Showing posts with label கோவை. Show all posts
Showing posts with label கோவை. Show all posts

Sunday, November 23, 2008

கோவையில் காதலனுடன் கல்லூரி மாணவி கடத்தல்-வீட்டில் அடைத்து கற்பழித்த கொடூரம்


கோவை, நவ. 23-
கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பீல்டு அவுசிங்ïனிட் பகுதியை சேர்ந்தவர் மோகனபிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மோகன பிரியா பொள்ளாச்சி ரோட் டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவரது நண்பர் சாய்பாபா காலனியை சேர்ந்த ஆனந்த் (30). இவருக்கு திருமண மாகிவிட்டது.

இவர்கள் இருவரும் ரேஸ்கோர்சில் உள்ள ஒரு காபி பார்முன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் கார் அருகே வந்து கார் கண்ணாடியை தட்டினர்.

கார் கண்ணாடி திறக்கப்பட்டதும், நாங்கள் போலீஸ்காரர்கள், நீங்கள் 2 பேரும் யார், எதற்காக இங்கு இருக்கி றீர்கள், உங்களை விசாரிக்க வேண்டும் என்று கோரி திடீரென காருக்குள் ஏறிக் கொண்டனர். ஆனந்தும் போலீசார் தான் என நம்பினார்.

காரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்வதாக கூறிய அவர்கள் சூலூர் அருகே கொண்டு சென்றனர்.

அப்போது காரில் இருந்த 3 பேரும் அவர்களை மிரட்டினர். பின்னர் கார் சூலூரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டு முன்பு போய் நின்றது. மோகனபிரியா, ஆனந்தைகாரில் இருந்து இறக்கி வீட்டுக்குள் அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி 2 பேரையும் நிர்வாணப்படுத்தினர்.

தொடர்ந்து அவர்களை நிர்வாண கோலத்தில் செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டனர். அதோடு இல்லாமல் மோகன பிரியாவை கற்பழித்துள்ளனர். மேலும் மெழுகு வர்த்தியை எரிய வைத்து மெழுகை மோகனபிரியாவின் உடலில் கொட்டி சித்ரவதை செய்துள்ளனர்.

வலிதாங்க முடியாத மாணவி மோகனபிரியா அலறிதுடித்தார். பின்னர் அந்த கும்பல் இதுப்பற்றி வெளியே சொன்னால் உங்களது நிர்வாண படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டி ரூ.5 லட்சம் பணமும் கேட்டுள்ளனர்.

பணம் கொண்டு வர ஆனந்தை மட்டும் கொள்ளை கும்பல் அனுப்பி வைத்தது. அப்போது அங்கிருந்து வந்த அவர், நடந்த விவரங்களை செல்போன் மூலம் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

அதன்படி போலீஸ் கமிஷனர் மஹாலி உத்தர வின் பேரில், துணை கமிஷனர் ராஜேந்திரன், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பாழடைந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் 3 பேரும் தப்பி ஓடினர்.

அவர்களில் ஒருவரை போலீசார் விரட்டி பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது அவர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஹக்கீம் (வயது 30) என்பது தெரியவந்தது. இவர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடையவர் ஆவார்.

மேலும் ஹக்கீம் கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி பூனைக்கண் சலாம் என்பவரின் சகோதரர் ஆவார். ஹக்கீமிடம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் சுந்தரவடிவேல் ஆகியோர் நடத்திய விசா ரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

கைதான ஹக்கீம் தலைமை யிலான கும்பல் தனியாக நிற்கும் காதலர்களை கத்தி முனையில் கடத்தி சென்று அவர்களை நிர்வாணமாக்கி, படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.

வழக்கமாக இவர்கள் காதல் ஜோடிகளை சூலூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டுக்கு கொண்டு சென்று மிரட்டுவார்கள். அப்போது இவரது மற்ற நண்பர்களும் சேர்ந்து கொண்டு மிரட்டி வந்தனர்.

அதோடு இல்லாமல் பெண்களை கற்பழிக்கவும் செய்து உள்ளனர். இவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. சினிமாவை மிஞ்சும் வகையில் திட்டமிட்டு இதுபோன்ற சம்பவங்களை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

கைதான ஹக்கீம் மீது கற்பழிப்பு வழக்கு போடப் பட்டுள்ளது. அதோடு ஹக்கீம், கொள்ளை கும்பலை சேர்ந்த ஜார்ஜ், மணி உள்பட 6 பேர் மீது போலீசார் கூட்டு சதி, கொலை மிரட்டல் உள்பட 11 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான ஹக்கீம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய 5 பேரையும் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மாணவியை கற்பழித்ததாக ஹக்கீம் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. ஆனால் மேலும் 2 பேர் மாணவியை கற்பழித்த தகவலும் வெளியாகி யுள்ளது.

இதற்கிடையே கொள்ளை கும்பலால் பாதிக்கப்பட்ட மாணவி மோகனபிரியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நன்றி : மாலைமலர்

Monday, May 19, 2008

வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்

எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணைசிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது. High Quality ஒரே File ஆக உள்ளது.


வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின்

மறைக்கப்பட்ட உண்மைகள்

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



Friday, May 16, 2008

தமிழக சிறைகளில் வாடும் சிறைவாசிகளின் இன்றைய நிலை

குறிப்பு : இன்றைய தேதிப்படி இன்னும் நூற்றும் மேற்ப்பட்ட சகோதரர்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் பலருக்கு ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் விடுதலைக்காக உசச் நீதி மன்றங்களில் முறையீடு செய்யவும், இவர்களின் குடும்ப உதவிக்காகவும் அதிகம் பொருளாதரம் தேவைப்படுகின்றது. இந்த குடும்பங்கள் உங்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். நம் சமுதாயம் என்றும் இவர்களை கைவிடாது என்ற நம்பிக்கையில் நம்மிடம் கையேந்தி உதவி கோரும் இம்மக்களை நம் சமுதாயம் கைவிடாது என்ற நம்பிக்கையில் நான் இதை இங்கு மீள் பதிகின்றேன்.



''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்
CLICK HERE TO VIEW THE VIDEO

இவர்களின் அவலம் மாறுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே.,

நமது சமுதாய இயக்கங்கள் அனைத்தும் யாருடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனவோ அந்த முஸ்லிம் சிறைவாசிகள் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு நீண்ட நெடிய 8 ஆண்டுகளாகிவிட்டன. கொடிய சிறை வாழ்வு., இவர்களின் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி நான்கு சுவர்களுக்கு மத்தியில் விரயமாகிக் கொண்டிருக்கின்றன. இவை என்றுதான் முற்றுபெறுமோ? என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம்! இவர்களின் தேவை குடும்பங்களுக்கு அல்லவா மிக மிக அவசியம்.

எட்டு ஆண்டுகளில் இக்குடும்பங்கள் அடைந்திட்ட துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் வருமானங்கள் நிரந்தர தடையாகிவிட்டன. குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய நிர்பந்தத்தால் இக்குடும்பத்தின் மென்மையான சகோதரிகள் தங்களின் மென்தோல்கள் வலுவிழக்கும் அளவிற்கு ஆண்களைப் போல் கடினமாக உழைத்திட வேண்டிய பரிதாபமான நிலை. இக்காலத்தில் என்னதான் கடுமையாக உழைத்தாலும் குடும்பத்தை ஒப்பேற்ற ஆணுக்கே மிக கடினம் என்கின்றபோது பெண்களால் என்னதான் செய்ய இயலும்.

வயிற்றுப்பாட்டுக்கே தினம் தினம் பெரும் திண்டாட்டம், மூன்று வேளை உணவைக்கூட முறையாக உண்பதே பெரும்பாடு என்கின்றபோது, குடும்பத்தின் மற்ற அத்யாவசிய செலவினங்களுக்கு என்னதான் செய்வார்கள் இவர்கள். ஒருவர் திடீரென கடும் நோய்வாய்ப்பட்டால் வேறு வழியில்லை, இறக்க வேண்டியது தான். பெரும் மழையினால் வீட்டுக்கூரை சரிந்துவிட்டால்.. என்ன செய்வது? வானம் பார்த்த வீட்டில் தான் சிரமப்பட்டாக வேண்டும். இன்னுமின்னும் நெஞ்சை பிழியவைக்கும் ஏராளமான துன்ப துயரங்கள் சிறைப்பட்ட ஒவ்வொரு வீடடிலும் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நித்தம் தொடரும் தொடர் துயரங்களால் இவர்களின் குடும்பங்களில் வாழ்க்கையின் போக்கு திக்கு தெரியாத காட்டில் திசைமாறிச் செல்வது போல முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன..

இந்தச்சிறைவாசிகளின் சகோதரிகளிள் பலர் திருமணம் கூட
ஆகாமல் முப்பது வயதைத்தாண்டியும் முதிர்கன்னிகளாகதங்கள் வாழ்வை தொலைத்து நிராதரவாக நிற்கின்றனர். தங்கள் தந்தையரையும், தமயர்களையும் சிறைகளிள் தொலைத்தது போல். காரணம் பொருளாதாரம்.. தமது வாழ்வாதாரங்களான ஆண்களை சிறைக்கு அனுப்பியபின் இவர்களின் குடும்பங்கள் இன்று திக்குத்தெறியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றன.
எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணை
சிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது.

எட்டு ஆன்டுகளாக தங்கள் கணவரை, சகோதரனை, தந்தையை பிறிந்து தவிக்கும் நமது சமுதாயச் சகோதரிகளின் கண்ணீர்க் கதறல்களை காவியமாக வடித்துள்ளார்கள்.


''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்

இதுமட்டுமல்லாது இவர்களின் குழந்தைகள் தங்களின் கல்வியை தொடர இயலாது தவித்து வருகின்றார்கள் இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கின்றது.

இக்குழந்தைகளின் தந்தைமார்களும், சகோதரர்களும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் விதிவசத்தால் முடங்கிக்கிடப்பது போல் இவர்களது குழந்தைகளின் கல்வியறிவு முடங்கிப் போய்விட சமுதாயம் காரணமாகி விடக்கூடாது. ஒருபோதும் இப்பெரும் பாவத்திற்கு சமுதாயம் ஆளாகிவிடக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்திட நம் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தார்மீக பொறுப்புண்டு..


இந்த குழந்தைகளும் கூட நமது சமுதாயத்தின் செல்வங்கள்தான். இவர்களின் தந்தைமார்கள் சிறைவாசிகள் என்ற காரணத்திற்காக இவர்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. இக்குழந்தைகளின் விபரங்களும் இவர்களின் கல்வி செலவுகளும் (அதிகமில்லை சில ஆயிரங்களே இதை நமது சமுதாயம் கட்டாயம் ஏற்க வேண்டும்) இங்கு பதியப்பட்டுள்ளன. அவற்றை வேண்டுவோர் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


சிறைவாசி குழந்தைகளின் கல்வி விபரம் டவுன் லோட்

இவர்களுக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட அறக்கட்டளையின் முகவரிக்கு தங்கள் உதவிகளை அனுப்பலாம்.


CHARITABLE TRUST FOR MINORITIES

A/C NO. SB 57991

UNITED BANK OF INDIA
OPPANAKKARA STREET BRANCH
COIMBATORE - 641001.
******************************
CHARITABLE TRUST FOR MINORITIES
RAHIM PLASTIC HOUSE
GNANIYAR NAGAR
SARAMEDU,
KARUMPUKKADAI
COIMBATORE - 8
TEL. : 0091-422-2307673 / +91-9786093544

படிப்பறிவில்லாதவர்களின் கல்விக்கண்களை திறக்கச் செய்தமைக்காக பத்ருப்போரின் கடும் எதிரிகளையே விடுதலை செய்திட்டார் நம் அருமைத்தலைவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்.

நம் அருமைத் தலைவர் கல்விக்கு தந்திட்ட முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். படிக்காத உம்மி நபிதான் ஆனால் சமுதாயத்தில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாமல் இருந்திடக்கூடாது என அறிவுறுத்தத்தான் "தொலைந்து விட்ட பொருளை தேடுவது போல கல்வியை தேடிக்கொள்" என கல்வியின் மாண்பை எடுத்தரைத்தார்.

சமுதாயத்தில் நிகழ்ந்திட்ட கொடுமைகளை எதிர்த்ததற்காக இச்சிறை வாழ்வை பரிசாக பெற்றவர்களின் குழந்தைகளின் கல்விக்கண்கள் திறக்க எத்தடையும் இருந்துவிடக்கூடாது.
உதவியின்மையால் இவர்களின் கல்வி தடைபடுமானால் இதைவிடக்கொடுமை வேறெதுவும் இல்லை.


அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இவர்களின் கல்விக்கண் திறக்க தாராளமாய் முன்வந்து உதவிகளை வாரி வழங்கிட வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பைசா உதவியும் வீணாகி விடாது. இதுவே, உங்களின் உண்மையான (மறுமைக்கான) சேமிப்பு ஆகும்..


நிராதரவாகிப் போன இக்குழந்தைகளின் கல்விக்கு உதவுவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். உதவிகளிலே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். இக்குழந்தைகள் படிக்க, படிக்க, பட்டங்கள் வாங்க வாங்க இவர்களால் சமுதாயம் பயன் அடைய அடைய உங்களின் தர்மத்தின் நன்மை கணக்கில்லை மறுமை வரை பெருகிக்கொண்டே செல்லும்!

இவர்களின் அவலம் கட்டாயம் மாறும்.. மாற்றலாம் நாம் நினைத்தால்... (இறைவன் துணையுடன்)

என்றும் அன்புடன்,
முகவைத்தமிழன்

Wednesday, February 27, 2008

FAKE BOMB PLOT கருப்பு ஆடு இரத்தின சபாபதியை கைது செய்ய MNP கோரிக்கை

மனித நீதிப் பாசறையின் மீதும் முஸ்லிம்களின் மீதும் களங்கம் ஏற்படுத்தி வீன்பழி சுமத்தும் வகையில் பொய்யான வெடிகுண்டு வழக்கை ஜோடனை செய்த கோவை போலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனித நீதிப் பாசறை அறிக்கை.



கிரைன்டர் கண்டன்சரும், பேட்டரியும் பாமாக காட்டப்பட்ட விதம்

இவ்வழக்கு எப்படி ஜோடிக்கப்பட்டது, உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலைநாட்ட எப்படியெல்லாம் MNP,TMMK,ஐக்கிய ஜமாத் என பல்வேறு அமைப்புகளும் களம் இறங்கி போராடி நியாம் கிடைக்க வழி செய்தன என்பதை தெளிவாக அறிவதற்கு இக்கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்களில் உள்ள கட்டுரைகளை வாசியுங்கள்.

கோவையில் கடந்த ஜீலை (22.07.2006) அன்று 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ழைகது செய்தனர். யாரும் எந்த புகாரும் கொடுக்காத நிலையில் இரவு நேரத்தில் திடீரென அந்த இளைஞர்களின் வீட்டில் அத்து மீறி நுழைந்து அவர்களை கைது செய்து அவர்க்ள வீட்டில் குழந்தைகள் படிக்க வைத்திருந்த வரைபடத்தையும், கிரைன்டர் கண்டன்சரையும், வீணாகிப்போன பேட்டரிகளையும் எடுத்தக்கொண்டு அவர்களை தீவிரவாதிகள் எனவும் அவர்களிடம் இருந்து கோவை மாநகரையே தகர்க்க கூடிய அளவிற்கு சக்தி பெற்ற ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் கோவை மாவட்ட உளவுத்துறை உதவி ஆணையர் ரத்ன சபாபதி கூறினார். முஸ்லிம்களுக்கெதிரான குரோதத்தையும், மனித நீதிப் பாசறைக்கெதிரான வண்மத்தையும் மனதில் வைத்துக்கொண்டு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மனித நீதிப் பாசறையை சேர்ந்தவர்கள் என கதை கட்டினார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவை அனைத்தும் வடிகட்டிய பொய் என்பது நிரூபனமானது. தமிழக அரசும் அவர் மீது முதல் கட்ட நடவடிக்கை எடுத்து பணிமாற்றமும், இடமாற்றமும் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் மனித நீதிப் பாசறை, கோவை ஐக்கிய ஜமாத், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கடுமையான தொடர் முயற்சிகளால் இவ்வழக்கு விசாரனை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வழக்கு குறித்து விசாரனை நடத்திய சி.பி.சி.ஐ.டி (SIT) சிறப்பு புலனாய்வு குழு தனது இறுதி அறிக்கையை கோவை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது.

கோவை உளவுத்துறை ஏ.சி ரத்தின சபாபதி உருவாக்கிய மூன்று தனிப்படைகள் 5 முஸ்லிம் அப்பாவி இளைஞர்களை கைது செய்துள்ளனர் என்பதும், இந்த மூன்று தனிப்படைகளுக்கு தலைமையேற்ற ஏ.சி க்கள் திரு.குமாரசாமி, திரு. அண்ணாதுரை, திரு. ஜெய பாண்டியன் ஆகியோர்கள் தாங்களே பைப் வெடிகுண்: (Pipe Bomb) மற்றும் கையெறி குண்டு (Hand Granade) ஆகியவற்றை தயார் செய்தள்ளனர் என்பதும் போலிஸ் சாட்சிகள் மற்றும் இதர சாட்சிகள் மூலம் நரூபனம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரனையில் முன் தேதியிட்ட ஆவணங்களை ரத்தின சபாபதி தூண்டுதலின் அடிப்படையில் செயல்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் பால்ராஜால் தயார் செய்யப்பட்டுள்ளன என்பதும் BDDS (Bumb Detection and Defuse Squad) எஸ்.ஐ திரு. மகேந்திரன் அவர்கள் வெடிகுண்டைக் கைப்பற்றிய இடத்திற்கு நேரில் வந்ததாகவும் வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்ததாகவும், மேற்படி இன்ஸ்பெக்டர் பால்ராஜே பொய்யாக மகஜரை (ஆவணங்களை) தயாரித்து அதில் அவரே எஸ்.ஐ மகேந்திரன் கையெழுத்தை போலியாக போட்டுள்ளார் என்பதும் நிபுணர்கள் (Expert opinion) மூலம் நிருபனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை போலியாக தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும், வெடிகுண்டுகளை போலிசாராலேயே தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும், ஆவணங்கள் போலியாக தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும் Nacro Analysis Test எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையிலும் நீரூபனம் செய்யப்பட்டுள்ளது.


மனித நீதிப் பாசறையின் கோரிக்கைகள்


1. ரத்தின சபாபதி மற்றும் இதற்கு துனை போன அதிகாரிகளின் கபட நாடகத்தால் தன்னுடைய எதிர்காலத்தை தொலைத்து விட்டு நிர்க்கதியாக நிற்கும் இந்த அப்பாவிகளுக்கு தமிழக அரசு ஈட்டுத்தொகை வழங்க வேண்டும்..

2. தமிழக காவல்துறைக்கு கலங்கம் ஏற்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அதற்கு மாறாக "வேலியே பயிரை மேய்வது போல்" ஐந்து முஸ்லிம்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய முன்னாள் உளவுத்துறை அதிகாரி ரத்ன சபாபதி மீதும் மற்றும் அவருக்கு துணை போன அதிகாரிகள் மீதும் துறை சார்ந்த விசாரனை மேற்க்கொள்ளப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக் மேற்க்கொண்டு நரந்தரப் பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட வேண்டும்.

3. தமிழக அரசின் ஆரம்ப கட்ட நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால் போலியாக புனையப்பட்ட வழக்குகளின் மூலம் முஸ்லிம்கள் மீது அவதுர்று சுமத்தி, மனித உரிமைப் பணிகளையும் சமூக சேவைகளையும் செய்து கொண்டு வரும் மனித நீதிப் பாசறையின் மீது களங்கம் கற்பித்து, தமிழகத்தை பீதிக்குள்ளாக்கிய ரத்தின சபாபதியை மீண்டும் அதே ஊரில் பணியில் அமர்த்தியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ப்தியையும், முஸ்லிம்கள் மத்தியில் அடுத்து என்ன நாடகம் அரங்கேறுமோ என்ற அச்சத்தையும் அளித்துள்ளது. தமிழக அரசு இதை கவணத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்.

4. மனித நீதிப் பாசறையின் மீதும் கோவை முஸ்லிம்கள் மீதும் இப்பொய்வழக்கு போடுவதற்கு காரணம் என்ன என்பதையும் இதன் பின்னணியில் தேச விரோத சக்திகளின் தூண்டுதல் உண்டா என்பதையும் தமிழக அரசு கண்டறிந்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும். முஸ்லிம்களுக்கெதிராகவும் இப்பொய் வழக்கு மூலம் சாதிக்க நினைத்த மற்றும் தூண்டுதலின் பின்னணி என்ன என்பதை கண்டறிதல் வேண்டும் எனவும் தனது அறிக்கையில் மனித நீதிப் பாசறையின் சார்பாக அதன் மாநிலத் தலைவர் திரு.எம். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கோரியுள்ளார்கள்.


தமிழ் முஸ்லிம் அரசியல் மேடையின் அறிக்கை :

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை வாசகர்களுக்கும் மற்றும் நமது தளத்தை தொடர்ச்சியாக வாசித்து வரும் சகோதர சகோதரிகளுக்கு நன்கு அறிந்த விசயம் முதன் முதலில் காவல் துறையின் கருபு்பு ஆடு திரு.ரத்தின சபாபதியால் புணையப்பட்ட இந்த நாடகத்தை அம்பளத்துக்கு கொண்டு வந்தது நமது தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை மூலமாகத்தான் என்பதை யாரும் மறக்க மாட்டீர்கள்.

இந்த சம்பவம் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட இந்த சகோதரர்கள் வெளியில் வரவேண்டும் என்பதற்காகவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக பல சகோதரர்கள் ஆர்வமாக இருந்தார்க் அவர்களின் உதவியுடன் ரத்தின சபாபதியின் தோலுரிக்கப்பட்டு அவரின் உண்மை முகம் பல கட்டுரைகளின் வாயிலாக அம்பலப்படுத்தப்பட்டது. இன்னும் பல நமது சமூக இயக்கங்களையும் தொடர்பு கொண்டு இயக்க பேதம் பாராமல் ஒற்றுமையாக இந்த பிரச்சினையை எதிர் கொள்ள வேண்டும் என்று வலியுருத்தப்பட்டது.

நிகழ்வின் உச்சகட்டமாக அரசில் அங்கம் வகித்தும் சமுதாய ஒற்றுமை கருதி தமுமுக வும் மனித நீதிப் பாசறையினருடன் கைகோர்த்து ரத்தின சபாபதி எனும் இந்த நுன்கிருமிக்கெதிராக களம் இரங்கியது. தமுமுக வின் பொதுச்செயளாலரும், வக்ஃப் வாரியத் தலைவரும் ஆன திரு.ஹைதர் அலி மற்றுமு் திரு உமர் அவர்களும் நேரடியாக கோவை வந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்ததோடு இவ்வழக்கில் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என அரசை வலியுருத்தினர். பிரபல மனித உரிமை ஆர்வலர் திரு.கோ. சுகுமாறன் போன்ற பல மனித உரிமை ஆர்வலர்களையும் அமைப்புகளையும் நாம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இவ்வழக்கில் நீதி விசாரனை நடத்த வேண்டி அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டினோம்.

பல்வேறு தரப்பினரின் முயற்சியின் விளைவாக கடந்த ஆகஸ்ட் 01, 2006 அன்று தமிழக முதல்வர் திரு.மு.கருனாநிதி அவர்கள் இந்த வழக்கில் தொடாபுடைய காவல்துறையின் கருப்பு ஆடு இரத்தின சபாபதியை இடமாற்றம் செய்தும் நீதி விசாரனை நடத்த வேண்டியும் உத்தரவிட்டர். இனறு அந்த நீதி விசாரனையின் அறிக்கையில் நாம் ஆரம்பத்தில் இருந்து என்ன எழுதி வந்தோமோ அதுவே உண்மை என அறியத் தரப்பட்டுள்ளது. காவல் துறையின் கருப்பு ஆடகளின் முகத்திரை கிழித்து எறியப்பட்டுள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கு.
இது நமது சமுதாய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இந்த போராட்டங்களின் எந்த ஒரு கால கட்டத்திலும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பங்கெடுக்கவில்லை என்பதை சமுதாயம் கட்டாயம் அறிய வேண்டும். இவர்களைத் தவிர அனைத்து தரப்பினரும் இணைந்து போராடியதன் விளைவு குறைந்தபட்சம் இந்த சி.பி.சி.ஐ.டி யின் விசாரனை அறிக்கை இந்த சமுதாயத்துக்கு எதிராக பின்னப் பட்ட சதிவலையின் உண்மை முகத்தினை உலகம் அறியத் தந்துள்ளது. இன்னும் இதன் பின்னால் உள்ளவர்கள், உண்மை குறிக்கோள் என்ன என்பது தெறிய வரவில்லை.

தமிழக அரசும் முதல்வர் கலைஞர் அவர்களும் தனது ஆட்சிக்காலத்திற்குள்ளாகவே அப்பாவி இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தறித்து ஒரு சமுதாயத்திற்கெதிராக மக்களை திசை திருப்பி, தமிழகத்தை கலவரக் காடாக்க சதி செய்த சமூக விரோதி தமிழக காவல்துறையின் கருப்பு ஆடு ரத்தின சபாபதியையும் அவருக்கு துனை நின்ற அதிகாரிகளையும் உடனடியாக நடவடிக்க எடுத்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இன்னும் இந்த சம்பவங்களுக்கு பின்னால் உள்ளவர்களையும் தமிழக மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். தமிழக முதல்வர் செய்வார் என் எதிர் பார்ப்போம். தமிழக முஸ்லிம் அமைப்புகள் இனிவரும் காலங்களிலும் தமிழக முஸ்லிம்களுக்கெதிராக ஃபாசிச சக்திகளால் தொடுக்கப்படும் தாக்குதல்களை இயக்க பேதம் பார்க்கமல் ஒற்றுமையாக எதிர்க்க வேண்டும்.


நன்றி
முகவைத்தமிழன்


தொடர்புடைய கட்டுரைகள்

1. MNP தீவிரவாதிகள் காவல்துறையின் சதி? EXCLUSIVE

2. கோவை சம்பவம் சிபிஐ விசாரனை தேவை - தமுமுக

3. மனித நீதி பாசறை செய்தியறிக்கை (PRESS RELEASE)


4.தமிழக அரசை கலங்கப் படுத்த சதி!!


5. பிஜே யின் உயிருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் குறி?


6. உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் பேட்டி (கோவை)

7. முதல்வர் அவர்களே நீதி விசாரனைக்கு உத்தரவிடுங்கள்!!

8. ரத்தின சபாபதி கைதாவாரா? CBCID விசாரனை


9..இரத்தின சபாபதி மாற்றம்-நீதி விசாரணைக்கு கலைஞர் உத்தரவு


10. மனித நீதி பாசறை செய்தியறிக்கை (PRESS RELEASE)


11.தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் கைது

Thursday, November 01, 2007

கோவை சிறையில் முஸ்லிம் மரணம் - மக்கள் கொந்தளிப்பு

சிறை நிர்வாகத்தின் அலட்சியத்தால் மரணமடைந்த சபூர் ரஹ்மான்

கோவை, அக்டோபர் 31, கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு அனைத்து மனித உரிமை நெறிமுறைகளுக்கு மாறாக 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அகைட்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட விஷயம் மக்கள் அறிந்தததே. மனித நேயத்திற்கு எதிரான இந்த கொடுஞ்செயலில் சிலர் ஏற்கனவே போதிய சிகிச்சை அளிக்கப்படாததாலும், சிறைக் கொடுமைகளினாலும் விடுதலையின்றி சிறையினுள்லேயே மரணமடைந்துள்ளனர்.

இன்னும் பல அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் சிறை நிர்வாகத்தன் அலட்சிய போக்காலும் உரிய சிகிச்சை அளிக்காத காரணங்களினாலும் கொடுமையான பல நோயகளுக்கு ஆளாக்கப்பட்டு வாடி வருகின்றனர். இந்நிலையில்தான் இவர்களின் வழக்கு ஒரு வழியாக முடிவுக்க வந்தபோது பலர் விடுதலை செய்யப்பட்டார்கள் பலர் கொடுமையா முறையில் எவ்வித நேரடி ஆதாரங்களோ, சாட்சியங்களோ இல்லாத நிலையிலும் (நீதிபதி உத்ராபதி சொன்னது) கொடூரமான முறையில் முஸ்லிம்கள் என்ற காரனத்தினால் பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு வெளியி வர இயலாதபடி செய்யப்பட்டுள்ளனர்.


அணைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்

இந்நிலையில் பல ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி சிறைவாசி சபூர் ரஹ்மான் (வயது 35) அநியாயமாக கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தும் விடுதலை ஆகாமல் மீண்டுமு் அநீதியாக பல ஆயுள் தண்டனை ஒரு சேர விதிக்கப்பட்டிருந்த காரணத்தாலும் மன உளைச்சலில் இருந்த இந்த சகோதரருக்கு நேற்று (31-10-2007) சுமார் 2.00 மணியளவில் கடுமையான நெஞ்சு வலி ஏற்ப்பட்டது.சிறைவாசிகள் அனைவரும் இவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்க வேண்டி கூக்குரல் எழுப்பியபோதும் சிறையில் மருத்துவ அதிகாரியாக இருக்கும் சித்ரா என்ற மத வெறியரின் அலட்சியத்தால் கடுமையான நெஞ்சு வலியால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்களுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் காலம் தாழத்தியுள்ளனர்.

இந்நிலையில் சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்கள் மதவெறி பிடித்த சிறை காவலர்களாலும், சிகிச்சை அளிக்காமல் காலம் தாழத்திய மருத்துவ அதிகாரி சித்ராவின் அலட்சியத்தாலும் மரணமடைந்தார்கள் (இன்னாலில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன்) விடுதலை காணாமல் அந்த ஏக்கத்திலேயே அவரது உயிர் விடுதலையடைந்த கொடுமையான சம்பவம் கோவை மத்திய சிறையில் நடந்தது.

அணைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்

மறைந்த சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்களுக்கு மனைவியும் மூன்று பென் குழந்தைகளும் உள்ளனர். இவரின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வருகின்றது. தான் விடுதலையாகி குடும்பத்தின் வறுமை போக்கலாம் என்றிருந்த நிலையில் இவரும் மரணமடைந்து இந்த குடும்பம் மற்றும் இவரது மூன்று பென் பிள்ளைகளும் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த நிலைக்கு அலட்சிய போக்கை கடைபிடித்த சிறைச்சாலை நிர்வாகமும், அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.

இவரின் மரண செய்தி கேட்டவுடன் கோவை மாநகர முஸ்லிம்கள் கொந்தளித்து போயினர், உடனடியாக அணைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டப்பட்டது. இதை எப்படி கையாளவது என்றும், மரணமடைந்த சகோ. சபூர் ரஹ்மானின் குடும்பத்திற்கு எவ்வகையில் உதவுவது என்றும் விவாதிக்கப்பட்டது.

இறுதியில் சகோ. சபூர் ரஹ்மானின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிந்து நீதிபதி தலைமையில் விசாரனை நடத்த வேண்டும் என்றும், அவரது உடலை நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், மதவெறி பிடித்த சிறை மருத்துவ அதிகாரி சித்ரா மீதும் அந்த நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் அலட்சிய போக்கால் மரணமடைந்த சகோ. சபூர் ரஹ்மான் அவர்களின் குடம்பத்திற்கு உடனடி நிவாரனமாக அரசு ரூ 10 லடசம் வழங்க கோரியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க கோரியும், இன்னும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வேதனை அனுபவித்தும் விடுவிக்கப்படாமல் தண்டனை அளித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அணைவரையும் உடணடியாக விடுதலை செய்யக் கோரியும், இனியும் இதுபோல் நிகழ்வுகள் தொடாந்து நடக்காமல் இருக்க சிறையில் 24 மணி நேரமும் சயெல்படக்கூடிய வகையில் மருத்துவமனை வசதி ஏற்ப்படுத்தக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைக் அடங்கிய மனுவை கோவை மாவட்ட ஆடசித்தலைவருக்கும், முதல் அமைச்சருக்கு, தலைமை நீதிபதி, காவல் துறை ஆனையர், சிறப்பு நீதிமன்ற நீதிபதி, தலைமைச் சயெலாளர், உள்துறைச் செயலாளர், சிறைத்துறை தலைவர் உட்பட பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் த.மு.மு.க, மனித நீதிப் பாசறை, முஸ்லிம் லீக், த.த.ஜ உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சகோ. சபூர் ரஹ்மானின் மரணத்திற்கு காரணமான சிறை நிர்வாகத்திரனை வண்மையாக கண்டித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிறைவாசிகளின் உரிமைக்காகவும், அவாக்ளின் விடுதலைக்காகவும் நீண்ட நெடுங்காலமாக தமிழகமெங்கும் பாடுபட்டு வரும் அமைப்பான் சிறுபான்மை உதவி அறக்கட்டலை (CTM) என்ற நிறுவனம் செய்திருந்தது.

செய்திகள் : நமது சிறப்பு நிருபர் கோவை.

Friday, October 26, 2007

அரசுக்கெதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


கோவை அக்டோபர் 27, 2007 : இன்று கோவை மத்திய சிறை முன்பாக கோவையை சேர்ந்த முஸ்லிம்களும் சிறைவாசிகளின் குடும்பத்தார்களும் பெருந்திரளாக திரன்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.


கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கோவையை சேர்ந்த சுமார் 46 முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல ஆன்டு காலமாக குடுமு்பத்தினரை பிரிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை தமிழகத்தி் பிற மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு அரசு நிர்வாகத்தினர் முயற்ச்சிக்கின்றனர்.


பல்லான்டுகளாக இவர்களை பிறிந்து வாடும் இவர்களின் பாவப்பட்ட குடுமு்பத்தினருக்கு ஒரு ஆருதல் சிறையில் வாடும் தங்கள் உரவுகளை எளிதாக காண முடிகின்றதென்பதுதான். தற்போது இதிலும் மன்னை வாறிப்பூடும் விதமாக இவர்களை கோவை சிறையில் இருந்து வேறு மாவட்ட சிறைகளுக்கு மாற்றுவதென்பது மிகக் கொடுமையான ஒன்றாகும்.


ஏற்கனவே மனம் நொந்து போய் விரக்தியில் இருக்கம் இந்த அப்பாவி சிறைவாசிகளின் குடும்பத்தினர் இனி தங்கள் உரவுகளை காண பல்வேறு ஊருகளுக்கு செல்ல வேண்டும் என்பது அவர்களை சித்திரவதை செய்வதும் கொடுமையான மனித உரிமை மீறலாகும்.


மனத உரிமைகளுக்கு எதிரான அரசின் இந்த முடிவை கண்டித்து இன்று சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் நிர்வாகியும் அல் உம்மா அன்சாரி அவர்களின் மனைவியுமான திருமதி. சம்சுன் நிஷா அன்சாரி அவர்கள் தலைமையில் திரன்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும் சிறைவாசிகளின் குடும்பத்தினரும் கோவை மத்திய சிறை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து சிறைவாசிகளை எக்காரனம் கொண்டுமு் கோவையில் இருந்து இமாற்றம் செய்யக் கூடாது என்றும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டுமு் என்று வலியுருத்தியும் மனு ஒன்றை அளித்தனர்.


இம்மனுவின் நகல் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும், உள்துறை செயளாலர் அவர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. தமிழக அரசின் இம்முயற்சியானது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அரசு சிறைவாசிகளை மாற்ற தொடாந்து மயற்சிக்கும் பட்சத்தில் இம்மக்களோடு விரைவில் தமிழகத்தின் பல முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் குதிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது.

Thursday, September 27, 2007

கோவை குண்டு வெடிப்பு வழக்கு நாளை முதல் தண்டனை அறிவிப்பு

கோவை குண்டு வெடிப்பு வழக்கு நாளை முதல் தண்டனை அறிவிப்பு

கோவை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளுக்கு நாளை(28ம் தேதி) முதல் தண்டனை அறிவிக்கப்படுகிறது.கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஷா, அன்சாரி, தாஜூதீன், ஊம்பாபு, ஜாகிர்உசேன் உட்பட 70 பேர் கூட்டுச்சதி பிரிவிலும், மற்றவர்கள் கலவரத்தில் ஈடுபட்டது, வெடிமருந்து கடத்தியது உள்ளிட்ட பிரிவுகளிலும் குற்றவாளிகளாக தீர்க்கப்பட்டுள்ளனர்.தண்டனை குறித்த வக்கீல் வாதம் முடிந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை அறிவிப்பு நாளை (28ம் தேதி) துவங்குகிறது. இதை நீதிபதி உத்ராபதி நேற்று தெரிவித்தார். குற்றவாளிகள் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.கோவை தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 58 பேர் பலியானார்கள். 250 பேர் படுகாயம் அடைந்தனர். ஒன்பதரை ஆண்டுக்குபின் வழக்கு விசாரணை முடிந்து தண்டனை அறிவிக்கப்படுகிறது.

Wednesday, September 26, 2007

இவர்களின் அவலம் மாறுமா? (மீள்பதிவு)




''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்
CLICK HERE TO VIEW THE VIDEO

இவர்களின் அவலம் மாறுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே.,

நமது சமுதாய இயக்கங்கள் அனைத்தும் யாருடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனவோ அந்த முஸ்லிம் சிறைவாசிகள் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு நீண்ட நெடிய 8 ஆண்டுகளாகிவிட்டன. கொடிய சிறை வாழ்வு., இவர்களின் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி நான்கு சுவர்களுக்கு மத்தியில் விரயமாகிக் கொண்டிருக்கின்றன. இவை என்றுதான் முற்றுபெறுமோ? என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம்! இவர்களின் தேவை குடும்பங்களுக்கு அல்லவா மிக மிக அவசியம்.

எட்டு ஆண்டுகளில் இக்குடும்பங்கள் அடைந்திட்ட துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் வருமானங்கள் நிரந்தர தடையாகிவிட்டன. குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய நிர்பந்தத்தால் இக்குடும்பத்தின் மென்மையான சகோதரிகள் தங்களின் மென்தோல்கள் வலுவிழக்கும் அளவிற்கு ஆண்களைப் போல் கடினமாக உழைத்திட வேண்டிய பரிதாபமான நிலை. இக்காலத்தில் என்னதான் கடுமையாக உழைத்தாலும் குடும்பத்தை ஒப்பேற்ற ஆணுக்கே மிக கடினம் என்கின்றபோது பெண்களால் என்னதான் செய்ய இயலும்.

வயிற்றுப்பாட்டுக்கே தினம் தினம் பெரும் திண்டாட்டம், மூன்று வேளை உணவைக்கூட முறையாக உண்பதே பெரும்பாடு என்கின்றபோது, குடும்பத்தின் மற்ற அத்யாவசிய செலவினங்களுக்கு என்னதான் செய்வார்கள் இவர்கள். ஒருவர் திடீரென கடும் நோய்வாய்ப்பட்டால் வேறு வழியில்லை, இறக்க வேண்டியது தான். பெரும் மழையினால் வீட்டுக்கூரை சரிந்துவிட்டால்.. என்ன செய்வது? வானம் பார்த்த வீட்டில் தான் சிரமப்பட்டாக வேண்டும். இன்னுமின்னும் நெஞ்சை பிழியவைக்கும் ஏராளமான துன்ப துயரங்கள் சிறைப்பட்ட ஒவ்வொரு வீடடிலும் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நித்தம் தொடரும் தொடர் துயரங்களால் இவர்களின் குடும்பங்களில் வாழ்க்கையின் போக்கு திக்கு தெரியாத காட்டில் திசைமாறிச் செல்வது போல முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன..

இந்தச்சிறைவாசிகளின் சகோதரிகளிள் பலர் திருமணம் கூட
ஆகாமல் முப்பது வயதைத்தாண்டியும் முதிர்கன்னிகளாகதங்கள் வாழ்வை தொலைத்து நிராதரவாக நிற்கின்றனர். தங்கள் தந்தையரையும், தமயர்களையும் சிறைகளிள் தொலைத்தது போல். காரணம் பொருளாதாரம்.. தமது வாழ்வாதாரங்களான ஆண்களை சிறைக்கு அனுப்பியபின் இவர்களின் குடும்பங்கள் இன்று திக்குத்தெறியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றன.
எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணை
சிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது.

எட்டு ஆன்டுகளாக தங்கள் கணவரை, சகோதரனை, தந்தையை பிறிந்து தவிக்கும் நமது சமுதாயச் சகோதரிகளின் கண்ணீர்க் கதறல்களை காவியமாக வடித்துள்ளார்கள்.


''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்

இதுமட்டுமல்லாது இவர்களின் குழந்தைகள் தங்களின் கல்வியை தொடர இயலாது தவித்து வருகின்றார்கள் இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கின்றது.

இக்குழந்தைகளின் தந்தைமார்களும், சகோதரர்களும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் விதிவசத்தால் முடங்கிக்கிடப்பது போல் இவர்களது குழந்தைகளின் கல்வியறிவு முடங்கிப் போய்விட சமுதாயம் காரணமாகி விடக்கூடாது. ஒருபோதும் இப்பெரும் பாவத்திற்கு சமுதாயம் ஆளாகிவிடக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்திட நம் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தார்மீக பொறுப்புண்டு..


இந்த குழந்தைகளும் கூட நமது சமுதாயத்தின் செல்வங்கள்தான். இவர்களின் தந்தைமார்கள் சிறைவாசிகள் என்ற காரணத்திற்காக இவர்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. இக்குழந்தைகளின் விபரங்களும் இவர்களின் கல்வி செலவுகளும் (அதிகமில்லை சில ஆயிரங்களே இதை நமது சமுதாயம் கட்டாயம் ஏற்க வேண்டும்) இங்கு பதியப்பட்டுள்ளன. அவற்றை வேண்டுவோர் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


சிறைவாசி குழந்தைகளின் கல்வி விபரம் டவுன் லோட்

இவர்களுக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட அறக்கட்டளையின் முகவரிக்கு தங்கள் உதவிகளை அனுப்பலாம்.


CHARITABLE TRUST FOR MINORITIES (REGD NO. 882/2001)
Bank : UNITED BANK OF INDIA,
COIMBATORE BRANCH,
TAMILNADU

Saving Account No. #57991#

(by online) ICICI Bank Account No: #605301208490#

Mill Road, coimbatore-1 branch.

Favour of “CHARITABLE TRUST FOR MINORITIES”
Rahim Plastic House,
Gnaniyar Nagar

Saramedu, Karumbukkadai

Coimbatore – 641 008Tamilnadu, India

படிப்பறிவில்லாதவர்களின் கல்விக்கண்களை திறக்கச் செய்தமைக்காக பத்ருப்போரின் கடும் எதிரிகளையே விடுதலை செய்திட்டார் நம் அருமைத்தலைவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்.

நம் அருமைத் தலைவர் கல்விக்கு தந்திட்ட முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். படிக்காத உம்மி நபிதான் ஆனால் சமுதாயத்தில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாமல் இருந்திடக்கூடாது என அறிவுறுத்தத்தான் "தொலைந்து விட்ட பொருளை தேடுவது போல கல்வியை தேடிக்கொள்" என கல்வியின் மாண்பை எடுத்தரைத்தார்.

சமுதாயத்தில் நிகழ்ந்திட்ட கொடுமைகளை எதிர்த்ததற்காக இச்சிறை வாழ்வை பரிசாக பெற்றவர்களின் குழந்தைகளின் கல்விக்கண்கள் திறக்க எத்தடையும் இருந்துவிடக்கூடாது.
உதவியின்மையால் இவர்களின் கல்வி தடைபடுமானால் இதைவிடக்கொடுமை வேறெதுவும் இல்லை.


அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இவர்களின் கல்விக்கண் திறக்க தாராளமாய் முன்வந்து உதவிகளை வாரி வழங்கிட வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பைசா உதவியும் வீணாகி விடாது. இதுவே, உங்களின் உண்மையான (மறுமைக்கான) சேமிப்பு ஆகும்..


நிராதரவாகிப் போன இக்குழந்தைகளின் கல்விக்கு உதவுவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். உதவிகளிலே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். இக்குழந்தைகள் படிக்க, படிக்க, பட்டங்கள் வாங்க வாங்க இவர்களால் சமுதாயம் பயன் அடைய அடைய உங்களின் தர்மத்தின் நன்மை கணக்கில்லை மறுமை வரை பெருகிக்கொண்டே செல்லும்!

இவர்களின் அவலம் கட்டாயம் மாறும்.. மாற்றலாம் நாம் நினைத்தால்... (இறைவன் துணையுடன்)

என்றும் அன்புடன்,
முகவைத்தமிழன்
.
தொடர்புடைய வீடியோக்கள் :
.
.
.

Monday, February 26, 2007

என் தந்தை வருவாரா?

என் தந்தை வருவாரா?


யா அல்லாஹ் என் கண்ணீர் வற்றும் முன்னே...

என் கை பிடித்து பாட சாலைக்கு அழைத்துச் செல்ல...

என் தந்தை சிறையிலிருந்து வருவாரோ? ....என ஏங்கும் இது போன்ற பல சிறுவர்களின் ஏக்கத்தினை போக்கி நம் சமூக அவலம் துடைக்க ஒன்றுபடுவீர் உடைத்திடுவோம் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் விலங்குகளை!!

மார்ச்ச 11 - சமுதாய தலைமைகளின் சங்கமம்!! கோவையில்....வாருங்கள் எம் சமுதாயச் சொந்தங்களே !! ஒன்றுபடுவோம் தடைகளை தகர்த்தெறிவோம்!!

இந்திய மக்கள் தொகையில் நம் சதவிகிதத்டதிற்கும் அதிகமாக இந்திய சிறைச்சாலைகளில் நம் சமுதாய இளைஞர்கள் தம் மனைவி, மக்களை இழந்து எந்த வித வழக்குகளும் இன்றி அல்லது புனையப்பட்ட பொய் வழக்குகளின் கீழ் நீண்ட நெடுங்காலமாய சிறையிருந்து வருகின்றார்கள். அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்பதும், அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் மனைவி மக்களின் வேதனைகளை போக்குவதும் சமுதாயத்தின் அங்கங்களான நம் மீது கடமையல்லாவா? ஒன்றுபடுவோம் வாரீர் !! தமிழகத்தின் எல்லா சாலைகளும் கோவையை நோக்கியதாக இருக்கட்டும்!!

மார்ச் 11 - உங்கள் ஆதரவும் அனுசரனையும் எங்களுக்கு தேவை...உங்கள் பிரார்த்தனைகளில் தமிழக சிறைச்சாலைகளில் நீண்ட நெடுங்காலமாக வாடிக் கொண்டிருக்கும் உங்கள் தமிழ் முஸ்லிம் சகோதரர்களையுமு் நிணைவு கூறுங்கள்.

மேலதிக விபரங்களுக்கும்...அனுசரனைகள் வழங்குவதற்கும் தெர்டர்பு கொள்ளுங்கள் :

சகோ. கோவை தங்கப்பா (எ) முகம்மது சபேர்

தொலைபேசி : 0091-9443654473 / 0091-9944415560

Web : www.ctmcoimbatore.com

இஸ்லாம், காரைக்குடி,islam,muslim

Tuesday, June 06, 2006

இவர்களின் அவலம் மாறுமா? (HOT VIDEO)




''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்
CLICK HERE TO VIEW THE VIDEO

இவர்களின் அவலம் மாறுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே.,

நமது சமுதாய இயக்கங்கள் அனைத்தும் யாருடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனவோ அந்த முஸ்லிம் சிறைவாசிகள் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு நீண்ட நெடிய 8 ஆண்டுகளாகிவிட்டன. கொடிய சிறை வாழ்வு., இவர்களின் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி நான்கு சுவர்களுக்கு மத்தியில் விரயமாகிக் கொண்டிருக்கின்றன. இவை என்றுதான் முற்றுபெறுமோ? என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம்! இவர்களின் தேவை குடும்பங்களுக்கு அல்லவா மிக மிக அவசியம்.

எட்டு ஆண்டுகளில் இக்குடும்பங்கள் அடைந்திட்ட துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் வருமானங்கள் நிரந்தர தடையாகிவிட்டன. குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய நிர்பந்தத்தால் இக்குடும்பத்தின் மென்மையான சகோதரிகள் தங்களின் மென்தோல்கள் வலுவிழக்கும் அளவிற்கு ஆண்களைப் போல் கடினமாக உழைத்திட வேண்டிய பரிதாபமான நிலை. இக்காலத்தில் என்னதான் கடுமையாக உழைத்தாலும் குடும்பத்தை ஒப்பேற்ற ஆணுக்கே மிக கடினம் என்கின்றபோது பெண்களால் என்னதான் செய்ய இயலும்.

வயிற்றுப்பாட்டுக்கே தினம் தினம் பெரும் திண்டாட்டம், மூன்று வேளை உணவைக்கூட முறையாக உண்பதே பெரும்பாடு என்கின்றபோது, குடும்பத்தின் மற்ற அத்யாவசிய செலவினங்களுக்கு என்னதான் செய்வார்கள் இவர்கள். ஒருவர் திடீரென கடும் நோய்வாய்ப்பட்டால் வேறு வழியில்லை, இறக்க வேண்டியது தான். பெரும் மழையினால் வீட்டுக்கூரை சரிந்துவிட்டால்.. என்ன செய்வது? வானம் பார்த்த வீட்டில் தான் சிரமப்பட்டாக வேண்டும். இன்னுமின்னும் நெஞ்சை பிழியவைக்கும் ஏராளமான துன்ப துயரங்கள் சிறைப்பட்ட ஒவ்வொரு வீடடிலும் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நித்தம் தொடரும் தொடர் துயரங்களால் இவர்களின் குடும்பங்களில் வாழ்க்கையின் போக்கு திக்கு தெரியாத காட்டில் திசைமாறிச் செல்வது போல முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன..

இந்தச்சிறைவாசிகளின் சகோதரிகளிள் பலர் திருமணம் கூட
ஆகாமல் முப்பது வயதைத்தாண்டியும் முதிர்கன்னிகளாகதங்கள் வாழ்வை தொலைத்து நிராதரவாக நிற்கின்றனர். தங்கள் தந்தையரையும், தமயர்களையும் சிறைகளிள் தொலைத்தது போல். காரணம் பொருளாதாரம்.. தமது வாழ்வாதாரங்களான ஆண்களை சிறைக்கு அனுப்பியபின் இவர்களின் குடும்பங்கள் இன்று திக்குத்தெறியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றன.
எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணை
சிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது.

எட்டு ஆன்டுகளாக தங்கள் கணவரை, சகோதரனை, தந்தையை பிறிந்து தவிக்கும் நமது சமுதாயச் சகோதரிகளின் கண்ணீர்க் கதறல்களை காவியமாக வடித்துள்ளார்கள்.


''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்

இதுமட்டுமல்லாது இவர்களின் குழந்தைகள் தங்களின் கல்வியை தொடர இயலாது தவித்து வருகின்றார்கள் இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கின்றது.

இக்குழந்தைகளின் தந்தைமார்களும், சகோதரர்களும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் விதிவசத்தால் முடங்கிக்கிடப்பது போல் இவர்களது குழந்தைகளின் கல்வியறிவு முடங்கிப் போய்விட சமுதாயம் காரணமாகி விடக்கூடாது. ஒருபோதும் இப்பெரும் பாவத்திற்கு சமுதாயம் ஆளாகிவிடக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்திட நம் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தார்மீக பொறுப்புண்டு..


இந்த குழந்தைகளும் கூட நமது சமுதாயத்தின் செல்வங்கள்தான். இவர்களின் தந்தைமார்கள் சிறைவாசிகள் என்ற காரணத்திற்காக இவர்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. இக்குழந்தைகளின் விபரங்களும் இவர்களின் கல்வி செலவுகளும் (அதிகமில்லை சில ஆயிரங்களே இதை நமது சமுதாயம் கட்டாயம் ஏற்க வேண்டும்) இங்கு பதியப்பட்டுள்ளன. அவற்றை வேண்டுவோர் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


சிறைவாசி குழந்தைகளின் கல்வி விபரம் டவுன் லோட்

இவர்களுக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட அறக்கட்டளையின் முகவரிக்கு தங்கள் உதவிகளை அனுப்பலாம்.


CHARITABLE TRUST FOR MINORITIES

A/C NO. SB 57991

UNITED BANK OF INDIA
OPPANAKKARA STREET BRANCH
COIMBATORE - 641001.
******************************
CHARITABLE TRUST FOR MINORITIES
RAHIM PLASTIC HOUSE
GNANIYAR NAGAR
SARAMEDU,
KARUMPUKKADAI
COIMBATORE - 8
TEL. : 0091-422-2307673

படிப்பறிவில்லாதவர்களின் கல்விக்கண்களை திறக்கச் செய்தமைக்காக பத்ருப்போரின் கடும் எதிரிகளையே விடுதலை செய்திட்டார் நம் அருமைத்தலைவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்.

நம் அருமைத் தலைவர் கல்விக்கு தந்திட்ட முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். படிக்காத உம்மி நபிதான் ஆனால் சமுதாயத்தில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாமல் இருந்திடக்கூடாது என அறிவுறுத்தத்தான் "தொலைந்து விட்ட பொருளை தேடுவது போல கல்வியை தேடிக்கொள்" என கல்வியின் மாண்பை எடுத்தரைத்தார்.

சமுதாயத்தில் நிகழ்ந்திட்ட கொடுமைகளை எதிர்த்ததற்காக இச்சிறை வாழ்வை பரிசாக பெற்றவர்களின் குழந்தைகளின் கல்விக்கண்கள் திறக்க எத்தடையும் இருந்துவிடக்கூடாது.
உதவியின்மையால் இவர்களின் கல்வி தடைபடுமானால் இதைவிடக்கொடுமை வேறெதுவும் இல்லை.


அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இவர்களின் கல்விக்கண் திறக்க தாராளமாய் முன்வந்து உதவிகளை வாரி வழங்கிட வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பைசா உதவியும் வீணாகி விடாது. இதுவே, உங்களின் உண்மையான (மறுமைக்கான) சேமிப்பு ஆகும்..


நிராதரவாகிப் போன இக்குழந்தைகளின் கல்விக்கு உதவுவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். உதவிகளிலே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். இக்குழந்தைகள் படிக்க, படிக்க, பட்டங்கள் வாங்க வாங்க இவர்களால் சமுதாயம் பயன் அடைய அடைய உங்களின் தர்மத்தின் நன்மை கணக்கில்லை மறுமை வரை பெருகிக்கொண்டே செல்லும்!

இவர்களின் அவலம் கட்டாயம் மாறும்.. மாற்றலாம் நாம் நினைத்தால்... (இறைவன் துணையுடன்)

என்றும் அன்புடன்,
முகவைத்தமிழன்