Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Friday, June 04, 2010

ததஜ வினருக்கு அறிவுரை - மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (மீழ்பதிவு)

அல்லாஹ்வின் திருநாமத்தால்........



நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினை இருக்கிறது'50:35.

அன்புச் சகோதரரே! பல சகோதரர்களின் உருவப்படங்களுடன் எனது உருவப் படத்தையும் இணைத்து நீங்கள் தொகுத்த ஒரு ஆக்கம் கண்டேன். அதைக் கண்டபோது அதைத் தொகுத்த நீங்கள் தவ்ஹீதில் அக்கறை உள்ளவர் என்பதும், அதே நேரம் நீங்கள் தமிழகத்தில் தவ்ஹீத் உருவான, உருவாகி வளர்ந்த வரலாறு தெரியாதவர் என்பதும் பளிச்சென தெரிந்து விட்டது. எனவே உங்களைப் போன்று தமிழகத்தில் தவ்ஹீத் உருவான வரலாறு தெரியாமலேயே செயல்படும் பல இளைஞர்கள் உண்மையைப் புரிந்து உரிய பலனைப் பெற வேண்டுமென்ற நன் நோக்கில் மேற் குறிப்பிட்டிருக்கும் இறைவாக்கிற்கொப்ப இதனை அறியத் தருகிறேன். யா அல்லாஹ்! சத்தியத்தை சத்தியமாகக் காட்டி அதனை பின் பற்றும் பாக்கியத்தையும் அசத் தியத்தை அசத்தியமாகக் காட்டி அதனை தவிர்ந்து கொள்ளும் பாக்கியத்தையும் தந்தருள்வாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

அன்புச் சகோதரரே! தமிழகத்தில் குர்ஆனும் ஹதீசும்தான் மார்க்கம் அவ்விரண்டிற்கும் மாற்றமானவை மார்க்கமற்றவை என்பதை நமது நாட்டில் துவங்கி பல இடையூறுகளை அனுபவித்து அல்லாஹ்வின் மா பெரும் அருளால் அது வளர ஆரம்பித்ததும் தமிழகத்தில் பல பகுதிகளில் பல்வேறு பெயர்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பல அமைப்பின் சகோதரர்கள் திருச்சியில் 1986 களில் கூடிய ஒருசமயத்தில் எல்லோர் உள் ளத்திலும் ஒரே பெயரில் நாம் இயங்கினால் நன்றாக இருக்குமே என்று எண்ணியபோது நிறுவப்பட்ட அமைப் புதான் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன், வல்ஹதீஸ்., அன்றைக்கு அந்த சிந்தனையைப் பரப்புவதில் அதிகப் பங்கு வகித்தவர்களில் முக்கியமாக இருந்த உங்களின் தலைவர் தான் அப்போதைக்கு முதலாவதாக தற் காலிகத் தலைவராக இருந்தார் அதன் பின்னர் கூடிய கூட்டத்தில் தான் உங்களின் தலைவரும் சேர்ந்து இவ்வமைப்பிற்கு தற்போது இருந்து வரும் கமாலுத்தீன் மதனி தலைவராக்கப்பட்டார்.

அன்று உருவாகப் பட்ட அமைப்பில் அங்கம் வகித்த நான் அன்றிலிருந்து இன்று வரை அல்லாஹ்வின் பேரருளால் அதே கொள்கையில் அதே தலைமையில் அதே அமைப்பில் இருந்து செயல்பட்டு வருகிறேன். அல்லாஹ் இதே நிலையில் என்னை இறுதி வரை வாழ வைத்து ஈமானுடன் உண்மை முஸ்லிமாக மரணிக்கச் செய்ய வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டுமிருக்கிறேன். ஒரே அமைப்பில் இருக்கிறேன் என்று சொல்வதால் உங்கள் தலைமையை கண்மூடித்தனமாக உங்களைப் போன்றவர்கள் பின்பற்றுவது போல என்று எண்ணி விடக்கூடாது. மாறாக, அல்ஹம்து லில்லாஹ் தலைமையில் காணுகின்ற குறைகளை அன்றும் இங்கு வரு வதற்கு சில தினங்களுக்கு முன்பும் கூட தயவுதாட்சண்யமின்றி சுட்டிக் காட்டித்தான் வந்திருக்கிறேன்., அல்ஹம்துலில்லாஹ் எங்களது தலைவர் உங்களின் தலைவர் போன்றில்லாமல் தவறை உணர்த்தப்பட்டால் உடனே மன்னிப்புக் கேட்கும் தலைவர். அச்சுபாவம் உங்களின் தலைவருக்கு இல்லாததால் தான் அமைப்பு அமைப்பாக தலைவர் தலைவராகத் தாவிச் சென்று இறுதியில்-- நான் எந்த அமைப்பிலும் கேள் விப்படாத தலைவரை உதவித் தலைராக்கிவிட்டு--தானே தலைவராகிவிட்டார்.

உங்களின் தலைவர் பகிரங் கமாகக் கூறிய பொய்ச் செய்தியைச் சுட்டிக்காட்டியபோதும் கூட அதை ஏற்காதவர். மட்டுமின்றி நாங்கள் ஒரே தலைமையின் கீழிருந்த காலத்தில் நான் சுட்டக்காட்டிய அளவிற்கு உங்கள் தலைவர் சுட்டிக் காட்ட வில்லை --அவருக்கு தலைமையின் மூலம் இலாபமிருந்தது-- மட்டுமின்றி தனது கருத்தைத்தான் தலைவர் செய்ய நிர்ப்பந்திப்பார்.

விஷயத்திற்கு வருவோம்;.

எனது படத்தைப் போட்டுவிட்டு எனது பெயரைக் குறிப்பிடாமல் ...குராஃபாத் அமைப்புகளில் பைஅத் செய்து கொண்டதாகவும் ஏகத்துவத்தைக் கை கழுவி விட்டதாகவும் எழுதியிருந்ததைப் பார்த்ததும் உங்களின் மீது அனுதாபம்தான் எனக்கு ஏற்பட்டது. ஹைர்! அல்லாஹ்வே சாட்சி! அல்லாஹ்வே போது மானவன்! நீங்கள் கூறியதை சாட்சியோடு இன்னவரிடம் பைஅத் செய்துள்ளார், இன்ன இடத்தில் தவ்ஹீ துக்கு மாற்றமாக பேசியுள்ளார் என்று குறிப்பிட்டிருந்தால் நீங்கள் ஒரு தெளிவான தவ்ஹீத்வாதி என ஏற்றுக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு நம்மைச் சுற்றி என்ன கூறினாலும் ஏற்றுக் கொள்ள ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது என்ற மதமதப்பில் உங்கள் தலைவர் போல பல செய்திகளை அடித்துவிட்டிருக்கிறீர்கள்.



நினைவுக்கு வந்த சிலவற்றைத் தருகிறேன், படியுங்கள் சிந்தியுங்கள், திருந்துங்கள், திருத்துங்கள்.நான் குறிப்பிட்டவற்றில் தவறு கண்டால் சுட்டிக் காட்டுங்கள், ஆதாரத்துடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்திக் கொள்வேன். இவையெல்லாம் சுட்டிக் காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்ப வர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறெனத் தெரிந்ததும் திருந்துபவர், திருத்திக் கொள்பவர், திருத்த முயற்சி செய்பவர் ஆகிய அனைவரும் இறையன்பைப் பெறும் தகுதிக்குரியவர், தவறைத் திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள். யா! அல்லாஹ் ஏகத்துவ வாதிகளை உன் அன்பைப் பெறத் தகுதியானவர்காக ஆக்கி அருள்வாயாக!.

நீங்கள் உங்களின் ஆக்கத்தில் கூறியிருக்கிற குற்றச்சாட்டுகள் உங்கள் தலைவரைத்தான் என்பதை நீங் களே நான் தருகின்ற ஆக்கங்கள் மூலம் புரிந்துகொள்வீர்கள் இன்ஷா அல்லாஹ்.

உங்களின் தலைவர் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சத்தியத்தைக் கூறுவதெற்கென்றே தமிழகத்தில் உருவாக்காப்பட்ட அமைப்பிலிருந்து தடம்புரண்டு வேறு அமைப்பில் பைஅத்துச் செய்து கொண்ட பின் அவரின் முரண்பாடுகளில் சில:


ஏகத்துவ மேடைகளில் (நான் ஏகத்துவ மேடை என்று குறிப்பிடுவது 1986 களில் தமிழகத்தில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உருவாகப்பட்ட அமைப்பு) தர்க்காவிற்கு செல்வது அல்லாஹ் மன்னிக்கவே மாட்டேன், நிரந்தர நரகம், அப்படிச் செய்பவர் முஷ்ரிக், காஃபிர் இத்தகையவர்களிடம் சமரசம் செய்து கொள்வதற்கு இடமே இல்லை என்று அழுத்தம் திருத்தமாகப் பேசிய அதே நாக்கு, முஸ்லிம் என்ற பெயர் உள்ள எல்லோரும் வாருங்கள் நீங்கள் எந்தக் கொள்கையில் இருந்தாலும் பரவாயில்லை, உங்களுக்காக குரல் கொடுப்ப தற்கே அமைப்பை உருவாக்கப்பட்டிருக்கிறது, இது தவ்ஹீதைக் கூறாது எனக் கூறி அந்த அமைப்பின் தலைவரிடம் பெயருக்கு பைஅத் செய்து அமைப்பாளராகி, தவைலரும் தனது கருத்தையே பிரதிபலிக்க வேண்டுமென்று அங்கிருந்து விலகும் வரை நிர்பந்தித்து கொண்டிருந்தவர்தான் உங்கள் தலைவர்.

  • அந்த மேடையில் எங்கள் தர்காவிற்கு பஸ் விடு என்று முழங்கினார். பித்அத்கள் நரகத்திற்கு இட்டுச் செல்லு மென முழங்கிய அதே குரலிலல் எங்கள் ஹஸரத்தைக் கூப்பிட்டு ஃபாத்திஹா ஓதச் செய் என்றும் முழங் கினார்-சத்தியம் அவர் உள்ளத் தில் இருந்ததால் பேசியபோதே நினைவு வந்தவுடன் தர்கா கூடுமா? கூடாதா என்பது வேறு என்றும் சொல்லிக் கொண்டார்- அரசியலுக்கு ஒரு தலைமை ஆன்மீகத்திற்கு ஒரு தலைவர் என்று முஸ்லிம் சமு தாயம் சென்றதால்தான் சமுதாயம் சீரழிந்து போய்விட்டது என்று பேசிய அதே குரல் தான் அரசியலுக் கும் ஒரு அமைப்புத் தேவை என்று அமைப்பாளரானார்.

  • அமைப்பாளரானதும் தவ்ஹீத் மேடைகளில் முஸ் லிம்களின் பின்னடைவுக்கு ஆலிம்களே காரணம், ஏனெனில் இவர்கள் ஆங்கிலேயனின் மீது கொண்ட வெறுப்பால் இங்லீஸ் படிக்ககக் கூடாது என்றனர், பேண்ட் போடக்கூடாது என்றனர் என்று முழங்கினார், அதே குரலில் தவ்ஹீத் அல்லாததைச் சொல்வதற்காக பைஅத் செய்து கொண்ட மேடையில் முழங்கும் போது –சுப்ஹானல்லாஹ் நரம்பில்லா நாக்கு என்பார்களே அதை அப்படியே மெய்ப்பிக்கும் விதமாக- நமது ஆலிம்கள் எப்படிப்பட்ட தியாகிகள் தெரியுமா? (தேச பக்திக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்பதைத் தவ்ஹீத் மேடையில் ஆணித்தரமாக அழுத்தம் திருத்தமாகப் பேசியவர்)தேசபக்தியின் காரண மாக ஆங்கிலம் படிப்பது ஹராமென்றார்கள், பேண்ட் அணியக்கூடாது என்றனர் என்று முழங்கினார் முரண்பட்டுப் பேசுகிறாறே என்று ஆட்சேபிக்க வேண்டிய உங்களைப் போன்ற தவ்ஹீத் வரலாறு தெரியாத வர்கள் அப்போதும் நாரே தக்பீர் அல்லாஹுஅக்பர் என்று முழங்கினார்கள்.

  • உங்கள் ஓட்டு யாருக்கு என்ற தலைப்பில் எல்லா அரசியல்வாதிகளையும் அலசி எவருக்கும் ஓட்டுப் போடக்கூடாது என்று பேசிய அதே வேகத்தில் எந்த அரசியல்வாதியும் செய்யாத ஒன்றை-- அதாவது ஒரு முறை திமுக, அடுத்து அதிமுக, அதையடுத்து சில பகுதிகளில் திமுக, சில பகுதிகளில் அதிமுகவை ஆதரிக்கிறோம் என்று -தடுமாற்றத்தையே வாடிக்கையாகக் கொண்டவர் தான் நீங்கள் சார்ந்திருக்கும் அமைப்பின் தலைவர். மட்டுமா! ஜெயலலிதாவை மிகக் கடுமையாக கேவலமானவர் என்று ஆதார அடிப் படைகளுடன் விமர்சனம் செய்து உணர்விலும் எழுதி, மேடைகளிலும் பேசிவிட்டு அம்மையாரை முத லமைச்சாருக்குங்கள் என்று ஊர் ஊராகச் சென்று ஓட்டு வேட்டை நடத்தினார், அவரின் தலைமை யின் கீழுள்ள சிலர் அம்மாவின் ஆட்சியில் முஸ்லிம்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என்றாகள்.

  • தவ்ஹீத் (தமிழ் நாடு தவ்ஹீதல்ல) மேடையில் பெண்களிடம் ஆட்சியை ஒப்படைப்பவர்கள் மண்ணுக்கு மேல் வாழ்வதை விட மண்ணுக்கடியில் வாழ்வதே சிறந்தது என்ற ஹதீஸை அற்புதமாக எடுத்துரைத்த மாமேதை தான் உங்களின் தலைவர்.

  • ஜம்மியத் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பின் தற்காலிகத் தலைவராக இருந்து பின்னர் அவரும் இணைந்து இவ்வமைப்பிற்கு கமாலுத்தீன் மதனியை தலைவராகத் தேர்வு செய்து, அது வளர ஆரம்பித்த கட்டத்தில் தலைவரின் மீது பலரும் பல குற்றச் சாட்டுகளைக் கூற தலைவர் தனது தலைமைத் தனத்திலிருந்த விலகிக் கொள்கிறேன் என்று வந்தபோது இஸ்லாத்தில் தலைமையை மாற்ற இடமேயில்லை மரணிக்கும் வரை அவர்தான் தலைவர் என்றும் அதற்கு நானே அவரிடம் முதன்மையாக பைஅத் செய்கிறேன் என்றும் கூறினார். பின்னர் அதிகாரமுள்ள தலைவர் அதிகாரமற்ற தலைவர் என்ற தத்துவத்தை முன் வைத்து தமிழ் முஸ்லிம்களுக்கு ஆன்மீகத்திற்குத் தலைவர் ஒருவர் கிடையாது என்று இரண்டாம் முறையாக அவர் பைஅத் செய்து கொண்ட மேடைகளில் பேசினார், எழுதினார்.

  • இன்றைக்குத் தமிழகத்தில் சமுதாயப் பணிகள் செய்வதற்கு முஸ்லிம்கள் நம்பிச் செயல்பட, உதவிகள் செய்ய மிகத் தகுதியான அமைப்பு தமுமுக, மார்க்கப்பணிகள் செய்திட நம்பி உதவி செய்யத் தகுதியான அமைப்பு ஹாமித் பக்ரியின் தலைமையில் இயங்கும் அனைத்துத் தவ்ஹீத் ஜமாஅத் என்று என்று மனம் திறந்து மடல் என்று மடலை-- தமிழகம் அவருடைய பேச்சைக் கேட்டுத்தான் எதுவும் செய்கிறது என்பது போல—உணர்வில் எழுதினார், சுப்ஹானல்லாஹ் எழுதிய சில மாதங்களிலேயே வஹி வந்தவர்போல தமுமுக தவ்ஹீத் வாசலை அடைத்துவிடக்கூடிய அமைப்பு, ஹாமித் பக்ரிக்கு தீவிர வாதிகளுடன் தொடர்பு இருக்கின்றது என்றார், சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் சுப்ஹானல்லாஹ் கண்மூடித் தனமாக பின்பற்றும் தன்மையை ஒழிக்க வேண்டுமென முழங்கிய அவரே அத்தகைய கூட்டத்தின் தலைவராக மாறியிருக்கிறார்.



அல்லாஹ்வின் கிருபையால் தமுமுக அவர் வெளியே வந்த பின்னர் தமுமுக மேடையிலேயே தவ்ஹீதை பகிரங்கமாக முழங்கும் நல்ல சூழலுக்கு மாறியுள்ளது, பல நல்லவர்களிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் அமைப்பாகவும் மாறியுள்ளது அல்ஹம்து லில்லாஹ்.

  • மா மனிதர் என்று ஒரு தலைப்பில் மிக அழகாக (ஸல்)அவர்களைப் பற்றி பல காலமாகப் பேசியிருக்கி றார். அதில் ஒரு முறை மாமனிதர் (ஸல்)அவர்கள் சபையில் இருக்கும்போது அவர்களைத் தேடி வருபவர்கள் முஹம்மத் யார் எனக் கேட்குமளவிற்கு மக்களோடு மக்களாக அமர்ந்திருப்பார்கள் என்ற உண்மையை அழகாக அழுத்தமாக எடுத்துச் சொன்னவர் உங்களின் தலைவர் இன்று வரை அவரை யாராவது பார்க்கச் சென்றால் நேரடியாகச் செல்ல முடியாது, ஏன் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட நேரடியாக தொடர்பு கொள்ள இயலாது, சபையில் மக்களோடு மக்களாகப் பார்க்கவே முடியாது.

  • உங்களின் தலைவர், மா மனிதர் இடம், நேரம், காலத்திற்குத் தகுந்தாற்போல உங்களைப் போன்ற தம்பிகள் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு பேசுவதில் அவருக்கு நிகர் அவரே. சிறந்த அறிவாளி ஆனால் அறிவாளிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள் அற்றவர்.



ஒவ்வொரு அமைப்பை விட்டும் வெளியேறும்போது ஏதேனும் நொண்டிக் காரணங்களை தூய எண்ண முள்ளவர்கள் கூறுவதுபோல கூறிவிட்டு சென்ற பின்னர் தான் சார்ந்திருந்த காலங்களிலெல்லாம் அவர்க ளுடன் கைகோர்த்து எல்லாக் காரியங்களையும் செய்து விட்டு அல்ல அல்ல தனது சர்வாதிகாரத்தால் செய்ய வைத்துவிட்டு இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுவார் உங்களைப் போன்ற புகழ் பாடும் கூட்டமிருப்பதால்! எந்த அளவிற்கென்றால் அல்லாஹ்வும் ரசூலும் வண்மையாக மிக மோசமான கெட்டவை என்று கண்டித்துக் கூறியதை அவரது கட்டுப்பாட்டிற்கு கீழிருந்த இருக்கிறவர்களில் இருவரை ஊர் ஊராக அனுப்பி குற்றங்களைத் துருவித் துருவி ஆராய்ந்து வீடியோவில் பதிவு செய்து அதைப் பார்க்கச் செய்து பலரை பெரும் பாவம் செய்ய வைத்தவர்.



சுருங்கச் சொல்வதாயிருந்தால் தமிழகத்தில் -- இவரும் இணைந்திருந்த காலத்தில்--ஏகத்துவத்தை உருவாக்க இன்று வரை கஷ்ட, நஷ்டங்கள் பட்டுக் கொண்டிருப்பவர்களையும் அவர்கள் நடத்தப்பட்டு வரும் இதழ்கள், அழைப்பு மையங்கள், கல்லூரிகளை இழித்தும் பழித்தும் கூறிக் கொண்டிருக்கிறார்.

இவையெல்லாம் சரிதானே என்று உங்களைப் போன்ற ஒரு கூட்டமும் சேர்ந்து கொண்டு செய்கிறது. மிகத் துணிவாக பொய்களைக் கலந்து சேற்றை வாரி வீசுவதற்கு முக்கியக் காரணம் தற்போது அவர் பின்னாலிருக்கும் கூட்டம் உங்களைப் போன்ற தவ்ஹீதின் உருவாக்கத்தைத் தெரியாதவர்கள் என்பதுதான். நினைவுக்கு வந்த சிலவற்றைக் கூறியுள்ளேன், இதுவும் அவரின் குறைகளை அலச அல்ல. மாறாக உங்களைப் போன்று தவ்ஹீதை தவ்ஹீதுவாதிகள் மூலம் பெறாமல் செய்திச் சாதனங்கள் மூலமாக மடடும் தெரிந்து கொண்டு, தெரிந்த கொண்ட ஆர்வக் கோளாறுகளால் தலைவரைப் போன்றே உங்களைப் போன்றவர்கள் இறங்கிவிடுகிறார்கள், தெரிந்ததைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இவற்றை அறியத் தருகிறேன், நீங்கள் அவரை விட்டு வெளியேறிவிடுவீர்கள் என்ற எண்ணத்தில் அல்ல எடுத்துச் சொல்வது மட்டுமே அல்லாஹ் இட்ட கட்டளை!.

ஆரம்ப காலங்களில் தவ்ஹீதை பரவச் செய்ய பொருளால், அறிவால் இன்னும் பல வழிகளில் பாடுபட்ட பல நல்லவர்களை உங்கள் தலைவர் பகைத்துக் கொண்டு வரலாறு தெரியாத புதியவர்களோடு இணைந்திருக்கிறார்., பழையவர்களோடு இருந்தால்தான் குறை நிறைகளை தெரிந்து தன்னைச் சரிப்படுத்திக் கொள்ள முடியும், ஒருவேளை குறைகளே தெரியக்கூடாது என்று எண்ணுகிறாரோ என்னவோ! அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.



உங்களின் தலைவருக்கு உங்கள் மூலமாக இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என பல சந்தர்ப்பங்களில் பேச்சுக்களின் மூலமும் எழுத்துக்கள் மூலமும் தெரிவித்திருக்கிறேன். இப்போதும் அதையேத் தெரிவித்துக் கொண்டு மற்றொன்றையும் சேர்த்து சொல்லிக் கொள்கிறேன்.

சத்தியம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்த பின்னர் அதிலிருந்து பிரிந்து போவதற்கு தகுதியான காரணமின்றி பிரிந்து போவது மாபெரும் குற்றம் என்ற தலைப்பிலும், மற்றும் உலகம் முழுவதற்கும் பிறை ஒன்றே என்ற இந்த இரு தலைப்புளையும் பற்றி நீங்கள் விரிவாக அலசுவதற்குத் தயாரா? நாம் எப்போதும் தயார்.



இதையெல்லாம் இன்ஷா அல்லாஹ் நான் எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயார் பல சமயம் இவற்றில் பலவற்றை தபால் மூலமும் உங்களின் தலைவருக்குத் தெரிவித்திருக்கிறேன்.

உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வரவேண்டி எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் என்றும் நான் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறேன்---ஒருவேளை உங்களின் தலைவர் பழைய நிலைக்கு வந்துவிட்டால் அவரோடு கைகோர்த்து முந்தைய காலங்களைப் போன்று பணி செய்யவும் காத்திருக்கிறேன்-- அல்லாஹ் போதுமானவன்.

அவனே காரியங்களை நம்பி ஒப்படைப்பதற்கு மிகத் தகுதியானவன், மிக்க நல்லவன், யா அல்லாஹ் உள்ளங்களில் உணர்வுகளை அறிந்தவனே! உள்ளங்களை விரல்களுக்கிடையில் வைத்து ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவனே! எந்தெந்த உள்ளங்களை ஈடு இணையற்ற உனது தவ்ஹீதைப் படிக்க பரப்ப தேர்ந்தெடுத்தாயோ அந்த உள்ளங்களை ஓரணியில் இணைப்பாயாக! உனது திருப் பொருத்தைத்தை மட்டுமே நாடி உனது பணியினை மேற்கொண்டு உண்மை முஸ்லிமாக வாழ்ந்து உண்மை முஸ்லிமாக மரணித்து முடிவே இல்லா நிரந்தர இன்ப பாக்கியங்கள் நிறைந்த சுவனபதியில் நலலோர்களுடன் இருக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக! ஆமின் ஆமின் யா ரப்பல் ஆலமீன்.

கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

அல்கோபர்

சவுதி அரேபியா

Tuesday, March 09, 2010

பேர​பா​யம் காத்​தி​ருக்​கி​றது...! - தினமனி தலையங்கம்

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.


இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?


இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.


இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.


சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.


இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?

நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?


சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.


இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

நன்றி : தினமனி

Thursday, February 04, 2010

முஸ்லிம் தீவிரவாதம் என்ற பூச்சாண்டி!

அறிவுப்பூர்வமான ஒரு வெடிகுண்டு!

Thursday, March 05, 2009

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதிய கட்டிடத் திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் 07.03.2009 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு என்.எம். காஜாமியான் நினைவு அரங்கில் நடைபெற இருக்கிறது.

இப்புதிய கட்டிடத்தை இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை முஹம்மதியா பள்ளிகளின் ஆயுட்காலத் தலைவர் ஹாஜி எஸ். தஸ்தகீர் தனது தாயார் அன்னை எம்.எஸ். பாத்துமுத்து ஜொஹரா நினைவாக கட்டி அதனை கல்லூரிக்கு அர்ப்பணிக்கிறார். இக்கட்டிடம் இரண்டு மாடிகளைக் கொண்டது.

பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழை மாணவர்களின் உயர்கல்விக்காக ரூபாய் 3.4 இலட்சம் வழங்கிய சென்னை சீனா தானா டிரஸ்ட் மேனேஜிங் டிரஸ்டியும், சென்னை ஈடிஏ டெக்னோ பார்க் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தலைவருமான ஹாஜி எஸ்.எம். செய்யது அப்துல் காதர் ( சீனா தானா ) அவர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட இருக்கிறார்கள்.

ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க சென்னை கிளையின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம். இதாயத்துல்லா வாழ்த்துரை வழங்குகிறார்.

செய்திகள் நன்றி : முதுவை ஹிதாயத்

Saturday, February 14, 2009

நபிகள் படத்திறப்பு விழா தடை செய்யப்பட்டது - IDMK நடவடிக்கை வெற்றி

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற அமைப்பின் மூலம் பரமக்குடியில் ஐம்பெரும் விழாவில் நபிகள் நாயகம் படம் திறப்பு என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் பதற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் திரு. எம்.ஐ. ஜஹாங்கீர், மாவட்ட பொருளாளர் திரு. நஜ்முதீன் (பரமக்குடி) ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன், டாக்டர் பக்ருதீன் ஆகியேர் உட்னடியாக நடவடிக்கையில் இறங்கி மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. செந்தில்வேலன், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கிர்லோஸ்குமார், இராமநாதபுரம் எம்.எல்.ஏ மற்றும் பல அதிகாரிகளை சந்தித்தும் மனு கொடுத்தும் இந்நிகழச்சியினை தடை செய்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுருததினார்கள்.

இதன் எதிரொலியாக உடனடியாக மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. செந்தில்வேலன், மாவட்ட துனை ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை துனை கான்கானிப்பாளர், தாசில்தார் என பல உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிகழச்சியினை தடை செய்தனர்.

சமூக நல்லினக்கத்திற்கு பாதகமாக அமைய இருந்த இந்த நிகழ்ச்சி இந்திய தேசிய மக்கள் கட்சியின் முயற்சியால் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது. மாவட்ட காவல்துறை கன்காணிக்பாளர் திரு. செந்தில்வேலன் அவர்கள் மத நல்லினக்கத்தை காக்கும் வகையில் உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களை நேரில் வரவழைத்தும் நடவடிக்கை எடுத்ததன் பேரில் மாவட்டத்தில் சமூக நல்லினக்கம் காக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. செந்தில் வேலன் அவர்களுக்கும், உதவி ஆடசித் தலைவர், மற்ற அதிகாரிகள் அனைவருக்கும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பாக பாராட்டுக்களை தெறிவித்து கொள்கின்றோம். மத நல்லினக்கத்திற்காக பாடுபடும் மாவட்ட காவல்துற காண்கானிப்பாளர் திரு. செந்தில் வேலன் அவர்களுக்கு விரைவில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் திரு. எம்.ஐ. ஜஹாங்கீர், மாவட்ட பொருளாளர் திரு. நஜ்முதீன் (பரமக்குடி) ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன், டாக்டர் பக்ருதீன் ஆகியோர் நேரில் சென்று நன்றியினை தெறிவிப்பார்கள்.

இது குறித்த முந்தைய செய்தி

Friday, February 13, 2009

பரமக்குடியில் நபிகள் நாயத்தின் படத்திறப்பு விழா - தடுக்கும் நடவடிக்கையில் IDMK

நபிகள் நாயகத்தின் படத்தை திறந்து வைப்பவர்


சமூக நல்லினக்கத்துடனும், ஓற்றுமையுடனும், அமைதியாகவும் இருக்கும் தமிழகத்தில் மத மோதல்களை உண்டாக்கி கலவரக்காடாக்கும் முயற்சியில் மீண்டும் ஒரு கும்பல் இறங்கியுள்ளது. நேற்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வெளியிடப்பட்டுள்ள ஒரு துன்டுப்பிரசுரததில் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" என்ற அமைப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (15.02.2009) அன்று காலை 10.30 மனியளவில் பரமக்குடி நகரில் மகான்கள் மற்றும் இறைத்தூதர்களின் புகைப்படங்களை திறக்கப்போவதாக அறிவித்திருந்தது.

விசம துன்டுப்பிரசுரததின் முதல் பக்கம்


இதில் புத்தர், ஏசுபிரான் (ஈசா நபி), மற்றும் நபிகள் நாயகம் (முகம்மது நபி) ஆகியோரின் புகைப்படங்களை திறக்கப்போவதாகவும் தெறிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக நமது கட்சியின் பரமக்குடி நகர் நிர்வாகிகள் மூலம் நமது தலைமையின் கவனததிற்கு கொண்டுவரப்பட்டது.

உடனடியாக செயலில் இறங்கிய முகவை மாவட்ட செயலாளர் திரு. ஜஹாங்கீ்ர், பொருளாளர் திரு. நஜ்முதீன் (பரமக்குடி) மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன் (ரைசுதீன்) திரு. டாக்டர். பக்ருதீன் (கீழக்கரை) ஆகியோர் இன்று உடனடியாக மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. செந்தில்வுலன் அவர்களையும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கி்ர்லோஸ்குமார் அவர்களையும் புகார் மனுக்களுடன் நேரடியாக சந்தித்து உடனடியாக இதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்து மாவட்டத்தில் மதமோதல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

உடனடியாக மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. செந்தில்வுலன் அவர்களும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கி்ர்லோஸ்குமார் அவர்களும், அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து நபிகள் நாயகத்தின் புகைப்படம் திறக்கப்படாமலிருக்க செய்யுமாறு கேட்குட் கொண்டார்கள். இன்னும் நம்மிடம் இந்தப்பிரச்சினையை உடனடியாக நடவடிக்கை எடுத்து நான் தீர்த்து வைக்கிறேன். நபிகள் நாயகத்தின் படம் திறப்பது என்பது தவறானதாகும் ஆகவே அவ்வாறு நடக்காமல் இருக்க நான் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகின்றேன் என்று உறுதியளித்தள்ளார்.

பின்னர் மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன் (ரைசுதீன்) திரு. டாக்டர். பக்ருதீன் (கீழக்கரை) ஆகியோர் உடனடியாக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஹசன் அலி எம்.எல்ஏ அவர்களை தொடர்பு கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்திருப்பது காங்கிரசின் பரமக்குடி எம்.எல்.ஏ திரு. கே.வி.ஆர் இராம்பிரபு என்றும் உடனடியாக அவரை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் கேட்க சொன்னார்கள். உடனடியாக பதில் அளித்த திரு. ஹசன் அலி , நபிகள் நாயகத்தின் படத்திறப்பு பற்றி இராம்பிரபு எம்.எல்.ஏ க்கு தகவல் தெறியாது என்றும் சமய நல்லினக்க விழா என்பதால் ஸ்பான்சர் செய்ததாகவும் இனிமேல் அந்த நிகழ்ச்சியில் கலந்து காள்வதாக இருந்த திரு. இராம்பிரபு எம்.எல்.ஏ கலந்து கொள்ள மாட்டர் என்றும் உறுதியளித்தார்.

பின்னர் மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன் (ரைசுதீன்) திரு. டாக்டர். பக்ருதீன் (கீழக்கரை) ஆகியோர் ரோட்டரி சங்கள் நிர்வாகிகளை சந்தித்து இந்த பிரச்சினை குறித்து எடுத்துரைத்தனர், உடனே ரோட்டரி சங்கள் மாவட்ட தலைமை பரமக்குடி கிளையினை தொடாடபு கொண்டு இந்நிகழ்ச்சியில் நபிகள் நாயத்தின் புகைப்படடம் திறப்பதாக கூறப்பட்டுள்ளது குறித்தும் அதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏன் கலந்து கொள்கிறீர்கள் என்றும் கேட்டார்கள்.இந்நிகழச்சியில் பங்கு பெறும் யாரிடமும் எந்நதவித முன்கூட்டிய தகவலும் இதுகுறித்து விழாவினை நடத்துபவர்கள் கூறவில்லை என தெறியவந்துள்ளது.

உடனடியாக பரமக்குடி இந்திய தேசிய மக்கள் கட்சியினரை தொடர்பு கொண்ட மாவட்ட நிர்வாகிகள் நிகழச்சியினை நடத்தும் சன்மார்க்க சங்கத்தார்கள் மீதும், பரமக்குடி காமாட்சி ஜீவல்லர்ஸ் அதிபர் திரு. எம்.என். இரவிச்சந்திரன் என்பவர் மீதும் பரமக்குடி காவல் நிலையித்தில் புகார் செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்திய தேசிய மக்கள் கட்சி சார்பாக மாவட்ட காவல்துறை கண்கானிப்பளரிடம் அளித்த புகர் மனு:




இந்திய தேசிய மக்கள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்த புகர் மனு:



Thursday, January 29, 2009

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? - பாகம்2

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? - பாகம்2


பொய்யடியானுக்கு உறுதியிருந்தால், குர்ஆன் ஏசுவை கடவுள் என்கிறது என்பதை அவரால் நிரூபிக்க முடியுமென்றால் இதையே தலைப்பாக வைத்து நம்முடன் ஒரே மேடையில் விவாதிக்க வரட்டும். இவரோடு நேரடி விவாதத்திற்கு இஸ்லாமிய இணையப்பேரவை என்றும் தயார் என்பதை நாம் என்றோ அறிவித்துவிட்டோம். நம் விவாத அழைப்பைக் கண்டு பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடிஒழிந்த பொய்யடியானின் சரித்திர சாதனையை நீங்களும் அறிவீர்கள். இந்நிலையில் ஏசுதான் கடவுள் என்ற தலைப்பில் விவாதிக்கவாவது உண்மையடியானுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் தைரியம் இருக்கிறதா?


இருந்தால் நம்மோடு பகிரங்க நேரடி விவாதத்திற்கு தயாராகட்டும். அந்த விவாதத்தில் நபிகள் செய்த பாவங்களையும் ஒவ்வொன்றாக நம்முன்னர் பட்டியலிடட்டும். இறைவன் நபிகளாருக்கு கொடுத்ததாகக் கூறும் (License) அனுமதியையும் மறக்காமல் கொண்டுவந்து தரட்டும். அவர் எடுத்துவைக்கும் சொத்தை வாதங்கள் ஒவ்வொன்றுக்கும், அவருடைய குறுக்கை நொருக்கும் அளவிற்கு நாம் பதில் கூறுவோம் இன்ஷா அல்லாஹ்.


தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்...

Wednesday, January 28, 2009

IDMK மாவட்ட அலுவலக் திறப்புவிழா நிகழ்ச்சி

IDMK மாவட்ட தலைமையகம்


கடந்த 26.01.2009 திங்கள் கிழமை அன்று இராமநாதபுரம் கேணிக்கரை கார்னரில் மையமான பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட தலைமையகம் திறப்புவிழா விமரிசையாக நடைபெற்றது. மாவட்டமெங்கும் இருந்து திரளான பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழகம் இக்பால் அவர்கள் திறந்து வைக்கிறார், அருகில் திரு.முகவைத்தமிழன், திரு. ஜஹாங்கீர், திரு. நஜ்முதீன்,திரு. அக்பர் ராஜா, திரு. குத்புதீன் ஐபக் ஆகியோர்

இந்திய தேசிய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு. அக்பர் ராஜா B.A. B.L., அவர்கள் தலைமை வகிக்க, பரமக்குடி பிரபல வழக்கறிஞர் திரு. பசுமலை B.Sc. B.L அவர்கள், திரு. நாகேஸ்வரன், தமிழ் பாதுகாப்பு பேரவை, திரு. காமராஜ, மாநில ஊணமுற்றோர் பேரவை தலைவர், திரு. K.S. அன்வர், இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட வர்த்தகர் அணி செயளாலர், மருத்தவர் அணீஸ் அஹமது - இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணஜ செயளாலர், திரு. முகவைத்தமிழன் - இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில ஆட்சி மன்றகுழு உறுப்பினர் உட்பட பலர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.

திரு. தமிழகம் இக்பால், திரு. ஜான் பாஷா, திரு. P.V.M அப்துல் ரசாக் ஆகியோர் உரையாற்றுகையில்


இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில ஆட்சி மன்றகுழு உறுப்பினர் மருத்துவர் பகுர்தீன் அவர்கள், PVM அறக்கட்டளையின் நிறுவனர் திரு. PVM அப்துல் ரசாக் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட செயளாலர் திரு. ஜஹாங்கீர் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாலர் திரு. நஜிமுதீன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு. ஜான் பாஷா அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயளாலர் திரு. K. கண்ணன் M.B.A. M.L., அவர்கள் உட்பட பலர் வாழத்தரை வழங்கினார்கள்.

திரு. முகவைத்தமிழன் @ ரைசுதீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்குகிறார்கள் திரு. தமிழகம் இக்பால் மற்றும், மூத்த உயர் நீதி மன்ற வழக்கறிஞர் திரு. கண்ணன் M.B.A. M.L., அவர்கள், அருகில் நிர்வாகிகள்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில துனை பொதுச் செயளாலர் தமிழகம் S. இக்பால் அவர்கள் மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார்கள். அதன் பின்னர் இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் முகவை சிங்கம் திரு. M. குத்புதீன் ஐபக் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நிகழச்சியின் இறுதியில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் கீழக்கரை மாநகர தலைவர் திரு. முஹைதீன் அடுமை அவர்கள் நன்றியுரை நல்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

திரு. அக்பர் ராஜா B.A. B.L அவர்களுக்கு பொன்னாடை போர்த்துகிறார் வழக்கறிஞர் திரு. கண்ணன் அவர்கள். திரு. நஜ்முதீன் அவர்களுக்கு பொனடனாடை போர்த்துகிறார் டாக்டர். அனீஸ் அஹமத அவர்கள்.


நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட தலைமை அலுவலக நிர்வாகிகளுக்கு வட சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு. ஜான் பாஷா அவர்கள் அளித்த நினைவு பரிசினை வழங்குகிறார் மாநில தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்கள்.

திட்டக்குடியில் பள்ளிவாசல் மீது தாக்குதல் - PFI ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி ஜனவரி 28,

கடந்த 20ம் தேதி திட்டக்குடி மஸ்ஜித் ரஹ்மத் பள்ளிவாசல் ஜன்னல் கண்ணாடிகளும், பள்ளியும் விசமிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்து காவல்துறையில் புகார் தெறிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறை இந்த விசயத்தில் பாராமுகமாக இரந்து விசமிகளுக்கு துனை போவதால் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மூலம் காவல்துறையின் மெத்தனப் போக்கை கண்டித்தும், பள்ளிவாசலை சேதப்படுத்தி மத துவேசத்தை ஏற்படுத்த முயன்ற விசமிகளை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டக்குடி பஸ் நிலையம் முன்பாக நடந்நதது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் திரு. செளகத் அலி அவர்கள் தலைமை தாங்க, மெளலவி அபீருதீன், நஸ்ருதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திட்டக்குடி பேரூராட்சி கவுன்சிலர்கள் திரு. அக்பர், திரு இக்பால் மற்றும் திட்டக்குடி பள்ளிவாசல் ஜமாத் தலைவர் பசீர்கான் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு இந்த விசயத்தில் விசமிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி வலியுருத்தினர்.

செய்திகள் : அபீருதீன்

Sunday, January 25, 2009

IDMK முகவை மாவட்ட தலைமையக திறப்பு விழா அழைப்பிதழ்

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுப்போம்!!

இனியில்லை வீழ்ச்சியென முரசு அரைவோம்!!

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)

முகவை மாவட்ட புதிய தலைமையக திறப்பு விழா அழைப்பிதழ்

நாள் : 26.01.2009 நேரம் : மாலை 6.00 மணி

இடம் : கேணிக்கரை கார்னர், இராமநாதபுரம்

தலைமை

திரு. M. அக்பர் ராஜா B.A., B.L, அவர்கள்

மாவட்ட தலைவர் IDMK

முன்னிலை

திரு. பசுமலை B.Sc., B.L., அவர்கள்

திரு. நாகேஸ்வரன் அவர்கள்Bold

தமிழ் பாதுகாப்பு பேரவை

திரு முகவைத்தமிழன் அவர்கள்

ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் - IDMK

திரு. காமராஜர் B.A அவர்கள்

மாநில ஊணமுற்றோர் பேரவை தலைவர்

திரு. K.S. அன்வர் அவர்கள்

மாவட்ட வர்த்தக அணி செயலாளர் - IDMK

வாழ்த்துரை

டாக்டர் பகுர்தீன் அவர்கள்

ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் - IDMK

திரு. M.I. ஜஹாங்கீர் அவர்கள்

மாவட்ட செயலாளர் - IDMK

திரு. நஜிமுதீன் அவர்கள் (பரமக்குடி)

மாவட்ட பொருளாளர் - IDMK

திரு. ஜான்பாஷா அவர்கள்

வட சென்னை மாவட்ட அமைப்பாளர் - IDMK

திரு. கண்ணன் M.B.A., M.L

உயர் நீதி மன்ற வழக்கறிஞர் மற்றும் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் IDMK

திறப்பாளர்

திரு. தமிழகம் S. இக்பால் அவர்கள்

மாநில துனை செயளாலர் - IDMK

சிறப்புரை

திரு. குத்பதீன் ஐபக் அவர்கள்

மாநில தலைவர் IDMK

நன்றியுரை

திரு. முஹைதீன் அடுமை அவர்கள்

நகர் தலைவர் - கீழக்கரை - IDMK

அன்புடன் அழைக்கின்றது Bold

இந்திய தேசிய மக்கள் கட்சி

முகவை மாவட்டம்

தொடர்புக்கு : 9894262100 - 9443021050 - 9047507665

Saturday, January 24, 2009

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? - பாகம்1

கிருஸ்தவர்களுக்கு பல்லாயிரம்கோடி கடவுள்களா? - பாகம்1

ஏசுமட்டும்தான் பரிசுத்தமானவர், ஷைத்தானின் தூண்டுதலுக்கு அப்பாற்பட்டவர் என்கிறார் உண்மையடியான். அப்படியானால் இவ்வுலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும், யூதர்களும், கிருஸ்தவர்களும், தீர்க்கதரிசிகள் என்று விசுவாசிக்கும் நோவா, டேவிட், ஆப்ரஹாம், ஐசக், இஸ்மவேல், மோஸே (அவர்கள் அனைவர் மீதுமும் இறைசாந்தி என்றும் நிலவட்டுமாக) போன்ற இறைத்தூதர்களின் நிலை என்ன? இவர்களைப் பற்றி உண்மையடியான் என்ன சொல்ல வருகிறார்? அவர்களெல்லாம் ஷைத்தானால் வழிகெடுக்கப்பட்டவர்கள் என்கிறாரா? (நவ்வூதுபில்லாஹ்).
முஸ்லிம்களாகிய நாங்கள் அன்னை மர்யம் (அலை) முதல் இறைத்தூதர் நபி ஈஸா (அலை) அவர்கள் உட்பட இவ்வுலகில் தோன்றிய அனைத்து தீர்க்கதரிசிகளையும் புனிதமானவர்களாகவே கருதுகிறோம். ஷைத்தானின் கெடுதல்களிலிருந்து பாதுகாக்கப்பட்ட பரிசுத்தவான்களாக அவர்கள் அனைவரையும் விசுவாசங்கொள்கிறோம்.

தொடர்ந்து படிக்க இங்கே சொடுக்கவும்

WWW.IIPONLINE.ORG

Sunday, January 18, 2009

தமிழ் புத்தாண்டு கருத்தரங்கு

இடமிருந்து திரு. ஜஹாங்கீர், திரு. முகவைத்தமிழன்,திரு. குத்புதீன் ஐபக், திரு. அணீஸ் அஹமது, திரு. காரத்தே பழனிச்சாமி, திரு. இராமசாமி

தமிழர் திருநாளாம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் பாதுகாப்பு பேரவையின் சார்பாக முகவை மாநாகரில் தமிழ் ஈழம் குறித்த ஒரு மாபெரும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கருத்தரங்கிற்கு தோழர் மு. காமராஜர் அவர்கள் தலைமை வகிக்க தோழர் மா. ஈழவேந்தன், தோழர் நம்புகுமார் போன்றோர் முன்னிலை வகித்தனர். தோழர் சி. பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

திரு. முகவைத்தமிழன் உரையாற்றுகிறார், திரு. பாரதி, திரு. நாகேஸ்வரன் அருகில்

தமிழர்களின் கலாச்சாரம் என்ற தலைப்பில் தோழர். வழக்கறிஞர் வென்மணி , ஆதி தமிழர் பேரவை கருத்துரை வழங்கினார், தமிழர்களின் மரபும் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் தோழர் வே. பாரதி - தமிழர் தேசிய விடுதலை இயக்கம் அவர்களும், தமிழர்களின் போராட்டமும் சட்ட தொடர்பும் என்ற தலைப்பில் தோழர். இரா. இராசிவ் காந்தி என்ற இயற்கை (உயர் நிதி மன்ற வழக்கறிஞர்) அவர்களும், தமிழர்களின் அடையாள மீட்டெடுப்பு என்ற தலைப்பில் தோழர் ஆதித்ய சேக்கிழார் - தமிழக ஆசிரிய படைப்பாளிகள் சங்கம் அவர்களும் உரையாற்றினார்கள். தமிழ் பாதுகாப்பு பேரவையின் தலைவர் தோழர் திரு நாகேஸ்வரன் அவர்கள் ஏற்புரையாற்றினார்கள்.

திரு. இராமசாமி, திரு. கராத்தே பழனிச்சாமி, திரு. ஆதித்ய சேக்கிழார்.

ஜாதி என்ற போர்வையில் தமிழன் எவ்வாறு பிறிந்து கிடக்கின்றான் என்பதை விளக்கி இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு குத்புதீன் ஐபக் அவர்களும், ஒற்றுமையை வலியுருத்தி இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் டாக்டர் அணீஸ் அஹமது அவர்களும், தமிழன் எப்போதெல்லாம் எழுச்சி கொள்கின்றானோ அப்போதெல்லாம் பார்ப்பனியமும், பாசிச பத்திரிகைகளும் அவனது ஒற்றுமையை குலைக்க செய்யும் சூழ்ச்சி பற்றியும், பாலஸ்த்தீன விடுதலை போர், தமிழ் ஈழ விடுதலை போர் பற்றிய ஒப்பீடு செய்தும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினறும் இணைய தள எழுத்தாளருமான தோழர் முகவைத்தமிழன் அவர்களும், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர் திரு ஜஹாங்கீர் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

திரு. இயற்கை (எ) இராசிவ் காந்தி, திரு. பாரதி, திரு. வெண்மணி அவர்கள்

நிகழச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இராமசாமி, மறுமலர்ச்சி திராவிடர் கழக நிர்வாகி சிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சி.பசுமலை அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் இராஜ்குமார் அவர்கள், புதிய தமிழகத்தின் ஐ.கதிரேசன் அவர்கள், ம.தி.மு.க இளைஞரணியை சேர்ந்த தோழர் கராத்தே எம். பழனிச்சாமி அவர்கள், தீவு தமிழர் கூட்டமைப்பு தோழர் ஜெரோன் குமார் அவர்கள், தோழர் மு.நா. சந்திர சேகரன் - தி.க மாவட்ட நிர்வாகி அவர்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

செய்திகள் : ஜஹாங்கீர்

Saturday, December 20, 2008

மங்களம்பேட்டையில் ஈத் மிலன் சமூக நல்லிணக்க விழா


மங்களம்பேட்டையில் மனித நீதிப் பாசறையின் சார்பாக ஈத் மிலன் சமூக நல்லிணக்க விழா நடைபெற்றது. கடலூர் மாவட்ட எ.ம்.என். பி தலைவர் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். நகர் தலைவா'திரு. அபுல் ஹசன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். மாநில துனைத்தலைவர் தாவா குழு திரு. பஸ்லுர் ரஹ்மான் அவர்களும், அறிவகத்தின் முதல்வர் மௌவி சையது இபுறாஹிம் உஸ்மானி அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.


நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினார்களாக மாவட்ட காவல்துறை துனை கண்கானிகப்பாளர் திரு. என். ராஜேந்திரன் அவர்கள், தமிழ்நாடு மருத்துவ பணிகள் கூடுதல் இயக்குனர் டாக்டர் ஏ.ஏ. ஜமேஸ் அவர்கள், மங்களம்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் திரு. கோபு பிள்ளை அவர்கள், விருத்தாசலம் அரசு வழக்குறைஞர் திரு. இரா. சுப்பிரமணியம் அவர்கள், திரு. ஏ. அக்பர்சா முத்தவல்லி அவர்கள், திரு. எம். அபதுல் பாரி அவர்கள், திரு. சரவன குமரன காவல் ஆய்வாளர் மங்களம்பேட்டை அவர்கள், வழக்கறிஞர் திரு. முகம்மது இபுறாஹிம் அவர்கள், அரசு மருத்துவர்திரு. கதிர் வேல் அவர்கள்,மங்களம்பேட்டை திருச்சபை திரு. மகிமைதாஸ் அவர்கள், திரு. அபிருத்தீன் மன்ப, அவர்கள், திரு. ரிஸ்வர்ன பாசகா அவர்கள் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திரு. ஏ. சாஜஹான் வெர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவுற்றது. வந்திருந்த அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.

News : Mr. Abirudeen Manbayee

Monday, December 15, 2008

பெரியபட்டினத்தில் "ஈத் மிலன்" மாற்று மத சகோதரர்களுடன் கலந்துரையாடல்


டிசம்பர் 14, 2008, இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் இன்று மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக ஈத் மிலன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. மாற்று மதச் சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட இந்நிகழச்சியில் அதிகமான அளவில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வந்து அருகில் உள்ள முத்துப்பேட்டை கல்லூரியில் தங்கிப் படிக்கும் மாற்றுமத மாணவர்களும், உள்ளூரைச் சேர்ந்த முக்கிய மாற்று மத பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

சரியாக காலை 10.30 மனியளவில் நிகழச்சி ஆம்பமாகியது. நிகழ்ச்சியை துவக்கி வைத்தவர்களாக மாணவர்களுடன் நிகழ்கால பொருளாதார மாற்றங்கள் பற்றியும் இதன் பாதிப்பு பற்றியும் இதில் எந்த அளவிற்கு இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் இதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் கலந்துறையாடினார் ஆசிரியர் காதர் அவர்கள்.


பின்னர் மனித நீதிப் பாசறையின் பெரியபட்டினம் நிர்வாகியான திரு. பீர் முகைதீன் அவர்கள் ஓர் கடவுள் கொள்கை பற்றியும், மாற்று மதங்களில் பின்பற்றப்படும் பல கடவுள் கொள்கை பற்றியும், இஸ்லாத்தின் பார்வையில் கடவுள் கொள்கை, ஏன் கடவுள் பல கடுவள்களாக இருக்க முடியாது என்றும், கட்வுள் என்பது ஒருவராகத்தான் இருக்க முடியும் என்றும் மிக அழுத்தம் திருத்தமாக மாற்று மதத்தினரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அறுமையான ஒரு உரையை நிகழ்த்தினார். தனது உரையின் மூலம் கூடியிருந்த மாற்று மத நன்பர்களிடத்தில் அழைப்பு பனியையும் மேற்கொண்டார்.

அதன் பின்னர் பேச வந்த மனித நீதிப் பாசரை பெரியபட்டனம் பகுதி பொறுப்பாளர் திரு. செய்யத இபுறாஹிம் அவர்கள் தூய இஸ்லாத்தை பற்றியும், இஸ்லாம் ஒரு போதும் வன்முறையை போதிக்கவில்லை என்பது குறித்தும், இஸ்லாத்தில் மனித நேயம், மனித உரிமைகள் பேன்றவை குறித்தும், இஸ்லாமிய ஆட்சியாளர்களான அபுபக்கர், உமர் போன்றோர் எப்படி தங்கள் ஆடசியில் மாற்றிமதத்தவர்களிடத்தும் நீதி செலுத்தினர் என்பது குறித்தும் விளக்கினார்.பின்னர் இன்று உலகம் எங்கும் இஸ்லாம் என்றால் தீவிரவாதம் என்றும், முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்றும் ஊடகங்களின் மூலமாக நடத்தப்பட்டு வரும் பாரிய பிரச்சார யுத்தத்தினை பற்றியும் இதன் பின்னணியில் உள்ள சக்திகள் எது என்பது குறித்தும் சிறப்புறையாற்றினார்.


அதன் பின்னர் மீண்டும் ஆசிரியர் திரு. காதர் அவர்கள் தனது சிறந்த நாவன்மையின் மூலம் இஸ்லாத்தினை பற்றியும், இஸ்லாத்தில் மனிதனை சிந்திக்க சொல்வது குறித்தும் உரையாற்றினார்கள். அதன் பின்னர் பக்கத்து கிராமமான நெய்னார் மரைக்கானை சேர்ந்த ஓய்வு வெற்ற ஆசிரியர் திரு. மனி மாதவன் அவர்கள் சமூக நல்லினக்கத்தை வலியுருத்தும் வகையில் தனது உரையை ஆற்றினார்கள். பாபரி மஸ்ஜிதை இடித்தது அனைத்து ஹிந்துக்களும் அல்ல என்றும் ஹிந்துக்களின் பெயரில் அரசியல் செய்யும் ஒரு மதவாத அரசியல் கட்சியே தனது தொண்டர்களை கொண்டு இடித்தது என்றும் இந்தியாவின் பெரும்பான்மை ஹிந்துக்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் சில அரசியல் வாதிகளும், அரசியல் கட்சிகளும் தங்கள் சுய லாபத்திற்காக மத மோதல்களையும் குண்டு வெடிப்புகளையும் நிகழ்த்தி அரசியல் செய்கின்றார்கள் என்றும் இதனால் நம்மள் பினக்கு வரக்கூடாது நாம் என்றும் ஒற்றுமையாக சகோதரர்களாகவு வாழ வேண்டும் என்றுமு் வலியுருத்தினார்.

அதன் பின்னர் கேள்வி நேரம் நட்நதது . கூடியிருந்த மாற்றுமத சகோதரர்களும், மாற்று மத மாணவர்களும் கேட்ட கேள்விகளுக்கு குறிப்பாக இந்தியாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் அதன் பிண்ணனி குறித்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திரு. முகவைத்தமிழன் அவர்கள் சிறப்பாக பதில் அளித்தார்கள். மார்க்கம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு திரு. செய்யது இபுறாஹி்ம் அவர்களும் மனித நீதிப் பாசறையின் சித்தர்கோட்டை பிரிவு தாவா பொறுப்பாளர் திரு. சஃபீக் அவர்களும் சிறப்பாக பதில் அளித்தார்கள்.

அதன் பின்னர் வந்திருந்த அனைவருக்கும் சுவையான மதிய உணவு வழங்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்தக்களை நிகழ்ச்சியை நடத்திய நிர்வாகிகளிடத்தில் எழுத்து மூலமாக தெறிவித்தார்கள். இன்னும் விளக்கம் தேவைப்பட்டவர்களுக்கும் மதிய உணவிற்கு பின்னர் விளக்கம் வளங்கப்பட்டது. பின்னர் நிகழச்சியின் முடிவில் அனைவரும் மிகுந்த மன திருப்பதியுடனும் மகிழச்சியுடனும் கலைந்து சென்றனர்.

ஈத் மிலன் என்ற மாற்று மத சகோதரர்களுக்கான இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை பெரியபட்டினம் மனித நீதிப் பாசரை மற்றும் பாப்புலர் ஃபரன்ட் ஆஃப் இந்தியா ஏற்பாடு செய்திருந்தது.

Saturday, November 29, 2008

மும்பையில் தாக்குதல்... பிண்ணனியில் யார்?

மும்பையில் தாக்குதல்... பிண்ணனியில் யார்?

கடந்த மூன்று தினங்களாக மும்பைச் செய்திகள் மக்களை ஆக்கிரமித்த வகையில் வ‌ேறு ச‌ெய்திகள் ச‌ெய்திருக்க முடியாது. வ‌ெளிநாட்டவரும் கொல்லப்பட்டதால் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தொலைக்காட்சிகளும் தொடர்ந்து செய்திகளைத் தந்து வருகின்றன.

தீவிரவாதிகள் தாக்குதல் என்றாலே பொதுமக்கள் கூடும் இடத்தில் குண்டு வைப்பது, கும்பலாகச் சென்று தாக்குவது என்றிருந்த நிலை மாறி திட்டமிட்டு துப்பாக்கிப் பயிற்சி எடுத்து , தாக்கப் போகும் நிலைகளையெல்லாம் கவனமாக அனுமானித்து பிணைக்க‌ைதிகளை வைத்து "ஏதோ ஒரு" கோரிக்கையை முன் வைத்து உயிர் போகுமளவிற்கு போராடுவது என்றிருப்பது, இந்திய மக்களுக்கு மிகப் புதிது. முன்பொரு முற‌ை கந்தகார் விமானக் கடத்தல் நாடகம் உங்கள் கண் முன்பு வந்தால் ஆச்சரியமல்ல.

இந்தச் சம்பவத்தில் ஏகப்பட்ட கேள்விகள் உள்ளன. நாட்டின் மிக முக்கிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எல்லோரும் அடர்ந்த ம‌ெளனம் சாதிக்கிறார்கள். பொதுமக்களைப் போலவ‌ே அவர்களுக்கும் போதிய தகவல்கள் கிடைக்க வில்லை போலும்.

இந்தச் சம்பவம் மிகவும் திட்டமிடப்பட்டு துளியும் பிசகின்றி ச‌ெயல்படுத்தப்பட்டிருப்பது, இதன் பிண்ணனிய‌ைப்பற்றி மிகவும் தீவிரமாகச் சிந்திக்க வைத்துள்ளது. இந்தத் திட்டமிடலுக்குத் த‌ேவையான தகவல்கள், பணம், உள்ளூர் ஆதரவு, தொடர்ந்த சாட்டிலைட் போன் உத்தரவுகள் இத‌ெல்லாம் ஒன்று அல்லது அதற்கும் ம‌ேற்பட்ட அம‌ைப்புகளின் உதவியின்றி நடந்திருக்க முடியாது என்று உள்ளுணர்வு சொல்லுகிறது. இது வ‌ெறும் பாகிஸ்தான் மண்ணோடு நின்று விடப் போவதில்லை என்பது மட்டும் உறுதி. அம‌ெ ரிக்கர்கள் நின‌ை த்தால் இந்த முடிச்ச‌ை சுலபமாக அவிழ்த்து நம் க‌ையில் தரமுடியும். சாட்டில‌ைட் தொடர்புகள் மற்றும் முந்த‌ைய தகவல் தொடர்புகள் அன‌ைத்த‌ையும் ஆராய்ந்து இதன் மூலகர்த்தாக்கள‌ை அட‌ையாளங் காண அவர்கள் உதவ முடியும்.

முன்னாள் உளவதிகாரி திரு ராமன் அவர்கள் கூற்றின் படி டெக்கான் முஜாகித்தீன் என்பதெல்லாம் ஒரு பொய்யாக இருக்கலாம். உள்ளூர்த் தீவிரவாதிகளுக்கு இவ்வளவு திட்டமிடலும் (ஒரு அதிகாரி, இது ஒரு த‌ேர்ந்த கமாண்டோ ஆபர‌ேஷன் போல இருக்கிறது என்கிறார்) பொருளாதார பலமும் கிட‌ையாது என்றிருக்கிறார். அதே சமயம், ராண்ட் கார்ப்பர‌ேஷனைச் ச‌ேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர் ஒருவர் இது முழுக்க முழுக்க உள்ளூர் வாசிகளின் வ‌ேலை என்றிருக்கிறார். குழப்பத்தில் நாம்.

ஆரம்பத்தில் அமெரிக்கர்களையும் பிரிட்டிஷார‌ையும் தனிம‌ைப்படுத்துகிறார்கள் என்பதாக ஊடகங்கள் பெரிது படுத்திப் பேசின. ஆனால், மொத்தம‌ே 5 அம‌ெரிக்கர்கள் தான் கொல்லப்பட்டிருக்கின்றனர். அப்படியானால், அந்தச் சமயத்தில் மொத்தம‌ே 5 அம‌ெரிக்கர்கள் மட்டும‌ே இருந்தார்களா என்பது தெரியவில்லை.

உறுதிப்படுத்தப் படாத தகவல்கள் தெரிவிப்பது என்ன வென்றால், அம‌ெரிக்க மற்றும் இஸ்ர‌ேலிய உளவுத் துறை அதிகாரிகள் அந்தச் சமயத்தில் தாஜ் ஓட்டலில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இதற்கு மறுப்பை அம‌ெரிக்கா தெரிவித்தது. ம‌ேலும் அது அந்த ஓட்டலில் அமெரிக்கர்கள் யாரும் தங்கியிருக்க வில்லை என்றும் தெரிவித்தது. பிற்பாடு, 5 அமெரிக்கர்கள் இறந்திருப்பதாக அறிவித்திருக்கிறது. அவர்கள் உண்ம‌ையில் யார்?

முதலில் ப‌ேரம் ப‌ேச தீவிரவாதிகள் விரும்பியதாகவும் ஆனால் அரசு அந்தக் கோரிக்க‌ைக்கு உடன்படவில்லை என்றும் தெரிகிறது. தாம் பிடித்து வைத்திருந்த பிணைக் க‌ைதிகளை ய‌ெல்லாம் அவரவர் தூதரகங்களுக்கு போன் ச‌ெய்து மும்ப‌ை அரசை அவர்களுடன் பேரம் ப‌ேசச் சொல்லுமாறும் சொல்ல வில்லை ய‌ென்றால் அவர் களை க் கொன்று விடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்கள். அப்படி ஒரு நிலை சிங்கப்பூர் இளம் ப‌ெண் வக்கீலுக்கு நேர்ந்திருப்பதாக ஊடகங்களின் வாயிலாக அறிகிறோம். பின்னர் அவர் அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். மும்பை அரசுடன் அப்படி என்ன ப‌ேரம் ப‌ேச விரும்பினார்கள் என்பது புரியவில்லை. யாரை விடுவிக்க விரும்பினார்கள் என்பதும் தெரிய வில்லை.

தீவிரவாதிகள் முதலில் தேடிக் கொன்றது, கர்னல் புரோகித்தைக் க‌ைது ச‌ெய்த மூன்று மிக முக்கிய அதிகாரிகளைத்தான். அந்த முக்கிய அதிகாரி கர்காரே துப்பாக்கி துளைக்காத அங்கியை அணிவதை க‌ேமராவில் காட்டுகிறார்கள். ஆனால், அவர் மார்பில் மூன்று குண்டுகள் துளைத்து வ‌ெளிய‌ேறியிருக்கின்றன. அவர் உண்ம‌ையில‌ேயே தீவிரவாதிகளால் சுடப்பட்டாரா அல்லது சந்தர்ப்பத்த‌ைப் பயன்படுத்தி சில "வ‌ேண்டியவர்கள்" அவர்களைக் கொன்றனரா என்பத‌ையும் இனி தீவிரமாக விசாரித்தாக வ‌ேண்டும்.

INDIA TV தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டது. அதில் ஒருவன் சுத்தமான உள்ளூர் இந்தியில் ப‌ேசுகிறான். கொஞ்சம் யோசித்துவிட்டு தனது ப‌ெயரை சகத்துல்லா என்று தெரிவிக்கின்றான். அவர்கள் உண்ம‌ையில் தீவிரவாதிகளா அல்லது தொலைக்காட்சியின் ச‌ெட்டப்பா என்பத‌ை அரசு விசாரிக்க வ‌ேண்டும்.

தீவிரவாதிகள‌ை ஏற்றி வந்ததாகச் சொல்லப்படும் படகு ஒன்று குஜராத்த‌ைச் ச‌ேர்ந்தவருட‌ையது. அவர் படகு காணாமல் போய் ஒரு வாராமாகி விட்டது என்றும் ஆனால் போலிஸில் புகார் கொடுக்க வில்ல‌ை என்றும் சொல்லியிருக்கிறார். ஏனோ ப‌ெண் சாமியார் ஒருவர் தனது ப‌ைக்க‌ை விற்று விட்டதாகவும் ஆனால் வாங்கியவர் அவர் ப‌ெயருக்கு மாற்ற வில்ல‌ை என்பது தனது குற்றமாகாது என்று வாதாடியதும் நின‌ைவிற்கு வருகிறது.

ஒரு பிண‌ைக் க‌ைதி நாடகத்த‌ை நடத்தி தனது கோரிக்க‌ைகள‌ை நிறைவேற்ற ஒரு புரொபஷனல் தீவிரவாதக் கும்பல் முயன்றுள்ளது. விடுவிக்கப்படும் க‌ைதிகளுடன் வ‌ெளிய‌ேறி விடலாம் என்றிருந்த தீவிரவாதிகள், தங்கள் திட்டம் பலிக்காமல் போனதால் பிண‌ைக்க‌ைதிகள‌ைக் கொன்றிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்திய அதிகாரிகள் சாதாரணமானவர்கள் அல்ல. நிச்சயம் அந்த தீவிரவாதச் ச‌ெயல‌ைச் ச‌ெய்த அன‌ைத்து தொடர்புகள‌ையும் வ‌ெளிக் கொணர்வார்கள் என்று நம்புவோமாக.

பிரிட்டிஷ் பாகிஸ்தானிய நபர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தற்போது ஊகங்கள் எழுகின்றன. கராச்சியிலிருந்து தாம் வந்ததாகவும் 20 ப‌ேர் மொத்தம் என்பதாக ஒரு பிடிபட்ட LeT தீவிரவாதி கூறுகிறான். நடந்த சம்பவங்களின் கோர்வ‌ைய‌ையும் அதன் வீச்ச‌ையும் கூர்ந்து நோக்கினால் இதில் குற‌ைந்தது 40/50 ப‌ேர்களாவது ஈடுபட்டிருக்க வ‌ேண்டும் என்று அனுமானிக்க முடிகிறது. அப்படியானால் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் போக மீதம் ப‌ேர் என்ன வானார்கள்? அவர்களும் வ‌ெளிய‌ேறும் பிண‌ைக்க‌ைதிகளுடன் தப்பித்தனரா என்பதும் தெரியவில்ல‌ை. அவர்களின் அடுத்த இலக்கு என்ன என்பதும் தெரியவில்ல‌ை. இதில் முத்தாய்ப்பாக அவர்களின் தல‌ைவன் என்பவன் தனது கூட்டத்தாரில் ஒருவரால‌ேயே சுட்டுக் கொல்லப்பட்டான் என்றும் ச‌ெய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. இதில் மாப‌ெரும் சதிவலை ஒன்றிருக்கிறது. வளரும் இந்தியாவில் உள் நாட்டுப் பூசல‌ை உருவாக்கி அதில் குளிர்காய நின‌ைக்கும் நாடு அல்லது நாடுகள் இவற்றிற்கு பிண்ணனியாக இருக்கும் என்று மட்டும் புரிகிறது.

இந்தியா தனது தீவிரவாதத்திற்கு எதிரான அணுகுமுற‌ையை பரிசீலன‌ை ச‌ெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சிந்திக்க வல்ல அதிகாரிகள‌ைக் கொண்டு தேச நலன் மட்டும் பிரதானமாக என்னக் கூடிய அதிகாரிகளைக் கொண்டு ஒரு அம‌ைப்பு உருவாக்க வேண்டும். தீவிரவாதம் ச‌ெய்பவர்கள் எத்தக‌ைய அம‌ைப்பில் இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் ச‌ெயல்படத் தயங்காத அதிகாரிகள‌ை அது கொண்டு இருக்க வ‌ேண்டும்.

இந்த மாதிரியான நிகழ்வுகள் இனியும் ஒரு முற‌ை நடந்த‌ேறாதாவாறு விசாரண‌ையில் தெரிய வரும் அன‌ை த்துக் காரணிகள‌ையும் முள‌ையில‌ேயே கிள்ளி எறிய வேண்டும்.

கட்டாய இராணுவப் பயிற்சிய‌ை அன‌ைவருக்கும் கொண்டு வருவது பற்றி அரசு யோசிக்கலாம்.

இந்த நிகழ்வில் வீர மரணமட‌ைந்த போலீஸ், மற்றும் NSG அதிகாரிகளுக்கு நமது வீர அஞ்சலிய‌ை உரித்தாக்குவோமாக..


REDIFF.COM ல் கீழ்க்கண்ட க‌ேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. நியாயமான க‌ேள்விகள். இவற்றிற்கு பதில் கிட‌ைக்குமா?

How many terrorists were there? Did they number 20 as Maharashtra Chief Minister Vilasrao Deshmukh told a press conference on Thursday? Or did they number many more? If two or three terrorists attacked the CST, how many terrorists were present at the Taj and Trident? Did the CST terrorists drop a grenade/explosive device at Dockyard Road on the way to the station? Or was someone else responsible for that act of terror which claimed three lives?

The terrorists are said to have set up control rooms at the Taj and Trident hotels, a Cabinet minister told PTI on Thursday. When were these bookings made? A detailed investigation into the bookings made at both hotels in the months, weeks and days before the attacks may reveal the names of suspicious guests who registered there.

Military sources tell rediff.com that there was no way the terrorists could have carried so much ammunition with them when they assaulted the two hotels with their guns blazing. They believe the ammunition may have been stored earlier in rooms at both the hotels, perhaps on the higher floors.

If some of the terrorists had registered at the hotels earlier, could these men/women have left along with the guests who were released? Did the police record the identities and addresses of the guests who were released from both hotels?

Indian Hotels Chairman Ratan Tata indicated on Thursday that the terrorists had intimate knowledge of the Taj, its service corridors, its layout. Does this mean that they had a mole inside the Taj? Or more worrying, did a couple of them work there at some point of time? Did they have drawings of the layout of the two hotels?

If the terrorists were Pakistani, how did they have such an intimate knowledge of the terrain? The two or three cowards who attacked the CST on Wednesday night made their way from the CST through a road on the left side of The Times of India building towards the Cama and Albess hospital/Azad Maidan police station, a route that is known only to true-blood Mumbaikars. Were they locals? Or did they conduct extensive reconnisance of the likely routes of escape?

These same two or three men, who are said to have commandeered ATS Chief Hemant Karkare's [Images] police Qualis after shooting him, Additional Commissioner of Police Ashok Kamte and Inspector Vijay Salaskar, revealed similar familarity with the road outside the Esplanade Court, making an easy U-turn towards the Metro cinema junction rather than head on the road towards the CST. How did they know this if they were Pakistanis?

How did those men, whose images have appeared all over the world, get to the CST from Colaba where they are said to have landed by boat? Did they take a taxi? Or did they have local transportation? Did they come by a suburban train, which could explain the firing on one of the suburban train platforms? Who left the grenade on the Gitanjali Express, which killed a Bengali mother?

The terrorists are said to have done extensive reconnisance of the city. If they are Pakistanis, how did they get earlier entry to the city unnoticed? Did they come in by boat? Or did they use other routes to escape notice?

Such an operation could not have been conducted without extensive training and preparation, possibly on models of the Taj and Trident or Chabad House/Nariman House. Could this have been achieved at the rudimentary training camps hosted by the Lashkar-e-Tayiba in Pakistan occupied Kashmir? Or was it a more systematised operation conducted by a State agency in a hostile country?

How did they know Chabad House/Nariman House, which even long-time residents of Colaba -- the area in South Mumbai where the Taj, the Leopold Cafe [Images] and Chabad/Nariman House are located -- are unfamiliar with? The choice of this target indicates precision thinking -- it is doubtful if the Lashkar strategists are capable of such deep strategy -- and again points the needle of suspicion at a government intelligence agency in a nation inimical to India or renegades within such a bureau.

Early on Thursday morning, the television channels spoke about an exchange of fire between the terrorists and the police near the Liberty cinema (which is close to the Metro cinema/Cama hospital, but situated on an inner road). There was even fear expressed that these terrorists would enter the Bombay hospital, but nothing was heard about them thereafter. Where did they go? Were these two/three terrorists the same men who took over the police Qualis and shot at people near the Metro junction? Or have they escaped?

The police say the two men, who took over the Qualis, grabbed the Skoda that was halted at a police road block near the Girgaum Chowpatty [Images] beach. One of them was later killed by the police. Where did the other man go? Is he the Ismail, the Lashkar terrorist who is appparently singing like a canary to the police? Or is he someone else? If these are the two of the three terrorists who attacked the CST, what happened to the third man seen in photographs and video captures? Where did he vanish?

Another terrorist is said to be in custody. Where was he captured? What has he told the police?

Sunday, September 30, 2007

துபாயில் JMC முப்பெரும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா

துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க முப்பெரும் விழா



துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி, வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா 28.09.2007 வெள்ளிக்கிழமை மாலை துபாய் தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

துவக்கமாக முஹம்மது அனஸ் இறைவசனங்களை ஓதினார். பரீஜ் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.

அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் மன்ற பொதுச்செயலாளர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மன்ற அறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் 'துபாய் பிளாக்' என இரண்டு விடுதிக் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். வருடந்தோறும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது கல்லூரி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கம் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கி வருவதாகத் தெரிவித்தார்.

முன்னாள் மாணவர் சங்கத்தின் உலக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான முனைவர் எம்.எம். ஷாகுல் ஹமீது தனது உரையில் ஜமால் முஹம்மது கல்லூரிக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் உள்ள தொடர்பு தாய், மகன் பாசப்பிணைப்பைப் போன்றது என்றார். தாயகம் வரும் ஒவ்வொரு வரும் தனது சொந்த வீட்டிற்கு வருவதைப் போல் கல்லூரிக்கு வருகை தர கேட்டுக் கொண்டார்.

கல்லூரி முதல்வர் முனைவர் எம். ஷேக் முஹம்மது கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டு வரும் பல்வேறு படிப்புகள், கேம்பஸ் இண்டர்வியூ, வருடந்தோறும் ஆகஸ்ட் 15 அன்று நடத்தப்பட்டு வரும் முன்னாள் மாணவர் மன்ற விழா, கல்லூரியில் பள்ளிவாசல் விடுதிக்கட்டிடத்திற்கு உதவிய ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤தீன் மேலும் பல்வேறு வழிகளில் கல்லூரிக்கு உதவி வரும் ஈடிஏ டி என் எஸ் எக்ஸிகியூடிவ் டைரக்டர் அல்ஹாஜ் நூருல் ஹக், HRM ED அல்ஹாஜ் எம். அக்பர் கான் உள்ளிட்ட பலரை நினைவு கூர்ந்தார்.

கல்லூரி தாளாளர் அல்ஹாஜ் எம்.ஜே. அப்துல் கபூர் சாஹிப் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவி வரும் முன்னாள் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி பொருளாளர் அல்ஹாஜ் கே.ஏ. கலீல் அஹமது சாஹிப், பேராசிரியர் கலந்தர் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து தனது நிறுவனங்களுக்கு கல்லூரி மாணவர்களைத் தேர்வு செய்யும் திட்டத்தை அறிவித்தார்.முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.



துபாயில் 'இறைவாக்கும் நபிவாழ்வும்' நூல் வெளியீட்டு விழா



துபாய் ஏகத்துவ மெய்ஞானசபையில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் எழுதிய 'இறைவாக்கும் நபிவாழ்வும்' எனும் நூல் வெளியீட்டு விழா 28.09.2007 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் எம். ஜெ. முஹம்மது இக்பால் விழாவிற்கு தலைமை வகித்து, நூலை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். பெருங்கவிக்கோ அவர்கள் சகொதர சமுதாய மக்களிடையே குறிப்பாக இஸ்லாமிய மக்களிடம் கொண்டுள்ள அன்பை, நட்பை விவரித்தார். அவர்களின் தமிழ்ப்பணி குறித்து விவரித்தார்.

ஏற்புரை நிகழ்த்திய பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் இஸ்லாமிய தமிழ் ஞான சிறப்பு மற்றும் இஸ்லாமியர்களுடன் தனக்குள்ள தொடர்பு குறித்தும், தனது தமிழ்ப் பணிக்கு அவர்கள் கொடுத்து வரும் அபரிமிதமான ஒத்துழைப்பு குறித்தும் விரிவாகப் பேசினார். மேலும் மெய்ஞான சபை ஞானக்கடல் இமாம் கலீல் அவ்ன் மெளலானா அவர்களுடன் உள்ள தொடர்பு குறித்தும் விவரித்தார்.

சபையின் கவிஞர்கள் பெருங்கவிக்கோவின் சேவைகளை பாராட்டிப் பேசினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.ஜே. அப்துல் ரவூப், இம்தியாஸ் உள்ளிட்டோர் சிறப்புற செய்திருந்தனர்.


தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )