐந்து பேர் வீதம் மலேரியாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை செய்ய பணம் இன்றி கஷ்ட்டப்படுகின்றார்கள்.

சென்னை, திருச்சி போன்ற பிற நகரங்களில் தொழில் செய்வோர் ஊர் சென்றால் நோய் தொற்றி விடுமோ என்று அஞ்சுகின்றனர்.ஆளும் கட்சியின் அடிவருடிகள் நகராட்சியில் ஆதிக்கம் பெற்றதால் மக்கள் வரிப்பணம் விழுங்கப்படுகின்றது. பொதுமக்கள் செய்வது அறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர். ஓரு நாள் கூட நகராட்சி நிர்வாகம் கொசு மருந்து அடித்ததில்லை. மக்கள் வரிப்பணத்தில் வாங்கிய இயந்திரமோ மூலையில் முடங்கி கிடக்கிறது.

கீழக்கரை வெல்ஃபேர் சங்கம் ஊர் நலன் கருதி E.T.A குழுமத்தின் சார்பாக மனித நேய புரவலர்கள் அல்ஹாஜ். B.S. அப்துர்ரஹ்மான், அல்ஹாஜ். சலாஹீத்தீன் M.D., அவர்களால் பல்வேறு உபகரனங்கள் வழங்கப்பட்டு நகராட்சி வேலைப்பழுவில் பாதியை பகிர்ந்து கொண்டிருக்கிறது. பேரூராட்சி நகராட்சியாக உயர்வு பெற்று வரிகளை உயர்த்திய பிறகு பொது சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. துப்புரவு பணியாளர்கள் எந்த வார்டு பக்கம் என்ன வேலை செய்கிறார்கள் என்பதைகூட மேற்பார்வை செய்வதில்லை. லஞ்சம் வாங்க மட்டுமே கவுன்சிலர்கள் தேர்ந்டுக்கப்பட்டதாக நினைக்கின்றனர்.

தமிழகத்தில் எல்லா நகராட்சிகளிலும் குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. இன்று வரை கீழக்கரை நகராட்சி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்கியதில்லை. தெருக்களில் பிளீச்சிங் பவுடர் தூவப்படுவதில்லை. கேட்டால் முறையான பதில் இல்லை. தரம் பிரித்து லஞ்சம் வாங்குவதில் நகராடசி நிர்வாகம் தீவிரமாக இருக்கிறது. மக்கள் ஓட்டை வாங்கிச் சென்றவர்கள் மன்றத்தில் வாய்பொத்தி மெளனமாக இருக்கிறார்கள். காரணம், ஊழலிலும் லஞ்சத்திலும் சரிபங்கு பெறுகின்றனர். இந்த இழிநிலைக்கு முடிவு கட்டி நிர்வாக சீர்கெட்ட நகராட்சியை சீர்படுத்திட லஞ்சம் வாங்கும் மக்கள் விரோதிகளை கையும் களவுமாக பிடித்து முகத்திரை கிழித்திட இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பாக உறுதி மொழி ஏற்போம். லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள்.

கீழக்கரை மக்கள் நலம் பெற்றிட இடம் தந்து நகராட்சி கட்டிடத்தை கட்டித் தந்த பெருந்தகை டாக்டர். அல்ஹாஜ். ஹமீது அப்துல் காதர் அவர்கள் எண்ணம் ஈடேற பொறுப்பற்ற நகராட்சி புல்லுருவிகளை வீட்டிற்கு அனுப்பிட மக்களே நகராட்சி! நகராட்சியே மக்கள்!! என மக்கள் ஆட்சித் தத்துவத்தை கீழக்கரையில் நிலைநாட்டிட எந்த நேரமும் ஊர் நலம் பற்றிய தகவல் அறியும் உரிமைச்சட்டம் பெற்றிட தயாராவீர். கீழக்கரை நகராட்சி தமிழகத்திற்கே வழிகாட்ட முடிவு எடுப்பீர். இந்த இழி நிலை மாற்றிட எதிர்காலத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சிக்கே (IDMK) வாக்களிப்பீர்!!

நன்மையை ஏவுவோம், தீமையை தடுப்போம். ஊராடசி சீராட்சி காண, அநீதியை சகிப்பதில்லை, ஆர்த்து எழுவோம்.


இவன்
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தொலைபேசி : 9942065575, 9944362379, 9629471303

www.idmk.org

Thursday, April 10, 2008

கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகம்

கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ் உயிரின கண்காட்சியகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயை தலைமையிடமாகக் கொண்ட
பன்னாட்டு தொழில் நிறுவனமான இடிஏ அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை
இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் கீழக்கரையில் நிருபர்களிடம்
கூறியதாவது :

வள்ளல் சீதக்காதி, உமறுப்புலவர் உட்பட பல புலவர்கள் வாழ்ந்து மறைந்த ஊர்
கீழக்கரையாகும். போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள்
மற்றும் வீரத்தளபதிகள் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளனர்.

இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்பை விளக்கும் வகையில் ஒலி, ஒளி காட்சி
பிரமாண்டமாக அமைக்கப்படும். பழமையை நினைவுபடுத்தும் அருங்காட்சியகம்,
கடல்வாழ் உயிரின கண்காட்சியகம், பழமையான கடல் பொருட்கள் இந்த
அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ்
உயிரின கண்காட்சியகமும், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் வகையில்
பிரமாண்ட திருமண மண்டபமும் கட்டப்படும்.

பல கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கான அறிக்கை வெஸ்ட் ஆசியா
நிறுவனங்களின் இயக்குநர் அஹமது ரிபாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திட்ட
அறிக்கை, வரைபட பணிகள் நிறைவடைந்த பின்னர் வேலைகள் துவக்கப்படும்.
இதற்கான செலவை இடிஏ அஸ்கான் குழு நிறுவனங்கள், கீழக்கரை நலச் சங்கம்
உள்ளிட்டவை ஏற்கும் என்றார்.

தகவல் :

கீழக்கரை ஹமீது யாசின்
ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர்
துபாய்

Monday, March 31, 2008

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் முதல் ரேங்க் பெற்ற மாணவி


கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் முதல் ரேங்க் பெற்ற மாணவி

கீழக்கரை ஹமீதியா மெட்ரிக் மேனிலைப்பள்ளியில் யு.கே.ஜியில் முதலிடம் பெற்ற பாத்திமா ரீஸ்மாவுக்கு ஆண்டுவிழாவில் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

இவரது தந்தை ஹமீது யாசின் துபாய் ஈடிஏ ஜீனத் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மேலும் இவர் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார்.

ஹமீது யாசின் தந்தை கீழக்கரை தினகரன் செய்தியாளராவார்.

Thursday, March 20, 2008

கீழக்கரை தமுமுக அலுவலகத்தில் பென்னை கட்டி வைத்து சித்திரவதையா?

02. இளம் பெண்ணை கட்டி வைத்து சித்ரவதை : வேறு நபருடன் பேசியதால் கொடூரம்



ராமநாதபுரம் : வேறு நபருடன் பேசி கொண்டிருந்த இளம் பெண் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கட்டி வைத்து அடித்து உதைத்து மானபங்கம் செய்த த.மு.மு.க., பிரமுகர்கள் உட்பட 36 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்த கமால் ஜலாலுதீன் மகள் தஸ்லிமா(25). விவாகரத்து பெற்று இரண்டு குழந்தைகளுடன் கீழக்கரையில் பெற்றோர் வீட்டில் வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு பெரியபட்டினத்தை சேர்ந்த நயினாமுகம்மதுவுடன் பேசிகொண்டிருந்தார்.சந்தேகமடைந்த த.மு.மு.க., நகர தலைவர் சிராஜூதீன் தலைமையில் நகர் செயலர் மனாசீர் உட்பட த.மு.மு.க.,வினர் தஸ்லிமா, நயினாமுகம்மது ஆகியோரை த.மு.மு.க., அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை என்ற பெயரில் அடித்துள்ளனர். இருவரையும் பள்ளிவாசல் அருகே மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமை செய்தனர். தஸ்லிமாவை மானபங்கம் செய்து துன்புறுத்தி உள்ளனர். கீழக்கரை போலீசார்இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தஸ்லிமா புகாரின் படி, த.மு.மு.க., நகர் தலைவர் சிராஜூதீன், செயலர் மனாசீர் உட்பட 36 பேர் மீது பெண் வன்கொடுமை உட்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் த.மு.மு.க.,துணை தலைவர் வாபாசா துணை செயலர் ஜலால் ஆகியோர் தலைமையில், ஏராளமானோர் கீழக்கரை போலீஸ் நிலையம் முன் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்