Showing posts with label தினமனி. Show all posts
Showing posts with label தினமனி. Show all posts

Tuesday, March 09, 2010

பேர​பா​யம் காத்​தி​ருக்​கி​றது...! - தினமனி தலையங்கம்

அரசு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தாக்கல் செய்திருப்பது ஏதோ மகளிர் நலத்தின் மீதுள்ள அக்கறையால் என்று யாராவது நினைத்தால், அது தவறு. பிரச்னையைக் கிளப்பும் இந்த மசோதாவை இப்போது தாக்கல் செய்திருப்பது, ஒவ்வோர் இந்தியக் குடிமகளின் வருங்காலத்தையும் பாதிக்க இருக்கும் சர்ச்சைக்குரிய இன்னொரு மசோதா நாடு தழுவிய விவாதத்துக்கும், எதிர்ப்புக்கும் வழிகோலாமல் இருப்பதற்காக.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாகப் பயன்படுத்த முற்பட்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்பதுதான் உண்மை.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும் அணுமின்சக்தி உற்பத்திக்கான முயற்சிகள் ஏன் தொடங்கவில்லை என்று தெரியுமா? இந்தியாவில் முதலீடு செய்து அணுமின்சக்தியை உற்பத்தி செய்யப் பன்னாட்டு நிறுவனங்கள் தயாராக இல்லை என்று ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு தான் நமது அணுசக்தித் துறைக்குத் தெரிய வந்திருக்கிறது. அதற்கு என்ன காரணமாம்?

அணு உலைகள் வெடித்துச் சிதறி அதனால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்புத் தொகை கொடுக்க வேண்டி வருமே என்கிற கவலையால்தான் அன்னிய நிறுவனங்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவ முன்வரவில்லை என்பதுதான் காரணம். அதாவது, அன்னிய முதலீட்டாளர்கள் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவி, அதிக லாபத்துக்கு மின்சாரத்தை விற்று லாபம் சம்பாதிக்கத் தயார். ஆனால், விபத்துகள் ஏற்பட்டால் அதற்குப் பொறுப்பேற்கத் தயாராக இல்லை.

உடனே, நமது அரசு என்ன செய்ய முற்பட்டிருக்கிறது, தெரியுமா? இந்தியாவின் கடைசிக் குடிமகன்வரை, ஒவ்வொருவருடைய நன்மையையும், நல்வாழ்வையும் கருத்தில்கொண்டு செயல்படும் ஜனநாயக அரசு, தனது குடிமக்களைப் பற்றிய கவலையை விடுத்து, முதலீட்டாளர்களின் நன்மையைக் கருதி ஒரு சட்டத்தையே இயற்ற முன்வந்திருக்கிறது. அணுசக்தி விபத்துக்கான நஷ்டஈடு சட்டத்தின் முன்வரைவு இப்போது நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படக் காத்திருக்கிறது.


இந்தச் சட்ட முன்வரைவின்படி, அணுஉலைகளில் ஏற்படும் எந்தவித விபத்துக்கும் அணுமின்சக்தி நிலையம் நடத்தும் நிறுவனம்தான் பொறுப்பு. அப்படி விபத்து ஏற்படும்பட்சத்தில், அதிகபட்ச இழப்புத் தொகை ரூ. 2,785 கோடி மட்டுமே. அதுமட்டுமல்ல, அணுமின் நிலையம் நடத்துபவரின் பங்கு இதில் வெறும் ரூ. 500 கோடிதான். அதற்கும் அதிகமான தொகையை, அதாவது துண்டு விழும் ரூ. 1,805 கோடியை அரசு நமது வரிப்பணத்திலிருந்து ஈடுகட்டும். எப்படி இருக்கிறது கதை?


இப்படி ஒரு சட்டம் இயற்றி, அணுமின் நிலைய நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே, இந்தியாவுக்கு அணுமின்சக்தி நிலையம் தொடர்பான அணுஉலைகளையும் ஏனைய இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியையும் தங்களது நிறுவனங்கள் வழங்கும் என்று அமெரிக்க அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டிருக்கிறது. இந்த நிபந்தனைகள் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு முன்பே விதிக்கப்பட்டதா, அதை இந்திய அரசு ஏற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை.


இந்தச் சட்ட முன்வரைவைச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிகிறது. அணுக் கசிவாலோ, விபத்தாலோ மனித இனத்துக்கும், விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் அபாயம் என்பது ஏதோ வாகன விபத்தாலோ, இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் விபத்துகளாலோ ஏற்படுவதுபோல, அப்போது ஏற்பட்டு முடிவடைவதல்ல. இதன் பின்விளைவுகள் தலைமுறைகளைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.


சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு ஹிரோஷிமா-நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் பாதிப்பு தலைமுறைகளைக் கடந்து இப்போதும் அந்தப் பகுதியில் பிறக்கும் குழந்தைகளைப் பாதித்துக் கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை. போபால் விஷவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் இப்போதும் பின்விளைவுகளைச் சந்திக்கும் அவலம் தொடர்கிறது. செர்னோபில் அணுஉலை விபத்தின் கோரம் இப்போதும் தொடர்கிறது.


இந்தச் சட்ட முன்வரைவு பொத்தம் பொதுவாக இழப்புத் தொகை இவ்வளவு என்று வரையறுக்கிறதே தவிர, அணுஉலை நிறுவுபவரின் நலனைப் பாதுகாக்கிறதே தவிர, இதனால் பாதிக்கப்படும் தனி நபருக்கும், அவரது வாரிசுகளுக்கும், இயற்கைக்கும் சுற்றுச்சூழலுக்கும் என்ன இழப்புத் தொகை என்பதைச் சொல்ல மறுக்கிறதே, ஏன்?

நிதியமைச்சகம் முன்வைத்த நியாயமான எதிர்ப்பு என்ன தெரியுமா? அரசு நிறுவனமோ, தனியார் நிறுவனமோ, எதுவாக இருந்தாலும் அந்த நிறுவனத்தின் கவனக் குறைவாலோ, தொழில்நுட்பத் தவறாலோ ஏற்படும் விபத்துக்கு சராசரி இந்தியக் குடிமகனின் வரிப்பணத்திலிருந்து இழப்புத்தொகை தரப்பட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான். அணு வியாபாரத்தில் ஈடுபட்டு லாபமடையத் துடிப்பவர்கள், அதனால் ஏற்படும் விபத்துக்கு முழுப் பொறுப்பேற்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி?


சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையும், நிதியமைச்சகமும் முன்வைத்த எதிர்ப்புகளைப் புறம்தள்ளி பிரதமரின் நேரடித் தலையீடு இந்தச் சட்ட முன்வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்ற வைத்துவிட்டது. இப்போது, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவின் மீதான அமளி என்கிற சந்தடி சாக்கில் விவாதத்துக்கு உள்படுத்தப்படாமலே நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்படும் அபாயம் காத்திருக்கிறது.


இந்தியக் குடிமகனின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பைத் தர வேண்டிய அரசு, அணுமின்சக்தி நிலையங்களின் நன்மைக்காகத் தனது கடமையைக் கைகழுவுகிறது. நமது மக்கள் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்களும், படித்த விவரம் அறிந்த பொறுப்புள்ள இந்தியக் குடிமக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


நமது இடமே விலை பேசப்பட்டுவிடும் போலிருக்கிறது. நாம் இடஒதுக்கீடு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பேராபத்து காத்துக் கொண்டிருக்கிறது. நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனிமனித உயிரின் மதிப்புத் தெரியாதவர்கள், தாய்நாட்டைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், அன்னிய ஏகாதிபத்தியத்தின் ஏவலாளிகள் என்றெல்லாம் நமது முன்னோர்கள் வர்ணித்த காலனி ஆட்சி போய், நம்மை நாமே ஆட்சி செய்யும் லட்சணம் இதுதானா?

நன்றி : தினமனி

Monday, May 12, 2008

தினமனியில் வந்த விளம்பரம் - பஸ்லுல் இலாஹி (மீள் பதிவு)


பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்

முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்கினார்களா?

ஜைனுல் ஆபிதீன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஏற்கனவே இஸ்லாமிய இணையப் பேரவையில் முஸ்லிம் விரோத தினமணியின் பித்தளாட்டத்தையும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களையும் கண்டித்து ""அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?"" ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதை இங்கு சொடுக்கி வாசிக்கவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..


உயர் திரு தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்களுக்கு மேலப்பாளையம் கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி எழுதிக் கொள்வது. முதற்கண் உங்கள் மீது ஏக இறைவன் சாந்தியும் சமாதானமும் உண்டாகச் செய்வானாக என்ற வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். 14.10.2007 அரசியல் அரங்கம் எனும் தலைப்பில் த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீன் என்பவர் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு அளித்த சிறப்பு பேட்டி என்ற பெயரில் ஒரு பக்க விளம்பரம் இடம் பெற்றிருந்தது. அவரைப் பற்றி அவர் எப்படியெல்லாம் விளம்பரம் செய்து கொள்ள விரும்பினாரோ அந்த விளம்பர வாசகங்களை அப்படியே அவரது பேட்டி போல் வெளியிட்டிருந்தார்கள். தனக்கு விளம்பரம் தேடுவதற்காக, தன்னை தூய்மையானவராக காட்டுவதற்காக, அவர் விரும்பியவாறு விளம்பரம் செய்ய அவருக்கு உண்டு. அதற்காக முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்குகிறார்கள் என்று ஜைனுல் ஆபிதீன் கூறியுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதனால்தான் இந்த கண்டன மடல்.

அனைத்தையும் டி ராஜேந்தர் படித்து விட்டாரா?

முன்னதாக நீங்கள் செய்துள்ள அறிமுக வாசகங்கள் கூட உங்களுடையது அல்ல. விளம்பரத்துக்காக அவர்கள் எழுதி தந்துள்ளதையே நீங்கள் அறிமுகம் செய்வது போல் இடம் பெறச் செய்துள்ளீர்கள். விளம்பரம் என்றாலே அவர்கள் எழுதி தருவதைத்தானே போட முடியும். ஜைனுல் ஆபிதீனின் திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு நூல் விளம்பரத்துக்காக சினிமா நடிகர் விஜய டி ராஜேந்தரைக் கொண்டு விளம்பரம் தயாரித்தார்கள். இதுவரை வெளி வந்த திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புகளிலேயே இதுதான் சிறந்தது என்று அவரை பேச வைத்தாhகள்;. இதுவரை வெளி வந்துள்ளதில் இதுதான் சிறந்தது என்று டி ராஜேந்தர் சொல்வதாக இருந்தால் இதுவரை வெளி வந்துள்ள திருக்குர்ஆன் தமிழ் மொழி பெயர்ப்புகள் அனைத்தையும் டி ராஜேந்தர் படித்து விட்டாரா? என்று அறிவுள்ளவர்கள் கேட்டார்கள். அதன் பிறகு அந்த விளம்பரத்தை நிறுத்தினார்கள். இந்த மாதிரிதான் உங்கள் அறிமுக எழுத்துக்ளும் உள்ளன.

பொய்களை அரங்கேற்றும்பொழுதுதான் கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று எழுதுவார்கள்.

எல்லா மதத்தினரையும் ஜாதியினரையும் கொண்ட தி.மு.க, அ.தி.மு.க. நடத்திய நிகழ்ச்சிகளில் கூட அவர்கள் 10 லட்சத்தைக் கூட்டியதாகக் கூறவில்லை. 2007 டிசம்பர் 14இல் தி.மு.க நடத்த இருக்கும் இளைஞர் அணி மாநாட்டுக்கு கூட 5 லட்சம் பேர் கூடுவார்கள் என்றுதான் மு.க. ஸ்டாலின் கூறி வருகிறார். சிறுபான்மை முஸ்லிம்களில் மிகச் சிறுபான்மையினரான தவ்ஹீதுவாதிகளில் பல பிரிவுகளில் ஒன்றுதான் த.த.ஜ. அது 10 லட்சத்தைக் கூட்டியதாக எழுதி தந்ததை போட முடியாத நீங்கள் சுதந்திர இந்தியாவில் மிகப் பெரிய பேரணி என்று கூறப்படுகிறது என எழுதியுள்ளீர்கள். கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று சொன்னாலே த.த.ஜ. தலைவரின் அகராதிப்படி அவற்றின் மறு பெயர் பொய் என்பதுதான். உண்மைகளைத்தான் திட்டவட்டமாக உறுதியிட்டுக் கூற முடியும். பொய்களை அரங்கேற்றும்பொழுதுதான் கூறப்படுகிறது, கருத இடமுண்டு என்று எழுதுவார்கள். அப்படித்தான் அந்த விளம்பரத்திலும் உங்கள் பெயரால் எழுதப்பட்டுள்ள வாசகம் உள்ளது.

மொத்தத்தில் இது பேட்டி அல்ல. த.த.ஜ. தந்துள்ள விளம்பரம்.

தேச துரோகி கிரிமினல் பி.ஜே

(ISI என்ற பாகிஸ்த்தானிய உளவு அமைப்பின் தொடர்போடு தமிழக முஸ்லிம்களிடத்தில் முதல் முதலில் தீவிரவாதத்தை விதைத்து தமிழகமெங்கும் பல இந்து தலைவர்கள் கொல்லப்படுவதற்கும் பல குண்டு வெடிப்புகள் நிகழ்வதற்கும் மூல காரணமாயிருந்தவன் சவுதியில் ஜித்தாவில் உள்ள ஜிப்லி என்ற தனது ஏஜென்ட் மூலமும் இன்னும் இலங்கையில் உள்ள பாகிஸ்த்தானிய தூதரகத்தில் வைத்து நேரிலும் ISI உடன் ஆலோசனை நடத்தியவன். தற்போது முதல்வர் மகள் கனிமொழியின் பெயரையும் முதல்வர் பெயரையும் அடிக்கடி பயன் படுத்தி வருகின்றான் சம்பந்தப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் முக்கியமாக தோழி கனிமொழி அவர்கள் உஷாராக இருக்கவும்)


சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் இருந்த முஸ்லிம் கட்சிகளில் த.மு.மு.க. மட்டும்தான் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு கோரிக்கையை முன் வைத்து கூட்டணி அமைத்தது. இந்தச் செய்திகள் தேர்தல் நேர தினமணியின் எல்லா பதிப்புகளிலும் செய்தியாக வந்திருக்கிறது. இந்த உண்மைக்கு முரணாக எழுத முடியாது. அதனால்தான் அவர்கள் கூற்றை அப்படியே போட முடியாமல் கருத இடமுண்டு என்று எழுதியுள்ளீர்கள். ஒருவனை நல்ல படிக்கிறான் என்று ஆசிரியரும் நல்ல படித்திருக்கிறான் என்பதை அவனை விட கூடுதலாக படித்தவனும்தான் சொல்ல முடியும். வைத்தியநாதனின் கருத்து போல் இடம் பெறச் செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய கோட்பாடுகளை கரைத்துக் குடித்தவர் என்று சொல்லுக்கும் இதுதான் அளவுகோல்.

இது பேட்டி அல்ல. த.த.ஜ. தந்துள்ள விளம்பரம் இது. செய்திகள் வாசிப்பது போல் பேட்டி எடுப்பது போல் விளம்பரங்கள் டி.வி.க்களில் வருகின்றன. அது போன்ற ஒன்றுதான் இது என்பதை அப்பாவிகள் அறிய மாட்டார்கள்.


ஜைனுல் ஆபிதீன். இடம் பெறச் செய்துள்ள பொய்.

ஜனநாயக ரீதியில் எதிர்ப்பதுதான் மக்களாட்சியில் சரியான வழியே தவிர தீவிரவாதம் அல்ல என்பது தான் அன்றும் இன்றும் எனது அழுத்தமான அபிப்பிராயம். தங்களது எதிர்ப்புகளை நியாயமாக தெரிவிக்க முடியாதபோதுதான் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் எங்களது சமுதாய இளைஞர்கள் இறங்குகிறார்கள். இது முதல் கேள்வியின் பதிலில் ஜைனுல் ஆபிதீன் இடம் பெறச் செய்துள்ள பொய். அதாவது தனக்கு விளம்பரம் தேடுவதற்காக தன்னை தூய்மையானவராக காட்டுவதற்காக தன்னை காத்துக் கொள்வதற்காக முஸ்லிம் சமுதாய இளைஞர்கள் வன்முறையிலும் தீவிரவாதத்திலும் இறங்குகிறார்கள் என்று எழுதியுள்ளார். இந்தியாவிலுள்ள தீவிரவாதிகளில் பலரும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு உடையவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இந்திய முஸ்லிம்கள் அவர்களது சதி வலையில் விழுந்த விடக் கூடாது என்பதுதான் த.த.ஜ. கோரிக்கை என்றும் எழுதியுள்ளார்.

அதை தீவிரவாத இயக்கமாக ஆக்கப் பார்த்தார்.

உண்மை என்னவென்றால் ஜாக் என்ற அமைப்பில் இருந்த ஜைனுல் ஆபிதீன் அதை தீவிரவாத இயக்கமாக ஆக்கப் பார்த்தார். 1992இல் இலங்கை சென்ற அவர் பாகிஸ்தான் தூதரகம் சென்றார். ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டார். ஐ.எஸ்.ஐ.யின் சதி வலையாக ஆனார். தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் உறுதியான கொள்கை உடைய ஜைனுல் ஆபிதீன் அதற்காக இஸ்லாமிய சட்டங்களை வளைத்து திரித்து விளக்கம் கூறி இளைஞர்களை தூண்டி விட்டு கெடுத்து வந்தார். எனவே அதன் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனி எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் ஜாக் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனியை பார்த்து நீ கோழை, தொடை நடுங்கி என்றெல்லாம் ஜைனுல் ஆபிதீன் விமர்சித்தார். 1992இல் இலங்கை சென்று ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு கொண்டார்.

மத்திய மாநில உளவுத் துறையினரிடமும் உள்ளது.

எனவே ஜைனுல் ஆபிதீனிடம் ராஜினாமா கடிதம் எழுதி வாங்கிய ஜாக் அமீர் (தலைவர்) கமாலுத்தீன் மதனி ஜைனுல் ஆபிதீனை ஜாக்கிலிருந்து ஓரங் கட்டினார். தீவிரவாத செயலில் ஈடுபட்டதால் ஜாக்கிலிருந்து ஓரங்கட்டப்பட்டதை அறியாதவர்கள் பல சமாதான கூட்டங்களை கூட்டினார்கள். அவற்றில் ஒன்றுதான் 01.05.1997 வியாழன் அன்று திருச்சி அரிஸ்ட்டோ ஓட்டலில் நடந்த ரகசிய கூட்டம். 38 மவுலவிகள் (மதக் குருக்கள்) மட்டுமே கலந்த கொண்ட அந்த ரகசிய கூட்டத்தில் ஜைனுல் ஆபிதீன் அளித்த ரகசிய வாக்கு மூலம் ஆடியோவாகப் பதியப்பட்டுள்ளது. அதில் சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ். ஆலுவலக குண்டு வெடிப்பு, நாகூர் பார்சல் குண்டு வெடிப்பு, சிந்தாதிரிப் பேட்டை இந்து முன்னணி அலுவலக குண்டு வெடிப்பு, பம்பாய் படப் பிரச்சனை மணிரத்னம் வீட்டு குண்டு வெடிப்பு, மதுரை ராஜகோபாலன் கொலை இப்படி தொடராக உள்ள அனைத்து சம்பவங்களுக்கும் நான்தான் மூல காரணம் என ரகசியமாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இந்த ரகசிய வாக்கு மூல கேஸட்கள் மத்திய மாநில உளவுத் துறையினரிடமும் உள்ளது.

இவரே காட்டிக் கொடுத்து இதுவரை தப்பித்து வந்திருக்கிறார்.

இந்த ரகசிய வாக்கு மூல கேஸட்களில் உள்ளதை அறிந்ததால்தான் 2004இல் அவர் துபையிலிருந்து அடித்து விரட்டப்பட்டார். இந்த ரகசிய கேஸட்டை கேட்டு விட்டுத்தான் சிலோன் போலீஸ் 2005இல் அவசரமாக நாடு கடத்தியது. தமிழகத்தில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கெல்லாம் நான்தான் மூல காரணம் என்று ஜைனுல் ஆபிதீன் கேஸட்களில் சொல்லி உள்ளதை கேட்டு விட்டுத்தான் கத்தர் அரசு வெளியான விஸாவை ரத்து செய்தது. மலேசிய அரசும் நாடு கடத்தியது. இந்தியாவில் மட்டும்தான் சட்டத் துறையினரை சரி செய்து இவரால் தூண்டி விடப்பட்டவர்களை இவரே காட்டிக் கொடுத்து இதுவரை தப்பித்து வந்திருக்கிறார்.

அவர்களிடம் மட்டும் அடிமை போல் அணுசரித்துப் போகிறார்.

தீவிரவாதத்தை தூண்டி விடுவார். பயிற்சி கொடுப்பார். அதில் ஒருவர் மாட்டிக் கொண்டாலும் வரிசையாக மற்றவர்களையும் காட்டிக் கொடுத்து இன்பார்மர் வேலை செய்து இவர் மட்டும் நல்லவராக திறம்பட நடித்து தப்பி விடுவார். ஆக இதுவரை சிறையில் இருந்தவர்கள் தண்டணை பெற்று இருப்பவர்கள் பெரும்பாலும் அப்பாவிகளும் அம்புகளும்தான். எய்தவர் ஜைனுல் ஆபிதீன்;தான். இதற்குரிய ஆதார கேஸட் மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகியவர்களிடம் உள்ளது. அதனால்தான் பல பிரச்சனைகள் ஏற்பட்டும் அவர்கள் இருவரையும் த.த.ஜ.வை விட்டு நீக்காமல் தாஜா செய்து அவர்களிடம் மட்டும் அடிமை போல் அணுசரித்துப் போகிறார்.
தவ்பா பள்ளியில் போய் வம்பு இழுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் இன்றும் உறுதியாக உள்ளவர்தான் த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீன். தீவிரவாதத்துக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. த.த.ஜ. தலைவர் ஜைனுல் ஆபிதீனிடம் அனுமதி உண்டு. இதை ஆதாரத்தின் அடிப்படையில் இவரை விசாரிக்க கைது செய்ய அதிகாரிகள் முயற்சி செய்யும்பொழுதெல்லாம். ஆட்சியாளர்களின் காலில் விழுந்து சரண் அடைந்து விடுவார். கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருந்து தப்ப அப்பொழுது கருணாநிதி காலில் விழுந்தார். பிறகு ஜெயலலிதா காலில் விழுந்தார். இப்பொழுது மீண்டும் கருணாநிதி காலில் விழுந்து கிடக்கிறார். இன்றும் இவரிடம் அடியாட்கள் உண்டு. பல கொலைகள் செய்த இவரது அடியாட்கள் இப்பொழுதும் மேலப்பாளையத்தில் உள்ள தவ்பா பள்ளியில் போய் வம்பு இழுத்துக் கொண்டுதானிருக்கிறார்கள். பெருநாளையொட்டி கடலூர் மவாட்டம் சிதம்பரம் ஈத்கா விஷயத்திலும் வம்பிலுக்க முயன்றார்கள். தீவிரவாதம்தான் தீர்வு என்பதில் உறுதியான கொள்கை உடையவர் ஜைனுல் ஆபிதீன்தான்.

குடும்பத்துடன் பல போராட்டங்களை நடத்தியவர்.

த.மு.மு.க. நிர்வாகத்தில் எந்த வேலையும் செய்யாமல் எனது தற்காப்புக்காக த.மு.மு.க. அமைப்பாளர் பதவியை வகித்து வந்தேன். இப்பொழுது ஆபத்து நீங்கி விட்டது என 2001லேயே த.மு.மு.க. அமைப்பாளர் பதவியை விட்டு விட்டு வனவாசம் செல்வதாக அறிவித்தவர் ஜைனுல் ஆபிதீன். இப்பொழுது ""ஆமாம் அதன் அமைப்பாளர் நான்தான்"" என விளம்பர பேட்டியில் எழுதியுள்ளார். இன்றும் அவர்தான் த.மு.மு.க. அமைப்பாளர் என்ற கனவில் இருக்கிறார் பாவம். ராஜகோபாலன் கொலை வழக்கில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதிலிருந்து தன்னை காத்துக் கொள்ள குணங்குடி ஹனீபாவின் த.மு.மு.க.வில் சரண்டர் ஆனவர் ஜைனுல் ஆபிதீன். இட ஒதுக்கீடுகளுக்காக குடும்பத்துடன் பல போராட்டங்களை நடத்தியவர் சிறை சென்றவர் குணங்குடி ஹனீபா. பெயரளவில் அமைப்பை வைத்திருந்ததாக எழுதி அவரையும் கொச்சைப்படுத்தியுள்ளார்.

த.மு.மு.க. தலைமையை காத்து இருந்து கருவறுத்தார்.

பதவி அரசியலில் நாட்டம் இல்லாதவர் எனவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொரு அமைப்பிலும் இருந்தார். புதிய அமைப்பில் தலைவராக இருந்தால் அது பதவியாக இருக்காது. கடினமாக உழைத்து அதை வளர்க்க வேண்டிய பொறுப்பாக இருக்கும் பொறுப்புடன் இருந்து கடமை ஆற்றாமல் அறுவடை செய்து மட்டுமே பழக்கப்பட்டவர் ஜைனுல் ஆபிதீன். எனவே தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே காலத்தை ஓட்டி வந்தார். த.மு.மு.க. பேரியக்கமாக வளர்ந்ததும் அதன் தலைமைப் பதவியை கைப்பற்ற முயன்றார். தஞ்சைப் பேரணிக்கு முன்பு நடந்த பொதுக்குழுவிலேயே மூக்கறுபட்டுப் போனார். தஞ்சைப் பேரணிக்கு முன் விலகினால் செல்லாக் காசு ஆகி விடுவோம் எனவே த.மு.மு.க. தலைமையை காத்து இருந்து கருவறுத்தார்.

ஜைனுல் ஆபிதீனின் சிகப்பு விளக்க ஆசை.

த.மு.மு.க.வுக்கு அரசியல் ஆசை என்றும் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்றும் கூறுகிறார். காங்ரஸ் கட்சியினர் ஜெய் ஹிந் என சொல்கிற மாதிரி. த.த.ஜ. எந்தக் காலத்திலும் தேர்தலில் போட்டியிடாது என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்ல வேண்டும் என்றதற்கு மறுத்து இருக்கிறார். தலைவர் பதவிக்கு ஆசைப்பட மாட்டேன் என்று 20 வருடமாகக் கூறி வந்தவர் த.த.ஜ. தலைவராக இருந்தவரை கீழே தள்ளி விட்டு விட்டு இவர் தலைவராக ஆகி இருக்கிறார். இப்பொழுது அவரது ஒரே ஆசை தொண்டியைச் சார்ந்த த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர் அலி சிகப்பு விளக்க மின்ன பணியாற்றி வருகிறாரே. பணியாற்றும் தகுதி நமக்கு இல்லா விட்டாலும் கொஞ்ச நாளுக்கு சிகப்பு விளக்க மின்ன பவனி வர வேண்டும். இதுதான் ஜைனுல் ஆபிதீனின் சிகப்பு விளக்க ஆசை.

பேட்டி என்ற பெயரால் வெளியாகியுள்ள விளம்பரம்.

அவரது சிகப்பு விளக்க ஆசையை நிறைவேற்ற ஒரே வழி த.த.ஜ.வை தேர்தலில் போட்டியிடும் அமைப்பாக மாற்றுவதுதான். அதற்கு தடையாக இருப்பவர்கள் ரகசிய வாக்கு மூல கேஸட்களை வைத்துக் கொண்டு அவரை ஆட்டிப் படைக்கும் மேலப்பாளையம் ஷம்சுல்லுஹா, தென்காசி சுலைமான் ஆகியவர்கள்தான். எனவே அவரது ஆதரவாளர்களையெல்லாம் த.த.ஜ.வை தேர்தலில் போட்டியிடும் அமைப்பாக ஆக்க வேண்டும் என அவர்களாக சொல்வது போல் சொல்ல வைக்கும் வேலையில் முனைப்போடு ஈடுபட்டு வருகிறார் அதற்கான ஆயத்த பணிகளில் ஒன்றுதான் நீங்கள் எடுத்த பேட்டி என்ற பெயரால் வெளியாகியுள்ள விளம்பரம். பத்திரிக்கைகளில் விளம்பரம் வெளியிடுவது அவரவர் உரிமை. நீங்கள் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் Adv என போட மறந்து விட்டீர்கள். வஸ்ஸலாம்.


அன்புடன்:- கா.அ.முஹம்மது பஸ்லுல் இலாஹி,
55.சமாயினா ஷேக் முஹம்மது மூப்பன் தெரு,
மேலப்பாளையம், திருநெல்வேலி, 627005.

Friday, April 11, 2008

இரானுவப் பயிற்சியில் MNP அமைப்பினர்!! நாட்டிற்கு ஆபத்தா?

தீவிரவாத பயிற்சியில் RSS (தினமனி பார்வையில் சமூக சேவையா?)

நடுநிலைவாதம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எதிராக விஷத்தை கக்கி பகையுனர்வை மூட்டிவரும் பத்திரிகைகளில் தற்சமயம் முதலிடம் வகித்து வருவது தினமனி ஆகும், ஃபாசிச சித்தாந்தத்தை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்து கொண்ட இப்பத்திரிகையின் ஆசிரியர் குழு இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் ஒட்டுமொத்தமாக தீவரவாதத்தூடு தொடர்பு படுத்தி செய்திகளை வெளியிடுவதில் முன்னிலை வகிக்கி்ன்றது. இவ்வகையில் கடந்த 10-08-2007 அன்று "முஸ்லிம் இந்தியன் - பெயர் மாறுகின்றது" என்ற தலைப்பில் தினமனியின் குருமூர்த்தி ஐயர் என்ற பார்ப்பன வெறியர் ஒரு துவேஷ கட்டுரையை பதிந்திருந்தார். அந்த கட்டுரைக்கு பதில் அளிக்கும் விதமாக தினமனி மற்றும் குருமூர்த்தி ஐயரின் முகத்திரையை கிழித்து தொங்க விட்டு "இஸ்லாமிய இணையப் பேரவை" என்ற அமைப்பினர் தங்கள் இணையத் தளத்தில் "அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை பதிந்திருந்தார்கள்.


RSS பென் தீவிரவாதி(தினமனி பார்வையில் சமூக சேவகியா?)

அந்த சூடு மாறுவதற்குள் 10-04-2008 அன்றைய தினமனி இதழில் "படை திரட்டும்' மனிதநீதிப் பாசறை: போலீஸார் கவலை என்ற தலைப்பில் இசக்கி என்ற ஃபாசிச தீவிரவாதி எழுதிய துவேஷ கட்டுரைய வெளியிட்டு தினமனி பத்திரிகை மீண்டும் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான தனது துவேசத்தை வெளிப்படுத்தி உள்ளது.

இவர்களெல்லாம் யார்? உளவுத்துறைக்கு தெறியாதா?

மனித நீதி பாசறை பற்றியோ அல்லது அதன் செயல்பாடு பற்றியோ சிறிதும் அறிவில்லாத இசக்கி என்ற இந்த ஃபாசிஸ்ட் 2004 ம் ஆன்டு துவக்கப்பட்ட மனித நீதிப் பாசறை அமைப்பு என்று எழுதியுள்ளார் இதிலிருந்தே இந்த ஃபாசிஸ்ட்டின் அறீவீனம் வெளிப்படுகின்றது.

//"அல்-உம்மா' அமைப்பு தடை செய்யப்பட்ட பின்பு, வேலைவாய்ப்பற்ற, விரக்தி அடைந்த இஸ்லாமிய இளைஞர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் வகையில் சில அமைப்புகள் ஆங்காங்கே உருவாகி திரைமறைவில் இயங்கி வருகின்றன. //

என்று பீதியை கிளப்பும் விதமாக கட்டுரையை துவக்கியுள்ள இந்த ஃபாசிச விஞ்ஞானி இசக்கி...

//"தீவிரவாதத்தில் உடன்பாடில்லை' என கூறும் இவர்கள், முக்கியமாக மனித உரிமை மீறல்கள், காவல்துறையின் அத்துமீறல்கள் போன்றவற்றுக்கு எதிராக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர். //

என்றும் எழுதியுள்ளார், நீயே தீவிரவாதத்தில் உடன்பாடில்லை, மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவு இந்த அமைப்பு போராடுகின்றது என்று எழுதிவிட்டாய் அப்புறம் எதுக்கய்யா இந்த " மனித நீதிப் பாசறையின் ராணுவப் பயிற்சியால்' காவல்துறையினர் கவலை அடைந்துள்ளனர் என்று எழுதுகின்றாய்?

அப்ப இவர்கள்? சமூக சேவகர்களா?


//பயிற்சி பெற்ற இவர்கள் எதிர்காலத்தில் தனிப்படையாக உருவெடுத்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பது சிறப்பு புலனாய்வுப் பிரிவினரின் கருத்து. //

மதுரை, கோவை, இராமநாதபுரம், என தமிழகத்தின் பல பகுதிகளில் பொது இடங்களில் ஆயுதப் பயிற்சி எடுக்கும் இந்துத்துவ தீவிரவாத குழுவான ஆர்.எஸ்.எஸ் சை விட மனித உரிமை மீறல்கள், காவல்துறையின் அத்துமீறல்கள் போன்றவற்றுக்கு எதிராக களமிறங்கி பணியாற்றி வரும் இந்த அமைப்பினர் மோசமானவர்கள் இல்லையே!!

இவர் யார்? தேச பக்தரா?

இந்திய சுதந்திரத்தில் இருந்து தொடங்கி, தேசப்பிதாவை கொன்ற இந்த தீவிரவாதிகள் மீரட், பாகல்பூர், குஜராத் என அப்பாவி மக்களை கொன்று குவித்து .ரத்த ஆற்றை ஓட்டிவரும் இந்த தீவிரவாதிகள் எடுக்கும் பயிற்சியோ அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களோ இந்த கட்டுரையை எழதிய இசக்கியின் கண்களுக்கோ அல்லது உளவுத் துறையின் கண்களுக்கு அதறியவில்லையா?

தேச பாதுகாப்பில்...

கருத்து மோதலில் கொல்லப்பட்ட குமார பான்டியன் என்ற ஃபாசிஸ்ட்டின் உடலை சிடிகளாக்கி, வெறியூட்டும் வாசகங்களுடன் மதக்கலவரத்தை துர்ன்டும் வகையில் பாடல்களாக்கி இசைத்தட்டுக்களாக தமிழகமெங்கும் பரப்பி மதக்கலவரத்துக்கான விஷ வித்துக்களை விதைது வரும் இந்து முன்னனி, இராம கோபாலன் வகையராக்களின் இந்த தேச விரோத செயல்கள் இசக்கியின் கண்களுக்கோ அல்லது உளவுத் துறையின் கண்களுக்கு அதறியவில்லையா?

ஆயுதப் பயிற்சியில் முஸ்லிம்கள் (இந்திய தேசிய கொடியேற்றும் MNP)

ரானுவப்பயிற்சி எடுத்துவரும் மனித நீதிப் பாசறை என்று மக்கள் மத்தியில் பதட்டத்தை ஒருவாக்குமு் வகையில் கட்டுரை எழுதியுள்ள ஃபாசிஸ்ட் இசக்கிக்கு இரானுவ பயிற்சிக்கும் "அணிவகுப்பு" பயிற்சிக்கும் வித்தியாசம் தெறியவில்லையா? இல்லை தெறிந்தும் இசுலாமியர்கள் மேல் அவதுர்றை பரப்ப வேண்டும் என்ற நோக்கில் இந்த கட்டுரை வெளியிடப்பட்டதா?

இரானுவ பயிற்சி பெற்ற முஸ்லிம் தீவிரவாதி (MNP பாலர் அணி)

தனிப்படையாக உருவெடுத்தால் நாட்டுக்கு நல்லதல்ல என்று கருதும் உளவுத்துரைக்கும், இதை எழுதிய இசக்கிக்கும் தெறியாதா யார் தனிப்படையாக உருவெடுத்து இரானுவத்தினர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களை பிரயோகித்த நாடெங்கும் ஆயிரக்கணக்கில் கொடூர கொலைகளை நிகழ்த்தி வருவது என்று?


எவ்வித ஆயுதங்களும் தரிக்காமல் தங்களது தேச பக்தியை அடையாளம் காட்டும் வகையில் அணிவகுப்பு நடத்தினால் அது தீவிரவாதமா? அப்படியானால் தடை செய்யப்பட்ட ஆயதங்களை தரித்து அரைக்கால் டவுசரில் நாடெங்கும் கொலைவெறி கூப்பாடிட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் சிவசேனா தீவிரவாதிகளை என்னவென்பது?

அடக்குமுறையே உலகில் தலைதுர்க்கும் தீவிரவாதங்களுக்கு அடிக்கல் என்பதை உளவுத்துறைக்கும், காவல்துறைக்கும், ஃபாசிச பத்திரிகை சக்திகளுக்கும் தெறிவித்து கொள்கின்றோம். எங்கெல்லாம் ஃபாசிச பத்திரிகைகளின் எழுத்துக்களுக்கு துனை பூகும் வகையில் அவர்களோடு இணைந்து அடக்குமுறை என்ற பெயரில் அரச பயங்கரவாதம் தலைதூக்குகின்றதோ அங்கெல்லாம் இன் விடுதலை என்ற பெயரில் போராட்டங்களும் வீறு கொண்டு எழும் இதை உணராதவர்கள் அல்ல இந்திய உளவுத்துறையும், காவல் துறையும்.

இந்திய இரானுவத்துக்கெதிரான யுத்தத்தில் முஸ்லிம்கள் (முகவை தமுமுக சச்சார் அறிக்கையை வலியுருத்தி அனிவகுப்பு)


மனித நீதிப் பாசறையினர் இந்த வருடம்தான் அதற்கு திட்டமிட்டுள்ளார்கள் ஆனால் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் தமிழகமெங்கும் மிடுக்கோடு பல அணிவகுப்புக்களை நடத்தியு்ளார்கள் அவர்கள் என்ன தீவிரவாதத்திலா ஈடுபடுகின்றார்கள், ஃபாசிஸ்ட் இச்க்கியின் வார்த்தையில் இரானுவ பயிற்சி எடுத்த தமுமுகவினர் என்ன இந்திய இரானுவத்திற்கெதிராகவா யுத்தம் செய்கின்றார்கள்.

பயங்கர ஆயுதங்களோடு அணிவகுத்து செல்லும் முஸ்லிம்கள் (முகவை தமுமுக சச்சார் அறிக்கையை வலியுருத்தி அனிவகுப்பு)

தமிழகமெங்கும் ஆம்புலன்ஸ்கள் மூலமும், இடர்பாடுகளின் போதும் குருமூர்த்தி, இசக்கி வகையராக்களால் தேசபக்தர்களாக ஆடையாளம் காட்டப்படும் தீவிரவாத கும்பலான ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் செய்ய இயலாத மனித நேயப் பணிகளை ஜாதி, மத விரோதங்கள் இன்றி அமையதியாக செய்து வருகின்றார்களே இதுதான் தீவிரவாதமா? இன்று தமுமுக வினர் அரசிலும் அங்கம் வகிக்கின்றார்கள் இவாக்ள் தீவிரவாதிகளா என்ன?

வயதானவர்களையும், பென்களையும், குழந்தைகளையும் கொல்லும் முஸ்லிம்கள் (மருத்துவ சேவையில் முகவை எம்.என்.பி யினர்)

அணிவகுப்பு பயிற்சியையே இரானுவப் பயிற்சி என்று எழுதும் இசக்கிக்கு ஆயதப் பயிற்சி எடுக்கும் ஃபாசிச கும்பல்களை பற்றி ஏன் எழுத இயலவில்லை? தமிழகத்தில் இந்த தேச விரோத கும்பல்களான இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தள் செய்ய இயலாத மனித நேயப் பணிகளான இரத்த தானம், ஆம்புலன்ஸ், பேரிடர் மீட்பு, ஏழைகளுக்கு கல்வி உதவி என அனைத்து துறைகளில் தமிழகத்தின் இசுலாமிய அமைப்புகளான மனித நீதிப் பாசறை, தமுமுக, ததஜ போன்ற அமைப்புகள் செய்து வருகின்றதே அதற்காக அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் பதக்கங்களையும் பாராட்டு பத்திரங்களையும் வாங்கி குவித்து வருகின்றதே இந்த நல்ல காரியங்கள் உளவுத்துறைக்கும், ஃபாசிஸ்ட் இசக்கிக்கும் தெறியாதா என்ன?

மக்களின் இரத்தத்தை ஓட்டும் இரானுவ பயிற்சி பெற்ற முஸ்லிம் பயங்கரவாதிகள் (இரத்த தானம் செய்யும் தமுமுக வினர்)

எஞ்சிய அல்உம்மாவினர் மனித நீதிப் பாசறை போன்ற அமைப்புக்களில் சோந்து விட்டதாக திரு.இசக்கி எழுதியுள்ளார் நல்ல கண்டுபிடிப்பு உளவுத்துரை இவரை பயன்படுத்தி கொள்வது நல்லது. எஞ்சிய அல் உம்மாவினரும், பிடிபட்ட அல் உம்மாவினரும் என்ன ஆனார்கள், அவர்களின் இன்றைய நிலை என்ன என்பது உளவுத்துறைக்கு நன்றாகவே தெறியும், உளவுத்துரை கூறியதாக கதைவிட்டிருக்கும் இந்த ஃபாசிஸ்ட்டையும் மக்கள் மத்தியில் கலவர வித்துக்களை விதைத்து நாட்டில் மாபெரும் மதக் கலவரத்தை உண்டாக்கும் வகையில் கட்டுரைகளை வெளியிட்டு வரும் தினமனி பத்திரிகைகையயும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ஏனென்றால் இசுலாமியர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் தற்சமயம் மிக விழிப்புணர்வுடன் உள்ளார்கள். அவதுர்று எழுதிய தினமலருக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் சமீபத்தில் நீதிமன்றம் அடித்த ஆப்பு நினைவிருக்கட்டும்.


தமிழகத்தை இடுகாடாக்க முயன்று வரும் தினமலரின் பாதையில் செல்லும் தினமனிக்கும் நாங்கள் கூறிக்கொள்வது என்னவென்றால் சகோதர வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் தமிழக மக்களை உங்கள் எழுத்துக்களின் மூலம் மத துவேஷத்தை மூட்டி தமிழகத்தை இரத்தக்காடாக்கி விடாதீர்கள். இதுபோன்ற ஃபாசிச தீவிரவாதிகளின் வெறிமூட்டும் எழுத்துக்களையும் மக்கள் அடையாளம் கண்டு கொள்வது நல்லது.

ஓரினத்தின் மீது காரன காரியம் இன்றி ஏவப்படும் அடக்குமுறையும், வகுப்பு வாத்தை தூன்டும் வகையில் ஃபாசிச பத்திரிகைளாளர்களால் வெளியிடப்படும் செய்திகளுமே பயங்கரவாதம் ஆகும்!!


ஃபாசிச பத்திரிகையாளர்களோடு இணைந்து அரசு இயந்திரங்களான உளவுத்துரை, காவல்துறை, இரானுவம் போன்றவற்றின் மூலம் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தினர் மிதும் கட்டவிழ்த்து விடப்படும் வண்முறையும், அரச பய்ஙகரவாதமுமே உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தலைவிரித்தாடும் தீவிரவாதத்திற்கு முக்கிய காரணம் என்பதை தமிழக அரசும், உளவுத்துறையும், ஃபாசிச பத்திரிகை துறையும் உணர வேண்டும் !!

ஜாதி, மத துவேசம் இன்றி நீதியை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை இசக்கி போன்ற ஃபாசிச சிந்தனை உள்ள பத்திரிகைளர்கள் சிலரின் துர்ண்டுதலால் குற்றவாளிகளை ஒப்படைத்த பின்பும் கூட ஃபாசிச சக்திகளுடன் கைகோர்த்து பழி வாங்கும் என்னத்தில் ஒரு குறிப்பிட்ட இன மக்கள் மீது மேற்க்கொண்ட வண்முறைத்தாக்குதலில் ஏற்ப்பட்ட 19 மரனங்களும் அதன் தொடர்ச்சியாக நடத்த முயன்ற இன ஒழிப்பு கலவரங்கலுமே கோவையிலும் அதன் தொடர்ச்சியாக தமிழகமெங்கும் நடந்த வண்முறை வெறியாட்டங்களுக்கும், குண்டு வெடிப்புக்களுக்கும் காரனம் என்பதை அரசும், உளவுத் துறையும் மிக அறிந்தே உள்ளன.

மீண்டும் அதுபோல் ஒரு சம்பவத்தை தமிழகத்தில் அரங்கேற்ற நினைக்கும் அதிகாரிகளின் மீதும், பத்திரிகையாளர்கள் மீதும் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இன் மக்களான் எம் இன முஸ்லிம்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை இந்த நாட்டில் நிலைநாட்டவும், எமது தேச பக்தியை வெளிப்படுத்தவும் உரியா நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி

முகவைத்தமிழன்

ஃபாசிச தினமனியின் செய்தி

"படை திரட்டும்' மனிதநீதிப் பாசறை: போலீஸார் கவலை

ப. இசக்கி

திருநெல்வேலி, ஏப். 9: தமிழகம் முழுவதும் மனிதநீதிப் பாசறை அமைப்பினர் மேற்கொண்டு வரும் "ராணுவப் பயிற்சியால்' காவல்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

பயிற்சியின் நிறைவில், சுதந்திர தின நாளான ஆகஸ்ட் 15-ல் மதுரையில் அணிவகுப்பை நடத்தவும் மனிதநீதிப் பாசறை அமைப்பினர் முடிவு செய்துள்ளதாக காவல்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பின்பு "அல்-உம்மா' தீவிரவாத அமைப்பு தடை செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பரவி இருந்த அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே வன்முறை மற்றும் வெடிகுண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பால் எஞ்சிய உறுப்பினர்கள் இதர அமைப்புகளில் கலந்து தங்கள் அடையாளத்தை மாற்றிக் கொண்டனர்.

"அல்-உம்மா' அமைப்பு தடை செய்யப்பட்ட பின்பு, வேலைவாய்ப்பற்ற, விரக்தி அடைந்த இஸ்லாமிய இளைஞர்களை திரட்டி ஒருங்கிணைக்கும் வகையில் சில அமைப்புகள் ஆங்காங்கே உருவாகி திரைமறைவில் இயங்கி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "மனிதநீதிப் பாசறை' அமைப்பினர், தங்களது வெளிப்படையான செயல்பாடுகளால் தமிழகம் முழுவதும் கிளைகளை உருவாக்கி, நிர்வாகிகளை நியமித்து செயல்பட்டு வருகின்றனர்.

"தீவிரவாதத்தில் உடன்பாடில்லை' என கூறும் இவர்கள், முக்கியமாக மனித உரிமை மீறல்கள், காவல்துறையின் அத்துமீறல்கள் போன்றவற்றுக்கு எதிராக களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.

எனினும், இவர்களது நடவடிக்கைகளை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுப் பிரிவினர், இவர்களுக்கும் தீவிரவாதத்தின் சாயல் இருப்பதாகவே கருதி அவர்களின் ஒவ்வோர் அசைவையும் கண்காணித்து வருகின்றனர்.

சுதந்திர தின அணிவகுப்பு: இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி மதுரையில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய இடங்களில் பாசறையை சேர்ந்த இளைஞர்களுக்கு "ராணுவப் பயிற்சி' அளித்து வருவதாக கிடைத்த தகவல் போலீஸôரை கவலைகொள்ளச் செய்துள்ளது.

தென் மாவட்டங்களில் இஸ்லாமிய சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் கடையநல்லூர், செங்கோட்டை, ஏர்வாடி, காயல்பட்டினம், திருவிதாங்கோடு, இடலாக்குடி ஆகிய இடங்களில் உள்ள இளைஞர்களை திரட்டி இந்த பயிற்சியை அளித்து வருவதாகக் கூறப்படுகிறது.

நாட்டுக்கு நல்லதல்ல: தமிழ்நாடு முழுவதும் சுமார் 22 ஆயிரம் பேரை உறுப்பினர்களாக கொண்டுள்ள இந்த அமைப்பில், மாவட்டத்திற்கு சுமார் 300 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெற்ற இவர்கள் எதிர்காலத்தில் தனிப்படையாக உருவெடுத்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்பது சிறப்பு புலனாய்வுப் பிரிவினரின் கருத்து.

இதுகுறித்து மனிதநீதிப் பாசறை அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகி முகம்மது முபாரக் கூறியதாவது:

""நாம் பெற்ற சுதந்திரமானது, இந்து, முஸ்லிம் என வேற்றுமை இல்லாமல் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபட்டு பெற்று தந்தது. அந்த சுதந்திர உணர்வை எல்லா மக்களிடமும் எடுத்துச் செல்லும் நோக்கத்தில் சுதந்திர தினத்தன்று எங்கள் இயக்கத்தின் சார்பில் சீருடை அணிவகுப்பை நடத்த உள்ளோம். புதுதில்லியில் ராணுவத்தினர் நடத்துவது மாதிரிதான் இதுவும். அணிவகுப்பு நடத்தப்படும் இடம் இன்னும் முடிவாகவில்லை.

அணிவகுப்பில் பங்கேற்க மாவட்டத்திற்கு சுமார் 50 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டு, மொத்தம் சுமார் 1,000 பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். திருநெல்வேலி மாவட்டத்தில் ஏர்வாடியில் உள்ள எங்களுக்குச் சொந்தமான மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. பயிற்சி குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு எழுத்து மூலம் தகவல் தெரிவித்துள்ளோம்'' என்றார் முபாரக்.