Saturday, March 24, 2007

தனது பெயரில் வெளியான மடல - பாக்கர் மறுப்பு!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் பொதுச்செயளாலராக இருந்த எஸ்.எம். பாக்கர் என்பவர் ததஜ வால் நடத்தப்படும் மாற்று மதத்தில் இருந்த இஸ்லாத்திற்கு வந்தோருக்காக நடத்தப்படும் மதராஸாவில் பயின்ற மாணவி ஒருவருடன் நெருக்கமாக ஒரே சீட்டில் ஒருவர் மார்பில் ஒருவர் சாய்ந்து பயணிக்க கூடிய முகாந்திரங்களுடன் பயணம் செய்ததாக ததஜ வின் தலைவர் பி.ஜே யால் குற்றம் சாட்டப்பட்டு ததஜ வின் பொதுச் செயளாலர் பொருப்பிலிருந்து பாக்கர் நீக்கப்பட்டார். இது குறித்து பி.ஜே அவர்கள் பாக்கரை பற்றிய குற்றச் சாட்டக்களுடன் இணையத்தில் ஆடியோ ஃபைல் ஒன்றையும் உலவ விட்டார்கள்.

இந்நிலையில் நேற்றைய முன்தினம் வியாழக் கிழமை (22.03.2007) இணையத்தில் மின்னஞ்சல் மூலமாக "அநியாயத்துக்கு அளவேயில்லையா பி.ஜே?" என்ற தலைப்பில் தனது பக்க நியாயங்களை எடுத்துறைத்து பாக்கர் எழுதியதாக ஒரு மடல் நமக்கும் கிடைக்கப் பெற்றது அதை மக்களின் பார்வைக்காக உடனடியாக நாமும் இங்கு பதிவு செய்தோம்.

நாம் பதிவு செய்த சில மனித்துளிகளிலேயே ததஜ வில் இருந்து பி.ஜேயால் மிக அசிங்கமாக முஸ்லிமாக மாறி மதரஸாவில் பயின்ற மாணவியோடு இணைத்து காம குற்றச் சாட்டு சாட்டப்பட்டு பொருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட எஸ்.எம் பாக்கர் அவரது பெயரில் பி.ஜே யை தாக்கி வெளியான அந்த மடல் தான் எழுதியதில்லை என்றும் அவரும் பி.ஜேயும் இப்போதும் நட்புடன் தான் உள்ளதாகவும் கூறி ஒரு மறுப்பு ஆடியோ ஃபைலை ததஜ வின் அதிகாரப் பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். வாசகர்களின் பார்வைக்காக அதையும் நாம் இங்கு தருகின்றோம். பாக்கரின் அந்த மறுப்பை கேட்பதற்க கீழே சொடுக்கவும்.

No comments: