UNITED STUDENTS FRONT- ன் தஞ்சை தெற்கு மாவட்ட அலுவலகம் (13/12/08) சனிக்கிழமை மாலை 4:30 ம்ணியளவில் அதிராம்பட்டினம்,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோட்டிலுள்ள தனலக்ஷ்மி பேங்க் மாடியில், ஹாஜி A.M.K.முகம்மது ஹனீஃப் அவர்கள் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் A.முகம்மது அன்வர் M.A.,M.Phill., அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் ஹாஜா நஜ்முதீன் அவர்கள் கிராஅத் ஓதினார்,Z. முகம்மது தம்பி அவர்கள் வரவேற்புரையாற்றினார், A.முகம்மது அன்வர் M.A.,M.Phill.,அவர்கள் பணிகளை விளக்கிப் பேசினார், A.M.Kமுகம்மது ஹனீஃப், A.T.அப்துல்லாஹ் B.Com.,D.C.P., மெளலவி, ஷேக் முகம்மது ஆகியோர் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றியும் USF-ஐ வாழ்த்தியும் சிறப்புரையாற்றினர், இறுதியாக, M.சாகுல் ஹமீது நன்ரறியுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும், ஜமாத்தார்களும், பொதுமக்களும் கலந்துக் கொன்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியைன் தஞ்சை தெற்கு மாவ்ட்டச் செயலாளர், S.நிஜாமுதீன் தொகுத்து வழங்கினார்.
No comments:
Post a Comment