Showing posts with label தலித். Show all posts
Showing posts with label தலித். Show all posts

Tuesday, September 11, 2012

பரமக்குடி படுகொலை: தொடரும் போராட்டம்

பரமக்குடி படுகொலை: தொடரும் போராட்டம்
 





 
2011 செப்டம்பர் 11 அன்று சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரன் குரு பூஜைக்கு வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு உயிர்களை பலி கொண்ட பிறகு பரமக்குடி நகர் காவல் நிலையத்தின் குற்ற எண்.300/2011ன் படியான முதல் தகவல் அறிக்கை இவ்வாறு கூறுகிறது. சுமார் 1000 பேர் ஐந்து முக்கு ரோட்டில் மறியல் செய்தனர். ஆய்வாளர் சிவக்குமார் புகாரின் முதல் வரியே முழு பொய் என்பதற்க
ு (50க்கும் குறைவானவர்களே மறியலில் ஈடுபட்டனர்) மீண்டும் மீண்டும் ஒளிபரப்பான வீடியோ காட்சிகளே சாட்சி. பல்வேறு கோணங்களில் இருந்து எடுக்கப்பட்ட எந்த வீடியோ காட்சி யைப் பார்த்தாலும் வாக்குவாதத்தில் ஈடுபடும் போதே லத்தி சார்ஜ் செய்வதையும், கலைந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் கூடி நின்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதையும் பார்க்க முடிகிறது. நாங்கள் லத்தி சார்ஜ் செய்த பிறகு ஊரை காலி செய்யாமல் மீண்டும் கூடி நிற்பதா ? என்கிற போலி(ஸ்) கௌரவத்திற்கு ஆறு உயிர்கள் அநியாயமாய் பறிபோனது. இல்லை என்றவுடன் திரும்பிவிட அவர்கள் திரைப்படத்திற்கு வந்தவர்கள் அல்ல. இரண்டு மூன்று மாத கால தயாரிப்பு, இந்த நாளுக்கான காத்திருப்பு.

ஐம்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் னால் 1957ல் இமானுவேல் சேகரன் எந்த காரணத்திற்காக கொல்லப்பட்டாரோ, அதே காரணங்கள் இன்றும் தனது வாழ்வை இடைமறிப்பதற்கு எதிரான எழுச்சியின் அடையாளம் தான் இந்த ஆர்ப்பரிப்பு. தங்கள் மீது வலிந்து திணிக்கப்படும் சாதிய பாரபட்சங்களுக்கு எதிர்ப்பு என்பது நிச்சய மாக யாருக்கும் எதிரானது அல்ல, மாறாக அது ஜனநாயகத்தின் குரல். யார் இந்த இமானுவேல் சேகரன். சுபாஷ் சந்திர போஸால் ஈர்க்கப்பட்டு, அவரது படை யில் இணைவதற்கு சென்ற நேரத்தில் சுபாஷ் சந்திர போஸின் மரணச் செய்தியே கிடைத்து அந்த வாய்ப்பினை இழக்கிறார். காங்கிரஸ்காரரான தனது தந்தையுடன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். பின்னர் இந்திய இராணுவத்தில் பணியாற்றுகிறார். விடுமுறைக்கு வருகிற போதெல்லாம் கிழக்கு முகவை மாவட்டத்தின் தலித் மக்கள் மீதான தீண்டாமை கொடுமைகளுக்கு எதி ராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற் கொள்கிறார். 1952ல் இராணுவப்பணியைத் உதறித் தள்ளிவிட்டு, முழுநேர சமூக சீர் திருத்தப் பணிகளில் ஈடுபடுகிறார்.

கிராமம் கிராமமாக சுற்றித் திரிந்து ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாக்குகிறார். பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் மாமுல் கொள்ளைகளை மக்களைத் திரட்டி தடுக்கிறார். வணிகர்களின் ஆதரவைப் பெறு கிறார். ஒரு சாதியை மட்டுமல்ல, ஒடுக்கப்படு கிற பல்வேறு சாதிகளைக் கொண்ட அணியை அமைக்கிறார். 14.4.1953 சித்திரை முதல் நாளில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டை இராமநாதபுரத்தில் நடத்துகிறார். கிராமத் திருவிழாக்களின் வேலைப் பிரிவினைப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் பணியாக இருந்த கட் டாய உழைப்பு, ஊர் சுத்தம் செய்தல் ஆகிய வற்றில் சமத்துவம் வேண்டும் என்று கோரு கிறார். 26.5.1954ல் இரட்டைக் குவளை எதிப்பு மாநாட்டை அருப்புக் கோட்டையில் நடத்து கிறார். பேரையூர் பெருமாள் பீட்டருடன் இணைந்து தலித் மக்களின் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு உதவி செய்கிறார். தன் வாழ்நாளில் ஒரு போதும் சாதி துவேசத்தை இமானுவேல் சேகரன் முன் வைக்கவில்லை. 10.9.1957ல் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வலியுறுத்தி பேசுகிறார். மறு நாள் 11.9.1957 அன்று எமநேசபுரம் பள்ளியில் பாரதி விழாவில்

‘காக்கை குருவி எங்கள் ஜாதி

நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’

என்று மகாகவி பாரதியின் பாடலை மேற் கோளாக்கி பேசியதே அவரது இறுதிப் பேச் சாகி போகிறது. விழா முடிந்து வருகிறபோது கொலை செய்யப்படுகிறார். சமநீதி கேட்ட தற்காக கொல்லப்பட்டவர் இமானுவேல் சேகரன்.

தென் மாவட்டம் முழுவதும் இன்றும் ஒரு கள ஆய்வை மேற்கொண்டால், தலித் மக்கள் மீதான சாதிய பாரபட்சங்கள் வெளிச்சத்திற்கு வரும். கிராமத்தில் தங்களை இழிவுபடுத்துகிற அல்லது புறக்கணிக்கிற அநாகரிகங்களுக்கு எதிர் வினையாகவே பால்குடம், முளைப்பாரி எடுத்து அலகுகுத்தி தலித் மக்கள் பரமக் குடிக்கு புறப்படுகிறார்கள். ஆனால் அரசும், காவல்துறையும் ஏதோ சமூக விரோதிகள் கூடுகிறார்கள் என்றே கருதுகிறது. எரிச்சல் அடைகிறது. ஆகவே தான் எந்த முகாந்திர மும் இன்றி உயிர் குடித்தார்கள். துப்பாக்கிச் சூடு முடிந்த பிறகும் மாலை 5 மணிவரை சிக்கியவர்களையெல்லாம் வெறி கொண்டு தாக்கினார்கள். நிலைகுலைந்து கதவிடுக்கி லும், சந்து பொந்துகளிலும் பதுங்கியிருந்தவர் களை பிடித்து கை, கால்களை உடைத் தெறிந்தார்கள். பரமக்குடியில் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இளையான்குடி புறவழிச் சாலையில் 27 பேர் மறியல் செய்தனர். கட்டுப் படுத்தவே முடியாத அந்த பெருங்கூட்டத்தின் (!!!) மீது டிஎஸ்பி இளங்கோவன் எந்த அறி விப்பும் இன்றி துப்பாக்கியால் சுடுகிறார். +2 படிக்கும் மாணவன் ஆனந்த் படுகாயம டைந்து சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைக் கிறார். இதே நேரத்தில் மதுரை சிந்தாமணி அரு கில் பாட்டம் கிராமத்தில் இருந்து வந்தவர் களுக்கும் எஸ்ஐ சண்முகநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அவனியாபுரம் காவல் ஆய்வாளர் கஜேந்திரனுக்கு தகவல் போகிறது. அவர் வருகிறார். வரும் போதே ஜீப்பின் கதவை திறந்து வைத்துக் கொண்டு, கையில் துப்பாக்கியுடன் வருகிறார். இறங் கியவுடன் துப்பாக்கியை நீட்டுகிறார். பயந்து ஓடிய 19 வயது ஜெயப்பிரகாசின் முதுகில் சுடுகிறார். புல்லட் முதுகில் பாய்ந்து விலா பகுதி வழியாக வெளியேறுகிறது. சுருண்டு விழுந்தவரின் பிறப்புறுப்பில் ஏறி மிதிக்கிறார் கஜேந்திரன். மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு உயிர் பிழைத்தாலும், நெடுநாள் வரை சிறுநீர் டியூப் வழியாகவே வெளியேற்றப்பட் டது. மஞ்சூர் ஜெயபால் மார்பிலும், பல்லவரா யனேந்தல் கணேசன் மார்பிலும், வீரம்பல் பன்னீர் நெற்றியிலும், சடையனேரி முத்துக் குமார் வயிற்றிலும் சுடப்பட்டு கொல்லப் பட்டனர். கொடும்பலூர் தீர்ப்புக்கனி , காக்க னேந்தல் வெள்ளைச்சாமி ஆகியோர் அடித்தே கொல்லப்பட்டனர். உயிர் குடிப்பதே இலக்காகிய பிறகு முழங்காலுக்கு கீழே ஏன் சுட வேண்டும் !

6 பேர் படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்துவதற்காக புனையப்பட்ட பொய் வழக்கையே ஆயுதமாக்கி கிராமங் களில் தேடுதல் வேட்டையை காவல்துறை அரங்கேற்றியது. இரவு நேரங்களில் வீடு புகுந்து ‘உன் புருசனை காட்டுக்குள்ள அனுப்பிவிட்டு எவனோடு குடும்பம் நடத்து கிறாய்’ என்ற அளவிற்கு பெண்களை இழி வாய் பேசியது. காவல்துறைக்கு பயந்து வயல் களில் பதுங்கிய ஒருவர் பாம்பு கடித்து மரணமடைகிறார். பரமக்குடி துப்பாக்கிச் சூட் டிற்கு விளக்கமளித்தவர்கள் கையில் இளை யான்குடி, சிந்தாமணி துப்பாக்கிச்சூடுக ளுக்கு விளக்கம் ஏதுமில்லை. துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் படங்களுடன் போஸ்டரோ, பேனரோ கூடாது என காவல் துறை இப்போது உத்தரவிட்டுள்ளது. விபரீ தம் ஏதும் நிகழ்ந்தால் வாகன உரிமையாளரே பொறுப்பு, வாகனத்தில் வருபவர்கள் அத் தனை பேரும் பெயர் பட்டியல் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் என்கிற காவல் துறையின் கட்டுப்பாடுகளைத் தாண்டி கடந்த ஆண்டின் எழுச்சியுடன் கூட்டம் திர ளுமா ? எனவே இமானுவேல் சேகரனின் விழாவை சீர்குலைப்பதே நோக்கம் என்கிற தலித் மக்களின் குற்றச்சாட்டை புறக்கணிப் பதற்கில்லை. தமிழகத்தில் 2010 ஜனவரி முதல் 2011 செப்டம்பர் வரை சாதி தொடர்பான மோதல்களில் மட்டும் துப்பாக்கிச் சூட்டில் பலி யானவர்கள் எட்டு பேர். அனைவரும் தலித்து களே. கடந்த 12 ஆண்டுகளில் தமிழக காவல் துறை நடத்திய படுகொலைகளில் மிகப் பெரியது இரண்டு. ஒன்று 1999 ஜுலை 21ல் 17 பேரை பலிகொண்ட தாமிரபரணி படு கொலை. மற்றொன்று 2011 செப்டம்பர் 11ல் 6 பேரை பலி கொண்ட பரமக்குடி படுகொலை.

ஆகவே அரசுக்கு வர்க்கச் சார்பு போலவே ஆதிக்க சாதி சார்பும் உள்ளது. பரமக்குடி படுகொலைக்கு காரணமானவர் கள் நீதியின் முன்னால் நிச்சயம் தண்டிக் கப்படுவார்கள். நடைபெற்ற கொடூரத்தை கண்டிப்பதோடு, நிறுத்திக் கொள்ளாமல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரு வதற்கு தலித் அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றம் சென்றனர். இந்த அணிவகுப்பில் இணைந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மூலமாக நீதிமன்ற படியேறியது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதற்காகவே தமி ழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்பு களோடு இணைந்து போராடி வருகிறது.

எல்லோரையும் சம குடிமக்களாக ஏற்றுக் கொள்ளும் சுயராஜியமும் வேண்டும். அதே நேரத்தில் அந்த சுயராஜியத்திற்குள் ஒடுக் கப்பட்ட மக்களுக்கு தனித்துவமான உரிமை களும் வேண்டும் என்பதே அம்பேத்கர் முன் வைத்த அரசியல். இந்த புரிதல் இடதுசாரி களைத் தவிர மற்ற கட்சிகளுக்கு இருப்ப தாகத் தெரியவில்லை.

மக்கள் திரளில் உட்பிரிவுகளின் பிரச் சனைகளை புறக்கணிக்காமல் சாதியத்தை யும், அதன் பெயரால் சொந்த மக்களின் ஒற்றுமைக்கு குழிபறிப்பதுமான கொடூரத்தை புரிந்து கொண்டு, சாதியின் பெயரால் பாதிக் கப்பட்டவர்களின் பக்கம் நின்று, அதன் கோரத்தை அனைத்துப் பகுதி உழைக்கும் மக் களிடமும் புரிதலை ஏற்படுத்தி அதை முற்றி லும் அழித்தொழிக்க வேண்டிய சமூகக் கட மையை நம்பிக்கையுடன் நிறைவேற்றுவோம்.

- கே.சாமுவேல்ராஜ்

Saturday, November 22, 2008

சட்டக்கல்லூரி கலவரம் - உண்மைக் குற்றவாளி யார்? அம்பலப்படுத்தும் உண்மை அறியும் குழு அறிக்கை

சட்டக்கல்லூரி கலவரம் - உண்மைக் குற்றவாளி யார்? அம்பலப்படுத்தும் உண்மை அறியும் குழு அறிக்கை


சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்குள் நடந்த கலவரம், மற்ற பிரச்னைகளையெல்லாம் ஓரம்கட்டிவிட்டு மீடியாக்களில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. நாள்தோறும் மாணவர்கள் கைது, தாக்குதலைக் கண்டித்துத் தீக்குளிப்பு, போராட்டம் என விதவிதமான ஆர்ப்பாட்டங்கள் பரபரப்பைப் பற்ற வைத்துக் கொண்டிருக்கின்றன.

பொதுமக்கள் மத்தியில் இந்தக் கலவரம் இப்படி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியபோது, அதற்கான காரணங்களைக் கண்டறியும் முயற்சியில் வழக்கறிஞர்கள் குழு களத்தில் இறங்கியது. பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையிலான இந்தக் குழுவில் பேராசிரியர்கள் சிவக்குமார், சந்தோசம், லெனின், வழக்கறிஞர் லெனின், மனோகரன், சுஜாதா உள்பட பலர் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவினர் நவம்பர் 20-ம் தேதி தங்கள் பரிந்துரைகளை அரசுக்கு அளித்தனர்.

கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் களத்தில் இறங்கிய உண்மை அறியும் குழுவினர் கல்லூரி நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மாணவர்கள் என அனைத்து தரப்பிலும் விசாரணை நடத்தினர். இந்தக் குழுவில் இடம்பெற்ற குடியுரிமைப் பாதுகாப்பு நடுவத்தின் இணைச் செயலாளரும், வழக்கறிஞருமான கேசவனை சந்தித்தபோது, "சட்டக் கல்லூரி கலவரம் தொடர்பாக மீடியாக்களில் வெளியான வன்முறைக் காட்சிகளில் ஓரளவுதான் உண்மை இருக்கிறது. மோதலுக்குப் பிரதானமாக பல காரணங்கள் இருக்கின்றன'' என்றவர்,

"சட்டக் கல்லூரி மாணவர் விடுதியில் 160 பேர் தங்கியுள்ளனர். இவர்களில் 149 பேர் தலித் மாணவர்கள். அதிகப்படியான தலித் மாணவர்கள் இருப்பதால், சாதி மோதலாகத்தான் இந்தப் பிரச்னை கவனிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே முக்குலத்தோர் மாணவர் பேரவைக்கும், தலித் மாணவர்களுக்கும் இடையில் விழாக்கள் நடத்துவதில் தொடர் மோதல் இருந்து வந்துள்ளது. இந்த மோதலை பல்வேறு சாதி அமைப்புகள்தான் பின்புலத்தில் இருந்து இயக்கி வந்துள்ளன. அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்ற உச்சரிப்பையே தலித் அல்லாத சில மாணவர்கள் வெறுத்துள்ளனர். குறிப்பாக, விஜய் பிரதீப் என்ற மாணவர் சாதாரண ராக்கிங் நடக்கும்போதுகூட, `நான் யார் தெரியுமா? மேலவளவு முருகேசன் படுகொலையில் முதல் குற்றவாளியான ராமர் என் சித்தப்பாதான். என் பேக்ரவுண்ட் புரிஞ்சுக்கோ' என மிரட்டி வந்துள்ளார். இதை கல்லூரி நிர்வாகிகளும் உறுதிப்படுத்தினர். தற்போது அடிபட்டு சிகிச்சை பெற்றுவரும் பாரதிகண்ணன் உள்பட சிலர் மீது வன்கொடுமைச் சட்டம், அடிதடி என பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

பிரச்னைக்கான தொடக்கப்புள்ளி கடந்த 7-ம் தேதி பாரிமுனை பஸ் நிலையத்தில் நடந்துள்ளது. தேர்வு எழுதிவிட்டு வந்த ஏழுமலை, மேகநாதன், ராஜா, சிவராஜ் ஆகிய தலித் மாணவர்களை கிருஷ்ணசாமி, அய்யாத்துரை, நாகராஜ், பிரதீப் உள்ளிட்ட சில மாணவர்கள் சேர்ந்து, `ஏன்டா எக்ஸாம் எழுத வந்தீங்க? சொல்றதைக் கேட்க மாட்டீங்களாடா?' என்றவாறு பலமாக அடித்துவிட்டனர். இவர்களது நோக்கம் விடுதி மாணவர்கள் தேர்வு எழுதக் கூடாது என்பதுதான். அடுத்து வந்த நாட்களில் பாரதிகண்ணன் உள்பட சில மாணவர்கள் கத்தியோடு கல்லூரி வளாகத்தில் வலம் வந்துள்ளனர். கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் இந்தச் செயலைக் கண்டித்துள்ளனர்.

சம்பவம் நடந்த 12-ம் தேதியன்று பாரிமுனை பஸ் நிறுத்தத்தில் அடிவாங்கிய மாணவர்கள், `தேர்வு எழுத முடியவில்லை. பாதுகாப்புக் கொடுங்கள்' என்று விடுதி மாணவர்களுக்குத் தெரிவிக்க, விடுதி மாணவர்களும் உருட்டுக் கட்டைகளை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு வந்துள்ளனர். அப்போது பஸ் ஸ்டாண்டில் மாணவர்களை அடித்த அய்யாத்துரையை அழைத்து அடித்துள்ளனர். இந்தத் தாக்குதலில் கீழே விழுந்த அவருக்கு தண்ணீர் குடிக்கக் கொடுத்து வெளியே அனுப்பியுள்ளனர். அவர் இந்தத் தகவலை கல்லூரிக்குள் சுற்றிக் கொண்டிருந்த பாரதிகண்ணனுக்குத் தெரிவிக்க, ஆத்திரமான பாரதியும், ஆறுமுகமும் கத்தியைத் தீட்டிக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

இதைக் கேள்விப்பட்ட முதல்வர் ஸ்ரீதேவ், உடனே போலீஸ் உதவி கமிஷனர் நாராயணமூர்த்தியிடம் புகார் கொடுத்துள்ளார். ஏ.சி.யோ, `பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங்கையும், வக்கீல் சங்கத் தலைவர் பால் கனகராஜையும் அழைத்துக் கொள்ளுங்கள்' எனக் கூறியிருக்கிறார். போலீஸார் முதலில் புகாரை வாங்கவில்லை. மீண்டும் மீண்டும் முதல்வர் வற்புறுத்திய பின்னரே புகாரை வாங்கியுள்ளனர். இதற்குள் பாரதிகண்ணன் கத்தியை எடுத்துக் கொண்டு எதிரில் வந்த தலித் மாணவர் சித்திரைச் செல்வனை நோக்கிச் சுழற்ற, அவரது காது துண்டாகியுள்ளது. தலையில் வெட்டியதால் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. இதனால் கொதித்துப் போன விடுதி மாணவர்கள் உருட்டுக் கட்டை, மண்வெட்டிகளோடு தாக்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், முதல்வர் புகார் தரவில்லை என போலீஸ் தவறாகச் சொல்கிறது. அவர் செய்ய வேண்டிய கடமையை சரியாகச் செய்திருக்கிறார். அவர் மீது அரசு எடுத்த சஸ்பெண்ட் நடவடிக்கை தேவையற்றது.

எங்கள் ஆய்வில் தெரியவந்த வேதனையான விஷயம் என்னவென்றால், இந்த சம்பவத்திற்குப் பிறகு தலித் மாணவர்களை மட்டுமே குறிவைத்து போலீஸ் கைது செய்கிறது. சித்திரைச் செல்வனைக் கத்தியால் குத்திய பாரதிகண்ணன் மீது வெறும் கொலை மிரட்டல் வழக்கும், காயமடைந்த சித்திரைச் செல்வனைக் கைது செய்தது மட்டுமல்லாமல், கொலை முயற்சி வழக்கையும் போலீஸ் பதிவு செய்திருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், திருப்பதியில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் படித்து வந்த மாணவர் கோகுல்ராஜ், உயர்நீதிமன்ற வளாக கேண்டீனில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் சென்ற போலீஸார் `என்ன சாதி? எந்தக் கல்லூரி?' எனக் கேட்டுள்ளனர். அவரோ, `நான் எஸ்.சி. அம்பேத்கர் சட்டக் கல்லூரி' என்று சொல்லியிருக்கிறார். சம்பவத்துக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத இவர் மீதும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். அதேபோல், தாக்குதலில் இறங்கிய தலித் மாணவர்களை, `அடிக்க வேண்டாம். விட்ருங்க' என ஒவ்வொருவரையும் தடுத்து விரட்டிக் கொண்டிருந்த திலீபன் ஜோ என்ற மாணவரையும் இதே பிரிவில் கைது செய்திருக்கிறார்கள்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாரதிகண்ணன், அய்யாத்துரை, ஆறுமுகம் ஆகியோரையும் சந்தித்தோம். இதில் ஆறுமுகம் என்ற மாணவர், `ஆமாம். நாங்கள் கத்தியோடுதான் கல்லூரிக்கு வருவோம்' என சாதாரணமாகத் தெரிவித்தார். தலித் மாணவரான சித்திரைச் செல்வனுக்குத் துணையாக இருந்த, சம்பவத்துக்குத் தொடர்பில்லாத கோவிந்தன், இளமுகில், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

எங்கள் விசாரணையில், மாணவர்களின் நிலைக்கு முக்கியக் காரணமே தமிழக அரசுதான். சட்டக் கல்லூரியில் பணம் கட்டிப் படிக்கும் சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தந்துள்ளனர். ஆனால், அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு எந்த வசதியும் இல்லை. 55 ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருக்கிறது. கூடுதல் தகுதி வளர்க்கும் வசதியோ, சரியான கல்வியோ இந்த மாணவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. திட்டமிட்டே அரசு இவர்களைப் புறக்கணிக்கிறது. ஜாதி அமைப்புகள் இந்த மாணவர்களை நெருங்குவதற்கு இதுவே காரணமாகிவிட்டது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க கவுன்சலிங் கூடம் நிறுவப்படுவது அவசியம். சட்ட அறிவை வளர்க்கும் முறையான விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க உள்ளோம். தமிழக அரசு சரியான தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கினால் எதிர்காலத்தில் இன்னொரு கலவரம் நடக்காமல் தடுக்கலாம்'' என்றார் முடிவாக.

சட்டக் கல்லூரி கலவரத்தில் தலித் மாணவர்களைத் தடுக்க கல்லூரி முதல்வர் அழைப்பின்பேரில் சென்ற வக்கீல் ரஜினிகாந்த் நம்மிடம், "கலவரத்திற்கு முக்கியக் காரணம் எழும்பூரில் மையமாகச் செயல்படும் ஒரு ஜாதிப் பேரவைதான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூவேந்தர் முன்னேற்ற முன்னணியின் நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையாரை ஒரு நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தனர். இந்நிகழ்ச்சிக்காக கல்லூரியில் இருந்து முளைப்பாரி எடுத்துச் செல்லும் வைபவங்களை நடத்தினர். சாதித் தலைவர்கள் தங்கள் சாதிகளை வளர்க்க மாணவர்களுக்கு `மூளைச் சலவை' செய்யும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதைவிடக் கொடூரமான பல தாக்குதல்கள் தலித் மாணவர்கள் மீது நடந்துள்ளன. அவையெல்லாம் வெளியே வரவில்லை.

இதில் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கையில் கத்தி, கொடுவாள் போன்ற இரும்பு ஆயுதங்கள் வைத்திருந்தது பாரதிகண்ணன், ஆறுமுகம் இருவரும்தான். இதன்மூலம் திட்டமிட்ட தாக்குதலுக்குத் தயாராக வந்தது எந்தத் தரப்பு என்பதைப் புரிந்து கொள்ள முடியும். திருப்பித் தாக்கிய தலித் மாணவர்களுக்கு அவர்களைக் கொலை செய்யும் நோக்கமில்லை. அதனால்தான் திட்டமிட்டு அவரது கை, கால்களில் தாக்கினர். பாரதிகண்ணன் தப்பித்து ஓட அனைத்து வாய்ப்புகளும் இருந்தது. அவர் திரும்பத் திரும்ப கத்தியை எடுத்துக் குத்த வந்ததால்தான் பிரச்னை வேறு மாதிரியாகத் திரும்பியது. இதில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக தாக்குதலில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் தலித் மாணவர்களுக்கு ஏற்பட்டது. இதுதான் உண்மை!'' என்றார்.

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்