Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Tuesday, January 05, 2010

காசாகும் குடும்ப அந்தரங்கங்கள். எச்சரிக்கை!!


நன்றி: ஜூனியர் விகடன்


குற்றத்துக்கு ஆதாரம்... அதுவே, கூசவைக்கும் வியாபாரம்... அது எது?

இப்படி யாராவது விடுகதை போட்டால்,தயங்காமல் சொல்லலாம் 'கேமரா செல்போன்' என்று!

ஆம்... ஆந்திர ஆளுநர் மாளிகைக்குள் எடுக்கப் பட்டதாக 'திவாரி - சவாரி' வீடியோ காட்சிகள் வெளியான மறுநாள் நம் அலுவலகத்துக்கு வந்த பார்சல், மேற்சொன்னபடிதான் நம்மை மருள வைத்தது!

'இன்னும் பல பெண்களின் வாழ்க்கை பாழாவதற்கு முன்னால் இதுபற்றித் தீர
விசாரித்து ஜூ.வி-யில் எச்சரிக்கை ரிப்போர்ட் எழுதுங்கள்' என்று இறைஞ்சியது, அந்த சி.டி-யுடன் இருந்த ஒரு கடிதம்!

சி.டி-யை ஓடவிட்டதுமே அதில் விரிந்த ஆபாசக் காட்சிகளை நம்மால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அதேசமயம், அந்த ஒரே சி.டி-க்குள் அடுத்தடுத்து பதிவாகி இருந்தவை, வெவ்வேறு ஜோடிகள் சம்பந்தப்பட்ட காட்சி என்பதை உணர முடிந்தது. உணருவதென்ன... எந்த ஒளிவுமறைவோ, இருட்டு நிழலோ இல்லாமல் தெள்ளத் தெளிவாக ஓடின காட்சிகள்.

சி.டி-யுடன் இணைத்திருந்த கடிதம், ''இதில் உள்ள எல்லா ஜோடிகளுமே கணவன் - மனைவியர்தான். அவரவர் வீட்டுப் படுக்கையறையில் அரங்கேறிய அந்தரங்கங்கள்தான் இவை. காதோடு வைத்து ரசிக்க வேண்டிய தாம்பத்யம் என்ற சங்கீதத்தை, செல்போன் கேமரா கொண்டு விளையாட்டாகப் பதிவு செய்ததன்மூலம், இப்படி ஊரறிய அலறும் லவுட் ஸ்பீக்கராக மாற்றி விட்டார்கள். காஞ்சி காம குருக்கள் தேவநாதன் விஷயத்தில் நடந்ததுபோலவே, இவர்களின் செல்போனை சர்வீஸுக்குக் கொடுத்தபோதோ... எக்ஸ்சேஞ்சாக விற்றபோதோ இவர்கள் 'டெலிட்' செய்திருந்தும், 'ரெட்ரீவ்' செய்யப்பட்ட காட்சிகள்தான் இவை.



இத்தனையும் கூறுகிற நானும் ஒரு செல்போன் சர்வீஸ் சென்டரில் வேலை பார்ப்பவன்தான். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வெறியோடு தோண்டியெடுத்து, அதை மொத்தமாக சி.டி. போட்டு விற்கிற வக்கிரம், சில செல்போன் சர்வீஸ் பாய்களின் மூலமாக நடக்கிறது. அதிலும், கள்ள உறவுகளை இதுபோன்ற பதிவுகளாகப் பார்த்து அலுத்துவிட்ட ஒரு வக்கிர கும்பலுக்கு... இதுபோன்ற 'நல்ல உறவுகளை'ப் பார்க்கிற ஆசை வந்து... அதுவே இப்படி செட் செட்டாக மார்க்கெட்டில் விற்கிறது!'' என்று கிட்டத்தட்ட கதறியிருந்தது.

சைபர் கிரைம் பிரிவில் உள்ள நமது நட்பு போலீஸாரிடம் இதுபற்றி தமிழகம் முழுவதும் விசாரித்தபோது... கடிதத்தின் வார்த்தைகள் எத்தனை சத்தியமும் வீரியமும் மிக்கவை என்று புரிந்தோம்... மொத்தமாக அதிர்ந்தோம்! ''ரியாலிட்டி கிளிப் பிங்ஸ் என்று இதற்குப் பேர் வைத்து விற்கிறார்கள்.

சர்வீஸுக்கு ஒரு செல்போன் வருதுன்னாலே 'டெலிட்' செய்யப்பட்ட பிறகும் அதில் பதுங்கியிருக்கிற விஷயங்கள் என்னென்ன என்பதை ஆராய்வது, பல கடைகளில் உள்ள வயசுப் பையன்களின் வேலையாக இருக்கிறது. அதிலும் கண்ணுக்கு லட்சணமான பெண்கள் வந்து சர்வீஸுக்குக் கொடுத்தால், தேடல் ரொம்ப பலமாகிவிடும்.

மனைவியைவிட்டுப் பிரிந்து வெகு தூரத்தில் வேலை பார்க்கிற ஒருசில கணவர்கள்தான் இப்படி தங்கள் அந்தரங்கத்தை மனைவிக்குத் தெரிந்தே பதிவு செய்து வைத்துக் கொள்கிற தவறை முதலில் அரங்கேற்ற ஆரம்பித்தார்கள்.

பிரிவுத் துயரத்தின்போது, பர்ஸுக்குள் இருக்கிற போட்டோவை எடுத்துப் பார்க்கிற மாதிரி இதுவும் அவர்களுக்கு சர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், இந்த வீடியோவின் காட்சிகளில் வருகிற மனைவியர் முதலில் ஏகத்துக்கும் வெட்கப்படுவதும், பிறகு கள்ளங்கபடமேயில்லாமல் காஷுவலாக இருப்பதுமாக சில ஒற்றுமைகள் தெரியும்.

எங்களுக்குத் தெரிந்து செல்போன் சர்வீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் சில இளைஞர்கள் பெரிய நகரங்களில் தங்களுக்குள் சங்கம் அமைக்காத குறையாக இதுபோன்ற காட்சிகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

இன்னும் சில புத்திசாலிகள்தான், இவற்றையெல்லாம் தொகுத்து சி.டி-யாக்கி அதன் மாஸ்டர் காப்பியை பல ஆயிரம் ரூபாய்கள் வரை விற்கிறார்கள். சென்னையில் அப்படிப்பட்ட நான்கைந்து பேருக்கு நாங்கள் பொறி வைத்திருக்கிறோம்'' என்றவர்கள்,

''தன் மனைவியை இப்படி வற்புறுத்தி பதிவு செய்துவிட்டு, அதையே தன் நண்பர்கள் கண்ணுக்கு தீனியாக்கிய ஒரு கணவனை லேட்டஸ்டாகப் பிடித்திருக்கிறோம்'' என்று சொல்லி, நம்மை மாதவரம் போலீஸாரிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த ஏரியாவைச் சேர்ந்த ஆன்னெல்லா டால்மியா என்ற பெண்மணியின் பரிதாபக் கதையைச் நம்மிடம் சொன்னார் மாதவரம் இன்ஸ்பெக்டர் குமரன்.

ஏடாகூட எரல் எல்லீஸ்!

''டால்மியாவின் கணவர் எரல் எல்லீஸ் தனியார் கார் கம்பெனி ஒன்றில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் பொறுப்புள்ள அதிகாரி. போன ஜனவரி மாதம்தான் ரெண்டு பேருக்கும் திருமணம் நடந்திருக்கு. மணமான நாளில் இருந்தே எரல் எல்லீஸ் புளூ ஃபிலிம் பார்க்கச் சொல்லி ஆனெல்லாவை வற்புறுத்தி இருக்கார்.

இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகள் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்து, அதன்படியே உறவு வச்சுக்க விரும்புறாங்க. டால்மியாவிடமும் இதை வலியுறுத்தி இருக்கார் எரல் எல்லீஸ். இதனையெல்லாம் தாண்டி உச்சகட்டமாக மனைவியுடன் தனிமையிலிருந்த தருணத்தை அப்படியே செல்போனில் படம் பிடிக்கவும் செய்திருக்கிறார்.

'கணவர்தானே படம் எடுக்கிறார்' என்று வேறு வழியில்லாமல் டால்மியாவும் பொறுத்துக் கொண்டார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எரல் - டால்மியா உறவுக் காட்சிகள் மாதவரம் ஏரியாவில் பலருடைய செல்போன்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.

ஒருகட்டத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலம் டால்மியாவுக்கே இது தெரியவர... நடுங்கிப் போனவராகக் கணவரிடம் அதுபற்றி விசாரித்திருக்கிறார். அப்போதுதான் அந்த தாம்பத்திய காட்சிகளை நண்பர்கள் சிலருக்கு எரல் எல்லீஸ் போட்டுக் காட்டிய உண்மை தெரிந்திருக்கிறது.

ப்ளூடூத் மூலம் அதை வாங்கிக்கொண்ட ஒரு நண்பர் மூலமாகவே அந்தக் காட்சிகள் ஒரு செல்போன் சர்வீஸ் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து வியாபாரமாகிவிட்டது. டால்மியா கொடுத்த புகாரின் பேரில் இப்போது எரல் எல்லீஸை சிறையில் அடைத்திருக்கிறோம்...'' எனச் சொன் னார் இன்ஸ்பெக்டர் குமரன்.

பூகம்ப புவனேஸ்வரன்!

கோவை போலீஸாரிடமிருந்து நமக்கு வந்துசேர்ந்த விவரம் அடுத்தகட்ட பயங்கரம்!

இவர்களிடம் சிக்கி இருக்கும் புவனேஸ்வரன் என்பவனோ, பல பெண்களோடு பாச நேசமாகப் பழகி, நெருக்கமான காட்சிகளைப் பதிவு செய்து, அதனை சந்தைக்குக் கொண்டுவந்து, இப்போது போலீஸில் சிக்கி இருக்கிறான். ''ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் இவன். 10-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறாததால, ஊர் சுத்த ஆரம்பிச்சிருக்கான். 20 வயசுலயே லவ் பண்ணி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்தப் பொண்ணைக் கொஞ்ச நாள்ல துரத்தி விட்டுட்டு, காலேஜ் பொண்ணுங்களை குறிவச்சு கவர் பண்ண ஆரம்பிச்சு இருக்கான்.

அவன்கூட ஸ்கூல்ல படிச்ச பசங்க, இப்போ காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களோட மொபைல்ல இருக்கிற பொண்ணுங்க நம்பரை மட்டும் நோட் பண்ணிட்டு, தினமும் ராத்திரி நேரத்துல அவங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பிச்சிருக்கான்.

புது நம்பர்ல இருந்து எஸ்.எம்.எஸ். வருதேன்னு, விவரம் புரியாம கூப்பிட்டுப் பேசுற பொண்ணுங்ககிட்ட நைஸா பேச்சை வளர்த்திருக்கான். தொடர்ந்து பேசியவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆபாச எஸ்.எம்.எஸ், வீடியோ கிளிப்பிங்க்ஸ் அனுப்பி வச்சு கொஞ்சம் கொஞ்சமா... தன்னோட வலைக்குள்ள விழ வச்சிருக்கான். 'கல்யாணம் பண்ணிக்கிறேன்' என நம்பிக்கை வார்த்து அதன் மூலமாகவே அவர்களை வலையில் வீழ்த்தியிருக்கான். அதை அப்படியே செல்போன்ல படம் பிடிக்கவும் செஞ்சிருக்கான்.

செல்போன் பதிவுக்கு மறுக்கும் பெண்களிடம், 'நீ இல்லாத நேரத்தில இதைப் பார்த்தாவது என் மனசை ஆத்திக்கிடுவேன்டா செல்லம்' என்றெல்லாம் அவர்கள் ரூட்டிலேயே பேசி மசிய வைத்திருக்கிறான்.

இவனோட வலையில கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகளோட குடும்ப வாரிசுகளும் சிக்கி இருக்காங்க. பத்திரிகைத் துறையில இருக்குற ஒருத்தரோட பொண்ணையும் அவன் விட்டு வைக்கலை.

யார் யாரோடெல்லாம் சகவாசம் வச்சிருந்தேன்னு காட்டுவதற்காக நண்பர்கள் பலருக்கும் புளுடூத் வழியாகவும், எம்.எம்.எஸ். மூலமாகவும் உறவுக் காட்சிகளை புவனேஸ்வரன் அனுப்பி இருக்கான்.

நண்பர்கள் சிலர் மூலமா இதை மோப்பம் பிடிச்ச செல்போன் கடைக்காரங்க, அதை 'செட்'டா சி.டி. போட்டு தமிழகத்தின் பல திசைகளுக்கும் பரப்பி, காசு பார்த்திருக்காங்க. சமீபத்தில புவனேஸ்வரன் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்க்ஸ் காட்சியைப் பார்த்த கோவை உயரதிகாரி ஒருத்தர் குலை நடுங்கிப் போயிட்டார்.

புவனேஸ்வரனோட இணைஞ்சிருந்ததில் ஒரு பொண்ணு, அவரோட பொண்ணு! 'சார், இந்தப் பையனை எங்க ஏரியாவிலேயே நான் பார்த்திருக்கேன்' அப்படினு கலங்கிப்போய் அந்த அதிகாரி சொல்ல... அப்படித்தான் புவனேஸ்வரன் எங்க கவனத்துக்கே வந்தான். புவனேஸ்வரனோட செல்போன் நம்பரை ஃபாலோ செஞ்சு, அவனை வசமா அமுக்கிப் பிடிச்சோம்.

அவன்கிட்ட இருந்து மூணு மொபைல் போன், எட்டு சிம் கார்டுகளை பறிமுதல் செஞ்சோம். போன் மூலம் பெண்களை வளைக்கிறதுக்கும், அவங்களை கூட்டிட்டுப் போறதுக்கும் தன்னோட மோட்டார் பைக்கையே அடமானம் வெச்சிருக்கான். ஆனா, அவன் மூலமாக கிடைச்ச காட்சிகளை சி.டி. போட்டு பல ஆயிரங்களை சிலர் சம்பாதிச்சிருக்காங்க. அவங்க யார் யார் என்பதற்கான ஆதாரங்களைத் தேடிக் காத்திருக்கிறோம்.

'பல பொண்ணுங்க வாழ்க்கை உன்னால சீரழிஞ்சு போச்சேடா...'ன்னு நாங்க கேட்டதுக்கு, 'என்னைப் பத்தி எந்தப் பொண்ணும் புகார் கொடுக்க மாட்டா. ஏன்னா, நான் அவங்க ஒவ்வொருத்திக்கும் உயிருக்கு உயிரான காதலன்'னு தெனாவெட்டா சொல்றான்!'' என்று சொல்லித் திகைக்க வைக்கிறார்கள் அவனை வளைத்த போலீஸார்.

புவனேஸ்வரனிடம் விசாரணை நடத்திய கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் பேசியபோது, ''எழுத்துப்பூர்வமா அவன் மேல புகார் கொடுக்க யாருமே முன்வரல.

அந்தக் காட்சிகளை காட்டி சிலர்கிட்ட மிரட்டிப் பணம் பறிக்கவும் செஞ்சிருக்கான். அது சம்பந்தமான புகாரை வெச்சு அவன் மேல செக்ஷன் 384-ன் கீழ் வழக்குப் பதிவு செஞ்சிருக்கோம். அவனோட நண்பர்கள்கிட்டேயும் விசாரணை நடந்துகிட்டு இருக்கு. அவன்கிட்ட ஏமாந்த பெண்கள் எழுத்துப்பூர்வமா தைரியமா புகார் தரலாம். அவங்களைப் பத்தின தகவலை வெளியில கசிய விடமாட்டோம்!'' என்றார்.

'பள்ளியறை' செல்வராஜ்!

சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஏ. பட்ட தாரியான செல்வராஜ் செய்ததும் உச்சகட்ட அயோக்கியத்தனம். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். மணலியில் ட்யூஷன் சென்டர் நடத்தி வந்த செல்வராஜிடம் பள்ளிப்பாடம் படிக்க வந்திருக்கிறாள், ப்ளஸ் ஒன் மாணவியான சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பருவத்தின் வாசலில் நின்றிருந்த சுஜாவைப் பார்த்துக் கிறங்கிப் போன செல்வராஜ்... நைஸாகக் காய் நகர்த்தியதில், அறியாப் பருவத்து சுஜா வலையில் விழுந்துவிட்டாள். அவர்களுக்கிடையே 'அத்தனையும்' நடந்திருக்கிறது.

சுஜாவோடு தான் இருந்த தனிமைத் தருணங்களை யெல்லாம் மறக்காமல், தனது செல்போன் கேமராவில் படமாக்கிய செல்வராஜ், தனது சாகசத்தை நண்பர்களுக்குக் காட்டி மகிழ... அந்தக் காட்சிகளும் பலருடைய செல்போன்களுக்கும் பரவியது.

இப்போது செல்வராஜ் கைதாகிவிட... சுஜா தனது பள்ளிக்கூடத்துக்குக்கூடப் போக முடியாத இக்கட்டில் சிக்கித் தவிக்கிறார். காரணம், பல மூலைகளுக்கும் அந்தக் காட்சிகள் பரவி... குடும்பத்தைக் குத்திக் கிழிக்கும் வகையில் கேள்விகளும் பார்வைகளும் வரத் தொடங்கியதுதான்.


எனக்கே எனக்கா... எச்சரிக்கை ப்ளீஸ்!


'எனக்கே எனக்காக என் செல்போனில்தானே பதிவு செய்கிறேன். நானே பார்த்து ரசித்துவிட்டு ஃபைலையும் அழித்துவிடுவேன். யாருக்கும் எதுவும் தெரியாது!' என்ற எண்ணத்தோடுதான் சில தம்பதிகள் இப்படி எல்லை தாண்டுகிறார்கள்.

செல்போன் மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்தெல்லாம் அழிக்கப்பட்ட பிறகும், அந்த ஃபைல்களை எடுக்க ஏராளமான 'ரெக்கவரி சாஃப்ட்வேர்'கள் இப்போது வந்து விட்டன என்பதை இவர்கள் மறந்துவிடவே கூடாது. 'அதை'யெல்லாம் படம் எடுப்பது என்ற எண்ணத்தையே ஒழித்துவிட்டால் தொல்லையே கிடையாது!'' என்று எச்சரிக்கை வாசிக்கிறார்கள் சைபர் கிரைம் போலீஸார்.

இப்படி எதிர்பாராத விதமாக செல்போன் காட்சிகள் வெளியே பரவியதன் மூலம், வட மாவட்டத்தின் ஒரு கடையில் வேலை பார்த்த சேல்ஸ் கேர்ள் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும், கோவை மாவட்டத்தில் ஒரு குடும்பத் தலைவி விவாகரத்து வரை போன விவகாரமும் போலீஸாரின் ரகசிய ஃபைலில் இருக்கிறது!


SOURCE: JUNIOR VIKATAN. COURTSEY TO :neetheinkural.blogspot.

Wednesday, November 11, 2009

வாசர்களின் கேள்விகளுக்கு பதில் தருகிறார் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள்!

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தலைவரும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கினைப்பாளருமான பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் www.muthupet.org இணையத்தளத்தில் வாசகர்களின் வினாக்களுக்கு விடைத்தர இசைந்துள்ளார்கள்!! எனவே, தமிழ் கூறும் நல்லுக வாசகர்களே, ஆயத்தமாகுங்கள் உங்கள் கேள்வியை தொடுக்க!
அரசியல்
சமுதாயம்
மனித உரிமை
தேர்தல் களம்
இஸ்லாம்
இஸ்லாமிய வங்கி
இன்னும் இத்தனைக்காலம் உங்கள் மனக்கிடங்கில் போட்டுவைத்த கேள்விகளை ask@muthupet.org க்கு அனுப்பித்தாருங்கள்.
அனுப்ப வேண்டிய கடைசித்தேதி- டிசம்பர் 05/09.
சகோதரர்களே! இணையத்தொடர்பு இல்லாத சகோதர சகோதரிகளிடமும் தகவல் கொடுத்து நீங்களே அவர்களின் கேள்வியைப்பெற்று அனுப்பித்தரலாம்!
இப்படிக்கு.
முத்துப்பேட்டை இணையதளம்
www.muthupet.org

Sunday, July 05, 2009

மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராதீர் : மனநல டாக்டர் அறிவுரை

மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராதீர் : மனநல டாக்டர் அறிவுரை

ராமநாதபுரம் : கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் மொபைல் போனில் வரும் மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தராமல் இருந் தால் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என ராமநாதபுரம் மாவட்ட மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டத் தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள பெண்களின் மொபைல் போன்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியதாக போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்தனர்.

மாணவர்களை போலீசார் விசாரித்ததில் பெண்களின் மொபைல் எண்களை தெரிந்து கொண்டு முதலில் மிஸ்டு கால் கொடுப்பது அதற்கு எதிர்முனையில் பதில் வந்தபின் நைசாக பேசி தன்வயப்படுத்தி மிரட்ட துவங்குவது தெரியவந்தது.

மாவட்டம் முழுவதும் பெண்களுக்கு இதுபோன்ற மொபைல் போன் மிரட்டல் பரவலாக இருந்தாலும் பல பெண்கள் வெளியே சொல்வதற்கு பயந்து விட்டில் பூச்சிகள் போல் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பும் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர்.

பெண்கள் தங்களை எப்படி காத்து கொள்வது என்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட மனநல டாக்டர் பெரியார் லெனின் கூறியதாவது: சமூகத்துக்கு எதிரான மனோபவாம் கொண்ட சிறுவர்கள் ,இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர். சட்டத்தை மதிக்காமல் ஒருவகையான சுபாவத்துடன் செயல்படும் இவர்கள், வருங்காலத்தில் பெரும் குற்ற செயல்களிலும் ஈடுபட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற நபர்களிடம் சிக்காமல் இருக்க பெண்கள் கண்டிப்பாக தெரியாத மிஸ்டு கால்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. பொதுவாக பள்ளி மாணவிகளில் ஒன்பதாம் வகுப்புமுதல் பிளஸ்2 வரையிலான மாணவிகளை, பெற்றோர்கள் நன்கு கவனித்து கொள்ள வேண்டும். மாணவிகள் வீட்டில் அரவணைப்பு மற்றும் ஆறுதலுக்கு யாரும் இல்லை என கூறி எளிதில் இதுபோன்ற சமூக விரோதிகளின் வலையில் சிக்கிவிடுவர்.

பெற்றோர் மாணவிகளுக்கு மொபைல் போன் வழங்க கூடாது. வீட்டில் பெற்றோர் ஒழுக்கத்துடன் இருந்தால் பிள்ளைகளும் அதை பின்பற்றுவர். தவறாக வரும் எஸ்.எம்.எஸ்., களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. தொடர்ந்து யாரேனும் மிரட்டினால் தைரியமாக போலீசாரிடமோ ,மனநல டாக்டர்களையோ அணுகினால் வெளியே தெரியாமல் மிரட்டுபவர்களை எச்சரிக்க வாய்ப்பு உண்டு. பொதுவாக மிரட்டுபவர்கள் பயந்து கொண்டு பதில் தருபவர்களைத்தான் மீண்டும் மீண்டும் மிரட்டுவர். எனவே, பெண்கள் தங்களை காத்துக்கொள்ள வெளிநபர்களின் தவறான அணுகுமுறையை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்'என்றார்

நன்றி : தினமலர் (இராமநாதபுரம் மாவட்ட செய்திகள்) 05.07.2009

Wednesday, July 01, 2009

போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !

போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !
( மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி, துபை )

தமிழகத்தின் நாளைய வரலாற்றை எழுச்சியுடனும் விழிப்புடனும் உருவாக்க வேண்டிய நமது இளைய சமுதாயம் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் புகையிலை சுவாசத்திலும் மதுவிலும் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்வதோடு நாளை வரலாற்றை உருவாக்கு முன் இன்றே எங்களை அழித்துக் கொள்கிறோம் என சொல்லாமல் சொல்லும் அவர்களது செயல்பாடுகள் மூத்த குடிமக்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கி வருகின்றன. இன்றைய இளைஞர்கள் வெகு விரைவிலேயே போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போவதற்கு யார் காரணம்? என அலசி ஆராய்வது பேதமைத் தனமாகும்.

சிறு பிள்ளையிடம் கேட்டால் கூட ஆட்சியாளர்கள் தாம் காரணமென்று உடனே சொல்லி விடுவார்கள். தமிழகத்தின் கடந்த கால வரலாற்றை பார்த்தாலே தெரியும்.

1970 க்கு முன்பு ஒரு இளைஞன் ஏதாவதொரு போதை பொருளை பெற வேண்டுமென நினைத்தால் அவ்வளவு எளிதில் அது அவனுக்கு கிடைத்து விடுவதில்லை. இடையில் எத்தனையோ குறுக்கீடுகள் பல நிலையில் அவனை சூழ்ந்து கொள்ளும். இத்தகைய சிரமத் திற்குள்ளும் அதை தேட வேண்டுமா? என்ற கேள்விக் குறியோடு அவன் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு நல் வழிக்கு வந்து விடுவது அன்றைய எதார்த்தமான நிலைபாடு.

ஆனால் இன்றைக்கு எவ்வளவு மாற்றம்? ஒவ்வொரு இளைஞனையும் வழிய தேடிவரும் நிலையில் போதைப் பொருள்கள் காணுமிடமெல்லாம் பாகுபாடில்லாமல் நிரம்பி வழிகிறது. பள்ளிக்கூடம், கல்லூரிகள், மருத்துவமனை வளாகம், பொழுதுபோக்கு கூடங்கள், வீதிகள், தோறும் என இலகுவாக கிடைக்கும் ஒரே விஷயம் கஞ்சா, மது, பீடி, சிகரெட், புகையிலை போன்ற போதைப் பொருள்களே !

இத்தகைய போதைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள் அந்நிய சதிகாரர்கள் அல்லர். சாட்சாத் நமது தமிழகத்தை கடந்த 40 ஆண்டு காலமாக ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளே ! என சொல்வதற்கு நமக்கு எவ்வளவு வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களான பேரறிஞர் அண்ணாவும் தந்தை பெரியாரும் கண்ட கனவெல்லாம் தமிழகத்தின் இளைஞர்களை ஒழுக்க முள்ள அறிவு ஜீவிகளாக உருவாக்க வேண்டுமென்பது தான்! அதற்காகவே இயக்கம் கண்டு பல சோதனைகளை சந்தித்த அந்த உத்தம தலைவர்களின் அருமைத் தம்பிகள் என தங்களை மார்தட்டிக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்கள் நமது இளைஞர்களை போதைக்கு தூண்டுவதில் எவ்வளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்?

அரசின் கஜானாவை நிரப்ப விலை மதிப்பில்லா நமது இளைஞர்களின் குறுதியும், உயிரும் தான் வேண்டுமா? ஊர் தோறும் ஆலயம் அமைப்போம் ! என்ற சொல் மாறி வீதி தோறும் டாஸ்மாக் அமைப்போம் என்றல்லவா முனைப்புக் காட்டுகிறார்கள்.

40 ஆண்டுகால திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்குரிய சாதனை களுக்கு மணிமகுடமாய் இருப்பது டாஸ்மாக் தானோ? ஒரு காலத்தில் துண்டு பீடி குடிப்பதற்கே சமூகத்திற்கு பயந்த இளைஞன் இன்று பள்ளிக்கூடம் செல்லும் போதே மது குடித்துவிட்டுப் போகும் அவலங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடம் செல்லும் மாணாக்கரின் நெஞ்சத்தில் கல்விக்கண் திறந்த சரஸ்வதியின் நினைவு வரும் என்பது அந்தக் காலம். இன்றோ டாஸ்மாக்கின் நினைவல்லவோ? வருகிறது.

போதை மனிதனுக்கு கேடு என்று தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. ஆனால் கடவுள் மதம் இவைகளை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் மட்டும் தான் போதைக்கு வெண் சாமரம் வீசுகின்றனர். இப்போது புரிகிறதா? இவர்களின் நாத்திக போக்குக்கு என்ன காரணமென்று போதையின் தீங்கை விவரிக்கும் போது முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இவ்வாறு கூறப்படுகிறது. ‘வீணாக பொருளை விரயம் செய்யாதீர்கள்’ நிச்சயமாக பொருளை விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 17:26,27) வீண் விரயம் என இங்கு குறிப்பிடுவது மேற்குறிப்பிட்ட போதைப் பொருளுக்காக யார் காசை செலவழிக்கிறார்களோ? அதனையே குறிப்பிடுகிறது காசை கரியாக்காதே! என்ற மூத்தோர்களின் வழக்கு சொல்லும் பீடி, சிகரெட், மது போன்றவைகளையே குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் தன்னைத் தானே கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் போது பிடிபட்டால் தற்கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு தண்டிக்கப்படுகிறான். இதை இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது.


தற்கொலை முயற்சி என்பதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறது சட்டம்? (Spot Death Suicide) ஒரே நேரத்தில் சாவதா? அல்லது (Slow Motion Suicide) கொஞ்சம் கொஞ்சமாக சாவதா? இரண்டுமே ஒன்று தான் என்றால் புகை மற்றும் மது பழக்கமுடையவர்களை ஏன் இந்த தண்டனை சட்டம் முன் நிறுத்தப்படுவதில்லை?

தற்கொலைக்குப் பயன்படுத்தப்படும் கொடிய விஷப் பொருட்களான அமோனியா, நிகோடின், ஹைட்ரஜன் சயனைடு, மெத்தனால், ஹெக்சாமைன், ஆல்கஹாலில் கலந்துள்ள எத்தனால், பூச்சிக்கொல்லி மருந்தில் கலந்துள்ள ஃபீனால், டி.டி.டி.(D.D.T) விஷம், கார் பேட்டரியில் கலந்துள்ள கேட்மியம், போன்ற பொருட்களைத் தானே பீடி, சிகரெட், மது போன்றவற்றில் கலக்கிறார்கள். இப்பொருட்களை நேரடியாக உட்கொண்டால் (Spot Death Suicide) உடனடி காரணம்! பீடி,சிகரெட்,மதுவாக உட்கொண்டால் (Slow Motion Suicide) மெதுவான மரணம்! இப்படித்தான் மருத்துவ ஆய்வாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.
ஆக தற்கொலை செய்வதும் குற்றமென்றால் செய்ய தூண்டுவதும் குற்றம் தானே? இன்றைக்கு ஆட்சியாளர்கள் இளைஞர்களை (Slow Motion Suicide) மெதுவான மரணத்தின் பக்கம் தூண்டி வரும் போது ஆட்சியாளர்களை யார் தண்டிப்பது?

இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளது பாராட்டிற்குரியது ! (ஆனால் சட்டம் நடைமுறையில் இல்லை என்பது வேறு விஷயம்) அரசின் இந்த முயற்சிக்கு நல்லோர்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் !

பீடி, சிகரெட், மூலம் வரும் ஆபத்துகள் அதை பயன்படுத்துவோருக்கு மட்டும் தான் என்பதல்ல, அவன் இழுத்து விடும் புகையை சுவாசிக்கும் பக்கத்து மனிதனுக்கும் சேர்ந்தே கேடு வருகிறது.

தவறு செய்பவன் ஒருவன் தண்டனையை அனுபவிப்பது மற்றொருவன் என்பது என்ன நியாயம்? புகை பிடிப்போரே கொஞ்சம் சிந்தியுங்கள் ! பொது இடங்களில் நீங்கள் இழுத்து விடும் புகையை சகிக்க் முடியாமல் எத்தனை பேர்கள் முகம் சுளித்து மூக்கை மூடுகின்றனர். அவர்களின் மன உளைச்சலை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.

இதைப்பற்றி இஸ்லாத்தின் மாபெரும் தலைவராம் அண்ணல் முகம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்; “ஒருவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி இருந்தால் அவன் தன் அருகிலிருப் போருக்கு இடைஞ்சல் செய்ய மாட்டான்’ (நபிமொழி – நூல்:புகாரி) பீடி, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையான முஸ்லிம்களே, உங்களின் செயல் இந்த நபிமொழிக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் உங்களது மறுமை நாளின் நிலையை பற்றி யோசியுங்கள். எனது காசு நான் குடிக்கிறேன் இதை தடுக்க நீ யார் என வீராப்பு பேசுபவர்களைப் பற்றி முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகிறான் ‘உங்கள் கைகளாலேயே (உங்களை) அழிவின் பால் போட்டுக் கொள்ளாதீர்கள்’(அல்குர்ஆன் 2:195) எவ்வளவு அற்புதமான வார்த்தை! பீடி, சிகரெட், மது போன்றவைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை அழித்து வருவதைத் தான் குர்ஆனும் தடுக்கிறது.

மதுவை ஒழிப்பதற்காக போராட்டக் களம் கண்டு கள்ளுக்கடை மறியலில் கைதாகி சிறை சென்ற முதல் பெண்கள் என்ற பெருமை கொண்ட தந்தைப் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மாவும் அமைத்து தந்த மது ஒழிப்பு போராட்டக் களம் நாடு முழுவதும் இன்னும் வேகமாக விரிவாக்கம் பெற வேண்டும். தந்தை பெரியாரின் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்ல எடுக்கப்பட்ட “பெரியார்” என்ற திரைப்படத்திற்கு ரூபாய் 95 லட்சத்தை மானியமாக வழங்கி பெருமைப்பட்டுக் கொண்டவர்கள் பெரியாரின் உயிர‌ணைய‌ கொள்கையான மது எதிர்ப்புக் கொள்கையை மட்டும் புறந்தள்ளியது ஏன்?

திரைப்படத்திற்கு கொடுத்த 95 லட்சத்தை பசுமைத் தாயகம் போன்ற மது ஒழிப்பு பிரச்சார இயக்கங்களுக்கு கொடுக்கப் பட்டிருந்தால் பெரியாரின் ஆன்மாவாவது இன்றைய திராவிட தம்பிமார்களை மன்னித்திருக்கும்.
ஒரு காலத்தில் இவன் பீடி, சிகரெட், மது குடிப்பவனா? என்று கோபத்துடன் கேட்ட நம் தமிழகத்தில் இன்று இவன் பீடி, சிகரெட், மது குடிக்காதவனா? என வியப்புடன் கேட்கத் தோன்றுகிறது. அந்தளவுக்கு நாட்டில் எங்கும் எப்போதும் போதைப் பொருள்கள் நிரம்பி காணப்படுகின்றன.

ஒவ்வொரு சமூகத்தின் இளைஞர்களுக்கும் ஒழுக்கநெறி வழிகாட்டியாக விளங்கக்கூடிய இறைப்பணியாளர்களில் சிலரும் கூட பீடி, சிகரெட், மது போன்ற போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு போய் விட்ட கன்றாவியை என்னவென்று சொல்வது? மசூதி களின் இமாம்களில் சிலரும், தேவாலயங்களின் பாதிரிமார்களில் சிலரும், கோயில்களின் பூசாரிகளில் சிலரும் கூட பீடி, சிகரெட், பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போய் தாங்கள் செய்யும் இந்த தவற்றை பிறரின் பார்வையில் படும்படியாக செய்யும் இவர்களை முன்னிலைப்படுத்தி இறைவணக்கம் செய்வோர்கள் யோசிக்க வேண்டாமா? இதுபோன்ற தவற்றை செய்யும் ஆன்மீகப் பணியாளர்களை அந்தந்த இறைப்பணித் துவத்திலிருந்து உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்போது தான் இறைப்பணியும் தூய்மை யடையும். ஒவ்வொரு சமூகத்தின் பொறுப்பாளர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

அற்புதமான ஒரு இளைய சமுதாயத்தை வழி கெடுத்து விட்டதோடு நிற்காமல் அடுத்த தலை முறையையும் வழி கெடுக்கும் முயற்சியிலும் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருவது ஆரோக்கிய மானதல்ல ! நல்லெண்ணம் கொண்டோரும் சிந்தனை வாதிகளும் அவசர,அவசியமாக மது, சிகரெட், பீடி போன்ற தீய செயல்களை எதிர்த்து தீவிர களப் போராட்டம் காண வேண்டிய தருணம் வந்துவிட்டது. இத்தகைய போராட்டத்திற்கு தாய்மார்களின் ஏகோபித்த நல்லாதரவும் கிடைக்கும் ! நாம் காணப்போகும் தீவிர மது ஒழிப்பு போராட்டம் போதையில்லா சமுதாயம் உருவாக்கும் புதிய விடியலாக இருக்கட்டும் !

நன்றி : முதுவை ஹிதாயத்

Friday, June 19, 2009

‘தக்லீது’ ஓர் ஆய்வு! – அபூ ஃபாத்திமா

‘தக்லீது’ ஓர் ஆய்வு! – அபூ ஃபாத்திமா
மறு பதிப்பு

இன்றை சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் ‘தக்லீது’ செய்யாதீர்கள். ‘தக்லீது’ குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முழுக்க, முழுக்க முரணானதாகும் என்று சொன்னவுடன், தக்லீது செய்யக்கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள ஹதீஸுகளைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் எழுதப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது. மனிதர்களின் பேச்சுக்களைக் கேட்கக்கூடாது. அந்நஜாத்தைக் பார்ப்பதும் கூடாது: காரணம் இவை எல்லாம் தக்லீதே ஆகும் என்று உடனே சொல்லி விடுகிறார்கள். தக்லீது செய்யாமல் நடப்பதாக இருந்தால், சுயமாக ஞானோதயத்தில் விளங்கி நடக்க வேண்டும். இது சாத்தியமா? நிச்சயமாக சாத்தியம் இல்லை. ஆகவே தக்லீது செய்ததுதான் ஆகவேண்டும் என்று தக்லீதை நியாயப்படத்த பெரம்பாலான முஸ்லிம்கள் முனைகிறார்கள்.

இந்த ஹிமாலயத் தவறுக்கு அடிப்படைக் காரணம். ‘தக்லீது’ என்றால் பின்பற்றல் என்ற தவறான பொருளை காலங்காலமாக அவர்கள் விளங்கி வைத்திருப்பதேயாகும். ‘தக்லீது’ என்ற அரபி பதம் ‘பின்பற்றல்’ என்ற பொருளை ஒரு போதும் தராது. ஆனால் தலைமுறை, தலைமுறையாகத் ‘தக்லீது’ என்ற அரபி சொல்லுக்குப் ‘பின்பற்றல்’ என்ற தவறான பொருள். சுயநலக்காரர்களால் அவர்களின் உலக ஆதாயம் கருதி கொடுக்கப்பட்டு மக்களிடையேயும் அதுவே வலுவாக வேரூன்றிவிட்டது.

அல்குர்ஆன் வசனங்கள் அனைத்திலும், ஹதீஸ்கள் அனைத்திலும் பல இடங்களில் பின்பற்றுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தும் ஒரு இடத்தில் கூட இந்த ‘தக்லீது’ பதம் பயன்படுத்தப் படவில்லை என்பது முஸ்லிம்களின் ஆழ்ந்த சிந்தனைக்குரிய ஒரு விஷயமாகும். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் தவறான பின்பற்றுதலுக்கும். இந்தத் ‘தக்லீது’ பதம் பயன்படுத்தப்படவே இல்லை என்பதையம் முஸ்லிம்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டுகிறேன்.


‘உங்கள் ரப்பிடமிருந்து, உங்களுக்க இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்: அவனையன்றி வேறெவரையும் பாதுகாவலர்களாக்கி அவர்களைப் பின்பற்றாதீர்கள்: (எனினும் இதன்படி) நல்லுணர்வு பெறுவோர் உங்களில் வெகு சொற்பமே’. அல்குர்ஆன் 7;3


இந்த வசனத்தில் ‘வலாதத்தபிவூ’ என்ற பதமே பின்பற்றாதீர்கள் என்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தக்லீத் என்ற பதம் பயன்படுத்தவில்லை.

‘எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர் (ஸய்யிது) களுக்கும், எங்கள் பெரியார் (அகாபிரீன்)களுக்கும் வழிப்பட்டோம்: அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்’ (அல்குர்ஆன் 33:67)


நரகவாதிகள் நரகில் வேதனை செய்யப்படும் போது அவர்களின் ஓலம் இது.

இங்கும் தவறான பின்பற்றுதலுக்கு (வழிப்படுதல்) ‘அதஃனா’ என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மாறாக, தக்லீத் என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை.


‘அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள். என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’. அல்குர்ஆன் 2:170


இங்கு வழி தவறியவர்களும் ‘நத்தபிவூ’ என்ற பதத்தையே தவறான பின்பற்றுதலுக்குப் பயன்படுத்தியுள்ளதை பார்க்கிறோம். அனால் தக்லீத் என்ற பதத்தைப் பயன்படுத்தவில்லை.

ஆக குர்ஆன், ஹதீஸுகள் முழுக்கத் தேடினாலும் பின்பற்றுதலுக்கு, அது சரியான பின்பற்றுதலாக இருந்தாலும் சரி, தவறான பின்பற்றுதலாக இருந்தாலும் சரி, ‘தக்லீது’ என்ற பதம் ஓரிடத்தில் பயன்படத்தப்படவில்லை என்பதைச் சகோதர, சகோதரிகள் தங்கள் உள்ளங்களில் நன்கு பதித்துக் கொள்ளவும். எவர் உங்களிடம் வாதம் செய்ய முன்வந்தாலும் குர்ஆனில் ஒரு வசனத்தையோ, உண்மை ஹதீதுகளில் ஒரு ஹதீதையோ, பின்பற்றுதலுக்கு ‘தக்லீது’ பதம் செய்ய பயன் படுத்தப்பட்டுள்ளதைக் காட்டச் சொல்லிக் கேளுங்கள். அப்போது தான் உண்மை உங்களுக்குப் புரிய வரும்.

குர்ஆனில் சூரத்துல் மாயிதாவில் 5:2,97 ஆகிய இரண்டு வசனங்களில், தக்லீதைச் சேர்ந்த ‘கலாயித்’ என்ற பதம் மாலைகளால் அடையாளமிடப்பட்ட குர்பானி, மிருகங்களுக்காகப் பயன்படத்தப்பட்டுள்ளது. ஹதீஸுகளிலும் அடையாளமிடப்பட்ட குர்பானி மிருகங்களைக் ‘கலாயித்’ என்ற அரபி பதத்தின் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


‘தக்லீது’ என்னும் அரபி பதத்தின் மூலம் : கல்லத –யுகல்லிது – தக்லீத்.

கல்லதஹூஃபீகதா, தபிஅஹுமின் ஹ(க)ய்ரி தஅம்முலின் வலாநழ்ரின் எவ்விதப் பார்வையும், பரிசீலனையுமின்றி ஒருவரைப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும்.


தக்லீத் தனது மூதாதையர்கள், போதகர்கள், தலைவர்கள் போன்Nறூரை, கொள்கை, கோட்பாடு, கல்வி, செயல்பாடு ஆகியவற்றில் எவ்விதப் பார்வையும், பரிசீலனையுமின்றிப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும்.

கிறிஸ்தவர்களிடத்தில் தக்லீது

அவர்களின் வேத நூல்களில் பதிலு வெய்யப்படாது. அவர்களின் பாரதிரிகளின் போதனைகளைக் காலங்காலமாக எவ்வித பார்வையும், பரிசீலனையுமின்றிப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும். முன்ஜித்: அரபி மொழி அகராதி

குர்ஆன், ஹதீஸுகளில் காணப்படாத ‘தக்லீது’ பதம் முன்னைய மதவாதிகளால் பயன்படுத்தப்படகின்றது. அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி வழி கெட்டுச் செல்லும் ஒரு கூட்டமே, தங்கள் சுய நலம் கருதி, இஸ்லாத்தின் இந்தத் தக்லீதை நுழைத்தள்ளனர் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது. இதை நபி(ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பே அழகாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

எனது சமுதயாத்திற்கு ஒரு காலம், பனூ இஸ்ராயீல்களுக்கு வந்ததுபோல், ஒரு செருப்பிற்கு அடுத்த செருப்பு ஒத்திருப்பது போல் வந்து சேரும்: அவர்களிலொருவன் தனது தாயிடம் (தவறு செய்ய) பகிரங்கமாக வந்திருந்தால், அவ்வாறே (தவறு செய்பவன்) எனத சமுதாயத்திலும் வருவான்.


‘நிச்சயமாக பனூ இஸ்ராயீல் 72 கூட்டங்களாகப் பிரிந்தார்கள்: எனது உம்மத்தினர் 73 கூட்டங்களாகப் பிரிவார்கள். அவர்களில் ஒர கூட்டத்தாரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நரகத்தையடைவர்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார். அதற்கு (நபி தோழர்கள்) ‘அவர்கள் யார்” என்று கேட்க, ‘நானும் எனது தோழர்களும் எவ்வாறு நடக்கிறோமோ, அவ்வாறே நடப்பவர்கள்’. என்று விடையளித்தார்கள். (வேறு எந்தப் பயரையும் நபி(ஸல்) அவர்கள் அந்த வெற்றி பெறும் கூட்டத்திற்குச் சூட்டவில்லை என்பது இங்கு ஊன்றி கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்) அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி), நூல்கள்: திர்மிதி, அஹ்மத், அபூ தாவூத்.


அபுதாவூதில் முஆவியா(ரழி) அவர்களின் வாயிலாக பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்களிடையே தான்தோன்றித்தனமான வகையில், அனாச்சாரங்கள், வெறி நாய் கடித்தவனது உடலில் அதன் விஷம் நரம்பு, தசைகள் அனைத்திலும் ஊடுருவிச் சென்று விடுவது போன்று, ஊடுருவிச் சென்றுவிடும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


‘உங்களின் முன்னோர்களை நீங்கள் சானுக்குச் சாண், முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள்: அவர்கள் உடும்பின் துவாரத்திற்குள் புகுந்திருந்தாலும் அவர்களை (அப்படியே) பின்பற்றுவீர்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நாங்கள் ‘யாரஸுலல்லாஹ்! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா கூறுகிறீர்கள்’ என்று கேட்டோம்: அதற்கு அவர்கள் ‘வேறு யாரை’ என்றார்கள்.அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ(ரழி), நூல் : முஸ்லிம்.


முன்னைய மதவாதிகளின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி அவர்கள் தக்லீதின் பேரால் செய்யும் காரியமான, ‘அவர்கள் அல்லாஹ்வை விட்டு, தம் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மரியமுடைய மகன் மஸீஹையும், தெய்வங்களாக்கிக் கொள்கிறனர்’ (அல்குர்ஆன் 9:31)


என்று அல்லாஹ் சொல்வது போல், இவர்களும் தக்லீதின் பேரால், அல்லாஹ்வை விட்டு தம் இமாம்களையும், ஆலிம்களையும்ட தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் கடவுள் என்று வணங்கவில்லை. தம் பாதிரிகளின் கூறு;றுக்கள். அவர்களின் வேதத்திற்கு முரணாக இருந்தாலும் எடுத்து நடந்தனர். இதே போல் முதல்லிதுகள், குர்ஆன், ஹதீஸுகளுக்கு நேர் முரணான காரியங்களை இமாம்கள், ஆலிம்கள் சொன்னார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் பின்பற்றுகின்றனர். நபி(ஸல்) அவரகள், வழிகெட்டுச் செல்வோர் பற்றிக் கூறியவற்றை அப்படியே முதல்லிதுகள் முழுக்க முழுக்க நிறைவேற்றகின்றனர். பனூ இஸ்ராயீல்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தது போல், முதல்லிதுகளும் பல வழி தவறிய கூட்டங்களாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வொரு கூட்டமும் நபி(ஸல்) அவர்களை வழிகாட்டியாக எற்று நடக்கத் தவறிவிட்டனர். அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒருவரை இமாமாக ஏற்றுக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுகின்றனர். ஆக ஜோடி செருப்பில் ஒரு செருப்புக்கு மறு செருப்பு ஒத்திருப்பது போல், பனூ இஸ்ராயீல்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றுகின்றனர். இதிலிருந்து யூத, கிறிஸ்தவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறவர்கள் முதல்லிதுகளே: குர்ஆன், ஹதஸ்களை மட்டும் எடுத்துச் செயல்படகிறவர்கள் அல்ல என்பது தெளிவாகின்றது.

இதே போன்று சூஃபிஸ தத்துவமும் (தரீக்கா பிரிவுகள், கபுருச் சடங்குகள்) இது முற்றினதால் ஏற்பட்டுள்ள துறவு மனப்பான்மையும், நபி(ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாத்தில் இல்லை. குர்ஆன், ஹதீஸ்களில் இவற்றிற்குரிய ஆதாரங்கள் எள்ளளவும் இல்லை. ஆனால் முன்னைய மதவாதிகளிடம், யூத கிறிஸ்தவர்களிடம் இவை இருந்து வருகின்றன. இவற்றையும் அவர்களிடமிருந்தே அப்படியே காப்பி அடித்து, இஸ்லாத்தில் நுழைத்து விட்டார்கள். எனவே இந்தத் தக்லீதையும், தஸவ்வஃபையும் மதவாதிகளாகக் காப்பியடித்து, எடுத்து நடப்பவர்கள், நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றகிறவர்களாகவோ, நேர்வழி நடப்பவர்களோ, அல்லாஹ்வின் பொருத்தம் பெறக்கூயவர்களாகவோ, ஒருபோதும் ஆக முடியாது என்பது தெளிவான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த தீய வழிகளிலிருந்து அல்லாஹ்(ஜல்) நம்மைக் காப்பானாக.

அவர்கள் (விசுவாசிகள்) தங்கள் ரப்புடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல், அவற்றின்மீது விழமாட்டார்கள். (பார்த்துப் பரிசீலனை செய்த செயல்படுவார்கள்) அல்குர்ஆன் 25:73


இந்த வசனத்திலிருந்து குர்ஆனை தக்லீது செய்வதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகின்றது. (பார்வை பரிசீலனையில் வரமுடியாத, மறைவான விஷயங்களில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்பது வேறு குர்ஆன் வசனங்கள் மூலம் உறுதிப் படுத்தப்படுகிறது.
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்: அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்குர்ஆன் 3:31


இந்த வசனத்தில் நபி(ஸல்) அவர்களையே தக்லீது செய்யச் சொல்லப்படவில்லை. இந்தியா என்னும் விளங்கிப் பின்பற்றுதலே வலியுறுத்தப்படுகின்றது. இதன் அடிப்படையில் மார்க்க விவகாரங்களைத் தவிர, (அல்லாஹ்வின் கட்டளை, ஒப்புதல் அடிப்படையில் சொல்லப்படுவது) நபி(ஸல்) அவர்களின் சொந்த விருப்பங்கள், அபிப்பிராயங்கள் அனைத்தும் நபி தோழர்களால் எடுத்து நடத்தப்படவில்லை என்பதற்குச் சரியான பல ஹதீஸ் ஆதாரங்களைப் பார்;க்க முடிகின்றது.

இப்போது சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வின் வசனங்களையே தக்லீது செய்ய அல்லாஹ் அனுமதிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களையே ‘தக்லீது’ செய்ய அல்லாஹ் அனுமதிக்கவில்லை. மாறாக, சிந்தித்துப் பார்த்தச் செயல்படவே ஆணையிடுகிறான். இந்த நிலையில் வேறு யாரையும் ‘தக்லீது’ செய்ய அல்லாஹ் அனுமதித்து இருப்பானா? ஒருபோதும் அனுமதித்து இருக்கமாட்டான். முன்சொல்லப்பட்ட அல்குர்ஆன் 7:3 வசனம் ‘தக்லீது’ மிக வன்மையான மறுத்தே இறக்கப்பட்டுள்ளதை அறிவுடையவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். இதைத் தெளிவாக விளங்கி ‘தக்லீது’ விட்டு தவ்பா செய்து முஸ்லிம் சகோதர, சகோதரிகள் கடமைப்பட்டிருக்கிறார்கள். அறிவுடையவர்கள் மட்டுமே முஸ்லிம்களாக இருக்க முடியும். தக்லீதை விட்டு தவ்பா செய்து நீங்கதாதவர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லவே இல்லை என்பதே தெளிவாகும்.

தக்லீதிற்கும் இத்திபாவிற்கும் உள்ள வேறுபாடுகள் :

1. சமீப காலத்தில் யூதர்கள் குர்ஆனில் பல இடைச் செருகல்களைச் சேர்த்து, லட்சக்கணக்கான குர்ஆன் பிரதிகள் அடித்து, உலகம் முழுவதும் பரப்பினார்கள். அந்த குர்ஆனை, பார்த்துப் பரிசீலனை செய்யாது. அனைத்தும் அல்லாஹ்வின் வசனங்கள் என்று நம்பிச் செயல்படுகிறவர்கள் தக்லீது செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள். அதைப் பார்த்துப் பரிசீலனை செய்து இடைச் செருகல்களை நீக்கி, அல்லாஹ்வின் வசனங்களை மட்டும் விளங்கி, எடுத்து நடப்பவர்கள். ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

2. இதே போல் ஹதீஸ் நூல்களில், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள், பலவீனமான ஹதீஸ்கள் இடைச் செருகல்களாக நுழைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தையுமு; உண்மை ஹதீஸ்கள் என்று பார்த்துப் பரிசீலனை செய்யாமல் நம்பிச் செயல்படகிறவர்கள் தக்லீது செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள்.

ஹதீஸ்களைப் பார்த்து பரிசீலனை செய்து, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் பலவீனமான ஹதீஸ்களையும் நிக்கிவிட்டு உண்மையான ஹதீஸ்களை மட்டும் விளங்கி, எடுத்து நடப்பவர்கள் ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

3. எந்த நூலில் எழுதப்பட்டிருந்தாலும், யாருடைய பேச்சாக இருந்தாலும், அவற்றைக் குர்ஆன், ஹதீஸ்களோடு ஒத்துப் பார்த்து பரிசீலனை செய்யாமல், நம்பி எடுத்து நடப்பவர்கள் ‘தக்லீது’ செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள்.

அவை மனிதர்களால் ஆக்கப்பட்டவை அல்லது மனிதர்களால் பேரப்பட்டவை. இறைவாக்கல்ல என்ற உயர்ந்த நோக்கத்தோடு, அவற்றைப் பார்த்துப் பரிசீலனை செய்த, குர்ஆனுக்கும் உண்மை ஹதீஸ்களுக்கும் ஒத்திருப்பவற்றை மட்டும் எடுத்து நடப்பவர்கள். ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

4. அந்நஜாத்திலே வந்து விட்டது என்பதற்காக அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி, அவற்றைப் பார்த்து பரிசீலனை செய்யாமல் எடுத்து நடப்பவர்கள் ‘தக்லீது’ செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள்: அந்நஜாத்தில் வந்தாலும் அதில் எழுதுகிறவர்களும் மனிதர்களே, அவர்களிலும் தவறுகள் ஏற்படலாம் என்று அவற்றைப் பார்த்துப் பரிசீலனை செய்த குர்ஆனுக்கும் உண்மை ஹதீஸுகளுக்கும் ஒத்திருப்பவற்றை மட்டும்; எடுத்து நடப்பவர்கள் ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

இப்போது தக்லீதுக்கும் (கண்மூடிப் பின்பற்றல்) இத்திபாவுக்கும் (விளங்கிப் பின்பற்றல்) உள்ள வேறுபாட்டை நன்கு விளங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால், ஈ அடிச்சான் காப்பி அடிப்பது ‘தக்லீது’ ஆகும். சார் அவன் மிகச் சரியாக எழுதுகிறான். அதனால் தான் நான் அவனைக் காப்பி அடிச்Nசுன் என்று எந்த மாணவனும் சொல்ல முடியாது. காப்பி அடிப்பது அரசால் தடை செய்யப்பட்டிருப்பது போல், ‘தக்லீது’ அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டுள்ளது. பரீட்சைக்கு முன் திறமைமிக்க மாணவனிடம், பரீட்சையில் வரும் கேள்விகளைப் பற்றிக் கேட்டு விளங்கிக் கொண்டு, பரீட்சையில் சுயமாக எழுதுவது அரசால் அனுமதிக்கப்பட்டிருப்பது போல், திறமை மிக்கவர்களிடம், துர்ஆனையும், ஹதீஸ்களையும் அறிந்தவர்களிடம் (அவர்களின் கற்பனைக் கட்டுக் கதைகளையோ, யூகங்களையோ, அல்ல) கேட்டு, குர்ஆன், ஹதீஸ்களில் உள்ளவைதான் என்று விளங்கி எடுத்து நடப்பதை அல்லாஹ் அனுமதிக்கிறான். இதற்கு இத்திபா என்றே சொல்லப்படும்.

இதற்குப் பிறகும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் தக்லீதுக்கும் இத்திபாவுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் இரண்டும் ஒன்றுதான் என்றோ, தக்லீத செய்யாமல் மார்க்கத்தை எடுத்து நடக்க முடியாது என்றோ, சரியாக இருந்தால் தக்லீது செய்யலாம் என்றோ சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறோம். அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத தக்லீதை விட்டு முற்றிலும் தவ்பா செய்து மீள்வோமாக! அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட ‘இத்திபா’ செய்யப் பழகுவோமாக!

தக்லீது : கண்மூடிப் பின்பற்றல் – புரோகிதமும், இடைத்தரகர்களும் இஸ்லாத்தில் புகுந்து, ஐக்கிய சமுதாயத்தைக் கூறுபோட்டு சுரண்டுவதற்கு வழிவகை செய்கிறது.

முதல்லிது : பார்த்துப் பரிசீலனை செய்யாமல் கண்மூடித் தனமாகப் பின்பற்றுபவன்.

இத்திபா: விளங்கிப் பின்பற்றல் – புரோகிதத்தையும் இடைத் தரகர்களையும் ஒழித்துக்கட்டி ஐக்கிய, சமத்துவ, சகோதரத்துவ, சமுதாயம் அமைய வழிவகை செய்கிறது.


முஸ்லிம் சமுதாயத்திற்கு தக்லீது வேண்டுமா? ‘இத்திபா’ வேண்டுமா?

அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத்தினர், நபியையும் நபி தோழர்களையும் பின்பற்றாமல், புரோகித மவ்லவிகளைப் பின்பற்றி நடக்கின்றனர். அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்பதில் பொய்யர்களாக இருந்தாலும் தங்களை முதல்லிதுகள் என்று சொல்லதில் உண்மையாளர்களா இருக்கின்றனர். ஆனால் நாங்கள் குர்ஆன், ஹதீஸை பின்பற்றுகிறோம். தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றுவோர்;, குர்ஆன், ஹதீஸை பின்பற்றுகிறோம் என்பதிலும் பொய்யர்களே, தவ்ஹீத் வாதிகள் என்பதிலும் பொய்யர்களே! தவ்ஹீத் வாதிகள் என்பதிலும் பொய்யர்களே! தவ்ஹீத் மவ்லவிகள் என பொய்யாகப் பீற்றிக் கொள்ளும் புரோகிதர்களை தக்லீத் செய்யும் முதல்லிதுகளே!

எவனொருவன் நேர்வழி இன்னதொரு தனக்குத் தெளிவான பின்னரும், (அவ்லாஹ்வின்) இத் தூதரை விட்டுப் பிரிந்து, (வேறு ஒருவரை இமாமாக ஆக்கிக் கொண்டு முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்ல விட்டு, நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்: அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக்கெட்டதாகும்.
அல்குர்ஆன் 4:115


நன்றி : அந்நஜாத்

Tuesday, May 05, 2009

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?

அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?



இந்த நோட்டீஸில் கூறியபடி, தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் (அதிரை கிளை) கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை;


என்பதோடு மட்டுமில்லாமல் முஸ்லிகளிடையே குழப்பதை ஏற்படுத்தும் முகமாக அல் அமீன் பள்ளி சம்மந்தமாக பொய்களை மக்கள் மத்தியில் பரப்புரைத்து வருவதாகவும் அரசியல் வேண்டாம் எனக்கூறிவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக இறையில்லத்தையே விட்டுக்கொடுக்கச் சொல்லும் இவர்களை எப்படி "ஏகத்துவ வாதிகள்" என கூற முடியும்...?



இதிலிருந்தாவது இவர்களை சமுதாயம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தஞ்சை மாவட்ட (தெற்கு) செயலாளர் AJ. ஜியாவூதீன் அவர்கள் !

அது அவருடைய கேள்வி மட்டுமன்று அதிராம்பட்டினம், அதை சுற்றியுள்ள முத்துப்பேட்டை,மல்லிப்பட்டினம்,மதுக்கூர்,புதுப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து ஊர் முஸ்லிம்களின் வினாவும் இதுதான்!


என்ன பதில் சொல்லப்போகிறது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை?




தமிழ் மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்:




இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் அதிரையில் ஒட்டப்பட்ட போஸ்டரும் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள்தான் ஒட்டினார்கள் என்ற செய்தியும் ஊர் சுற்றி வருகிறது. அது உன்மையா அல்லது வதந்தியா என்பதையும் அதன் தலைமை விளக்கவேண்டிய அவசியத்தில் உள்ளது.



//அல் அமீன் பள்ளி விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மணிவன்னனை ஆதரித்து இஸ்லாமிய சங்ககளின் சார்பில் அதிரைநகர் முழுவதும் நேற்று நள்ளிரவு மர்மஆசாமிகள் "வேண்டுகோள்" என்ற தலைப்பிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.



இதை பார்த்த அதிரை இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பை தொடர்புகொண்டு இதுவிஷயமாக கேட்டபொழுது இதுபற்றிதங்களிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை எனவும், எங்கள் பெயரை கலங்கபடுத்தும் நோக்கோடு செயல்பட்ட இவர்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு போஸ்ட்டர் ஒட்டியும் உள்ளனர். அல்அமீன் பள்ளி விஷயத்தில் விளையாடிய காவல்துறையின் கறுப்புஆடு மணிவன்னனை இடமாற்றம்செய்ய இஸ்லாமிய அமைப்புகள் பெரும் முயற்சி மேற்கொண்டு இடமாற்றம் செய்தது. இதை பொறுக்காத சில "தலைகள்" இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.// நன்றி:அதிரைXpress






தமிழக முஸ்லிம் சமுதாயமே உங்கள் கருத்து என்ன...?


தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இறைவிரோத செயலை ஆதரிக்கீர்களா...?



இறைவனை தொழ இறையில்லம் எழுப்புவது குற்றமா...?


தி மு கவை ஆதரிப்பதால் இறைவிரோத செயல்களில் ஈடுபடலாமா...?




கடைசி செய்தி:

தி மு க , காங்கிரஸ் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிகளுக்கு துரோகம் செய்ததைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் பள்ளி நிர்வாக குழுவினரை சந்த்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு கோரிவருகின்றனர்!

ஆனால், தங்களது முடிவை நாளை (06/05/09) அறிவிக்கிறார்கள்!!

சில இடங்கள் தவிர்த்து தி மு க கூட்டணியை PFIஆதரித்தாலும் அதிரையில் அல் அமீன் பள்ளியை மீட்டேடுக்கும் முயற்ச்சியில் முழுமையாக அற்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது!


மேலும் செய்திகளை அறிந்துக்கொள்ள....!

அதிரை POST

Thursday, April 16, 2009

வாலிபருக்கு தமுமுக உறுப்பினர் என்பதால் மறுக்கப்பட்ட சிறை வார்டன் பணி வழங்க பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு

மதுரை: கன்னியாகுமரியை சேர்ந்தவருக்கு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இருந்ததற்காக மறுக்கப்பட்ட சிறை வார்டன் பணியை வழங்க சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரியை சேர்ந்த சகுபர் சாதிக் தாக்கல் செய்த ரிட் மனு: நான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக வடக்குசூரங்குடி கிளையில் உறுப்பினராக இருந்தேன். ஒரு வாரஇதழ் ஏஜன்ட்டாகவும் பணிபுரிந்தேன். என் மீது ஈத்தான்மொழி போலீசில் ஒரு குற்றவழக்கு பதிவாகியிருந்தது. அதில் என் மீது குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்.


இந்நிலையில் நான் சிறை வார்டன் கிரேடு 2 பணிக்கு அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்றேன். எனக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. சீரூடை பணியாளர் தேர்வாணைய தலைவர், சிறை ஐ.ஜி., எஸ்.பி.,யிடம் கேட்ட போது என் மீது வழக்கு, முஸ்லீம் முன்னேற்ற கழக உறுப்பினர், வார இதழ் ஏஜன்ட் என காரணம் காட்டி பணியில் நியமிக்க மறுத்து விட்டனர். என்னை பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரினார். மனுதாரர் சார்பில்வக்கீல்கள் லஜபதிராய், ஜின்னா ஆஜராயினர்.


நீதிபதி எஸ்.மணிக்குமார் பிறப்பித்த உத்தரவு: முஸ்லீம் முன்னேற்ற கழகம் அமைதியை குலைக்கும், வெறுப்பை தூண்டும் அமைப்பு என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இங்கு தாக்கல் செய்யப் படவில்லை. அரசால் தடை செய்ய இயக்கமோ, மதரீதியான இயக்கமோ என அறிவிக்கப்படவில்லை. அதில் உறுப்பினராக இருக்கிறார் என்பதற்காக மட்டுமே மனுதாரர் தகுதியற்றவர் என கூற முடியாது. இவ்விஷயத்தில் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் உட்பட மூன்று பேரது அணுகுமுறை தவறு. மனுதாரரை மேலும் கஷ்டபடுத்த அனுமதிக்க கூடாது. அவரை பணியில் அமர்த்த மூன்றுஅதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நன்றி : தினமலர்

Friday, April 10, 2009

சென்னையில் ஒட்டுமொத்த நிர்வாகிகள் விலகல் - கலகலத்த IDMK கூடாரம்

சென்னையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

திரு. ஜான் பாஷா


இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை, ஆர்.கே நகர், மயிலாப்பூர், ராயபுரம், திருவல்லிக்கேணி உட்பட பல கிளை நிர்வாகிகள் தங்கள் கிளைகளை ஒட்டுமொத்தமாக கலைத்து இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்கள்.

பல்வேறு பட்ட கவர்ச்சியான வாக்குறுதிகளை அள்ளி வீசி, சமூக ஒற்றுமை, இரவல் அரசியலுக்கு விடை கொடுப்போம், என கூறப்பட்ட வாக்குறுதிகளை நம்பி பல்வேறு அமைப்புகளிலும் இருந்து விலகி இந்திய தேசிய மக்கள் கட்சியல் வந்து சேர்ந்தனர். தலைமை பதவியால் ஏற்பட்ட அகங்காரத்தாலும், சகோ.அமீர் ஜவஹர் போன்றோர் சமூக ஒற்றுமைக்காக இதன் தலைவர் குத்புதீன் ஐபக்கை இரு முறை அழைத்து தொலைக்காட்சியல் பேச செய்ததால் ஏற்ப்பட்ட மமதையாலும் தன்னிலை மறந்த இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் குத்பதீன் ஐபக், கட்சிக்காக அயராது உழைத்த தொண்டர்களால் ஏற்ப்பட்ட புகழ்ச்சியாலும் கிறங்கிப்போன குத்பதீன் ஐபக் இவை யாவும் தனக்கும் தன்னுடைய எழுத்தக்களுக்கும், பேச்சுக்கும் கிடைத்த பெருமை என தவறாக புறிந்து கொண்டு தலைகால் புறியாமல் நிர்வாகிகளிடம் அகம்பாவமாக நடந்ததால் இன்று சென்னையின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.

இந்திய தேசிய மக்கள் கட்சயில் இருந்து அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரும் வடசென்னை மாவட்ட அமைப்பாளருமான ஏ.கே ஜான்பாஷா அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் வெளியீடான "சந்தி சிரிக்கும் டாக்டர் கலைஞரின் சமூக நீதி" என்ற பிரசுரத்தை வெளியிட்டதால் கலைஞர் அரசால் கைது செய்யப்பட்டு அந்த செய்தி ஜீனியர் விகடன் உட்பட பல பத்திரிகைகளிலும் வந்து பிரபலமானவர். இன்றும் யாராலும் அறியப்படாமல் இருந்த இந்திய தேசிய மக்கள் கட்சியை சென்னை நகரெங்கும் அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்து கட்டமைத்தவர். இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவராக அகம்பாவம் பிடித்து தறியும் குத்புதீன் ஐபக் சென்னை வரும்போதெல்லாம் அவரது உணவு, தங்குமிடம் என அனைத்து செவுகளையும் இன்று வரை செய்தவர். இவரது தலைமையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை, ஆர்.கே நகர், மயிலாப்பூர், ராயபுரம், திருவல்லிக்கேணி உட்பட பல கிளைகளின் 50 க்கும் மேறப்பட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக கிளைகளை கலைத்துவிட்டு இராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர். இவர்கள் தங்கள் இராஜினாமாவிற்கான காரனங்களாக தெறிவித்துள்ளதாவது.

1) இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்கள் வாக்குறுதி தவறியது. வாய்மை இல்லாமல் பொய்மை நிறைந்த அவரது பேச்சுக்கள். கட்சியில் சேரும்போது இந்திய தேசிய மக்கள் கட்சி முறைப்படி பதிவு செய்யப்பட்டு , தேர்தல் கமிசனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்று பொய் சொல்லி ஏமாற்றியது. கட்சி இன்று வரை சங்கமாக கூட தமிழகத்தில் எங்குமே பதிவு செய்யப்படவில்லை. சென்னையில் பேட்டியில் தமுமுக, முஸ்லிம் லீக் தனித்து நின்றால் அவர்கள் நிற்கும் தொகுதிகளில் போட்டியிட மாட்டோம் என்று கூறிவிட்டு அதற்கு நேர்மாறக பணத்திற்காக வேட்பாளர்களை நிறுத்துவது. உளவுத்துறை மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளோடு கைகோர்த்து சமூகத்தை பிளவு படுத்தி அதை பலகீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது.

2) தலைக்கனம் பிடித்த குத்பதீன் ஐபக், வட சென்னை ஜான்பாசா உட்பட பல நிர்வாகிகளை பற்றி தரக்குறைவாக மற்றவர்களிடத்தில் விமர்சித்தது. ஒருவரை பற்றி மற்றவாரிடத்தில் தரக்குறைவாக கூறி இருவருக்கும் இடையில் பகைமையை ஏற்படுத்த முயன்றது. கையும் களவுமாக பிடிபட்டபோது அதை ஹிக்மத், அரசியல் சாதுர்யம் என்று பேசி ஏமாற்ற முயன்றது.

3) குத்புதீன் ஐபக் ஒரு முழுமையான முனாபிக்காக மாறியது, அதாவது குர்ஆன் ஹதீஸ்களில் இறைவன் முனாபிக் குறித்து கூறியுள்ள அனைத்து அம்சங்கள், அடையாளங்களை தன்னகத்தே கொண்ட மனிதராக உள்ளது. தொழுகை, இபாதத் இல்லாமை, ஒரு கூட்டத்தாரோடு இருக்கையில் தான் அவர்களோடு உள்ளதாகவும், மற்றொரு கூட்டத்தாரோடு இருக்ககையில் தான் அவர்களது ரத்த உரவு என்றும் அவர்களுக்கேஎன்றும் ஆதரவு என்றும் பேசுவது. முஸ்லிம்களுக்கிடையே பகைமையை வளர்க்க முனைந்தது. இந்திய தேசிய மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் பதவியை பயன்படுத்தி இஸ்லாத்தின் எதிரிகளோடு கைகோர்த்து மற்ற சமுதாய அமைப்புகளுக்கும் , கட்சிகளுக்கும் இன்னும் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கும் எதிராக செயலாற்ற திட்டமிட்டது.

4) இன்னும் குத்புதீன் ஐபக்கோடு இருக்கும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் சிலரும், கீழக்கரை, திருச்சி, தஞ்சையை சேர்ந்த சில மாநில நிர்வாகிகள் சிலரும் குத்புதீன் ஐபக் கட்சியையும், சமுதாயத்தின் பெயரையும் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறி முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த தனவந்தர்களிடம் வசூலித்த பணத்தின் சில லகரங்களுக்காகவும், அரசியல் பதவி ஆசையிலும் குத்புதீன் ஐபக்கிற்காக ஜல்ரா போடுவது. அதாவது ஜால்ரா போடும் மாநில நிர்வாகிகள் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள்.

5) இந்திய தேசிய மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட உழைக்கும் அடிமட்ட தொண்டர்களிடத்தில் தான் ஏதோ காயிதே மில்லத், கருனாநிதி போன்ற மிதப்பில் அகம்பாவமாகவும், உதாசீனமாகவும் குத்புதீன் ஐபக் பேசுவது, இன்றும் தன்னை காயிதே மில்லத், அறிஞர் அண்ணா அளவிற்கு தற்புகழச்சி செய்து கொண்டு மற்ற தலைவர்களை ஏமாளி, கோமாளி என்று சோட்டிஸ் போட்டு நக்கல் செய்வது.


என பல காரனங்களை இவர்கள் கூறியுள்ளார்கள். இன்னும் சென்னை மாநகரில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் முனாபிக் குத்புதீன் ஐபக் மற்றும் அவரோடு கூட இருக்கும் ஆடசி மன்ற குழு உறுப்பினர், மாநில நிர்வாகி ஆகியோரின் முகத்திரைகளை கிழித்து மக்களுக்கு இவர்களின் "சமுதாய துரோகிகள்" எனும் மறு முகத்தையும், குத்புதீன் ஐபக் இந்த சமுதாயத்திற்கு செய்த மாபெரும் துரோகத்தையும் மக்களுக்கு அம்பலப்படுத்தும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை என்றும் இந்நிர்வாகிகள் சூழுரைத்துள்ளனர்.

இராஜினாமா செய்துள்ள நிர்வாகிகளில் சிலர் :

1. ஏ.கே ஜான் பாசஷா - வட சென்னை மாவட்ட அமைப்பாளர்
2. எஸ் செய்யது நிஹமத் - ஆர்.கே நகர் கிளை தலைவர்
3. எச். சலீ்ம் பாஷா - ஆர்.கே நகர் கிளை செயலாளர்
4. முனீர் பாஷா - மயிலாப்பூர் கிளை தலைவர்
5. கவுஸ் பாஷா - ராயபுரம் கிளை தலைவர்
6. பசீர் அஹமது - 5 வது வட்ட கிளை
7. மகேந்திரன் - 13 வது வட்டம்
8. சர்தார் பாஷா -
9. பசீர் அஹமது - ஆர்கே நகர் கிளை து. தலைவர்
10. ஹமீது - 13 வது வட்டம் கிளை
11. ஜலால் - 10 வது வட்டம் கிளை
12. அஹமது புன்யாமின் - திருவல்லிக்கேணி செயலாளர்
13. ஹயாத் பாஷா - மயிலாப்பூர் கிளை
14. புர்ஹான்
15. மஹபூப் பாஷா (பின்சின் லைன்)
16. பாரூக் - 12 வது வட்டம்
17. தமீம் - நேதாஜி நகர்
18 . பாசா - ஆர்கே நகர் பொருளாலர்
19. சாகுல் ஹமீது
20. முஸ்த்தஃபா

Friday, April 03, 2009

தாடி வைப்பது தாலிபானிஸமா? உச்சநீதிமன்ற கருத்துக்கு PFI எதிர்ப்பு


முஸ்லிம்ககளின் மத உரிமையை தாலிபானிஸம் என்று உச்சநீதிமன்றம் சித்தரித்தது ஒரு சமூகத்தையே குற்றம் பிடிக்கும் கருத்து பாப்புலர் ஃப்ரண்ட் அதிர்ச்சி

மத்தியபிரதேசத்திலுள்ள சிறுபான்மையின பள்ளியான நிர்மலா கான்வென்ட் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் முஸ்லிம் மாணவன் முஹம்மது சலீமை தாடி வைக்கக் கூடாது என தடுத்த பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து அந்த மாணவன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு முஸ்லிம் சமுதாயத்தையும் சமூக உரிமைப் போரõளிகளையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்தை சீக்கிய மதத்தினர் அனுபவிக்கின்றனர். மற்ற மதத்தினரும் அனுபவிக்கின்றனர். இந்து மாணவர்கள் பொட்டு வைத்துக்கொண்டு பள்ளிக்கு வருகின்றனர். ஐயப்பபன் கோவிலுக்கு செல்ல நேர்ச்சை செய்திருக்கும் இந்து மாணவர்கள் மாலை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். கிறிஸ்தவ மாணவர்கள் சிலுவை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் மத உரிமையை மறுத்து தாடி வைக்கக் கூடாது, புர்கா அணியக் கூடாது என அனுமதி மறுப்பது மத ரீதியான பாகுபாடே ஆகும். உச்சநீதிமன்ற தீர்ப்பு முஸ்லிம்களின் மத நம்பிக்கையில் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்திய அரசியல் சட்டம் உறுப்பு எண் 14 வழங்கியுள்ள சமஉரிமையை மறுப்பதாகவும் உள்ளது. தாடி வளர்ப்பது முஸ்லிம்களின் மத அடையாளம். முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கையான தாடியை தாலிபானிசம் என உச்சநீதிமன்றம் கூறியது இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளியாக சித்தரிக்கும் வகையில் உள்ளது என முஸ்லிம் சமூகம் கருதுகின்றது. வேதனையடைகின்றது.ஷாபானு வழக்கில் ஷரீஅத்தைப் பாதுகாக்க சட்டம் கொண்டுவந்தது போல் முஸ்லிம்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வந்து முஸ்லிம்களின் மத நம்பிக்கையை பாதுகாக்க வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.


இவண்
எம். முஹம்மது அலி ஜின்னா
மாநிலத் தலைவர்,
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Sunday, March 29, 2009

முஸ்லிம்கள் மீது இந்துகளுக்கு வெறுப்பு ஏன்...?

பெரியார் பேசுகிறார்


இஸ்லாம் - இந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது
- I

('இழிவு நீங்க இஸ்லாம்' என்ற தனது திருச்சி உரைக்கு வந்த பல அதிருப்தி குறிப்புகளுக்கு பெரியார் அளித்த பதில். 'குடி அரசு' 5.4.1947)
Periyar

தோழர்களே!

எனது 18.3.47ஆம் தேதி திருச்சி சொற்பொழிவையும், தலையங்கத்தையும் "குடி அரசில்' படித்த தோழர்கள் பலரில் சுமார் 10,15 தோழர்கள் வரை கடிந்தும், கலகலத்தும், தயங்கியும், தாட்சண்யப்பட்டும், மிரட்டியும், பயந்தும், கண்டிப்பாயும், வழவழா என்றும் பலவிதமாய் ஆசிரியருக்கும், எனக்கும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நேரிலும் சிலர் வந்து நீண்ட சொற்போர் நடத்தினார்கள். ஆதலால் அவற்றிற்குச் சமாதானம் சொல்லும் முறையிலும், நேரில் பேசிய தோழர்களுக்குச் சமாதானம் தெரிவிக்கும் முறையிலும் இதை எழுதுகிறேன். கோபப்படாமல், ஆத்திரப்படாமல், மத மயக்கம் இல்லாமல் சிந்தித்துப் பாருங்கள்.


இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும்.

இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள்.

ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.

இந்து மதம் என்னும் ஆரிய மதத்திற்குப் பல கடவுள்கள், உருவக் கடவுள்கள் உண்டு. உருவங்களும் பல மாதிரியான உருவங்களாகும். மக்களுக்குள் ஜாதி பேதங்கள் உண்டு. பிறவியிலேயே ஜாதி வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் (பறையன்) என்ற உயர்வு – தாழ்வு கொண்ட ஜாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைக்கு நாம் ஆளாகி அவற்றுள் கீழ் ஜாதியாய் இருக்கிறோம்.

இஸ்லாம் மதத்தில் ஒரு கடவுள் தான் உண்டு; அதுவும் உருவமற்ற கடவுள். இஸ்லாத்தில் ஜாதிகள், பேதங்கள், உயர்வு – தாழ்வுகள் கிடையாது. பிறவி காரணமாகப் பாகுபாடு, மேன்மை – இழிவும் கிடையாது.

இஸ்லாத்தில், பிராமணன் (மேல் ஜாதி), சூத்திரன் (கீழ் ஜாதி) பறையன், பஞ்சமன் (கடை ஜாதி) என்பவர்கள் கிடையாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், இஸ்லாம் ஒரு கடவுள், ஒரு ஜாதி அதாவது ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற அடிப்படையைக் கொண்டது. இந்த அடிப்படை திராவிடனுடையதே; திராவிடனுக்கு வேண்டியது என்றும் சொல்லலாம்.

இஸ்லாம் மதத்தை எல்லா மக்களும் அனுசரித்தால், பிராமணர் என்கின்ற ஜாதியே, சமுதாயமே இராது. பல கடவுள்களும், விக்கிரக் (உருவ) கடவுளும் இருக்க மாட்டா. இந்த விக்கிரக் கடவுள்களுக்குப் படைக்கும் பொருள் வருவாயும் நின்று போகும். இதனாலேயே இஸ்லாம் ஆரியரால் வெறுக்கப்படுகிறது. வெகு காலமாய் வெறுக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மீது பல பழிகள் சுமத்தி, மக்களுக்குள் வெறுப்புணர்ச்சி ஊட்டப்பட்டும் வருகிறது.


ஆகவே இந்தப்படி இஸ்லாம் மதம் வெறுக்கப்படுவதினால், இஸ்லாமியரும் ஆரியரால் வெறுக்கப்பட்டும், ஆரிய மத அடிமையான சூத்திரர் (திராவிடர்))களாலும் வெறுக்குமாறும் செய்யப்பட்டு விட்டது. ஆகவேதான் இஸ்லாத்தின் மீது உள்ள வெறுப்பினாலேயே, திராவிட இந்துக்கள் என்பவர்களும் இஸ்லாமியர்களான முஸ்லிம்களை வெறுத்துப் பழகிவிட்டார்கள் என்கிறேன்.


இஸ்லாத்தைப் போல் கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம், பவுத்த சமாஜம் முதலியவை இந்துக்களால் வெறுக்கப்படுவதில்லை. ஏன் என்றால், கிறிஸ்து, சீக்கிய முதலிய மதங்களும், இஸ்லாத்துக்கு ஓர் அளவுக்கு விரோதமானவையானதால், அவை இஸ்லாத்தின் பொது விரோதிகள் என்கின்ற முறையில் – இந்து, கிறிஸ்துவர், சீக்கியர் ஆகிய மூவரும் விரோதமில்லாமல், கூடிய வரையில் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள்.



அனேக பார்ப்பனர்கள்கூட, கிறிஸ்துவ மதத்தைத் தழுவி இருக்கிறார்கள். பல பார்ப்பனர்கள் கிறிஸ்துவ மத ஸ்தாபனங்களில் சிப்பந்திகளாகவும் இருக்கிறார்கள். கிறிஸ்துவ மதத்தைத் தழுவுகிற இவனும் இங்கு இந்த ஜாதி முறையைத் தழுவ அனுமதிக்கப்படுகிறான்.


சீக்கியனும் அநேகமாக இந்து மதக் கொள்கைப்படிதான் கடவுளை வணங்குகிறான். ஆனால், உருவ கடவுளுக்குப் பதிலாக புஸ்தகத்தைக் கடவுள் உருவாய் வைத்து, இந்து பிரார்த்தனை முறையில் வணங்குகிறான். சீக்கியர்களும் இந்துக்கள் போலவே (அவ்வளவு இல்லாவிட்டாலும்) ஓர் அளவுக்கு ஜாதிப் பாகுபாடு அனுசரிக்கிறார்கள்.


சீக்கியரில் தீண்டப்படாத, கீழ் சாதி மக்கள் என்று ஒரு கூட்டம் இருக்கச் செய்யப்பட்டு இருந்து வருகிறது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உரிமைகூட அதற்கு வழங்கப்பட்டிருக்கிறது. தனித்தொகுதிப் போராட்டமும், சீக்கிய வகுப்புக்குள் இருந்து வருகிறது. ஆனால், ஆரியப் பத்திரிகைகள் இதை வெளியில் தெரியாமல் மறைத்து விடுகின்றன. நான் பஞ்சாப்புக்குச் சென்றபோது நேரில் அறிந்த சேதி இது!


எனவே இஸ்லாம் மதம், பார்ப்பனர்களால் சுயலாபம் – வகுப்பு நலம் காரணமாக வெறுக்கப்பட்டதாக இருப்பதால், இஸ்லாமியர்கள் (முஸ்லிம்கள்) பார்ப்பன – ஆரிய அடிமைகளாலும் வெறுக்கப்பட்டு வருகிறார்கள். எனவே இன்றும் இந்து மதத் தலைவர்களுக்கு முஸ்லிம்களை வெறுக்கச் செய்வதல்லாமல், இந்து மதப் பிரச்சாரத்தின் முக்கியத் தத்துவம், கொள்கை, பணி என்ன என்று யாராவது சொல்ல முடியுமா?

தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!தொடரும்.....

Wednesday, March 25, 2009

அரசியலில் இலக்கியவாதிகள் - அருளடியான்


சிற்றிதழ்களுக்குள் நடக்கும் சண்டையையும், எழுத்தாளர்களுக்குள் நடக்கும் அக்கப்போரையும் நாம் அறிவோம். இவையெல்லாம் இலக்கியத்தில் நடக்கும் அரசியல். இவற்றைப் பற்றி நாம் பேசப்போவதில்லை. அரசியலில் ஈடுபட்டுள்ள இலக்கியவாதிகளைப் பற்றிய ஒரு பார்வையாக இக்கட்டுரையை எழுதியுள்ளேன். "எழுத்தாளர்களை அறிவாளிகளாகப் பார்க்கும் ஒரு சாராரையும், அவர்களை கோமாளிகளாகப் பார்க்கும் இன்னொரு சாராரையும் நம் தமிழ்ச் சமூகம் கொண்டுள்ளது." என்னைப் பொறுத்தவரை இரண்டுமே ஓரளவு உண்மைதான். இந்திய அரசியல் சட்டத்தைப் பற்றிய அறிமுகமோ, அடிப்படை குடியுரிமைகள் பற்றிய புரிதலோ, இந்த நாட்டின் வரலாறோ, அதன் பன்மைத்துவமோ தெரியாத ஒருவர் இங்கு மிகப் பெரிய எழுத்தாளராக மதிக்கப்படுகிறார். மதச் சிறுபாண்மையினர் மீதான காழ்ப்புணர்ச்சி கூட அவரது தனித் திறமையாக மதிக்கப் படுகிறது. இது ஃபாசிசம் அல்லாமல் வேறு என்ன?

தி.மு.கவில் கனிமொழி, சல்மா, தமிழச்சி தங்கபாண்டியன் என பெண் கவிஞர்கள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அ.இ.அ.தி.மு.கவில் நடிகர்கள் இருக்கும் அளவுக்கு இலக்கியவாதிகள் இல்லை. அங்கிருந்த கவிஞர் சினேகனும் நீக்கப்பட்டு விட்டார். காங்கிரஸில் கவிஞர் இந்திரா இருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சியில் எழுத்தாளர் சிவகாமி, கவிஞர்கள் குட்டி ரேவதி, சுகிர்தராணி ஆகியோர் சேர்ந்துள்ளனர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் கலை இலக்கியப் பெருமன்றத்தின் கூட்டங்களில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் பங்கேற்கிறார். மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் சில திங்களுக்கு முன் சென்னையில் மாநில மாநாட்டை நடத்தியுள்ளது. இந்த அமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி இவ்வாண்டின் சாகித்ய அகதமி விருதைப் பெற்றுள்ளார்.

இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் தி.மு.கவைச் சார்ந்தே தன் அரசியல் நிலைப்பாட்டை எடுக்கிறார். தி.மு.க நடத்தும் கவியரங்கத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இடம் பெறுபவர்.

பாட்டாளி மக்கள் கட்சி ‘தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்’ என்ற அமைப்பை தோற்றுவித்துள்ளது. இந்த அமைப்பின் பொறுப்பாளர்களான எழுத்தாளர்கள் இராசேந்திரசோழன், பா. செயப்பிரகாசம் ஆகியோர் தேர்தல் புறக்கணிப்பை தங்கள் கொள்கையாகக் கொண்டவர்கள்.

கவிஞர் லீனா மணிமேகலை படைப்பாளிகளை ஒருங்கிணைத்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, டில்லியை உலுக்கும் போராட்டங்களை நடத்தினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற இடதுசாரி அமைப்பின் ஆதரவாளர்கள் ‘வினவு’ என்ற கூட்டு வலைப்பதிவை நடத்தி வருகின்றனர். இவர்களும் தேர்தலை புறக்கணிப்பவர்கள்தான். இந்துத்துவ சார்பாக சில எழுத்தாளர்கள் எழுதினாலும் அவர்களில் பா.ஜ.க உறுப்பினராகத் தங்களை காட்டிக் கொள்பவர்கள் யாரும் இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.

புதிய முஸ்லிம் அரசியல் கட்சிகளில் மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய மக்கள் கட்சி ஆகியவை தங்கள் இலக்கியப் பிரிவை இன்னும் தொடங்கவில்லை. மனிதநேய மக்கள் கட்சியின் ஹாஜா கனி கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவைத் தமிழன் வலைப்பதிவர்களிடையே பரவலாக அறியப் படுபவர்.

இலக்கியவாதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். தி.மு.கவில் கவிஞர் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். நம் முதலமைச்சர் கலைஞரும் ஓர் இலக்கியவாதிதான். தமிழ் நாட்டில், வரும் மக்களவைத் தேர்தலில் இருந்து தேர்ந்தெடுக்கப் படுபவர்களில் எத்தனை பேர் இலக்கியவாதிகளாக இருப்பர்?

- அருளடியான்

நன்றி : அதிகாலை இணைய நாளிதழ்

பீ.ஜைனுல் ஆபிதீன் தர்ஜமாவில் தவறுகள்! - தொண்டியில் விவாதம்

பீ.ஜைனுல் ஆபிதீன் தர்ஜமாவில் தவறுகள்! - தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்!
by ஹாபிழ். எம்.ஏ. அஹமது ஹசன்
(முன்னால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாயீ)


அல்குர்ஆன் மொழியாக்கம் மற்றும் விரிவுரை என்ற பெயரில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை தகர்க்கும் விஷக்கருத்துக்களை பீ.ஜை திணித்துள்ளார். வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவருடைய தர்ஜமாவில் ஊடுறுவிக் கிடக்கும் ஏராளமான கொடிய தவறுகளை மார்க்க அறிஞர்கள் அடையாளம் காண்பித்து ஆங்காங்கே எச்சரித்து வருகின்றனர்.

இந்த எச்சரிக்கை பொதுமக்களை சென்றடையும் சூழல் உருவாகும் போதெல்லாம் தன் அந்தஸ்துக்கு பங்கம் வந்துவிடக் கூடாது? என்பதற்காக ‘என் தர்ஜமா பற்றி விவாதிக்கத் தயார்’ என்று சவ(ட)ால் விடுவதை தன் வழமையாக்கிக் கொண்டுள்ளார்.

தொண்டியில் நடந்ததென்ன?

தொண்டியில் நிகழ்ந்ததும் இதுபோன்றதே! 11-12-2008 அன்று தொண்டியைச் சார்ந்த முஜீபுர்ரஹ்மான் உமரீ (கேம்ப் விருதுநகர்) பீ.ஜையின் தர்ஜமா தவறுகள் பற்றி தொண்டியில் உரையாற்றினார்.

அடுத்த இரு நாட்களில் ‘தர்ஜமா பற்றி விவாதிக்க பீ.ஜை தயார்’ என்று தொண்டி முழுக்க வால்போஸ்டர் ஒட்டிய பீ.ஜை, அதனைத் தொடர்ந்து வினியோகித்த நோட்டீஸில் முறையே 1) சஹாபாக்களை பின்பற்றுதல் 2) பீ.ஜை தர்ஜமாவில் தவறுகள் 3) ஹிஜ்ரா காலண்டர் 4) முஜீப் ஏன் தடம் புரண்டார் ஆகிய நான்கு தலைப்புகளை விவாதப் பொருளாக்கினார்.

விவாத ஒப்பந்தத்திற்கு ததஜ பிரமுகர்களைத்தான் அனுப்புவேன்! நான் நேரடியாக வரவே முடியாது! என்று தொண்டியைச் சார்ந்த திரிஸ்டார் அப்துல் அஜீஸ் மற்றும் நைனார் காஜா ஆகிய இரு தூதுவர்களின் மூலம் இறுதி அறிவிப்பு செய்து விட்டார்.

ஆனால் 18-12-2008 அன்று பீ. ஜைனுல் ஆபிதீனின் வண்டவாளங்களை தோலுரித்துக் காட்டும் ‘அன்பான வேண்டுகோள்’ என்ற தலைப்பில் முஜீபுர்ரஹ்மான் வெளியிட்ட நோட்டீஸ் பொதுமக்களை சென்றடைந்தது. இதை அறிந்தவுடன் விவாதத்திலிருந்து பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடிக் கொண்டிருந்த பீ. ஜை தன் சொந்த ஊரில் தன் இமேஜ்(?) மேலும் பாழாகி விடக்கூடாது என்ற நிர்பந்தத்தால் இவ்வொப்பந்தத்திற்கு தானே வருவதாக சம்மதித்து(?) நோட்டீஸ் வெளியிட்டார்.

அதில் தான் தர்ஜமாவில் செய்துள்ள தவறுகளை இருட்டடிப்பு செய்வதற்காக முந்தைய நோட்டீஸில் கூறப்பட்ட தலைப்புகளில் சிலதை நீக்கியும் சிலதைப் புதிதாதச் சேர்த்தும் குழப்பியிருந்தார்.

பின்வாங்கும் தந்திரங்கள்!

மேலும் விவாத ஒப்பந்தத்திற்காக இருதரப்பும் இணைந்து முடிவெடுக்க வேண்டிய இடம், காலம் ஆகியவற்றை நியாயமின்றி தானே முடிவு செய்தார். 20-01-2009 செவ்வாய் கிழமை காலை 10 மணிக்கு தனது தொண்டி கட்சி அலுவலகத்தில் (சுலைா மகாலில்) காத்துக் கொண்டிருப்பதாகவும் இதனைத் தவிர வேறு எதனையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் வீர(?) பிரகடனம் செய்திருந்தார். இதன் மூலமாவது இவ்விவாதம் நின்று விடாதா? என்று மனப்பால் குடித்தார்.

இவ்வாறு ஒரு தரப்பாக முடிவெடுப்பது அயோக்கியத்தனம்! என்றும் அதனை அறிவுள்ள எவனும் ஏற்றுக் கொள்ள முடியாது! என்றும் பிறர் விஷயத்தில் இவரே கூறியிருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது.

பீ.ஜையின் ஈனச் செயல்!

இவ்விவாதத்திலிருந்து எப்படியேனும் தப்பிக்கத் திட்டமிட்ட இவர் சுய வாழ்வில் ஒழுக்கக்கேட்டின் உச்சக் கட்டத்தில் இருக்கும் சாதாரண முஸ்லிமுக்குக் கூட மனம் வராத ஈனச் செயலில் ஈடுபட்டார். 21-12-2008 அன்று தொண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முஜீபுர்ர்மானை தீவிரவாத இயக்கத்தோடு தொடர்பு படுத்தும் விதமாக அவதூறு கூறி அவரை பிரச்சனையில் சிக்க வைக்க முயற்சித்தார்.

அந்த அவதூறை நீக்கி எடிட்டிங் செய்யப்பட்டு ‘ததஜ சந்தித்த விவாதங்கள்’ என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு, சீடியாகவும் வெளியிடப்பட்டது. முஜீபுர்ரஹ்மான் தொடர்பாக நீர் கூறியது உண்மையாக இருந்தால், உமக்கு திராணி இருந்தால் எடிட்டிங் செய்யாமல் அந்த சீடியை அப்படியே தாருங்கள்! என்று தொண்டியில் 07-03-2009 அன்று ஊரறிய அறைகூவல் விடுக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அதனைக் கொடுக்காமல் அவர் பொய்யன்! அவதூறு ஆசாமி! என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அவரின் அவதூறுக்கு அஞ்சாமல், ஒருதலைப்பட்சமான அவரின் காலம், இடம் பற்றிய முடிவை முஜீபுர்ரஹ்மான் துணிவுடன் ஏற்றுக் கொண்டார்.

ஒப்புதல் கடிதம் தராது ஓட்டம்!

விவாதத்திலிருந்து பின்வாங்கும் பீ.ஜையின் சூழ்ச்சியை முஜீபுர்ர்மான் நன்கறிந்திருந்ததால் அவருடன் நடைபெறும் விவாதம் அவரது தர்ஜமா மற்றும் விளக்கவுரை பற்றி மட்டும்தான் இருக்க வேண்டும் என்று எழுத்துப் பூர்வமாக பீ.ஜையின் ஒப்புதல் கடிதத்ததை 11-01-2009 மாலை 5 மணிக்குத் தரவேண்டும் என்று ஊரறிய தொண்டியில் நோட்டீஸ் வெளியிட்டிருந்தார்.

குறிப்பிட்ட தேதியில் பீ.ஜையின் தொண்டி கட்சி அலுவலகத்திற்கு முஜீபுர்ரஹ்மானே நேரடியாக சென்றபோது பீ.ஜை ஒப்புதல் கடிதத்தை தர மறுத்தது தெரிய வந்தது. வெற்றிடமாகக் கிடந்த அவரது தொண்டி கட்சி அலுவலகத்தின் முன் நின்று ‘பீ.ஜையின் விவாத பித்தலாட்டங்களைப் பற்றி தெளிவு படுத்தி வீடியோ பதிவு செய்தார். இதை கேள்விப்பட்ட அவரது கட்சித் தொண்டர்கள் தங்கள் தலைவனின் வேஷம் கலைந்து விட்டதே! என்ற பயத்தில் வீடியோ கேமராவை தூக்கிக் கொண்டு இரவு 7 மணிக்கு தொண்டி மேலப்பள்ளிவாசலுக்கு ஓடோடி வந்தனர்.

பீ.ஜை விவாதத்திலிருந்து பின்வாங்கியது முடிவானதற்கு பிறகும் கூட அல்குர்ஆனின் முக்கியத்துவம் கருதி பீ.ஜையின் தர்ஜமா தவறுகள் பற்றி மட்டும் விவாதிக்க ஏற்பாடு செய்ய இரு தரப்பு ஆதரவாளர்களில் சிலர் தங்களிடையே ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

விவாத ஒப்பந்தம்?

அதன் அடிப்படையில் 20-01-2009 அன்று பீ.ஜைக்கும் முஜீபுர்ரஹ்மானுக்கும் இடையே விவாத ஒப்பந்தம் நடைபெற்றது. சில நிமிடங்களில் நடந்து முடிய வேண்டிய ஒப்பந்தம் பீ.ஜையின் பிடிவாதத்தால் காலை 10:15 மணி முதல் துவங்கி மாலை சுமார் 6 மணி வரை நீடித்தது.

இவ்விவாதத்தில் தர்ஜமா மற்றும் விரிவுரை பற்றி மட்டும் விவாதிக்க பீ.ஜை இறுதிவரை ஏற்க மறுத்துவிட்டார். ஒரே விவாதத்தில் பல தலைப்புகளுடன், பல நாட்கள்தான் விவாதம் நடைபெற வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து பல மணி நேரங்களைக் கடத்தினார்.

அல்குர்ஆனின் மகத்துவத்தையும் தனித்துவத்தையும் கருத்தில் கொண்டு தர்ஜமா தவறுகளைப் பற்றி தனித் தலைப்பாக முதலில் விவாதிப்போம். பிற தலைப்புகளை தர்ஜமா பற்றிய விவாதத்திற்குப் பிறகு தனியாக விவாதித்துக் கொள்வோம்! என்று முஜீபுர்ரஹ்மான் தரப்பு கூறியதை பீ.ஜை தொடர்ந்து மறுத்து வந்தார்.

ரோஷத்தை கிளப்பிய திராணி!

நீங்கள் எழுதிய தர்ஜமா பற்றி தனித் தலைப்பாக விவாதிக்க உங்களுக்கு திராணி இல்லையா? ஏன் பயப்படுகிறீர்? என்று முஜீபுர்ர்மான் கேட்டது வீடியோவில் பதிவாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த பீ.ஜை தன் தர்ஜமா தொடர்பான தனி விவாதத்தை நிர்பந்தமாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

எனவே அவரது தர்ஜமா தொடர்பான தனி விவாதம் 29-03-2009 அன்றும் பிற தலைப்புகள் மற்றொரு நாளில் தனி விவாதமாக நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பீ. ஜை கேட்ட வினாத்தாள்!

தர்ஜமா விவாதம் தொடர்பான பீ.ஜையின் சம்மதத்தை பொதுவானவதாகக் கருதி விடாதீர்கள்! அவரது தர்ஜமாக பற்றி முஜீபுர்ர்மான் இதுவரை விமர்சித்தவைகளைப் பற்றி மட்டுமே விவாதப் பொருளாக பீ.ஜை ஏற்றுக் கொண்டார். விரல் விட்டு எண்ணும் சில தவறுகளைப் பற்றி விவாதம் செய்ய ஒப்புக் கொள்ளத்தானா இந்த இரண்டு(?) மாதப் போராட்டம்???!

தான் பல ஆண்டுகளாக எழுதி, 2002ம் வருடம் முதல் 2008 வரை ஏழு பதிப்புகளை பல முறை சரிபார்த்து வெளியிட்டதாகக் கூறும் இவர், இது போன்ற சிறு பிள்ளைத் தனமான நிபந்தனைகளை முன் வைக்க வெட்கப்பட வேண்டாமா?

பேசப்படாத இன்னும் ஏராளமான தவறுகள் உள்ளனவே என்று முஜீபுர்ரஹ்மான் கேட்டதற்கு இப்போதே அந்தப் பட்டியலைத் தந்து விடுங்கள்! அப்போதுதான் நான் பி(?)ரிப்பேர் செய்து கொண்டு வரமுடியும் என்று பீ.ஜை கூறினார்.

தர்ஜமா பற்றி விவாதிக்கத் தயார் என்று ஊரறிய வால்போஸ்டர் ஒட்டிய பீ.ஜையின் பரிதாப நிலை பாரீர்!

முஜீபுர்ர்மானை விவாத்திற்கு அழைத்;து வந்தால் ரூபாய் 5000 பரிசு என்று பொதுமக்களிடம் ஃபிலிம் காட்டிய பீ.ஜையின் இழிநிலை பாரீர்!

இது, மக்கு மாணவன் பரீட்சையில் பாஸாக ஆசிரியரிடம் பரீட்சைக்கு முன்பே வினாத்தாள் கேட்பது போன்றதல்லவா? என்று கூறி பொதுமக்கள் சிரிக்கின்றனர்.

இப்படி இவர் வினாத்தாள் கேட்பது நியாயம் என்றால் 21-12-2008 தொண்டி பொதுக் கூட்டத்தில் முஜீபுர்ரஹ்மானின் முகத்திரையை கிழிக்கப்போவதாக ஆணவத்தோடு எதற்காக கொக்கரித்தார்? தவறுகளின் பட்டியலைத் தாருங்கள்! பரிசீலிக்கிறேன் என்று பணிவுடன் கூறி தனக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பை(?) தக்க வைத்திருக்கலாமே! அந்தோ பரிதாபம்!

அந்த வினாத்தாள் பட்டியலை கொடுக்காவிட்டால் அதையே காரணம் காட்டி பீ.ஜை தப்பிவிடுவார் என்பதை உணர்ந்த முஜீபுர்ர்மான் பீ.ஜை கேட்ட பட்டியலை தரவும் சம்மதித்தார்.

பீ.ஜை தர்ஜமாவின் 399 விளக்கக் குறிப்புகளில் வெறும் 28 விளக்கக் குறிப்புகளையும் தர்ஜமாவில் காணப்படும் மொழியாக்கப் பிழைகள், தொகுக்கப்பட்ட வரலாறு, இம்மொழிபெயர்ப்பு பற்றி. . . ஆகிய தலைப்புகளைக் கொண்ட பட்டியலை 03-02-2009 அன்று ஒப்படைத்தார்.

இரு தரப்பினரும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்திற்கிணங்க முஜீபுர்ர்மான் மேற்கண்ட பட்டியலை ஒப்படைத்த பிறகும் கூட, அதிலும் மேலதிக விபரங்கள் கேட்டு, பீ.ஜை அங்கலாய்ப்பது மீண்டும் விவாதத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

‘ஏகத்துவம்’ மாத இதழின் தில்லுமுல்லு!

இந்த விவாத ஒப்பந்தத்தின் நிகழ்வுகள் இவ்வாறு இருக்க மார்ச் 2009 ‘ஏகத்துவம்’ மாத இதழில் ‘தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்’ என்ற தலைப்பில் வழமை போல பல தில்லுமுல்லுகளை அரங்கேற்றியுள்ளனர்.

பீஜைனுல் ஆபிதீனின் மூன் பப்ளிகேஷன் மூலமாக வெளியிட்டுள்ள, அவரது தர்ஜமா தொடர்பான விவாத ஒப்பந்தத்தை ததஜவுக்கும் முஜீபுர்ர்மானுக்கும் நடந்ததாக சித்தரித்து பீ ஜையை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். இதன் நன்றிக் கடனாக, தர்ஜமா வியாபாரத்தில் பீ.ஜைக்கு கிடைக்கும் இலாபத்தில் துன்பத்தில் கைகொடுக்கும் தன் தொண்டர்களை இணைத்துக் கொள்வாரா?!

இவர்களின் சல்லித்தனத்தை இவர்களின் உயிர் நண்பர்களே மேடை போட்டு உலகறிய முழங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவர்கள் பிறரைப் பார்த்து சல்லிக் காசுக்காக செயல் படுபவர்கள் என்று குற்றம் சாட்டுவது கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்து கல்லெறிவதற்குச் சமமல்லவா?

வேதம் ஓதும் சாத்தான்கள்!

இந்தப் புல்லுறுவிகள் தங்களின் அயோக்கியத் தனங்களை மறைப்பதற்காக கட்டுரையின் துவக்கத்திலும் இறுதியிலும் அல்குர்ஆனின் சில வசனங்களை எழுதி மார்க்கச் சாயம் பூசிக் கொள்கின்றனர். வேதம் ஓதும் சாத்தான்கள் இவர்கள் தானோ?!

விவாதத்திற்கு முன்னரே இவ்வாறு திசை திருப்புவோர் விவாதத்தின் போதும் அதற்குப் பிறகும் என்னென்ன நரித்தனங்களை அரங்கேற்றப்போகிறார்களோ?

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கிணங்க, இவர்களின் போலித்தனங்களை அறிந்து கொள்ளும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அல்ம்துலில்லாஹ்!

பலரை சிலகாலம் ஏமாற்றலாம்; சிலரை பலகாலம் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது என்பதை பீ.ஜையும் அவரது ஆதரவாளர்களும் உணர்வது எப்போது?

பொதுமக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! பிறர் பற்றி இவர்கள் கூறும் எந்த தகவல்களையும் உரிய முறையில் தீர விசாரிக்கமால் தயவு செய்து நம்பி ஏமாறாதீர்கள்!

சத்தியம் நிலை நாட்டப்படவும் இந்தப் போலிகள் முழுமையாக அடையாளம் காட்டப்படவும் அல்லாஹ்விடத்தில் துஆ செய்யுங்கள்!

- அல்லாஹ் போதுமானவன் -

(மார்ச் 2009 ஏகத்துவம் மாத இதழில் ‘தொண்டியில் ஒரு விவாத ஒப்பந்தம்’ என்ற தலைப்பில் தவறான பல தகவல்களை பதிய வைத்ததே இதனை நான் எழுதி வெளியிடுவதற்குக் காரணம்!)

நன்றி : இஸ்லாம் கல்வி

Friday, February 13, 2009

காதலர் தினம்-VALENTINE’S DAY-عيد الحب

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

காதலர் தினம்
தமிழாக்கம் - சகோ.அபு இஸாரா

சமீப காலமாக பொதுமக்ள் மத்தியில் பரவிவரும் காதலர் தினம் பற்றி அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்களிடம் கீழ்க்கண்டவாறு வினவப்பட்டது:

இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக...

சமீப காலமாக காதலர் தினம் கொண்டாடி மகிழ்வது பொதுமக்கள் மத்தியில் குறிப்பாக மாணவிகள் மத்தியில் மிக வேகமாக பரவி வருகின்றது. காலணி முதல் தலையணி வரை முற்றிலும் சிகப்பு நிறத்தால் ஆன ஆடைகளை அணிந்து, இந்நிகழ்ச்சியை ஒரு பண்டிகையாக கொண்டாடும் கிருத்துவர்கள், தங்களுக்கிடையே சிகப்பு நிற மலர் கொத்துக்களையும் பறிமாறிக் கொள்கின்றனர். இது போன்ற நிகழ்ச்சிகளை முஸ்லிம்கள் கொண்டாடுவது, அல்லது இது போன்ற நிகழச்சிகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது பற்றி முஸ்லிம்களுக்கு தாங்கள் கூறும் அறிவுரை...!


அறிஞர் இப்னு உதைமீன் (ரஹ்) அவர்கள் அளித்த விளக்கம்:

உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...

காதலர் தினம் என்ற நிகழ்ச்சியை கொண்டாடுவதற்கோ அல்லது அதுபோண்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கோ கீழக்கண்ட காரணங்களால் இஸ்லாத்தில் ஒருபோதும் அனுமதியில்லை.

1. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத ஒரு (பித்அத்) புதினமாகும்.

2. காதலர் தினம் போன்ற நிகழ்ச்சிகள் இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்காத தவறான வழிகளில் ஒருவாகும் காதல் மற்றும் தீய பழக்கங்க ஊக்குவிக்கின்றது.

3.இதுபோன்ற நிகழச்சிகள் இளைஞர்கள் மற்றும் இளைஞி
கள் மனதில் தவறான எண்ணங்களை உருவாக்குவதோடு, நபிவழிக்கு முற்றிலும் முரணாணதாகும்.


காதலர் தினம் போன்ற நாட்களில் உணவோ, உடையோ அல்லது குடிபானங்களோ எதுவாக இருந்தாலும் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு மாற்றமாக இருக்குமாயின் அதுபோன்ற நிகழ்வுகளிலிருந்து முற்றிலும் விலகி இருப்பதே உண்மையான முஃமினுக்கு உகந்ததாகும்.

நெறிமுறையின்றி எல்லாவற்றையும் பின்பற்றுவோம் என்ற நிலையில் இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், நெறியுடன் வாழும் முறைகளை மற்றுமே பின்பற்றுவோம் என்ற கொள்கையை உறுதியோடு செயல்படுத்தும் இஸ்லாமிய மார்க்கத்தை சார்ந்தவராக இருப்பதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் பெருமிதம் கொள்ள வேண்டும். தெரிந்தோ அல்லது தெறியாமலோ இருக்கின்ற இதுபோன்ற (பித்அத்) புதினமான காரியங்களில் ஈடுபடுவதில் இருந்தும் நம்மை காப்பாற்றி, நேர்வழி காட்ட போதுமானவன் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனே.


عيد الحب

فضيلة الشيخ محمد بن صالح العثيمين حفظه الله
السلام عليكم ورحمة الله وبركاته وبعد
فقد انتشر في الآونة الأخيرة الاحتفال بعيد الحب ــ خاصة بين الطالبات ــ وهو عيد من أعياد النصارى ، ويكون الزي كاملاً باللون الأحمر الملبس والحذاء ويتبادلن الزهور الحمراء ..00
نأمل من فضيلتكم بيان حكم الاحتفال بمثل هذا العيد ، وما توجيهكم للمسلمين في مثل هذه الأمور والله يحفظكم ويرعاكم
بسم الله الرحمن الرحيم

ج / وعليكم السلام ورحمة الله وبركاته
.الاحتفال بعيد الحب لا يجوز لوجوه :
الأول : أنه عيد بدعي لا أساس له في الشريعة .
الثاني : أنه يدعو إلى العشق والغرام
الثالث: أنه يدعو إلي اشتغال القلب بمثل هذه الأمور التافهة المخالفة لهدي السلف الصالح رضي الله عنهم
.فــلا يــحـل أن يحدث في هذا اليوم شيء من شعائر العيد سواء كان في المآكل أو المشارب أو الملابس أو التهادي أو غير ذلك وعلى المسلم أن يكون عزيز بدينه ولا يكون إمَّــعَــةً يتبع كل ناعق . أسأل الله تعالى أن يعيذ المسلمين من كل الفتن ما ظهر منها وما بطن وأن يتولانا بتوليه وتوفيقه .

كتبه
محمد الصالح العثيمين
في 5/11/1420هـالتوقيع


VALENTINE’S DAY

Shaykh Ibn Uthaymeen (may Allah have mercy on him) was asked:

Assalamu Alaikum Wa Rahmathullahi Wa Barakathuhu…

In recent times the celebration of Valentine’s Day has become wide spread, especially among female students. It is a Christian festival where people dress completely in red, including clothes and shoes , and they exchange red flowers. We hope that you can explain the ruling on celebrating this festival, and what your advice is to Muslims with regard to such matters; may Allah bless you and take care of you.

He replied :

Wa Alaikum Salam Wa Rahmathullahi Wa Barakathuhu…

Celebrating Valentine’s Day is not permissible for a number of reasons.

1. It is an innovated festival for which there is no basis on Islam.

2. It promotes Love and Infatuation.

3. It calls for hearts to be preoccupied with foolish matters that are contrary to the way of the righteous (may Allah be pleased with them).

It is not permissible on this day to do any of the things that are the characteristic of this festival, whether that has to do with food, drinks, clothing exchanging gifts or anything else.
The Muslim should be proud of his religion and should not be a weak character who follows every Tom, Dick and Harry. I ask Allah to protect the Muslims from all temptations, visible and invisible, and to protect us and guide us.

வெளியீடு : அல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம்
Thanks to : Islamic Call & Guidence Centre - Al Khobar,Saudi Arabia Tel. +96638655557

Thursday, January 15, 2009

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!

தமிழகமெங்கும் உழவர் திருநாளை முன்னிட்டு இந்திய தேசிய மக்கள் கட்சியினரால் ஒட்டப்பட்டிருந்த வாழ்த்து சுவரொட்டி.

ஓர் இறை ஓர் குலம்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

சில்லறைக் கூட்டங்களின் திரநாள் அல்ல !
புழுதியின் புத்திரர்களின் பெருநாள் !!
உலகத்தை சுமக்கும் உலவனின் திருநாள்!
இத்திருநாளில் எல்லோரும் எல்லா வளமும்
பெற்று வாழ பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்..

இவன்
இந்திய தேசிய மக்கள் கட்சி
மாநில விவசாய அணி
செல் : 9443021050 - 9894262100 - 9344510369

Thursday, December 18, 2008

புஷ்ஷுக்கு செருப்படி - தமிழகத்தில் கொண்டாட்டம் - புகைப்படங்கள் !


கொண்டாடுவோம்! இது வீரத்தின் திருநாள்.
ஒரு வெடிகுண்டுத் தாக்குதலை விடவும்
தற்கொலைப்படைத் தாக்குதலை விடவும்
வலிமையானது இந்தத்தாக்குதல்.
வீரம் செறிந்தது இந்த நடவடிக்கை.
மாவீரன் ஸய்தி !
முன்தாதர் அல் ஸய்தி - உண்மையிலேயே ஒரு மாவீரன்தான்.



அமெரிக்க வல்லரசின் இராணுவம்,
அதன் உளவுத்துறைகள்,
அதிபரின் சிறப்புப் பாதுகாப்புப் படைகள்..‏

இவர்களெல்லாம் மூடர்கள் என்றோ முன்யோசனை அற்றவர்கள் என்றோ நாம் சொல்லிவிட முடியாது. அமெரிக்க சிப்பாய்களின் பாதுகாப்பை உத்திரவாதம் செய்யும் பொருட்டு, சமீபத்தில் இராக்கில் குழந்தைகளுக்கான பொம்மைத் துப்பாக்கிகளின் விற்பனையைக் கூடத் தடை செய்திருக்கிறது அமெரிக்க இராணுவம்.

நான்கு ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் இராக்கை சலித்து விட்டது. கொத்துக் குண்டுகள் முதல் அபு கிரைப் வரையிலான எல்லா வழிமுறைகள் மூலமும் இராக்கைக் குதறிவிட்டது. ஷியா, சன்னி, குர்து.. என எல்லா விதமான பிரிவினைகளையும் பயன்படுத்தி இராக் மக்களைத் துண்டாடி விட்டது. பொம்மை ஆட்சியை அமைத்து துரோக பரம்பரையையும் தோற்றுவித்து விட்டது..

‏‏இருப்பினும் “பலான தேதியில் பலான இடத்துக்கு அமெரிக்க அதிபர் வருகிறார்” என்று முன்கூட்டியே அறிவிக்கும் துணிவு அமெரிக்க அரசுக்கு இல்லை. ஊரடங்கிய பின்னிரவு நேரத்தில், வைப்பாட்டி வீட்டுக்கு விஜயம் செய்யும் நாட்டாமையைப் போல பாக்தாத் நகரில் புஷ்ஷை இறக்கியது அமெரிக்க உளவுத்துறை.

அவர் இராக் மக்களிடம் விடை பெறுவதற்கு வந்தாராம்!
2004 ஆம் ஆண்டு இராக்கில் புஷ்ஷின் படைகள் ஆரவாரமாக நுழைந்த அந்த நாளை உலகமே அறிந்திருந்தது. விடை பெறும் நாளோ, இராக் மக்களுக்கே இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.‏‏

இரகசியமான இந்த விடையாற்றி வைபவத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு பலமாக இருந்திருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. ஒரு கூழாங்கல், ஒரு அழுகிய முட்டை, ஒரு தக்காளி எதையும் அந்தப் பத்திரிகையாளர் கூட்டத்தின் அரங்கினுள் ஸய்தி எடுத்துச் சென்றிருக்க முடியாது. இப்படியொரு ஆயுதத்தை ஒரு மனிதன் அணிந்து வரமுடியும் என்று அமெரிக்க உளவுத்துறை எதிர்பார்த்திருக்கவும் முடியாது.
எப்பேர்ப்பட்ட கவித்துவம் பொருந்திய தாக்குதல்! புஷ் கொல்லப்படவில்லை. காயம்படவுமில்லை. செருப்படிக்குத் தப்பி ஒதுங்கி சமாளித்து அந்த மானக்கேடான சூழ்நிலையிலும் மீசையில் மண் ஒட்டியது தெரியாத மாதிரி, அப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அமெரிக்கப் பெருமிதம் அடி வாங்காத மாதிரி, கம்பீரமான அசட்டுச் சிரிப்பின் பல வகைகளை நமக்குக் காட்டுகிறார் புஷ்.

சொற்களே தேவைப்படாத படிமங்களாக நம் கண் முன் விரிந்த அந்தக் காட்சி 4 ஆண்டுகளாக இராக்கில் அமெரிக்கா வாங்கி வரும் செருப்படிகள், அதன் அவமானங்கள், அதன் சமாளிப்புகள்.. அனைத்துக்கும் பொழிப்புரை வழங்குகிறது.

நான்காண்டு செருப்படிகளை உள்ளடக்கிய ஒரு செருப்படி. நான்காண்டு விடுதலைப்போருக்குப் பொருத்தமான ஒரு விடையாற்றி. எப்பேர்ப்பட்ட கவித்துவமிக்க காட்சி!

சதாம் தூக்கிலேற்றப்பட்ட காட்சியுடன் இதனை ஒப்பிட்டுப் பாருங்கள். அதுவரை தன்னை ஆதரித்திராத உலக மக்கள் பலரின் அனுதாபத்தையும் மரியாதையையும் அன்று சதாம் பெறமுடிந்தது. அநீதியான அந்தத் தண்டனைக்கு எதிராக அன்று உலகமே ஆர்த்தெழுந்தது.

ஆனால் அதிபர் புஷ்ஷுக்கு விழும் இந்தச் செருப்படி சொந்த நாட்டு மக்களின் அனுதாபத்தைக்கூட அவருக்குப் பெற்றுத்தரவில்லை. அமெரிக்காவின் அதிகாரத் துப்பாக்கியின் நிழலிலேயே அதன் அதிபர் அம்மணமாக நிற்பதைக் கண்டு அமெரிக்க மக்களே விலா நோகச் சிரிக்கிறார்கள்.

“இந்திய மக்கள் உங்களை நேசிக்கிறார்கள்” என்று சில மாதங்கள் முன் புஷ்ஷிடம் வாலைக்குழைத்தாரே மன்மோகன் சிங், அந்த புஷ்ஷுக்கு விழுந்த செருப்படியை அதே இந்திய மக்கள் ரசிக்கிறார்கள். செய்தி கேளவிப்பட்ட மறுகணமே பட்டாசு வெடித்து, மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து கொண்டாடியிருக்கிறார்கள் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள். நாமும் கொண்டாடுவோம்.

இரட்டைக் கோபுரத் தாக்குதலை விடவும் கம்பீரமானது இந்த இரட்டைச் செருப்புத் தாக்குதல். சுதந்திரம் என்ற சொல்லை மனித குலத்துக்கு வழங்கிய மெசபடோமிய நாகரீகம், அந்தச் சுதந்திரத்தின் சின்னமாக மாவீரன் ஸெய்தியை உலக மக்களுக்கும், ஒரு ஜோடி செருப்புகளை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் வழங்கியிருக்கிறது.

ஒரு வகையில் இந்தக் காலணிகள் புனிதமானவை

Thanks : VINAVU

Wednesday, December 03, 2008

உலக ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 03

உலக ஊனமுற்றோர் தினம் டிசம்பர் 03, 2008

கருத்தரங்கில் உரையாற்றுகின்றார் மா. காமராசர் அவர்கள் அமர்திருப்பது இடமிருந்து, திரு. நாகேஸ்வரன், திரு. முகவைத்தமிழன், திரு. நூர் அ.தி.மு.க, திரு. குத்புதீன் ஐபக் ஆகியோர்.


டிசம்பர் 03, இராமநாதபுரத்தில் உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் கருத்தரங்கம், பேரணி மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக இந்த நிகழச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கனக்கான உடல் ஊனமுற்றோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிகள் முதலில் இராமநாதபுரம் மத்திய பேரூந்து நிலையத்தின் எதிர்புரம் அமைந்துள்ள "வளர்ச்சித்துறை திருமன மஹாலில்" ஆரம்பமாகியது.




திரு. முகவைத்தமிழன் அவர்கள் ஒரு உடல் ஊனமுற்ற பென்னிற்கு உணவை வழங்கி துவக்கி வைக்கின்றார் அருகில் திரு. நூர், முன்னாள் அ.தி.மு.க பஞ்சாயத்து தலைவர், திரு. குத்புதீன் ஐபக் இ.தே.ம.க


நிகழ்ச்சி சரியாக காலை 10.0 0 மனியளவில் துவங்கியது. ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் அமைப்பாளர் திரு. மா. காமராசர் தலைமை தாங்கினார். திரு. நாகசாமி அவர்கள் உதயம் ஊனமுற்றோர் சங்கம், மன்டபம் ஒன்றியம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். மெர்சி அறக்கட்டளை - திருவன்னாமலை திரு. ச. செழியன் M.A., M.phil அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.


திரு. டி.ஆர் சந்திரன், ஆலோசகர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. டி. இராதாகிருஷ்னன் அவர்கள், ஆசிரியர் , அரசு மேல்நிலைப்பள்ளி ரெகுநாதபுரம், திரு. மகாலிங்கம் அவர்கள், ஊனமுற்றோர் சங்கம், இராமேஸ்வரம், திரு. ஜி. தமிழரசு அவர்கள் செயலாளர், உதயம் ஊனமுற்றோர் சங்கம், மன்டபம் ஒன்றியம், திரு. காதர் அவர்கள் செயற்குழு உறுப்பினர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. மு.த. முருகேசு அவர்கள், நிறுவனர் அசுரா தொண்டு நிறுவனம், திரு. பா. மனோஜ்குமார் அவர்கள் அன்னை ஊனமுற்றோர் சங்கம், பாம்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


ஆயிரக்கணக்கான ஊனமுற்றோர் பங்கேற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட ஊனமுற்ற பென்கள் கூட்டத்தின் ஒரு பகுதி


பின்னர் இந்நிகழச்சியில் கலந்து கொள்ள மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கனக்கானோர் வந்திரந்தனர் அவர்களில் வெளியூர்களில் இருந்து வந்திருந்த 500 க்கும் மேற்ப்பட்ட உடல் ஊனமுற்ற சகோதர, சகோதரிகளுக்கு இராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM) மூலமாக மதிய உணவு வழங்கப்பட்டது. இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் திரு. நூர் ஆகியோர் இராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM) சார்பாக உணவு பொருட்களை ஊனமுற்றோருக்கு வழங்கினர். பின்னர் கருத்தரங்கின் இறுதியில் திரு. டி. ஆரோக்கியராஜ் திட்ட ஒருங்கினைப்பாளர், இர்வோ தொண்டு நிறுவனம் நன்றியுரை வழங்கினார்.

பின்னர் உலக ஊனமுற்றோர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பேரணி நடந்தது இப்பேரணியை மாவட்ட காவல்துறை துனை ஆனையர் (DSP) திரு. மா. மோகன் துரைச்சாமி I.P.S அவர்கள் துவக்கி வைத்தார்கள் இராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் அருகிலிருந்து துவங்கிய பேரணி இறுதியாக ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் பொதுச்செயளாலர் திரு. எச்.அப்துல் நஜ்முதீன், பரமக்குடி அவர்கள் முடித்து வைக்க இராமநாதபுரம் அரன்மனை அருகே முடிவுக்கு வந்தது. இப்பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட உடல் ஊணமுற்ற ஆன்களும் பென்களும் திரளாக பங்கேற்றனர்.

இராமநாதபுரம் அரன்மனை முன்பாக உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தின் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திரு. கே.ஜி சிவலிங்கம் அவர்கள் , தலைவர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் தலைமை தாங்கினார். திரு. வேல்முருகன் செயளாலர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. முருகானந்தம், து.செயளாலர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம், திரு. ஜலாலுதீன் அவர்கள், ஊனமுற்றோர் இயக்கம், தேவிபட்டினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரு. சோலை முருகன் அவர்கள், செயற்குழு உறுப்பினர், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் வரவேற்புரை வழங்கினார்.


பொதுக்கூட்ட மேடையில் தலைவர்கள், இடமிருந்து திரு. முகவைத்தமிழன், IDMK, திரு குத்புதீன் ஐபக், IDMK, திரு. நாகேஸ்வரன், தமிழ் பாதுகாப்பு பேரவை, திரு. ரவிச்சந்திர ராமவன்னி, இந்திய தேசிய காங்கிரஸ், திரு. அப்துல் நஜ்முதீன் ஆகியோர்


முகவை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு. ரவிச்சந்திர ராமவன்னி அவர்கள், தலைவர், மாவட்ட பஞ்சாயத்து இராமநாதபுரம்,, திரு. டி.ஆர் சந்திரன் அவர்கள், இர்வோ தொண்டு நிறுவனம், திரு. குத்புதீன் ஐபக், தலைவர், இந்திய தேசிய மக்கள் கட்சி, திரு. நாகேஸ்வரன் அவர்கள், மனித நேய காப்பகம், இராமநாதபுரம் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.

திரு. எம்.பி. தில்லைபாக்கியம் அவர்கள், ஊனமுற்றோர் சங்கம், இராமேஸ்வரம், திரு. அடைக்கலம் அவர்கள், அன்னை ஊனமுற்றோர் சங்கம், பாம்பன், திரு. ஆதித்யா சேக்கிழார் அவர்கள், மாற்று அமைப்பு, இராமநாதபுரம், திரு. முகவைத்தமிழன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சி, திருமதி. எஸ். புனிதா அவர்கள், மாவட்ட அமைப்பாளர், தேசிய கடலோர பென்கள் இயக்கம், இராமநாதபுரம் மபவட்டம், திரு. ஜஹாங்கீர் அவர்கள், மாவட்ட செயளாலர், இந்திய தேசிய மக்கள் கட்சி, திரு. டி. ஆரோக்கியராஜ் அவர்கள், இர்வோ தொண்டு நிறுவனம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்த கூட்டத்தின் ஒருபகுதி


பின்னர் திரு. மா. காமராசர் அவர்கள், அமைப்பாளர், ஊனமுற்றோர் உரிமை இயக்கம் ஏற்புரை வழங்கினார், இறுதியில் கீழக்கண்ட கோரிக்ககைள் அரசுக்கு வைக்கப்பட்டன.

1. மாநிலம் மாவடடத்தில் அனைத்து அரசு மற்றும் பொது இடங்களில் ஊனமுற்றோருக்காக தடையில்லா சூழலை ஏற்ப்படுத்த வேண்டும்.


2. மாவட்ட அளவில் ஊனமுற்றோர் குறைதீர்ப்புநாள் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட வேண்டும்.


3. ஊனமுற்றோர் பாதுகாப்பு சிறப்பு சட்டம் 1995, பிரிவு 43ல் குறிப்பிட்டுள்ளபடி ஊனமுற்ற நபர் குடும்பத் தைலைவராக இருக்கும் நிலையில் அவர்களுக்கு இருப்பிடத்தை உண்டாக்கும் பொருட்டு அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.


4. மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்வேறு துறைகளின் வாயிலாக நடைமுறையில் உள்ள சுய தொழில் கடனுதவி திட்டங்களான, பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டங்களை வழங்க வேண்டும்.


5. ஆதி திராவிட வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (THADCO) வாயிலாக ஊனமுற்றோருக்கு கடனுதவி வழங்க வேண்டும்.


6. பாரதப் பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் உரிய பிரதிநிதித்துவம் ஊனமுற்றோருக்கு வழங்க வேண்டும்.


7. டவுன் பஞ்சாயத்து மூலம் வழங்கப்படுகின்ற SGSRY உதவிகள் கிடைக்க செய்ய வேண்டும்.


8. மற்றுமுள்ள அனைத்து திட்டங்களிலும் அரசு உத்தரவின்படி உடல் ஊனமுற்றோருக்கு 3 சதவிகிதம் கிடைக்க செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுருத்தப்பட்டன.


நிகழச்சியின் இறுதியில் திரு. பூமி கனேசன் அவர்கள், இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் நன்றியுரை வழங்க பொதுக்கூட்டம் இனிதே முடிவுற்றது. இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை இராமநாதபுரம் மாவட்டம் ஊனமுற்றோர் உரிமை இயக்கம் செய்திருந்தது.

ஊனமுற்றோர் உரிமை இயக்கத்தில் இணையவோ அல்லது உதவி செய்யவோ விரும்புவோர் தொடர்புக்கு :

பொது தொடர்பாளர் திரு. மா. காமராசர். அலைபேசி எண் : 9842367354 , 9994539480
திரு. எச். அப்துல் நஜ்முதீன் துனைத் தலைவர். அலைபேசி எண் : 9842388428


இராமநாதபுரம் மனிதநேய காப்பாகம் (MUGAVAI ASYLUM)

திரு. நாகேஸ்வரன் அவர்கள். அலைபேசி எண் : 9786960608

Monday, December 01, 2008

நாங்களும் இந்துக்களே!! - இந்தியா எங்கள் தாய் நாடு!! இஸ்லாம் எங்கள் வழிபாடு!!

நாங்களும் இந்துக்களே!!
இந்தியா எங்கள் தாய் நாடு!! இஸ்லாம் எங்கள் வழிபாடு!!

முஸ்லிம்களாகிய நாங்கள் யார்?

முஸ்லிம்களாகிய நாங்கள், இந்தியத் திருநாட்டில், இந்திய நாட்டவருக்குப் பிறந்த இந்தியராகிய நாங்கள் இஸ்லாத்தை எங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எம் இந்திய திருநாட்டிற்காக அன்றைய தேசவிடுதலைப் போராட்டத்திலிருந்து நேற்றைய கார்க்கில் யுத்தம் வரை எங்களின் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிர்தியாகம் செய்துள்ளோம். நாங்கள் இந்தியராக இங்குதான் பிறந்தோம் இங்குதான் வாழ்கிறோம் இங்குதான் செத்ததுமடிவோம் என்ற இலட்சியத்தில் இருக்கிறோம். நமது நாடு என்று வரும்போது இங்குள்ள ஒரு பிடி மண்ணையும் எவருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

முஸ்லிம்களாகிய எங்களைப் பார்த்து நீ இஸ்லாமியனா? அல்லது இந்தியனா? என்று வினவுவது உனக்கு அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா? என்று கேட்பதற்குச் சமம். அடிப்படையில் இப்படி கேட்பதே முரண்பாடானது. ஏனெனில் முஸ்லிமா என்ற கேள்வி ஒருவரின் மதநம்பிக்கையை பற்றி வினவுவது. இந்தியனா என்ற இரண்டாவது கேள்வி அவரின் தேசத்தைக்குறித்து வினவுவது. எனவே 'இந்திய முஸ்லீம்களா' அல்லது 'முஸ்லிம் இந்தியர்களா என்ற கேள்வியே அர்தமற்றது.

இந்தக் கேள்விக்கு ஒருபடி மேலாக பதில் சொல்கிறோம். அது, பூலோக விதியின் படி இந்துக்கள் என்னும் சொல் 'இந்துச் சமவெளியில் வாழும் மக்கள்' என்பதைக் குறிக்கும். படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை கடவுளாகவும், நபிகள் நாயகத்தை இறைவனின் தூதராகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும் ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் இந்துச் சமவெளியில் வாழுகின்ற காரணத்தால் பூலோக விதியின்படி மட்டும் நாங்களும் இந்துக்களே என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறோம்.

ஆனாலும் நம்நாட்டு இராணுவ ரகசியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பார்ப்பன கும்பலால் வகுக்கப்பட்ட இந்துமத தத்துவங்கள் பகுத்தறிவிற்கும், உண்மைக்கும், நீதிக்கும், தர்மத்திற்கும் எதிராக
இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

கடந்த (10-08-2007) தினமணியில் 'முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது' என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது அதற்கு "இஸ்லாமிய இணையப் பேரவை" தக்க பதில் அளித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது அந்த கட்டுரையில் இருந்து.....முழு கட்டுரையையும் வாசிக்க இங்கு சொடுக்கவும்.

THANKS : WWW.IIPONLINE.ORG