Friday, October 26, 2007

அரசுக்கெதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


கோவை அக்டோபர் 27, 2007 : இன்று கோவை மத்திய சிறை முன்பாக கோவையை சேர்ந்த முஸ்லிம்களும் சிறைவாசிகளின் குடும்பத்தார்களும் பெருந்திரளாக திரன்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.


கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கோவையை சேர்ந்த சுமார் 46 முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல ஆன்டு காலமாக குடுமு்பத்தினரை பிரிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை தமிழகத்தி் பிற மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு அரசு நிர்வாகத்தினர் முயற்ச்சிக்கின்றனர்.


பல்லான்டுகளாக இவர்களை பிறிந்து வாடும் இவர்களின் பாவப்பட்ட குடுமு்பத்தினருக்கு ஒரு ஆருதல் சிறையில் வாடும் தங்கள் உரவுகளை எளிதாக காண முடிகின்றதென்பதுதான். தற்போது இதிலும் மன்னை வாறிப்பூடும் விதமாக இவர்களை கோவை சிறையில் இருந்து வேறு மாவட்ட சிறைகளுக்கு மாற்றுவதென்பது மிகக் கொடுமையான ஒன்றாகும்.


ஏற்கனவே மனம் நொந்து போய் விரக்தியில் இருக்கம் இந்த அப்பாவி சிறைவாசிகளின் குடும்பத்தினர் இனி தங்கள் உரவுகளை காண பல்வேறு ஊருகளுக்கு செல்ல வேண்டும் என்பது அவர்களை சித்திரவதை செய்வதும் கொடுமையான மனித உரிமை மீறலாகும்.


மனத உரிமைகளுக்கு எதிரான அரசின் இந்த முடிவை கண்டித்து இன்று சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் நிர்வாகியும் அல் உம்மா அன்சாரி அவர்களின் மனைவியுமான திருமதி. சம்சுன் நிஷா அன்சாரி அவர்கள் தலைமையில் திரன்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும் சிறைவாசிகளின் குடும்பத்தினரும் கோவை மத்திய சிறை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து சிறைவாசிகளை எக்காரனம் கொண்டுமு் கோவையில் இருந்து இமாற்றம் செய்யக் கூடாது என்றும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டுமு் என்று வலியுருத்தியும் மனு ஒன்றை அளித்தனர்.


இம்மனுவின் நகல் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும், உள்துறை செயளாலர் அவர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. தமிழக அரசின் இம்முயற்சியானது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அரசு சிறைவாசிகளை மாற்ற தொடாந்து மயற்சிக்கும் பட்சத்தில் இம்மக்களோடு விரைவில் தமிழகத்தின் பல முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் குதிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது.

No comments: