Showing posts with label திருச்சி. Show all posts
Showing posts with label திருச்சி. Show all posts

Thursday, March 05, 2009

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் 07.03.2009 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு என்.எம். காஜாமியான் நினைவு அரங்கில் நடைபெற இருக்கிறது.

இப்புதிய கட்டிடத்தை இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை முஹம்மதியா பள்ளிகளின் ஆயுட்காலத் தலைவர் ஹாஜி எஸ். தஸ்தகீர் தனது தாயார் அன்னை எம்.எஸ். பாத்துமுத்து ஜொஹரா நினைவாக கட்டி அதனை கல்லூரிக்கு அர்ப்பணிக்கிறார். இக்கட்டிடம் இரண்டு மாடிகளைக் கொண்டது.

பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக ரூபாய் 3.4 இலட்சம் வழங்கிய சென்னை சீனா தானா டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டியும், சென்னை ஈடிஏ டெக்னோ பார்க் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தலைவருமான ஹாஜி எஸ்.எம். செய்யது அப்துல் காதர் ( சீனா தானா ) அவர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.

ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க சென்னை கிளையின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம். இதாயத்துல்லா வாழ்த்துரை வழங்குகிறார்.

செய்திகள் நன்றி : முதுவை ஹிதாயத்

Monday, November 24, 2008

வக்ஃபு இடத்தில் அறிவாலயமா? வெட்ககேடு!! வெட்ககேடு!! - IDMK Interview in JUVEE

திருச்சி ருஸ்த்தும் பீவீ பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை திமுக வினர் கலைஞர் அறிவாலயத்திற்காக ஆக்கிரமித்துள்ளதால் அதை மீட்டெடுக்கும் போராட்டத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளதை அணைவரும் அறிவர்.இதன் ஒரு பகுதியாக தமிழகமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது குறித்து ஜீனியர் விகடன் பத்திரிகையில் வெளியாகியுள்ள இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்களின் பேட்டி இங்கு வெளியிடப்படுகின்றது. புகைப்படங்களின் மேல் சொடுக்கி அதை பெரிதாக்கி படிக்கவோ பிரின்ட் எடுக்கவோ செய்யலாம்.
தமிழகத்தை கலக்கிய சுவரொட்டி



பக்கம் 1



பக்கம் 2


Friday, September 26, 2008

வக்ஃப் சொத்துக்கள் மோசடி - வாரியத் தலைவருக்கு தெறியாமலா?

தமிழக முதலவர் கருணாநிதியால் கடந்த 21 ஆம் தேதி திருச்சியில் திறந்து வைக்கப்பட்ட திருச்சி தி.மு.க.வின் தலைமையகமான "கலைஞர் அறிவாலயம்" அமைந்துள்ள இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வக்ஃபு சொத்து என்று தெரிய வந்துள்ளது. திருச்சிக்கும் கரூருக்கும் இடையிலுள்ள பைபாஸ் ரோட்டில் 80,000 சதுர அடியில் ரூபாய் 15 கோடியில் கட்டப்பட்டுள்ள அந்த இடம் தனது தந்தையாரால் 1928 ஆம் ஆண்டு வக்ஃபு சொத்தாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது என்று திருச்சி, மேற்கு சிந்தாமனியைச் சேர்ந்த ஹெச்.செய்யது மதனி (வயது 60) தெரிவித்துள்ளார்.


87.5 சென்ட் அளவுள்ள இடத்தை தனது தந்தை 1928 ஆம் ஆண்டு, விலை கொடுத்து வாங்கி அதனை வக்ஃபுக்கு கொடுத்ததாகவும் அதில் தனது பங்கு மட்டும் 20,000 சதுர அடி என்றும் அவர் தெரித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கரூர் பைபாஸ் சாலைக்காக அதில் ஒரு பகுதியை அரசாங்கம் எடுத்துக்கொண்டது என்றார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் நேரு, தவறான முறையில் அந்த இடத்தை தனது கட்சிக்கு சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளார். தற்போது பிரச்சனை வெளிவரவே அந்த இடத்தை லீசுக்கு எடுத்திருப்பதாக அமைச்சர் கூறுவதுகூட செல்லத்தக்கதாகாது. ஏனெனில் அந்த வக்ஃபு சொத்தை லீசுக்கு எடுத்தாலும் அதிக பட்சம் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே எடுக்க முடியும். அப்படி இருக்கும்போது ரூபாய். 15 கோடி செலவில் ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டியிருக்கிறார்கள் என்றால் இது ஆட்சியாளர்களின் அத்துமீறல் என்றுதான் சொல்ல வேண்டும்.

-sources from 'Deccan Chronicle' chennai - 26 09 2008

இது குறித்த செய்திகள் இன்றைய தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளன. தமுமுக பொறுப்பு வகிக்கும் வக்ஃப் வாரியத்தில் வெளியாகியுள்ள அடுத்த ஊழல். விளக்கம் அளிப்பார்களா சமுதாய காவலர்கள்?

நன்றி : நீடுர் இன்ஃபோ

Thursday, July 03, 2008

திருச்சியில் IDMK அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி


ஓர் இறை! ஓர் குலம்!!

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுப்போம்;!!
சட்டம் இயற்றும் சபைகளில் சங்கமிப்போம்!!
வருங்கால சந்ததிகளுக்கு சரித்திரம் படைப்போம்!!!



திருச்சியில் திருப்புமுனை ஏற்படுத்த
இந்திய தேசிய மக்கள் கட்சியின் கலந்துரையாடல் நிகழ்ச்சி

தேதி : 06-07-2008, ஞாயிறு
நேரம் : மாலை 6.30 மணி
இடம் : ஜெம் மஹால், சிங்காரத்தோப்பு,திருச்சி

தலைமை:

சகோ. முஹம்மத் இக்பால்
மாநில துணைப் பொதுச்செயலாளர், இந்திய தேசிய மக்கள் கட்சி

சிறப்புரையும் கேள்வி பதில் நிகழ்ச்சியும்
சகோ. குத்புதீன் ஐபக் M.A
மாநில தலைவர், இந்திய தேசிய மக்கள் கட்சி

உங்கள் கண்டனக் கணைகள், குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள், சந்தேகங்கள், கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படும்.

வீழ்ந்த சமூகத்தை அரசியலில் வீறுகொண்டு எழுப்பிட வாருங்கள் உங்கள் வாதங்கள் வலிமையான சமூகத்தை உருவாக்கட்டும்.

இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தமிழ்நாடு செல் : 9943802111, 9344510369, 9443021050




Saturday, April 19, 2008

துபையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) நடத்திய இஸ்திமா நிகழ்ச்சி

துபையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) நடத்திய இஸ்திமா நிகழ்ச்சி


துபை மண்டல இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) சோனாப்பூர் கிளையின் சார்பாக, சோனாப்பூர் பலிதியா கேம்ப் பள்ளிவாசலில் 18.4.08 வெள்ளிக்கிழமையன்று அஸர் முதல் இஷா வரை இஸ்திமா நடைபெற்றது. துபை மண்டல முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் சகோதரர்.கொடுங்கையூர். மொய்தீன் அவர்கள் தலைமையெற்க, சகோதரர். மேலப்பாளையம். மெளலானா அவர்கள் கிராஅத் ஓதினார். இஸ்திமா நிகழ்ச்சியினை சகோதரர். பரமக்குடி. எ.ஏஸ். இப்ராஹீம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். முதல் அமர்வில் சகோதரர். கொடுங்கையூர். அமீர் சுல்தான் அவர்கள் "திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" என்ற தலைப்பிலும், இரண்டாவது அமர்வில் சகோதரர் நூருல் அமீன் அவர்கள் "ஷிர்க்கை ஒழிப்போம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.


இந்நிகழ்ச்சியில் துபை முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக 22.2.2008 அன்று நடைப்பெற்ற இரத்த தான முகாமில் கலந்துக்கொண்டு இரத்த கொடுத்த சகோதரர்களுக்கு, இரத்தம் தானம் செய்ததற்கான அடையாள அட்டையானது சகோதரர். சுலைமான் ஹாஜியார் அவர்களிடம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதனை சோனாப்பூர் கிளை முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாகி சகோதரர். திருச்சி. நியாஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.


சகோதரர். நிஜாமுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த, இறுதியாக துஆ ஓதப்பட்டு நிகழ்ச்சியானது அல்லாஹ்வின் உதவியால் மிகச்சிறப்பாக முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் துபை மண்டல முஸ்லிம் முன்னேற்றக்கழக பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். சோனாப்பூர் பகுதியில் பல நாட்டை சார்ந்த தொழிலாளர்கள் வசிப்பதால், மொழி தெரியாவிட்டாலும் தமிழ் இஸ்லாமிய நிகழ்ச்சியினை ஆர்வமுடன் கேட்க வேண்டி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சார்ந்த தொழிலாளர்களும் கலந்துக்கொண்டனர். மற்றும் தொழிலாளார்கள் அதிகம் வசிக்கும் அல்கூஸ் போன்ற பகுதியிலிருந்தும் ஏராளமான சகோதர உள்ளங்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

Monday, March 31, 2008

திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா

திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி ஐந்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழா





Dear Brother
Assallamu Allaikum Wa Rahmathullahi wa Barakathuhu

Please find in the attachment the scanned copy of the
Invitation for the AIMAN WOMEN COLLEGE'S
5th Annual Convocation to be held on 3rd April 2008.

Kindly forward this message to all.

Kindly include in your Duaas for the successful
completion of all the events scheduled between
3 rd and 5th April 2008.

In case if you are unable to attend, please make Duaas for its success.

Regards
Seyed JAAFAR
Secretary
AIMAN EDUCATION AND WELFARE SOCIETY

My contact number in India: (91) 94860 14192
In UAE : (971 50) 49 29 184

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு

திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்தும் மாநில மாநாடு

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் எதிர்வரும் மே 18,2008 ஞாயிறன்று
இஸ்லாமிய இலக்கிய கழகம் மாநில மாநாட்டை நடத்த இருப்பதாக அதன்
பொதுச்செயலாளர் எஸ்.எம். இதாயத்துல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகம் இதுவரை ஏழு அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய
மாநாடுகளை நடத்தியிருக்கிறது. ஆண்டுதோறும் மாநில மாநாடு நடத்த வேண்டும்
என்ற இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தீர்மானத்தின்படி, முதல் மாநில மாநாடு
மே 18, 2008 அன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நிகழ இருக்கிறது.

சிறப்பு நிகழ்வுகள்

கருத்தரங்கம் : கருத்தரங்கக் கரு

தமிழக இலக்கிய, சமூக, கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சியில்
முஸ்லிம்களின் பங்கு என்பது இம்மாநாட்டுக் கருத்தரங்கப் பொருளாக ( Theme
of the Conference ) இருக்கும்.

1. இதுவரை ஆய்வு செய்யப்படாத இஸ்லாமிய இலக்கியங்கள்
2. தமிழகக் கல்வி, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பாடுபட்ட
முஸ்லிம் சான்றோர்கள்
3. கல்வி வளர்ச்சியில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு
4. மார்க்கக் கல்வி வளர்ச்சியில் மதரஸாக்களின் பங்களிப்பு
5. தமிழகப் பண்பாட்டு ( உணவு, உடை,அணி,இசை, கட்டிடக் கலை, கைவினைப்
பொருள், நாடகம், பிறப்பு, திருமணச் சிறப்புச் சடங்குகள், ஈத், கந்தூரி,
விளையாட்டு, குடிப்பெயர், தொழில், வணிகம், மொழி) வளர்ச்சியில்
முஸ்லிம்களின் பங்கு
6. முஸ்லிம்களின் மத நல்லிணக்கப் பணிகள்
7. நாட்டுப்புறவியல்
8. மார்க்க இலக்கியம்
9. நவீன இஸ்லாமிய இலக்கியம்

பேராளர் :

தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களும், புரவலர்களும் மட்டுமே
பேராளர்களாகக் கலந்து கொள்ள முடியும். பேராளர்களுக்கும்,
வெளியூர்க்காரர்களுக்கும் உணவும், தங்குமிடமும் ஏற்பாடு செய்து
தரப்படும்.

பேராளர்களுக்கெனத் தனிக் கட்டணம் இல்லை

கட்டுரைகள் ஏ4 அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல், கணினி அச்சு செய்து
அனுப்ப வேண்டும்.
கட்டுரைகளைத் திருத்த ஆய்வரங்கக் குழுவிற்கு முழு உரிமை உண்டு.

மாநாட்டுச் சிறப்பு மலர் :

சிறப்பு மலருக்குப் பொருத்தமான வகையில் ஏ4 அளவில் 6 பக்கங்களுக்கு
மிகாமல் ஒளியச்சு செய்த கட்டுரைகள், 2 பக்கங்களுக்கு மிகாமல் கவிதைகள்
வரவேற்கப்படுகின்றன.

விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரக் கட்டணப்பட்டியல்

மலர் அளவு : 22 செ மீ x 28 செ மீ

ஒரு பக்க வண்ண விளம்பரம் ரூ 8000
ஒரு பக்க கறுப்பு வெள்ளை விளம்பரம் ரூ 5,000
அரைப் பக்க விளம்பரம் ரூ. 3,000

மாநாட்டு மலருக்கும் படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பரக் குழு

அல்ஹாஜ் நூர் முஹம்மது, ஒலிம்பிக் கார்ட், சென்னை
அல்ஹாஜ் அஹ்மது ரிபாயி
அல்ஹாஜ் எஸ்.எம். ஹிதாயத்துல்லா
அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஷாஜஹான், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
ஹாஜியானி பாத்திமா முஸாஃபர்
அல்ஹாஜ் பி. அப்துல் காதர், எம்.எம்.எஃப் லெதர்ஸ்

வரைவோலை / காசோலை : ISLAMIA ILAKKIYA KHAZHAGAM
என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க அளவில் அனுப்பப்பட வேண்டும்
( விளம்பரச் செய்தியைத் தனியாகத் தட்டச்சு செய்து தர வேண்டுகிறோம் )





செயல்திட்டங்கள்

1 திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 'இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப்
பண்பாட்டு இருக்கை'யினை நிறுவ ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

2. இயங்காமல் இருந்த தஞ்சைப் பல்கலைக்க கழக 'இஸ்லாமிய ஆய்வு இருக்கை'யை
பிரசிடெண்ட் ஓட்டல் தலைவர் ஜனாப் அபுபக்கர் வாயிலாகப் ( துணைத்தலைவர்,
இஸ்லாமிய இலக்கியக் கழகம்) புதிதாக நிதி உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு
விட்டது.

3. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய கழக வேண்டுகோளின்படி,
பினாங்கு டத்தோ ஜனாப் பரக்கத் அலி அவர்கள் நிறுவிய மர்ஹூம் ஹாஜி 'மாயின்
அபூபக்கர்' பெயரில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டுச்
சொற்பொழிவிற்கான அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது.

4. முனைவர் பேராசிரியர் ஜனாப் நெயினார் முஹம்மது பெயரில் ஏதேனும் ஒரு
பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச்
சொற்பொழிவு நிறுவப்பட உள்ளது.

5. அறங்கக்குடி வள்ளல் ஒய்.எம்.எச். ஹபீபுர் ரஹ்மான் அவர்கள் பெயரில்
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறுவ ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.

6. நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா, சேலம் ஈ.வெ.ரா.,
கோவை பாரதியார், அண்ணாமலை, அன்னை தெரசா, பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்,
வேலூர், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகிய எஞ்சியுள்ள பல்கலைக்கழகங்களில்
இஸ்லாமிய இலக்கிய ஆய்வுப் பண்பாட்டு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிறுவ
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7. வருகிற மே 18 ஆம் தேதி 2008 இல் இவ்விழாவில் சதாவதானி சேகுத்தம்பிப்
பாவலரின் நினைவு அஞ்சல் தலையினை மாண்புமிகு மத்திய அமைச்சர் திருமிகு.
ராசா அவர்கள் ( தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் ) வெளியிடுகிறார்.

8. இவ்வாண்டும் 'அல்ஹாஜ் மர்ஹூம் பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா
அறக்கட்டளை' சார்பாக உமறுப்புலவர் விருதும், ரூபாய் ஒரு இலட்சமும்
வழங்கப்படுகிறது.

9. கல்வித்தந்தை சமூக வள்ளல் அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. ரஹ்மான் அவர்களுக்கும்,
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தை நிறுவிய பெரும்புலவர் சி.நயினார் முஹம்மது
அவர்களுக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும்.

10. பொற்கிழியுடன் கூடிய சிறப்பு விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.

நூல் வெளியீடு

மாநாட்டில் புதிய நூல்கள் வெளியிடப்படும். நூல்களை வெளியிட விரும்புவோர்
இப்போதே பதிவு செய்ய வேண்டுகிறோம். நூல்கள் 2007,2008 ஆம் ஆண்டுகளில்
வெளிவந்ததாக இருக்க வேண்டும். 80 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க
வேண்டும். 100 படிகள் பேராளர்களுக்கு வழங்க 2008 ஏப்ரல் இறுதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டும்.

நூல் அன்பளிப்பு

பேராளர்களுக்குத் தங்கள் நூல்களை அன்பளிப்பாக அளிக்க விரும்புவோர் 300
படிகளுக்குக் குறையாமல் மாநாட்டு அலுவலகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள்
அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

அரிய நூல் பதிப்பு

இதுவரை அச்சு வடிவம் பெறாத அரிய இஸ்லாமிய இலக்கியங்கள் இம்மாநாட்டில்
வெளியிடப்படவிருக்கின்றன.

இஸ்லாமிய இலக்கியக் கழகம்

சிறப்பு நெறியாளர்கள்

பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முஹம்மது
நீதியரசர் சி.மு. அப்துல் வகாப்
டாக்டர் சே.சாதிக்


நெறியாளர் : கவிக்கோ அப்துல் ரகுமான்
தலைவர் : கேப்டன் என்.ஏ. அமீர் அலி
துணைத்தலைவர் : பிரசிடெண்ட் ஏ. அபூபக்கர்
பொதுச்செயலாளர் : எஸ்.எம். ஹிதாயத்துல்லா - 044 2846 0128 / 98 400 40067
பொருளாளர் : எஸ்.எஸ். ஷாஜஹான்

அமீரக ஒருங்கிணைப்பாளர்

முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் 050 452 4990
முதுவை ஹிதாயத் 050 51 96 433


விளம்பரம் அனுப்ப வேண்டிய முகவரி :

எஸ்.எம். ஹிதாயத்துல்லா
பொதுச்செயலாளர்
இஸ்லாமிய இலக்கிய கழகம்
எண் 27 உட்ஸ் சாலை
அண்ணா சாலை
சென்னை 600 002
தொலைபேசி : 044 2846 0128 / 98 400 40067




மாநாட்டுப் புரவலர்கள்

1. அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன்
மேலாண் இயக்குநர், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்கள்
2. அல்ஹாஜ் எஸ்.எம். ஹமீது அப்துல் காதர்
தலைவர், சதக் அறக்கட்டளை
3. அல்ஹாஜ் டி.இ.எஸ். பத்ஹுர் ரப்பானி
தாளாளர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
4. அல்ஹாஜ் பி.எஸ்.ஏ. அப்துல் காதர் புஹாரி ( சீதக்காதி அறக்கட்டளை )
5. அல்ஹாஜ் முஹம்மது இல்யாஸ், பேங்காங்
6. அல்ஹாஜ் சேகு நூர்தீன், ஏ.எம்.எஸ். கல்வி அறக்கட்டளை
7. அல்ஹாஜ் எம்.ஏ. முஸ்தபா, ரஹ்மத் அறக்கட்டளை
8. அல்ஹாஜ் ஒய்.எம். ஹபீபுர் ரஹ்மான், அரங்கக்குடி
9. அல்ஹாஜ் எஸ். அஹமது மீரான், புரபஷனல் கொரியர்
10. அல்ஹாஜ் ஆர். தாவூத் பாட்சா , நிறுவனர் ஆர்.டி.பி.கலை அறிவியல் கல்லூரி
11. அல்ஹாஜ்.எல்.கே.எஸ். சையது அஹமது, திநகர் எல்கேஎஸ். கோல்டு ஹவுஸ் பி லிட்
12. அல்ஹாஜ் எஸ் முஹம்மது ஜலீல், தாளாளர் , சேது பொறியியல் கல்லூரி
13. அல்ஹாஜ் ஏ. அபூபக்கர், தலைவர், பிரசிடெண்ட் ஹோட்டல்
14. அல்ஹாஜ் ஹெச். நூர் முஹம்மது, எம்.டி, ஒலிம்பிக் கார்ட்,சென்னை
15. அல்ஹாஜ். பஷீர் அஹமத்,யூசிமாஸ்
16. அல்ஹாஜ். ஷாகுல் ஹமீது, நோபிள் மரைன்
17. அல்ஹாஜ். பி. அப்துல் காதர், எம்.எஃப்.லெதர்ஸ்
18. அல்ஹாஜ் ராஜா ஹசன் ( ஐக்கிய ஜமாஅத் தலைவர், மதுரை )
19. டாக்டர் எஸ்.ஏ. சையது சத்தார் ( ரப்பானி வைத்திய சாலை )
20. அல்ஹாஜ் எஸ்.எம். அப்துல் வாஹித், தலைவர் அல்ஹாஜ் மர்ஹும்
பார்த்திபனூர் முஹம்மது முஸ்தபா அறக்கட்டளை
21. வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது
அறங்காவலர், வடக்குகோட்டையார் முஹம்மது அப்துல்லாஹ் அறக்கட்டளை
22. சீனாதானா அல்ஹாஜ் எஸ்.எம். செய்யது அப்துல் காதர்
தலைவர், ஸ்கை நிறுவனம்,
23. அல்ஹாஜ். சபியுல்லாஹ் ( நிஜாம் பாக்கு, புதுக்கோட்டை )
24. அல்ஹாஜ். ஒயிட் ஹவுஸ் பாரி
25. அல்ஹாஜ் ரபீக் ( தாஜ்மஹால் புகையிலை, புதுக்கோட்டை )
26. அல்ஹாஜ் அமானுல்லாஹ், ஈரோடு
27. அல்ஹாஜ் கே.கே.எஸ்.கே. ஹைதர், ஈரோடு
28. கே. செய்யது முஹம்மது ( இலாஹி இண்டர்னேஷனல் )