Monday, March 24, 2008

ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா

ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா


கடந்த 22.03.2008 அன்று நெல்லை மாவட்டம், ஏர்வாடி ஓ.கே.திருமண மண்டத்தில் ஏர்வாடி த.மு.மு.க.மகளிர் பிரிவு சார்பாக பெண்கள் இஜ்திமா சகோதரி பாத்திமா தலைமையில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தொடங்கிய நிகழச்சி இரவு 8 மணி வரை நடைபெற்றது.

இதில் வரதட்சணை, இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் போன்ற பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏர்வாடி சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதன் முடிவில் பெண்களுக்கு எதிரான சமுதாயக் கொடுமைகளை தீவிரமாக எதிர்த்து போராடுவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கான தண்டனைகளை கடுமையாக்க மத்திய அரசை கோருவது, ஏர்வாடியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையை அகற்றக் கோருவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏர்வாடி த.மு.மு.க.வினர் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி: நெல்லை உஸ்மான்.

No comments: