Monday, November 17, 2008

இயக்குனர் அமீர் உடன் சந்திப்பு


இடமிருந்து திரு. ஜஹாங்கீர், திரு. பக்ருதீன், திரு. அமீர், திரு. குத்புதீன் ஐபக்

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும், இந்திய குடிமக்களான 500 க்கும் மேறப்பட்ட தமிழ் மீனவர்கள் சிங்கள் இன வெறி கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டும் வாய்மூடி மெளனம் காக்கும் தன்மானம் இல்லாத இந்திய அரசை கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுத்து இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாத இலங்கை இரானுவத்தை தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைக்கு ஆயுதம் வழங்குவதை இந்திய அரசு நிறுத்கத் கோரியும் இராமேஸ்வரத்தில் நடந்த பேரனியில் ஆக்ரோச உரை நிகழ்த்திய காரனத்திற்காக பொய் வழக்குகள் புனையப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது பினையில் உள்ள இனமானத் தமிழன், தமிழ் இனப் போராளி பிரபல இயககுனர் திரு. அமீர் அவர்களை இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர் திரு. ஜஹாங்கிர், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் டாக்டர். பக்ருதீன் B.H.M.S ஆகியோர் நேற்று மதுரையில் சந்தித்தனர்.

இஸ்லாமிய பத்திரிகையான சமரசத்தில் இயக்குனர் அமீர் அவர்களின் பேட்டியின் மூலம் வெளியான சமுதாய அக்கரையை அனைவரும் அறிவர். இவ்வாறு பல இஸ்லாமிய அறிவு ஜீவிகளின் பாராட்டுதலை பெற்ற சிந்தனையாளர் திரு. அமீர் அவர்களுடன் டாக்டர். பக்ருதீன் B.H.M.S, திரு. முகவைத்தமிழன், திரு. குத்புதீன் ஐபக் ஆகியோர் தற்போது ஊடகத்துரைகளில் நமது சமுதாயத்தின் நிலை குறித்தும் இதை எவ்வாறு மாற்றி அமைப்பது என்றும் இன்னும் சமுதாயத்தை எப்படி ஒற்றுமைப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

No comments: