Wednesday, February 27, 2008

FAKE BOMB PLOT கருப்பு ஆடு இரத்தின சபாபதியை கைது செய்ய MNP கோரிக்கை

மனித நீதிப் பாசறையின் மீதும் முஸ்லிம்களின் மீதும் களங்கம் ஏற்படுத்தி வீன்பழி சுமத்தும் வகையில் பொய்யான வெடிகுண்டு வழக்கை ஜோடனை செய்த கோவை போலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனித நீதிப் பாசறை அறிக்கை.



கிரைன்டர் கண்டன்சரும், பேட்டரியும் பாமாக காட்டப்பட்ட விதம்

இவ்வழக்கு எப்படி ஜோடிக்கப்பட்டது, உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலைநாட்ட எப்படியெல்லாம் MNP,TMMK,ஐக்கிய ஜமாத் என பல்வேறு அமைப்புகளும் களம் இறங்கி போராடி நியாம் கிடைக்க வழி செய்தன என்பதை தெளிவாக அறிவதற்கு இக்கட்டுரையின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள தொடுப்புக்களில் உள்ள கட்டுரைகளை வாசியுங்கள்.

கோவையில் கடந்த ஜீலை (22.07.2006) அன்று 5 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை ழைகது செய்தனர். யாரும் எந்த புகாரும் கொடுக்காத நிலையில் இரவு நேரத்தில் திடீரென அந்த இளைஞர்களின் வீட்டில் அத்து மீறி நுழைந்து அவர்களை கைது செய்து அவர்க்ள வீட்டில் குழந்தைகள் படிக்க வைத்திருந்த வரைபடத்தையும், கிரைன்டர் கண்டன்சரையும், வீணாகிப்போன பேட்டரிகளையும் எடுத்தக்கொண்டு அவர்களை தீவிரவாதிகள் எனவும் அவர்களிடம் இருந்து கோவை மாநகரையே தகர்க்க கூடிய அளவிற்கு சக்தி பெற்ற ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் கோவை மாவட்ட உளவுத்துறை உதவி ஆணையர் ரத்ன சபாபதி கூறினார். முஸ்லிம்களுக்கெதிரான குரோதத்தையும், மனித நீதிப் பாசறைக்கெதிரான வண்மத்தையும் மனதில் வைத்துக்கொண்டு கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மனித நீதிப் பாசறையை சேர்ந்தவர்கள் என கதை கட்டினார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவை அனைத்தும் வடிகட்டிய பொய் என்பது நிரூபனமானது. தமிழக அரசும் அவர் மீது முதல் கட்ட நடவடிக்கை எடுத்து பணிமாற்றமும், இடமாற்றமும் செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் மனித நீதிப் பாசறை, கோவை ஐக்கிய ஜமாத், முஸ்லிம் அமைப்புகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கடுமையான தொடர் முயற்சிகளால் இவ்வழக்கு விசாரனை சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இவ்வழக்கு குறித்து விசாரனை நடத்திய சி.பி.சி.ஐ.டி (SIT) சிறப்பு புலனாய்வு குழு தனது இறுதி அறிக்கையை கோவை நீதித்துறை நடுவர் மன்றத்தில் சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது.

கோவை உளவுத்துறை ஏ.சி ரத்தின சபாபதி உருவாக்கிய மூன்று தனிப்படைகள் 5 முஸ்லிம் அப்பாவி இளைஞர்களை கைது செய்துள்ளனர் என்பதும், இந்த மூன்று தனிப்படைகளுக்கு தலைமையேற்ற ஏ.சி க்கள் திரு.குமாரசாமி, திரு. அண்ணாதுரை, திரு. ஜெய பாண்டியன் ஆகியோர்கள் தாங்களே பைப் வெடிகுண்: (Pipe Bomb) மற்றும் கையெறி குண்டு (Hand Granade) ஆகியவற்றை தயார் செய்தள்ளனர் என்பதும் போலிஸ் சாட்சிகள் மற்றும் இதர சாட்சிகள் மூலம் நரூபனம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரனையில் முன் தேதியிட்ட ஆவணங்களை ரத்தின சபாபதி தூண்டுதலின் அடிப்படையில் செயல்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் பால்ராஜால் தயார் செய்யப்பட்டுள்ளன என்பதும் BDDS (Bumb Detection and Defuse Squad) எஸ்.ஐ திரு. மகேந்திரன் அவர்கள் வெடிகுண்டைக் கைப்பற்றிய இடத்திற்கு நேரில் வந்ததாகவும் வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்ததாகவும், மேற்படி இன்ஸ்பெக்டர் பால்ராஜே பொய்யாக மகஜரை (ஆவணங்களை) தயாரித்து அதில் அவரே எஸ்.ஐ மகேந்திரன் கையெழுத்தை போலியாக போட்டுள்ளார் என்பதும் நிபுணர்கள் (Expert opinion) மூலம் நிருபனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை போலியாக தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும், வெடிகுண்டுகளை போலிசாராலேயே தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும், ஆவணங்கள் போலியாக தயார் செய்யப்பட்டுள்ளது என்பதும் Nacro Analysis Test எனப்படும் உண்மை கண்டறியும் சோதனையிலும் நீரூபனம் செய்யப்பட்டுள்ளது.


மனித நீதிப் பாசறையின் கோரிக்கைகள்


1. ரத்தின சபாபதி மற்றும் இதற்கு துனை போன அதிகாரிகளின் கபட நாடகத்தால் தன்னுடைய எதிர்காலத்தை தொலைத்து விட்டு நிர்க்கதியாக நிற்கும் இந்த அப்பாவிகளுக்கு தமிழக அரசு ஈட்டுத்தொகை வழங்க வேண்டும்..

2. தமிழக காவல்துறைக்கு கலங்கம் ஏற்படுத்தி மக்களை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அதற்கு மாறாக "வேலியே பயிரை மேய்வது போல்" ஐந்து முஸ்லிம்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய முன்னாள் உளவுத்துறை அதிகாரி ரத்ன சபாபதி மீதும் மற்றும் அவருக்கு துணை போன அதிகாரிகள் மீதும் துறை சார்ந்த விசாரனை மேற்க்கொள்ளப்பட்டு அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக் மேற்க்கொண்டு நரந்தரப் பணி நீக்கம் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட வேண்டும்.

3. தமிழக அரசின் ஆரம்ப கட்ட நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால் போலியாக புனையப்பட்ட வழக்குகளின் மூலம் முஸ்லிம்கள் மீது அவதுர்று சுமத்தி, மனித உரிமைப் பணிகளையும் சமூக சேவைகளையும் செய்து கொண்டு வரும் மனித நீதிப் பாசறையின் மீது களங்கம் கற்பித்து, தமிழகத்தை பீதிக்குள்ளாக்கிய ரத்தின சபாபதியை மீண்டும் அதே ஊரில் பணியில் அமர்த்தியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ப்தியையும், முஸ்லிம்கள் மத்தியில் அடுத்து என்ன நாடகம் அரங்கேறுமோ என்ற அச்சத்தையும் அளித்துள்ளது. தமிழக அரசு இதை கவணத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும்.

4. மனித நீதிப் பாசறையின் மீதும் கோவை முஸ்லிம்கள் மீதும் இப்பொய்வழக்கு போடுவதற்கு காரணம் என்ன என்பதையும் இதன் பின்னணியில் தேச விரோத சக்திகளின் தூண்டுதல் உண்டா என்பதையும் தமிழக அரசு கண்டறிந்து உண்மையை வெளியில் கொண்டுவர வேண்டும். முஸ்லிம்களுக்கெதிராகவும் இப்பொய் வழக்கு மூலம் சாதிக்க நினைத்த மற்றும் தூண்டுதலின் பின்னணி என்ன என்பதை கண்டறிதல் வேண்டும் எனவும் தனது அறிக்கையில் மனித நீதிப் பாசறையின் சார்பாக அதன் மாநிலத் தலைவர் திரு.எம். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் கோரியுள்ளார்கள்.


தமிழ் முஸ்லிம் அரசியல் மேடையின் அறிக்கை :

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை வாசகர்களுக்கும் மற்றும் நமது தளத்தை தொடர்ச்சியாக வாசித்து வரும் சகோதர சகோதரிகளுக்கு நன்கு அறிந்த விசயம் முதன் முதலில் காவல் துறையின் கருபு்பு ஆடு திரு.ரத்தின சபாபதியால் புணையப்பட்ட இந்த நாடகத்தை அம்பளத்துக்கு கொண்டு வந்தது நமது தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை மூலமாகத்தான் என்பதை யாரும் மறக்க மாட்டீர்கள்.

இந்த சம்பவம் தொடர்பாகவும், பாதிக்கப்பட்ட இந்த சகோதரர்கள் வெளியில் வரவேண்டும் என்பதற்காகவும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலுமாக பல சகோதரர்கள் ஆர்வமாக இருந்தார்க் அவர்களின் உதவியுடன் ரத்தின சபாபதியின் தோலுரிக்கப்பட்டு அவரின் உண்மை முகம் பல கட்டுரைகளின் வாயிலாக அம்பலப்படுத்தப்பட்டது. இன்னும் பல நமது சமூக இயக்கங்களையும் தொடர்பு கொண்டு இயக்க பேதம் பாராமல் ஒற்றுமையாக இந்த பிரச்சினையை எதிர் கொள்ள வேண்டும் என்று வலியுருத்தப்பட்டது.

நிகழ்வின் உச்சகட்டமாக அரசில் அங்கம் வகித்தும் சமுதாய ஒற்றுமை கருதி தமுமுக வும் மனித நீதிப் பாசறையினருடன் கைகோர்த்து ரத்தின சபாபதி எனும் இந்த நுன்கிருமிக்கெதிராக களம் இரங்கியது. தமுமுக வின் பொதுச்செயளாலரும், வக்ஃப் வாரியத் தலைவரும் ஆன திரு.ஹைதர் அலி மற்றுமு் திரு உமர் அவர்களும் நேரடியாக கோவை வந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்ததோடு இவ்வழக்கில் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் என அரசை வலியுருத்தினர். பிரபல மனித உரிமை ஆர்வலர் திரு.கோ. சுகுமாறன் போன்ற பல மனித உரிமை ஆர்வலர்களையும் அமைப்புகளையும் நாம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இவ்வழக்கில் நீதி விசாரனை நடத்த வேண்டி அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டினோம்.

பல்வேறு தரப்பினரின் முயற்சியின் விளைவாக கடந்த ஆகஸ்ட் 01, 2006 அன்று தமிழக முதல்வர் திரு.மு.கருனாநிதி அவர்கள் இந்த வழக்கில் தொடாபுடைய காவல்துறையின் கருப்பு ஆடு இரத்தின சபாபதியை இடமாற்றம் செய்தும் நீதி விசாரனை நடத்த வேண்டியும் உத்தரவிட்டர். இனறு அந்த நீதி விசாரனையின் அறிக்கையில் நாம் ஆரம்பத்தில் இருந்து என்ன எழுதி வந்தோமோ அதுவே உண்மை என அறியத் தரப்பட்டுள்ளது. காவல் துறையின் கருப்பு ஆடகளின் முகத்திரை கிழித்து எறியப்பட்டுள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கு.
இது நமது சமுதாய ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. இந்த போராட்டங்களின் எந்த ஒரு கால கட்டத்திலும் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் பங்கெடுக்கவில்லை என்பதை சமுதாயம் கட்டாயம் அறிய வேண்டும். இவர்களைத் தவிர அனைத்து தரப்பினரும் இணைந்து போராடியதன் விளைவு குறைந்தபட்சம் இந்த சி.பி.சி.ஐ.டி யின் விசாரனை அறிக்கை இந்த சமுதாயத்துக்கு எதிராக பின்னப் பட்ட சதிவலையின் உண்மை முகத்தினை உலகம் அறியத் தந்துள்ளது. இன்னும் இதன் பின்னால் உள்ளவர்கள், உண்மை குறிக்கோள் என்ன என்பது தெறிய வரவில்லை.

தமிழக அரசும் முதல்வர் கலைஞர் அவர்களும் தனது ஆட்சிக்காலத்திற்குள்ளாகவே அப்பாவி இசுலாமியர்களை தீவிரவாதிகளாக சித்தறித்து ஒரு சமுதாயத்திற்கெதிராக மக்களை திசை திருப்பி, தமிழகத்தை கலவரக் காடாக்க சதி செய்த சமூக விரோதி தமிழக காவல்துறையின் கருப்பு ஆடு ரத்தின சபாபதியையும் அவருக்கு துனை நின்ற அதிகாரிகளையும் உடனடியாக நடவடிக்க எடுத்து கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இன்னும் இந்த சம்பவங்களுக்கு பின்னால் உள்ளவர்களையும் தமிழக மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். தமிழக முதல்வர் செய்வார் என் எதிர் பார்ப்போம். தமிழக முஸ்லிம் அமைப்புகள் இனிவரும் காலங்களிலும் தமிழக முஸ்லிம்களுக்கெதிராக ஃபாசிச சக்திகளால் தொடுக்கப்படும் தாக்குதல்களை இயக்க பேதம் பார்க்கமல் ஒற்றுமையாக எதிர்க்க வேண்டும்.


நன்றி
முகவைத்தமிழன்


தொடர்புடைய கட்டுரைகள்

1. MNP தீவிரவாதிகள் காவல்துறையின் சதி? EXCLUSIVE

2. கோவை சம்பவம் சிபிஐ விசாரனை தேவை - தமுமுக

3. மனித நீதி பாசறை செய்தியறிக்கை (PRESS RELEASE)


4.தமிழக அரசை கலங்கப் படுத்த சதி!!


5. பிஜே யின் உயிருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் குறி?


6. உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் பேட்டி (கோவை)

7. முதல்வர் அவர்களே நீதி விசாரனைக்கு உத்தரவிடுங்கள்!!

8. ரத்தின சபாபதி கைதாவாரா? CBCID விசாரனை


9..இரத்தின சபாபதி மாற்றம்-நீதி விசாரணைக்கு கலைஞர் உத்தரவு


10. மனித நீதி பாசறை செய்தியறிக்கை (PRESS RELEASE)


11.தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் கைது