Monday, September 11, 2006

கோவைக்கு ஒரு நீதி..குஜராத்திற்கு ஒரு நீதியா?(Video)


கோவைக்கு ஒரு நீதி..குஜராத்திற்கு ஒரு நீதியா?
கர்ஜிக்கிரார் கோவை டி.ஏ.நாசர்



PLAY VIDEO ****** DOWNLOAD


தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பலம பெற்று திகழ்ந்த கோவை முஸ்லிம்கள் எப்படி திட்டமிட்டு ஒடுக்கப்பட்டார்கள், எவ்வாறாக அவர்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய செய்யப்பட்டது என்றும்.

பலம் பெற்று விளங்கிய ஒரு சமுதயம் எப்படி சங்பரிவாரத்தின் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் சிதறடிக்கப்பட்டு ஒடுக்கப்பட்டது, அரச பயங்கரவாதமும் அடக்குமுறையும் எப்படி திட்டமிட்டு இந்த சமுதாயத்தின் மீது பாய்ச்சப்பட்டது என்றும்.

கோவை முஸ்லிம்களை காவி மயமாக்கப்பட்டிருந்த காவல் துறையின் துனைகொண்டு எப்படி இனப்படுகொலைக்கும் இனச்சுத்திகரிப்பு்கும் ஆளாக்கப்பட்டர்கள் என்றும் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடியவரை காப்பாற்றுவதற்காக மருத்துவமனைக்கு தூக்கி வந்த ஒருவரை அவர் முஸ்லிம் என்ற காரனத்திற்காக அரச எந்திரங்களின் மேற்பார்வையில் அரசு வாகனத்தில் இருந்து எரிபொருளை எடுத்து ஊற்றி எப்படி கொடூரமாக உயிருடன் எரித்து கொல்லப்பட்டார் (குஜராத்தின் முன்னோடி) என்றும்.

எப்படியெல்லாம் நீண்ட கால திட்டததின் அடிப்படையில் இம்மக்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு இன்று சிறையில் எந்தவித விசாரனையும் இன்றி 8 வருடங்களுக்கும் மேலாக ஜாமின் மறுக்கப்பட்டு வாடி வருகின்றார்கள் என்றும் குஜராத்தின் மோடி பயங்கரவாத கும்பல் இத்தனை கோர கொடூர கொலைகளையும் செய்து விட்டு உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதையும் விளக்கி குஜராத் ஹிந்து பயங்கரவாதிகளுக்கு ஒரு நியாயம் தமிழக முஸ்லிம்களுக்கு ஒரு நிஜயாயமா? என்று தனது சிம்மக்குரலில் கேள்வி தொடுக்கிறார் இந்திய யுனியன் முஸ்லிம் லீக்கின் மாநில தலைமைப் பேச்சாளர் ஜனாப் கோவை டி.ஏ. நாசர் அவர்கள்.

இது அனைவரும் பார்கக் வேண்டிய ஒரு வீடியோவாக பட்டதால் இங்கு இடப்பட்டுள்ளது.

PLAY VIDEO ------DOWNLOAD


நன்றி

முகவைத்தமிழன்
.

இஸ்லாம் முஸ்லிம் காரைக்குடி கோயமுத்தூர் கோயம்புத்தூர்

No comments: