Thursday, March 08, 2007

தென்காசி - இந்து தீவிரவாதி கைது



தென்காசியில் தமுமுக தலைவர் சகோ. மைதீன் சேட் கான் அவர்கள் மீது கடந்த வாரம் இந்து முன்னனியை சேர்ந்த இந்து தீவிரவாதிகள் அவரை கொலை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் கொடூர கொலை வெறி தாக்குதலை நடத்தினர். அல்லாஹ்வின் பெருங்கருனையால் சகோ. மைதீன் சேட் கான் அவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உயிர் பிழைத்தார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய இந்து முன்னனியயை சேர்ந்த இந்து தீவிரவாதிகளை காவல் தறையினர் தேடி வந்தனர். மற்றும் டெல்லி பேரணி முடிந்தால் தமுமுக வினரின் பெரும் போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்ற நிர்ப்பந்தத்திலும் மிக துரிதமாக காவல் துறையினர் நியாய உணர்வுடனும் செயல்பட்டு தலைமறைவான இந்து தீவிரவாதிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சகோ. சேட் மைதீன் கான் மீது தாக்குதல் நடத்தியதாக தென்காசியை சேர்ந்த இந்து தீவிரவாதிகள் செந்தில்குமார் மற்றும் சுரேந்தர் என்ற இருவர் கோவை-பல்லடம் நீதிமன்றத்தில் சரனடைந்தனர் பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று தென்காசி காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு கபிலன் என்ற ந்து முன்னனியை சேர்ந்த தீவிரவாதியை கைது செய்துள்ளனர்.

சிறப்பாக செயல்படும் காவல் துறையினருக்கு பாராட்டுக்கள் இதே வேகத்தில் இவ்வழக்கில் எஞ்சிய இந்து முன்னனியை சோந்த இந்து தீவிரவாதிகளையும் கைது செய்து சட்ட ஒழுங்கையும், நீதியையும் நிலைநாட்டி காவல் துறை தனது செயல்பாடுகள் மதச்சார்பற்றது என்பதை நிறுபிக்கும் என்று நம்பகின்றோம்.

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

No comments: