Thursday, March 29, 2007

நீதியைத்தேடி - ஹாமித் பக்ரி உரை (VIDEO)


கருத்தரங்கில் ஹாமித் பக்ரி அவர்கள் உரையாற்றுகையில்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கடந்த மார்ச் 11 அன்று கோவையில் நமது சமுதாயத் தலைவர்கள் அனைவரும் பங்கேற்று முஸ்லிம் சிறைவாசிகளின் உரிமைகளையும் அவர்களின் விடுதலையும் வலியுருத்திய நீதியைத் தேடி கருத்தரங்கில் "ஐக்கிய சமாதானப் பேரவை" தலைவர் மெளலவி ஹாமித் பக்ரி மன்பஈ அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ வெளியிடப் பட்டுள்ளது.

இதைக் காண்பதற்கோ அல்லது டவுன்லோட் செய்வதற்கோ இங்கு சொடுக்கவும்.

Wednesday, March 28, 2007

வக்ஃப் வாரியத் தலைவராக ஹைதர் அலி

வக்ஃப் தலைவராக பதவியேற்கும் ஜனாப்.ஹைதர் அலி



கடந்த 27.03.2007 அன்று தமுமுக வின் பொதுச் செயளாலர் ஜனாப். ஹைதர் அலி அவர்கள் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டு பதவியேற்றுள்ளார்கள்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக புதிதாக பதவியேற்றிருக்கும் ஜனாப் ஹைதர் அலி அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெறிவித்துக் கொள்வதோடு அவர் இப்பதவியின் மூலம் இச்சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளதையும் நினைவூட்டுகின்றோம்.

இதற்கு முன்னர் வந்து சென்ற ரப்பர் ஸ்டாம்ப் தலைவர்களைப்போல் அல்லாமல் இவர் பலம் பொருந்தியவராக சமுதாயக் கடமை ஆற்றக் கூடியவராக இருகக் வேண்டும்.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான நிறையச சொத்துக்கள் பலம் பொருந்தியவர்களால் பல காலமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. அவ்வகையான சொத்துக்களை மீட்டெடுப்பது இவரது தலையாயக கடமைகளில் ஒன்று.

இன்னும் சிதறிக் கிடக்கும் ஜமாத்துகளை ஒருங்கிணைப்பதன் மூலம் தமிழகத்தில் முஸ்லிம்களை பலம் பொருந்தியவர்களாக மாற்ற இயலும் அதற்கான காரியங்களிலும் இவர் தனது இந்த பதவியைப் பயன்படுத்தி முனைய வேண்டும்.

தமிழகத்தில் சில பள்ளிகள் சில கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன அவ்வகைளான பள்ளிகளையும் அதன் சொத்துக்களையும் மீட்டெடுத்து வக்ஃப் செய்ய வேண்டியது அல்லது உரியவர்களிடம் சேர்ப்பிப்பதும் இவரது கடமைகளில் அடங்கும்.

இன்னும் இவரும் இவர் சார்ந்த இயக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் கவனத்தில் கொள்ள வேண்டியது, இந்த பதவியை நீங்கள் அடைந்ததால் முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது உங்களுடைய நடவடிக்கைகளை கண்கொத்திப் பாம்பாக பலர் கவணித்துக் கொண்டுள்ளனர். இந்த பதவியில் இருந்தபடி நீங்கள் செய்யும் செயல்பாடுகளில் ஏதாவது தவறுகள் இருந்தாலோ அல்லது மார்க்கத்திற்கு புறம்பான காரியங்கள் இருந்தாலோ அவை பெறிதாக்கப்பட்டு மக்கள் மததியில் உங்கள் இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்புக்க்ள உள்ளன.

அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்புத் தராமல் தமுமுக இந்தப் பணியை முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு திறம்பட செய்தது என்ற வகையில் இவரது பணிகள் இருக்க வேண்டும் இவரது பணிகளை தமுமுக வும் தனது இயக்கத்திற்கு எந்த பங்கமும் வராத வகையில் கண்கானித்து வரவேண்டும்.

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

Tuesday, March 27, 2007

முகவையில் தமுமுக தர்பியா முகாம்

முகவை தமுமுக தர்பியாவில் கலந்து கொண்டவர்கள்


முகவை மத்திய மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக கழகத்தின் சார்பாக கடந்த 25.03.2007 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகவை சின்னக்கடையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட ஒன்றி கிளை நிர்வாகிகளுக்கு ''தர்பியா'' எனும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு மௌலவி அப்துல் காதிர் நூரி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைக்க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் துனைச் செயளாலர் கோவை சாதிக் மற்றும் மாநிலப் பேச்சாளர் கோவை செய்யது ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் இம்முகாமில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு நல்லொழுக்க பயிற்சி வகுப்புக்களை நடத்தினர்.

மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட சுமார் 150 சகோதரர்கள் இந்நிகழ்வில் நலந்து கொண்டு பயன் பெற்றனர். இம்முகாமில் கலந்து கொண்டு பெரும்பாலான சகோதரர்கள் மாவட்டும் முழுவதுமுமாக இம்மாதிரி முகாம்களை அடிக்கடி நடத்திட வேண்டும் என்று கருத்து தெறிவித்தனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தமுமுக முகவை மத்திய மாவட்ட தலைவர் சகோ. சலிமுல்லா கான் அவர்கள் திறம்பட செய்திருந்தனர்.

Saturday, March 24, 2007

தனது பெயரில் வெளியான மடல - பாக்கர் மறுப்பு!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் பொதுச்செயளாலராக இருந்த எஸ்.எம். பாக்கர் என்பவர் ததஜ வால் நடத்தப்படும் மாற்று மதத்தில் இருந்த இஸ்லாத்திற்கு வந்தோருக்காக நடத்தப்படும் மதராஸாவில் பயின்ற மாணவி ஒருவருடன் நெருக்கமாக ஒரே சீட்டில் ஒருவர் மார்பில் ஒருவர் சாய்ந்து பயணிக்க கூடிய முகாந்திரங்களுடன் பயணம் செய்ததாக ததஜ வின் தலைவர் பி.ஜே யால் குற்றம் சாட்டப்பட்டு ததஜ வின் பொதுச் செயளாலர் பொருப்பிலிருந்து பாக்கர் நீக்கப்பட்டார். இது குறித்து பி.ஜே அவர்கள் பாக்கரை பற்றிய குற்றச் சாட்டக்களுடன் இணையத்தில் ஆடியோ ஃபைல் ஒன்றையும் உலவ விட்டார்கள்.

இந்நிலையில் நேற்றைய முன்தினம் வியாழக் கிழமை (22.03.2007) இணையத்தில் மின்னஞ்சல் மூலமாக "அநியாயத்துக்கு அளவேயில்லையா பி.ஜே?" என்ற தலைப்பில் தனது பக்க நியாயங்களை எடுத்துறைத்து பாக்கர் எழுதியதாக ஒரு மடல் நமக்கும் கிடைக்கப் பெற்றது அதை மக்களின் பார்வைக்காக உடனடியாக நாமும் இங்கு பதிவு செய்தோம்.

நாம் பதிவு செய்த சில மனித்துளிகளிலேயே ததஜ வில் இருந்து பி.ஜேயால் மிக அசிங்கமாக முஸ்லிமாக மாறி மதரஸாவில் பயின்ற மாணவியோடு இணைத்து காம குற்றச் சாட்டு சாட்டப்பட்டு பொருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட எஸ்.எம் பாக்கர் அவரது பெயரில் பி.ஜே யை தாக்கி வெளியான அந்த மடல் தான் எழுதியதில்லை என்றும் அவரும் பி.ஜேயும் இப்போதும் நட்புடன் தான் உள்ளதாகவும் கூறி ஒரு மறுப்பு ஆடியோ ஃபைலை ததஜ வின் அதிகாரப் பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். வாசகர்களின் பார்வைக்காக அதையும் நாம் இங்கு தருகின்றோம். பாக்கரின் அந்த மறுப்பை கேட்பதற்க கீழே சொடுக்கவும்.

Thursday, March 22, 2007

அநியாயத்துக்கு அளவில்லையா PJ? S.M பாக்கரின் மடல்..

குறிப்பு : இந்த மடல் நமக்கு இறைவனின் அடிமை (iraivan_adimai@yahoo.com) என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து நமக்கு கிடைக்கப்பெற்றது. அதை அப்படியே இங்கு மக்களின் பார்வைக்கு தருகின்றோம்.


திருவாளர் பி.ஜே தனது கூட்டாளி பாக்கரை பற்றி தனது திருவாயால் கூறிய குற்றச்சாட்டுக்களை கேட்கவோ அல்லது டவுன்லோட் செய்யவோ இங்கு சொடுக்கவும். (பாக்கரை பற்றி மட்டும் கூறும் குற்றங்கள்)

இறைவனின் திருப்பெயரால்...

அநியாயத்துக்கு அளவில்லையா? பீ.ஜே


உங்களுடைய விசயத்தில் உங்களின் நன்மையை மட்டும் நினைத்தே செயல்பட்டனே! அதற்கு நீங்கள் எனக்கு தரும் பரிசு ஒழுக்கக்கேடன் பட்டமா?

உங்களின் பொருளாதாரத்தை உயர்த்துவது பற்றியே சிந்தித்தேனே! அதற்கு பரிசு பொருக்கி பட்டமா?

உங்களை உத்தமர் என்று ஊரெல்லாம் சென்று பிரச்சாரம் செய்தேனே! அதற்கு நான் அயோக்கியத்தனம் செய்ததாக ஊரெல்லாம் நீங்கள் தரும் பட்டமா?

உங்கள் குடும்ப மேன்மையே என் இலட்சியம் என்று இருந்தேனே! அதற்கு தான் நான் குடும்பஸ்த்தன் இல்லை என்று தாங்ள் தரும் பட்டமா?

நீங்கள் மக்கள் ஆதரவற்று இடிவழுந்தவனைப் போல் இருந்தபோது உங்களுக்கு உற்ற துணையாக இருந்த எனக்கு நீங்கள் தருவது இடி ராஜா பட்டமா?

உங்கள் கை அசைவுக்கும், கண் அசைவுக்கும் களம் கண்ட என்னை களங்கமானவன் என்பது நீங்கள் எனக்கு தரும் பட்டமா?

உங்களின் பொன்னான முகம் வாடக்கூடாது என்றிருக்கும் எனக்கு பெண் மோகம் கொண்டவன் என்று நீங்கள் தரும் பட்டமா?

உங்களின் சிந்தனைகள் சிற்றூhருக்கும் சென்றிட வேண்டும் என்று எண்ணிய எனக்கு சிலுமிஷகாரன் என்று நீங்கள் தரும் பட்டமா?

குழப்பவாதி என்று சமுதாயம் உங்களை தூற்றிய போது, சமுதாயத்தின் அண்ணன் என்று உங்களை வலம் வரச் செய்த எனக்கு குறும்புத்திக்காரன் என்று தாங்கள் தரும் பட்டமா?

உலவி என்று ஊர் அறியா பட்டம் பெற்றிருந்த உங்களை பேரறிஞர் என்று புகழ் சூட்டி மகிழ்ந்த எனக்கு, செல்லாக் காசாகிவிடுவாய் என்று தாங்கள் தரும் எச்சரிக்கை பட்டமா?

உங்களின் அநியாயச் செயலுக்கு உங்கள் மீதுள்ள பாசத்தால் நான் நிறையவே துணை போய்ட்டேன், உங்களால் நானும் அநியாயம் இழைக்கப்பட்டுவிட்டேன். அநியாயத்துக்கு அளவில்லையா? அண்ணனே, உங்களால் அநீதிக்கு ஆளனது நானே கடைசியாக இருக்க வேண்டும். நீங்கள் சுவனம் செல்ல வேண்டும்.


இவண்

எஸ்.எம்.பாக்கர்
முன்னாள் பொதுச் செயலாளர்
த.த.ஜ
0091 94443 60006



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்

நியாயம் கேட்க தயங்கும் த.த.ஜ.வின் உண்மை தவ்ஹித்வாதிகள்



பிஜேயின் நினைவாற்றலும் மாhக்க அறிவும் உலகத்தின் பல பகுதிக்கு சென்றடையவும், தமிழகத்தில் பரவலாக குக்கிராமங்கள் வரை சென்றடைய பாக்கரின் உடல் உழைப்பும், பணமும், பிரச்சார யுக்தியும், துணிச்சலான நடவடிக்கையும், தொண்டர்களை அரவணைத்து செல்லும் மனப்போக்கும் இறைவனின் உதவியால் காரணம் என்பதை பிஜே விட பாக்கரை அறிந்த தவ்ஹித்வாதிகள் நன்கு அறிவார்கள்.

தன்னைவிட ததஜாவில் முக்கியத்துவம் யார் பெறுவதையும் பிஜே விரும்ப மாட்டார் என்பது ஊர் அறிந்த பரம ரகசியம், கீழக்கரையின் சிங்கமான பாக்கரை அசிங்கபடுத்தி மகிழ்ந்துள்ளார்.

பேச்சுக்களை ஆடியோ, வீடியோ, சிடி என தொகுத்து மீடியாத்துறையில் குடும்பத்துக்கு வேலை கொடுத்து ஊதியம் கொடுத்து வந்த பாக்கரின் மீடியா வேல்ட் மீது மோகம் கொண்ட பிஜே மூன்(கமர்)என்ற பெயரில் மீயாத்துறை தொடங்கி ஊதியம் தந்த பாக்கரின் மீடிய வேல்டை ஒளி மங்கச் செய்தார்.

செல்வப் பின்னனியும் தொழில் துணிச்சலும் உள்ள பாக்கர் டிராவல்ஸ் தொழில் தொடங்கினார், இதில் பிஜேயின் எந்த தொடர்பும் இல்லாமல் பார்த்துக் கொண்டார், பிஜே சும்மா இருப்பாரா? பாக்கரை அசிங்ப்படுத்த தொடங்கி விட்டார்.

குர்ஆன்க்குள் காதல் கடிதம் கொடுத்தவர்,ஆணுக்கு ஆண் என்ற அமெரிக்க அனுமதியை பின்பற்றுபவர்கள், அடுத்தவர் மனைவியை கவர்ந்து கணவன் அப்பெண்ணை மன்னித்து இருவரும் இணைந்த பின்பும் மீண்டும் தொந்தரவு செய்து அப்பெண்ணைக் கொண்டு கணவனை குலா கொடுக்கச் சொல்லி பின்பு திருமணம் செய்து இன்று அப் பெண்ணை நடுரோட்டில் தவிக்கவிட்டுள்வர், மாணவிக்கு கொடுக்க கூடாததை கொடுத்தவர், பாலியல் மற்றும் கற்ப்பழிப்பு குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு சிறை சென்று திரும்பியவர், தான் செய்யும் தொழிலுக்கு எல்லாம் மார்க்க அடிப்படையில் பிஜேயின் பித்தலாட்ட தீர்ப்பு கேட்டு மகிழும் யப்பாக்களும், தம்பிகளும் எப்படி பாக்கரிடம் விசாரிக்க முடியும் என்று ஆரம்ப கால தவ்ஹித் வாதிகள் எழுப்பும் கேள்வியில் நியாயம் உள்ளதுதானே?

ஓரு வேளை பாக்கரின் பஸ் பயனத்தில் தவறு செய்யும் முகந்திரம் தெரிந்தால் அதை மறைத்து அவரின் மரியாதையை காப்பாற்றி அவரை எச்சரித்து நல்வழி காட்ட வேண்டியது பிஜேயின் கடமையில்லையா? பத்திரிக்கையில் செய்தி போட்டு, இன்டர்நெட்டில் செய்தி போட்டு அசிங்கப்படுத்துவது தான் பிஜே கற்றுத் தரும் இஸ்லாமா?


பெண்ணுக்கு பாதுகாப்பு அளித்த பாக்கரை கேவளப்படுத்தும் பிஜே அவர்கள், இதுபோன்று குற்றச்சாட்டுகள் வந்து அவரால் ஒதுக்கி வைக்கப்பட்டு தேவையான நேரத்தில் பயன்படுத்தி வருபவர்களைப் பற்றியும் பத்திரிக்கையில் போட முன்வர வேண்டும். பிஜே தவறுகளுக்கு உடந்தையாக செல்பவர்கள் அல்லாஹ்க்கு அஞ்ச வேண்டும்.

Wednesday, March 21, 2007

விரைவில்...

காவல்துறையின் அராஜகம்...


காக்கிகள் மற்றும் காவி உடை பயங்கரவாதிகளால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட முஸ்லிம் பென்கள்..

காக்கிகளோடு காவிகள் இணைந்து அரங்கேற்றிய பயங்கரவாதம்...

விரைவில் எதிர் பாருங்கள்...

தமிழ் முஸ்லிம் மீடியா

தமிழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் அவர்களுக்கெதிராக நடத்தப்படும் அடக்குமுறைகளையும் எதிரொலிக்கும் ஊடகமாக இன்சா அல்லாஹ்...

காரைக்குடி,இஸ்லாம், முஸ்லிம்

Monday, March 19, 2007

வஞ்சிக்கப்பட்டோர் வீறு கொண்டு எழட்டும் (IDMK AUDIO)


இந்திய தேசிய மக்கள் கட்சியினரால் வெளியிடப்பட்ட அவர்களின் கொள்கை விளக்க உரையின் முதல் வெளியீடு.

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) சேர்ந்த ஜனாப். குத்புதீன் பெக் அவர்கள் வஞ்சிக்கப்பட்டோர் வீறு கொண்டு எழட்டும் என்ற தலைப்பில் ஆற்றிய உரையினை கேட்பதற்கு இங்கு சொடுக்கவும்.

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

Sunday, March 18, 2007

செய்திகள் - நீதியைத்தேடி கருத்தரங்கம்

கோவை குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல்: முன்னாள் நீதிபதி

கோவை மார்ச்-11 "நீதியைத் தேடி" கருத்தரங்கின் புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கு சொடக்கவும் :

புகைப்படத் தொகுப்பு - 1

புகைப்படத் தொகுப்பு - 2



முகப்பில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு

கோவை, மார்ச் 12: இந்திய தண்டனைச் சட்டத்தில் விசாரிக்கப்படும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களுக்கு 9 ஆண்டுகளாக ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.சுரேஷ் தெரிவித்தார்.

சிறுபான்மை உதவி அறக்கட்டளை சார்பில், 9 ஆண்டுகளாக தமிழக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரும் நீதியைத் தேடி கருத்தரங்கம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கூடிய கூட்டத்தின் ஒரு பகுதி


கருத்தரங்கில் அவர் பேசியது:

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.

ஆனால், மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தீவிரவாதச் சட்டத்தில் கைதானவரர்களுக்கு விசாரணையின்போதே ஜாமீன் வழங்கப்பட்டது.

கோவை தொடர் குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல்.

அரங்கினுல் கூடிய பென்கள் கூட்டம்



மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தவணை முறையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு முழுமையாக இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்ய என்ன செய்வது எனத் தெரியாமல் உள்ளனர் என்றார்.

மக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலர் கே.ஜி.கண்ணபிரான்: சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். சட்டத்தை பாரபட்சமாகச் செயல்படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார்.




கேரள மாநில மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் எஸ்.பலராமன்: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி நிறுவனர் அப்துல் நாசர் மதானி கேரளம் வருவதற்கு தமிழக அரசு 2003-ல் விதித்த தடையை நீக்க வேண்டும்.

அவரது உடல் நிலையை கருதி அவருக்கு சிகிச்சை அளிக்க ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.

அவர் மீதுள்ள பிற வழக்குகளை விரைந்து முடிக்க கேரள நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும்.




ஆனால், அவரை கோவையிலிருந்து கேரளம் அழைத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.

சிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் ப.பா.மோகன் வரவேற்றார். முஸ்லிம் சிறைவாசியின் குடும்ப நிலையைச் சித்தரிக்கும் குறுந்தகட்டை தமிழக, புதுவை கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.திருமலைராஜன் வெளியிட்டார்.

தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, பியுசிஎல் மாவட்டச் செயலர் முகமது அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளுக்குக் கூட தண்டனைக் குறைப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால், முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் கூட வழங்குவதில்லை. எனவே, 9 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

நோய்வாய்ப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ராஜேந்திர சச்சார் கமிட்டி பரிந்துகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்திகள் : நன்றி தினமனி

காரைக்குடி, இஸ்லாம் , முஸ்லிம்

Saturday, March 17, 2007

முஸ்லிம்கள் சமூகப் பொருளாதார அரசியல் பின்னடைவிற்கு காரணம் (Frontline Report)

முஸ்லிம்கள் சமூகப் பொருளாதார அரசியல் பின்னடைவிற்கு காரணம் அதன் தலைவர்களே!
அதிர்ச்சியூட்டும் FRONTLINE ரிப்போர்ட்


60 ஆண்டு சுதந்திர இந்தியாவில் எல்லா சமூகங்களின் சமூகப் பொருளாதார வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்கு அரசு பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது.

நல வாரியத்திட்டம், ஐந்து ஆண்டு திட்டம், தொகுதி மேம்பாட்டுத் திட்டம், தொகுதி மறு சீரமைப்புத் திட்டம், அரசு ஆய்வு கமிஷன் பரிந்துரையின் பேரில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபாண்மை சமூகங்களுக்கு வழங்கியும், வளர்ந்து வரும் சமூகப் பொருளாதார சூழலுக்கு ஏற்ப மற்ற சமூகங்களைவிட முஸ்லிம் சமுதாயம் ஏன் மிக மிக பின் தங்கி உள்ளது? அதற்குக் காரணம் தகுதியற்ற முஸ்லிம் தலைவர்களே என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை குசழவெடiநெ ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

அரசியல் பலத்தைத் தீர்மானிக்கும் மிகப் பெரிய சக்திகள் முஸ்லிம்கள். தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் 50 – 60 சதவீதம் முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் தொகுதிகள் திட்டமிட்டு தனித் தொகுதிகளாக மாற்றப்பட்டு சட்டமியற்றும் சபைகளில் முஸ்லிம்கள் குரல் ஒலிக்க மறைமுகமாகத் தடுக்கப்பட்டுள்ளது.


அற்ப பதவிக்கு பார்வைக் குருவிகளாக முஸ்லிம் தலைவர்கள் நியமிக்கப்படுதல்.

தேர்தல் நேரங்களில் முடிவான முடிவு எடுக்க இயலாத தலைமை.

முஸ்லிம் வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்த விடாமல் முஸ்லிம் தலைவர்களைக் கொண்டே பிளவு செய்தல்.

முஸ்லிம் தலைவர்களின் பலகீனங்களை பயன்படுத்தி உளவு மூலம் அவர்களுக்குள் மோத விடுதல்.

அற்ப விஷயங்களின் பக்கம் கவனத்தை செலுத்த விடுதல், தேர்தல் ஆதரவு, புறக்கணிப்பு, அந்தர் பல்டி என குழப்பத்தை ஏற்படுத்தல்,


இவை முஸ்லிம் சமூகப் பின்னடைவிற்கு முஸ்லிம் தலைவர்களால் செய்யப்பட்ட சாதனைகள், சமூகத் தலைவர்கள் தடம் மாறி, இடம் மாறி, இலக்கு மாறி, லட்சியங்களை விட்டு விட்டு லட்சத்திற்கு வில் வளைவது போல் வளைந்ததால் ஏற்பட்ட சோதனைகள், வீழ்ந்தவர்கள் மீண்டும் எழுந்தார்கள் என்ற வரலாற்றை நாமே பார்க்கிறோம். நிதர்சனமாக இன்று வீழ்வதையே வெற்றி என்று பாடும் இயங்கா இயக்கத் தலைவர்களை என்னவென்று சொல்ல???

ஆம், மாண்டு விட்ட இதயங்களால் மாற்றங்களைக் கொண்டு வரமுடியாது. கோழிகளுக்கு கோதுமையைத் தூவினால் சண்டை வந்து விடுகிறது, தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்தால் முஸ்லிம் தலைவர்களுக்குள் சண்டை வந்து விடுகிறது. கோழிகளுக்கும், முஸ்லிம் தலைவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விட்டன.

இளைஞனே! எத்தனைத் தேர்தல்கள், எத்தனை வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள், தலைவர்கள் கோட்டை விட்டதை உன் சிந்தனையில் நிறுத்திப் பார். உண்மை புரியும். உழுவதற்கு முன் நிலத்தின் தன்மையை அறிந்து இருக்க வேண்டும். விதைக்கும் முன் விதையின் வீரியத்ததைத் தெரிந்து இருக்க வேண்டும். வேகம் இருந்த அளவு விவேகம் இல்லாததால் ததியற்ற தலைமைத்தனம், முஸ்லிம் சமூகத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்து விட்டது என்று குசழவெடiநெ பத்திரிக்கை சுட்டிக் காட்ட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது உனக்கு.

வீழ்ச்சியில் இருந்து வெற்றி பெற்றிட, வாருங்கள் தலைவர்களை உருவாக்குவதை விட, மக்களை உருவாக்குவோம், சிந்தனைகளை கூர்மைப்படுத்துவோம், ஓய்வற்ற அறப்போராட்டம், உறக்கமற்ற விழிப்புணர்வு, கடின உழைப்பு தேவை.




இவண்,
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK ), தமிழ்நாடு
No. 39/21, Maraikayar Street,
Mannady, Chennai – 600 001
Tel : 98407-30652
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

Tuesday, March 13, 2007

தமுமுக டெல்லி பேரணி புகைப்படங்கள் (DELHI RALLY GALLERY)




இட ஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுருத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் டெல்லியல் நடத்திய பேரணி மற்றும் மாநாட்டில் அகில இந்திய அளவில் பல அமைப்புக்களும் தங்கள் தொண்டர்களை தமுமுக வின் டெல்லி பேரணிக்கு அனுப்பி தங்கள் ஆதரவைத் தெறிவித்திருந்தன.

இப்பேரணியில் கேரளம், கர்நாடகம், மும்பை உள்பட அகில இந்திய அளவில் பல்வேறு அமைப்புக்களும் முஸ்லிம் மானவர் அமைப்புக்களும் கலந்து கொண்டு முஸ்லிம்களின் உரிமைக்காக தமுமுக நடத்தும் இப்பேரணியின் அவசியத்தை உணர்ந்து இப்பேரணியை வெற்றி பெறச் செய்தார்கள். நிகழச்சியின் இறுதியில் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தலைமையில் தலைவர்கள் அடங்கிய குழு பாரதப் பிரதமர் டாக்டர்.மன்மோகன் சிங் அவர்களை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை கையளித்தது.

முஸ்லிம்களின் பொது நலனில் சிறிதும் அக்கறை இல்லாத குடந்தை மாநாடு புகழ் ஏமாற்று பேர்வழிகளான தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவர் கிரிமினல் பி.ஜெயினுல்லாபுதினும் அதன் ஏனைய தலைவர்களும் இப்பேரணியை நடக்க விடாமல் தடுக்கவும் இதற்கு ஏனைய மாநிலங்களில் இருந்து முஸ்லிம்கள் கலந்து கொள்ளாமல் இருக்கவும் தங்களாளான பல்வேறு முயற்சிகளையும் செய்தனர். தமுமுக பேரணியில் கலந்து கொள்ள வேண்டாமெனவும் அந்த இயக்கம் தவறானது எனவும் பல்வேறு மாநிலங்களில் உள்ள முஸ்லிம் அமைப்பு்ககளுக்கும், சங்கங்களுக்கும் கடிதம் எழுதினர் ஆனாலும் வல்ல அல்லாஹ்வின் பெருங்கருனையாளல் இவர்களின் சதி முறியடிக்கப்பட்டு, இவர்களின் சுய முகங்களை அடையாளங்கண்டு கொண்ட முஸ்லிம்கள் பெருந்திரளாக வந்திருந்து இப்பேரணியை வெற்றி பெறச் செய்திருந்தனர்.

தமுமுக டெல்லியல் முஸ்லிம்களின் உரிமைக்காக முழங்கிய முழக்கம் உலகெங்கும் எதிரொழித்ததை பல்வேறு பட்ட உலக ஊடகங்களின் வாயிலாக அறிய முடிந்தது. ஈரான், இத்தாலி, பாகிஸ்தான்,சவுதி அரேபியா என பல்வேறு பட்ட வெளிநாட்டு ஊடகங்களும் இதைப்பற்றி மிகப்பெரிய அளவில் செய்திகள் வெளியிட்டிருந்ததன் மூலம் தமுமுக வின் இந்த பேரணி ஏற்படுத்தியிருந்த தாக்கத்தினை அறிய இயன்றது.

இன்சா அல்லாஹ் தமுமுக இத்து்ன் விட்டுவிடாது இன்னும் பல போராட்டங்களை நடத்தி நமது உரிமைகளை மீட்டெடுக்கும் என்று நம்புவோமாக.

இந்தியாவெங்கும் இருந்து பல்வேறு அமைப்ப்கக்ள் கலந்து கொண்டு வெற்றி பெறச்செய்த தமுமுக வின் டெல்லி பேரணி பற்றிய புகைப்படங்களை காண இங்கு சொடுக்கவும்.


CLICK HERE TO VIEW THE GALLERY

காரைக்குடி, இஸ்லாம்

ISLAM-MADURAI நிர்வாகிகள் தேர்வு


மதுரை மாநகரில் வசிக்கும் இஸ்லாமிய பெருமக்களின் கல்வி, மருத்துவம் மற்றும் மார்க்க கல்வி போன்றவைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியும் அம்மக்களை மற்ற சமூகத்தினரைப் போல் கல்வி பொருளாதார முன:னேற்றங்களை ஏற்படுத்த வேண்டுமு் என்ற நோக்கிலும் துவங்கப்பட்ட இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM) ன் உறுப்பினர்கள் அணைவரும் கடந்த வெள்ளியன்று (09-03-2007) ஒன்று கூடி ஒரு மனதாக கீழக்கண்ட நிர்வாகிகளை இதன் பொருப்புதாரர்களாக தேர்ந்தெடுத்தனர். இவ்வமைப்பிற்கான பைலாவும் உருவாக்கப்பட்டது. இதன் நிர்வாகிகள் 6 மாதங்கள் வரையில் பதவியில் இருப்பார்கள் என்றும் பின்னர் சுழற்சி முறையில் நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தேர்வு செய்யப்பட்ட இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM) நிர்வாகிகள் :

தலைவர் - சகோ. S. முகம்மது ரஃபி (+966502650465)

துனைத் தலைவர் - சகோ. சையத் கஃபூர் (+966502743448)

செயலாளர் - சகோ. முகம்மது மஹ்பூப் சுபுஹான் - (+966561516778)

துனை செயலாளர் - சகோ. S. அப்துல் ரஷீத் (+96635826986)

பொருளாலர் - சகோ. S.A.K. இப்றாஹிம் - (+966502144820)

மக்கள் தொடர்பு : சகோ. I.அப்துல் ரஷீத் ( +96638121836 Ext. 324)

மதுரையைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரர்க்ள இவ்வமைப்பை தங்கள் பகுதிகளில் துவக்க விரும்பினாலோ அல்லது இவ்வமைப்பிற்கு ஆலோசனைகள் வழங்க விரும்பினாலோ அல்லது இவ்வமைப்பில் தங்களை உறுப்பினர்களாக பதிந்து கொள்ள விரும்பினாலோ மேலே குறிப்பிட்டுள்ள நிர்வாகிகளில் யாரையாவது கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி என்களில் தொடர்பு கொள்ளவும் என்று இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM) ன் செய்திக் குறிப்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் : இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM) தொலை நகல் வழியாக

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

Monday, March 12, 2007

வரதட்சினை கேட்பவர்கள் மத துரோகிகள் - முகவை ஹசன் அலி MLA

வரதட்சணை கேட்பவர்கள் துரோகிகள் ஹசன் அலி எம்.எல்.ஏ., ஆவேசம்




கீழக்கரை: வரதட்சணை கேட்பவர்கள் துரோகிகள் என்று ஹசன் அலி எம்.எல்.ஏ., ஆவேசமாக பேசினார்.

கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. ஹசன் அலி எம்.எல்.ஏ., தலைமை வகித் தார். கல்லூரி முதல்வர் சுமையா வரவேற்றார். திருச்சி சேவாதள் தலைவர் கமலா பண்டாரி, கல்லூரி தாளாளர் ரகுமத்துன்னிஸ்ஸா, சென்னை சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் காலித் புகாரி, பெண்கள் கல்வி நிறுவனங் களின் இயக்குனர் ஷெரிபா அஜீஸ் ஆகியோர் பேசினர்.

ஹசன் அலி எம்.எல்.ஏ., பேசுகையில், "வரதட்சணை கேட்ப வர்கள் மத துரோகிகள். இவர் களை கல்லால் அடிக்க வேண்டும். வரதட்சணை கேட் பவர்களுக்கு எமது வளைகுடா நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கொடுப்பது நிறுத்தப் பட்டுள்ளது' என்றார்.

நன்றி : தினமலர்

இஸ்லாம் , காரைக்குடி

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (PART-2)

"கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது" என்ற மலர்மன்னனின் அபத்தக் கட்டுரையில் முஸ்லிம்களின் வழிபாடுகளைக் குறித்த துவேசங்களுக்கான பதில் வினையை முதல் பகுதியில் விரிவாகப் பார்த்தோம். அதில் தஞ்சை முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு வேண்டுமென்றே துவேஷக் கருத்துகள் இந்துத்துவ வாதிகளால் விதைக்கப்படுகின்றன எனக் கண்டோம். அடுத்து, தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான காழ்ப்புக் கருத்துக்களைக் காண்போம். முதலில் அவர் வடிக்கும் முதலைக்கண்ணீர்.


காவியச் சுவை மிக்க கம்ப ராமாயணத்தை இயற்றிய கவிஞர் கம்பரின் சொந்த ஊர்தான் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேரெழுந்தூர். அங்கு கம்பர் வாழ்ந்திருந்ததாக நம்பப்படும் கம்பர் மேடு இன்று வெறும் குப்பை மேடாகக் கிடக்கிறது. அங்கு கம்பர் நினைவாகக் கட்டப்பட்ட மண்டபம் படுத்துத் தூங்குவோர் பயன்படுத்தும் இடமாக மாறிப் போனது. திருமங்கை ஆழ்வார்
தனது சுவைமிக்கதமிழ்ப் பாசுரங்களால் மங்களா சாசனம் செய்த வைணவத் திருக்கோயில்களையும் பெற்றிருக்கும் பெருமை உள்ளதுதான் தேரெழுந்தூர். இவையாவும் இன்று சோபையிழந்து மங்கிக் கிடக்கின்றன.


அதே சமயம், அந்தச் சிற்றூரில் பிரமாண்டமாகப் பல மசூதிகள் வானளாவ எழும்பிநிற்கக் காண்கிறோம். கம்பர் நினைவு மண்டபத்தின் அருகிலேயே புதுக் கருக்கு அழியாத
பள்ளிவாசலைக் காணலாம்! அரபு மொழி கற்பிக்கும் மதரசா ஒன்றும் தேரெழுந்தூரில் ஆலயங்களுக்கு அருகிலேயே நிறுவப்பட்டுள்ளது என்கிறார்கள். தஞ்சை மாவட்டம் தனது பாரம்பரியமான பண்பாட்டை இழந்து வருகிறது என்பதற்கு இதுபோல் பல ஆதாரங்களைக் காட்ட முடியும்


கம்பரின் நினைவிடம் சிலருக்குத் தூங்கும் இடமாக ஆனதற்கு மட்டும் கவலைப்பட்டிருந்தால் ஓரளவு நியாயமிருக்கும். ஆனால், பள்ளிவாசல் கட்டப்பட்டதற்கும் சேர்த்து பிதற்றி இருப்பது, அவருக்கு கம்பரின் நினைவிடத்தின் மீதான அக்கரையை விட முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதான காழ்ப்புணர்வே மிகுந்துள்ளதை வெளிப்படுத்துகிறது.

பாப்ரி மஸ்ஜிதை வன்முறையாக இடித்துத் தரைமட்டமாக்கி ராமருக்கு கோவில் கட்டிக் கொண்டது போன்று, முஸ்லிம்கள் ஒன்றும் கம்பர் நினைவிடத்தை இடித்து பள்ளிவாசல் கட்டிக் கொள்ள வில்லையே! கம்பர் 'பிறந்ததாக நம்பப்படும்' ஊரிலுள்ள கட்டிடத்தை ஏற்றுக் கொண்ட மலர்மன்னனால், அவ்வூரிலேயே பிறந்து வளர்ந்து இன்றும் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள், அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு வழிபாட்டுக் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டால் ஏன் உறுத்துகிறது? தேரெழுந்தூரில் பிறந்த கம்பருக்குத் தேரெழுந்தூரிலேயே கட்டிடம் இருக்கும் போது, தேரெழுந்தூர் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் சென்றா பள்ளிவாசல் கட்டிக் கொள்வார்கள்?

தஞ்சை மாவட்டம் தனது பாரம்பரிய பண்பாட்டை இழந்து வருவதாக ஊளையிடும் மலர் மன்னன், தஞ்சையில் சோபையிழந்து புதர்க்காடுகளாகியுள்ள சைவக் கோவில்கள் பற்றிக் கவலைப்படாதது ஏன்? தஞ்சை பெரிய கோவிலில் காலடியெடுத்து வைக்கும் ஆட்சியாளர்களின் பதவிக்கும் உயிருக்கும் ஆபத்து வரும் என்ற ஐதீகம் ஆயிரம் ஆண்டுகளாக நிலவுகிறதே, அது பற்றியும் கவலைப் பட்டிருக்கலாமே? கலியுகக் கோவில் காவலர்களாக அவதாரமெடுத்துள்ள அத்வானியையோ, வாஜ்பாயையோ ஒரேயொரு முறையேனும் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு அழைத்து முதல் மரியாதை செய்து அனுப்பி இருக்கலாமே?

சோழ மன்னர்களின் வாரிசுகளுக்குப் பூரணகும்ப முதல்மரியாதை செய்யப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவில், இன்று தீட்சிதர்களின் ஆதிக்கத்தால் தமிழில் ஆராதனை மறுக்கப்பட்டுள்ளதே! அது பற்றியும் கொஞ்சமாவது கவலைப் பட்டிருக்கலாமே?

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்திருக்க வேண்டிய சங்கரமடத்தை, காஞ்சிக்குக் கடத்திச் சென்றார்களே! தஞ்சை மாவட்டத்தில் பிறந்த சங்கராச்சாரியார் சுப்ரமணியன் அவர்களிடம் எடுத்துச் சொல்லி, சங்கரமடம் மீண்டும் கும்பகோணத்திற்கே திரும்ப வரச் செய்யவும் கொஞ்சம் கவலைப் பட்டிருக்கலாமே? தொடரும் பித்தலாட்டம் நிறைந்த அவரது நீலிக்கண்ணீரைப் பாருங்கள்..

மக்கா, மதீனாவிலேயே சிறு தெய்வ வழிபாடு வழக்கத்தில் இருந்து வந்தது. முகமதியம் தனது செல்வாக்கு பெருகும்வரை பொறுமையாக அதனைச் சகித்துக் கொண்டிருந்து விட்டு, தனது
ஆதிக்கம் ஸ்திரப்பட்டவுடன் சிறிதும் தயை தாட்சண்யம் இன்றி அரேபியரின் பாரம்பரிய தெய்வ நம்பிக்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் அழித்து ஒழித்தது..

பாகன்களுக்கும் முந்தைய இஸ்லாமியப் பாரம்பரிய பண்பாடு, மக்கா-மதினாவில் இடைப்பட்ட காலகட்டத்தில் தோன்றிய பாகன்களால் அழிக்கப்பட்டதைக் கண்டு கொள்ளாமல் போனதற்கு, அவருக்கு இஸ்லாமிய வரலாறு தெரியாதது காரணமாக இருக்கலாம். சிற்றூர்கள் என்ற நிலையிலிருந்து நகரங்கள் என்ற வளர்ச்சிநிலை வரை சிலை வணக்கம் என்பதையே அறியாதவர்கள்தாம் மக்காவிலும் ம‌தீனாவிலும் வாழ்ந்திருந்தனர். பாகன்களால் அறிமுகப் படுத்தப்பட்ட 'சிலைக் கலாச்சாரம்' என்பது மக்கா‍ மதீனாவில் திணிக்கப் பட்டதும் பின்னர் அகற்றப் பட்டதுமாகும். திணிக்கப்பட்ட ஒன்றை, பாரம்பரிய கலாச்சாரம் என்பது வரலாற்றுப் புரட்டல்லவா? அது அழிந்ததாகக் கவலைப்படுவது முரண்பாடாகத் தெரியவில்லையா?

மலர்மன்னன் அவர்களே! உங்கள் வாதப்படியே "அரேபியரின் பாரம்பரிய தெய்வ நம்பிக்கைகளையும்" மீறி, நீங்கள் ''முகம்மதியம்' என்று வேண்டுமென்றே தவறாகக் குறிப்பிடும் இஸ்லாம், உலகம் முழுதும் செல்வாக்குப் பெற என்ன காரணம் என்று சிந்தித்துப் பாருங்கள்! அரேபியாவில் மட்டும்தானே முகம்மது நபி வாழ்ந்தார். அதையும் தாண்டி இந்தியாவிலும், சீனாவிலும் இன்ன பிற நாடுகளிலும் இஸ்லாம் காலூன்ற 'எந்த ஆதிக்கம்' காரணமாக இருந்தது என்றும் சொல்வீர்களா?

இந்து மதம் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவமுடையது என்று போலியாகச் சொல்லித் திரியும் நீங்கள், இந்து மதத்தின் பெயரால் நடக்கும் மூடப்பழக்கங்களைச் சாடி, மாற்றங்களை வலியுறுத்திய பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் உருவச்சிலையை, அரங்கநாதர் ஆலயத்தின் வாயிலில் வைத்ததால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டது என்று கூக்குரல் இட்டீர்களே! அதேபோல், ஆதம் நபி தொடங்கி, இப்றாஹிம் நபி வழியாக சிலைகளற்ற இறையில்லமாக இருந்து வந்த கஅபாவின் உள்ளே இருந்த இடைக்காலச் சிலைகளை அகற்றியதற்கும் இதே 'புனிதக்' காரணம்தான் இருந்தது என்பதை அறிவீர்களா வரலாற்றுப் புரட்டுச் செய்ய முயலும் மலர்மன்னன் அவர்களே?

அடுத்து, அக்ரஹாரங்களை அழிந்த அமெரிக்க மோகம் மற்றும் தஞ்சை முஸ்லிம்கள் குறிவைக்கப்படும் பின்னணிக் காரணங்கள் பற்றியும் இனி வரும் பகுதியில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்...

ஆக்கம்: நல்லடியார்
நன்றி : சத்திய மார்க்கம்

காரைக்குடி, இஸ்லாம்

Thursday, March 08, 2007

டெல்லியில் தமிழக முஸ்லிம்கள் போராட்டம்!! TMMK RALLY

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கோரி
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், டெல்லியில் பேரணி


டெல்லி சென்ற முஸ்லிம்களின் ஒரு பகுதி

தமுமுக வின் டெல்லி பேரணி மற்றும் அதில் தலைவர்கள் ஆற்றிய உரையை பார்ப்பதற்கு இங்கு சொடுக்கி தமுமுக வின் இணையத் தளம் செல்லவும் அங்கு மிகத் தெளிவாக் இதன் வீடியோக்கள் தொகுக்கப்பட்டுள்ளன.


புதுடெல்லி, மார்ச்.8-

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக்கோரி டெல்லியில் பாராளுமன்றத்தை நோக்கி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பேரணி நடத்தப்பட்டது.

பேரணி

முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மக்கள் தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டுள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டில், முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு எவ்வளவு என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்பன போன்ற 13 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக டெல்லியில் பேரணி நடத்தப்பட்டது.

காலை 10 மணிக்கு ராமலீலா மைதானத்தில் தொடங்கிய பேரணி, பாராளுமன்றத்தை நோக்கி வந்தது. இந்த பேரணியை பாராளுமன்ற தெருவில் உள்ள போலீஸ் நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு பேரணியில் பங்கேற்ற தொண்டர்களிடையே பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் சமுதாய தலைவர்கள் உரையாற்றினார்கள்.

பிருந்தா கரத்

பேரணியில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் முன்னேற்ற கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இவர்களை தவிர, டெல்லி மற்றும் அண்டை மாநில முஸ்லிம் அமைப்புகளும் பேரணியில் திரளாக கலந்து கொண்டனர்.

முஸ்லிம் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சமூக பாதுகாப்புக்கு நீதிபதி ராஜேந்தர் சச்சார் தலைமையிலான கமிட்டி அளித்த அறிக்கையின் அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அனைத்து தலைவர்களும் தங்கள் உரையில் வலியுறுத்தினார்கள்.

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா கரத், இந்திய கம்ïனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் பலர் உரையாற்றினர்.

சோனியாவை சந்திப்போம்

பேரணியில் நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க. மற்றும் இடதுசாரிகள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், குறிப்பாக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியும், அதை நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் வகையில் ஜனாதிபதி அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன்சிங், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து தீர்மான அறிக்கையை அளிக்க உள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

நன்றி : தினத்தந்தி

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி

SAUDI BINLADEN GROUP இன்டர்வியு விரையுங்கள்

SAUDI BINLADEN GROUP இன்டர்வியு விரையுங்கள்

சவுதி அரேபியாவின் பரபல நிறுவனமான சவுதி பின்லேடன் குரூப் பல்வேறு வேலைகளுக்கு மும்பையில் ஆள் எடுக்கின்றார்கள். தகுதியான நமது சகோதரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொண்டு அந்த நேர்கானலுக்கு சென்று பயன் பெறுங்கள். அல்லது தங்களின் நன்பர்களையோ அல்லது தேவையுள்ள உறவினர்களையோ அனுப்பி பயன் பெற செய்யுங்கள். இவற்றில் சில வேலைகள் மக்காவில் நடைபெறும் புரஜக்ட்டிற்கு முஸ்லிம்கள் மட்டும் தேவைப்படுவதால் நமது சகோதரர்களை அதிக அளவில் வணிணப்பிக்க சொல்லவும்.

இந்தியாவில் இந்த செய்தியை பார்க்கும் நமது சகோதரர்கள் தயவு செய்து இதை பிரின்ட் எடுத்து பள்ளியிலோ அல்லது சமுதாயக் கூடங்களிலோ ஒட்டி நமது சமுதாயத்தவர்களை அதிக அளவில் பயன் பெறச் செய்யுங்கள்


SAUDI BINLADIN GROUPREQUIRE FOR THEIR METRO PROJECT

Short listed candidates will be called for interview with the Client around
6 to 9 March 2007 at Delhi, Mumbai, Chennai & Hyderabad

01 CIVIL CONSTRUCTION ENGINEERS


02 CIVIL DESIGN ENGINEERS

03 CIVIL PLANNING ENGINEERSS

04 ELECTRICAL ENGINEERS

05 MECHANICAL ENGINEERS

06 MATERIAL ENGINEERS

07 QUALITY ENGINEERS

08 CIVIL FOREMEN

09 CIVIL SUPERVISORS

10 QUANTITY SURVEYORS

11 LAND SURVEYORS

12 AUTO CA DRAFTSMEN (Civil/Mechanical/Electrical)

13 SECRETARIES / DOCUMENT CONTROLLERS

14 SOIL TESTING TECHNICIANS

15 CIVIL SUPERVISORS (EARTH WORK )

16 CIVIL FOREMEN (EARTH WORK )

17 A/C TECHNICIANS

ATTRACTIVE HAND SOME SALARY WITH OTHER PERKS ARE OFFERED

Note: Engineers should be BE & Others should be Diploma with min 05 Yrs relevant exp in Railways/Roads/Buildings.

Apply by courier/email typed bio data (mention phone/ email specific experience) copies of educational and experience certificates, 2 photos and passport to R. K. INTERNATIONAL.


SAUDI BINLADIN GROUP
REQUIRE FOR MAKKAH PROJECT
MUSLIM ONLY

Candidates will be called for interview with the Client around 6 to 9 March 2007 at Delhi, Mumbai, Chennai & Hyderabad

01 CIVIL ENGINEERS


02 MECHANICAL ENGINEERS

03 ELECTRICAL ENGINEERS

04 SURVEYORS


05 AUTO CAD DRAFSTMEN

06 CARPENTERS

07 STEEL FIXERS

08 MASONS

09 ELECTRICIANS

10 DIESEL ENGINE MECHANICS

11 PLUMBERS

12 A/C TECHNICIANS

13 TILE MASONS

14 PAINTERS

15 GENERATOR MECHANICS

16 CAR DRIVERS

17 WELDERS.

ATTRACTIVE HAND SOME SALARY WITH OTHER PERKS ARE OFFERED

Note: Engineers should be BE & Others should be Diploma and technicians with relevant experience min 05 Yrs relevant exp in Railways/Roads/ Buildings.
Apply by courier/email typed bio data (mention phone/ email specific experience) copies of educational and experience certificates, 2 photos and passport to R. K. INTERNATIONAL


FOR ALL POSTS APPLY TO :
R. K. INTERNATIONAL
605 HEMKUNT HOUSE
6 RAJENDRA PLACE
NEW DELHI – 110008
Email: rkintl2@eth.net
இஸ்லாம், காரைக்குடி, முஸ்லிம்

தென்காசி - இந்து தீவிரவாதி கைது



தென்காசியில் தமுமுக தலைவர் சகோ. மைதீன் சேட் கான் அவர்கள் மீது கடந்த வாரம் இந்து முன்னனியை சேர்ந்த இந்து தீவிரவாதிகள் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் கொடூர கொலை வெறி தாக்குதலை நடத்தினர். அல்லாஹ்வின் பெருங்கருனையால் சகோ. மைதீன் சேட் கான் அவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உயிர் பிழைத்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்து முன்னனியயை சேர்ந்த இந்து தீவிரவாதிகளை காவல் தறையினர் தேடி வந்தனர். மற்றும் டெல்லி பேரணி முடிந்தால் தமுமுக வினரின் பெரும் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்ற நிர்ப்பந்தத்திலும் மிக துரிதமாக காவல் துறையினர் நியாய உணர்வுடனும் செயல்பட்டு தலைமறைவான இந்து தீவிரவாதிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சகோ. சேட் மைதீன் கான் மீது தாக்குதல் நடத்தியதாக தென்காசியை சேர்ந்த இந்து தீவிரவாதிகள் செந்தில்குமார் மற்றும் சுரேந்தர் என்ற இருவர் கோவை-பல்லடம் நீதிமன்றத்தில் சரனடைந்தனர் பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று தென்காசி காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு கபிலன் என்ற ந்து முன்னனியை சேர்ந்த தீவிரவாதியை கைது செய்துள்ளனர்.

சிறப்பாக செயல்படும் காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் இதே வேகத்தில் இவ்வழக்கில் எஞ்சிய இந்து முன்னனியை சோந்த இந்து தீவிரவாதிகளையும் கைது செய்து சட்ட ஒழுங்கையும், நீதியையும் நிலைநாட்டி காவல் துறை தனது செயல்பாடுகள் மதச்சார்பற்றது என்பதை நிறுபிக்கும் என்று நம்பகின்றோம்.

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

Wednesday, March 07, 2007

நீதியைத் தேடி....




தந்தையை இழந்து, தமயனை இழந்து, மகனை இழந்து, கனவரை இழந்து அவல நிலையில் வாடும் நமது சமுதாய மக்களுக்காக சிறுபான்மை உதவி அறக்கட்டளை நடத்தும்....

நீதியைத் தேடி........
இன்ஷா அல்லாஹ்....மார்ச் 11 ஒன்று கூடுவோம்...
இடம் : பாத்திமா கனி திருமண மண்டபம் - கோவை
தலைமை
S.U. அன்வர்கான்- தலைவர், அறக்கட்டளை
வறவேற்புரை
M.S.M. அபுதாஹிர் - துனைத் தலைவர், அறக்கட்டளை

மற்றும் தமிழகத்தின் முன்னோடி அறிவு ஜீவிகளும் நமது சமுதாயத் தலைவர்களும் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள் .

சிறப்புரை ஆற்ற உள்ள நமது சமுதாயத் தலைவர்கள்

பேராசிரியர். M.H. ஜவாஹிருல்லாஹ்-மாநிலத் தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக கழகம்

ஜனாப் M. குலாம் முகம்மது M.A., மாநிலத் தலைவர்
மனித நீதிப் பாசறை

ஜனாப் C.M.N சலீம் - மாநில அமைப்பாளர்
முஸ்லிம் லீக், இளைஞர் அணி

மெளலவி ஹாமித் பக்ரி மன்பஈ - தலைவர்
ஐக்கிய சமாதானப் பேரவை

ஜனாப் இமாம் ஹீசைன் B.A.B.L மாநில துனை செயலாளர்
ஜம்இய்யத்துல் அஹ்ல் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH)

ஜனாப் S.J. இனாயத்துல்லாஹ்- பொதுச் செயளாலர்
அகில இந்திய மிலலி கவுன்சில்

ஜனாப் அக்பர் அலி - துனைத் தலைவர்
PDP கேரளா

ஜனாப் ஹமீத் வனிமீல் செயளாலர்
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்- கேரளா

ஜனாப் P.M.A சலாம் M.L.A
தேசிய லீக், கேரளா

ஜனாப் பூந்துறை சிராஜ்- செயல் தலைவர்
PDP - கேரளா

மெளலவி T.J.M. ஸலாவுத்தீன் ரியாஜி - துனைத் தலைவர்
மாநில ஜமாத்துல் உலமா

ஜனாப் அக்பர் அலி - தனைத் தலைவ்
PDP - கேரளா

ஜனாப் M. முகம்மது ஆபபுக்கர்
வழக்கறிஞர் (PUCL)

இத்துடன் சமூக அக்கறை கொண்ட மனித உரிமை ஆர்வலர்களான :

திரு . H. சுரேஷ் அவர்கள்
முன்னாள் உயர் நீதி மன்ற நீதிபதி, மும்பை

திரு K.G. கண்ணபிரான் அவர்கள்
மூத்த வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம்
தேசியத் தலைவர் (PUCL)

திரு வீரேந்திர குமார் M.P
மாத்ரு பூமி தினசரி நாளிதழ்

திரு நக்கீரன் கோபால் அவர்கள்
ஆசிரியர், நக்கீரன்

திரு. P. திருமலை ராஜன் -செயளாலர்
தமிழகம் புதுவை வழக்கறிஞர் கூட்டமைப்பு

திரு புதுவை சுகுமாறன்- தலைவர்
புதுவை மனித உரிமை கூட்டமைப்பு

திரு கோவை கு. இராம கிருட்டினன் பொதுச் செயளாலர்
தந்தை பெரியார் திராவிடர் கழகம்

திரு. அக்கினி சுப்ரமணியம்- செயல் தலைவர்
மனிதம் அமைப்பு

திரு பலராம் முன்னால்- தலைவர்
மனித உரிமை ஆணையம், கேரளா

திரு பேராசிரியர் அ. மார்க்ஸ் - தலைவர்
மக்கள் குடியுரிமை பாதுகாப்பு நடுவம்

திரு விருத்தச்சலம் ராஜீ - தலைவர்
மனித உரிமை பாதுகாப்பு நடுவம்

திரு. பவானி பா. மோகன் - சட்ட ஆலோசகர்
சிறுபான்மை உதவி அறக்கட்டளை

உள்ளபட பலர் பங்கேற்கிறார்கள். நிகழச்சியின் இறுதியாக நன்றியுரை வழங்க உள்ளார் சகோ. கோவை தங்கப்பா - ஒருங்கிணைப்பாளர், பொருளாலர், சிறுபான்மை உதவி அறக்கட்டளை.



இஸ்லாம், முஸ்லிம், காரைக்குடி

Al-Suwaidy Saudi இன்டர்வியூ-விரையுங்கள் பயன் பெறுங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சமுதாயச் சகோதரர்களே,

சவுதி அரேபியாவின் பிரபல நிறுவனமான அல்சுவைதி கம்பெனி கீழ்க்கண்ட பணிகளுக்காக மும்பையில் ஆள் எடுக்கின்றார்கள். தகுதியான நமது சகோதரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியை தொடர்பு கொண்டு அந்த நேர்கானலுக்கு சென்று பயன் பெறுங்கள். அல்லது தங்களின் நன்பர்களையோ அல்லது தேவையுள்ள உறவினர்களையோ அனுப்பி பயன் பெற செய்யுங்கள்.

இந்தியாவில் இந்த செய்தியை பார்க்கும் நமது சகோதரர்கள் தயவு செய்து இதை பிரின்ட் எடுத்து பள்ளியிலோ அல்லது சமுதாயக் கூடங்களிலோ ஒட்டி நமது சமுதாயத்தவர்களை அதிக அளவில் பயன் பெறச் செய்யுங்கள்.

Categories:

Boiler Maker 19
Electrician Auto 3
Electrician Industrial 30
Electrical Industrial 2 (Generator - Transport & Equipment)
Fabricator 97
Mechanical Fitter 101
Foreman Bldg Const 4
Foreman Electrical 11
Foreman Erection 4
Foreman Maintenane Vehicle & Equipment 2
Foreman Mechanical / Piping 34
Foreman Millwright 4
Foreman Rigging 6
Foreman Rotating Equipment 17
Foreman Scaffolding 1
Headman Mechanical Piping 31
Headman rotating equipment 30
Headman Structural 16
Auto Mechanic Heavy / Light 4
Millwright 73
Pipefitter 121
Plumber 15
Rigger 32
Sandblaster/painter 42
Tig/Arc Welder 112
Heavy Driver 25
Trailer Driver 20
Crane Operator-80T 8
Heavy Equipment Operator 27 (Dozer, Loader, Backhoe, Grader, Forklift Operator)

Schedule:

15-Mar Mumbai Unique Overseas Consultants
16-Mar Mumbai Yusho Corporation
17-MAr Surat Unique / Yusho
18-Mar Surat Yusho
19-Mar Baroda Yusho / Unique
21-Mar Raipur Unique
23-Mar Vaizak Yusho / Unique
25-Mar Chennai Yusho / Unique
26-Mar Cochin Yusho / Unique

Address:

Unique Overseas Consultant
Mastan Shopping Centre
Byculla House, Clare Road
Mumbai - 8
Tel: +9122 23006555 / 23006556 Fax: 23000307
Web: www.uniqueoc.com

YUSHO CORPORATION
104 MAKER CHAMBER - 5
NARIMAN POINT
MUMBAI - 21 MAHARASHTRA
India
Tel: +91 (222) 204 0104
FAx: +91 (222) 288 1104
Web: www.yushocorp.com


காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

டில்லியில் முஸ்லிம்கள் பேரணி

டில்லியில் முஸ்லிம்கள் பேரணி

புதுடில்லி:கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு அளிப்பது குறித்து சச்சார் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டுமென்று வலியுறுத்தி டில்லியில் இன்று பேரணி நடைபெறுகிறது.

கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் எந்தளவுக்கு பின்தங்கியுள்ளனர் என்பது குறித்து சச்சார் கமிட்டி ஆராய்ந்து பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளது. இந்த கமிட்டியின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தி டில்லியில் பிரமாண்ட பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் உ.பி., ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்கவுள்ளனர். ராம்லீலா மைதானத்தில் இருந்து கிளம்பி, பார்லிமென்ட்டை நோக்கிச் செல்லும் இந்த பேரணி, ஜந்தர் மந்தர் பகுதியில் நிறைவடைகிறது. இத்தகவல்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவஹிருல்லா டில்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். அதேபோல மாலையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை வலியுறுத்தி அம்பேத்கர் பவனில் கருத்தரங்கும் நடைபெறவுள்ளது. இதில், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

Tuesday, March 06, 2007

TMMK மீதான தென்காசி தாக்குதல் முழு விபரம்


நெல்லை மாவட்ட த.மு.மு.க. தலைவர் மீது கொலைவெறித் தாக்குதல்! படுகாயத்துடன் உயிர் தப்பினார்!

மார்ச் 2ஆம் தேதி மாலை நேரம்! தமுமுக தலைமையகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. டெல்­ பேரணி குறித்த தெருமுனைப் பிரச்சாரங்களும் அப்போதுதான் முடிந்திருந்தன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளி­ருந்து இரண்டாவது நாளாக மக்கள் டெல்­ பேரணிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்!

அப்போதுதான் அச்செய்தி எதிர்பாராத வண்ணம் சுமார் 8:30 மணியளவில் தலைமையகத்திற்கு கிடைத்தது.

இரவு 8 மணியளவில் தென்காசியில் நெல்லை மாவட்டத் தலைவர் மைதீன் சேட்கானை சிலர் சரமாரியாக வெட்டித் தள்ளியதாகவும், அவர் உயிருக்குப் போராடுவதாகவும் அந்த தொலைபேசி செய்தி பதறியது.

உடனடியாக தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் இச்செய்தியை உறுதிபடுத்திக் கொண்டார். நெல்லை மாவட்டச் செயலாளர் பகத்சிங் முஹம்மது வும் தொலைபேசியில் நடந்த விவரங்களை கூறினார்.

சம்பவம் நடந்தது எப்படி?

டெல்­ பேரணி குறித்த ஏற்பாடுகளையும் பயண ஆயத்த வேலைகளையும் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த மைதீன் சேட்கான், தனக்கிருந்த அச்சுறுத்தலை யும் பொருட்படுத்தாமல் தனியாகவே சுற்றி வந்திருக்கிறார்.

இந்நிலையில்தான் சேட்கான் அவர்கள் அம்மன் சன்னதி தெருவில் செல்லப்பா உணவகத்திற்கருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது அவரை வழி மறித்து, 'டெல்­க் காடா போறீங்க.. எப்படிப் போறீங்கன்னு... பார்ப்போம்டா...' என வெறிக் கூச்சல் எழுப்பியபடியே சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். அவர் சுதாரிப்பதற்குள் 9 வெட்டு களில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார் சேட்கான்!

கோழைகள் அப்போதும்கூட சேட்கானுடன் நேருக்கு நேராக நிற்காமல் அவரது முதுகில்தான் முதல் தாக்குதலை நடத்தியுள்ளனர்! அப்போது மணி சரியாக 8.05.

மூன்று பேர் கொண்ட கும்பல்தான் இத்தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மோட்டார் பைக்கில் வந்தவரை திடீரென குறுக்கே சைக்கிளை நிறுத்தி, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இத்தாக்குதல் பற்றிக் கூறிய நகர நிர்வாகி நெய்னா, பலமான வெட்டுகளுடன் தற்காப்புக்காக சேட்கான் அருகிலிருந்த செல்லப்பா ஹோட்டலுக்குள் நுழைந் திருக்கிறார். அங்கிருந்தவர்கள் பதற்றத்துடன் உடனடியாக கூடிவிட வன்முறைக் கும்பல் ஓடிவிட்டது.

சில நூறு அடி தூரத்தில் எதேச்சையாக நின்று கொண்டிருந்த சாதிக், மசூது உள்ளிட்ட தமுமுகவினர், விபரம் புரியாமல் அங்கு ஓடிவர அப்போதுதான் தாக்கப்பட்டது சேட்கான் எனத் தெரிய வந்திருக்கிறது.

உடனடியாக ஆம்புலென்ஸில் சேட்கானை ஏற்ற, பின்னால் பாதுகாப்பிற்கு ஒரு காரில் தமுமுகவினர் தொடர, மின்னல் வேகத்தில் ஆம்புலென்ஸ் நெல்லை அரசு மருத்துவமனையை நோக்கி விரைந்தது. ஆம்புலென்ஸ் வாகனம் புறப்படும்போதே 'நடுபல்க்' என்ற இடத்தில் நின்று கொண்டு, சங்பரிவார தீவிரவாதிகள் ஆம்பு லென்ஸ் மீது கற்களை எறிந்துள்ளனர்!

மக்கள் கொந்தளிப்பு!

அதற்குள் தீயாய் செய்தி பரவ, தென்காசி பொதுமக்கள் கொந்தளித்து வீடுகளை விட்டு வீதியில் குழுமத் தொடங்கினர். சிலர் பேருந்துகளை உடைக்க.. நிலைமை விபரீதமானது. உடனடியாக தமுமுகவின் நகரச் செயலாளர் நெய்னா, வர்த்தகரணி சாதிக், ஆட்டோ சங்கத் தலைவர் பீர், தொழிலாளரணி மசூது ஆகியோர் பொது மக்களை கலைந்து போகச் கூறினர். கூட்டம் ஆவேசத்தில் கூச்ச­ட, அங்கு வந்த மாவட்ட எஸ்.பி. செந்தாமரைக் கண்ணன் அவர்கள், பொதுமக்களிடம் பேசி அமைதி காக்குமாறும், குற்றவாளி கள் விரைந்து பிடிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

அதன் பின்னர் நள்ளிரவுக்குப் பிறகு தென்காசியில் நிலைமை கட்டுக்குள் வந்தது. எனினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் செய்தி பரவ, கோப உணர்ச்சிகள் இயல்பாகவே வெளிப் பட்டன. ஆங்காங்கே தமுமுகவினர் மக்களை அமைதிக் காக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

தயார் நிலை!

மறுபுறம் ஆம்புலென்ஸ் வாகனம் 40 நிமிடத்தில் சீறிக் கொண்டு அரசு மருத்துவ மனையை வந்தடைந்தது. ஏற்கெனவே மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததால், உடனடியாக சேட்கான் அவசர சிகிக்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அதற்குள் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் மருத்துவமனை வளாகத்தில் குழுமினர். மேலப்பாளையம், பாளையங்கோட்டை, தாழையூத்து பகுதிகளி­ருந்து தமுமுகவினரும் விரைந்து வந்தனர். போலீஸ் கமிஷனர் அசோக்குமார்தாசும், மாவட்ட கலெக்டரும் மருத்துவமனைக்கு வந்து அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தினர்!

நள்ளிரவு ஆறு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று அவசர சிகிக்சையளித்தது. இறைவனின் பெரும் கிருபை யால் அபாயக் கட்டத்தைத் தாண்டி, சேட்கான் உயிர் பிழைத்து விட்டார்! அதன் பிறகே மருத்துவமனை வளாகத்தில் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் பொதுமக்கள்!

மாநிலச் செயலாளர் கோவை உமர், மாநில துணைச் செயலாளர் சாதிக் அலி ஆகியோர் கோவையிலிருந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று நிலைமையைக் கண்காணித்து மக்களை அமைதிப்படுத்தினர்.

காவல்துறை உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் காத்திருக்கின்றனர்.

தென்காசியில் தமுமுக மாவட்டத் தலைவர் மைதீன் சேட்கான் மீது தொடுக்கப் பட்ட கொலைவெறித் தாக்குதலை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வன்மையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் வருவார்!

ஃபாஸிஸத்தின் கோரக் கரங்கள் சேட்கானை குதறியிருக்கின்றன. தமுமுக தொண்டன் என்றுமே கோழையாக வீழ மாட்டான். இந்த சமுதாயத்திற்காக ரத்தம் சிந்துவதற்கும், உயிர் துறப்பதற்கும் அவனே முன்வரிசையில் நெஞ்சை நிமிர்த்தி நிற்பான்.

இதுவரை சேட்கான் நெல்லை மாவட்டத் தமுமுக தலைவராக மட்டுமே வலம் வந்தார்! இனி ஒட்டுமொத்த நெல்லை மாவட்ட மக்களின் தளபதியாக மீண்டும் களமிறங்குவார்! இன்ஷா அல்லாஹ்!

நன்றி : தமுமுக இனையத் தளம்

Monday, March 05, 2007

ஸ்பெயினில் இஸ்லாம் ஆவணப்படம் (VIDEO)



முஸ்லிம் லீக்கின் இளைஞரணி தலைவரும் கோஸ்ட்டல் மீடியா நெட்வொர்க்கின் நிறுவனருமான சகோ. CMN. சலீம் அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையில் நமது தமிழ் முஸ்லிம் சமுதாயம் கட்டாயம் உணர்ந்து அறிவு பெற வேண்டும் என்ற நற்சிந்தனையில் மிகுந்த பொருளாதாரமும் நேரமும் செலவி்ட்டு உண்டாக்கியது தான் "ஸ்பெயினில் இஸ்லாம்" என்ற வரலாற்று ஆவனப்படம்.

ஸ்பெயினில் இஸ்லாம் ஆட்சியை பிடித்த வரலாற்றையும் அங்கு அது எவ்வாறு வீழந்தது என்ற வரலாற்றையும் எழுத்துக்கலாக நாம் படித்துள்ளோம். ஸ்பெயின் முஸ்லிம்களின் அந்த வறலாறு நமது இந்திய முஸ்லிம்களுக்கும் பொருந்திப்போகும். நாம் எழுத்தில் படித்ததை விட ஆவணப்படமாக காணும் போது இன்னும் நாம் விளக்கம் பெறலாம். அந்த வகையில் சகோ. சலீம் அவ்களால் உண்ணடாக்கப்பட்ட "ஸ்பெயினில் இஸ்லாம்" என்ற இந்த வரலாற்று ஆவணப்படம் நாம் அறியாத நிறைய வரலாற்று செய்திகளை கொண்டுள்ளது.

இந்தியாவில் வசிக்கக்கூடிய ஒவ்வொரு முஸ்லிமும் கண்டிப்பாக காண வேண்டிய வரலாற்று ஆவணப் படம் இது. நாம் ஒவ்வொருவரும் வீட்டில் பேண வேண்டிய படமும்ட கூட இது. கோஸ்ட்டல் மீடியா நெடவொர்க் இந்த ஆவணப்படத்தை டிவிடி க்களாக வெளியிட்டுள்ளது . ஒரு டிவிடி யி்ன விலை இந்திய மதிப்பில் ரூ.100/- மட்டும் கிடைக்கும் இடம் :


கோஸ்ட்டல் மீடியா நெட்வொர்க்
நம்பர் 44, லிங்கி செட்டி தெரு
மன்னடி
சென்னை - 1
தொலைபேசி : 0091-9382155780


நமது சகோதரர்கள் தயவு செய்து இந்த வரலாற்று ஆவணப்பட டிவிடி யை ஆர்டர் செய்து வாங்கி பார்க்கவும். ஒவ்வொருவரும் கட்டாயம் பார்த்து பாதுகாக்க வேண்டிய ஆவணப்படம் இது.

அந்த வரலாற்று ஆவணப்படத்தை காண்பதற்கோ அல்லது பதிவிறக்கம் செய்வதற்கோ இங்கு சொடுக்கவும். அல்லது புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் மீடியா என்ற தளத்திற்கு சென்று பார்வையிடவும்.
காரைக்குடி. இஸ்லாம், முஸ்லிம்,ஸ்பெய்ன் இந்திய முஸ்லிம்கள்

JAQH முஸ்த்தபா கமால் அவர்களின் இறுதிப்பேச்சு (VIDEO)



ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினரும், கோவை மஸ்ஜிதுல் முஸ்லிமின் தலைவரும், முஸ்லிம் எஜீகேசனல் எம்பவர்மென்ட் டிரஸ்ட்டின் தலைவரும் கடந்த ஜனவரி 15, 2007 அன்று நம்மை விட்டுப் பிறிந்த ஜனாப் A.M.முஸ்த்தபா கமால் அவர்கள் தமது மரனத்திற்கு முன்னர் டிசம்பர்-6, 2006 அன்று பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்து தமுமுக வினர் கோவையில் நடத்திய போராட்டததில் கலந்து கொண்டு ஆற்றிய உரையே அவர் கலந்து கொண்ட பொது நிகழச்சிகளில் இறுதியாக அமைந்தது.

அந்த வீடியோவை காண்பதற்கோ அல்லது பதிவிறக்கம் செய்வதற்கோ இங்கு சொடுக்கவும். அல்லது புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் முஸ்லிம் மீடியா என்ற தளத்திற்கு சென்று பார்வையிடவும்.

காரைக்குடி, இஸ்லாம், தமிழ் முஸ்லிம்

Sunday, March 04, 2007

1 முறை தலாக் கூறினால் விவாகரத்து ஆகாது-COURT

ஒரு முறை தலாக் கூறியதை விவாகரத்தாக கருத முடியாது * கணவருடன் சேர்ந்து வாழ பெண்ணுக்கு கோர்ட் உத்தரவு

முசாபர்நகர்: ""ஒரு முறை மட்டும் தலாக் கூறினால் அதை விவாகரத்தாக கருத முடியாது. அதனால், ஒரு முறை தலாக் கூறப்பட்ட பெண் தனது கணவருடன் சேர்ந்து வாழலாம்,'' என ஷரியத் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

உத்திர பிரதேசம் முசாபர்நகர் மாவட்டம் பூதானா என்ற ஊரை சேர்ந்தவர் மாரூப் அலி. இவரின் மனைவி வகீலா பேகம். இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வகீலா பேகம் தனது சகோதரியின் வீட்டிற்கு போக விருப்பம் தெரிவித்தார். அதற்கு அனுமதி மறுத்த அவரின் கணவர் மாரூப் அலி ஒரு முறை "தலாக்' கூறியுள்ளார். இதன் பின்னரும் தனது சகோதரி வீட்டிற்கு சென்ற வகீலா பேகம், மீண்டும் கணவர் வீட்டிற்கு திரும்பவில்லை.

பிரச்னை தருலும் தியோபந்த் குழுவின் முன்பாக விசாரணை நடைபெற்றது. அப்போது, "எனது சகோதரி வீட்டிற்கு செல்லக்கூடாது என கணவர் கூறினார். அதற்கு நான் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஒரு முறை "தலாக்' கூறினார்,'' என வகீலா தெரிவித்தார். இதையடுத்து தருலும் தியோபந்த் குழு அவர்கள் இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், மாரூப் அலி இந்த உத்தரவை ஏற்றுக் கொள்ளவில்லை. "மனைவியை செல்லமாக மிரட்டவே ஒரு முறை தலாக் கூறினேன். விவாகரத்து பெற விரும்பவில்லை' என்று தெரிவித்தார். இதையடுத்து இப்பிரச்னை குறித்து ஷரியத் கோர்ட் தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று தருலும் தியோபந்த் குழு தெரிவித்தது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட ஷரியத் கோர்ட் ஒரு முறை மட்டும் தலாக் கூறினால் விவாகரத்து முழுமையடையாது என்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் வகீலா பேகம் தனது கணவர் மாரூப் அலி வீட்டிற்கு திரும்பலாம் என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது.

நன்றி : தினமலர்

Saturday, March 03, 2007

இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM)

இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM)
Islamic Social Lead Association of Madurai (ISLAM)






சவுதி அரேபியா தம்மாம் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (02.03.2007) அல் ஒயாஸிஸ் ஹோட்டலில் இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM) உடைய ஆலோசனை அமர்வு நடைபெற்றது.

தமிழகம் எங்கும் பெரும்பாலன ஊர்களில் முஸ்லிம்கள் தங்கள் சமுதாயத்திற்கு நற்பணி செய்க்கூடிய வகையில் பல அமைப்புக்களையும் சங்கங்களையும் ஏற்படுத்தி அதன் மூலம் உள்ளுரில் உதவி தேவைப்படுமு் சக முஸ்லிம் குடும்பங்களுக்கு பல உதவிகளை செய்து வருகின்றார்கள். ஆனால் சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய நகரமாகவும் முஸ்லிம்கள் மிகைத்து வாழக்கூடிய இடமாகவும் இருக்கும் மதுரை முஸ்லிம்களுக்கு தங்களுக்கென ஒரு அமைப்பு இல்லாமல் பல கூறுகலாக பிறிந்து கிடக்கும் அவல நிலையை கவணத்தில் கொண்ட சில சகோதரர்கள் தங்களுக்குள் தோன்றிய இந்த அற்புத கருத்துக்களை கருவாக்கியதன் விளைவு இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM) என்ற அமைப்பு உண்டாகியது.




இதன் ஆலோசனை கூட்டம்தான் மேற்கூறிய தம்மாம் அல் ஒஸாயிஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தை நெல்லை ஏர்வாடியை சேர்ந்த சகோ. முகம்மது மீரா சாஹிப் அவர்கள் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். தம்மாமில் வசிக்கும் பொறியாளர் சஃபியுள்ளாஹ் கான் அவர்கள் தலைமையேற்று சமூக ஒற்றுமையை வலியுறுத்தி தலைமையுரை நிகழ்த்தினார்கள்.

மதுரையை சேர்ந்த பொறியாளர் முகம்மது ரஃபி அவர்கள் வறவேற்புரையும் மதுரையை சோந்த மற்றோர் சகோதரர் கபீர் அவர்கள் "ஒன்றுபடுவோம் - பிரிந்து விடோம்" என்ற தலைப்பில் சிற்றுரையும் ஆற்றினார்கள்.


நிகழச்சியின் முக்கிய அம்சமாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆற்றாங்கரை அலாவுதீன் என்றழைக்கப்படும் முகவை மாவட்டத்தை சேர்ந்த மெளலவி அலாவுத்தீன் பாக்கவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இவர்கள் தனது உரையில் மதுரையை பற்றிய தனது அனுபவங்களையும் அந்த ஓர் மக்கள் கல்வியின்மையால் எப்படி சிதைவுன்டு வருமை கோட்டின் கீழ் முஸ்லிம்கள் என்ற அடையாளம் கூட தெறியாது வாழந்து கொண்டிருக்கின்றார்கள் என்றும், தமிழகத்தின் அணைத்து மாவட்டங்களிலும் இருந்து பெரும்பாலானோர் வெளிநாடுகளுக்கும் மற்ற பல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வரும் வேலையில் மதுரையை சேர்ந்த முஸ்லிம்கள் இன்னும் வீதியோரங்களில் நடைபாதை வியாபாரிகளாகவும், பள்ளிக்கு வந்தால் மட்டுமே இவர் முஸ்லிம் என்று அடையாளம் காணக்கூடிய நிலையிலும் இருக்கக் கூடிய அவலத்தையும் இதற்கு முக்கிய காரணம் மதுரை முஸ்லிம்களிடையே கல்வியரிவு இல்லாதுதான் என்பதையும் திறம்பட விளக்கினார்.

அத்துடன் தனது உரையில் மாலிக் காபூரில் இருந்து மருதநாயகம் வரை பல்வேறு பட்ட காலங்களில் பலநூறு ஆன்டுகள் முஸ்லிம்களாலேயே ஆளப்பட்ட மதுரையில் முஸ்லிம்கள் தாழந்த நிலையில் இருப்பதை சுட்டிக்காட்டி அவர்கள் தங்கள் சமுதாயத்திற்கு கல்வி உதவிகளையும் சமூக உதவிகளையும் வழங்கிட ஒரு அமைப்பு நிச்சயம் தேவை என்பதையும் அதற்காக இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM) துவங்கப்பட்டதை பாராட்டி வாழத்துக்களை வழங்கினார்.



இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM) என்ற அமைப்பை பற்றியும் அதன் அவசியத்தை பற்றியும் விளக்கி கூறும் வகையில் மதுரை முகம்மது மஹ்பூப் சுபுஹான் அவர்கள் விளக்க உரை நிகழ்த்தினார்கள். தமது உரையில் ஒற்றுமையின்மையினாலும் தங்கள் நகர மக்களை ஒன்றுபடுத்த ஓர் அமைப்பு இல்லாத காரனத்தாலும் மதுரை முஸ்லிம்கள் எந்த அளவிற்கு ல்வி வேலை வாய்ப்புக்களில் பின் தங்கியிருக்கின்றார்கள என்பதையும். மதுரையில் முஸ்லிம்கள் ஒவ்வோர் முறையும் தங்கள் தேவைகளுக்கு உதவ சமூக அமைப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் எவ்வளவு கஷ்ட்டப்படுகின்றார்கள் என்பதையும் விளக்கி அதற்காக இந்த அமைப்பு துவங்கப்பட்டது என்றும் இது எவ்வாரெல்லாம் செயல்பட வேண்டும் என்பதையும் இந்த அமைப்பை தொடாந்து வெறிறிகரமாக நடத்திட மதுரை முஸ்லிம்களிடம் எவ்வித ஒத்துழைப்பை இதன் நிர்வாகிகள் எதிர் பார்க்கின்றார்கள் என்பது குறித்தும் விளக்கினார்.

இறுதியில் மதுரையை சேர்ந்த சகோ. சையது அப்துல் காதிர் அவர்கள் நன்றியுரை நல்க நிகழச்சி இனிதே நிறைவடைந்தது. இஸ்லாமிய சமூக வழிகாட்டி அமைப்பு - மதுரை (ISLAM) என்ற இந்த அமைப்பிற்கான நிர்வாகிகள் இனி வரக்கூடிய அமர்வுகளில் தோந்தெடுக்கப்படுவார்கள் என்றும் இவ்வமைப்பில் இணைய விருப்பம் உள்ள மதுரையை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் கீழக்கண்ட தொலை பேசி என்களை தொடாபு கொள்ளுமாறும் கெட்டுக் கொள்ளப்பட்டது.

சகோ. மு.ம. சுபுஹான் - 0561516778
சகோ. அப்துல் ரஷித் - 03 - 5864838
சகோ.சையது கஃபூர் - 0502743448
சகோ. முகம்மது நிஸாருத்தீன் - 0508234583
சகோ. அப்துல் காதர் - 0507912379

இந்நிகழச்சியில் கலந்து கொள்ள மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த சகோதரர்கள் திறளான அளவில் தம்மாம், அல்கோபர், அல் ஹஸ்ஸா, ஜீபைல், அப்கைக் போன்ற பகுதிகளில் இருந்து ஆர்வத்துடன் வந்திருந்தனர். இவர்கள் அணைவருக்கும் தங்களுக்கென ஓர் அமைப்பு இறுதியில் உறுவான திருப்தியுடன் திரும்பி சென்றனர்.

மதுரை, காரைக்குடி, இஸ்லாம்

Friday, March 02, 2007

தென்காசி தமுமுக தலைவர் இந்து தீவிரவாதிகளால் வெட்டப்பட்டார் (FLASH NEWS)

தமுமுக தலைவர் இந்து தீவிரவாதிகளால் வெட்டப்பட்டார்



தென்காசி தமுமுக மாவட்ட தலைவராக இருப்பவர் சகோ. மைதீன் சேட் கான் அவர்கள் இவர் இன்று இரவு சுமார் 8.30 மணியளவில் தனது இஷா இரவுத்தொழுகையை முடித்து விட்டு பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பும் வழியில் உள்ள ஒரு டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது திடீரென் அங்கு வந்த இந்து முண்ணனியை சேர்ந்த இந்து தீவிரவாதிகள் மூன்று பேர் சகோ. மைதீன் சேட் கானை சரமாரியாக கழுத்திலும், நெஞ்சிலுமாக மாறி மாறி கொடூரமான முறையில் வெட்டினர் பின்னர் அங்கிருந்து அந்த இந்து முன்னனியை சேர்ந்த இந்து தீவிரவாதிகள் தப்பி சென்று விட்டனர்.

இந்து தீவிரவாதிகளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமுமுக நிர்வாகி மைதீன் சேட் கானை அங்குள்ள மக்கள் உடணடியாக வாகனத்தில் ஏற்றி பாளையங்கோட்டை ஹைகிரவுன்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி (சவுதி நேரம் இரவு 9.00) அவருக்கு தனிப்பிரிவில் தீவிர அறுவை சிகிச்சை நடந்து வருவதாகவும் அவரது உயிரை காப்பாற்ற 7 பேர் அடங்கிய மருத்துவ குழு ஒன்ற போராடி வருவதாகவும் வரக்கூடிய தகவல்கள் தெறிவிக்கின்றன. மருத்துவமனையில் இருந்து இடையில் நம்மிடம் தொலைபேசியில் பேசிய சகோதரர் பஸ்லுல் இலாஹியும் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் சிலரால் வெட்டிக் கொல்லப்பட்ட இந்து தீவிரவாதி குமார் பாண்டியன் கொலைக்கு பலிக்குப்பலியாகவோ அல்லது நேற்று முன்தினம் சிலர் தன்னைக் கொல்ல வந்ததாக நாடகமாடி காவல் துறையினரிடம் முன்கூட்டியே புகார் அளித்த இந்து தீவிரவாதி அச்சன் புதூர் இந்து முன்னனி தலைவர் நடராஜன் ஏற்ப்பாட்டிலும் இந்த கொடூர கொலை முயற்சி நடந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இந்து தீவரவாதிகளால் முஸ்லிம்கள் தாக்கப்படுவதற்கு நம்முள் இருந்து அவர்களுக்கு நமது நடமாட்டத்தை பற்றிய தகவல்களை அளித்து வரும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் போன்ற துரோகிகளின் நடவடிக்கைகளும் முக்கிய காரனமாக அமைந்துள்ளன. இந்து தீவிரவாதி குமார் பாண்டியன் கொலையை செய்தது தமுமுக வினர் தான் என்று இந்து முண்ணனியினருக்கும் காவல் துறைக்கும் தகவல் கொடுத்தது மட்டும் அல்லாது தனது பத்திரிகையான உணர்விலும் முஸ்லிம் என்ற உணர்வு சிறிதும் இன்றி சக முஸ்லிம் இயக்கத்தின் உள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பி. ஜெயினுல்லாபுதீன் என்ற இந்த தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் தலைவன் அயோக்கியத்தனமாக தமுமுக வினர்தான இந்த இந்து தீவிரவாதியை கொலை செய்தனர் அந்த இயக்கத்தை அரசு தடை செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று எழுதி ராமகோபாலனை விட மோஷமாக நடந்தவன் தான் இந்த அயோக்கியன் பி.ஜெயஜனுல்லாபுதீன் இவனது இயக்கம் கூட தற்போது இந்து தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் தமுமுக நிர்வாகி மைதீன் சேட் கானின் நடமாட்டங்களை பற்றிய தகவல்களை பி.ஜே மூலமாக இந்து முண்ணணியினருக்கு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் மக்களிடையே நிலவுகின்றது ஏனென்றால் ஏற்கனவே பலமுறை ஜாக் போன்ற சக முஸ்லிம் இயக்கங்களை மத்திய மாநில உளவுத்துறைக்கு போட்டுக் கொடுத்தவன்தான் இந்த துரோகி பி.ஜே. அவனது பங்கும் இந்த கொலை முயற்சியில் இருக்கலாம்.

இன்று காலையில் இருந்தே பி.ஜே மற்றும் பாக்கர் பினாமிகளாக இருக்கும் அதிமுக ஆதரவு வின் டிவி யில் தென்காசியில் பதட்டம் என்று பிளாஸ் ஓட விட்டது எப்படி? தமிழகத்தில் மீண்டும் மதக்கலவரத்தை இந்து முண்ணணி மற்றும் ததஜ போன்றோரின் துனை கொண்டு ஆரம்பித்து தென்காசி பொன்ற நகரங்களை கலவர பூமியாக்கி அதன் மூலம் தமிழகத்தில் டாக்டர் கலைஞரிரின் ஆட்சியை கவிழ்க்க அதிமுக செய்த சதியா இது? அல்லது தமிழக அரசு மீண்டும் முஸ்லிம் விரோத அரசாக மாறி வருகின்றதா?

தமிழக முதல்வர் உடணடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட இந்து முண்ணணி தீவிரவாதிகளை கைது செய்ய வேண்டும். பதட்டமாக உள்ளது என்று தெறிந்திருந்தும் முஸ்லிம்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்காது முஸ்லிம்களையே குறி வைத்து கைது செய்தும் வந்து இந்த கொடூர தாக்குதலுக்கு துனை நின்ற தென்காசி காவல்துறையின் ஒட்டு மொத்த கருப்பாடுகள் மீதும் உடணடி நடவடிக்கைக்கு அரசு உத்தரவிட வேண்டும். இந்த படுபாதக செயலுக்கு பின்னால் உள்ள இந்து தீவரவாத இயக்கமான இந்து முண்ணணியின் தலைவன் தீவிரவாதி இராம கோபாலனை கைது செய்து அந்த தீவிரவாத இயக்கத்தை தடை செய்ய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் முஸ்லிம் சமுதாயம் இதுபோல் சக முஸ்லிம் இயக்கம் என்றும் பாராமல் தங்கள் சுய நலனுக்காக இந்த சமுதாயத்தை காட்டிக் கொடுத்தும் நமது முஸ்லிம்களையே தீவிரவாதிகள் என்றும் பேசியும் வரும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்pனரை பற்றியும் துரோகி பி.ஜே யையும் புறக்கனிக்க வேண்டும்.

மேலதிக செய்திகள் நாளை வெளியிடப்படும் இன்சா அல்லாஹ்.

காரைக்குடி இஸ்லாம் பி.ஜே துரோகம் ததஜ முனாஃபிக் தனம்