Showing posts with label முகவைத்தமிழன். Show all posts
Showing posts with label முகவைத்தமிழன். Show all posts

Sunday, November 03, 2013

ரைசுதீன் விபச்சார புரோக்கரா - ஜீனியா் விகடன்

வி.ஐ.பி-களை காப்பாற்ற பேரம் பேசுகிறதா காவல்துறை?



திருவனந்தபுரத்தில் ஒரு சிறுமியைப் பாலியல் தொழிலில் பந்திவைத்த அதிர்ச்சியே தீராத நிலையில்... தமிழகத்திலும் ஒரு கொடுமை அம்பலம் ஆகியுள்ளது! மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வாகைக் குளத்தைச் சேர்ந்த  ஈஸ்வரிக்கு (பெயர் மாற்றப்பட்டுள் ளது) 14 வயதில்  திருமணம் நடந்தது. மண வாழ்வுக்கான பக்குவம் அடையாத நிலை யில், அந்த உறவு முறிந்தது. அதன் பிறகு ஜவுளிக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார், ஈஸ்வரி.

ஒரு நாள், வேலை முடித்து வீடு திரும்பக் காத்திருந்த ஈஸ்வரியை, அவருடன் வேலை பார்த்த தோழி ஒருவரின் தாய் ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென் றார். பாலியல் தொழிலில் தள்ளினார். அதைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் உள்ள புரோக்கர்களின் கைகளில் சிக்கிய ஈஸ்வரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பலரால் சீரழிக்கப்பட்டார். ஈஸ்வரியின் குழந்தைப் பாங்கான தோற்றம் மற்றும் வயதைக் காட்டி, ஒவ்வொரு கஸ்டமரிடமும் 'ஃப்ரெஷ் பீஸ்’ என்று சொல்லியே கொள்ளைப் பணம் கறந்துள்ளனர் புரோக்கர்கள். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று, ஈஸ்வரியை ரைசுதீன் என்பவர் மீட்டு, ராமநாதபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

போலீஸாரது விசாரணையில் தென்மாவட்டங்களில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள் ஈஸ்வரியை சிதைத்தது தெரியவந்துள்ளன. இதில், மதுரை புரோக்கர்கள் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி சேர்மன் ஜலீல் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது!



ஈஸ்வரியை போலீஸாரிடம் அழைத்துவந்த ரைசுதீனிடம் பேசினோம். ''கடந்த சனிக் கிழமை ஈஸ்வரியை புரோக்கர் கள் செல்வியும், ருக்மணியும் ராமநாதபுரத்துக்குக் கூட்டிவந்து, பாரதிநகரில் அழகு நிலையம் நடத்தி வரும் ஒரு பெண்ணிடம் ஒப்படைத்தனர். அமுதா என்பவ ரின் வீட்டில் இதற்கான டீலிங் நடக்க... ஈஸ்வரி மைனர் பெண் என அமுதாவுக்குத் தெரியவந்துள்ளது. உடனே, ஈஸ்வரியை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அமுதா கூட்டிப் போய்விட்டார். ஆனால், அங்கிருந்த போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் துரத்திவிட்டார்கள். இதன் பிறகு ஈஸ்வரியை அமுதா, தன்னுடன் அழைத்துப் போய்விட்டார். இதனால் கடுப்பான செல்வி குரூப் வாகைக்குளம் சென்று, ஈஸ்வரியின் தாயிடம், 'உன் மகளை ராமநாதபுரத்தில் பிடிச்சு வெச்சிருக்காங்க. அவளை வெளிநாட்டுக்கு அனுப்பிடுவாங்க. நீங்க வந்தா, விட்டுருவாங்க’ன்னு சொல்லி இருக்காங்க. கடந்த ஒரு வருஷமா ஈஸ்வரி பத்தின தகவல் எதுவும் தெரியாம இருந்த அந்தம்மாவும் இவங்களோட ராமநாதபுரம் வந்து... அமுதா வீட்டுக்குப் போய், தன் மகளின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி ஆயிட்டாங்க. ஈஸ்வரியை அவங்க அம்மாவோட அனுப்ப அமுதா ஏற்பாடு செய்ய... இதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு, செல்வி தரப்பினர் தகராறு செய்தனர். அந்த நேரத்தில் ஈஸ்வரி அருகில் இருந்த தொண்டு நிறுவனத்துக்குள் ஓடி வந்து விட்டார்.. அங்கிருந்த நான், ஈஸ்வரியை விசாரிச்சப்பதான்மொத்தக் கொடுமையும் தெரிஞ்சது.

இது பத்தி தென்மண்டல ஐ.ஜி. பொறுப்பு வகிக்கும் கண்ணப்பன் சாரிடம் சொன்னேன். ஈஸ்வரியை ராமநாதபுரம் எஸ்.பி. ஆபீஸில் ஒப்படைக்கச் சொன்னார். போகும் வழியில், புரோக்கர் கும்பல் வழி மறிச்சுத் தகராறு செய்ய... ஈஸ்வரியை என் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். அதன் பிறகு அந்த புரோக்கர்கள் மதுரையில் உள்ள ரவுடிகள் மூலமாக என்னை மிரட்டினாங்க. அதுக்கெல்லாம் பயப் படாம மறுநாள், எஸ்.பி. ஆபீஸ்ல ஈஸ்வரியை ஒப்படைச்சேன்!'' என்று சொன்னார்.



இந்த வழக்குத் தொடர்பாக நம்மிடம் பேசிய காவலர் ஒருவர், ''ராமநாதபுரத்திலும், ராமேஸ்வரத்திலும் விபசாரம் தடை இன்றி நடக்கிறது. எங்காளுங்க கண்டுக்கறதில்லை. இந்தப் பொண்ணை ஏற்கெனவே பல முறை ராமநாதபுரத்துக்குக் கூட்டிட்டு வந்திருக்காங்க. பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜ் மற்றும் இறந்துபோன அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான லாட்ஜ், இந்த ரெண்டு இடங்களிலும் வெச்சு ஈஸ்வரியைப் பல பேர் பாழாக்கியிருக்காங்க. அந்த லாட்ஜின் உரிமையாளர்கள், உள்ளூரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஒருவர், கட்சிக்காரர்கள் சிலர், காவல் துறையைச் சேர்ந்த இருவர் மற்றும் அரசு அலுவலகங் களில் பணியாற்றும் சிலர் என ஏராளமான பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஓனர் ஒருவரும் சென்னைக்கு அழைத்து, தன் சொகுசு பங்களாவில் வைத்து ஈஸ்வரியை சீரழித்துள்ளார். இதே போல்தான் ராமேஸ்வரம் சேர்மன் ஜலீலும் கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று அனுபவித்து இருக்கிறார். விசாரணையின்போது, இவர்களின் பெயர்களை அந்தப் பெண்ணே சொல்லுச்சு. ஆனால் சில அதிகாரிகள், ஜலீல் உள்ளிட்ட சிலரை மட்டுமே இந்த வழக்கில் சேர்த்துவிட்டு, ஈஸ்வரியால் குற்றஞ்சாட்டப்படும் பல வி.ஐ.பி-களை வழக்கில் சேர்க்காமல் இருக்க பேரம் பேசி வருகின்றனர்!'' என்று சொல்லி, அதிரவைத்தார்.

ராமநாதபுரம் எஸ்.பி-யான அனில்குமார் கிரியிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''ஈஸ்வரி கேஸ் சம்பந்தமா எஃப்.ஐ.ஆர். போட்டுருக்கோம். குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று ஸ்பெஷல் டீம் போட்டிருக்கோம்...'' என்று மட்டும் சொன்னார்.

இந்த வழக்கில் காவல் துறை மந்தமாகச் செயல்படுவதாக ரைசுதீன் புகார் செய்யவே, அவரையும் இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதாகச் சொல்லிக் கைது செய்து இருக்கிறார்கள்.என்னதான் நடக்கிறது என்பதை மேலிடம் கவனமாக விசாரிக்க வேண்டும்.

- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி


ரைசுதீனை கைது செய்துவிட்டு அவதுாறு பரப்பிய காவல்துறை

Aadil1 Years ago
மிருகங்களை தூக்கில் போட வேண்டும் உடனடியாக விசாரணை ஏதும் இல்லாமல். இந்த சிறுமியை வைத்து அடையாளாம் காட்டச் சொல்லி அனைவரையும் கூண்டோடு தூக்கிலிடவேண்டும்.
Reply Like | Report Abuse



Hari Sankar1 Years ago
புரோக்கர் பெண்கள் என்று அடையாளம் காட்டப்படுபவர்கள் கைதாகி விட்டனரா? அவர்களைப் பிடித்து நாடு கடத்துங்கள்!!!! இது போன்ற ஒவ்வொரு கேஸிலும்... ஒன்றிரண்டு அல்லக்கைகள் தண்டிக்கப் பட்டால், நாளடைவில் நாடு முன்னேறும்..... இல்லாவிட்டால்.... ஆட்கள் மாறுவார்கள்... காட்சி மாறாது......
Reply Like 2 | Report Abuse


Senthil1 Years ago
இன்டர் நேஷனல் சட்டமே வந்தாலும் காசு வாங்கிகொண்டு சிறுமிகளை காவு கொடுப்பார்கள் நம் அரசியல்வாதிகள்
Reply Like | Report Abuse


jaya1 Years ago
""ஈஸ்வரியை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அமுதா கூட்டிப் போய்விட்டார். ஆனால், அங்கிருந்த போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் துரத்திவிட்டார்கள்"" Immediately enquire and suspend them...Innocnets going police station finally..but that time also,they are not getting help..Stupid officers..

Reply Like 2 | Report Abuse


usha1 Years ago
பால் காந்தி சார் அந்த சட்டம் வந்தாலும்,இவர்கள் என்ன மாட்டவா போகிறார்கள்..அந்த 14வயது குழந்தை பட்டிருக்கும் உடல்ரீதியான துன்பத்தை நினைத்தால் ,மனம் ரணமாக உள்ளது.
Reply Like 1 | Report Abuse


usha1 Years ago

ரைசுதீனை கைது செய்துள்ளதில் இருந்தே தெரியவில்லையா காவல்துறை எப்படி செயல்படுகிறது என்று,வெறுப்பாக உள்ளது.

Reply Like 2 | Report Abuse


Rajendran1 Years ago

"இந்த வழக்கில் காவல் துறை மந்தமாகச் செயல்படுவதாக ரைசுதீன் புகார் செய்யவே, அவரையும் இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதாகச் சொல்லிக் கைது செய்து இருக்கிறார்கள்."
இனிமே யாராவது எதுக்காவது புகார் கொடுத்தா அந்த வழக்கில் புகார் கொடுத்தவரையும் கைது செய்யுங்கப்பா. விளங்கிரும்.
Reply Like 1 | Report Abuse


Tamil1 Years ago
இவ்வாறே தினமும் பல சிறுமிகள் சீரழிக்கப்பட்டு வருகிறார்கள்.. இதை தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் அரசு...
Reply Like | Report Abuse


Murugesan1 Years ago
What is action from Girls parent side. They are first criminal. why they didn't search girl past 2 years???
Reply Like 1 | Report Abuse


Padmanabhan1 Years ago
ப்ரொக்கர்கள் செல்வி, ருக்மணி மட்றும் சேர்மன் ஜலீல் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் காவல்துரை கருப்பு ஆடுகள் அனைவரையும் மொத்தமாக கைது செய்து கடுங்காவல் சிறையில் இருபது ஆண்டுகள் வைத்து முறைப்படி விசாரணை செய்து தண்டணை அளிக்கவேண்டும்.
Reply Like 1 | Report Abuse


சித்திர குப்தன்1 Years ago
பாவம் ரைசுதீன், மக்கள் அவர் பக்கம் நிற்க வேண்டும். அவரைக் கைது செய்த காவல் துறை மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Reply Like 4 | Report Abuse


raju1 Years ago
ரைசுதின் என்ன ஷெயிதார்?
Reply Like | Report Abuse


Pal Gandhi1 Years ago
சிறுமிகளை கடத்தி பாலியில் தொழில் செய்தால் தூக்கு தண்டனை என்று சொல்லுகிறார்கள். இன்னும் இந்த இன்டர் நேஷனல் சட்டம் இந்தியா வரவில்லையா?


நன்றி : ஜீனியர் விகடன் : http://www.vikatan.com/article.php?mid=2&sid=247&aid=8947

முகவைத்தமிழன், ரைசுதீன், முகம்மது ரைசுதீன், ரைஸீதீன், ரயீசுதீன், விபச்சாரம், முகவை, இராமநாதபுரம்,

Wednesday, October 23, 2013

ரைசுதீனுக்கு பொண்ணாடை போா்த்தும் ஊராட்சி தலைவா்

 
 
22.10.2013 அன்று பெரியபட்டினத்தில் நடந்த மகான் செய்யது அலி ஒலியுல்லாஹ் 112 ம் வருட சந்தனக்கூட்டு வைபவ நிகழ்ச்சியில் முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் Mohamed Raisudeen கௌரவிக்கும் விதமாக கூட்டு கமிட்டியின் சாா்பாக பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவா் டாக்டா் எம்.எஸ். கபீா் அம்பலம் அவா்கள் பொண்ணாடை போா்த்தினாா்கள் உடன் கூட்டுக் கமிட்டியின் செயலாளா் ஜனாப் மஜீத் மரைக்காயா் அவா்கள்.
https://www.facebook.com/photo.php?fbid=10152270411813154&set=a.10150831919698154.507584.592838153&type=1&theater


Tuesday, February 26, 2013

அமைச்சர்களுடன்........


இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் முகவைத்தமிழன் (எ) ரைசுதீன் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் N.G பண்ணீர் செல்வம், மின்சாரத்துறை அமைச்சர் தியாகராஜன் மற்றும் கல்வித்துறை அமைச்சர் திரு P.M.L. கல்யான சுந்தரம் ஆகியோருடன் ஒரு நிகழ்ச்சியில்.






Saturday, February 23, 2013

முகவை SDPI அரசியல் எழுச்சி மாநாடு நேரலை (LIVE)

இராமநாதபுரம் மாவட்ட SDPI கட்சியினர் நடத்தும் 
அரசியல் எழச்சி மாநாடு நேரலை




Monday, January 07, 2013

மரணத்தின் வாசலில் தவிக்கும் இலங்கை இளம் பெண்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதரர்களுக்கு,

இந்த விடயம் குறித்து உலகின் அணைத்து அமைப்புக்களும் எழுதியும் பேசியும் வரகையில் சகோ. ரிஷானா நஃபீக் ஒரு முஸ்லிமாக இருந்தும் இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் குரல் இந்த விசயத்தில் இது வரை ஓங்கி ஒலிக்காததன் காணம் என்னவென்று தெறியவில்லை. இந்த இலங்கை முஸ்லிம் பென்னிற்காக குரல் கொடுக்க கூடிய அணைத்து அமைப்புகளும் முஸ்லிம் அல்லாத தமிழ் அமைப்புக்களாகவும் தமிழ் மக்களாகவுமே உள்ளனர். இது வருத்தப்படக்கூடிய ஒரு விடயம்.

இந்த பென்னின் உயிர் காக்க வேண்டி பல ஆன்லைன் பெட்டிசன்கள் உருவாக்கப்பட்டுள்ன. நீங்களும் அதில் ஒரு கையெழுத்திட்டு செல்லுங்களேன். இரன்டு நிமிடங்கள் கூட பிடிக்காது.


ஐ பெட்டிசன் ஃபாரம் :

http://www.ipetitions.com/petition/SaveRizanaNasik/

பெட்டிசன் ஆன்லைன் ஃபாரம் :

http://www.petitiononline.com/rizana1/

அம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பின் ஃபாரம் :

http://www.amnesty.org.uk/actions_details.asp?ActionID=295


நன்றி.



மரணத்தின் வாசலில் தவிக்கும்
இலங்கை இளம் பெண்

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்


இலங்கையின் மூதூர்ப்பகுதியைச் சேர்ந்த ஏழை முஸ்லிம் பெண்,19 வயதான றிஷானா நபீக் என்பவர், தனது பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தையைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்பார்க்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

இறந்த குழந்தையின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இம்மாத நடுப்பகுதியில், றிஷானா நபீ£க்கின் மேல்முறையீடு காலாவாதியாகிறது. இதுவரை இவரைப்பாது காக்கக் கூடியவிதமான எந்த நடவடிக்கையும் இலங்கை அரசாங்கம் உருப்படியாக முன்னெடுக்கவில்லை என்று ஆசிய மனித உரிமைச்சங்கத்தின் முது அதிகாரியான பசில் பெர்னான்டோ தெரிவிக்கிறார்.

பல பத்திரிகைகளின் செய்திகளின்படி, இந்த ஏழைப்பெண்னின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்தின் கடைமையாயிருந்தும் இதுவரையும் இந்தப்பெண்னின் அப்பீல் வழக்கு சம்பந்தமாக எந்தவிதமான துரித நடவிடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அப்பீல் வழக்குக்கு இலங்கைப்பணத்தின்படி Rs 60.000 தேவைப்படுகிறது.

மூதுரைச்சேர்ந்த இந்த இளம் பெண்னின் பெற்றோர்களால் இந்தப் பெரிய தொகையைத் திரட்டுவதும் அப்பீல் வழக்குக்கு ஒரு சட்டவல்லுனரை அமைப்பதும் அவர்களால் முடியாத விடயம் என்று கதறி அழுகிறார்கள். ஆசிய மனித உரிமை அமைப்பின் முது அதிகாரி பசில் பெர்னாண்டோ,சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை ஸ்தானிகராலயத்தைத் தொடர்பு கொண்டு, இந்தப்பெண்ணின் நிலைக்கு இலங்கை அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள் என்று விசாரித்தபோது, தாங்கள் இலங்கையின் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் இதுவரையும் ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் இருப்பதாகச் சொல்லப்பட்டதாக அறிவித்திருக்கிறார்.

அப்பீல் செய்வதற்குத் தேவையான பல அத்தாட்சிகள் இருப்பதாக ஆசிய மனித உரிமைச்சங்கம் சொல்கிறது.

-இந்தப் பெண் இந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்பட்ட 2005ம் ஆண்டு இவருக்கு 17 வயதாகும்.

-அகில உலகச்சட்டத்தின்படி, இப்படி இளம் பெண்களை அயல்நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவது பாரிய குற்றமாகும்.

-தான் இந்தக் கொலையைச் செய்ததாக றிஷானா நபீக் வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தெரியாத மொழியில் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.

- றிஷானா தனது வாக்குமூலம் கொடுக்கும்போது அவருக்குத் தேவையான சட்ட உதவிகள்(Legal assistance) கொடுக்கப்படவில்லை.

- றிஷான தான் முதலில் கொடுத்த வாக்குமூலம் தவறானது என்று வாக்கு மூலத்தை வாபஸ் பண்ணச் சொல்லிக்கேட்டிருக்கிறார், அதாவது குற்றம் சாட்டியபடி தனது பாதுகாப்பிலிருந்த குழந்தையைத் தான் கொலை செய்யவில்லை என்று கூறிருக்கிறார். குழந்தையின் மரணத்திற்குப் பால் குடித்துக்கொண்டிருந்த குழந்தைக்குத் தொண்டையில் பால் சிக்கித் திணறி (Choking) இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.

- கொலைக் குற்றம் சாட்டப்பட முதல் அவர் தனது வாக்கு மூலத்தில் தன்னை வேலைக்கு வைத்த குடும்பத்தினர் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக றிஷானா வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.

- இவரைக் குற்றவாழியாகக் காட்ட அவரது வாக்குமூலம் மட்டும் (அவருக்குத் தெரியாத மொழியில் நடத்தப்பட்ட வழக்கு) உபயோகிக்கப்பட்டிருக்கிறது, அவருக்கான சட்டப் பாதுகாலர்களின் உதவி இருந்திருக்கவில்லை.

மூதுரில் உள்ள ஏழை முஸ்லிம் குடும்பத்தைச்சேர்ந்த றஷினா நபீக், அவ்வூரில் உள்ள சபீக் பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த றிஷானா நபீக். குடும்ப வறுமை காரணமாக சவூதிக்கு வேலைக்குச் சென்றார். அந்தப்பெண் தனது வீட்டாருக்கு எழுதிய கடிதத்தில் தான் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்வதாக எழுதியிருந்தாள். வீட்டு வேலைகளுடன் பத்துக்குழந்தைகளையும் பார்க்கும் பொறுப்பு என்னிடம் சுமத்தப்பட்டிருக்கிறது. காலையில் மூன்று மணிக்கு எழுந்து இரவில் நீண்ட நேரம் வரையும் ஓயாமல் வேலை செய்கிறேன் என்று குறிப்பிட்டிருந்ததாக BBC நிருபரின் செய்தியொன்று சொல்கிறது.

அன்னிய நாடுகளில் கொடுமைசெய்யப்படும் குடும்பங்களில் றிஷானா போன்ற பல பெண்கள் பல விதமான கொடுமைகளை அனுமவிக்கிறார்கள். அடி உதை, பாலின வதைகளுக்கு முகம் கொடுக்கும் இலங்கைப் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். 500.000 பெண்கள் வேலைக்காரிகளாக அயல் நாடுகளில் அவதிப்படுகிறார்கள். தங்களின் வறுமையைப் போக்க, தங்களின் குடும்பத்தைப் பாதுகாக்க வெளி நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் இலங்கையைச் சேர்ந்த ஏழைப்பெண்களுக்கு சட்ட ரீதியாக எந்தப் பாதுகாப்பும் கிடையாது. வயதுக் கட்டுப்பாடு கிடையாது. குடும்ப நிலை பார்க்கப்படுவதில்லை.

அதாவது வேலைக்குப் போகும் பெண் ஒரு இளம் தாயா அல்லது பல குழந்தைகளுக்குத் தாயா என்றெல்லாம் பார்ப்பதில்லை. வேலைக்குப் போவோரின் மனநிலை பற்றிய எந்தவிதமான கணிப்பும் கிடையாது. குழந்தை பராமரிப்புக்குப் போவோருக்கு உருப்படியான பயிற்சி கொடுபடுவதில்லை. இதைப்பற்றி இலங்கை வெளிவிவகார அதிகாரிகள் கவலைப்படுவதாகவும் தெரியாது.

இந்தப்பெண்னை அனுப்பிய ஏஜென்சியிடம் (திரு. சவுல் லதிப்) விசாரித்தபோது' வயது விவகாரங்களை மாற்றிப் பாஸ் போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்குப் போவது இலங்கையில் சாதாரணமாக நடக்கும் விடயமெனச் சொல்லியிருக்கிறார். இலங்கையிற் தொடரும் போர்ச் சூழ்நிலை அதிலும் கிழக்குப்பகுதியில் நடக்கும் தொடர்ந்த தாக்குதல்கள், இடப்பெயர்வுகள் என்பன மக்களை மிகவும் வறுமை நிலைக்குத் தள்ளி¢ விட்டிருக்கிறது. வறுமையால் வயிற்றுப் பிழைப்புக்கு வெளிநாடு செல்லும் ஏழைப் பெண்களின் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டு வருகிறது.

சவூதி அரேபியா மட்டுமல்லாமல் மத்திய தரைக்கடல் நாடுகள், தென்னாசிய நாடுகள் பலவற்றில் எங்கள் நாட்டுப்பெண்கள் பணிப்பெண்களாகச் சென்று கோடி கோடியான வெளிநாட்டு செலவாணியை இலங்கைக்கு எடுத்துக் கொடுக்கிறார்கள்.இலங்கையில் உள்ள ஊழல் ஆட்சியில் இப்படியான கொடுமைகள் விஷவிருட்சமாக வளர்ந்து நாட்டிலுள்ள பல சமுதாயங்களையும் அல்லற் படுத்துகிறது.

இலங்கை அரசாங்கம் வெளிநாடு செல்லும் பணிப்பெண்களைப் பற்றியோ அவர்களின் தகுதியோ பற்றியோ பெரிய அக்கறை எடுக்கவில்லை என்பது இந்த வழக்கு விவகாரத்திலிருந்து தெரிய வருகிறது.

நான்கு மாதக் குழந்தையை றிஷானா கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ஆனால் குழந்தைக்குப் பாலூட்டும்போது குழந்தையின் தொண்டையில் பால் சிக்கித் திமிறியபோது குழந்தையின் நிலைக்கு நிவாரணம் தேடக் குழந்தையின் கழுத்தைத் தடவியதாக றிஷினா நசீக் தனது வாக்குமூலத்தில் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. 4 மாதக் குழந்தைக்குச் சரியாகப் பாலூட்டும் அனுபவம் 17 வயதுப் பெண்ணுக்கு இருந்திருக்குமா என்பது கேள்விக்குரிய விடயமே. இறந்த குழந்தை சரியாகப் பால் குடிக்க முடியாத நிலையில், அதாவது வேறு வருத்தகாரணமாகச் சோர்ந்த்திருந்ததா அதனால் பால் தொண்டையில் சிக்கித் திணறியதா என்ற விசாரணை ஏதும் நடத்தப்பட்டதா என்பதும் தெரியாது.

றிஷானா நபீக் என்ற ஏழைப்பெண் இலங்கையிலிருந்து 4.05,05ல் சவூதி போயிருக்கிறார். 7.06.05ல் (33 நாட்களின் பின்) இலங்கை ஸ்தானிகராலயத்திற்கு றிஷானா நபீ£க் பராமரித்த குழந்தை இறந்த கொலை விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. றிஷானா நபீக்கின் பிறந்த நாள்ச் சேர்ட்டிபிக்கட்டின்படி, கொலை நடந்த கால கட்டத்தில் அவரின் உண்மையான வயது 17 ஆகும்( 04.02.1988). ஆனால் அவரின் பாஸ்போர்ட்டின் (02.02.1982)

படி அவரின் வயது 23 (என்று சொல்லப்படுகிறது. இப்படிப் பொய் ஆவணங்களையுண்டாக்கி ஆள் சேர்ந்த்து வெளிநாடு அனுப்புவது பற்றி இலங்கை அரசாங்கம் கண்மூடித்தனமாக இருப்பதற்கு றிஷானா நபீ£க் போன்ற ஏழைப் பெண்களின் வாழ்க்கை பாழாவதை மனித உரிமை விடயங்களில் அக்கறை கொண்டவர்கள் கண்டிப்பது மிகவும் அவசியம்.

வீட்டு வேலைகளுக்கு என்று சொல்லிவிட்டு குழந்தையைப் பராமரிப்பதுபோன்ற வேலைகளில் வயதும் குழந்தையைப்பராமரிக்கும் அனுபமவும் இல்லாதவர்களை வேலைக்கு அனுப்பும் ஏஜான்சிக்காரர்களும் அவர்களைக்கண்டும் காணாதமாதிரி ஆட்சி நடத்தும் இலங்கை அரசாங்கமும்தான் கூண்டில் நிறுத்தப்படவேண்டிய பெரிய குற்றவாளிகள்.

இலங்கையின் ஏற்றுமதியில் முக்கிய மூலதனம் எங்கள் நாட்டு ஏழைப்பெண்களின் உழைப்பாக்கும்.

இந்தப் பெண்கள் பலைன் இவர்களின் உழைப்பை வைத்துக்கொண்டு ஆடம்பர வாழ்க்கை நடத்தும் அரசியல்வாதிகள், மந்திரிகள் என்போருக்கு எதிராகக் குரல் கொடுப்பது மனித உரிமையில் அக்கறை கொண்ட அத்தனைபேரினதும் கடமையாகும்.

றிஷாவின் விடுதலைக்கு உதவ நல்ல மனிதர்களின் முயற்சி கிடைத்தால் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்.

றிஷானா நபீக்கைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றிய இறந்த குழந்தையின் பெற்றோரின் மன்னிப்புக் கிடைத்தால் மட்டுமே றிஷானா நபீக்கு விடுதலை கிடைக்கும்.

இறந்த குழந்தையின் பெற்றோர் றிஷானாவை மன்னித்தால் கடவுள் றிஷானை மன்னிப்பார் என்பது அவர்களின் நம்பிக்கை என்பதால் குழந்தை இறந்ததற்குச் சரியான காரணங்களைக் கண்டறியாமல் வறுமை காரணமாகத் தங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்த ஏழைப் பெண்ண்ணில் பழிபோட்டு அவளின் தலயைவெட்டி மரணதண்டனை கொடுக்கச் சொல்வது மனித தர்மமல்ல.

ஒரு இளம் பெண்(பதினேழு வயது) ஒரு பணக்கார வீட்டில் வேலைக்கு வருகிறாள். தன்னை அந்த வீட்டுத் தலைவி மிகக் கொடுமையாக அடித்து உதைத்துக் கொடுமை செய்திருக்கிறாள். நான்குமாதக் குழந்தை இளம் பெண்ணின் பரமரிப்பில் விடப்படுகிறது. வேலை சரியாகச்செய்யத் தெரியாது என்று அடிபோடும் வேலைக்காரியிடம் குழந்தையின் பராமரிப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின் ஒரு மாதத்தின்பின் அந்த இளம் பெண் கொலைகாரியாக்கப்படுகிறாள்.

அதன்பின் அந்த வீட்டுத் தலைவி , வேலைக்கார இளம் பெண்ணின் உயிர்போகவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்பதின் பின்னணியில் எத்தனையோ விடயங்கள் அடங்கியிருக்கலாம் என்பதை ஊகிக்கத் தோன்றுகிறது. அந்த வீட்டில் நடந்த உண்மையாகப் பல விடயங்கள் பின்னணி தெரியாமல் ஒரு உயிர் போவதைத் தடுப்பது நியாயத்திற்குப்போராடும் ஒவ்வொருத்தர்ன் பணியென நினைக்கிறேன்.

குழந்தையின் தாய் தகப்பனின் கருணை கிடைத்தால் மட்டுமே றஷினா நபீக் விடுதலை செய்யப்படுவார் என்பதால் இறந்த குழந்தையின் பெற்றோரின் கருணையைக் கேட்டுக் கடிதம் எழுதும்படி மிக மிகப் பணிவாகவும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கிறேன். எத்தனை கடிதங்கள் போகின்றனவோ அவ்வளவுக்கு நாங்கள் அந்தப் பெண்ணுக்கு உதவுவோம்.

இறந்த குழந்தையின் தாய் தகப்பன், றிஷானா என்ற இளம் பெண்ணுக்குக் கருணை காட்டி மன்னிப்புக் கொடுப்பதற்கு இறைவன் துணைபுரிய எங்கள் உளமார்ந்த பிரார்த்தனைகளைச்செய்வோம்.

காலம் தாழ்தாமல் உடனடியாகச் சிலவரிகள் எழுதி - இமெயில் மூலமாகவோ பேக்ஸ் மூலமாகவோ அனுப்புங்கள்.

தயவு செய்து, உங்கள் கடிதங்களை உடனடியாக அனுப்பவும்.

Father of the dead child,(re Rizana Nafeek)
Mr. Naif Jiziyan Khalaf Al Otaibi
c/o, Sri Lankan Embassy,
Po Box,94360
Riyadh-11693
Soudi Arabia

Fax.00 9661 460 8846, e mail--. lankaemb@sabakah.net.sa

என்ற விலாசத்திற்கு அனுப்பவும். இன மத மொழி பேதமின்றி இந்த ஏழைப்பெண்ணுக்கு உதவுவோம். கடிதம் எழுத எடுக்கும் ஒரு சிறு நேரப் பணி ஒரு உயிரைக்காப்பாற்றும் என்பதை மனதில் வைக்கவும்.

ஆற அறிந்து வழங்குவதே உண்மையான நீதி என்பதைத் தர்மமாகப் படித்த சமுதாயத்திலிருந்து வந்த நாங்கள் றிஷானா நபீக் என்ற பெண்ணுக்குச் நீதி கிடைக்க உதவுவோம்.


இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ( rajesbala@hotmail.com)
நன்றி: கீற்று

Sunday, January 06, 2013

மாதரை காப்போம் - டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்

மாதரை காப்போம் 
டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத்



நகையணிந்த நங்கை நள்ளிரவில் நடுத்தெருவில் பாதுகாப்பாக நடமாட முடிந்த நாளே இந்தியாவுக்கு சுயராஜ்யம் கிட்டிய நாள் - அண்ணல் காந்தியடிகள்''.
சமூகத்தில் சரிபாதியாக இருக்கும் இனத்திற்குப் பாதுகாப்பு தராத சமூகத்தை சுதந்திரம், கண்ணியம், மனிதநேயம் உள்ள சமுதாயம் என்று சொல்ல முடியாது.
தில்லியில் 23 வயது நிரம்பிய பெண்ணை ஓடும் பேருந்தில் அறுவரால் கூட்டுப் பாலியல் வன்செயலுக்கு உள்ளாக்கிய சம்பவம் நாட்டு மக்களின், குறிப்பாக இளைஞர்களின் சினத்தைக் கிளறியுள்ளது. போராட்டமும் தடியடியும் வாதங்களும் சர்ச்சைகளும் நடைபெற்றன. இவை பாலியல் வன்செயல்களுக்கு ஒரு தீர்வைக் காணுமா அல்லது ஆர்ப்பாட்டங்களோடு நின்றுவிடுமா என்பதுதான் நமக்கு முன்னுள்ள வினாவாகும்.

பாலியல் வன்செயலை சட்டம், ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு ஒப்பாகும். குற்றவாளிகளுக்குத் தண்டனை அளிக்கப்படுவதால் மட்டுமே வன்செயல்கள் நின்றுவிடப்போவதில்லை. தில்லியில் நடைபெற்ற சம்பவம், ஆழ்ந்து விரிந்து கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கும் பனிமலையின் ஒரு நுனியை மட்டுமே நமக்குக் காட்டியுள்ளது. எனவே ஆழமான பிரச்னைகளுக்கு ஆழமாகச் சிந்திக்காமல் மேற்போக்காக சில தீர்வுகளைக் கூறுவது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
பாலியல் வன்செயல்களை அகற்ற சமூகம், சட்டம், காவல்துறை, நீதித்துறை ஆகிய அனைத்திலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

தேசிய குற்றவியல் பதிவுத் துறை (என்சிஆர்பி) தரும் தகவல்படி ஆண்டுக்கு 24,206 பாலியல் வன்செயல்கள் பற்றிய புகார்கள் பதிவுசெய்யப்படுகின்றன. ஒவ்வொரு 22 நிமிஷங்களுக்கும் ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறாள். இத்தகைய சம்பவங்களில் 94.2 விழுக்காடு அந்தப் பெண்ணுக்குப் பரிச்சயமானவர்களாலேயே நடத்தப்படுகின்றன என்று கூறுகிறது தேசிய குற்றப்பதிவுத் துறை. மொத்தப் பாலியல் வன்கொடுமைகளில் பெற்றோர்களாலும் நெருங்கிய உறவினர்களாலும் நிகழ்த்தப்பட்டவை 1.2 விழுக்காடு. அக்கம்பக்கத்தினரால் நிகழ்த்தப்பட்டவை 34.7 விழுக்காடு. உறவினர்கள், நண்பர்களால் நிகழ்த்தப்பட்டவை 6.9 விழுக்காடு.
பணியிடங்களில் மேலதிகாரிகளாலும், பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாலும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகின்றனர். காவல் நிலையம், மருத்துவமனை, மகளிர் இல்லம், குழந்தைகள் இல்லம் ஆகியவற்றின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களும் தம்மிடமுள்ள பதவியையும் தம்மிடத்தில் அடைக்கலமாக உள்ள பெண்களின் பலவீனத்தையும் பயன்படுத்தி வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுகின்றனர். தெருவிலும் பேருந்திலும் ரயிலிலும் நடைபெற்ற பலாத்காரங்களைவிட நான்கு சுவர்களுக்குள் நடைபெறும் வன்செயல்களின் எண்ணிக்கை அதிகம்.

பதிவு செய்யப்பட்ட குற்றங்களைவிடப் பதிவு செய்யப்படாதவை பலமடங்காகும். சமூகத்திற்கு அஞ்சியும் நீதிமன்ற அலைக்கழிப்பிலிருந்து விடுபடவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தம்மைப் பழிவாங்கிவிடுவர் என்பதை எண்ணியும் பலர் குற்றங்களைப் பதிவு செய்ய முன்வருவதில்லை. மேலும், விசாரணையின்போது நீதிபதி, வழக்கறிஞர், காவல்துறை அதிகாரிகள், நீதிமன்ற ஊழியர்கள் முன்பு கேட்கப்படும் கேள்விகள் பாலியல் வன்புணர்ச்சியைவிடக் கொடுமையானவைதாமே? இதன் காரணமாகப் பல பெண்கள் குற்றங்களைப் பதிவு செய்வதில்லை.

சட்டத்தின் பிடியிலிருந்து எப்படியும் தப்பிக்கலாம் என்பதே பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கான முக்கிய காரணமாகும். சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்ற வாதத்தில் நியாயமிருந்தாலும் இருக்கின்ற சட்டங்களை முறையாகச் செயல்படுத்தினாலே குற்றங்களைக் கணிசமாகக் குறைக்க முடியும். பாலியல் வன்புணர்ச்சி குற்றச்சாட்டுகளில் 26.4 விழுக்காடு வழக்குகளில் மட்டுமே தண்டனை பெறுகின்றனர் என்கிறது என்சிஆர்பி.

காவல்துறையினரின் உணர்ச்சியற்றதனம், மெத்தனம், அலட்சியம், பாதிக்கப்பட்ட பெண்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமை ஆகியவற்றின் காரணமாகப் பல வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. பதிவு செய்யப்பட்ட பல வழக்குகளில் போதிய ஆதாரமின்மையால் குற்றவாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். குற்றவாளிகளைக் கைது செய்யும்போது தேவையான தடயவியல் சான்றுகளைச் சேகரித்துக்கொள்ளாமையும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பரிசோதனைக் கூடங்கள் இல்லாமையும் முக்கியக் காரணமாகும்.

தில்லியிலுள்ள 80,000 காவல்துறையினரில் கணிசமானோர் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புப் பணிகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறார்கள். 20,000 முதல் 25,000 காவலர்கள் மட்டுமே தெருக்களில் காணப்படுகின்றனர். பணிச்சுமைகளின் அழுத்தம், காவல் துறையினருக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படாததினால் குற்ற விசாரணையில் போதிய கவனத்தை அவர்களால் செலுத்த முடியவில்லை.

நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறுகின்ற வேகம் குற்றவாளிகளுக்குத் தெம்பைத் தருகின்றது. விரைவான நீதியே குற்றவாளிக்கு அச்சத்தைத் தரும். நீதிமன்றங்களின் எண்ணிக்கையைப் பெருக்குதல், நீதிபதிகளை அதிகப்படுத்துதல், கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கி நவீனப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதோடு, வாய்தா வாங்குவதற்கும் ஒரு வரையறையைக் கொண்டுவராத வரை நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கவே செய்யும். வழக்கறிஞர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது அரசு இதில் ஒரு துணிவான முடிவை எடுக்க வேண்டும். விரைவாக நீதி வழங்கப்படுகின்ற நாடுகளில் குற்றங்கள் குறைவாக நிகழ்கின்றன என்பது கவனத்திற்குரியது.

ஆறாக ஓடும் மதுவும் குற்றங்கள் பெருகக் காரணமாகிறது. பாலியல் வன்செயல்கள் மட்டுமல்லாமல் கொலை, கொள்ளை கலவரங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவோர் மது அருந்திய நிலையிலேயே அவற்றைச் செய்கின்றனர். மதுவுக்குக் கால் முளைத்தால் அது மாதுவிடம்தான் செல்லும். தில்லியில் பாலியல் வன்புணர்ச்சியைச் செய்தவர்களும் மது அருந்திய நிலையிலேயே இருந்தனர். ஆனால் போராட்டம் நடத்தும் எவரும் மதுவை ஒழிக்கவேண்டும் என்று முழக்கம் எழுப்பியதாகத் தெரியவில்லை.
ஆபாச உணர்வுகளைக் கிளறிவிடும் திரைப்படங்கள், புத்தகங்கள், இதழ்கள், விடியோ விளையாட்டுகள் ஆகியவையும் பாலியல் வன்கொடுமைகளுக்கு இட்டுச் செல்கின்றன என்பதை எல்லோரும் வசதியாக மறந்துவிடுகின்றனர்.

சட்டங்களைக் கடுமையாக்க வேண்டும் என்ற முழக்கம் அதிகமாக ஒலிக்கின்றது. இப்போது நடைமுறையிலுள்ள இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 376 பாலியல் வன்புணர்ச்சிக்கு ஏழு ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரை நீடிக்கக்கூடிய தண்டனை கொடுக்கலாம் என்கிறது. இதை மரண தண்டனையாக மாற்றவேண்டும் எனும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. மரணதண்டனை எனச் சட்டதிருத்தம் கொண்டுவந்தால் வன்புணர்ச்சிக்கு உள்ளான பெண், குற்றவாளியைக் காட்டிக்கொடுத்துவிடுவாள் என்ற பயத்தில் குற்றவாளிகள் அப்பெண்ணைக் கொன்றுவிடுவார்கள் என்பதைக் காரணம் காட்டி மரண தண்டனை வேண்டாம் என்று வாதிடுகின்றனர். இது ஏற்றுக்கொள்ளத்தக்க வாதமல்ல. குற்றத்தின் கொடுமைதான் தண்டனையின் அளவை நிர்ணயிக்க வேண்டும். அத்தோடு தண்டனையின் அளவு குற்றங்கள் செய்யாதவாறு மக்களைத் தடுப்பதாகவும் அச்சுறுத்துவதாகவும் இருக்கவேண்டும்.

சட்டங்களைக் கடுமையாக்குவதால் மட்டும் குற்றங்கள் குறைந்துவிடாது. சட்டங்களை அக்கறையோடும் முறையாகவும் விரைவாகவும் குற்றவாளிகள் தப்பிக்காதவண்ணம் செயல்படுத்தும்போது குற்றங்கள் குறையும்.
கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களுக்கும் குடியரசுத் தலைவரின் உத்தரவின் பேரில் தண்டனைக் குறைப்பு செய்வது சரியா என்ற கேள்வியும் எழுகிறது. இது எப்படியும் தப்பித்துவிடலாம் என்ற உணர்வையே குற்றவாளிகளிடம் ஏற்படுத்தும்.

சமீபத்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலையும் செய்த நால்வருக்கு மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு ஓய்வுபெறுவதற்கு முன்னால் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் எல்லாத் துறைகளிலும் காணப்படும் அலட்சியம், அக்கறையின்மை, தாமதம், ஊழல், சிவப்புநாடா முறை, பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட நிர்வாக நடைமுறைகள் ஆகியவற்றைப் போக்கும் முகமாக நிர்வாகச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுப் புத்துணர்ச்சியும் புதுவேகமும் அளிக்கப்படவேண்டும். பணிகள் எளிதாகவும் விரைவாகவும் முறையாகவும் நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும் வகையில் சீர்திருத்தங்கள் அமைய வேண்டும். குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க ஜி.பி.எஸ். கண்காணிப்பு கேமராக்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அதிக அளவில் பயன்படுத்தவேண்டும்.

குற்றம் சுமத்தப்பட்டவர்மீது நியாயம் இருந்தால் வழக்கறிஞர்கள் அவர்களுக்காக வாதாடலாம். ஆனால் குற்றவாளிகள் பக்கம் எந்த நியாயமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்த பின்பும் அவர்களுக்காக வாதாடுவது எந்த வகையிலும் தர்மம் ஆகாது.

பாலியல் குற்றங்கள் குறைய பெண்களைப் பற்றிய சமூகத்தின் கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பெண்களைச் சுமையாகவும் இழிவாகவும், போகப் பொருளாகவும் பார்க்கும் மனநிலை மாறவேண்டும். பாலியல் வன்புணர்ச்சிக்குப் பலியான பெண்களை அருவருப்பாகப் பார்க்காமல் அநீதிகளை எதிர்த்துப் போராடிய வீரமங்கைகளாகப் பார்க்கவேண்டும்.

இச்சைகளைத் தூண்டும் விதத்தில் ஆபாசமாக ஆடைகள் அணிவதும், பூங்காக்கள், பேருந்துகள், கடற்கரை, வணிக மால்கள் போன்ற பொது இடங்களில் நாணமின்றி நடந்துகொள்வதும் குற்றவாளிகளைக் கூவி அழைப்பதுபோல் உள்ளன. இதைப் பெண்ணியவாதிகள் கடுமையாக எதிர்ப்பார்கள் என்பது தெரிந்ததே. இச்செயல்கள்தாம் பாலியல் வன்கொடுமைகளுக்கு மூலகாரணம் என்று சொல்வதற்கில்லை; இதுவும் ஒருவகையில் காரணம் என்பதை ஏற்றே ஆகவேண்டும்.

அதிகம்பேசப்படாத, பேசத் தயங்கும் ஒரு விஷயத்தையும் சொல்லித்தான் ஆகவேண்டும். ஒழுக்க மாண்புகள் மிக்க, விழுமங்களைப் பின்பற்றுகின்ற சமூகத்தை உருவாக்குவதில் நமது முழு கவனமும் இருக்கவேண்டும். ஒரு சமூகத்தின் ஒழுக்க வீழ்ச்சி அந்தச் சமூகத்தின் எல்லாத் துறைகளையும் பாதிக்கிறது. விழுமங்களைக் கற்றுத்தரும் ஏற்பாடுகளைப் பெற்றோர், ஆசிரியர்கள், ஆன்மிகத் தலைவர்கள், மனிதநேயர்கள், தேச பக்தர்கள் ஆகியோர் தொடர்ந்து செய்து வரவேண்டும். பாடதிட்டங்களிலும் இதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

கொடூரமான நிகழ்வுகளின்போது மக்கள் ஆத்திரமுற்று வீதிக்கு வருவது இயற்கையே. ஆனால் போராட்டங்கள் மட்டுமே பிரச்னைகளுக்குத் தீர்வு ஆகாது. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளை நிறுத்த இந்திய அளவில் அமைப்புகளை உருவாக்கி முறையாகத் தொடர்ந்து செயல்படவேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆளும் வர்க்கத்தைத் தட்டிக்கேட்டல், நீதிமன்றங்களில் வழக்குதொடர்தல், பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பாதுகாப்பும் ஆதரவும் தருதல் எனும் வகையில் தொடர்ந்து பணியாற்றினால் மட்டுமே மாற்றங்களைக் காணலாம்.

Saturday, November 03, 2012

மக்கள் தொலைக்காட்சியில் எமது பேட்டி

 

வணக்கம் தோழர்களே,
சமீப சில நாட்களாக எமது இராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் அசாதாரன சூழல் குறித்தும் வண்முறை நிகழ்வுகள் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து "இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இயக்க"த்தின் சார்பாக "மக்கள் தொலைக்காட்சியில" இன்று ஒளிபரப்பான "மறுபக்கம்" என்ற நிகழ்ச்சியில் மக்கள் படும் துன்பங்கள் குறித்து எமது கருத்துக்களை பதிவு செய்தேன் அதே போல் எஸ்.டி.பி.ஐ கட்சியின் பிரமுகரும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளருமான தம்பி ஜமீல் அவர்களும் தனது கருத்தை பதிவு செய்திருந்தார். அதன் வீடியோ காட்சிகள்.

Saturday, October 27, 2012

காவல்துறையே - காவிகளே இப்ப காட்டுங்களேன் உங்கள் வீரத்தை??

காவல் புலிகளே…தூக்கிபோட்டு பாருங்கள் ஒரு சிறு துறும்பை…?






 

ஒரு போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் சில இசுலாமிய இளைஞர்களால் கொல்லப்பட்டதாக கூறி ஒரு இனத்தையே அழிக்கும் நோக்கோடு கோவையில் இசுலாமிய மக்களை இன அழிப்பில் ஈடுபட்டது கோவை காவல்துறை.காவிபயங்கரவாதிகளாளும் காவல்துறையும் முஸ்லீம்களின் பலகோடி சொத்துக்களை கொள்ளையிட்டு அவர்களின் வணிகநிறுவனங்களுக்கு தீ வைத்து முஸ்லீம்களை முடக்கியது. குஜராத்தில் நரபலி மோடியின் பாசிச ஆட்சியிக்கு சற்றும் குறையாமல் 1997 நவம்பர் கலவரத்தை மறக்க முடியாது. அன்று கோகவை காவல் துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் எங்கும் நிகழா அதிசயங்கள் நடந்தது. காவல்துறையினரும் பாசிச பயங்கரவாதிகளும் இனைந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இன்று மருதுபாண்டியர் குருபூஜைக்கு வந்தவர்கள்-போலீசை கத்தியால் குத்தி ! சப்-இன்ஸ்பெக்டர் மரணம் !

குருபூஜை தொடர்பில் சிவகங்கையில் ஒரு துனை ஆய்வாளர் கொல்லப்பட்டு இருக்கிறார் தமிழக காவல்துறை இதன் தொடர்பில் என்ன செய்ய போகிறது….?
ஒரு போக்குவரத்து காவலர் கொல்லப்பட்டார் என்பதற்காக 19 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்.

ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒரு சமுகத்தையே கருவறுக்கும் நோக்கோடு அன்று காவல்&காவிகள் இனைந்து இனபடுகொல்லையில் ஈடுபட்டார்களே..
அவர்களில் ஒருவர்கூட சட்டத்தால் தண்டிக்கப்படவில்லை..!

சட்டத்தின் முன் அனைவரும் சமமா..?
வெங்காயங்களா..?
நடுநிலை பேசும் நல்லவியங்களா..!
இப்போ பேசுங்க உங்க நியாத்த..!
 
நன்றி : உமர்கயான் சே.ஜெ

மாற்று ஊடக பதிவாளர்களுக்கு எதிரான பயமுறுத்தல்களை எதிர்கொள்வோம்

மாற்று ஊடக பதிவாளர்களுக்கு எதிரான பயமுறுத்தல்களை எதிர்கொள்வோம்….



இன்று அச்சு ஊடகங்களிலும், தொலைகாட்சி ஊடகங்களிலும் தங்களின் சனநாயக பார்வையை, அல்லது மாற்றுகருதோட்டங்களை, தங்களின் எதிப்புணர்வுகளை பதிவு செய்ய முடியாத அல்லது அதற்கு வாய்பற்றவர்கள் தங்களின் உணர்வு நிலையை வெளிப்படுத்த சமுக வளைத்தளங்களை பயண்படுத்திவருகிறார்கள்.


அடிப்படை ஆதாரமற்ற போலி குற்ற சாட்டுகளால் இனைய பதிவாளர்கள் ராசன், சரவணகுமார் ப
ாடகி சின்மயின் குற்றசாட்டுகளால் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இரண்டுவருடங்களுக்கு முன் மீனவர்கள் பிரச்சனை, மற்றும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான கருத்துக்களை பதிந்த தத்துவ ஆசான் சின்மயின் சின்னத்தனமான கருத்துக்களுக்கு எதிர்வினையாக அப்போழுது தெரிவித்த எதிர்கருத்துக்களை திரித்தும் தனது செல்வாக்கை பயன்படுத்தி புகார் கொடுத்துள்ளார்.

இதில் சில அட்டகத்திகள் குறுக்கே சால் ஓட்டிக்கொண்டிருக்கிறது தங்களை சனநாயக காவலர்களாக காட்டிக்கொண்டிருக்கும் இவாள்களும் ஆவாள்கள் ஆக முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆதே இனைய வெளியில் சூத்திர கூ… என பதிவிடுபவன் பற்றி எந்த சூத்திரனுக்கும் கோபம் வரவில்லை….

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்…

இது தனி சின்மயின் புகாரின் மீதான இனைய பதிவர்களின் மீதான காவல் துறையின் தாக்குதல்களாக நாம் பார்க்கமுடியாது.அரசும் அது சார்ந்திருக்கும் தத்துவங்களும் மாற்று ஊடக சனநாயகவாதிகள் மீதும், குறிப்பாக தமிழர்கள், தமிழ் உணர்வாளர்கள், சனநாயக சக்திகளுக்கு மறைமுகமாக எச்சரிக்கை செய்ய விரும்புகிறது..

இதை அனுமதித்தால் நாளை எவரும் தனது சனநாயக உரிமைகளுக்காக குரல் எழுப்ப முடியாது. வேறு ஒருவரின் பொய் புகார் அடிப்படையில் நீங்களும் கைது செய்யப்படுவீர்கள்..இவர்களுக்கும், அவாள்களுக்கும் நாம் நாம் சார்ந்த தத்துவத்தின் பெயரால் பதில் கொடுக்கவேண்டும்…

உனது எச்சரிக்கையும், தாக்குதல்களும், சிறையும், எங்களை என்ன செய்ய முடியும்..? என உணரவைக்கவேண்டிய தருணமிது….

இனையத்திலோ… அல்லது பத்திரிக்கைகளில் எழுதியோ நாங்கள் மக்களை அணிதிரட்டவேண்டும் என்ற கட்டாயமில்லை…

நாங்கள் தெரு தெருவாக, கிராமங்கள், நகர்புரங்கள் என மக்களிடம் சனநாயகத்திற்கான குரலை கொண்டு சென்றவர்கள்.சனநாயக குரலை ஒடுக்க அரசு,காவல் துறை, அரசை தாங்கும் பார்பணியம் என அனைவரும் ஓர் அணியில்….நீங்களும் நானும்…..?
வழக்கறிஞர். உமர்கயான் சே.ஜெ
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
செல். 9944112879

Monday, October 15, 2012

TNTJ சகோதரர்களுக்கு வேண்டுகோள் - PVM அறக்கட்டளை

TNTJ சகோதரர்களுக்கு வேண்டுகோள்



அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ,

கடந்த சில தினங்களுக்கு முன்பு அண்ணன் பி.ஜே அவர்கள் உடல்நலம் பற்றிய தகவல் ஃபேஸ்புக்கி்ல் பார்த்தேன். 1989 ம் ஆண்டு முதல் 2004 ம் ஆண்டு வரை அண்ணனை விட்டு பிரிந்து இருக்கிறேன். சேர்ந்து இருந்த காலத்திலும் பிரிந்து இருந்த காலத்திலம் நான் பி.ஜே ப்ற்றியும் பி.ஜே சார்ந்துள்ள இயக்கங்கள் பற்றியும் அவதுர்று பேசியதில்லை. பி.ஜே யும் நானும் ஒரே மேடையில் பல கூட்டங்களில் பேசியிருக்கிறோம் ஆனால் பி.ஜே அவர்களின் உடல் நலம் பற்றிய அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்ட வார்த்தைகள் தவறானது என்பதை ஃபேஸ்புககில் சுட்டிக்காட்டி இருந்தேன். உடல் நிலை சரியில்லை என்று சொன்னால் மருத்துவம் பார்க்க வேண்டும், அதை விட்டு விட்டு எனக்கு உதவி செய்ய யாரும் வராதீர்கள் என்று பி.ஜே கூப்பாடு போடுகிறார்.

நான் கேட்கிறேன் பி.ஜேக்கு உதவி செய்ய கியு வரிசையில் மக்கள் காத்து நிற்கிறார்களா? அல்லது பி.ஜே தனக்கு உதவி செய்யும் படி மறைமுகமாக உதவி கேட்கும் வார்த்தைகளா? அடுத்து பி.ஜே சொல்கிறார் : "நான் மருத்துவமனையில் சேர்ந்த உடன் உளவுத்துறைக்கு உடனே தெறிந்துவிடும்" என்று , திருவாளர் பி.ஜே மருத்துவமனையில் சேர்வதற்கும் உளவுத்துறைக்கும் என்ன சம்பந்தம்? அப்படியானால் திருவாளர் பி.ஜே  உளவாளியா? காட்டிக்கொடுப்பவரா? அடுத்து பி.ஜே சொல்கிறார் : "எதிரி அமைப்புகளுக்கு உடனே தெறிந்துவிடும்" எதிரி அமைப்புகள் என்றால் யார்? சகோதர அமைப்புகளை மார்க்கம் அறிந்த பி.ஜே அவர்களே எதிரி அமைப்பு என்று சொல்லலாமா? தன்னையும் தனது TNTJ  அமைப்பை பின்பற்றுபவர்களையும் தவிர மற்றவர்கள் எல்லாம் நேர்வழி பெறாதவர்கள் என்று ஃபத்வா கொடுத்த பி.ஜேக்கு வேண்டுமானால் அது சகஜமாக இருக்கலாம். 

நான் அனுப்பிய செய்தியை ஃபேஸ்புக்கில் படித்தவர்கள் TNTJ இய்கத்தை சேர்ந்தவர்கள், பி.ஜே மீது பக்தி கொண்டவர்கள், நான் அனுப்பிய கடிதத்தின் சாராம்சத்தை சரியாக புறியாதவர்கள் என்னிடத்தில் நேரடியாக விளக்கம் கேட்பதை விட்டுவிட்டு சகோதர அமைப்பான INTJ யின் எஸ்.எம் பாக்கர் அவர்களையும் இணையதள எழுத்தாளர் முகவைத்தமிழன் (எ) ரைசுதீனை பற்றியும் உண்மைக்கு மாறான புணையப்பட்ட பத்திரிகை தகவல்களை அடிப்படையாக கொண்ட அவதூறான செய்திகளை பரப்பியதோடு எனக்கும் அனுப்பியுள்ளார்கள். எந்த ஒரு சகோதர இயக்கங்களை சேர்ந்தவர்களையும், தனது அமைப்பில் உள்ள தனக்கு அடுத்த கட்டத்தில் உள்ள நிர்வாகிகள் தன்னை முந்த முயன்றால் அவர்கள் மீதும் பொறாமை கொண்டு அவதுர்று பேசுவதும் , பொய்யான குற்றம் சுமத்துவதும் தீர விசாரிக்காமல் தவறான செய்திகளை பரப்புவதும் பி.ஜே அவர்களின் தனிப்பன்பு இதையே அவர் தனது பக்தர்களுக்கும் கற்றுக்கொடுத்துள்ளாரா?

காவல்துறையால் போடப்படும் வழக்குகள் அணைத்தும் உண்மையானது அல்ல!;! பெரும்பாலும் பழிவாங்கும் நோக்கில் பொய்யான வழக்குகளையே பிரபலமானவர்கள் மீது காவல்துறை பதிவு செய்கிறது. இன்னும் தமிழகத்தில் காவல்துறையால் போடப்படும் வழக்குகளில் 95 சதவீதம் பொய் வழக்குகள் என்று பிற்பாடு நீதிமன்றத்தில் நிறுபிக்கப்பட்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் நசிரபராதிகளாக விடுதலை செய்யப்படுவது நமது கண்கூட காணும் நிகழ்ச்சிகள் . காவல்துறை போடும் வழக்குகள் எல்லாம் உண்மையானால் பி.ஜே அவர்கள் மேல் தொண்டி காவல்நிலையத்தில் போடப்பட்ட வழக்குகள் உண்மையா? மலேசியாவில் போதைப்பொருள் கடத்தியதாக பி.ஜே மீது போடப்பட்ட வழக்கு உண்மையா? இதைக்கூட TNTJ அமைப்பினர் உணர வேண்டாமா?

தவ்ஹீது பிரச்சாரத்தை மேற்கொள்ள கூடிய பி.ஜேயும் அவருடைய பக்தர்களும் இஸ்லாமிய அமைப்புகளை பற்றி தவறாக பேசுவது ஏன்? தேர்தல் காலங்களில் ஏதாவது ஒரு கட்சியை தாங்கி பிடித்து கொண்டு பி,ஜேயும் அவரது பக்தர்களும் பிரச்சாரம் செய்வது சரியா? அரசியலே வேண்டாம் , அரசியலில் சீட்டு கேட்க மாட்டோம் , தவ்ஹீது மட்டுமே எங்களது கொள்கை என்று முழங்கும் நீங்கள் தேர்தல் காலங்களில் பி.ஜே ஆதரிக்கும் வேட்பாளர் குடிகாரன், விபச்சாரன், திருடன், லஞ்சம் வாங்குபவன் என் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரித்தம் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்வதுதான் அண்ணனின் தவ்ஹீதா? பி.ஜே அவர்கள் தான் ஆதரிக்கும் வேட்பாளரின் கையை பிடித்து "இவருக்கு நீங்கள் வாக்களிப்பீரா?" என கூவினால் உடனே பக்தர்கள் "அல்லாஹீ அக்பர்" என்று பதிலுக்கு கூவுகிறார்கள்.....நேர்மையற்றவர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்கும் "அல்லாஹீ அக்பர்" என் கூவுவதற்கும் என்ன சம்பந்தம்'? இனிமேல் தவ்ஹீது பிரச்சாரம் செய்யக்கூடிய TNTJ அமைப்பினர் உலக லாபம் தேடாமல் மறுமைக்காக உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இப்படிக்கு

அண்ணனின் பக்தனல்ல அல்லாஹ்வின் விசுவாசி
அப்துல் ரசாக் - சேர்மன் , பி.வி.எம் அறக்கட்டளை
தொலைபேசி : 9443465765 - 9842423752

Tuesday, September 11, 2012

பரமக்குடி படுகொலை: தொடரும் போராட்டம்

பரமக்குடி படுகொலை: தொடரும் போராட்டம்
 





 
2011 செப்டம்பர் 11 அன்று சாதி ஒழிப்பு போராளி இமானுவேல் சேகரன் குரு பூஜைக்கு வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஆறு உயிர்களை பலி கொண்ட பிறகு பரமக்குடி நகர் காவல் நிலையத்தின் குற்ற எண்.300/2011ன் படியான முதல் தகவல் அறிக்கை இவ்வாறு கூறுகிறது. சுமார் 1000 பேர் ஐந்து முக்கு ரோட்டில் மறியல் செய்தனர். ஆய்வாளர் சிவக்குமார் புகாரின் முதல் வரியே முழு பொய் என்பதற்க
ு (50க்கும் குறைவானவர்களே மறியலில் ஈடுபட்டனர்) மீண்டும் மீண்டும் ஒளிபரப்பான வீடியோ காட்சிகளே சாட்சி. பல்வேறு கோணங்களில் இருந்து எடுக்கப்பட்ட எந்த வீடியோ காட்சி யைப் பார்த்தாலும் வாக்குவாதத்தில் ஈடுபடும் போதே லத்தி சார்ஜ் செய்வதையும், கலைந்து ஒரு குறிப்பிட்ட தூரத்தில் கூடி நின்றவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதையும் பார்க்க முடிகிறது. நாங்கள் லத்தி சார்ஜ் செய்த பிறகு ஊரை காலி செய்யாமல் மீண்டும் கூடி நிற்பதா ? என்கிற போலி(ஸ்) கௌரவத்திற்கு ஆறு உயிர்கள் அநியாயமாய் பறிபோனது. இல்லை என்றவுடன் திரும்பிவிட அவர்கள் திரைப்படத்திற்கு வந்தவர்கள் அல்ல. இரண்டு மூன்று மாத கால தயாரிப்பு, இந்த நாளுக்கான காத்திருப்பு.

ஐம்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன் னால் 1957ல் இமானுவேல் சேகரன் எந்த காரணத்திற்காக கொல்லப்பட்டாரோ, அதே காரணங்கள் இன்றும் தனது வாழ்வை இடைமறிப்பதற்கு எதிரான எழுச்சியின் அடையாளம் தான் இந்த ஆர்ப்பரிப்பு. தங்கள் மீது வலிந்து திணிக்கப்படும் சாதிய பாரபட்சங்களுக்கு எதிர்ப்பு என்பது நிச்சய மாக யாருக்கும் எதிரானது அல்ல, மாறாக அது ஜனநாயகத்தின் குரல். யார் இந்த இமானுவேல் சேகரன். சுபாஷ் சந்திர போஸால் ஈர்க்கப்பட்டு, அவரது படை யில் இணைவதற்கு சென்ற நேரத்தில் சுபாஷ் சந்திர போஸின் மரணச் செய்தியே கிடைத்து அந்த வாய்ப்பினை இழக்கிறார். காங்கிரஸ்காரரான தனது தந்தையுடன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். பின்னர் இந்திய இராணுவத்தில் பணியாற்றுகிறார். விடுமுறைக்கு வருகிற போதெல்லாம் கிழக்கு முகவை மாவட்டத்தின் தலித் மக்கள் மீதான தீண்டாமை கொடுமைகளுக்கு எதி ராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற் கொள்கிறார். 1952ல் இராணுவப்பணியைத் உதறித் தள்ளிவிட்டு, முழுநேர சமூக சீர் திருத்தப் பணிகளில் ஈடுபடுகிறார்.

கிராமம் கிராமமாக சுற்றித் திரிந்து ஒடுக்கப்பட்ட மக்களை அமைப்பாக்குகிறார். பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் மாமுல் கொள்ளைகளை மக்களைத் திரட்டி தடுக்கிறார். வணிகர்களின் ஆதரவைப் பெறு கிறார். ஒரு சாதியை மட்டுமல்ல, ஒடுக்கப்படு கிற பல்வேறு சாதிகளைக் கொண்ட அணியை அமைக்கிறார். 14.4.1953 சித்திரை முதல் நாளில் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டை இராமநாதபுரத்தில் நடத்துகிறார். கிராமத் திருவிழாக்களின் வேலைப் பிரிவினைப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் பணியாக இருந்த கட் டாய உழைப்பு, ஊர் சுத்தம் செய்தல் ஆகிய வற்றில் சமத்துவம் வேண்டும் என்று கோரு கிறார். 26.5.1954ல் இரட்டைக் குவளை எதிப்பு மாநாட்டை அருப்புக் கோட்டையில் நடத்து கிறார். பேரையூர் பெருமாள் பீட்டருடன் இணைந்து தலித் மக்களின் கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு உதவி செய்கிறார். தன் வாழ்நாளில் ஒரு போதும் சாதி துவேசத்தை இமானுவேல் சேகரன் முன் வைக்கவில்லை. 10.9.1957ல் முதுகுளத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வலியுறுத்தி பேசுகிறார். மறு நாள் 11.9.1957 அன்று எமநேசபுரம் பள்ளியில் பாரதி விழாவில்

‘காக்கை குருவி எங்கள் ஜாதி

நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்’

என்று மகாகவி பாரதியின் பாடலை மேற் கோளாக்கி பேசியதே அவரது இறுதிப் பேச் சாகி போகிறது. விழா முடிந்து வருகிறபோது கொலை செய்யப்படுகிறார். சமநீதி கேட்ட தற்காக கொல்லப்பட்டவர் இமானுவேல் சேகரன்.

தென் மாவட்டம் முழுவதும் இன்றும் ஒரு கள ஆய்வை மேற்கொண்டால், தலித் மக்கள் மீதான சாதிய பாரபட்சங்கள் வெளிச்சத்திற்கு வரும். கிராமத்தில் தங்களை இழிவுபடுத்துகிற அல்லது புறக்கணிக்கிற அநாகரிகங்களுக்கு எதிர் வினையாகவே பால்குடம், முளைப்பாரி எடுத்து அலகுகுத்தி தலித் மக்கள் பரமக் குடிக்கு புறப்படுகிறார்கள். ஆனால் அரசும், காவல்துறையும் ஏதோ சமூக விரோதிகள் கூடுகிறார்கள் என்றே கருதுகிறது. எரிச்சல் அடைகிறது. ஆகவே தான் எந்த முகாந்திர மும் இன்றி உயிர் குடித்தார்கள். துப்பாக்கிச் சூடு முடிந்த பிறகும் மாலை 5 மணிவரை சிக்கியவர்களையெல்லாம் வெறி கொண்டு தாக்கினார்கள். நிலைகுலைந்து கதவிடுக்கி லும், சந்து பொந்துகளிலும் பதுங்கியிருந்தவர் களை பிடித்து கை, கால்களை உடைத் தெறிந்தார்கள். பரமக்குடியில் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இளையான்குடி புறவழிச் சாலையில் 27 பேர் மறியல் செய்தனர். கட்டுப் படுத்தவே முடியாத அந்த பெருங்கூட்டத்தின் (!!!) மீது டிஎஸ்பி இளங்கோவன் எந்த அறி விப்பும் இன்றி துப்பாக்கியால் சுடுகிறார். +2 படிக்கும் மாணவன் ஆனந்த் படுகாயம டைந்து சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைக் கிறார். இதே நேரத்தில் மதுரை சிந்தாமணி அரு கில் பாட்டம் கிராமத்தில் இருந்து வந்தவர் களுக்கும் எஸ்ஐ சண்முகநாதனுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. அவனியாபுரம் காவல் ஆய்வாளர் கஜேந்திரனுக்கு தகவல் போகிறது. அவர் வருகிறார். வரும் போதே ஜீப்பின் கதவை திறந்து வைத்துக் கொண்டு, கையில் துப்பாக்கியுடன் வருகிறார். இறங் கியவுடன் துப்பாக்கியை நீட்டுகிறார். பயந்து ஓடிய 19 வயது ஜெயப்பிரகாசின் முதுகில் சுடுகிறார். புல்லட் முதுகில் பாய்ந்து விலா பகுதி வழியாக வெளியேறுகிறது. சுருண்டு விழுந்தவரின் பிறப்புறுப்பில் ஏறி மிதிக்கிறார் கஜேந்திரன். மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு உயிர் பிழைத்தாலும், நெடுநாள் வரை சிறுநீர் டியூப் வழியாகவே வெளியேற்றப்பட் டது. மஞ்சூர் ஜெயபால் மார்பிலும், பல்லவரா யனேந்தல் கணேசன் மார்பிலும், வீரம்பல் பன்னீர் நெற்றியிலும், சடையனேரி முத்துக் குமார் வயிற்றிலும் சுடப்பட்டு கொல்லப் பட்டனர். கொடும்பலூர் தீர்ப்புக்கனி , காக்க னேந்தல் வெள்ளைச்சாமி ஆகியோர் அடித்தே கொல்லப்பட்டனர். உயிர் குடிப்பதே இலக்காகிய பிறகு முழங்காலுக்கு கீழே ஏன் சுட வேண்டும் !

6 பேர் படுகொலை செய்யப்பட்டதை நியாயப்படுத்துவதற்காக புனையப்பட்ட பொய் வழக்கையே ஆயுதமாக்கி கிராமங் களில் தேடுதல் வேட்டையை காவல்துறை அரங்கேற்றியது. இரவு நேரங்களில் வீடு புகுந்து ‘உன் புருசனை காட்டுக்குள்ள அனுப்பிவிட்டு எவனோடு குடும்பம் நடத்து கிறாய்’ என்ற அளவிற்கு பெண்களை இழி வாய் பேசியது. காவல்துறைக்கு பயந்து வயல் களில் பதுங்கிய ஒருவர் பாம்பு கடித்து மரணமடைகிறார். பரமக்குடி துப்பாக்கிச் சூட் டிற்கு விளக்கமளித்தவர்கள் கையில் இளை யான்குடி, சிந்தாமணி துப்பாக்கிச்சூடுக ளுக்கு விளக்கம் ஏதுமில்லை. துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் படங்களுடன் போஸ்டரோ, பேனரோ கூடாது என காவல் துறை இப்போது உத்தரவிட்டுள்ளது. விபரீ தம் ஏதும் நிகழ்ந்தால் வாகன உரிமையாளரே பொறுப்பு, வாகனத்தில் வருபவர்கள் அத் தனை பேரும் பெயர் பட்டியல் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் என்கிற காவல் துறையின் கட்டுப்பாடுகளைத் தாண்டி கடந்த ஆண்டின் எழுச்சியுடன் கூட்டம் திர ளுமா ? எனவே இமானுவேல் சேகரனின் விழாவை சீர்குலைப்பதே நோக்கம் என்கிற தலித் மக்களின் குற்றச்சாட்டை புறக்கணிப் பதற்கில்லை. தமிழகத்தில் 2010 ஜனவரி முதல் 2011 செப்டம்பர் வரை சாதி தொடர்பான மோதல்களில் மட்டும் துப்பாக்கிச் சூட்டில் பலி யானவர்கள் எட்டு பேர். அனைவரும் தலித்து களே. கடந்த 12 ஆண்டுகளில் தமிழக காவல் துறை நடத்திய படுகொலைகளில் மிகப் பெரியது இரண்டு. ஒன்று 1999 ஜுலை 21ல் 17 பேரை பலிகொண்ட தாமிரபரணி படு கொலை. மற்றொன்று 2011 செப்டம்பர் 11ல் 6 பேரை பலி கொண்ட பரமக்குடி படுகொலை.

ஆகவே அரசுக்கு வர்க்கச் சார்பு போலவே ஆதிக்க சாதி சார்பும் உள்ளது. பரமக்குடி படுகொலைக்கு காரணமானவர் கள் நீதியின் முன்னால் நிச்சயம் தண்டிக் கப்படுவார்கள். நடைபெற்ற கொடூரத்தை கண்டிப்பதோடு, நிறுத்திக் கொள்ளாமல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரு வதற்கு தலித் அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றம் சென்றனர். இந்த அணிவகுப்பில் இணைந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி மூலமாக நீதிமன்ற படியேறியது மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இதற்காகவே தமி ழகத்தின் ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்பு களோடு இணைந்து போராடி வருகிறது.

எல்லோரையும் சம குடிமக்களாக ஏற்றுக் கொள்ளும் சுயராஜியமும் வேண்டும். அதே நேரத்தில் அந்த சுயராஜியத்திற்குள் ஒடுக் கப்பட்ட மக்களுக்கு தனித்துவமான உரிமை களும் வேண்டும் என்பதே அம்பேத்கர் முன் வைத்த அரசியல். இந்த புரிதல் இடதுசாரி களைத் தவிர மற்ற கட்சிகளுக்கு இருப்ப தாகத் தெரியவில்லை.

மக்கள் திரளில் உட்பிரிவுகளின் பிரச் சனைகளை புறக்கணிக்காமல் சாதியத்தை யும், அதன் பெயரால் சொந்த மக்களின் ஒற்றுமைக்கு குழிபறிப்பதுமான கொடூரத்தை புரிந்து கொண்டு, சாதியின் பெயரால் பாதிக் கப்பட்டவர்களின் பக்கம் நின்று, அதன் கோரத்தை அனைத்துப் பகுதி உழைக்கும் மக் களிடமும் புரிதலை ஏற்படுத்தி அதை முற்றி லும் அழித்தொழிக்க வேண்டிய சமூகக் கட மையை நம்பிக்கையுடன் நிறைவேற்றுவோம்.

- கே.சாமுவேல்ராஜ்

Thursday, August 30, 2012

இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகளுக்கு எதிரான அநீதிகளும், பாரபட்சங்களும்



சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 14 உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் அரசியல் சட்டப்படி ஆட்சியதிகாரம் நடக்கிறதா என்றால் சனநாயகம் இங்கே கேலிக்குரிய வடிவில் அரங்கேறி வருவதைப் பார்க்கமுடியும். அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்குகளில் அரசியல் சட்டமாவது வெங்காயமாவது.


நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், தலித்துகள், பழங்குடிகள் இவர்களை பிரதிநிதுத்துவப்படுத்தும் அமைப்புகள், நக்சல்பாரிகள், மாவோவியப் போராளிகள் என்று தங்களின் அடிப்படை உரிமைகளுக்குப் போராடும் பிரிவினர் மீது ஆளும் அரசுகள், சங்பரிவார் கும்பல்களின் தாக்குதல்கள் என்பதும் அதற்கு எதிர்வினையான சம்பவங்கள் நடந்து வருவதும் நாம் வரலாற்றுப் பார்வையில் இருந்து புரிந்து கொள்ளவேண்டும்


இந்நிலையில் இருந்தே தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக அரசு மற்றும் அரசியல் கட்சிகள், மனித உரிமைப் போராளிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஒரு பொது விவாதத்தையும், கருத்து பரப்புரையும் செய்ய வேண்டிய தருணத்தில் இருந்து தொடங்குவோம்....


1992ம் ஆண்டு அன்றைக்கு நான் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மக்கள் யுத்தம்) கட்சியின் மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக நான் உட்பட 6 தோழர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு 23 நாட்கள் சட்ட விரோதக் காவலில் வைத்து சித்ரவதைகளுக்குப் பின்னால் திருப்பூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டோம். எங்களை நீதிமன்றத்தில் நிறுத்தும்வரை எங்கள் மீது என்ன வழக்கு போடப்பட்டது என்று எங்களுக்குத் தெரியாது.


திருப்பூர் கிளைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட போது எங்களுக்கு வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும், சமூகத்திற்கும் நமக்குமான ஒரே தொடர்பான வானொலியில் டிசம்பர் 6 அன்று கேட்கும் போதுதான் நாங்கள் அறிந்து கொண்டோம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தியை... அதன் எதிரொலி சிறைச்சாலையின் கம்பிகளுக்குள்ளும்....


அதற்குப் பின்னிட்ட நாட்களில் திருப்பூர் கிளைச் சிறைக்கு இஸ்லாமிய இளைஞர்கள் அதிகமாக வந்து சேருமிடமாகிப்போனது. நடு இரவிலும் அதிகாலையிலும் இஸ்லாமிய இளைஞர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.
அன்றைக்கு ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த, சித்திரவதை செய்வதற்கே பயன்படுத்தப்பட்ட பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டு மூன்று நாட்கள் 'சரியான கவனிப்புகளுக்குப்' பின் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதிக இளைஞர்கள் நடக்க முடியாமல் உடல் ரணத்துடன் கொண்டு வரப்பட்டார்கள். (எனக்கும் அதே காவல் நிலையத்தில்தான் 23 நாட்கள் 'கவனிப்பு' நடந்தது என்பது வேறு விசயம்)


கிளைச்சிறையில் அடைக்கப்பட்டவர்களில் அன்றைக்கு புரட்சியாளர் பழனிபாபாவின் ஜிஹாத் கமிட்டியைச் சேர்ந்தவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்த இஸ்லாமிய இளைஞர்கள் அதிகம். அவர்கள் மூலம் பாபர் மசூதி இடிப்பும், அதற்கு எதிர்வினையாக இஸ்லாமிய மக்களின் போராட்டங்களையும், சங்பரிவார் கும்பலின் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வன்முறைகளையும் அறிந்து கொண்டோம்.


திருப்பூர் கிளைச் சிறையில் இருந்து எங்களை டிசம்பர் மாதம் இறுதியில் கோவை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். டிசம்பர் 31 அன்று இரவு எங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ச்சப்பட்டது.

டவர்பிளாக் என்று கூறப்படும் 10 பிளாக்கில் ஒன்றான 1ஏ பிளாக்கில் வைத்து இருந்தார்கள். 10ம் பிளாக்கில்தான் கோவை ராமகிருட்டிணன் உட்பட பல தோழர்கள் தடா கொடுஞ்சிறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். அதே 10ம் பிளாக்கில்தான் பாபர் மசூதி கலவர வழக்கில் பாஷாபாய், அன்சாரி, நவாப்கான், ஒஜீர் உட்பட பல இஸ்லாமியத் தோழர்கள் தடா சட்டத்தின்படி சிறைபடுத்தப்பட்டிருந்தார்கள் என்று அறிந்து கொண்டோம்.


அவர்களிடம் எனக்கு எந்த அறிமுகமும் இல்லை. நானும் ஆர்வப்படவும் இல்லை. அவர்கள் மத அடிப்படையில் சிறைக்கு வந்துள்ளார்கள் என்ற பார்வையே எனக்கு அப்பொழுது இருந்ததால் அவர்களைப்பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்படவில்லை.


சிறைப் போராட்டங்கள் ஊடாகவும், தோழர் தடா பெரியசாமி, ஈச்சனாரி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்கள் மூலமாகவும் எங்களுக்கும் இஸ்லாமிய தோழர்களுக்கும் அறிமுகம் ஏற்ப்பட்டது.


உமர்கயான் என்ற அறிமுகத்தால் என் மீது அவர்களுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது. அவர்கள் என்னுடைய கொள்கைகளில் முரண்பட்டாலும் அது நட்பு முரணாகவே இருந்தது. என்னுடன் சாத்தியப்பட்ட நேரத்தில் மார்க்க அடிப்படையில் விவாதித்தார்கள்.


அப்பொழுதுதான் எனக்கு தமிழ் திருமறை குர்ஹான் படிக்க கொடுத்தார்கள். சிறையில் தடா சிறைவாசிகளையும், தேசிய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்ட எங்களையும் வாரத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்களில்தான் குடும்பத்தினர், தோழர்கள் சந்திக்க முடியும். அந்த நாட்களில் இசுலாமிய சிறைவாசிகளை சந்திக்க வரும் அவர்கள் குடும்பமும் எங்களுக்கு அறிமுகமானது. வெளி உலகம் அறியா இசுலாமியப் பெண்கள் பல சிரமங்களுக்கிடையில் சிறைச்சாலைக்கும் நீதிமன்றங்களுக்கும் அல்லல்பட்டு வரும் நிலையைப் பார்த்தால் பரிதாபத்தை ஏற்படுத்தும். உண்மையிலேயே தண்டனை என்பது அவர்களுக்கும் சேர்த்துதான் என்று நமக்குத் தோன்றும். 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் நாள் நாங்கள் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை அடைந்து வெளியில் வந்தோம். தடாவின் கொடுங்கரங்களில் அடைபட்டு இருந்த இசுலாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் விடியலும் இல்லை; விடுதலையும் இல்லை!

வினையும் எதிர் வினையும்

இந்திய வரலாற்றில் இசுலாமியர்களின் தியாகங்கள் ஈடு இணையற்றவையாக இருந்த போதிலும் இந்திய அரசியல் சூழலில் மிகுந்த நெருக்கடிகளுக்கும் ஆளானவர்களாகவும், அதன் விளைவாக ஓரங்கட்டப்பட்டவர்களாகவும், அம் மக்களின் பங்களிப்புகள் வரலாற்றில் இருந்து மறக்கடிக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். ஆளும் கும்பலும், இந்துத்துவா சக்திகளும் அதற்கான வேலைகளில் முன்நின்றன‌.


தமிழகம் தவிர்த்த வடமாநிலங்களில் இசுலாமிய மக்களுக்கு எதிரான கருத்தோட்டங்களும், புனைவுகளும் பெரும்பான்மை மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. திலகர் முதல் பட்டேல் வரை, இசுலாமிய மக்களின் எதிர்க்கருத்தோட்டம் கொண்டவர்களாகவே அறியப்பட்டார்கள்.

இந்துமகாசபை, ஆர். எஸ். எஸ். போன்ற அமைப்புகள், அவர்களின் கோட்பாடுகளான‌ அகண்ட இந்தியா, பொதுசிவில் சட்டம், ராமராஜ்யம், இந்துநாடு போன்ற எதிர் முரண் கோட்பாடுகள் இந்து தீவிரவாதத்திற்கு வழி வகுத்தது. வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் மூலம் இசுலாமிய மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை திசை திருப்புவும், அதன் மூலம் கலவரங்களை ஏற்படுத்தவும் முயற்று அதிலே வெற்றியும் பெற்றனர்.


தமிழகத்தில் ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இசுலாமிய மக்களால் புனிதமாகக் கருதப்படும் திருக்குரானையும், அவர்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி ஆபாசமாகப் பேசவும் ஆரம்பித்தார்கள். பல இடங்களில் மேடை போட்டு விசமத்தனத்தைக் கொட்டினார்கள். பெரியாரிய கருத்தோட்டங்களால், சமுக நீதிக்கான போராட்டங்களால் தமிழகத்தில் அமைதியாக வாழ்ந்த மக்களிடம் மதப்பிரிவினைகளை ஏற்படுத்தி உழைக்கும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தினார்கள்.

தொடக்க காலங்களில் திராவிட இயக்கங்களுக்குப் பின் திரண்ட இசுலாமியர்கள் 80களுக்குப் பிறகு இந்து முண்ணனியின் ஆபாச அராஜகங்களுக்கு எதிராக ஆங்காங்கே ஒன்றிணைய ஆரம்பித்தார்கள். ஜிஹாத் கமிட்டி என்ற அமைப்பை ஏற்படுத்திய புரட்சியாளர் பழனிபாபா இந்து முன்னணியின் ஆபாச பேச்சுகளுக்கு எதிராக பதிலடி கொடுத்து வந்தார்.

கோவை பகுதியில் மார்வாடிகள், பனியாக்கள், சேட்கள் மொத்த வணிகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். இசுலாமிய மக்கள் சாதாரண நடைபாதை வியாபாரிகளாக இருந்தார்கள். மார்வாடிகள் இவர்களை தங்கள் வியாபாரத்திற்கு இடைஞ்சல் என்று கருதி வந்தார்கள். இவர்கள் மீதான மார்வாடிகளின் வன்மம் இந்து முன்னணியை ஆதரிக்க வைத்தது. இசுலாமியர்களின் அமைதியான வாழ்க்கை முறையை கேள்விக்குள்ளாக்கினார்கள்.

இசுலாமிய மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஜிஹாத் கமிட்டி, அல் உம்மா போன்ற அமைப்புகளின் பின்னும் அணி திரண்டார்கள். இருதரப்பிலும் வினைகளும் எதிர்வினைகளும் மாறி மாறி தோன்றியது. கொலைகள், கலவரங்கள், மக்களின் அமைதியான வாழ்வியல் தொலைந்து பதட்ட சூழ்நிலை தொடர்ந்தது. கோவையில் மட்டுமல்ல தமிழகத்தில் இசுலாமிய மக்கள் வாழும் பிற பகுதிகளிலும் கலவரங்கள், பதட்ட சூழ்நிலை உருவாகியது.

1992 பாபர் மசூதி இடிப்பும் எதிர்வினைகளும்

1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பின் இசுலாமிய மக்கள் ஒரு நிரந்திர பதட்டத்தையும், பாதுகாப்பின்மையும் உணர ஆரம்பித்தார்கள். 1992க்கு முன் ரதயாத்திரை என்ற பெயரில் ஆங்காங்கே கலவரங்களுக்கு சங்பரிவார் கும்பல் விதை போட்டது. தமிழகத்தில் அது நிரந்திர அமைதியின்மையை ஏற்ப்படுத்தியது.

பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து போராட்ட களத்தில் நின்ற இசுலாமிய இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர். வீடுகள் தோரும் சோதனை என்ற பெயரில் காவல் துறை காட்டு தர்பார் நடத்தியது. சுதந்திர இந்தியாவின் ஆள் தூக்கி கருப்புச் சட்டமாம் தடா சட்டத்தில் இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். இறைச்சி அறுக்க வைத்திருந்த கத்தி கூட பயங்கர ஆயுதங்களாகக் கருதப்பட்டன‌; சிறுவர்கள் கூட தப்பவில்லை.

1997 நவம்பர் கருப்பு படுகொலை ஒரு இன அழிப்பின் தொடக்கம்

1997 நவம்பர் 29ம் நாள் போக்குவரத்துக் காவலர் ஒருவர் கொல்லப்பட்டது கோவை முஸ்லீம்களின் மீதான ஒரு பெரும் இன அழிப்பின் தொடக்கமாக அமைந்த நிகழ்வு. இந்துத்துவா திவிரவாதிகளுடன் காவல்துறையும் இணைந்து கோவை மாநகரில் இசுலாமிய மக்கள் மீது பெரும் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தினார்கள். இப்படுகொலைகளும் கலவரங்களும் குஜராத் இனப் படுகொலையை ஒத்திருந்தது.

இந்துத்துவா வெறியர்கள் இசுலாமிய மக்களை வெட்டியும், குத்தியும் கொன்றார்கள். காவல்துறை சுட்டுக்கொன்றது. கோவை அரசு மருத்துவமனை எதிரே காவல்துறையின் கண்முன்னே அப்பாஸ் என்ற இளைஞன் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டான்.

தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட முசுலீம்களுக்கு சிகிச்சை கொடுக்கக் கூடாது என்றும் தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் மிரட்டப்பட்டனர். இசுலாமியர்களின் வணிக நிறுவனங்கள் காவல்துறையின் உதவியுடன் கொள்ளையடிக்கப்பட்டது. பின்பு தீவைத்து கொளுத்தப்பட்டது.

எரிவாயு உருளைகளின் உதவியுடன் வணிக நிறுவனங்களின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. காவல்துறை இந்த கும்பலுக்குப் பாதுகாப்பாக வல‌ம் வந்தது.

29ம்தேதி முதல் காவியும், காவல்துறையும் சேர்ந்து ஆடிய வெறியாட்டத்தில் 18 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்; பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

கோவையில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என்று எண்ணும் அளவிற்க்கு கருணாநிதியின் ஆட்சியில் போலீஸின் வெறியாட்டம் இருந்தது.

இசுலாமியர்களின் நண்பன் என்று வேடமணிந்து பசப்பிய கருணா, இன்று வரை கோவை முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு நேரில் சந்தித்து ஆறுதல் எதுவும் கூறவில்லை, அவர்களுக்கு அநீதியையே கருணாவின் ஆட்சி பரிசளித்தது.

அன்றைக்கு தங்களின் புதுக்கூட்டாளி பா.ஜ.காவின் மனம் கோணாமல் கருணா நடந்துகொண்டார். முஸ்லீம்கள் கொல்லப்பட்டால் என்ன?ஈழத்தில் 1,50,000ம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டால் என்ன? தன் ஆட்சி அதிகாரத்திற்க்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் மட்டும் அவர் தெளிவாக இருந்தார்.

திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், இழவு வீட்டில் பிணமாகவும் இருந்து பழக்கப்பட்ட கருணாநிதி கோவையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடந்த காவி + அரச பயங்கரவாதத்திற்குத் துணை நின்றார், முஸ்லீம் மக்களுக்கு எதிராக நீதி பல் இளித்து நின்றது.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், காவல் துறையின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதவர்கள், பாதிக்கப்பட்ட இசுலாமியர்களையே குற்றவாளியாக்கிய அயோக்கியதனத்தை மறக்க முடியாது. பல முஸ்லீம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கியது காவல் துறை. கோவை மத்திய சிறை முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பியது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் முஸ்லீம் மக்கள் துடித்தார்கள். 1997 கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று பேருக்கு சில நபர்களைக் கைது செய்த காவல் புலனாய்வுப் புலிகள் அவர்கள் பினையில் வெளிவர உதவினர். உண்மையில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்களுக்கு பிணையில் வெளிவர முடியா நெருக்கடிகளை ஏற்படுத்தினார்கள்.

நீதி தனது கடைசி நேர மரண ஓலத்தை வெளிப்படுத்தியது….

கோவை குண்டு வெடிப்பு

1998 பிப்.14ம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல். பா.ஜ.க. திமுக, தேர்தல் கூட்டணியில் பா.ஜ.க கோவை தொகுதியில் போட்டியிட்டது. பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் மேடை அருகிலும், கோவையின் பல இடங்களிலும் சங்கிலித் தொடராக குண்டுகள் வெடித்தது. இக் குண்டு வெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டார்கள், 362 பேர் காயம் அடைந்தார்கள்

இக் குண்டு வெடிப்பு 1997ம் வருடம் நவம்பரில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு பலி வாங்கும் செயலாக நடந்தது என்று காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கில் 167 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியும் ஒருவர். அப்போராளி ஒரு கொடும்தாக்குதலில் ஒரு காலை இழந்தவர்.

இவ் வழக்கில் பல்வேறு விசாரணைகள் முடித்து இறுதி குற்றப்பத்திரிக்கை 5.5.1999ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு இவ் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தடா, பொடா போன்ற கருப்புச்சட்டங்கள் எதுவும் போடப்படவில்லை என்றாலும் விசாரணை என்பது ரகசியமாக நடத்தப்பட்டது. நீதிமன்றம் என்ற பெயரில் கூண்டிற்குள் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டு, பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காமல், கோவை நடுவண் சிறை அருகில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் விசாரணை நடந்தது.

இத் தொடர் குண்டு வெடிப்பிற்குப் பிறகு தமிழகத்தில் தீண்டப்படாத கட்சியாக இருந்த பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது.

இவ் வழக்கில் குற்றவாளிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கண்ணபிரான், திருமலைராசன், விருதாசல ரெட்டியார், முகமது அபுபக்கர், எனது சீனியர் ப.பா.மோகன் அவர்களும் சிறப்பாக வழக்கை நடத்தினார்கள்.

1.8.2007ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்துல்நாசர் மதானி உட்பட 8 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். 43 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும், 70 பேருக்கு 13 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 7ஆண்டுகள் என்று தண்டனை வழங்கப்பட்டது. ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த சுமார் 100 பேர் சிறையில் இருந்த நாட்களைக் கழித்து  சிறை மீண்டனர்.

நீதியின் முன் அனைவரும் சமமா?

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான இசுலாமியர்கள் 10ஆண்டுகள் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டார்கள். இவர்களுக்கு வழக்கின் தீர்ப்பு நாள் வரை பிணை வழங்கப்படவில்லை. 18 இசுலாமியர்கள் கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது; காவல் துறையும் பிணை வழங்கலை எதிர்க்கவில்லை. ஆனால் முஸ்லீம்கள் என்ற காரணத்தால் பிணை மறுக்கப்பட்டு தங்கள் தரப்பு நியாயங்களைக் கூற இவர்களுக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அப்துல்நாசர் மதானி ஒரு காலை இழந்தவர். கடுமையாக நோய்வாய்பட்டு இருந்த நிலையில் அவர் உடல் நலனைக் காரணம் காட்டியும் கூட, பிணை மறுக்கப்பட்டது. இந்த நாட்டில் சங்கராச்சாரிகளுக்கு ஒரு நியாயம், மதானிக்கு ஒரு நியாயம்!

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மதானி மீது புனையப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்றைக் கூட காவல் துறையால் நிரூபிக்க முடியவில்லை.

10 ஆண்டுகள் அநீதியாக சிறை வைக்கப்பட்டதற்கு யார் பொறுப்பு? 18 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கூட, ஒரு நாள்கூட தண்டிக்கப்படவில்லை.

மேற்கண்ட வழக்குகளில் இஸ்லாமிய மக்களை மட்டுமே தண்டித்து நீதிமன்றங்களும் தங்களின் நீதியை நிலைநாட்டிக்கொண்டு நீதித்துறை வரலாற்றிற்கு சிறப்பு சேர்த்தன‌.

இஸ்லாமிய சிறைவாசிகளும், அவர்களின் முன் விடுதலைக்கான கோரிக்கைகளும்

2008ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் தண்டனை பெற்று தமிழக சிறைகளில் வாடும் சிறைவாசிகளை முன் விடுதலை செய்வதாக அன்றைய கலைஞர் அரசு அறிவித்தது.

10ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் கழித்த இசுலாமிய சிறைவாசிகள் தங்கள் முன் விடுதலையை ஆவலோடு எதிர்பார்த்திருந்த வேளையில், துரோகம் என்பதற்கு மறு பெயர் எடுத்த கருணாநிதி, இசுலாமியர்கள், நக்சல்பாரித் தோழர்கள், தமிழ்தேசிய விடுதலைக்காக‌ சிறைப்பட்ட தோழர்களுக்கு மட்டும் பல்வேறு சட்டப்பிரிவுகளில், அவசர அரசாணைகளைப் பிறப்பித்து இவர்களின் முன் விடுதலையைத் தடுத்து மீண்டும் துரோகம் செய்தார்.

அரசுக்கு எதிராக கலகம் செய்தவர்கள், மத மோதல்களில் ஈடுபட்டவர்கள் என்று குறிப்பிட்டு அந்த வழக்கில் சிறையில் இருப்பவர்களுக்கு முன் விடுதலை கிடையாது என்று அரசாணை வெளியிட்டு அவர்களின் முன் விடுதலையில் மண் அள்ளிப்போட்ட பெருமை கருணாவையே சாரும்.

தனது மகனின் அடியாட்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கு ஏதுவாக 7 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய உத்திரவிட்டவர் இசுலாமிய சிறைவாசிகளுக்கு அந்த உரிமையை மறுத்தார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்து இருக்கவேண்டும். ஆனால் சட்டம் இந்த நாட்டில் பாகுபாடு கொண்டதாகவே இருக்கிறது. இசுலாமியர்கள், தலித்கள், நக்சல்பாரிகள் என்று பார்த்துப் பார்த்து சட்டம் கடமையைச் செய்யும் துர்பாக்கிய நிலையில் இருக்கிறது.

இசுலாமிய,அரசியல் சிறைவாசிகளின் துயர சிறைவாழ்வு

தண்டனை என்பதற்கு ஒரு வரையறை வேண்டும். ஆனால் இந்திய சட்டங்கள் அப்படியான முடிவான வரையறைக்குள் வருகிறதா என்று பார்த்தால் இல்லை.

தண்டனையின் நோக்கம்தான் என்ன?

1.குற்றம் செய்பவர்களைத் தடுத்து தனிமைப்படுத்தி வைப்பது. மீண்டும் அக்குற்றம் நிகழாவண்ணம் தடுப்பது.

2.அவர்கள் செய்த குற்றத்திற்குத் தண்டனையாக சமூக அமைப்பில் இருந்து, அவர்களின் குடும்ப வாழ்வியலில் இருந்து தனிமைப்படுத்தி அக்குற்றத்தை உணரவைப்பது.

3.மீண்டும் அக்குற்ற செயல்களில் ஈடுபடாவண்ணம் அவர்களைத் திருத்துவது.

இவைகள்தான் கைது, காவல், சிறை போன்றவற்றின் அடிப்படையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிறையில் ஒருவரை தடுத்து வைப்பது என்பது அவர்களை திருத்தி சமூகத்தில் மீண்டும் அவர்களை வாழ வைக்கவேண்டும். அதற்கு ஒருகால எல்லை வேண்டும். தமிழக சிறைகளில் இசுலாமிய சிறைவாசிகளுக்கு சில ஆண்டுகள் வரை சிறைகளில் ஏற்பட்ட கடுமையான சூழல் தனது எதிரிகளுக்குல் கூட வரக்கூடாது என்ற எண்ணம் ஏற்படும் அளவிற்கு இருந்தது. எழுத்தில் வடிக்க முடியாவண்ணம் சிறைக்கொடுமைகளை இசுலாமிய சிறைவாசிகள் அனுபவித்தனர். இவர்களைப் பார்க்கவரும் உறவுகள் சந்திக்கும் நெருக்கடிகள் கொஞ்சம் அல்ல. உளவுத் துறையின் கண்காணிப்புகள், சிறைவாயிலில் இருந்து சந்திக்கப்போகும் இடம் வரை தொடரும் சோதனைகள், அவமானங்கள், அதுவும் இசுலாமியப் பெண்கள் படும் துயரம் இனி ஒருமுறை சிறையில் வந்து தன் உறவுகளை சந்திக்க வேண்டுமா என்று எண்னம் கொள்ளும் அளவிற்கு இருந்தது; இருக்கிறது.

சிறைவாசிகளுக்கான உரிமைகளும் இசுலாமிய சிறைவாசிகளும்

தமிழக சிறைகளில் சிறைப்பட்டிருக்கும் சிறைவாசிகளுக்கு பரோல் என்று அழைக்கப்படும் சிறைவிடுப்பு உண்டு. ஒருவாரம், ஒரு மாதம் என்று விடுப்பு அனுமதிக்கப்படுவது உண்டு. வெளியில் வந்தவுடன் அதை நீட்டிக்கவும் வழி உண்டு. அமைச்சர் பரிந்துரை விடுப்பின் மூலம் மாதக்கணக்கில் பரோலில் வெளியில் இருக்கலாம். இது இன்றும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இசுலாமிய சிறைவாசிகளுக்கு இந்த உரிமை முற்றாக மறுக்கப்படுகிறது. மீறி அனுமதித்தாலும் வழிக்காவலோடுதான் அனுமதிக்கப்படுகிறது. இசுலாமிய சிறைவாசிகள் விடுப்பிற்காக விண்ணப்பித்து நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டும். 'வழிக்காவலர்கள் இல்லை சில நாட்கள் காத்திருக்கவேண்டும்' என்ற பதிலே வரும்.

சிறையில் இருக்கும் அனைவரும் வழிக்காவலோடுதான் சிறை விடுப்பு அதாவது பரோலில் போகிறார்கள் என்று எண்ணி விடாதீர்கள். மற்ற சிறைவாசிகள் வழிக்காவல் இல்லாமல் தனக்கு வழங்கப்பட்ட விடுப்பு நாட்களில் சுதந்திரமாக எங்கும் சென்று வரலாம். ஆனால் இசுலாமிய சிறைவாசிகள் காவலர் காவலோடு பயங்கர ஆயுதங்களின் பாதுகாப்போடு தான் அதிகபட்சம் இரண்டுநாட்கள் விடுப்பில் செல்ல முடியும். இப்பொழுது கூறுங்கள் சட்டம் அனைவருக்கும் பொதுவானதா?

ஒரு சமுகத்தை தொடர்ச்சியாக குற்றப் பரம்பரைபோல் பார்ப்ப‌தும், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று அரசு மக்களிடம் பரப்புவதும், அதற்கு ஊடகங்கள் துணை நிற்பதும் அரச பயங்கரவாதத்தின் உச்சமாகவே இருக்கிறது. மதச்சார்பற்ற நாடாக பீற்றிக்கொள்ளும் அரசுகள் ஒரு சமூகத்தின் மீது கொள்ளும் மதிப்பீடுகள் வெட்ககரமாகவே இருக்கிறது.

இசுலாமிய சிறைவாசிகளின் முன் விடுதலையும் போராட்ட களங்களும்

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் துயருற்றுவரும் இசுலாமிய சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக தமிழகத்தில் பல போராட்டக் களங்களை கண்டாலும், அது இவர்களின் முன் விடுதலைக்கான வலிமையைச் சேர்க்கவில்லை என்பதுதான் உண்மை. தொடர்போராட்டங்களை மக்களிடம் வீரியமாக எடுத்து சென்றால்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்பதுதான் எதார்த்தமான உண்மை. இசுலாமிய மக்களும் அவர்களைப் பிரதித்துவப்படுத்தும் இசுலாமிய அமைப்புகள் மட்டுமே போராடினால் தீர்வு கிடைத்துவிடுமா?

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காக அவர்களின் விடுதலைக்கான நியாங்களை பொதுச்சமூகத்திடம் எடுத்துப்போகவேண்டிய தேவை இருக்கிறது. பொதுத்தளத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசியர்கள், பெரியாரியல்வாதிகள், மனித உரிமைப்போராளிகள் என அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு பொதுக்களத்தை கட்டியமைப்பதின் மூலமே இவர்களின் விடுதலை சாத்தியம் என்று எண்ணுகிறோம்.

தமிழக இசுலாமிய இயக்கங்களே..!

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக ஒரு பொதுக்களம் அமைப்போம்.

இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல், ஆயுள் சிறையாளிகளின் முன்விடுதலைக்கு குரல் கொடுப்போம்.

10 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் குடும்பம் விட்டு, உறவை விட்டு சிறைப்பட்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகளின் முன்விடுதலைக்காக இப்பொழுதே உங்கள் குரல் ஒலிக்கட்டும். அமைப்புகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து ஒற்றைக் கோரிக்கையாம் தமிழக சிறைகளில் வாடிவரும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலை என்ற முழக்கத்தின் மூலம் ஒன்றிணைவோம்.

தமிழக அரசே..!

தமிழக சிறைகளில் 10ஆண்டுகளுக்கு மேல் இருந்து வரும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகள், மற்றும் ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலையைக் கோருகிறோம்.

முந்தைய ஆட்சியில் ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலையில் அரசின் பாரபட்ச போக்கால் 71 இசுலாமிய சிறைவாசிகள் முன் விடுதலைக்குத் தகுதி இருந்தும் அவர்களை விடுதலை செய்யவில்லை. கடந்த ஆட்சியின் தவறுகளைக் களைந்து எதிர்வரும் செப்.15 அண்ணா பிறந்த நாளில் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலையைக் கோருகிறோம்.

இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலையை தடுக்கும் நோக்குடன் பிறப்பிக்கப்பட்ட ஒரு சார்பான அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்யக் கோருகிறோம்.

மற்ற சிறைவாசிகள் போலவே இசுலாமிய சிறைவாசிகளுக்கு வழிக்காவல் இல்லாமல் பரோல் விடுப்பு அளிக்கக் கோருகிறோம்.

சிறையில் இனம் புரியா நோயால் தினம் செத்துக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசி அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகிறோம்.

சிறையில் தங்கள் உறவுகளை சந்திக்கவரும் இசுலாமியர்களை மாத்திரம் அவமானப்படுத்தும் நோக்குடன் சோதனை செய்வதை தடுத்து நிறுத்தவேண்டுகிறோம்.

மனித உரிமைப்போராளிகளே..! சனநாயக சக்திகளே..!

தமிழக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு குரல் கொடுங்கள்..!

மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு தொடர் பிரச்சாரம் மூலம் ஒரு பொதுக்கருத்தை ஏற்படுத்துவோம். செப்.15 இவர்களின் விடுதலையை சாத்தியமாக்குவோம்.

ஒன்றிணைவோம் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காய்...1

- உமர்கயான்.சே
ஒருங்கிணைப்பாளர்
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
தமிழ்நாடு

Sunday, August 26, 2012

ஆகஸ்ட் 31 - ஏன்? ...எதற்காக.....?


 
அன்பின் தோழமைகளே,

கோவை சிறையில் உள்ள 166 முஸ்லிம்கள் உட்பட தமிழகமெங்கும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலநூறு முஸ்லீம் சிறைவாசிகளின் 10 வருடங்களுக்கும் மேற்பட்ட சிறை இருப்பையும், ஆதாரங்களற்ற முறையில் ராசிவ் காந்தி கொலை வழக்கில் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்ட்டிருக்கும் முருகன், பேரரிவாளன், சாந்தன் என தமிழ் சொந்தங்களும், இன்னும் தமிழக சிறைகலெங்கும் பல்லான்டு காலமாக விடுதலைக்கான முகாந்திரமே இல்லாமல் அடைபட்டு கிடக்கும் அனைத்து அப்பாவி சிறைவாசிகளின் நிலை நிச்சயமாக 21 ஆம் நூற்றாண்டு இந்திய சமூகத்தின் அவலமாக வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

நீதி நியாயம் ஜனநாயகம் சட்டத்தின் முன் அனைவரும் சமம், மதச்சார்பற்ற தன்மை, மனித உரிமை என்பதனை எல்லாம் கோட்பாடுகளாக கொண்ட ஒரு அரசமைப்பில் இருந்து நீண்ட நெடுங்காலமாக நீதி , நியாயம், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் இந்திய வரலாறு காணாத நீண்ட சிறை இருப்பில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தினருக்கும், மேற்கூறிய அப்பாவிகளுக்கும் நம்மாள் நீதி பெற்றுத்தர இயலவில்லை என்றால் அதனினும் ஒரு சமூக இழிவு வேறொன்று இருக்குமோ?

 இந்தியாவில் இதுவரை நடந்த வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயமே. இதன் சொத்துக்கள் சூரையாடப்பட்டுள்ளன, இச்சமுதாயத்தின் பென்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், இன்னும் இச்மூகமே தண்டிக்கப்படும் விதமாய அக்கலவரங்களுக்கு காரனம் என குற்றம் சுமத்தப்பட்டு இந்தியாவெங்கும் சிறையிலும் அடைபட்டு கிடக்கின்றனர். இக்கலவரங்களுக்கு காரனமான சங்பரிவார கூட்டங்கள் ஒரு போதும் சிறையில் அடைக்கப்பட்டதுமில்லை, தண்டிக்கப்பட்டதுமில்லை இது தான் ஜனநாயக இந்தியா!! 

ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதே நீதித்துறையின் தாரக மந்திரம். பல ஆன்டுகளாக யார் குற்றவாளிகள் என நிரூபிக்காமல் முஸ்லிம்களின் வழக்குகளை தாமதப்படுத்துகின்றனர். தாமதப்படுத்தும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமாகும் என உச்ச நீதிமன்றம் பல முறை கண்டனக்குரல் எழுப்பியும் முஸ்லீம்களாகிய நமது சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிணை கூட மறுக்கப்படுகிறது. நாடறிந்த குற்றவாளியாகிய பாசிச சங்பரிவார கும்பல்கள் குற்றமற்றவர்கள் என உலாவுகின்றனர்.சட்ட மன்றத்திலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவால் குற்றம் செய்துள்ளார் என பிரகடனப்படுத்தப்பட்டும் கூட காஞ்சி சங்கராச்சாரியார் என்ற கொலைக் குற்றவாளி பிணையில் விடப்பட்டுள்ளார் ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பலர் நீண்ட காலமாக பிணைதராமல் கொடிய சிறையினுள் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் அநீதி நம் தமிழகத்தின் தான் இந்த அநீதிக்கு எதிராக தமிழ் இனம் ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயமாகும்.

ராஜிவ் காந்தி படுகொலையின் மூல காரன கர்த்தாக்களான "சாமி" வகையராக்கள் சுதந்திரமாக உலா வருகையில் ஏதுமறியாத அப்பாவிகள் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலங்கள் சாட்சிகளின் அடிப்படையில் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். ராஜிவ்கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல, தடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகிவிட்டது இன்னும் ஏன் இந்த அப்பாவிகளை துர்க்கு தண்டனை கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்? இது மனித உரிமை மீறல் இல்லையா? இன்னும் இந்த வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தோழர் ரவிச்சந்திரன் உட்பட 4 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக 20 ஆன்டுகளை தாண்டியும் அடைபட்டுள்ளனர். ஒரு கைதி எட்டு ஆன்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பது என்பது அனைத்து மனித உரிமை நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று மனித உரிமை ஆர்வளர் திரு. வி.ஆர். கிருஷ்னய்யர் என்பவர் கூறியுள்ளார்.

நமது தேசப்பிதா அன்னல் மகாத்மா காந்தி அவர்களை கொன்ற கோபால் கோட்சே என்பவன் 16 ஆன்டுகளில் விடுதலை செய்யப்பட்டான், இவ்வளவுக்கும் கோபால் கோட்சே மகாத்மா காந்தியின் படுகொலையில் நேரடியாக தொடர்புள்ளவன் என்று குற்றம் சாட்டப்பட்டு அது நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவன். ஆனால் தமிழகத்தில் மட்டும் எந்த வித நேரடி குற்றச்சாட்டுகக்களும் இன்றி சந்தர்ப்ப சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு விசாரனை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் 20 ஆன்டுகளை தாண்டியும் சிறைக் கொட்டடிகளில் எமது தமிழ் இனத்தை சேர்ந்த தோழர்கள் பலர் கரையே தெறியாது வாடி வருகின்றனர். தேசப்பிதாவை கொன்ற கொடியவர்கள் எல்லாம் விடுதலையாகும்போது எமது இனச்சொந்தங்களை மட்டும் இந்த அரசு வஞ்சப்பது ஏனோ? 

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கோட்பாட்டினை கொண்ட இந்திய திருநாட்டில் சங்கராச்சாரிகளுக்கும், அம்பானி வகையாராக்களுக்கும் ஒரு நீதி சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு ஒரு நீதி!! என்ன ஒரு அவலம்?

பாதிக்கப்பட்டு கொடுஞ்சிறைகளில் அடைபட்டு கிடக்கும் இம்மக்களை பற்றி நாம் அறிந்து கொள்ளாமலோ, அறிந்தும் அறியாமலோ, இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மறுக்கவோ , மறைக்கவோ செய்து அல்லது கண்டும் காணாதது போலவோ இருந்து விடலாம். அறிந்து கொல்லுங்கள் வரலாறு நமது மனசாட்சியை விட மிக நேர்மையாக இயங்குகிறது

வரும் ஆகஸ்ட் 31 அன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கூடும் மாநாட்டில் நம் தமிழ் சமூக அமைப்புகளின் தலைவர்கள், மனித அரிமை ஆர்வளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளார்கள் இச்சமூக சங்கமிப்பில் நீங்களும் ஒரு அங்கமாய் நின்று இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய குரல் கொடுங்கள், ஜாதி , மத வேறுபாடின்றி உங்களை அழைக்கிறோம், அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைப்போர் இது, நமது சக தோழர்களின் அடிப்படை வாழ்வாதாரம் கேட்டு நடக்கும் போராட்டம் இது, சமூக விடியலுக்கான அழைப்பு இது. வாருங்கள் தோழர்களே, தோழ் சேர்ப்போம் மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுப்போம்!!

ஆகஸ்ட் 31 - சென்னை மன்னடியில் சங்கமிப்போம், வெஞ்சிறைகளில் வேதனைகளோடு வாடும் நம் இனத்தை மீட்க போராடுவோம் , வாருங்கள் அநீதிக்கெதிரான இந்த களமாடலில் பங்கெடுங்கள் !! பதிவு செய்யுங்கள் உங்களை வரலாற்றின் பக்கங்களில் நீதிக்காக போராடியோர் என்று!!

அழையுங்கள் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்: 9944112879 / 7871294143 / 9488159091 / 9944713816

Friday, August 03, 2012

பி.ஜேயானிகளை (ததஜ) தவிர வேறு யாரும் முஸ்லிம் இல்லை- பி.ஜேயின் பிதற்றல்......முகவைத் தமிழன் (எ) ரைசுதீன்,ரைசூதின்

மீண்டும் பி,ஜேயின் பிதற்றல்....பி.ஜேயானிகளை (ததஜ) தவிர வேறு யாரும் முஸ்லிம் இல்லையாம்....


முகவைத்தமிழன், ரைசுதீன்,ரைசுதின்,முகவைதமிழன்,இராமநாதபுரம்,முகவை,முகவைத் தமிழன் (எ) ரைசுதீன் கைது - பொய்யன் டிஜே,ரைசூதின்