Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, April 12, 2009

பா.ஜ.,வுடன் கூட்டணி* கார்த்திக் தகவல்

பா.ஜ.,வுடன் கூட்டணி* கார்த்திக் தகவல்





மதுரை : லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.,வுடன் அ.இ.நா.ம.க., (அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி) கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர் கார்த்திக் தெரிவித்தார்.


மதுரையில் அவர் கூறியதாவது:தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் கட்சி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திருப்பூர், நீலகிரி தொகுதிகளில் ஏதாவது ஏழு தொகுதிகளில் போட்டியிடும்.பா.ஜ., 10க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடலாம். இக்கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் வாய்ப்புகள் உள்ளன. கூட்டணி இல்லாத இடங்களில் கட்சியின் மாவட்ட செயலர்கள் எந்த கட்சிக்கு ஓட்டளிப்பது என அறிவிப்பார்கள். இந்த லோக்சபா தேர்தலுடன் இக்கூட்டணி முடிந்துவிடும்.இவ்வாறு கார்த்திக் கூறினார்.

நன்றி : தினமலர்



சென்னையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

Saturday, April 11, 2009

அரசியல் ஹராமா? (VIDEO)

"அரசியல் ஹராமா?"

அஷ்ஷேய்க். நாசர் அலிகான் அவர்கள்

Al-Sheikh. Nasar Al Khan


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். நாசர் அலி கான் அவர்கள்

Monday, January 19, 2009

வெளிநாட்டு அமைப்புகளை இந்தியாவில் தடை செய்யலாமா? - நீதிபதி கேள்வி- சீமான் விடுதலை

சீமான், கொளத்தூர் மணிக்கு ஜாமீன் - ஐகோர்ட்
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர்காலனி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக திரைப்பட டைரக்டர் சீமான், பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி, கூட்டம் ஏற்பாடு செய்த தமிழ் தேச பொதுவுடைமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதைத்தொடர்ந்து தேனி மாவட்டம் தேவநாயக்கன்பட்டி பகுதியில் படப்பிடிப்பில் இருந்த டைரக்டர் சீமான், மேட்டூரில் வீட்டில் இருந்த கொளத்தூர் மணி, சென்னையில் இருந்த மணியரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள்.

கைது செய்யப்பட்ட டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் ஈரோடு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்கள். 3 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு அசோகன் உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் சார்பில் வக்கீல் பா.பா.மோகன் ஈரோடு மாஜிஸ்திரேட்டு 1 வது கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோருக்கு ஜாமீன் கேட்டிருந்தார்.

சீமான் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கண்டன ஊர்வலங்கள் போன்ற செயல்களில் ஈடுபடுவதால் சீமானுக்கு ஜாமீன் கிடைக்குமா என்று அவருடைய ஆதரவாலர்கள் வருத்தத்துடன் இருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் ஜாமீன் கேட்டு மூவரும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Monday, November 17, 2008

இயக்குனர் அமீர் உடன் சந்திப்பு


இடமிருந்து திரு. ஜஹாங்கீர், திரு. பக்ருதீன், திரு. அமீர், திரு. குத்புதீன் ஐபக்

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும், இந்திய குடிமக்களான 500 க்கும் மேறப்பட்ட தமிழ் மீனவர்கள் சிங்கள் இன வெறி கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டும் வாய்மூடி மெளனம் காக்கும் தன்மானம் இல்லாத இந்திய அரசை கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுத்து இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாத இலங்கை இரானுவத்தை தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைக்கு ஆயுதம் வழங்குவதை இந்திய அரசு நிறுத்கத் கோரியும் இராமேஸ்வரத்தில் நடந்த பேரனியில் ஆக்ரோச உரை நிகழ்த்திய காரனத்திற்காக பொய் வழக்குகள் புனையப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது பினையில் உள்ள இனமானத் தமிழன், தமிழ் இனப் போராளி பிரபல இயககுனர் திரு. அமீர் அவர்களை இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர் திரு. ஜஹாங்கிர், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் டாக்டர். பக்ருதீன் B.H.M.S ஆகியோர் நேற்று மதுரையில் சந்தித்தனர்.

இஸ்லாமிய பத்திரிகையான சமரசத்தில் இயக்குனர் அமீர் அவர்களின் பேட்டியின் மூலம் வெளியான சமுதாய அக்கரையை அனைவரும் அறிவர். இவ்வாறு பல இஸ்லாமிய அறிவு ஜீவிகளின் பாராட்டுதலை பெற்ற சிந்தனையாளர் திரு. அமீர் அவர்களுடன் டாக்டர். பக்ருதீன் B.H.M.S, திரு. முகவைத்தமிழன், திரு. குத்புதீன் ஐபக் ஆகியோர் தற்போது ஊடகத்துரைகளில் நமது சமுதாயத்தின் நிலை குறித்தும் இதை எவ்வாறு மாற்றி அமைப்பது என்றும் இன்னும் சமுதாயத்தை எப்படி ஒற்றுமைப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.