Saturday, February 14, 2009
நபிகள் படத்திறப்பு விழா தடை செய்யப்பட்டது - IDMK நடவடிக்கை வெற்றி
இதன் எதிரொலியாக உடனடியாக மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. செந்தில்வேலன், மாவட்ட துனை ஆட்சித்தலைவர், மாவட்ட காவல்துறை துனை கான்கானிப்பாளர், தாசில்தார் என பல உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிகழச்சியினை தடை செய்தனர்.
சமூக நல்லினக்கத்திற்கு பாதகமாக அமைய இருந்த இந்த நிகழ்ச்சி இந்திய தேசிய மக்கள் கட்சியின் முயற்சியால் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டது. மாவட்ட காவல்துறை கன்காணிக்பாளர் திரு. செந்தில்வேலன் அவர்கள் மத நல்லினக்கத்தை காக்கும் வகையில் உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களை நேரில் வரவழைத்தும் நடவடிக்கை எடுத்ததன் பேரில் மாவட்டத்தில் சமூக நல்லினக்கம் காக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. செந்தில் வேலன் அவர்களுக்கும், உதவி ஆடசித் தலைவர், மற்ற அதிகாரிகள் அனைவருக்கும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பாக பாராட்டுக்களை தெறிவித்து கொள்கின்றோம். மத நல்லினக்கத்திற்காக பாடுபடும் மாவட்ட காவல்துற காண்கானிப்பாளர் திரு. செந்தில் வேலன் அவர்களுக்கு விரைவில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் திரு. எம்.ஐ. ஜஹாங்கீர், மாவட்ட பொருளாளர் திரு. நஜ்முதீன் (பரமக்குடி) ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன், டாக்டர் பக்ருதீன் ஆகியோர் நேரில் சென்று நன்றியினை தெறிவிப்பார்கள்.
இது குறித்த முந்தைய செய்தி
Friday, February 13, 2009
பரமக்குடியில் நபிகள் நாயத்தின் படத்திறப்பு விழா - தடுக்கும் நடவடிக்கையில் IDMK
சமூக நல்லினக்கத்துடனும், ஓற்றுமையுடனும், அமைதியாகவும் இருக்கும் தமிழகத்தில் மத மோதல்களை உண்டாக்கி கலவரக்காடாக்கும் முயற்சியில் மீண்டும் ஒரு கும்பல் இறங்கியுள்ளது. நேற்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வெளியிடப்பட்டுள்ள ஒரு துன்டுப்பிரசுரததில் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" என்ற அமைப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (15.02.2009) அன்று காலை 10.30 மனியளவில் பரமக்குடி நகரில் மகான்கள் மற்றும் இறைத்தூதர்களின் புகைப்படங்களை திறக்கப்போவதாக அறிவித்திருந்தது.
விசம துன்டுப்பிரசுரததின் முதல் பக்கம்
இதில் புத்தர், ஏசுபிரான் (ஈசா நபி), மற்றும் நபிகள் நாயகம் (முகம்மது நபி) ஆகியோரின் புகைப்படங்களை திறக்கப்போவதாகவும் தெறிவிக்கப்பட்டிருந்தது. உடனடியாக நமது கட்சியின் பரமக்குடி நகர் நிர்வாகிகள் மூலம் நமது தலைமையின் கவனததிற்கு கொண்டுவரப்பட்டது.
உடனடியாக செயலில் இறங்கிய முகவை மாவட்ட செயலாளர் திரு. ஜஹாங்கீ்ர், பொருளாளர் திரு. நஜ்முதீன் (பரமக்குடி) மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன் (ரைசுதீன்) திரு. டாக்டர். பக்ருதீன் (கீழக்கரை) ஆகியோர் இன்று உடனடியாக மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. செந்தில்வுலன் அவர்களையும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கி்ர்லோஸ்குமார் அவர்களையும் புகார் மனுக்களுடன் நேரடியாக சந்தித்து உடனடியாக இதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்து மாவட்டத்தில் மதமோதல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
உடனடியாக மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. செந்தில்வுலன் அவர்களும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கி்ர்லோஸ்குமார் அவர்களும், அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து நபிகள் நாயகத்தின் புகைப்படம் திறக்கப்படாமலிருக்க செய்யுமாறு கேட்குட் கொண்டார்கள். இன்னும் நம்மிடம் இந்தப்பிரச்சினையை உடனடியாக நடவடிக்கை எடுத்து நான் தீர்த்து வைக்கிறேன். நபிகள் நாயகத்தின் படம் திறப்பது என்பது தவறானதாகும் ஆகவே அவ்வாறு நடக்காமல் இருக்க நான் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகின்றேன் என்று உறுதியளித்தள்ளார்.
பின்னர் மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன் (ரைசுதீன்) திரு. டாக்டர். பக்ருதீன் (கீழக்கரை) ஆகியோர் உடனடியாக இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஹசன் அலி எம்.எல்ஏ அவர்களை தொடர்பு கொண்டு இந்த நிகழ்ச்சிக்கு ஸ்பான்சர் செய்திருப்பது காங்கிரசின் பரமக்குடி எம்.எல்.ஏ திரு. கே.வி.ஆர் இராம்பிரபு என்றும் உடனடியாக அவரை தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் கேட்க சொன்னார்கள். உடனடியாக பதில் அளித்த திரு. ஹசன் அலி , நபிகள் நாயகத்தின் படத்திறப்பு பற்றி இராம்பிரபு எம்.எல்.ஏ க்கு தகவல் தெறியாது என்றும் சமய நல்லினக்க விழா என்பதால் ஸ்பான்சர் செய்ததாகவும் இனிமேல் அந்த நிகழ்ச்சியில் கலந்து காள்வதாக இருந்த திரு. இராம்பிரபு எம்.எல்.ஏ கலந்து கொள்ள மாட்டர் என்றும் உறுதியளித்தார்.
பின்னர் மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் திரு. முகவைத்தமிழன் (ரைசுதீன்) திரு. டாக்டர். பக்ருதீன் (கீழக்கரை) ஆகியோர் ரோட்டரி சங்கள் நிர்வாகிகளை சந்தித்து இந்த பிரச்சினை குறித்து எடுத்துரைத்தனர், உடனே ரோட்டரி சங்கள் மாவட்ட தலைமை பரமக்குடி கிளையினை தொடாடபு கொண்டு இந்நிகழ்ச்சியில் நபிகள் நாயத்தின் புகைப்படடம் திறப்பதாக கூறப்பட்டுள்ளது குறித்தும் அதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஏன் கலந்து கொள்கிறீர்கள் என்றும் கேட்டார்கள்.இந்நிகழச்சியில் பங்கு பெறும் யாரிடமும் எந்நதவித முன்கூட்டிய தகவலும் இதுகுறித்து விழாவினை நடத்துபவர்கள் கூறவில்லை என தெறியவந்துள்ளது.
உடனடியாக பரமக்குடி இந்திய தேசிய மக்கள் கட்சியினரை தொடர்பு கொண்ட மாவட்ட நிர்வாகிகள் நிகழச்சியினை நடத்தும் சன்மார்க்க சங்கத்தார்கள் மீதும், பரமக்குடி காமாட்சி ஜீவல்லர்ஸ் அதிபர் திரு. எம்.என். இரவிச்சந்திரன் என்பவர் மீதும் பரமக்குடி காவல் நிலையித்தில் புகார் செய்ய சொல்லி உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்திய தேசிய மக்கள் கட்சி சார்பாக மாவட்ட காவல்துறை கண்கானிப்பளரிடம் அளித்த புகர் மனு:


இந்திய தேசிய மக்கள் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் அளித்த புகர் மனு:

