Thursday, November 01, 2007

கோவை சிறையில் முஸ்லிம் மரணம் - மக்கள் கொந்தளிப்பு

சிறை நிர்வாகத்தின் அலட்சியத்தால் மரணமடைந்த சபூர் ரஹ்மான்

கோவை, அக்டோபர் 31, கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு அனைத்து மனித உரிமை நெறிமுறைகளுக்கு மாறாக 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அகைட்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட விஷயம் மக்கள் அறிந்தததே. மனித நேயத்திற்கு எதிரான இந்த கொடுஞ்செயலில் சிலர் ஏற்கனவே போதிய சிகிச்சை அளிக்கப்படாததாலும், சிறைக் கொடுமைகளினாலும் விடுதலையின்றி சிறையினுள்லேயே மரணமடைந்துள்ளனர்.

இன்னும் பல அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் சிறை நிர்வாகத்தன் அலட்சிய போக்காலும் உரிய சிகிச்சை அளிக்காத காரணங்களினாலும் கொடுமையான பல நோயகளுக்கு ஆளாக்கப்பட்டு வாடி வருகின்றனர். இந்நிலையில்தான் இவர்களின் வழக்கு ஒரு வழியாக முடிவுக்க வந்தபோது பலர் விடுதலை செய்யப்பட்டார்கள் பலர் கொடுமையா முறையில் எவ்வித நேரடி ஆதாரங்களோ, சாட்சியங்களோ இல்லாத நிலையிலும் (நீதிபதி உத்ராபதி சொன்னது) கொடூரமான முறையில் முஸ்லிம்கள் என்ற காரனத்தினால் பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு வெளியி வர இயலாதபடி செய்யப்பட்டுள்ளனர்.


அணைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்

இந்நிலையில் பல ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி சிறைவாசி சபூர் ரஹ்மான் (வயது 35) அநியாயமாக கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தும் விடுதலை ஆகாமல் மீண்டுமு் அநீதியாக பல ஆயுள் தண்டனை ஒரு சேர விதிக்கப்பட்டிருந்த காரணத்தாலும் மன உளைச்சலில் இருந்த இந்த சகோதரருக்கு நேற்று (31-10-2007) சுமார் 2.00 மணியளவில் கடுமையான நெஞ்சு வலி ஏற்ப்பட்டது.சிறைவாசிகள் அனைவரும் இவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்க வேண்டி கூக்குரல் எழுப்பியபோதும் சிறையில் மருத்துவ அதிகாரியாக இருக்கும் சித்ரா என்ற மத வெறியரின் அலட்சியத்தால் கடுமையான நெஞ்சு வலியால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்களுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் காலம் தாழத்தியுள்ளனர்.

இந்நிலையில் சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்கள் மதவெறி பிடித்த சிறை காவலர்களாலும், சிகிச்சை அளிக்காமல் காலம் தாழத்திய மருத்துவ அதிகாரி சித்ராவின் அலட்சியத்தாலும் மரணமடைந்தார்கள் (இன்னாலில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன்) விடுதலை காணாமல் அந்த ஏக்கத்திலேயே அவரது உயிர் விடுதலையடைந்த கொடுமையான சம்பவம் கோவை மத்திய சிறையில் நடந்தது.

அணைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்

மறைந்த சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்களுக்கு மனைவியும் மூன்று பென் குழந்தைகளும் உள்ளனர். இவரின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வருகின்றது. தான் விடுதலையாகி குடும்பத்தின் வறுமை போக்கலாம் என்றிருந்த நிலையில் இவரும் மரணமடைந்து இந்த குடும்பம் மற்றும் இவரது மூன்று பென் பிள்ளைகளும் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த நிலைக்கு அலட்சிய போக்கை கடைபிடித்த சிறைச்சாலை நிர்வாகமும், அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.

இவரின் மரண செய்தி கேட்டவுடன் கோவை மாநகர முஸ்லிம்கள் கொந்தளித்து போயினர், உடனடியாக அணைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டப்பட்டது. இதை எப்படி கையாளவது என்றும், மரணமடைந்த சகோ. சபூர் ரஹ்மானின் குடும்பத்திற்கு எவ்வகையில் உதவுவது என்றும் விவாதிக்கப்பட்டது.

இறுதியில் சகோ. சபூர் ரஹ்மானின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிந்து நீதிபதி தலைமையில் விசாரனை நடத்த வேண்டும் என்றும், அவரது உடலை நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், மதவெறி பிடித்த சிறை மருத்துவ அதிகாரி சித்ரா மீதும் அந்த நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் அலட்சிய போக்கால் மரணமடைந்த சகோ. சபூர் ரஹ்மான் அவர்களின் குடம்பத்திற்கு உடனடி நிவாரனமாக அரசு ரூ 10 லடசம் வழங்க கோரியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க கோரியும், இன்னும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வேதனை அனுபவித்தும் விடுவிக்கப்படாமல் தண்டனை அளித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அணைவரையும் உடணடியாக விடுதலை செய்யக் கோரியும், இனியும் இதுபோல் நிகழ்வுகள் தொடாந்து நடக்காமல் இருக்க சிறையில் 24 மணி நேரமும் சயெல்படக்கூடிய வகையில் மருத்துவமனை வசதி ஏற்ப்படுத்தக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைக் அடங்கிய மனுவை கோவை மாவட்ட ஆடசித்தலைவருக்கும், முதல் அமைச்சருக்கு, தலைமை நீதிபதி, காவல் துறை ஆனையர், சிறப்பு நீதிமன்ற நீதிபதி, தலைமைச் சயெலாளர், உள்துறைச் செயலாளர், சிறைத்துறை தலைவர் உட்பட பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் த.மு.மு.க, மனித நீதிப் பாசறை, முஸ்லிம் லீக், த.த.ஜ உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சகோ. சபூர் ரஹ்மானின் மரணத்திற்கு காரணமான சிறை நிர்வாகத்திரனை வண்மையாக கண்டித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிறைவாசிகளின் உரிமைக்காகவும், அவாக்ளின் விடுதலைக்காகவும் நீண்ட நெடுங்காலமாக தமிழகமெங்கும் பாடுபட்டு வரும் அமைப்பான் சிறுபான்மை உதவி அறக்கட்டலை (CTM) என்ற நிறுவனம் செய்திருந்தது.

செய்திகள் : நமது சிறப்பு நிருபர் கோவை.

No comments: