Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Sunday, January 09, 2011

பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...
பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்
[Bombs Made by Narendra Modi]


கடந்த 2006 ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு, 2006ல் மும்பை இரயில்களில் 7 குண்டு வெடிப்புகள், 2006 மஹாராஷ்ட்ரா மாநில மாலேகானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புகள், 2007 ஹைதராபாத் பூங்காவில் இரட்டை குண்டு வெடிப்புகள், 2008 ஜெய்ப்பூரில் சைக்கிள் குண்டு வெடிப்புகள், 2008 பெங்களுர் குண்டு வெடிப்புகள். இன்று 2008 செப்டம்பர் மாதம் தலைநகர் டெல்லியிலோ 6 இடங்களில்....இப்படி நாசகார செயல்களினால் பலியெடுக்கப்பட்ட மனித உயிர்கள் பல நூறுகளைத் தாண்டும்.

இக்குண்டுவெடிப்புகள் அனைத்தும் ஒரே ஒரு தகவலைத்தான்; சொல்லும். அது குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த மறுகனமே பயங்கரவாதி அத்வானி சின்னத்திரைகளில் தோன்றுவார். குண்டு வெடிப்புக்கு பாக்கிஸ்தானில் லஷ்க்கரே தைய்யியா அல்லது இல்லாத சிமி அமைப்பே காரணம் என்பார். அப்படியே ஆளும் காங்கிரஸ் அரசை ஒரு பிடிபிடிப்பார். வழக்கம் போல அப்பாவி முஸ்லிம்கள் நாடுமுழுவதும் சிறைவைக்கப் படுவார்கள். வெடிகுண்டு சோதனை என்ற பெயரால் முஸ்லிம்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நாடே அமளிதுமளியாகும். இதுதான் நம் சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை.


தேசபிதா காத்தியடிகளை கொலைசெய்த, சங்பரிவார வெறியனும் தேசதுரோகியுமான கோட்சே தனது கைகளில் இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரை பச்சைகுத்திக் கொண்டும், முஸ்லிம்களைப் போல கத்னாவும் செய்திருந்தான் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை. காரணம் காந்தியடிகளை கொலைசெய்தது ஒரு முஸ்லிம் என்று வாதந்தியைப் பரப்பி முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு, ஒட்டு மொத்த தேசத்தையே முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பலாம் என்று திட்டமிட்டனர் அன்றைய சங்பரிவார கொலை வெறியர்கள். ஆனால் குள்ளநரிகளின் சாயம் மிக விரைவிலேயே வெளுத்து, சங்பரிவாரத்தின் கோரக் கொலைவெறி முகத்தை நாடே கண்டு அதிர்ந்தது.

தேசத்துரோகி கோட்சேயின் அதே பர்முலாவை கையாண்டு, அவனது வாரிசுகளான இன்றைய சங்பரிவார பிஜேபியினர் முஸ்லிம்களுக் கெதிராக தொடர்ந்து சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இவர்கள் நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள். இதற்கோர் சிறந்த உதாரணம் கடந்த 2006ல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகள். மாலேகான் மசூதியில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் பிஜேபியினர் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். மசூதிக்குள் குண்டுகளை வைத்தது முஸ்லிம்கள்தான் என்று ஊடகங்கள் திரிபுவாதம் பண்ணுவதற்கு வசதியாக தொப்பிகளையும், ஒட்டுதாடிகளையும் அவ்விடத்தில் விட்டுச்சென்றனர்.

இதை போலத்தான் குஜ்ராத்திலும். ஓடிய ரயிலை தாங்களாகவே கொளுத்திவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு, பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் உயிரை நரவேட்டையதும், முஸ்லிம் பெண்களை கற்பழித்ததும், அவைகளைத் தொடர்ந்து டெகல்கா பத்திரிக்கை இவர்களது கோரமுகத்தை கிழித்ததும் நாடே அறியும்.

கடந்த 4 வருடங்களின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி (முஸ்லிம்களுக்கு தனிஇடஒதுக்கீடு அளிக்காமை, அமெரிக்காவுடன் அனு ஒப்பந்தம் ஆகியவைகளைத் தவிர்த்து) பெரிய அளவில் குறைசொல்ல முடியாத அளவிற்கு நல்லதொரு ஆட்சியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு திட்டங்கள் பல தீட்டி அதில் வெற்றி நடைபோடும் இக்காங்கிரஸ் ஆட்சி இனியும் நீடித்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியினர் எதிர்க்கட்சி இருக்கையில்கூட அமர இயலாத சூழ்நிலை வந்துவிடும். சங்பரிவார பிஜேபியினர் இவைகளை புறிந்துகொண்டதின் கோரவிளைவுதான் தொடரும் இக்குண்டுவெடிப்புகள்.

பெங்களூரில் பிஜேபியினரின் தேசிய செயற்குழு கூடியிருந்த தருனத்தில், தலைநகர் டெல்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு, அதன்பின்னர் தொலைக்காட்சிகளுக்கு முன்னின்று பேட்டி என்ற பெயரில் மெகா சீரியல் நடத்திய பிஜேபி தலைவர்களின் பேட்டிகளைக் கண்ட எவரும் இக்குண்டுவெடிப்பின் பின்னனியிலுள்ள இரகசியங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்வர்.

பிரதமர் பதவி வெறியில் உறக்கமில்லாமல் சுற்றித்திரியும் ரத்தயாத்திரை புகழ் ரத்தக்காட்டேரி அத்வானி, குண்டு வெடித்த சில மணித்துளிகளிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பொடா சட்டம் கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார்.


நரமாமிச உண்ணி நரேந்திரமோடியோ இதற்கு ஒருபடி மேலேபோய் 'நாங்கள் 10 நாட்களுக்கு முன்னரே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இக்குண்டுவெடிப்புத் தகவல்களை அளித்துவிட்டோம்' என்று படீர் என உண்மையை போட்டு உடைத்தார். உண்மைதான்! குண்டு வைக்க இருப்பவனுக்குத்தானே எப்படி எங்கே எத்தனை குண்டுகள் வெடிக்க இருக்கின்றது என்பது தெரியும். பின்னர் நரேந்திரமோடி தான் வாய்உளறி விட்டதை சுதாரித்துக் கொண்டு 'தேசநலன், தீவிரவாதிகள்' என்று ஏதேதோ சொல்லி நிலமையை சமாளித்தார்.

குஜ்ராத்தில் முஸ்லிம் இனப்படுகொலைகளை நடத்திய நரேந்திர மோடி, அவன் நடத்த இருந்த டெல்லி குண்டு வெடிப்புகளை பற்றி பிரதமருக்கே அளித்த எச்சரிக்கையை உளவுத்துறைகள் கண்டுகொள்ளாமல் கோட்டைவிட்டது ஏனோ? அவ்வாறு அலட்சியம் செய்ததின் விளைவுதான் எமது சகோதரர்கள் 30 பேர்கள் பலியாக்கப்பட்டும், 100ம் அதிகமானோர் மருத்துவமனைகளில் உயிருக்கப் போராடும் துக்கநிலை ஏற்பட்டுள்ளது.

கோப்புகளை மூடுவதற்காக, குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் லஷ்க்கரே தைய்யியா, அல்லது சிமி என்று கூறி நாட்டு மக்களை இனியும் சமாதானப்படுத்திட இயலாது என்ற முடிவிற்கு வந்த உளவுத்துறையினர், தற்போது இந்தியன் முஜாஹிதீன் என்று ஒரு புதிய திரைக்கதையை இயற்றுகின்றனர். பெங்களூரில் சங்பரிவார தலைவர்கள் கூடியிருந்த அரங்கத்திற்குள் குண்டுகள் வெடித்து, பயங்கரவாதிகள் அனைவரும் உடல் சிதறி செத்திருந்தால், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் குண்டு வைத்தனர் என்று உளவுத்துறையினர் கற்பனை செய்வதில் ஒரளவு அர்த்தமிருக்கும். நம் இந்தியத் திருநாடு வல்லரசாக ஆகுவதற்கு பெரும் தடையாக இருக்கும் இச்சங்பரிவார குண்டர்கள் தொலையட்டும் என்று இந்தியன் முஜாஹிதீன் பெயரில் யாரோ சிலர்கள் குண்டுகள் வைத்திருக்கின்றனர் என்று நாட்டுமக்களும் நம்பலாம்.

ஆனால் அநியாயமாக ஒர் உயிரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலைசெய்வதற்குச் சமம் என்று போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களையும் உளவுத்துறையினர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பலிகிடாவாக்குவது என்ன நியாயம்? இதனால் உண்மைக் குற்றவாளிகள் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கொண்டே வருகின்றனர் என்பதே உண்மை.


இக்குண்டுகள் அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருட்கள் மூலம் தயார் செய்யப்பட்டதாக அனைத்து தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன. நாட்டில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் பின்னணியில் இருப்பது இத்தேசதுரோக சங்பரிவார பிஜேபி குண்டர்களே என்பதில் மத்திய அரசுக்கு இனியும் சந்தேகம் இருந்தால், நாக்பூரிலும், மத்திய பிரசேத்திலுள்ள போபாலிலும், செயல்படுகின்ற சங்பரிவார வெறியர்களின் துப்பாக்கித் தொழிற்சாலைகள் மற்றும் ஆயிதக் கிடங்குகளை மத்திய அரசு உடனடியாகக் கைப்பற்றவேண்டும். அப்போது தெரியும் தலைநகரில் வெடிக்கப்பட்ட குண்டுகளுக்கும், இதற்க முன்னர் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கம் அமோனிம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது என்று?.

மேலும் சாஹா பயற்சி என்ற பெயரில் ஆண்களுக்கும், துர்காவாகினி என்ற பெயரில் மகளிர் அமைப்புகளையும் உருவாக்கி ஆயுதப்பயிற்சி அளிக்கும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்து, நாடு முழுவதுமுள்ள இவர்களின் அலுவலகங்களை ஒரேநேரத்தில் சோதனை நடத்தினால் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் செயல்படுபவர்கள் யார்? என்பதும் வெட்டவெளிச்சமாகும்.

இதில் முக்கியமான ஒன்றையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பின்னர் வழக்கமாக ஒரு ஈமெயில் உளாவரும். இன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பின்னரும் வெளியான முகவரியில்லாத அந்த ஈமெயிலில், டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும்;, பெங்களூரிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்னையையும் தாக்க இருப்பதாக வெளியான இச்செய்தி உண்மையா அல்லது மிரட்டலா என்பது நரேந்திர மோடிக்கும், பிஜேபியினருக்குமே வெளிச்சம். இருப்பினும் அமைதிப் பூங்காவாம் நம் தமிழக மண்ணில் பிஜேபியினரின் இந்துத்துவ தீவிரவாதத்திற்கு எவரும் பலியாகி விடக்கூடாது. இத்தீவிரவாதிகளின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் கடமை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரையும், தமிழக காவல்த்துறையுமே சாரும்.


தொடரும் குண்டு வெடிப்புகளுக்கு லஷ்க்கரே தைய்யியா, சிமி, இந்தியன் முஜாஹிதீன் என்று இனியும் உளறிக் கொண்டிராமல் உண்மை தீவிரவாதிகளான சங்பரிவார குண்டர்கள் மத்திய மாநில அரசுகள் கைது செய்யுமா? நாட்டில் அமைதி நிலவ வழிவகுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இது தொடர்பான பதிவுகள் :-



THANKS : WWW.IIPONLINE.ORG

Thursday, February 12, 2009

21 ம் தேதி முகவையில் தியாகி முத்துக்குமாரின் அஸ்தி - திரள்வீர் மக்களே! இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரியக்கம்


ஐயா. பரந்தாமன் அவர்கள் உரையாற்றுகிறார் அருகில் தோழர்கள்


இராமநாதபுரம், பிப்ரவரி 11, இலங்கையில் சிங்கள பேரினவாத இரானுவத்தால் அப்பாவி தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் இனவாத படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி இராமநாதபுரம் நகரி்ன் பல இடங்களில் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்ப்படுத்துவதற்காக தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றது.

ஐயா பழ. நெடுமாறன் அவர்களால் அமைக்கப்பட்டுள்ள இங்கைத் தமிழர் பாதுகாப்பு இய்க்கத்தின் சார்பிலும், தமிழ் பாதுகாப்பு பேரவை சார்பிலும் இந்த தெருமுனை பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


இடமிருந்து தோழர் மதுரை வீரன், தோழர் செளந்தரபாண்டியன், தோழர் முகவைத்தமிழன், தோழர் காமராஜ் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.



இக்கூட்டங்களில் கண்டன உரையாற்றுவதற்காக ஈழத்தமிழர்களுக்காக பொடா சட்டத்தில் கைதாகி சிறை சென்ற தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா. க. பரந்தாமன் அவர்களும், தமிழ் பாதுகாப்பு பேரவையின் ஆலோசகர் தோழர் சை செளந்தர பான்டியன் அவர்களும், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயிகளின் தலைவர் தோழர் மதுரை வீரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்து கண்டன உரையாற்றினார்கள்.

ஐயா பரந்தாமன் அவர்கள் தனது உரையில் வலுப்பெற்று வரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை பற்றியும், விடுதலைப்புலிகளின் வலிமை பற்றியும், விடுதலைப்புலிகள் அமைப்பினை யாராலும் தோற்கடிக்க இயலாது என்றும், சென்னையில் பல்லாயிரம் பேர் கலந்து கொள்ள நடைபெற்ற நிகழ்வினைப் பற்றியும் விளக்கினார்கள். பின்னர் வரும் 21 ம் தேதி இராமேசுவரம் நோக்கி ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரை அற்ப்பனித்த உயிர்த்தியாகி தோழர் முத்துக்குமாரின் அஸ்த்தியை எடுத்து வருவது பற்றியும் அதை இராமநாதபுரம் அரன்மனை முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பது பற்றியும் இந்நிகழ்வில் பெருமளவில் மாணவ, மாணவிகளையும் பொதுமக்களையும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தச் செய்வது பற்றியும் கூறினார்கள். இந்நிகழச்சியின் மூலம் மாவட்டம் முழுவதும் ஈழத்தமிழ் பேராதரவு எழுச்சியை ஏற்ப்படுத்த வேண்டுமு: என்றும் கூறினார். இதற்காக ஏற்பாடுகளை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தோழர் நாகேசுவரன், தோழர் காமராஜ், தோழர் பிரபாகரன் மற்றும் தோழர் முகவைத்தமிழன் ஆகியோர் முன்னின்று செய்வார்கள்.

கூட்டங்களுக்கு தமிழ் பாதுகாப்பு பேரவையின் பொருளாலர் தோழர் காமராஜ் அவர்கள் தலைமை வகித்தார்கள். தோழர் சி. பிரபாகரன், அமைப்பாளர், தமிழ் பாதுகாப்பு பேரவை, தோழர் முகவைத்தமிழன் - இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்(முகவை மாவட்டம்) தோழர். க. நாகேசுவரன் - தலைவர், தமிழ் பாதுகாப்பு பேரவை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இடமிருந்து தோழர் காமராஜ், தோழர் மதுரை வீரன், தோழர் முகவைத்தமிழன், ஐயா பரந்தாமன் அவர்கள், தோழர் நாகேசுவரன், தோழர் செளந்தரபாண்டியன் ஆகியோர்.

இக்கூட்டத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தோழர். இராசிவ் காந்தி B.A. B.L. M.L, பொதுச் செயளாலர், தமிழ் பாதுகாப்பு பேரவை, வழக்கறிஞர். பசுமலை B.A. B.L., மாவட்ட செயலாளர், தமிழ் தேசிய இயக்கம், வழக்கறிஞர். மு.த. முருகேசன் B.Sc., B.L தலைவர் ஆதிசேனா இயக்கம், தோழர் ஜெ. ஜெரோன்குமார், தீவுத்தமிழர் கூட்டமைப்பு, தோழர் நம்புக்குமார், தமிழ் பாதுகாப்பு பேரவை , இராமேசுவரம், தோழர் செகன், தோழர் மா. அன்புகரசன், தோழர் ம. எட்வர்டு , தோழர் வாலிதாசன், தமிழ் பாதுகாப்பு பேரவை, தோழ் ஆதித்ய சேக்கிழார், தமிழக ஆசிரிய படைப்பாளிகள் பேரியக்கம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Friday, January 30, 2009

பரமக்குடியில்..IDMK ஏன் ? எதற்கு? மாபெரும் கருத்தரங்கமும்

பரமக்குடியில்........
இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி
IDMK நடத்தும்
இந்திய தேசிய மக்கள் கட்சி ஏன் ? எதற்கு?
மாபெரும் கருத்தரங்கமும்
உங்கள் கேள்விகள், சந்தேகங்கள், விமர்சனங்கள்,குற்றச்சாட்டுக்கள்,
கண்டனக்கனைகள், ஐயங்கள் வரவேற்கப்படுகின்றன. வீழந்த சமுதாயத்தின் அரசியல் விடியலை தட்டி எழுப்பிட உங்கள் வினாக்கள் வீறு கொண்டு எழட்டும்

இடம் : பாரதிநகர் பள்ளிவாசல் எதிர்புறம், முதுவை டிம்பர் அருகில்
நாள் : 31.01.2009 சனிக்கிழமை
நேரம் : மாலை 4.30 மணி

தலைமை

திரு. H.அப்துல் நஜ்முதீன் அவர்கள்
மாவட்ட பொருளாலர்

வரவேற்புரை
திரு. மாமன்னன் இபுறாம்ஷா அவர்கள்
துவக்க உரை
திரு. M. அக்பர் ராஜா அவர்கள் B.A. B.L,
மாவட்ட தலைவர்

முன்னிலை

திரு. முகவைத்தமிழன் அவர்கள்
மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்

திரு, எம்.ஐ. ஜஹாங்கீர் அவர்கள்
முகவை மாவட்ட செயளாலர்

மருத்துவர் திரு. பக்ருதீன் அவர்கள்
மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்

திரு. முகைதீன் அடுமை அவர்கள்
நகர் தலைவர் - கீழக்கரை

விளக்கவுரை

திரு. M. குத்பதீன் ஐபக் அவர்கள்
மாநில தலைவர்

நன்றியுரை

திரு J.முகம்மது ஹபீப் அவர்கள்

துவன்டு இருக்கும் சமுதாயத்தை தூக்கி நிமிர்த்திட
தூங்கி கொண்டிருக்கும் சமுதாயத்தை விழிக்க செய்திட
துள்ளிக் குதித்து வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

அனைவரும் வாரீர் !! அழைக்கிறது பரமக்குடி நகர் IDMK

விடுதலையும், விடியலும் வெகுதூரம் இல்லை...

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
9894262100 , 9443021050, 9842388428

Monday, January 19, 2009

வெளிநாட்டு அமைப்புகளை இந்தியாவில் தடை செய்யலாமா? - நீதிபதி கேள்வி- சீமான் விடுதலை

சீமான், கொளத்தூர் மணிக்கு ஜாமீன் - ஐகோர்ட்
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சீமான், மேட்டூரில் வீட்டில் இருந்த கொளத்தூர் மணி, சென்னையில் இருந்த மணியரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள்.

கைது செய்யப்பட்ட டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் ஈரோடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு அசோகன் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் சார்பில் வக்கீல் பா.பா.மோகன் ஈரோடு மாஜிஸ்திரேட்டு 1 வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டிருந்தார்.

சீமான் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன ஊர்வலங்கள் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சீமானுக்கு ஜாமீன் கிடைக்குமா என்று அவருடைய ஆதரவாலர்கள் வருத்தத்துடன் இருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கேட்டு மூவரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Sunday, December 28, 2008

குவைத்தில் சமூக நீதி கருத்தரங்கம்

இறைவனின் திருப்பெயரால்...

சமூக நீதி கருத்தரங்கம்

குவைத் தமிழ் தோழமை அமைப்புக்களின் ஆதரவுடன் !
குவைத் தமிழர்கள் விழிப்புணர்வின் ஒரு மைல் கல்லாக !!
ஃபாஸிஸ, பிரிவினைவாத சக்திகளை எதிர்த்து குரல் கொடுக்க !!!
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் ஒற்றுமைக்காக !!!!
­­­
நாள்: ஜனவரி 1, 2009 நேரம்: மாலை 5:15
இடம்: ஜம்இய்யது இஸ்லாஹ் அரங்கம், ரவ்தா – குவைத்

தலைமை: தொழிலதிபர் A.சுலைமான் பாட்ஷா
(உரிமையாளர், லக்கி ப்ரிண்டர்ஸ், குவைத்)

சிறப்புரையாளர்கள்:
பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
(பொதுச் செயலாளர், திராவிட இயக்க தமிழர் பேரவை)
தலைப்பு: சமைப்போம் சகோதரத்துவம் வாரீர் வாரீர் !!

சகோ.M.தமீமுன் அன்ஸாரி M.B.A.
(மாநில செயலாளர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்)
தலைப்பு: தீவிரவாதமும் பயங்கரவாதமும் - நிழலும் நிஜமும்

நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC), குவைத்
23925612 / 99619827 / 66412875 / 97358846 / 22470159

அறிவமுதம் பருக தமிழர்கள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக!
குறிப்பு: For Women Special Place ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஃபஹாஹீல், மங்காஃப், அபூஹலிஃபா, மஹ்பூலா மற்றும் சிட்டி பகுதிகளிலிருந்து வாகன வசதி செய்யப்பட்டுள்ளது

Friday, December 19, 2008

புதிய சட்ட திருத்த மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் PFI கோரிக்கை

சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் பாப்புலர் ஃபிரண்ட் கோரிக்கை

திரும்பப் பெறப்பட்ட கருப்பு சட்டங்களான தடா, பொடாவில் உள்ள கடுமையான விதிமுறைகளை (ஷரத்துக்களை) சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தில் மீண்டும் நுழைக்கப்படுகிறது.எனவே சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் தலை
மை கோருகிறது.அரவிருக்கும் சட்ட திருத்தம் காவல்துறைக்கு மிதமிஞ்சிய அதிகாரத்தைக் கொடுக்கிறது. குற்றம்சாட்டப்பட்டஅணிர 180 நாட்களுக்கு காவல்துறையின் கட்டுப்பாட்டில் வைக்க அதிகாரம் வழங்குகிறது.தான் குற்றமற்றவர், அப்பாவி என நிரூபிக்கும் பொறுப்பும் குற்றம் சாட்டப்பட்டவரையே சாரும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறப்பட்டால் அவருடன் தீவிரவாதத்தில் தொடர்புள்ளதாக சந்தேகப்படும் இயக்கங்களின் சொத்துக்களை முடக்கவும் அரசாங்கத்திற்கு
அனுமதியளிக்கிறது.

ஏற்கனவே தடா, பொடா போன்ற சட்டங்கள் அமுலில் இருக்கும் போது நடந்ததைப் போன்று, சட்டவிதிமுறை மீறல்களுக்கு இந்த புதிய ச்ரத்துகள் வழிவகுக்கும். எனவே காரணமின்றி தீவிரவாதகுற்றம் சாட்டப்பட்ட உண்மையான அப்பாவிகளுக்கு நேர்கமையான விசாரனை தடுக்கப்படுவதுடன் நீதியும் மறுக்கப்படுகிறது. இதில் ஆறுதலான விஷயம் என்னவெனில் காவல்துறை அதிகாரிகள் முன்பாக கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் அங்கீகரிக்கப்பட்ட சாட்சியமாக சட்டத்திருத்தத்தில் சேர்க்கப்படவில்லை.

தடா, பொடா வழக்குகளை நடுநிலையாக மதிப்பீடு செய்ததில் தெரிய வருவது என்னவெனில் இத்தகைய கடும் ச்ரத்துகள் இருந்தும் இவ்வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களை கோர்ட் குற்றவாளிகள் என்று தீர்மானிக்கவில்லை. இவ்வழக்குகளில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் அப்பாவிகள். எனவே இத்தகைய தீவிரவாத சட்டங்கள் பழங்குடியினர், தலித்துகள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரணிக அரசாங்கத்திலும் காவல்துறையிலும் ஊடுறுவியுள்ள சாதிய மதவாத ஃபாசிஸ சக்திகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிறுபான்மை சமுதாய தலைவர்களின் குற்றச்சாட்டை உண்மைப்படுத்துகிறது.


இச்சட்டத் திருத்தத்தை பா.ஜ.க. அரவேற்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கெதிரணிக பயன்படுத்துவதற்காக இத்தகைய கருப்பு சட்டங்களை கொண்டு அரவேண்டும் என்றஅவர்களின் நீண்ட கால கோரிக்கைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அடிபணிந்து விட்டதற்கானகாரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை.

உள்நாட்டு தீவிரவாத கொள்கையான இந்துத்துவாவை கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக நிரணிகரித்ததிலிருந்து காங்கிரடி கட்சியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும்பாடம் கற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறோம்.எனவே பா.ஜ.க.வின் இந்துத்துவ திட்டத்தை தழுவும் எந்த முயற்சியும் எதிர்வரும் பாரணிளுமன்றதேர்தலில் ஆளுங்கட்சிக்கு உதவாது. நமது அரசாங்கம் இப்போது அறிவித்துள்ளபடி மும்பை தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாத குழுக்கள்பாகிஸ்தானை அடித்தளமாகக் கொண்டு இயங்குபவை அதை பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டுள்ளது.


குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்தி தண்டிக்க பாகிஸ்தான் மீது சர்வதேச மற்றும் இரணிச்யத்துறை நிர்பந்தங்களை நமது அரசாங்கம் கொடுத்து சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. மும்பை தீவிரவாத செயல்பாடுகளில் இந்தியாவில் உள்ள எந்த தனிநபரோ குழுவோ இதுவரை குற்றம் சாட்டப்படவில்லை. எனவே மும்பை தீவிரவாதத் தாக்குதலைக் காரணம் காட்டி கருப்பு சட்டங்களை மக்கள் மீது திணிப்பதை நியாயப்படுத்த முடியாது. காவலர்கள், பாதுகாப்பு மற்றும் உளவுநிறுவனங்களில் குறைபாடுகள் இருப்பதால் அதைச் சரிசெய்து மேம்படுத்துவதில்தான் உண்மையான நிவாரணம் உள்ளது.

இதற்காக தேசிய புலனாய்வு நிறுவனம் அமைப்பது நல்ல முயற்சியாக கருத முடியாது. இந்த யோசனை மாநில சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் தலையிட மத்திய அரசாங்கத்திற்கு மாநில அரசை விட கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதால் இது நமது கூட்டாட்சி தத்துவத்திற்கே (எதிரணிக) அமை
யும்.பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் கேமரணிவில் நடைபெறும் வழக்கு விசாரனை வெளிப்படையான நேர்மையான விசாரனை முறையாக அமையாது.

எனவே நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய சொந்தக் குடிமக்களையே அச்சுறுத்தி பீதிவயப்படுத்தும் கருப்புச் சட்டங்களை கொண்டுவரத்துடிக்கும் கட்சிகளாக மாறாமல் அந்நிய அடக்குமுறைகள் தலையீடுகளுக்கெதிரணிக நாட்டு மக்களின் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


இவண்,
இ.எம். அப்துர் ரஹ்மான்,
பொதுச் செயலாளர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

19.12.2008

Monday, December 15, 2008

UNITED STUDENTS FRONT- ன் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்புவிழா


UNITED STUDENTS FRONT- ன் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகம் (13/12/08) சனிக்கிழமை மாலை 4:30 ம்ணியளவில் அதிராம்பட்டினம்,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டிலுள்ள தனலக்ஷ்மி பேங்க் மாடியில், ஹாஜி A.M.K.முகம்மது ஹனீஃப் அவர்கள் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் A.முகம்மது அன்வர் M.A.,M.Phill., அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


இதனைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் ஹாஜா நஜ்முதீன் அவர்கள் கிராஅத் ஓதினார்,Z. முகம்மது தம்பி அவர்கள் வரவேற்புரையாற்றினார், A.முகம்மது அன்வர் M.A.,M.Phill.,அவர்கள் பணிகளை விளக்கிப் பேசினார், A.M.Kமுகம்மது ஹனீஃப், A.T.அப்துல்லாஹ் B.Com.,D.C.P., மெளலவி, ஷேக் முகம்மது ஆகியோர் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் USF-ஐ வாழ்த்தியும் சிறப்புரையாற்றினர், இறுதியாக, M.சாகுல் ஹமீது நன்ரறியுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும், ஜமாத்தார்களும், பொதுமக்களும் கலந்துக் கொன்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியைன் தஞ்சை தெற்கு மாவ்ட்டச் செயலாளர், S.நிஜாமுதீன் தொகுத்து வழங்கினார்.

Saturday, December 13, 2008

இலவசம் ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர்


பகவான் மஹாவீர் விக்லாங் சஹாய்தா சமிதி நிறுவனமும் டவ் இந்தியாவும் இணைந்து இலவச சேவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இலவசம்
ஜெய்பூர் செயற்கை கால் மற்றும் காலிபர் (விட்டமானி) இலவசமாக வழங்கப்படும்.

ஊனமுற்ற சகோதர சகோதரிகள் எவ்வித கட்டனமும் இன்றி இவற்றை இலவசமாக பெறலாம்

வரும் 15-12-2008 காலை முதல் 19-12-2008 வரை இவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்
அலுவலக நேரம் : காலை 9.00 முதல் இரவு 7.00 மனி வரை.

முக்கிய குறிப்பு : இச்சலுகை பெற விரும்புவோர் கட்டாயமாக மதியம் 2.00 மனிக்கு முன்னதாக வர வேண்டும்.

முகவரி : ஹஸ்த்தினாபுரி நகரி (மாலு ஜெய்ன பவன்)
30, வெங்கடாச்சலம் முதலியார் தெரு,
சூளை, சென்னை 600112
சூளை அஞ்சல் அலுவலகம் அருகில்.


தொலைபேசி : 044 - 266919616 / 25322223
திரு. மோஹன் ஜெயின்



தயவு செய்து உங்கள் பகுதியில் ஊனமுற்றோர் யாராவது இருந்தால் அவர்களுக்கு இந்த தகவலை தெறிவியுங்கள். ஏழ்மையில் உள்ளவர்களுக்கு இது மிகப்பெரும் உதவியாக இருக்கும்.

Wednesday, December 03, 2008

உலக ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 03

உலக ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 03, 2008

கருத்தரங்கில் உரையாற்றுகின்றார் மா. காமராசர் அவர்கள் அமர்திருப்பது இடமிருந்து, திரு. நாகேஸ்வரன், திரு. முகவைத்தமிழன், திரு. நூர் அ.தி.மு.க, திரு. குத்புதீன் ஐபக் ஆகியோர்.


டிசம்பர் 03, இராமநாதபுரத்தில் உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் கருத்தரங்கம், பேரணி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக இந்த நிகழச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கனக்கான உடல் ஊனமுற்றோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிகள் முதலில் இராமநாதபுரம் மத்திய பேரூந்து நிலையத்தின் எதிர்புரம் அமைந்துள்ள "வளர்ச்சித்துறை திருமன மஹாலில்" ஆரம்பமாகியது.




திரு. முகவைத்தமிழன் அவர்கள் ஒரு உடல் ஊனமுற்ற பென்னிற்கு உணவை வழங்கி துவக்கி வைக்கின்றார் அருகில் திரு. நூர், முன்னாள் அ.தி.மு.க பஞ்சாயத்து தலைவர், திரு. குத்புதீன் ஐபக் இ.தே.ம.க


நிகழ்ச்சி சரியாக காலை 10.0 0 மனியளவில் துவங்கியது. ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் திரு. மா. காமராசர் தலைமை தாங்கினார். திரு. நாகசாமி அவர்கள் உதயம் ஊனமுற்றோர் சங்கம், மன்டபம் ஒன்றியம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். மெர்சி அறக்கட்டளை - திருவன்னாமலை திரு. ச. செழியன் M.A., M.phil அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.


திரு. டி.ஆர் சந்திரன், ஆலோசகர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. டி. இராதாகிருஷ்னன் அவர்கள், ஆசிரியர் , அரசு மேல்நிலைப்பள்ளி ரெகுநாதபுரம், திரு. மகாலிங்கம் அவர்கள், ஊனமுற்றோர் சங்கம், இராமேஸ்வரம், திரு. ஜி. தமிழரசு அவர்கள் செயலாளர், உதயம் ஊனமுற்றோர் சங்கம், மன்டபம் ஒன்றியம், திரு. காதர் அவர்கள் செயற்குழு உறுப்பினர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. மு.த. முருகேசு அவர்கள், நிறுவனர் அசுரா தொண்டு நிறுவனம், திரு. பா. மனோஜ்குமார் அவர்கள் அன்னை ஊனமுற்றோர் சங்கம், பாம்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


ஆயிரக்கணக்கான ஊனமுற்றோர் பங்கேற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட ஊனமுற்ற பென்கள் கூட்டத்தின் ஒரு பகுதி


பின்னர் இந்நிகழச்சியில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கனக்கானோர் வந்திரந்தனர் அவர்களில் வெளியூர்களில் இருந்து வந்திருந்த 500 க்கும் மேற்ப்பட்ட உடல் ஊனமுற்ற சகோதர, சகோதரிகளுக்கு இராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM) மூலமாக மதிய உணவு வழங்கப்பட்டது. இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் திரு. நூர் ஆகியோர் இராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM) சார்பாக உணவு பொருட்களை ஊனமுற்றோருக்கு வழங்கினர். பின்னர் கருத்தரங்கின் இறுதியில் திரு. டி. ஆரோக்கியராஜ் திட்ட ஒருங்கினைப்பாளர், இர்வோ தொண்டு நிறுவனம் நன்றியுரை வழங்கினார்.

பின்னர் உலக ஊனமுற்றோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பேரணி நடந்தது இப்பேரணியை மாவட்ட காவல்துறை துனை ஆனையர் (DSP) திரு. மா. மோகன் துரைச்சாமி I.P.S அவர்கள் துவக்கி வைத்தார்கள் இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் அருகிலிருந்து துவங்கிய பேரணி இறுதியாக ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் பொதுச்செயளாலர் திரு. எச்.அப்துல் நஜ்முதீன், பரமக்குடி அவர்கள் முடித்து வைக்க இராமநாதபுரம் அரன்மனை அருகே முடிவுக்கு வந்தது. இப்பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட உடல் ஊணமுற்ற ஆன்களும் பென்களும் திரளாக பங்கேற்றனர்.

இராமநாதபுரம் அரன்மனை முன்பாக உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திரு. கே.ஜி சிவலிங்கம் அவர்கள் , தலைவர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் தலைமை தாங்கினார். திரு. வேல்முருகன் செயளாலர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. முருகானந்தம், து.செயளாலர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. ஜலாலுதீன் அவர்கள், ஊனமுற்றோர் இயக்கம், தேவிபட்டினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு. சோலை முருகன் அவர்கள், செயற்குழு உறுப்பினர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் வரவேற்புரை வழங்கினார்.


பொதுக்கூட்ட மேடையில் தலைவர்கள், இடமிருந்து திரு. முகவைத்தமிழன், IDMK, திரு குத்புதீன் ஐபக், IDMK, திரு. நாகேஸ்வரன், தமிழ் பாதுகாப்பு பேரவை, திரு. ரவிச்சந்திர ராமவன்னி, இந்திய தேசிய காங்கிரஸ், திரு. அப்துல் நஜ்முதீன் ஆகியோர்


முகவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ரவிச்சந்திர ராமவன்னி அவர்கள், தலைவர், மாவட்ட பஞ்சாயத்து இராமநாதபுரம்,, திரு. டி.ஆர் சந்திரன் அவர்கள், இர்வோ தொண்டு நிறுவனம், திரு. குத்புதீன் ஐபக், தலைவர், இந்திய தேசிய மக்கள் கட்சி, திரு. நாகேஸ்வரன் அவர்கள், மனித நேய காப்பகம், இராமநாதபுரம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

திரு. எம்.பி. தில்லைபாக்கியம் அவர்கள், ஊனமுற்றோர் சங்கம், இராமேஸ்வரம், திரு. அடைக்கலம் அவர்கள், அன்னை ஊனமுற்றோர் சங்கம், பாம்பன், திரு. ஆதித்யா சேக்கிழார் அவர்கள், மாற்று அமைப்பு, இராமநாதபுரம், திரு. முகவைத்தமிழன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சி, திருமதி. எஸ். புனிதா அவர்கள், மாவட்ட அமைப்பாளர், தேசிய கடலோர பென்கள் இயக்கம், இராமநாதபுரம் மபவட்டம், திரு. ஜஹாங்கீர் அவர்கள், மாவட்ட செயளாலர், இந்திய தேசிய மக்கள் கட்சி, திரு. டி. ஆரோக்கியராஜ் அவர்கள், இர்வோ தொண்டு நிறுவனம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டத்தின் ஒருபகுதி


பின்னர் திரு. மா. காமராசர் அவர்கள், அமைப்பாளர், ஊனமுற்றோர் உரிமை இயக்கம் ஏற்புரை வழங்கினார், இறுதியில் கீழக்கண்ட கோரிக்ககைள் அரசுக்கு வைக்கப்பட்டன.

1. மாநிலம் மாவடடத்தில் அனைத்து அரசு மற்றும் பொது இடங்களில் ஊனமுற்றோருக்காக தடையில்லா சூழலை ஏற்ப்படுத்த வேண்டும்.


2. மாவட்ட அளவில் ஊனமுற்றோர் குறைதீர்ப்புநாள் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட வேண்டும்.


3. ஊனமுற்றோர் பாதுகாப்பு சிறப்பு சட்டம் 1995, பிரிவு 43ல் குறிப்பிட்டுள்ளபடி ஊனமுற்ற நபர் குடும்பத் தைலைவராக இருக்கும் நிலையில் அவர்களுக்கு இருப்பிடத்தை உண்டாக்கும் பொருட்டு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.


4. மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு துறைகளின் வாயிலாக நடைமுறையில் உள்ள சுய தொழில் கடனுதவி திட்டங்களான, பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டங்களை வழங்க வேண்டும்.


5. ஆதி திராவிட வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (THADCO) வாயிலாக ஊனமுற்றோருக்கு கடனுதவி வழங்க வேண்டும்.


6. பாரதப் பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் உரிய பிரதிநிதித்துவம் ஊனமுற்றோருக்கு வழங்க வேண்டும்.


7. டவுன் பஞ்சாயத்து மூலம் வழங்கப்படுகின்ற SGSRY உதவிகள் கிடைக்க செய்ய வேண்டும்.


8. மற்றுமுள்ள அனைத்து திட்டங்களிலும் அரசு உத்தரவின்படி உடல் ஊனமுற்றோருக்கு 3 சதவிகிதம் கிடைக்க செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுருத்தப்பட்டன.


நிகழச்சியின் இறுதியில் திரு. பூமி கனேசன் அவர்கள், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் நன்றியுரை வழங்க பொதுக்கூட்டம் இனிதே முடிவுற்றது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் செய்திருந்தது.

ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தில் இணையவோ அல்லது உதவி செய்யவோ விரும்புவோர் தொடர்புக்கு :

பொது தொடர்பாளர் திரு. மா. காமராசர். அலைபேசி எண் : 9842367354 , 9994539480
திரு. எச். அப்துல் நஜ்முதீன் துனைத் தலைவர். அலைபேசி எண் : 9842388428


இராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM)

திரு. நாகேஸ்வரன் அவர்கள். அலைபேசி எண் : 9786960608

Tuesday, December 02, 2008

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் சக்திகளை நடமாட விடாதீர்கள்!!

ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் மதவெறிச் சக்திகளை நடமாடவிட்டால் ஆபத்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்

சென்னையில் தமிழர் தலைவர் விளக்கவுரை

சென்னை, டிச. 2- மத தீவிரவாத சக்திகளான ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்க் கும்பலை நாட்டில் நடமாட விடாதீர்கள். இதில் கட்சி வேற்றுமை இருக்கக் கூடாது. மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

சாமியார் பெயரை மாற்றிக் கொண்டு

சாமியார் என்றாலே போலிதான். இதில் போலிச்சாமியார் என்று சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சாமியார் ஆசிரமம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு பெயரை மாற்றிக் கொள் கின்றான். யார் மகந்த் என்று கேட்டால் அமிர்தானந்த். நம்ம ஊர் மஞ்சக்குடி அய்யர் எப்படி தயானந்த சரஸ்வதி ஆனார்கள் பாருங்கள் - அதுமாதிரி - இவர் யார்?

தயானந்த பாண்டே

வடநாட்டுப் பார்ப்பனர். இவருடைய பெயர் என்னவென்று சொன்னால் தயானந்த பாண்டே. பாண்டே என்றாலே வட நாட்டிலே பீகாரிலே பார்ப்பான் என்று அர்த்தம். தயானந்த பாண்டே திடீரென்று மகந்த் அமிர்தானந்த் ஆகிவிட்டார். அவர் எப்படி ஆனார் என்று இன்றைய விடுதலையைப் பார்த்தீர்களேயானால், நம்முடைய கவிஞர் அவர்கள் அருமையாக எழுதியிருக்கின்றார் - ஒற்றைப் பத்தியிலே.

சாமியாரின் வளமான தொழில்

சங்கராச்சாரியாரின் விலை என்ன? எட்டு ஆண்டுகளுக்கு முன்னாலே இந்திய இராணுவத்தில் விமானப் படையில் பணியாற்றியவர். அதன் பிறகு வாரணாசி - காசிக்கு வந்தார். சாமியார் தொழில் வளமான தொழில் என்பதை உணர்ந்தார். சபலம் தட்டியது. இண்டஸ்ட்ரிலேயே முதல் போடாத இண்டஸ்ட்ரி ஒன்று உண்டு என்று சொன்னால் - அது சாமியார் இண்டஸ்ட்ரிதான் (கைதட்டல்).

ஒன்றுமில்லை. காவிபோட வேண்டும், காவிக்கு வழியில்லை என்றால், வடநாடாக இருந்தால் கோவணம், கோவணமும் கிடைக்கவில்லையென்றால் - உச்சக் கட்டம் - நிர்வாண சாமியார் (கைதட்டல்). வாரணாசியில் ஏகப்பட்ட சங்கராச்சாரியார்கள் அங்கு இருக்கின்றார்கள். பெரிய போட்டி. சங்கராச்சாரியார் பதவியை இவர் விலைக்கு வாங்கினார். சங்கராச்சாரி பதவி ரூபாய் 15 லட்சத்திற்கு

வாரணாசியில் உள்ள ஒரு மடத்திற்கு ரூபாய் 15 லட்சத்திற்கு கொடுத்து அந்த மடத்தின் சங்கராச்சாரியார் பதவியை விலைக்கு வாங்கிவிட்டார். சங்கராச்சாரி பதவி என்பது ஏலம் போடுகின்ற பதவி அல்ல. இவரெல்லாம் கடவுளோடு பேசினாரென்றும், தானே கடவுள் என்றும் சொல்லக் கூடிய அளவிற்கு இருக்கக் கூடியவர்கள். இந்த செய்தியை நீங்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.

2007 ஆம் ஆண்டு மே மாதம் அய்தராபாத்தில் மெக்கா மசூதி குண்டுவெடித்தது. 2007 அக்டோபர் குவாஜா மொய்கவதீன் சிஷ்டி தர்கா அஜ்மீர் குண்டு வெடித்தது. 2008 மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு. ஆறுபேர் சாவு. 90 பேர் படுகாயம். சாத்வி பிரக்யா சிங் தாகூருக்கு மோட்டார் சைக்கிள் சொந்தம்.

மோட்டர் சைக்கிள் Boldஇல்லை என்றால் துப்பு துலங்கியிருக்காது

அந்த மோட்டார் சைக்கிள் இல்லையென்றால் இந்த துப்புவே வெளியே வந்திருக்காது. பிரக்யா சிங்தாகூருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை சுனில் ஜோஷி என்பவருக்கு 2004-ல் கொடுத்தார். அவர் இறந்தபின் கல்சங்கரா என்பவர் அதைப் பயன்படுத்தி குண்டு வைத்தார். இந்து மிலிட்டரி ஸ்கூல் என்று நடத்துகிறார்கள். நாம் யாராவது முஸ்லிம் மிலிட்டரி ஸ்கூல் நடத்தினால் அனுமதிப்பார்களா? அதை விடுவார்களா?

இந்து மிலிட்டரி ஸ்கூல்

ஆனால், இந்து மிலிட்டரி ஸ்கூல் நடத்தி நூற்றுக் கணக்கில் வன்முறையாளர்களை, தீவிரவாதிகளை பயங்கரவாதிகளை, மதவெறியர்களை உருவாக்கி அனுப்புகிறார்கள் என்று சொன்னால், அது சாதாரணமா? அது மட்டுமல்ல, பிரக்யாசிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் சிறீகாந்த் பிரசாத் புரோகித், தயானந்த் பாண்டே (சங்கராச்சாரியார்) உள்பட பத்துப்பேர் கைது செய்யப்பட்டனர். நண்பர்களே, இந்த நேரத்திலே செய்தி முதலில் ஒன்று, இரண்டு என்று வந்தவுடனே இதை சாதாரணமாகக் கண்டு பிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தார்கள்.

முதலில் வீரம் பேசியவர்கள்

செய்தி நிறைய வந்தவுடனே என்ன சூழ்நிலை? இனிமேல் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொன்னவுடனே முதலில் வீரம் பேசினார்கள். தீவிரவாதமா? ஆகா, யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பேசினார்கள்.

உண்மைகளை விசாரிக்கும் குழு

இப்பொழுது அடுத்தபடியாக அத்வானி சொல்லுகின்றார் - அதெல்லாம் சங்பரிவார்க்கும் அதற்கும் சம்பந்தமில்லை. அடுத்து பி.ஜே.பி.யினுடைய தலைவர் ராஜ்நாத் சிங் சொல்லுகின்றார் - அவர்கள் எல்லாம் நிரபராதிகள். உடனே இதைப்பற்றி காவல்துறை எடுத்து விசாரிக்கிறது.

விசாரிக்கிறபொழுது உண்மைகளை வரவழைக்கிறார்கள். இன்னும் கேட்டால் உண்மையைக் கண்டறியக் கூடிய பரி சோதனைகளை எல்லாம் நடத்துகின்றார்கள். இவ்வளவும் செய்த பிற்பாடு அவர்கள் உண்மையை வரவழைக்க முயன்ற நேரத்திலே பல தகவல்கள் ஒன்றுக்கு ஒன்று தொடர்புபடுத்தி வந்து கொண்டிருக்கின்றன. இந்த விசாரணையைத் தடை செய்ய வேண்டும் என்கிற அளவிற்குப் போகிறார்கள்.

அதுமட்டுமல்ல, இதை நிறுத்த வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கின்றார்கள். எந்த அளவுக்கு என்றால், இப்படி நிறைய செய்திகளை சொல்லலாம். ஒன்றே ஒன்றைநான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மிலிட்டரியைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று

பி.ஜே.பி. யினர் சொல்லுகின்றார்கள். நீங்கள் மிலிட்டரியையும், மிலிட்டரி அதிகாரிகளையும் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று நடைமுறையில் என்ன செய்திருக்கின்றார்கள்?. ரிட்டையர் கூறுகிறார்கள் ரிட்டையர் ஆனவன் அங்கு அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கின்றான். துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக் கின்றான். இன்னும் வரிசையாகச் சொல்லவேண்டுமானால், ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஒரு நாவல் படிக்கிற மாதிரி அவ்வளவு சுவையாக இருக்கிறது. பரபரப்போடு அவ்வளவு செய்திகள் இருக்கின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்னாலே டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதியிருந்தார்கள். இன்றைக்கு காலையிலே வந்திருக்கின்ற டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கூட எழுதியிருக் கின்றார்கள். அதை எடுத்துச் சொல்லுகின்றார்.

Mind your words B.J.P leaders should not shoot off their mouths.

நல்ல அறிவுரையை ஜாடையாக சொல்லுகின்றார். நீ போய் முட்டாள்தனமாக உளறிவிடாதே. நிறைய விஷயம் வர இருக்கிறது. அதனால் நீ ஜாக்கிரதையாக இரு. வாயைப் பொத்திக்கொண்டிரு. நீ வெளியே வந்து சொல்ல ஆரம்பித்தால் எல்லாம்போய் விடும். பல தகவல்கள் இன்னும் வெளியே வர இருக்கின்றன என்று அவர்களுக்கு உதவி பண்ணுவதற்காகத்தான் ரொம்பத் தெளிவாகச் சொன்னார். இங்கே இதைத் தொடர்ந்தால் உள்நாட்டு யுத்தம் வரும் என்று பேசக் கூடிய அளவுக்கு இருந்தால் இப்படி பேசியவர் வெளியே இருக்கலாமா? தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண்டும் (கைதட்டல்).

மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதே. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப்போல தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் என்று சொல்வதா? அல்லது இஸ்லாமியர்கள் என்று சொல்லுவதா? அல்லது கிறித்தவர்கள் என்று சொல்லுவதா?

இராணுவத்தைக் கைக்கொள்வார்களாம்?

ஆகவே உள்நாட்டு யுத்தத்தையே நாங்கள் நடத்துவோம். நாங்கள் தீவிரவாதத்தை நடத்துவோம். நாங்கள் இராணு வத்தையே கைக் கொள்வோம். நாங்கள் எல்லாம் வெடிகுண்டுகளுக்கு ஏற்பாடு செய்வோம். அந்தப் பழியை இஸ்லாமியர்கள் மீதோ, கிறித்தவர்கள் மீதோ, சிறுபான்மையினர்மீதோ அல்லது மற்றவர்கள் மீதோ போடுவோம் - நடவடிக்கை எடுக்கக் கூடாது.

கேட்டால் உள்நாட்டு யுத்தம் வரக்கூடிய அளவிற்கு அவர்கள் துணிந்திருக்கின்றார்கள் என்றால் அதை அனுமதிக்கலாமா? அங்கு இருக்கிறதோ - இல்லையோ தமிழ்நாடு அதற்கு வழிகாட்ட வேண்டாமா?

கலைஞர் வகுத்த வியூகம்

நாற்பதும் கலைஞர் அவர்கள் வகுத்த வியூகத்தினாலே நாற்பது தொகுதிகளிலும் வெற்றபெற்ற காரணத்தினால்தான் மத்தியிலே மதவெறி ஆட்சி இல்லாமல் ஆக்கப்பட்டது. அதை நன்றாக நினைவிலே வைத்துக் கொள்ளவேண்டும். இதற்கு நாம் எப்படி பதில் சொல்லப்போகிறோம் என்று சொல்லும்பொழுது இந்த உணர்வை முன்னிலைப்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறை மிக முக்கியம். அடுத்த தேர்தல் என்பதை விட அந்த தேர்தல் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கு பாதுகாப்பதற்கு எப்படி இருக்கவேண்டும் என்பதை எல்லோரும் நினைக்கவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரை எதிர்க்க வேண்டும்

ஆகவேதான் இப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக இவைகள் எல்லா செய்திகளையும் எடுத்துச் சொல்லி, மக்கள் மத்தியிலே இதைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கடமை நமக்குண்டு. ஆர்.எஸ்.எஸ்.சை மதவெறியை எதிர்க்கிறோம் என்று சொல்லக் கூடிய அத்துணை கட்சிக்காரர்களுக்கும் உண்டு. காங்கிரஸ் நண்பர்கள் இதை செய்யவேண்டும். கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டும். மற்றவர்களும் இதை செய்யவேண்டும்.

அரசியல் பணி வேறு - நாட்டுப் பணிவேறு

அரசியலிலே எந்த அணிகள் என்பதெல்லாம் இருக்கட்டும். ஆனால், இது நாட்டினுடைய பிணிகள். எனவே இதை சொல்லுகிற நேரத்திலே இதை ஒட்டு மொத்தமாகக் குரல் கொடுத்து எல்லாம் சேர்ந்து குரல் கொடுக்க நீங்கள் வராவிட்டால்கூட, ஒருவேளை இவர்களோடு சேர்ந்தால் அவர்கள் கோபித்துக் கொண்டு அணி சேராமல் போய்விடுவார்களோ என்பதற்காக நீங்கள் நினைக்காவிட்டாலும் பரவாயில்லை.

இந்தச் சக்திகளை நடமாட விடாதீர்கள்!

தயவு செய்து இந்தச் சம்பவங்களை நீங்கள் வெளியே கொண்டு வாருங்கள். மக்கள் மத்தியிலே சொல்லுங்கள். அழுத்தமும் கொடுங்கள். உரிய தண்டனை கொடுங்கள். இவைகளை - இந்தச் சக்திகளை நடமாட விடாதீர்கள். அதன்மூலமாக அமைதிப் பூங்காவாக இருக்கின்ற நாட்டை அமளிக்காடாக ஆக்குவதற்கு உள்நாட்டு யுத்தத்தை நடத்துவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாஜ்பேயிகளும், அத்வானிகளும், இந்த நாட்டிலே இருக்கின்ற பார்ப்பன ஏடுகளும், மற்றவர்களும் வருகிறார்கள் என்று சொன்னால், அதற்கு துளியும் இடம் கொடுக்காத அளவிற்கு தமிழ்நாடு அதற்குத் தயாராகட்டும், தயாராகட்டும் என்று சொல்லி முடிக்கின்றேன்.

- இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

நன்றி : தமிழ் ஓவியா

Sunday, November 30, 2008

மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்க சொல்லி ஓலமிடும் தெருநாய்!!

மும்பாயைச் சொல்லி யுத்தம் கவியுமா?

மும்பாயில் நடந்த தாக்குதல்களைத் தொடர்ந்து,பார்ப்பனியப் பண்டாரங்கள் பதைபதைத்துப் பாரதத்தின் படைகளிடம்-இராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைக்கக்கோருவதும் அல்லது முஸ்லீம்களை குஜராத்தில் நரவேட்டையாடிய மோடியிடம் ஆட்சியை ஒப்படைக்கச் சொல்வதிலிருந்து நாம் பார்ப்பனியத்தின் பக்கச் சார்பைக் கணிக்கமுடியும்.

இந்தியத் தேசவிரோதப் பார்ப்பனியம் இந்தியத் தேசத்தை அந்நியச் சக்திகளிடம் கையளித்து, ஆரிய நாமத்தை இந்தியமக்களுக்குப் போடுவதற்குப் பெயர்"இந்திய-பாராத தேச நலம்"என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.இந்தத் தேச விரோதப் பார்ப்பனிய மற்றும் பனியா நலன்களின்பின்னே கைகோர்த்திருக்கும் அந்நியத் தேசங்களினது அரசியல் இலக்கு என்ன?அது குறித்து எவர்-எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதிலிருந்தே இந்தியப் பிராந்தியத்தில் சமாதானத்துக்கான முன்னெடுப்பு அமையும்.இது குறித்துப் புரிய முனைவோம்.


"பயங்கரவாதத்தின்" இன்னொரு முகத்தை நாம் மிக மெலினப்படுத்தப்பட்ட மொழிவுகளால் உய்துணர முடியாது! இதைப் புரிக முதலில்-புரிக!

இந்தத் தருணத்தில் இந்தியாவின்மீது கவிந்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கத்தின் அரசியல் மோசடிகள் மிகவும் கெடுதியானவொரு சூழலை முழுமொத்த இந்திய உழைக்கும் வர்க்கத்துக்கு வழங்கப் போகிறது.கடந்தபல நூற்றாண்டுகளாக இந்தியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனிய-பனியா ஆளும் வர்க்கங்கள் காலனித்துவக்காலத்தில்கூட அந்நியர்களைத் தமது ஏஜமானர்களாக்கி, முழுமொத்த இந்தியாவையும் சுரண்டிக் கொழுத்தார்கள்.அவர்களில் மிக முக்கியமான டாட்டா போன்ற தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் அன்று, நிபந்தனையற்ற உதவிகளை காந்திக்கு வழங்கிப் போலிச் சுதந்திரத்துக்குப் பின்பான இந்தியாவைத் தமது காலடிக்குள் வைத்துச் சுரண்டிக் கொழுத்தார்கள்.இது,இந்தியப் போலித் தேசியத்துள் மறைக்கப்பட்ட வரலாறு.இதைக் காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ்.காரன் கோட்சேயின் மொழியில் நாம் இனம் காணமுடியும்.இந்தியாவின் மிக முக்கியமான கல்வியாளரும் சமூகவியலாளருமான திரு.அஸீஸ் நந்தியைக் கற்றவர்களுக்கு இதுள் சந்தேகம் வரமுடியாது.

இன்றும், இதே கதையோடு தலைமுறை கடந்த "டாடட்டா"நிறுவன அதிபர் திருவாளர் இராற்றான் டாடா தனது தாஜ்மால் கோட்டலின் சிதைவுகளுக்கு மத்தியில் ஆத்திரத்தோடு இந்தியப் பாதுகாப்புக்குறித்துத் தமது எஜமானர்களின் தொலைக்காட்சிச் சேவையான சி.என்.என்.க்குப் பதிலளிக்கையில், இந்தியப் பாதுகாப்புக்குறித்து கேள்வி எழுப்புகிறார்.தமது கோட்டலுக்குப் பாதுகாப்பு வழங்குவதிலுள்ள குறைபாடுகளைக்குறித்து மூச்சுவிடும் இந்தக் களவாணிப்பயல் மோடியின் தலைமையில் அழித்தொழிக்கப்பட்ட அப்பாவி முஸ்லீங்கள் மூவாயிரம் பேர்கள் குறித்தோ, அவர்களது வாழ்வாதாரங்களின் சிதைப்புக் குறித்தோ மூச்சு விடவில்லை அன்று!

இப்போது இத்தகைய துரோகிகளின் மூச்சுத் திணறல் தமது எஜமானர்களின்(அமெரிக்க-மேற்குலக) நாடுகளினது பொருளாதார இருப்போடு சம்பந்தப்படுகிறது.

மும்பையில் நடந்தேறிய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்தியாவினதும் பாகிஸ்த்தானினதும் அரசியல் நடாத்தையில் பல மாற்றங்களை வேண்டி, உலகம் எதிர்பார்க்கிறது.அதற்கேற்ற சதிவேலைகளை உருவாக்கியவர்கள் மும்பாயில் நடந்தேற்றிய ஒரு நாடகம் பல நூறு மக்களைப் பலியெடுத்துள்ளது.இதன் உண்மை மிக விரைவாக அம்பலத்துக்கு வரும்-வரவேண்டும்!

பாகிஸ்த்தானும்,இந்தியாவும் போருக்குச் செல்வதை உலகம் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிடக்கிறது.இதற்கு மும்பாயில் நடத்திமுடிக்கப்பட்ட தாக்குதல் வழிவகுக்குமென அவர்கள் ஏலவே திட்டமிட்டார்கள்.அது அவர்களது பொருளாதார நலனுக்குமட்டுமல்ல,இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதாரத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பதற்கும் இதுவே அவர்களது இறுதி முடிவாகவும் இருக்கிறது.

மேற்குலகம் திட்டமிட்டபடி இத்தாக்குதலுக்குப் பாகிஸ்தானும் அதனால் வளர்த்தெடுக்கப்படும் காஸ்மீரிய விடுதலை கோரும் அமைப்பான Jaish-i-Mohammed மற்றும் Lashkar-i-Toiba அடிப்படைவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாகச் சொல்லும் கருத்துகளுக்குள் தமது பொருளாதாரத்துக்கு வலுச் சேர்க்கும் ஆயுதத் தளபாடவுற்பத்திச் சாலைகளுக்கான புதிய ஓப்பந்தங்கள் குறித்த நோக்கு இருக்கிறது என்பதை நாம் இனம் காணவேண்டும்!

அமெரிக்க-ஐரோப்பியப் பங்குச் சந்தைகளில் தமது பெரும் மூலதனத்தை இழந்த இத்தேசங்களின் ஆளும் வர்க்கங்களுக்கு மிக அவசியமாக ஒரு பாரிய யுத்தம் தேவையாக இருக்கிறது.யுத்தங்களில் அழிக்கப்படும் இராணுவத் தளபாடங்களால் ஆயுத உற்பத்தி தொடர்ந்து மேல் நிலைக்கு வரும்போது, அத்தகைய தொழிலில் முதலீடு செய்த இந்த ஆளும் வர்க்கம் ஓரளவாவது அழிந்த மூலதனத்தை; மிக விரைவாகத் திரட்ட முடியும்.இது,பொருளாதாரத்தின் அரிச்சுவடியாகத் திருவாளர்.கெய்னிஸ் குறித்துரைப்பதிலிருந்து நாம் விளங்க முடியும்.நவ லிபரல்களின் பொருளாதார இலக்குள் யுத்தம் மிக அவசியமானது.இதனால் அவர்கள் செய்த பற்பல யுத்தங்களை நாம் வரலாற்றில் கண்டோம்.

இன்று,மேற்குலகப் பொருளாதாரச் சரிவைக்குறித்து யுத்தமொன்றை நேரடியாகச் செய்வதற்கு மேற்குலக நாடுகளின் மக்கள் தடையாக இருக்கிறார்கள்.அதேபோன்று, அமெரிக்கா இருக்கும் பொருளாதாரச் சூழலில் அது இன்னொரு யுத்தத்தில் ஈடுபட்டுத் தமது எஜமானர்களைக் காக்கும் நிலையில் இல்லை!இதன் தாக்கம் மிகவிரைவாக மூன்றாந்தரப்பால் யுத்தம் நடாத்தப்பட்டுத் தமது ஆயுத உற்பத்தியால் வளங்களைப் பெருக்குவதற்கு ஏதாவதொரு இழிச்சிவாய்த் தேசங்கள் அவசியமாக இனம் காணப்பட்டது.அங்கே,மிகப் பலமான முரண்பாடுகளைக் கொண்ட யுத்தமுனைப்புத் தேசங்களாக இருப்பவை தென்கிழக்காசியாவில் இந்தியாவும்,பாகிஸ்த்தானுமாகவே இனம் காணப்படுகிறது.இதற்குப் பல தசாப்தங்களாக இந்துமதப் பரிவாரங்கள் முகாந்திரம் அமைத்துள்ளார்கள் கூட்டாக!

இவ்விரண்டு தேசங்களினதும் முரண்பாடுகள் வெறுமனவே பொருளாதார இலக்குகளாக நீர்த்துப்போவதைத் தடுத்து, அவற்றுக்கு "இந்து-முஸ்லீம்"எனும் மிகப் பெரிய மத முரண்பாடு உருவகப்படுத்தி அடுத்த பல தசாப்தத்துக்கு அதையே யுத்தமாக நடந்தேற்றுவதற்கு அவசியமான தத்துவார்த்த அடித்தளதைக் கோரிக் கொள்கிறது மேற்குலகமும் அமெரிக்காவும்.இது மிக அவசியமான அரசியற் சூழ்ச்சியோடு அடுத்த தசாப்த வியூகமாக அமெரிக்க-மேற்குலக அரசியல்-பொருளாதாரச் சூழலில் விரிகிறதென்பதை மூன்றாம் உலகத்தவர்களின் அரசியல் புரிந்துகொள்வது மிக அவசியமானது.

அண்மைக் கிழக்குத் தேசங்களின் மூலதன இருப்பினது வளப் பிரிப்புப் போட்டியானது மேற்குலகத்தோடு மிகக்கெடுதியான பகை முரண்பாட்டைக் கொண்ட இஸ்லாமிய அடிப்படை வாதமாக முன்னே தள்ளுகிறது.இதனால்,மூலதனத்தைத் தொடர்ந்து கையகப்படுத்தும் அரசியல் வியூகமானது மேற்குலகத்தின் முற்றத்துக்கு இஸ்லாமியக் குண்டுதாரிகளைக் கையோடு கூட்டிவருகிறது.இது தமது தேசத்தின் உள்நாட்டு அரசியலில் பாரிய பின்னடைவுகளை இத்தேசங்களுக்குள் ஏற்படுத்திவருகிறது. இப்போது,இந்த இஸ்லாமியக் குண்டுகளை இந்தியாவை நோக்கித் திசை திருப்பிவிடும்போது,மிகவும் சாதகமான பொருளாதார வளர்ச்சியை மேற்குலக மற்றும் அமெரிக்கா மூலதனம் எட்டிவிடும்.

ஈராக் யுத்தத்துக்குப் பின்னான அரசியல்-பொருளாதார மற்றும் உள் நாட்டுப் பாதுகாப்புச் சூழல் மிகவும் கெடுதியாக மேற்குலகைப் பாதிக்கிறது.என்றுமில்லாதவாறு பெரும் பாதுகாப்புச் செலவீனங்களும் பொருளாதார நெருக்கடிகளையும் இத்தேசங்கள் சந்திக்கும்போது,இந்தியா மற்றும் சீனா போன்ற தேசங்கள் மிக இலகுவாக உலகத்தில் தமது சந்தைகளை வரிவுப்படுத்திப் பொருளாதார ஸ்த்திரத்தைக்கொண்டியங்குவது சகிக்கமுடியாத அச்சத்தை இந்தத் தேசங்களுக்கு ஏற்படுத்தியதைக் கடந்தகால மேற்குலகத் தகவல் மற்றும் ஊடகங்களில் பயிற்சியுடையவர்கள் அறிந்திருக்க முடியும்.

இன்று,"கிறிஸ்த்துவ-இஸ்லாம்" பகை முரண்பாட்டைத் திசை திருப்பி "இந்து-இஸ்லாம்" பகை முரண்பாடாக்கிய பெருமைக்கு மேற்குலகத்தோடு சேர்ந்து-கள்ளக்கூட்டுவைத்து இயங்கும் ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்திய மக்களின் எதிரிகளுக்கே சேரும்.

இந்தப் பார்ப்பனிய-பனியாச் சகதிகள் பாரத தேசத்தின் பாதுகாப்பு என்று கூலிக்குக் குரல் கொடுத்துப் பாகிஸ்த்தானுக்கும், இந்தியாவுக்குமானவொரு யுத்தத்தை மேற்குலகோடிணைந்து உருவாக்க முனையுந்தருணங்கள் தென்படுகின்றன.இங்ஙனம் யுத்தம் மேல் நிலைக்கெழுந்தால் இந்தியாவும் பாகிஸ்தானும் அப்பாவி மக்களின் வரிப்பணத்தை யுத்தத்துக்குள் கொட்டித் தமது மக்களில் பலரைப் பலியாக்கும்.இதனால் தேசம் தனது பொருளாதார ஸ்த்திரத்தை இழந்து,அனைத்து வளங்களையும் மேற்குலக ஆயுத உற்பத்தியாளர்களிடம் தாரவார்த்துவிடும்.இதுவே இன்றைய மேற்குலக-அமெரிக்க அரசியல்-பொருளியல் வியூகமாக எதிர்காலத்து அரசியல் இலாபங்களையும் அதனூடாகச் சந்தை விரிவாக்கத்தையும் தக்கவைக்க முனைகிறது.

இதையெல்லாம் ஒருங்கே நிறைவேற்றத் தகுந்த மாதிரிகளை உருவாக்கத் தமிழ்நாட்டுப் பார்ப்பனியக்கூட்டமும் தம்மாலான முயற்சியல் கூக்குரலிடுகிறது.அதில் ஒன்றுதாம் யூதர்களிடம் ஆலோசனை மற்றும் இந்திய இராணுவத்திடம்-மோடியிடம் ஆட்சியை ஒப்படை என்று ஓலமிடுகிறது.இத்தகையத் தெரு நாய்கள் இந்தியத் தேசத்தையும்,இந்திய உழைப்பாளர்களையும் அந்நியத் தேசங்களுக்குக் காட்டிக் கொடுத்து, கொலை செய்து வருகிறது.இதன் ஆரம்பம் மும்பையில் தொடரவில்லை.அது, ஏலவே மோடி தலைமையில் அயோத்திக்கான கொலைகளாக நடந்தேறியது.

அந்நிய ஆர்வங்களுக்கும் அமெரிக்க-மேற்குலக உளவுப்படைகளுக்கும் ஏஜென்டுக்களாக மாறியுள்ள இந்தப் பார்ப்பனியத்தை(சுப்பிரமணியசுவாமி மற்றும் சோ,சிதம்பரம் போன்றவர்களை மனதில் நிறுத்தவும்) வேரோடு சாய்பதற்கு மேற்குலகமே முட்டுக்கட்டையாக இருக்கும்.ஏனெனில், அடுத்தகட்ட யுத்த முனைப்பும்,பகை முரண்பாடும் மையங்கொள்வது இந்தியப் பிராந்தியத்தில் என்பது முடிந்த முடிவாகும்.அது,"இந்து-இஸ்லாம்"மதவாத யுத்தமாக உலகம் தகவமைக்கிறது!

இது குறித்து,இந்திய வம்சாவழியாகிய ஒவ்வொரு மனிதரும் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.பாப்பனிய மற்றும் மேற்குலக உறவுகளை அம்பலப்படுத்தி,இவர்களைத் தோற்கடிக்காமால் தென்கிழக்காசியப் பிராந்தியத்தை சமாதான பூமியாக்கமுடியாது.

ப.வி.ஸ்ரீரங்கன்
30.11.2008

நன்றி : அகதி

Wednesday, November 26, 2008

பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்

Latest News : மும்பையையும் இந்த நடு இரவில் ஹிந்து தீவிரவாதிகள் தாக்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. பல நட்சித்திர ஹோட்டல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்
[Bombs Made by Narendra Modi]


கடந்த 2006 ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு, 2006ல் மும்பை இரயில்களில் 7 குண்டு வெடிப்புகள், 2006 மஹாராஷ்ட்ரா மாநில மாலேகானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புகள், 2007 ஹைதராபாத் பூங்காவில் இரட்டை குண்டு வெடிப்புகள், 2008 ஜெய்ப்பூரில் சைக்கிள் குண்டு வெடிப்புகள், 2008 பெங்களுர் குண்டு வெடிப்புகள். இன்று 2008 செப்டம்பர் மாதம் தலைநகர் டெல்லியிலோ 6 இடங்களில்....இப்படி நாசகார செயல்களினால் பலியெடுக்கப்பட்ட மனித உயிர்கள் பல நூறுகளைத் தாண்டும்.

இக்குண்டுவெடிப்புகள் அனைத்தும் ஒரே ஒரு தகவலைத்தான்; சொல்லும். அது குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த மறுகனமே பயங்கரவாதி அத்வானி சின்னத்திரைகளில் தோன்றுவார். குண்டு வெடிப்புக்கு பாக்கிஸ்தானில் லஷ்க்கரே தைய்யியா அல்லது இல்லாத சிமி அமைப்பே காரணம் என்பார். அப்படியே ஆளும் காங்கிரஸ் அரசை ஒரு பிடிபிடிப்பார். வழக்கம் போல அப்பாவி முஸ்லிம்கள் நாடுமுழுவதும் சிறைவைக்கப் படுவார்கள். வெடிகுண்டு சோதனை என்ற பெயரால் முஸ்லிம்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நாடே அமளிதுமளியாகும். இதுதான் நம் சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை.


தேசபிதா காத்தியடிகளை கொலைசெய்த, சங்பரிவார வெறியனும் தேசதுரோகியுமான கோட்சே தனது கைகளில் இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரை பச்சைகுத்திக் கொண்டும், முஸ்லிம்களைப் போல கத்னாவும் செய்திருந்தான் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை. காரணம் காந்தியடிகளை கொலைசெய்தது ஒரு முஸ்லிம் என்று வாதந்தியைப் பரப்பி முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு, ஒட்டு மொத்த தேசத்தையே முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பலாம் என்று திட்டமிட்டனர் அன்றைய சங்பரிவார கொலை வெறியர்கள். ஆனால் குள்ளநரிகளின் சாயம் மிக விரைவிலேயே வெளுத்து, சங்பரிவாரத்தின் கோரக் கொலைவெறி முகத்தை நாடே கண்டு அதிர்ந்தது.

தேசத்துரோகி கோட்சேயின் அதே பர்முலாவை கையாண்டு, அவனது வாரிசுகளான இன்றைய சங்பரிவார பிஜேபியினர் முஸ்லிம்களுக் கெதிராக தொடர்ந்து சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இவர்கள் நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள். இதற்கோர் சிறந்த உதாரணம் கடந்த 2006ல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகள். மாலேகான் மசூதியில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் பிஜேபியினர் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். மசூதிக்குள் குண்டுகளை வைத்தது முஸ்லிம்கள்தான் என்று ஊடகங்கள் திரிபுவாதம் பண்ணுவதற்கு வசதியாக தொப்பிகளையும், ஒட்டுதாடிகளையும் அவ்விடத்தில் விட்டுச்சென்றனர்.

இதை போலத்தான் குஜ்ராத்திலும். ஓடிய ரயிலை தாங்களாகவே கொளுத்திவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு, பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் உயிரை நரவேட்டையதும், முஸ்லிம் பெண்களை கற்பழித்ததும், அவைகளைத் தொடர்ந்து டெகல்கா பத்திரிக்கை இவர்களது கோரமுகத்தை கிழித்ததும் நாடே அறியும்.

கடந்த 4 வருடங்களின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி (முஸ்லிம்களுக்கு தனிஇடஒதுக்கீடு அளிக்காமை, அமெரிக்காவுடன் அனு ஒப்பந்தம் ஆகியவைகளைத் தவிர்த்து) பெரிய அளவில் குறைசொல்ல முடியாத அளவிற்கு நல்லதொரு ஆட்சியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு திட்டங்கள் பல தீட்டி அதில் வெற்றி நடைபோடும் இக்காங்கிரஸ் ஆட்சி இனியும் நீடித்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியினர் எதிர்க்கட்சி இருக்கையில்கூட அமர இயலாத சூழ்நிலை வந்துவிடும். சங்பரிவார பிஜேபியினர் இவைகளை புறிந்துகொண்டதின் கோரவிளைவுதான் தொடரும் இக்குண்டுவெடிப்புகள்.

பெங்களூரில் பிஜேபியினரின் தேசிய செயற்குழு கூடியிருந்த தருனத்தில், தலைநகர் டெல்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு, அதன்பின்னர் தொலைக்காட்சிகளுக்கு முன்னின்று பேட்டி என்ற பெயரில் மெகா சீரியல் நடத்திய பிஜேபி தலைவர்களின் பேட்டிகளைக் கண்ட எவரும் இக்குண்டுவெடிப்பின் பின்னனியிலுள்ள இரகசியங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்வர்.

பிரதமர் பதவி வெறியில் உறக்கமில்லாமல் சுற்றித்திரியும் ரத்தயாத்திரை புகழ் ரத்தக்காட்டேரி அத்வானி, குண்டு வெடித்த சில மணித்துளிகளிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பொடா சட்டம் கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார்.


நரமாமிச உண்ணி நரேந்திரமோடியோ இதற்கு ஒருபடி மேலேபோய் 'நாங்கள் 10 நாட்களுக்கு முன்னரே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இக்குண்டுவெடிப்புத் தகவல்களை அளித்துவிட்டோம்' என்று படீர் என உண்மையை போட்டு உடைத்தார். உண்மைதான்! குண்டு வைக்க இருப்பவனுக்குத்தானே எப்படி எங்கே எத்தனை குண்டுகள் வெடிக்க இருக்கின்றது என்பது தெரியும். பின்னர் நரேந்திரமோடி தான் வாய்உளறி விட்டதை சுதாரித்துக் கொண்டு 'தேசநலன், தீவிரவாதிகள்' என்று ஏதேதோ சொல்லி நிலமையை சமாளித்தார்.

குஜ்ராத்தில் முஸ்லிம் இனப்படுகொலைகளை நடத்திய நரேந்திர மோடி, அவன் நடத்த இருந்த டெல்லி குண்டு வெடிப்புகளை பற்றி பிரதமருக்கே அளித்த எச்சரிக்கையை உளவுத்துறைகள் கண்டுகொள்ளாமல் கோட்டைவிட்டது ஏனோ? அவ்வாறு அலட்சியம் செய்ததின் விளைவுதான் எமது சகோதரர்கள் 30 பேர்கள் பலியாக்கப்பட்டும், 100ம் அதிகமானோர் மருத்துவமனைகளில் உயிருக்கப் போராடும் துக்கநிலை ஏற்பட்டுள்ளது.

கோப்புகளை மூடுவதற்காக, குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் லஷ்க்கரே தைய்யியா, அல்லது சிமி என்று கூறி நாட்டு மக்களை இனியும் சமாதானப்படுத்திட இயலாது என்ற முடிவிற்கு வந்த உளவுத்துறையினர், தற்போது இந்தியன் முஜாஹிதீன் என்று ஒரு புதிய திரைக்கதையை இயற்றுகின்றனர். பெங்களூரில் சங்பரிவார தலைவர்கள் கூடியிருந்த அரங்கத்திற்குள் குண்டுகள் வெடித்து, பயங்கரவாதிகள் அனைவரும் உடல் சிதறி செத்திருந்தால், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் குண்டு வைத்தனர் என்று உளவுத்துறையினர் கற்பனை செய்வதில் ஒரளவு அர்த்தமிருக்கும். நம் இந்தியத் திருநாடு வல்லரசாக ஆகுவதற்கு பெரும் தடையாக இருக்கும் இச்சங்பரிவார குண்டர்கள் தொலையட்டும் என்று இந்தியன் முஜாஹிதீன் பெயரில் யாரோ சிலர்கள் குண்டுகள் வைத்திருக்கின்றனர் என்று நாட்டுமக்களும் நம்பலாம்.

ஆனால் அநியாயமாக ஒர் உயிரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலைசெய்வதற்குச் சமம் என்று போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களையும் உளவுத்துறையினர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பலிகிடாவாக்குவது என்ன நியாயம்? இதனால் உண்மைக் குற்றவாளிகள் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கொண்டே வருகின்றனர் என்பதே உண்மை.


இக்குண்டுகள் அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருட்கள் மூலம் தயார் செய்யப்பட்டதாக அனைத்து தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன. நாட்டில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் பின்னணியில் இருப்பது இத்தேசதுரோக சங்பரிவார பிஜேபி குண்டர்களே என்பதில் மத்திய அரசுக்கு இனியும் சந்தேகம் இருந்தால், நாக்பூரிலும், மத்திய பிரசேத்திலுள்ள போபாலிலும், செயல்படுகின்ற சங்பரிவார வெறியர்களின் துப்பாக்கித் தொழிற்சாலைகள் மற்றும் ஆயிதக் கிடங்குகளை மத்திய அரசு உடனடியாகக் கைப்பற்றவேண்டும். அப்போது தெரியும் தலைநகரில் வெடிக்கப்பட்ட குண்டுகளுக்கும், இதற்க முன்னர் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கம் அமோனிம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது என்று?.

மேலும் சாஹா பயற்சி என்ற பெயரில் ஆண்களுக்கும், துர்காவாகினி என்ற பெயரில் மகளிர் அமைப்புகளையும் உருவாக்கி ஆயுதப்பயிற்சி அளிக்கும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்து, நாடு முழுவதுமுள்ள இவர்களின் அலுவலகங்களை ஒரேநேரத்தில் சோதனை நடத்தினால் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் செயல்படுபவர்கள் யார்? என்பதும் வெட்டவெளிச்சமாகும்.

இதில் முக்கியமான ஒன்றையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பின்னர் வழக்கமாக ஒரு ஈமெயில் உளாவரும். இன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பின்னரும் வெளியான முகவரியில்லாத அந்த ஈமெயிலில், டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும்;, பெங்களூரிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்னையையும் தாக்க இருப்பதாக வெளியான இச்செய்தி உண்மையா அல்லது மிரட்டலா என்பது நரேந்திர மோடிக்கும், பிஜேபியினருக்குமே வெளிச்சம். இருப்பினும் அமைதிப் பூங்காவாம் நம் தமிழக மண்ணில் பிஜேபியினரின் இந்துத்துவ தீவிரவாதத்திற்கு எவரும் பலியாகி விடக்கூடாது. இத்தீவிரவாதிகளின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் கடமை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரையும், தமிழக காவல்த்துறையுமே சாரும்.


தொடரும் குண்டு வெடிப்புகளுக்கு லஷ்க்கரே தைய்யியா, சிமி, இந்தியன் முஜாஹிதீன் என்று இனியும் உளறிக் கொண்டிராமல் உண்மை தீவிரவாதிகளான சங்பரிவார குண்டர்கள் மத்திய மாநில அரசுகள் கைது செய்யுமா? நாட்டில் அமைதி நிலவ வழிவகுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

இது தொடர்பான பதிவுகள் :-

இந்துத்துவ தீவிரவாதியும் தினமலரின்

THANKS : WWW.IIPONLINE.ORG

Sunday, November 23, 2008

கோவையில் காதலனுடன் கல்லூரி மாணவி கடத்தல்-வீட்டில் அடைத்து கற்பழித்த கொடூரம்


கோவை, நவ. 23-
கோவை ரேஸ்கோர்ஸ் ரெட்பீல்டு அவுசிங்ïனிட் பகுதியை சேர்ந்தவர் மோகனபிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மோகன பிரியா பொள்ளாச்சி ரோட் டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவரது நண்பர் சாய்பாபா காலனியை சேர்ந்த ஆனந்த் (30). இவருக்கு திருமண மாகிவிட்டது.

இவர்கள் இருவரும் ரேஸ்கோர்சில் உள்ள ஒரு காபி பார்முன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 3 பேர் கார் அருகே வந்து கார் கண்ணாடியை தட்டினர்.

கார் கண்ணாடி திறக்கப்பட்டதும், நாங்கள் போலீஸ்காரர்கள், நீங்கள் 2 பேரும் யார், எதற்காக இங்கு இருக்கி றீர்கள், உங்களை விசாரிக்க வேண்டும் என்று கோரி திடீரென காருக்குள் ஏறிக் கொண்டனர். ஆனந்தும் போலீசார் தான் என நம்பினார்.

காரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்வதாக கூறிய அவர்கள் சூலூர் அருகே கொண்டு சென்றனர்.

அப்போது காரில் இருந்த 3 பேரும் அவர்களை மிரட்டினர். பின்னர் கார் சூலூரில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டு முன்பு போய் நின்றது. மோகனபிரியா, ஆனந்தைகாரில் இருந்து இறக்கி வீட்டுக்குள் அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி 2 பேரையும் நிர்வாணப்படுத்தினர்.

தொடர்ந்து அவர்களை நிர்வாண கோலத்தில் செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்துக் கொண்டனர். அதோடு இல்லாமல் மோகன பிரியாவை கற்பழித்துள்ளனர். மேலும் மெழுகு வர்த்தியை எரிய வைத்து மெழுகை மோகனபிரியாவின் உடலில் கொட்டி சித்ரவதை செய்துள்ளனர்.

வலிதாங்க முடியாத மாணவி மோகனபிரியா அலறிதுடித்தார். பின்னர் அந்த கும்பல் இதுப்பற்றி வெளியே சொன்னால் உங்களது நிர்வாண படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டி ரூ.5 லட்சம் பணமும் கேட்டுள்ளனர்.

பணம் கொண்டு வர ஆனந்தை மட்டும் கொள்ளை கும்பல் அனுப்பி வைத்தது. அப்போது அங்கிருந்து வந்த அவர், நடந்த விவரங்களை செல்போன் மூலம் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

அதன்படி போலீஸ் கமிஷனர் மஹாலி உத்தர வின் பேரில், துணை கமிஷனர் ராஜேந்திரன், ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பாழடைந்த வீட்டுக்குள் போலீசார் அதிரடியாக நுழைந்தனர். அப்போது போலீசாரை கண்டதும் 3 பேரும் தப்பி ஓடினர்.

அவர்களில் ஒருவரை போலீசார் விரட்டி பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது அவர் உக்கடம் பகுதியை சேர்ந்த ஹக்கீம் (வயது 30) என்பது தெரியவந்தது. இவர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடையவர் ஆவார்.

மேலும் ஹக்கீம் கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளி பூனைக்கண் சலாம் என்பவரின் சகோதரர் ஆவார். ஹக்கீமிடம் துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் சுந்தரவடிவேல் ஆகியோர் நடத்திய விசா ரணையில் பரபரப்பு தகவல் வெளியானது.

கைதான ஹக்கீம் தலைமை யிலான கும்பல் தனியாக நிற்கும் காதலர்களை கத்தி முனையில் கடத்தி சென்று அவர்களை நிர்வாணமாக்கி, படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.

வழக்கமாக இவர்கள் காதல் ஜோடிகளை சூலூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டுக்கு கொண்டு சென்று மிரட்டுவார்கள். அப்போது இவரது மற்ற நண்பர்களும் சேர்ந்து கொண்டு மிரட்டி வந்தனர்.

அதோடு இல்லாமல் பெண்களை கற்பழிக்கவும் செய்து உள்ளனர். இவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன. சினிமாவை மிஞ்சும் வகையில் திட்டமிட்டு இதுபோன்ற சம்பவங்களை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்துள்ளது.

கைதான ஹக்கீம் மீது கற்பழிப்பு வழக்கு போடப் பட்டுள்ளது. அதோடு ஹக்கீம், கொள்ளை கும்பலை சேர்ந்த ஜார்ஜ், மணி உள்பட 6 பேர் மீது போலீசார் கூட்டு சதி, கொலை மிரட்டல் உள்பட 11 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான ஹக்கீம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தப்பி ஓடிய 5 பேரையும் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மாணவியை கற்பழித்ததாக ஹக்கீம் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது. ஆனால் மேலும் 2 பேர் மாணவியை கற்பழித்த தகவலும் வெளியாகி யுள்ளது.

இதற்கிடையே கொள்ளை கும்பலால் பாதிக்கப்பட்ட மாணவி மோகனபிரியா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நன்றி : மாலைமலர்

Saturday, November 22, 2008

சட்டக்கல்லூரி கலவரம் - உண்மைக் குற்றவாளி யார்? அம்பலப்படுத்தும் உண்மை அறியும் குழு அறிக்கை

சட்டக்கல்லூரி கலவரம் - உண்மைக் குற்றவாளி யார்? அம்பலப்படுத்தும் உண்மை அறியும் குழு அறிக்கை


சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்குள் நடந்த கலவரம், மற்ற பிரச்னைகளையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு மீடியாக்களில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. நாள்தோறும் மாணவர்கள் கைது, தாக்குதலைக் கண்டித்துத் தீக்குளிப்பு, போராட்டம் என விதவிதமான ஆர்ப்பாட்டங்கள் பரபரப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருக்கின்றன.

பொதுமக்கள் மத்தியில் இந்தக் கலவரம் இப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோது, அதற்கான காரணங்களைக் கண்டறியும் முயற்சியில் வழக்கறிஞர்கள் குழு களத்தில் இறங்கியது. பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையிலான இந்தக் குழுவில் பேராசிரியர்கள் சிவக்குமார், சந்தோசம், லெனின், வழக்கறிஞர் லெனின், மனோகரன், சுஜாதா உள்பட பலர் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவினர் நவம்பர் 20-ம் தேதி தங்கள் பரிந்துரைகளை அரசுக்கு அளித்தனர்.

கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் களத்தில் இறங்கிய உண்மை அறியும் குழுவினர் கல்லூரி நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மாணவர்கள் என அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தினர். இந்தக் குழுவில் இடம்பெற்ற குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் இணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கேசவனை சந்தித்தபோது, "சட்டக் கல்லூரி கலவரம் தொடர்பாக மீடியாக்களில் வெளியான வன்முறைக் காட்சிகளில் ஓரளவுதான் உண்மை இருக்கிறது. மோதலுக்குப் பிரதானமாக பல காரணங்கள் இருக்கின்றன'' என்றவர்,

"சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் 160 பேர் தங்கியுள்ளனர். இவர்களில் 149 பேர் தலித் மாணவர்கள். அதிகப்படியான தலித் மாணவர்கள் இருப்பதால், சாதி மோதலாகத்தான் இந்தப் பிரச்னை கவனிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே முக்குலத்தோர் மாணவர் பேரவைக்கும், தலித் மாணவர்களுக்கும் இடையில் விழாக்கள் நடத்துவதில் தொடர் மோதல் இருந்து வந்துள்ளது. இந்த மோதலை பல்வேறு சாதி அமைப்புகள்தான் பின்புலத்தில் இருந்து இயக்கி வந்துள்ளன. அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்ற உச்சரிப்பையே தலித் அல்லாத சில மாணவர்கள் வெறுத்துள்ளனர். குறிப்பாக, விஜய் பிரதீப் என்ற மாணவர் சாதாரண ராக்கிங் நடக்கும்போதுகூட, `நான் யார் தெரியுமா? மேலவளவு முருகேசன் படுகொலையில் முதல் குற்றவாளியான ராமர் என் சித்தப்பாதான். என் பேக்ரவுண்ட் புரிஞ்சுக்கோ' என மிரட்டி வந்துள்ளார். இதை கல்லூரி நிர்வாகிகளும் உறுதிப்படுத்தினர். தற்போது அடிபட்டு சிகிச்சை பெற்றுவரும் பாரதிகண்ணன் உள்பட சிலர் மீது வன்கொடுமைச் சட்டம், அடிதடி என பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

பிரச்னைக்கான தொடக்கப்புள்ளி கடந்த 7-ம் தேதி பாரிமுனை பஸ் நிலையத்தில் நடந்துள்ளது. தேர்வு எழுதிவிட்டு வந்த ஏழுமலை, மேகநாதன், ராஜா, சிவராஜ் ஆகிய தலித் மாணவர்களை கிருஷ்ணசாமி, அய்யாத்துரை, நாகராஜ், பிரதீப் உள்ளிட்ட சில மாணவர்கள் சேர்ந்து, `ஏன்டா எக்ஸாம் எழுத வந்தீங்க? சொல்றதைக் கேட்க மாட்டீங்களாடா?' என்றவாறு பலமாக அடித்துவிட்டனர். இவர்களது நோக்கம் விடுதி மாணவர்கள் தேர்வு எழுதக் கூடாது என்பதுதான். அடுத்து வந்த நாட்களில் பாரதிகண்ணன் உள்பட சில மாணவர்கள் கத்தியோடு கல்லூரி வளாகத்தில் வலம் வந்துள்ளனர். கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் இந்தச் செயலைக் கண்டித்துள்ளனர்.

சம்பவம் நடந்த 12-ம் தேதியன்று பாரிமுனை பஸ் நிறுத்தத்தில் அடிவாங்கிய மாணவர்கள், `தேர்வு எழுத முடியவில்லை. பாதுகாப்புக் கொடுங்கள்' என்று விடுதி மாணவர்களுக்குத் தெரிவிக்க, விடுதி மாணவர்களும் உருட்டுக் கட்டைகளை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்துள்ளனர். அப்போது பஸ் ஸ்டாண்டில் மாணவர்களை அடித்த அய்யாத்துரையை அழைத்து அடித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் கீழே விழுந்த அவருக்கு தண்ணீர் குடிக்கக் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளனர். அவர் இந்தத் தகவலை கல்லூரிக்குள் சுற்றிக் கொண்டிருந்த பாரதிகண்ணனுக்குத் தெரிவிக்க, ஆத்திரமான பாரதியும், ஆறுமுகமும் கத்தியைத் தீட்டிக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

இதைக் கேள்விப்பட்ட முதல்வர் ஸ்ரீதேவ், உடனே போலீஸ் உதவி கமிஷனர் நாராயணமூர்த்தியிடம் புகார் கொடுத்துள்ளார். ஏ.சி.யோ, `பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங்கையும், வக்கீல் சங்கத் தலைவர் பால் கனகராஜையும் அழைத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறியிருக்கிறார். போலீஸார் முதலில் புகாரை வாங்கவில்லை. மீண்டும் மீண்டும் முதல்வர் வற்புறுத்திய பின்னரே புகாரை வாங்கியுள்ளனர். இதற்குள் பாரதிகண்ணன் கத்தியை எடுத்துக் கொண்டு எதிரில் வந்த தலித் மாணவர் சித்திரைச் செல்வனை நோக்கிச் சுழற்ற, அவரது காது துண்டாகியுள்ளது. தலையில் வெட்டியதால் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனால் கொதித்துப் போன விடுதி மாணவர்கள் உருட்டுக் கட்டை, மண்வெட்டிகளோடு தாக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், முதல்வர் புகார் தரவில்லை என போலீஸ் தவறாகச் சொல்கிறது. அவர் செய்ய வேண்டிய கடமையை சரியாகச் செய்திருக்கிறார். அவர் மீது அரசு எடுத்த சஸ்பெண்ட் நடவடிக்கை தேவையற்றது.

எங்கள் ஆய்வில் தெரியவந்த வேதனையான விஷயம் என்னவென்றால், இந்த சம்பவத்திற்குப் பிறகு தலித் மாணவர்களை மட்டுமே குறிவைத்து போலீஸ் கைது செய்கிறது. சித்திரைச் செல்வனைக் கத்தியால் குத்திய பாரதிகண்ணன் மீது வெறும் கொலை மிரட்டல் வழக்கும், காயமடைந்த சித்திரைச் செல்வனைக் கைது செய்தது மட்டுமல்லாமல், கொலை முயற்சி வழக்கையும் போலீஸ் பதிவு செய்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், திருப்பதியில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்து வந்த மாணவர் கோகுல்ராஜ், உயர்நீதிமன்ற வளாக கேண்டீனில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சென்ற போலீஸார் `என்ன சாதி? எந்தக் கல்லூரி?' எனக் கேட்டுள்ளனர். அவரோ, `நான் எஸ்.சி. அம்பேத்கர் சட்டக் கல்லூரி' என்று சொல்லியிருக்கிறார். சம்பவத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத இவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். அதேபோல், தாக்குதலில் இறங்கிய தலித் மாணவர்களை, `அடிக்க வேண்டாம். விட்ருங்க' என ஒவ்வொருவரையும் தடுத்து விரட்டிக் கொண்டிருந்த திலீபன் ஜோ என்ற மாணவரையும் இதே பிரிவில் கைது செய்திருக்கிறார்கள்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாரதிகண்ணன், அய்யாத்துரை, ஆறுமுகம் ஆகியோரையும் சந்தித்தோம். இதில் ஆறுமுகம் என்ற மாணவர், `ஆமாம். நாங்கள் கத்தியோடுதான் கல்லூரிக்கு வருவோம்' என சாதாரணமாகத் தெரிவித்தார். தலித் மாணவரான சித்திரைச் செல்வனுக்குத் துணையாக இருந்த, சம்பவத்துக்குத் தொடர்பில்லாத கோவிந்தன், இளமுகில், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எங்கள் விசாரணையில், மாணவர்களின் நிலைக்கு முக்கியக் காரணமே தமிழக அரசுதான். சட்டக் கல்லூரியில் பணம் கட்டிப் படிக்கும் சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தந்துள்ளனர். ஆனால், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு எந்த வசதியும் இல்லை. 55 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது. கூடுதல் தகுதி வளர்க்கும் வசதியோ, சரியான கல்வியோ இந்த மாணவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. திட்டமிட்டே அரசு இவர்களைப் புறக்கணிக்கிறது. ஜாதி அமைப்புகள் இந்த மாணவர்களை நெருங்குவதற்கு இதுவே காரணமாகிவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கவுன்சலிங் கூடம் நிறுவப்படுவது அவசியம். சட்ட அறிவை வளர்க்கும் முறையான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க உள்ளோம். தமிழக அரசு சரியான தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கினால் எதிர்காலத்தில் இன்னொரு கலவரம் நடக்காமல் தடுக்கலாம்'' என்றார் முடிவாக.

சட்டக் கல்லூரி கலவரத்தில் தலித் மாணவர்களைத் தடுக்க கல்லூரி முதல்வர் அழைப்பின்பேரில் சென்ற வக்கீல் ரஜினிகாந்த் நம்மிடம், "கலவரத்திற்கு முக்கியக் காரணம் எழும்பூரில் மையமாகச் செயல்படும் ஒரு ஜாதிப் பேரவைதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூவேந்தர் முன்னேற்ற முன்னணியின் நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையாரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சிக்காக கல்லூரியில் இருந்து முளைப்பாரி எடுத்துச் செல்லும் வைபவங்களை நடத்தினர். சாதித் தலைவர்கள் தங்கள் சாதிகளை வளர்க்க மாணவர்களுக்கு `மூளைச் சலவை' செய்யும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதைவிடக் கொடூரமான பல தாக்குதல்கள் தலித் மாணவர்கள் மீது நடந்துள்ளன. அவையெல்லாம் வெளியே வரவில்லை.

இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கையில் கத்தி, கொடுவாள் போன்ற இரும்பு ஆயுதங்கள் வைத்திருந்தது பாரதிகண்ணன், ஆறுமுகம் இருவரும்தான். இதன்மூலம் திட்டமிட்ட தாக்குதலுக்குத் தயாராக வந்தது எந்தத் தரப்பு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். திருப்பித் தாக்கிய தலித் மாணவர்களுக்கு அவர்களைக் கொலை செய்யும் நோக்கமில்லை. அதனால்தான் திட்டமிட்டு அவரது கை, கால்களில் தாக்கினர். பாரதிகண்ணன் தப்பித்து ஓட அனைத்து வாய்ப்புகளும் இருந்தது. அவர் திரும்பத் திரும்ப கத்தியை எடுத்துக் குத்த வந்ததால்தான் பிரச்னை வேறு மாதிரியாகத் திரும்பியது. இதில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக தாக்குதலில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் தலித் மாணவர்களுக்கு ஏற்பட்டது. இதுதான் உண்மை!'' என்றார்.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்