துபையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) நடத்திய இஸ்திமா நிகழ்ச்சி
துபை மண்டல இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) சோனாப்பூர் கிளையின் சார்பாக, சோனாப்பூர் பலிதியா கேம்ப் பள்ளிவாசலில் 18.4.08 வெள்ளிக்கிழமையன்று அஸர் முதல் இஷா வரை இஸ்திமா நடைபெற்றது. துபை மண்டல முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் சகோதரர்.கொடுங்கையூர். மொய்தீன் அவர்கள் தலைமையெற்க, சகோதரர். மேலப்பாளையம். மெளலானா அவர்கள் கிராஅத் ஓதினார். இஸ்திமா நிகழ்ச்சியினை சகோதரர். பரமக்குடி. எ.ஏஸ். இப்ராஹீம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். முதல் அமர்வில் சகோதரர். கொடுங்கையூர். அமீர் சுல்தான் அவர்கள் "திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" என்ற தலைப்பிலும், இரண்டாவது அமர்வில் சகோதரர் நூருல் அமீன் அவர்கள் "ஷிர்க்கை ஒழிப்போம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் துபை முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக 22.2.2008 அன்று நடைப்பெற்ற இரத்த தான முகாமில் கலந்துக்கொண்டு இரத்த கொடுத்த சகோதரர்களுக்கு, இரத்தம் தானம் செய்ததற்கான அடையாள அட்டையானது சகோதரர். சுலைமான் ஹாஜியார் அவர்களிடம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதனை சோனாப்பூர் கிளை முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாகி சகோதரர். திருச்சி. நியாஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
சகோதரர். நிஜாமுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த, இறுதியாக துஆ ஓதப்பட்டு நிகழ்ச்சியானது அல்லாஹ்வின் உதவியால் மிகச்சிறப்பாக முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் துபை மண்டல முஸ்லிம் முன்னேற்றக்கழக பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். சோனாப்பூர் பகுதியில் பல நாட்டை சார்ந்த தொழிலாளர்கள் வசிப்பதால், மொழி தெரியாவிட்டாலும் தமிழ் இஸ்லாமிய நிகழ்ச்சியினை ஆர்வமுடன் கேட்க வேண்டி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சார்ந்த தொழிலாளர்களும் கலந்துக்கொண்டனர். மற்றும் தொழிலாளார்கள் அதிகம் வசிக்கும் அல்கூஸ் போன்ற பகுதியிலிருந்தும் ஏராளமான சகோதர உள்ளங்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.
தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்
Showing posts with label இஸ்திமா. Show all posts
Showing posts with label இஸ்திமா. Show all posts
Saturday, April 19, 2008
துபையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) நடத்திய இஸ்திமா நிகழ்ச்சி
Friday, April 11, 2008
துபாயில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை ஏற்பாடு செய்யும் இஸ்திமா
துபாயில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை ஏற்பாடு செய்யும் இஸ்திமா
துபாயில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை ஏற்பாடு செய்யும் இஸ்திமா சோனாப்பூர் பலுதியா கேம்ப் பள்ளிவாசலில் 18.04.2008 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் தாயகத்தில் இருந்து வந்துள்ள JAQH ன் மௌலவி நூருல் அமீன் உமரி, எஸ்.எம்.புகாரி, அமீர் சுல்தான் உள்ளிட்டோர் உரை நிகழ்த்த உள்ளனர்.
தொடர்புக்கு - 050 - 7481187 055 - 9292424 055 - 8489410
துபாயில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை ஏற்பாடு செய்யும் இஸ்திமா சோனாப்பூர் பலுதியா கேம்ப் பள்ளிவாசலில் 18.04.2008 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் தாயகத்தில் இருந்து வந்துள்ள JAQH ன் மௌலவி நூருல் அமீன் உமரி, எஸ்.எம்.புகாரி, அமீர் சுல்தான் உள்ளிட்டோர் உரை நிகழ்த்த உள்ளனர்.
தொடர்புக்கு - 050 - 7481187 055 - 9292424 055 - 8489410
குறிச்சொற்கள்
இஸ்திமா,
இஸ்லாம்,
துபாய்,
பிரச்சாரம்
Subscribe to:
Posts (Atom)
