Friday, April 18, 2008

மேலப்பாளையத்தில் மார்க்க விளக்க கூட்டம்

மேலப்பாளையத்தில் மார்க்க விளக்க கூட்டம்.



மேலப்பாளையம் I.P.P .சார்பில் 06.04.2008 அன்று மேலப்பாளையம், சாயன் தரகன் தெருவில் வைத்து மார்க்க விளக்கப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேர்க்கிளம்பி J.A.Q.H இமாம் யாஸின் இம்தாதி, சமூகக் கொடுமைகள் என்ற தலைப்பிலும், மௌலவி K.S. காசீம் பிர்தௌசி, இழிவுபடுத்தப்படும் இறை இல்லங்கள் என்ற தலைப்பிலும், மீரான் தாவூதி முஸ்லிம்களும், மூடநம்பிக்கைகளும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து பயனடைந்தார்கள்.



ஏற்பாடுகளை நகர த.மு.மு.க.தலைவர் K.S..ரசூல் மைதீன், செயலாளர் மைதீன் பாதுஷா, பொருளாளர் காஜா, துணைத் தலைவர் அப்துல் அஜீஸ், E.M. அப்துல் காதர், தக்வா ஜமாத் தலைவர் இனாயத்துல்லா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி : நெல்லை உஸ்மான்

Thursday, April 17, 2008

இறுதி நாளும் இன்றைய மனிதர்களும்

"இறுதி நாளும் இன்றைய மனிதர்களும்"

அஷ்ஷேய்க். முகம்மது நூஹ் மஹ்லரி அவர்கள்

Al-Sheikh. Nooh Mahlari


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். முகம்மது நூஹ் மஹ்லரி அவர்கள்

Wednesday, April 16, 2008

தேர்தலுக்கு முன் வரும் மாநாடுகள்

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. .. .



யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்பது பிரபலமான பழமொழி. தேர்தல் வரும் பின்னே, மாநாடுகள் வரும் முன்னே என்பது தற்கால புதுமொழி. போட்டி போட்டுக் கொண்டு பலரும் பல பெயர்களில் மாநாடுகள் நடத்தத் துவங்கி விட்டனர்.

இளைஞர் மாநாடு என்றும், மாநில மாநாடு என்றும், பெண்கள் மாநாடு என்றும் ஒன்றன்பின் ஒன்றாக ஒலிபெருக்கிகள் உரத்து ஒலிக்க தேர்தல் திருவிழா துவங்கி விட்டது போல் தான் தோன்றுகிறது.

அரசியல் மாநாடுகள் மட்டுமின்றி, ஆன்மீக மாநாடுகள் கூட ஆதரவு பலத்தைக் காட்டி அரசியல் கட்சிகளிடம் ஆதாய பேரத்தை நடத்துவதற்காக ஆங்காங்கே நடத்தப் போகின்றன. அப்படிப்பட்ட ஒரு மாநாட்டிற்கான அழைப்பைப் பாருங்கள்.

'தங்களின் அரசியல் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளவும், பலப்படுத்திக் கொள்ளவும் அல்லது அரசியலில் அடியெடுத்து வைக்கவும் மாநாடுகள் நடத்தப் படுகின்றன. ஆனால் இவைகளில் முற்றிலும் மாறுபட்ட இதுவரை சமுதாயமே கண்டிராத வகையில் படைத்த இறைவனையே வணங்க வேண்டும், படைப்புகளை வணங்கக் கூடாது என்ற ஓர் இறை மந்திரம் உலகமெங்கும் பரவுவதற்காக நடத்தப்படுகிறது இந்த மாநாடு' – என்ற முன்னறிவிப்புடனும் ஒரு மாநாடு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேற்குறிப்பிட்ட வாசகத்தை எழுதியிருப்பவர் உலக மகா அயோக்கிய சிகாமணி சாட்சாத் பிஜே தான். இவரிடத்தில் ஒரு பண்பு உள்ளது. அதாவது தான் நாடியுள்ள அயோக்கியத்தனத்தை பிறர் செய்வதாக குற்றம் சுமத்தி மக்கள் முன்னால் தான் ஒரு நியாயவான் போல பறைசாற்றிக் கொண்டு விட்டு, பிறகு மெதுவாக தான் எவற்றையெல்லாம் எதிர்ப்பது போல் காட்டிக் கொண்டாரோ அவற்றை செயல்படுத்த துவங்கி விடுவார். இவரின் இந்த குணத்தை அறிந்தவர்களுக்கு இந்த அழைப்பின் மூலம் இவர் விடுத்திருக்கும் செய்தி தான் - ததஜ அரசியல் பரிணாமம் எடுக்கப் போகிறது.

நாம் இப்படி எழுதியதும், ஓய்ந்து போய்விட்ட உமரோ, அடங்கிப் போன அஹமது அலியோ அல்லது அவ்வப்போது பிஜேவிற்கு வால் பிடித்து சூடு பட்டுக் கொள்ளும் அதிரை ஃபாரூக்கோ ஆவேசமாக வெளிவரலாம். என்றாலும் கூட நாம் எழுதியுள்ளது வாஸ்தவம் தான் என அவர்களும் கூட உள்ளூர ஒப்புக் கொள்ளவே செய்வார்கள்.

ஏனெனில்,

ஏப்ரல் 2004 இல், இனி தான் நினைத்த படி தமுமுக தலைமையை ஆட்டுவிக்க முடியாது என்ற நிலை வந்ததும், தமுமுகவின் சொத்துக்களை சுருட்டிக் கொண்டு தமுமுகவிலிருந்து ஓடினாரே.. .. அன்று அவர் கூறியது என்ன தெரியுமா?

பலர் மறந்திருப்பார்கள், பலர் அவ்வாறு கூறியதை நம்பி தமுமுகவிலிருந்து வெளியேறி அவருடன் கைகோர்த்து நின்ற சில நாட்களிலேயே அவரது சிந்தனை, சீர்கேட்டின் பக்கம் செல்வதை உணர்ந்து சப்தமில்லாமல் ஒதுங்கிக் கொண்டனர். இவை எல்லாவற்றையும் புரிந்து கொள்ள இயலாத சிலரும், தனது சொந்த நலன் பாதிக்கப்பட்டு விடக்கூடாதென்ற எண்ணம் கொண்ட சில சுயநலமிகளும் தான் மிஞ்சி இருக்கின்றனர். எனவே தான் மீண்டும் மக்களை திரள வைக்க வேண்டுமென்றால் அன்று சொன்னதையே இன்றும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தினால் தான் தவ்ஹீத் எழுச்சி மாநாடு என்ற பெயரில் அரசியல் பரிணாமத்திற்கான அடிக்கல் நாட்ட முயற்சிக்கிறார்.

அன்று தமுமுகவிலிருந்து விலகி ஓடிய போது சொன்ன காரணம், 'தமுமுக – தவ்ஹீது கொள்கைக்கு எதிராக செயல்படுகிறது. அதனால் அதிலிருந்து வெளியேறி விட்டேன். இனி தவ்ஹீது கொள்கையை உயர்த்துவதற்காக பணியாற்றப் போகிறேன். தவிர, தமுமுக என்ன நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அது நிறைவேறி விட்டது. எனவே தமுமுக என்ற ஒன்று, அதன் பணிகள் எதுவும் இன்று அவசியமற்றதாகி விட்டது. எனவே அங்கிருப்பவர்கள் உடனடியாக வெளியேறி என் பின்னே அணிவகுக்க வேண்டும்' – என்று மேடைகளிலும், தமுமுக ஆறு மாதங்களில் அழிந்து விடும் எனவே இங்கு வந்து விடுங்கள் என தனி நபர்களிடமும் கதை அளந்து பார்த்தார்.

80 களிலிருந்து அவருடன் இருந்தாலும், அவரது நோக்கத்தை புரிந்து கொள்ளாத சிலர் அவர் கூறிய தவ்ஹீத் எனும் தாரக மந்திரத்தால் மயங்கி அவரின் பின் சென்றனர். எந்த தமுமுகவிற்கான அவசியமோ, அவர்களின் பணியோ இந்த தமிழகத்திற்கு அவசியமற்றதாகி விட்டதாகச் சொன்னாரோ, அதே தமுமுகவை காப்பியடித்து கொடி முதல் கொள்கை வரை பின்பற்ற ஆரம்பித்தார்.

தவ்ஹீத் தான் என் உயிர் மூச்சு, நாங்கள் கொடி தூக்கும் கோமாளிகளல்ல மாறாக இது கொள்கை காக்கும் கூடாரம் என கொக்கரித்தவர்கள் பெற வேண்டியதை பெற்றுக் கொண்டதாலோ அல்லது வேறு எந்த நிர்பந்தத்திற்காகவோ அதைப் பற்றி பிறகு மூச்சுக்கூட விட வில்லை. ஆனால் தவ்ஹீத் என்ற பெயரால் தாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதனை தாமதமாக உணர்ந்து கொண்ட பலர் மவுனமாக ஒதுங்கிக் கொண்டனர்.

அரசின் ஆதரவோடும் அன்று இருந்த அரசியின் ஆசியோடும், அனுசரணையோடும் கும்பமேளா ஒன்றை நடத்த முயற்சித்தார். ஆனால் அந்த கும்பமேளாவை தவ்ஹீதின் பெயரால் நடத்த முற்படவில்லை. தவ்ஹீத்தான் எமது உயிர் மூச்சு என்று சொல்லிக் கொண்டாலும், இஸ்லாமிய எதிரியான செல்வியோடு அரசியல் கூட்டணி காண வேண்டும். அதனால் தவ்ஹீத் என்று சொல்லி அதனால் பொதுமக்கள் (அவரது பாஷையில் குராஃபிகள்) வராமல் போய் விட்டால் பேரம் படியாது என்ற பயத்தினால் தமுமுகவின் முழுமுதற் கோரிக்கையை கையில் எடுத்து இட ஒதுக்கீடு கோரிக்கை மாநாடு என்று பெயரிட்டு கும்பமேளாவிற்கு கூட்டத்தை சேர்க்க நாடினார்.

அந்தோ பரிதாபம். அதிலும் தோல்வி தான். தமுமுக இதே ஒதுக்கீடு கோரிக்கைக்காக தஞ்சையில் திரண்ட போது அலை அலையாய் ஆர்ப்பரித்து வந்த தமிழக முஸ்லிம்கள் இவரின் கும்பமேளாவிற்கு குறைந்த அளவிலேயே கூடினர். ஒன்னரை லட்சத்தை தாண்டாத அந்த கூட்டத்தை உருப்பெருக்கி, அதனையும் பல முறை பெருக்கி 10 இலட்சத்திலிருந்து 18 இலட்சம் வரை இஷ்டத்திற்கு எண்ணிக்கையை அறிவித்து இங்கிலாந்து மகாராணியின் ஒட்டியாணத்தை ஏலம் விடுவது போல சமுதாயத்தை ஏலம் விட்டார்.

என்றாலும் அரசியின் முன் அடங்கி ஒடுங்கி ஒரு இலட்சம் பேர் வரை கூடினார்கள் என்று சுருதி குறைந்து ஸ்வரம் வாசித்தார்.

இது 2005 கதை. அன்று சொன்ன அதே கதையை இன்று விட முடியாது. அரசியின் முன்பாக அடங்கி ஒடுங்கி குடுத்த வாக்குமூலம் சம்சுதீன் காஸிமி போன்றோர்களால் சந்திக்கு இழுத்து வரப்பட்டு விட்டது. தவிர அன்று அரசியல் பேரம் பேச இடஒதுக்கீடு கோரிக்கையை முகமூடியாய் பயன்படுத்தியது போல் இன்று படம் காட்ட வழியில்லை. பெயரளவிற்காவது ஒரு அரசு ஆணை வெளியாகி விட்டது. அதற்காக தலைவரை தனியே சந்தித்து அடிமை சாசனமும் எழுதிக் கொடுத்தாகி விட்டது. அதனால் இடஒதுக்கீடு பற்றிப் பேச முடியாது. எனவே தான் மீண்டும் தவ்ஹீத்.

சமுதாயத்தை கூட்டி வந்து அரசியிடம் காண்பித்து பேரம் நடத்தியதில் பெரும் தொகை கைமாறியதாக அன்றே ஒரு பேச்சு அடிபட்டது. அப்படி அரசியிடமிருந்து சேர்ந்த பணத்தை சந்தேஷமா, செலவு பண்ண பக்குவமா – பத்திரப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்ததால் தலைவரை தனியே சந்தித்து அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தாகி விட்டது.

எனவே வேறு வழியே இல்லை.

தேவையான சமயத்தில் பிஜேபிக்கு இந்துத்துவா கைகொடுப்பது போல, பிஜேவிற்கு கை கொடுப்பது தவ்ஹீது கோஷம் தானே. இதனை கூவியதால் தானே தமுமுகவிலிருந்து ஒரு சிலரையாவது அசைக்க முடிந்தது. இதனை கூவிக் கொண்டிருப்பதால் தானே அப்பாவி தமிழ் முஸ்லிம்களை கொஞ்சமாவது தக்க வைத்துக் கொண்டுள்ளதோடு, அவர்களின் உழைப்பை உறிஞ்சி கொளுக்க முடிகிறது.

எனவே வேறு வழியே இல்லை. உள்ளூர் மக்களிடம் ஆதரவை எப்படிப் பெறுவது என்பதற்கு கும்பமேளாவில் கிடைத்த அனுபவம் கைகொடுக்கும். இலவச பயண ஏற்பாட்டாலும், உணவு ஏற்பாட்டாலும் ஓரளவுக்கு ஆட்களை திரட்ட இயலும். இதனைச் சொல்லியே ஏமாந்த வெளிநாட்டு ரசிகர்களிடம் ஒரு தொகையை வசூலிக்கவும் இயலும்.

இத்தனைக்கு பிறகும் எதிர்பார்த்த கூட்டம் கூட வில்லையானாலும் கவலையில்லை கும்பமேளாவில் பெற்ற அனுபவம் உள்ளது. ஒரே இடத்திலுள்ளவர்களை வெ வ்வேறு கோணங்களில் எடுத்து மிக பிரம்மாண்டமாக படம் காட்டுவதற்கான கருவிகளும் சாதனங்களும் வசதி வாய்ப்புகளும் வின்டிவியின் தயவில் தயாராக இருக்கவே இருக்கின்றது. எனவே கவலையில்லை.

தவிர, வரப்பையும், வாய்க்காலையும் கும்பகோண தெருக்களையும் நீள அகலத்தால் பெருக்கி மாநாட்டு வருகையாளர்களை கணக்கிடுவதில் பதிய முறையை கடைப்பிடித்து அரசியல்வாதிகளுக்கெல்லாம் அரிச்சுவடி கற்றுக் கொடுத்த வாத்தியார் - தவ்ஹீத் எம்ஜிஆர் - அல்லவா, இந்த பிஜே. இந்த அடிப்படையில் வல்லத்தில் வளைத்துப் போடப்பட்ட நிலத்தின் நீள அகலங்களைப் பெருக்கி லட்சகணக்கில் அல்ல கோடிக்கணக்கில் குழுமியதாக கணக்க காட்டி விடலாம்.

எனவே தான் தவ்ஹீத் பெயரில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

அதையும் கூட சற்று கவனித்துப் பார்த்தால், இவர் செய்து வரும் வரலாற்று இருட்டடிப்பு பளிச்சென விளங்கும். அதாவது தமிழக தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, ஏன் உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக என தொலைக்காட்சிகள ஒவ்வொன்றும் நல்ல நாள் பெருநாளுக்கு அறிவிப்பு செய்வதை கண்டிருக்கிறோம்.

அரசியின் கண்ணசைவில் கைமாறிய தொகையை தொலைக்காட்சியில் முதலீடு செய்து மீண்டும் அதே தொலைக்காட்சியை அதே அரசியிடம் விற்றுப் பெருத்த பணம் பார்த்த அனுபவத்தால் இவரும் அதே டிவி பாணியை கடைப்பிடித்துள்ளார் போலும்.

'முற்றிலும் மாறுபட்ட இதுவரை சமுதாயமே கண்டிராத வகையில் .. .. .. .. ஓர் இறை தாரக மந்திரம் உலகெங்கும் பரவுவதற்காக.. .. ..'

வரலாற்றை மாற்றி எழுதுவதிலும், மறைப்பதிலும் சோ, குருமூர்த்தி வகையறாவிற்கு இணையாக பிஜேவும் விளங்குகிறார் என்ற கூற்று உண்மைதான் போலும். 2000 இல், மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு ஏகத்துவ எழுச்சி மாநாடு முன்னர் நடத்தப்பட்டது, அன்று இவருடன் இருந்தவர்களில் பலர், இவரின் வேஷம் விளங்கியதால் இவரை விட்டு விலகிச் சென்று விட்டனர்.

அன்றய மதுரை ஏகத்துவ மாநாட்டில் பிஜே, பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பக்கமே சுற்றித் திரிந்தார் என பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்த லுஹா கூட, மஸ்ஜிதுர் ரஹ்மான் கணக்கு வழக்கிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக பின்னர் அமைதியாகி விட்டார்.

அதேபோல், மற்றொரு மேலப்பாளையத்துக்காரர் மாநாட்டு வரவு செலவுகளை கவனித்துக் கொண்டிருந்தவர் மாநாட்டுப் பணிகளில் நடைபெற்ற வீண் விரயங்களை தட்டிக்கேட்ட காரணத்தினாலும், பிஜேவின் நடவடிக்கைகளை ஆட்சேபித்ததாலும், மாநாடு முடிந்தவுடன் பொருளாதார அவதூறு சுமத்தப்பட்டு, மனநோயாளியாக சித்தரிக்கப்பட்டு அமைப்பிலிருந்தும், இயக்கத்திலிருந்தும் ஓரம்கட்டப்பட்டார்.

இதுதான் ஃபளுலுல் இலாஹி வெளியேற்றப்பட்டதன் பின்னணி.

இவையெல்லாம் இன்றய தளபதிகளின் நினைவிற்க வந்துவிடக்கூடாது என்பதற்காகவே மதுரை மாநாடு பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லையோ என்னவோ.

பாக்கரின் பஸ் பயண லீலைகள் சம்பந்தமாக, கடலூர் முன்னாள் ததஜ நிர்வாகிகள் பிஜேவை முபாஹலா செய்ய அழைத்த போது ஓடோடிச் சென்று, அங்கு கூடியிருந்தவர்களை ஏன் வல்ல அல்லாஹ்வையே முட்டாளாக்குவது (நவூபில்லாஹ்) போல இவர் அவருக்குச் சொன்னதை அவர் எனக்குச் சொல்ல, அதைத் தான் நான் இவர்களுக்குச் சொன்னேன் எனக் குறிப்பிட்டாரே அது போன்று கூட ஃபளுலுல் இலாஹி விடுக்கும் முபாஹலா சவாலை சந்திக்க முடியாமல் வெருண்டோடிக் கொண்டு இருப்பவர் தான் இந்த தவ்ஹத் வாத்தியார் -எம்ஜிஆர் - பிஜே.

சேலம் கண்ணன் என்பவர் அவரிடம் சொல்லி, அவர் என்னிடம் சொன்னதைத் தான் நான் புகாராக அளித்தேன் என்று முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், சர்க்காரியா கமிஷன் முன்பு ஆஜராகிச் சொன்னாரே அதேபோல் கடலூர்காரர்களிடம் பிஜே சொன்னதால் மாத்திரம் அவரை நாம் தவ்ஹீது வாத்தியார் என்று குறிப்பிடவில்லை. மாறாக மதுரை மாநாடு விஷயத்தில் லுஹா, இவர் மீது சுமத்திய குற்றச்சாட்டும் கூட ஒரிஜினல் வாத்தியார் எம்ஜிஆர் விஷயத்தில் ஒத்துப் போவதால் இவரை தவ்ஹீது வாத்தியார் எனக் குறிப்பிட்டுள்ளோம்.

இந்த தவ்ஹீது வாத்தியார் - எம்ஜிஆர் பிஜேவின் அழைப்பில் உள்ள மற்றொரு வாசகம் 'ஓர் இறை தாரக மந்திரம் உலகெங்கும் பரவுவதற்காக.. .. ..'

இந்த மாநாடு(?) நடக்க இருப்பது வல்லத்தில். மாநாடு நடைபெற இருப்பது தமிழ் மொழியில் மட்டுமே அப்புறம் எப்படி.. .. .. உலகமெங்கும் பரவுவதற்காக .. .. .. ???

எதையுமே மிகைப்படுத்தி பழக்கப்பட்ட திருவாளர் பிஜே, தவ்ஹீதின் உலகத் தலைமை தனக்கு வழங்கப்பட்டு விட்டதாக எண்ணிக் கொண்டார் போலும். அதனால் தான் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் தான் நடத்தும் இம்மாநாடு உலகமெங்கும் பரவும் என்று புருடா விட்டுள்ளார். அதாவது, உலகமெங்கும் ஏகத்துவ ஒளி பரவாமல் அந்தகாரம் சூழ்ந்திருப்பது போலவும், இனி இவர் நடத்தப்போகும் மாநாட்டிற்கு பிறகு தான் உலகமெங்கும் ஏகத்துவம் எதிரொலிக்கப் போகிறது போன்றதொரு தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கிறார்.

ஆனால் உண்மையான தவ்ஹீத் எழுச்சி மாநாடுகள் உலகெங்கும் பரவலாக பல்வேறு பகுதிகளில் பல சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்டு வருவதை தவ்ஹீதின் பால் நாட்டமுள்ள அனைவரும் அறிவார்கள். சமீபத்தில் கூட உலகெங்கும் இருந்து வருகை தந்த பல அறிஞர்களைக் கொண்டு சென்னையில் பிரம்மாண்டமாக பத்து நாட்கள் பீஸ் (PEACE) மாநாடு நடந்தது. இதில் விசேஷம் என்னவெனில், பத்து நாட்களும் தமிழ், மலையாளம், உருது இவற்றுடன் ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளும் கண்காட்சிகளும் நடத்தப்பட்டமையால், முஸ்லீமல்லாத பல சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு உண்மையான ஏகத்துவத்தை விளங்கிச் சென்றனர்.

யதார்த்தம் இவ்வாறு இருக்கையில், ஏதோ இவர் வல்லத்தில் ஏற்றி வைக்கப்போகும் ஜோதி தான் உலகெங்கும் ஒளிபரப்பப் போவதைப் போன்றதொரு மாயையை ஏற்படுத்த முயற்சிக்கிறார். உண்மையில் சென்னையில் நடைபெற்ற பத்து நாள் பீஸ் மீட்டிங்கில் தனது அடிப்;பொடிகள் எவரும் கலந்து கொள்ளக்கூடாதென தடை விதித்தவர், ஏகத்துவ மாநாட்டில் கலந்து கொள்வதை தடுத்து ஜும்ஆ உரையாற்றியவர், தன்னிடம் சம்பளம் வாங்கும் மவ்லவிகள் மூலமாக ஜும்ஆ உரையாற்ற வைத்தவர், இத்தனை தகுதிகளையும் தனிச்சிறப்புகளையும் பெற்றவர் தான், 'ஓர் இறை தாரக மந்திரம் உலகெங்கும் பரவுவதற்காகத் தான் இந்த தவ்ஹீத் மாநாடு' என்று அழைப்பு விடுத்துள்ளார்.

80 களில் இவரிடம் காணப்பட்ட தவ்ஹீத் கொள்கை உறுதி இன்று இல்லை என்பதை உண்மையான தவ்ஹீத்வாதிகள் அறிவர். அதற்கான சமீபத்திய சான்று தான் பாக்கர் - பஸ் - நந்தினி – பிஜேவின் ஆடியோ – பாக்கர் நீக்கம் - பாக்கரின் துபாய் பயணம் - மிரட்டல் - மீண்டும் பாக்கருக்கு முன்னிலும் கூடுதல் அதிகாரத்துடனான பதவி. இத்தனைக்குப் பிறகும் இவரிடமிருந்து ஏகத்துவத்தை விளங்க முயற்சிப்பவர் ஒன்று மார்க்கமறியாதவராக இருக்க வேண்டும் அல்லது இவர் என்ன செய்தாலும் கண்மூடி பின்பற்றும் தக்லீத்வாதியாக இருக்க வேண்டும். ஆக மொத்தம் ஸஹாபாக்கள் துவங்கி அனைத்து இஸ்லாமிய அறிஞர்களையும் ஏசிய இவரை, சுயநலத்திற்காக தவ்ஹீத் கொள்கையில் தடுமாறும் இவரை, உண்மையான தவ்ஹீத்வாதிகள் ஒருக்காலும் பின்பற்ற மாட்டார்கள்.

இந்த அச்சம் அவருள்ளும் எழுந்துள்ளதன் விளைவு தான் கவர்ச்சி அம்சங்களாக பல விஷயத்தை இந்த மாநாட்டில் இணைத்துள்ளார் போலும்.

இந்த மாநாடு சுயம்வர மாநாடாகவும் நடைபெற உள்ளதாம். ஆம். ஆணும் பெண்ணும் கலந்து செல்லும் தர்ஹா, கூடு, உரூஸ் போல இதுவும் ஒரு திருவிழா கோலம் பூண இருக்கிறது. இது போல பல நவீனத்துவங்களை (பித்அத்களை) நடத்தியாவது கூட்டம் சேர்த்தாக வேண்டுமென்ற நிர்பந்தம் காரணமாகத் தான் இத்தனை முஸ்தீபுகளும். இதற்கெல்லாம் மேலாக உச்சகட்டமாக வேறொரு முயற்சியும் நடந்து வருவதாக அறிகிறோம். இது இஸ்லாமிய சமூகத்திற்குள் எவ்வளவு பெரிய பிரச்சனைகளை தோற்றுவிக்கும் என்பது போகப்போகத்தான் தெரியும். அதாவது மக்காவிலுள்ள கஃபதுல்லாஹ்வைப் போன்ற அமைப்பை இந்த மாநாட்டுத் திடலிலும் அமைக்க இருப்பதாக அறிகிறோம். இதே போன்றதொரு முயற்சியை 2000 ஆம் ஆண்டு மதுரையில் ஏற்பாடு செய்த ஏகத்துவ எழுச்சி மாநாட்டிலும் செய்திருந்தார். அன்றய தேதியில் பலரின் ஆட்சேபனைகளுக்கு இந்த காரியம் உள்ளானது. என்றாலும் 2000 ல் இருந்தவர்கள் இன்று அவருடன் இல்லையென்ற காரணத்தினாலும் இது போன்ற ஏதாவது ஒரு செட்டைக் காட்டியாவது மக்களை அங்கு இழுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தினாலும் இதை செய்திருக்கிறார்.

உலகிலேயே முதல் வணக்கத்தலமான கஃபாவை காட்சிப் பொருளாக்குவதை முஸ்லிம்கள் எவரும் விரும்ப மாட்டார். குறிப்பாக, உண்மை தவ்ஹீத்வாதிகள் அதனை எதிர்க்கவே செய்வார்கள். ஒரு சில மாதங்களுக்கு முன் உலகின் முன்னணி நிருவனமான ஆப்பிள் கம்பியூட்டர் கம்பெனி அமெரிக்காவில் பளிங்கு கற்களால் கஃபாவை உருவாக்க முனைந்த போது உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று திரண்டு எதிர்த்ததே இதற்கு சாட்சி. வரலாற்றிலும் கூட அப்ரஹா மன்னன் அபாபீல் பறவைக் கூட்டத்தால் அழிக்கப்படுவதற்கு முன்னால் ஏமன் நாட்டில் கஃபாவைப் போன்றதொன்றை அவன் உருவாக்கியது வரலாற்றுப் பதிவு. என்றாலும் அதனை அப்போது இருந்த முஸ்லிம்களும் எதிர்த்தார்கள் என்பதும் வரலாறு.

ஆக எப்பாடு பட்டாவது இஸ்லாத்திற்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டாவது தன் ரசிகர்களுக்கும் ஏதமறியாத அப்பாவி முஸ்லிம்களுக்கும் படம் காட்டி அதன் மூலம் பணமும் பலத்தையும் கொள்முதல் செய்ய வேண்டுமென்று எண்ணுகிறார் போலும். இதற்காக எவ்வளவு செலவழித்தாலும் அவரைப் பொறுத்த அளவில் அவை அனைத்துமே இவ்வுலக வியாபாரத்தில் இடப்படும் முதலீடு தான்.

இதைப் போலவே 2005 ஜனவரியில் கூட்டிய (கூடிய அல்ல) கூட்டத்தைக் காட்டி போயஸ் தோட்டத்து பொன் மகள் (அன்றய அரசி)யிடம் சன்மானம் பெற்றுக் கொண்டார். தேர்தல் நேரத்தில் தளபதியாகவும் செயல்பட்டார். அதனால் தான் இப்பொழுது என்ன செலவானாலும் அதனை மீண்டும் என்கேஷ் பண்ணிக் கொள்ளலாம் என்று தாரளமாக செலவு செய்கிறார். இதைச் சொல்லியே ஒரு பெருந்தொகை வசூலிக்கவும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

எல்லாம் முடிந்த பின் தப்பித் தவறி யாரேனும் கணக்கு கேட்டாலோ, ஃபளுலுல் இலாஹிக்கு நேர்ந்த கதி தான் என்பதை உணர்ந்த இந்நாள் தளபதிகள் மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டு உள்ளனர்.

ஏற்கனவே மக்களை விலை பேசி சேர்த்த பணத்தை செழிக்க வைப்பதற்காக சிலு சிலு சிங்கப்பூரில் வியாபார முதலீடு செய்து தனது பினாமியை – அற்புத மனிதன் அலாவுதீனை (40 பேர் ஏறி உயிர் நிலையில் உதைத்த பின்னும் உயிர் பிழைப்பவர் அற்புத மனிதராகத் தானே இருக்க முடியும்) நாடு கடத்தியாகி விட்டது.

இந்த மாநாட்டை யாரிடம் காட்டி சமுதாயத்தை விலை பேச காத்திருக்கிறாரோ?! இதன் மூலம் பெறும் கையூட்டைக் கொண்டு பினாமியாக பிஸினஸ் நடத்தும் பாக்கியம் எந்த தளபதிக்கு கிடைக்கப் போகிறதோ.

பொறுத்திருந்து பார்ப்போம்.

வஸ்ஸலாம்
ராவுத்தர் 15.04.2008

சிறப்பு புலனாய்வு பிரிவின் துவேஷ சிந்தனை நாட்டுக்கு நல்லது அல்ல -MNP அறிக்கை

கடந்த 13.04.2008 அன்று தினமனி நாளிதழில் "படை திரட்டும் மனித நீதிப் பாசறை போலிசார் கவலை" என்ற தலைப்பில் இசக்கி என்ற பாசிஸ்ட் எழுதிய ஒரு கட்டுரையை வெளியிட்டு தமிழகத்தில் கலவர விதையை விதைக்க தினமனி முயன்றது. இதைப்பற்றிய ஒரு கட்டுரை நமது தளத்திலும் இடம்பெற்றிருந்தது. தற்போது தினமனியின் அந்த பாசிச செயலுக்கு மறுப்பு தெறிவித்து மனித நீதிப் பாசறை அமைப்பினர் அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளனர் அந்த அறிக்கையில் கீழக்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

துவேஷ சிந்தனையில் சிறப்பு புலனாய்வு போலிஸார் - மனித நீதிப் பாசறை கவலை

"படை திரட்டும் மனித நீதிப் பாசறை போலிசார் கவலை" என்ற தலைப்பில் கடந்த 13.04.2008 அன்று தினமனி நாளிதழில் பக்கம் 6ல் வந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது. மனித நீதிப் பாசறை தமிழகத்தில் கடந்த 2001 ம் ஆண்டு துவங்கப்பட்டது 2004ல் அல்ல. நீதிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும், தேச நலனுக்காகவும் போராடுவதே மனித நீதிப் பாசறை. கடந்த பல வருடங்களாக சாதி, மத பாகுபாடு இன்றி பல்வேறு மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டு தனி முத்திரை பதித்து வருகிறது மனித நீதிப் பாசறை.

ராணுவ பயிற்சி அல்ல

நாங்கள் வழங்குவது ராணுவ பயிற்சி அல்ல. சுதந்திர தின அணிவகுப்பிற்கான பயிற்சி ஆகும். நாட்டை காக்க ராணுவம் இருக்கும்போது அந்த வேலையை நாம் எடுத்துக் கொள்ள தேவையில்லை. சுதந்திர தின அணிவகுப்பு என்பது முஸ்லிம்களின் சுதந்திர உணர்வின் வெளிப்பாடு ஆகும்.

கோவை மாநாட்டில் மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீருடை அணிவகுப்பு நடத்தியது, நெல்லையில் இளைஞரனி மாநாட்டில் தி.மு.க தொண்டரனி சீருடை அணைிவகுப்பு நடத்தியது. அதே போல்தான் மனித நீதிப் பாசறை ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடத்த இருக்கிறது.

சிறப்பு புலனாய்வு பிரிவின் துவேஷ சிந்தனை நாட்டுக்கு நல்லது அல்ல

கடந்த 60 ஆன்டுகளாக சுதந்திர இந்தியாவிலும் அதற்கு முன்பு 20 ஆன்டுகளாக பிரிட்டிஷ் இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ் என்ற ஃபாசிச பயங்கரவாத அமைப்பு சீருடை அணிவகுப்பு நடத்தி வருகிறது. திரிசூலம் வழங்குவது, சூலாயுதம் வழங்குவது, மதுரை விவேகானந்தா கல்லூரி உட்பட பல இடங்களில் துப்பாக்கி பயிற்சி வழங்கியது, அதன் மூலம் திட்டமிட்டு முஸ்லிம்களை கொன்றொழித்தது இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த அரசுக்கு வேண்டுகோள் விடுக்காத சிறப்பு புலனாய்வு துறை மனித நீதிப் பாசறையின் சுதந்திர தின அணிவகுப்பு பயிற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பது சிறப்பு புலனாய்வு துறையின் துவேஷ சிந்தனையை தெளிவாக காட்டுகின்றது.

துவேஷ சிந்தனையுடன் செயல்பட்டு வரும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளை களையெடுக்க தி.மு.க அரசுக்கு எம்.என்.பி வேண்டுகோள்

தாங்கள் நடுநிலையுடன் செயல்படக் கூடிய அரசு ஊழியர் என்பதை மறந்து சிறுபான்மை முஸ்லிம்கள் நடத்த போகும் சுதந்திர தின அணிவகுப்பையே நாட்டுக்கு ஆபத்து என்று சித்தரிக்கும் வகையில் துவேஷ சிந்தனையோடு சிறப்பு புலனாய்வு துறை பிரிவு போலிஸார் செயல்பட்டுக் கொண்டிருப்பது நாட்டுக்கு நல்லது அல்ல.

சிறுபான்மை நலனில் அக்கரை காட்டும் அரசு என்று பெயர் பெற்ற கலைஞர் அரசுக்கு எதிராக முஸ்லிம்களின் சிந்தனையை திருப்பும் வேலையில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலிஸார் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே துவேஷ எண்ணத்தோடு உள்நோக்கம் கொண்டு செயல்பட்டு வரும் சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி மீது தி.மு.க அரசு உடனே நடவடிக்கை மேற்க் கொள்ள வேண்டும் என மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கின்றது.

என்பதாக மனித நீதிப் பாசறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவிக்கப்பட்டள்ளது.

Monday, April 14, 2008

முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், --வாஜ்பேயி

முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர்களுக்கு இருந்து வரும் சலுகைகளைப் பறிப்போம்

இவர்களின் திட்டம்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர்களுக்கு இருந்து வரும் சலுகைகளைப் பறிப்போம் என்று பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இது ஒன்றும் அதிசயமானதல்ல!
இது அவர்கள் கட்சியின் திட்டம்தான்

- எடுத்துக்காட்டாக உத்தமராகத் தூக்கி நிறுத்தப்படும் அடல் பிஹாரி வாஜ்பேயி தெரிவித்த ஒரு கருத்தைத் தெரிவிந்து கொண்டால் இதன் தாத்பரியம் நன்கு விளங்கி விடும்.

1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான `ஆர் கனைசரில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதற்குரியவர் ஏ.பி. வாஜ்பேயிதான்.பாரதீய ஜனதா கட்சியின் வெப்சைட்டிலும் இடம் பெற்றதாகும்.``ஆர்.எஸ்.எஸ்.என் ஆன்மா என்ற அந்தக் கட்டுரையில் `வாஜ்பேயி என்ன சொல்லுகிறார்?

முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமாம்?

இதோ அவர் எழுதுகிறார்:

1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (டீசபயளைபே)

2) முஸ்லிம்களை உட்கொள்ளுவது (இதன் பொருள்; முஸ்லிம்களுக்கென்று உள்ள அடையாளங்களை அழித்து அவர்களை இந்து மயமாக்குவது).
அப்படி முஸ்லிம்களை உட்கொள்ளுவதற்கு அவர் கூறும் வழிகள் மூன்று

:1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.

2) முஸ்லிம்களை நமது வழியில் கொண்டுவர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரசின் அணுகுமுறை.

3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.

இம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான் நம் வழி என்றார் வாஜ்பேயி

.இப்பொழுது புரிகிறதா? ராஜ்நாத் சிங் கூறியுள்ள கருத்தின் மூலம் எங்கிருந்து வருகிறது என்பது?

http://viduthalai.com/20080412/snews02.html

த.மு.மு.க.கொடி எரிப்பு

த.மு.மு.க.கொடி எரிப்பு


நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகில் அமைந்துள்ளது வாவா நகரம் என்ற சிறிய கிராமம். இங்கு பேருந்து நிலையத்திற்கு எதிரே த.மு.மு.க. உட்பட அனைத்து கட்சிகளின் கொடிக் கம்பங்களும் உள்ளன. 11.04.2008 அன்று அங்கு நடைபெற்ற த.மு.மு.க.பொதுக் கூட்டத்தின்போது கழக கொடி த.மு.மு.க.வின் தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.04.2008 அன்று சில விஷமிகள் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கொடிகளை இறக்கி அரைக் கம்பத்தில் பறக்கவிட்டதோடு த.மு.மு.க.கொடியை இறக்கி தீவைத்து கொளுத்தி இருக்கின்றனர். காலையில் இதைப் பார்த்த நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். செய்தி கேள்விப்பட்டு அருகில் உள்ள அச்சன்புதூர் செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து த.மு.மு.கவினர் குவிந்தனர்.



உடனடியாக அங்கு விரைந்த தென்காசி துணை கண்காணிப்பாளர் திரு.மயில் வாகனன் குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவர் என உறுதியளித்தார். வாவா கிளைத் தலைவர் செய்யது மசூது கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

செய்தி : நெல்லை உஸ்மான்.

இஸ்லாத்தின் பார்வையில் கடன் - (வீடியோ)

"இஸ்லாத்தின் பார்வையில் கடன்"

அஷ்ஷேய்க். அலாவுதீன் பாக்கவி அவர்கள..

Al-Sheikh. Alavudeen Bakavi


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். அலாவுதீன் பாக்கவி அவர்கள்

Sunday, April 13, 2008

உயிரை குடிக்கும் உணவுக்கலப்படம். மஞ்சள் கூட விசமாகும். பகீர் ரிப்போர்ட்.

உயிரை குடிக்கும் உணவுக்கலப்படம். மஞ்சள் கூட விசமாகும். பகீர் ரிப்போர்ட்.




அண்ணாச்சி ஒரு ரூபாய்க்கு மிளகு சீரகம் கொடுங்க! உள்ளங்கை வியர்வையுடன் அந்த ஒரு ரூபாய் நாணயத்தைக் கடைக்காரரிடம் நீட்டினாள் சிறுமி.

கூலி வேலை பார்க்கும் வீட்டுப் பெண்ணாக இருக்க வேண்டும். வறுமை, சோகம், சோர்வு என அனைத்தையும் தோற்றத்தில் அப்பிக் கொண்டு நின்ற அந்தச் சிறுமியை அண்ணாச்சியோ திரும்பிக்கூடப் பார்க்கவில்லை!

‘‘லூஸ்ல இல்லம்மா!’’ என்று கட்டையாய் சொல்லிவிட்டு, ‘‘கிலோ மிளகு இருநூறு ரூபாய் விக்குது! இதுல ஒரு ரூபாய்க்கு எண்ணியா குடுக்க முடியும்!’’ என்று தன் இயலாமையை சம்பந்தமே இல்லாமல் நம்மிடம் வெளிப்படுத்தியவர், ‘‘இத மாதிரி ஏழ பாளைங்களெல்லாம் எதையாவது கலப்படத்தத் தின்னுகிட்டு காய்ச்சல், வாந்தி பேதின்னு கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு அலைய வேண்டியதுதான்!’’ என்று தன் ஆதங்கத்தையும் நம்மிடம் கொட்டினார்...

‘‘இது உண்மைதான்... இன்று ஃபுட் பாய்ஸனால் உடனடி வியாதிகள் மட்டுமின்றி நீண்டகால நோய்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தக் கொடுமையின் உச்சம் மங்களகரமான மஞ்சளில்தான் ஆரம்பமாகிறது என்பது நமது சென்டிமெண்ட்டை மட்டுமல்ல இந்த சமூகத்தின் மீதான நம்பிக்கையையே தகர்க்கிற விஷயம்...

நல்லது கெட்டது எதுவென்றாலும் மளிகை லிஸ்ட் எழுதும் பொழுது மஞ்சளில்தான் ஆரம்பிப்போம். கலப்படமும் அதுபோல் மஞ்சளில்தான் ஆரம்பிக்கிறது... மஞ்சள் பொடியுடன் கலப்படம் செய்ய லெட் க்ரோமேட் என்கிற கெமிக்கலைப் பயன்படுத்துகிறார்கள்... இது என்றாவது ஒரு நாள் கிட்னியை செயலிழக்கச் செய்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை...


எந்த மஞ்சள் பொடியில் இது கலந்துள்ளது என்பதெல்லாம் எளிதில் கண்டுபிடிக்க முடியாத ஒன்று... முழு மஞ்சளைவிட, மஞ்சள் பொடிதான் சமையலுக்கு எளிது என்று நாமும் எளிதாக ஆபத்தில் சிக்கிக்கொள்கிறோம்.’’ _ கலப்படத்தின் அபாயத்திற்கான அலாரத்தை அடித்தார் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஃபேகல்டி, ஃபுட் கன்சல்டண்ட் எஸ்.சந்தர்...

மரணத்தின் பிள்ளையார்சுழி மஞ்சள்தூளிலேயே ஆரம்பிக்கிறதென்றால் மற்ற பொருட்களின் நிலை எப்படி? மாநிலம் முழுக்க நம் ஆராய்ச்சியைத் தொடர்ந்தபோது அடுத்தடுத்து பல பகீர் தகவல்கள்... ‘‘பெட்ரோல், டீசல் போன்றவற்றின் தயாரிப்பில் கடைசியாகக் கிடைக்கக் கூடிய தாது எண்ணெய்தான் மினரல் ஆயில். இந்த மினரல் ஆயிலுக்கு நிறமும் கிடையாது. மணமும் கிடையாது. இதை அனைத்து வகையான எண்ணெயிலும் கலக்கலாம்.
ஒரு மாற்றத்தையும் காட்டாது. ஆனால் சாப்பிட்டபின் முழுவதும் ஜீரணம் ஆகாமல் அப்படியே நம் குடல்களில் தங்கி குறிப்பிட்ட காலத்திற்குப்பின் புற்றுநோயை உண்டாக்கிவிடும்... இதற்கு முக்கியக் காரணம், அந்த எண்ணெயின் அதிகப்படியான அடர்த்தி.... காசுக்காக கலப்படம் செய்பவர்கள் அதன் இரசாயன குணம் தெரியாது கலந்துவிடுகிறார்கள்.

ஆனால், ஐந்து ரூபாய்க்கும் பத்துரூபாய்க்கும் எண்ணெய் வாங்கும் ஏழைகள் இந்த அபாயத்தை அறியாமல் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்!’’ என்கிறார் நெல்லை மாநகராட்சியின் சுகாதார உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம்.

கொஞ்சம் மிளகுத் தண்ணீரில் நிறைய பப்பாளி விதைகளை ஊறவைத்து, பின் அதை நன்றாகக் காயவைத்து மிளகுடன் கலந்து மிளகு ரசத்தை பப்பாளி விதை ரசமாக மாற்றிவிடுகிறார்கள்.

இலவம் பிஞ்சு, மஞ்சநத்தி இலையைக் காயவைத்து வறுத்து அரைத்து டீத்தூளுடன் கலக்கிறார்கள். ஏதோ உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, உணவு என்ற பெயரில் ஏழைகள் உதட்டில் வைக்கும் ஒவ்வொன்றையும் இப்படி விஷமாக மாற்றிவிடுகின்றனர் கலப்படக்காரர்கள்.

கொஞ்சம் மனசாட்சியுள்ளவர்கள் மிளகுத் தூளுடன் பொட்டுக்கடலைத் தூளைக் கலப்பது; சர்க்கரையையும் வெள்ளை ரவையையும் கலப்பது; கடலைப் பருப்புடன் வடைபருப்பைக் கலப்பது என எடையை மட்டும் கூட்ட, விலை கூடுதலான பொருட்களுடன் விலை குறைந்த ஆபத்தில்லாத பொருட்களை கலக்கின்றனர்.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளில் இரண்டு அயிட்டம் உண்டு. ஒன்றுக்குப் பெயர் ‘சில்கி’, இன்னொன்று ‘செகண்ட்ஸ்’. இந்த ‘சில்கி’ தான் ஒரிஜினல். எவ்வளவு நாள் வைத்திருந்தாலும் கெடாது.

ஆனால் இந்த செகண்ட்ஸ் பதப்படுத்தி, பாதுகாப்பாக வைத்திருக்கும் குடோன்களில் இருந்து வெளியே எடுத்துவிட்டால் பத்துப் பதினைந்து நாட்களில் பூச்சியரித்து, புழுபூத்து, பவுடராகக் கொட்டும்.


கல்யாணவீட்டுச் சமையல், ஓட்டல் என உடனடி பயன்பாட்டுக்கு இந்த ‘செகண்ட்ஸை’தான் விலை குறைவு என்பதால் சரக்கு மாஸ்டர்கள், சமையல்காரர்கள் வாங்குவதுண்டு... காசு கொடுத்து ஓட்டலுக்குச் சென்றாலும், அழைப்புக்காக கல்யாண விருந்துக்குச் சென்றாலும் கலப்பட ஆபத்து இப்படியரு ரூபத்தில் அங்கே காத்துக் கொண்டிருக்கும்!

சரி, இந்தக் கலப்படங்களையெல்லாம் கட்டுப்படுத்த சரியான சட்டமில்லையா?

‘‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் ஒன்றை மத்திய அரசு 2006_ல் இயற்றியுள்ளது. இதில் சில முக்கியமான பொருட்களில் செய்யப்படுகின்ற கலப்படத்திற்காக ஆயுள் தண்டனை வரை வழங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தச் சட்டமெல்லாம் நடைமுறைப்படுத்த முடியாமல் கிடப்பில் கிடக்கிறது!
வெளிநாடுகளில் அப்படியல்ல. லண்டனில் உள்ள ‘நுகர்வோர் அகிலம்’ என்கிற அமைப்பு உலகெங்கும் மக்கள் சாப்பிடக் கூடிய மோசமான ஐந்து உணவு வகைகளைக் கண்டுபிடித்து ‘மோசமான உணவுக்கான விருது!’ என்ற ஒன்றையே வழங்கி மக்களை எச்சரிக்கிறது... அந்த வகையில் அண்மையில் அப்படி ஒரு விருது பெற்ற உணவு இந்தியாவில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது... அதிலும் குறிப்பாக, ‘பாலில் அப்படியே ஊறவைத்து குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்’ என சிபாரிசு வேறு! கலப்படத்தால் ஏழைகள் மட்டும்தான் சாக வேண்டுமா? வசதிபடைத்தவர்களும் கொஞ்சம் பாதிக்கட்டும் என்ற தார்மீக நியாயமோ என்னவோ?’’ என்று அரசின் மெத்தனப் போக்கை மெலிதாகச் சாடுகிறார், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நுகர்வோர் குழுக்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், வழக்கறிஞர் மார்ட்டின்.

பொதுவாகவே இந்தக் கலப்படக் குற்றங்கள் அதிகம் நடைபெறுவது சென்னை, மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களில்தானாம். சென்னை மாநகராட்சி இது தொடர்பாக என்ன செய்து கொண்டிருக்கிறது?

‘‘சென்னையைப் பொறுத்தவரை பத்து மண்டலங்களிலும் கண்காணிப்பும் ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வட சென்னை பகுதிகளில்தான் கலப்படம் அதிகம் என்றாலும், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தரமான பொருட்களைப் பார்த்து வாங்குவது, எல்லா இடத்திலும் பாதுகாப்பானது. உணவுப் பொருட்களின் தயாரிப்புத் தேதிகளைப் பார்த்து வாங்குவது போன்ற விழிப்புணர்வுப் பிரசாரங்களை தொடர்ந்து செய்து வருகிறோம். தவிர, கலப்படக்காரர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் செய்கிறோம்.

அண்மைக்காலமாக கலப்படக் குற்றங்கள் குறைந்துவருவதுதான் உண்மை.

2005_ல் நாங்கள் சோதனை யிட்ட 1169 இடங்களில் குற்றம் செய்தவர்கள் 34 பேர். 2007ல் 1083 இடங்களில் சோதனை செய்யப்பட்டதில் 27 பேர்மீதுதான் தவறு இருந்தது...’’ என்று சென்னை மாநகராட்சியின் கூடுதல் நல அதிகாரியான டாக்டர் தங்கராஜன் புள்ளி விவரங்களைத் தருகிறார். குற்றங்கள் குறைவாகத் தெரிவதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாத பல புதுப்புது யுக்திகளைக் கலப்படக்காரர்கள் கையாள்வதும் காரணம் எனலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ‘ஏறிவிட்ட விலைவாசியினால் எந்தப் பொருளிலும் பத்து முதல் இருபது சதவிகிதம் கலப்படம் செய்தாலே பல லட்சங்கள் பார்த்துவிடக்கூடிய வாய்ப்பு, கலப்படத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது’ என்பது பொதுமக்களின் அபிப்பிராயம். இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் அரசு மெத்தனம் காட்டினால் ஏழைகளின் ரசமும் விஷமாகும் என்பது தவிர்க்க முடியாதது!

NANDRI TO : KUMUDAM.
-----------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

Saturday, April 12, 2008

கற்றதும் பெற்றதும் (பள்ளி செல்ல மனமில்லையோ?)



முன்பெல்லாம் அதிகாலையில் முஸ்லிம் சிறுவர் சிறுமியர் கையில் ஒரு எழுது பலகையையுடன் அல்லது குர்ஆனின் ஆரம்பப்பாடக் குறிப்புடன் (யஸர்னல் குர்ஆன்) தூக்கக் கலக்கத்தில் முஹல்லா பள்ளிவாசல் நோக்கி விரைந்து கொண்டிருப்பர். சிறுவர்கள் தொப்பியும் (பழைய காலத்து கருநீல வண்ண வெல்வெட் தொப்பியில் தண்ணீர்பட்டு சுருங்கியிருந்தால் கன்றுக் குட்டி நக்கியதாகக் கேலி செய்த/செய்யப்பட்ட சிறுவர்களில் அடியேனும் ஒருவன் :-) சிறுமிகள் முக்காட்டுடன் குர்ஆனை நெஞ்சில் சுமந்து செல்லும் அழகே தனிதான்! அது ஒரு காலம்!
.
மேல்நிலைப்பள்ளிப் பாடத்திட்டமும் பகுதி நேரப் படிப்பாக (SHIFT SYSTEM) இருந்ததால் ஆறு முதல் எட்டாம்வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களும் குர்ஆன் பள்ளியைத் தவிர்க்காமல் படித்து வந்தனர். பிற்காலத்தில் இத்தகைய (SHIFT SYSTEM) கைவிடப்பட்டு முழுநேரமாக மாறியது. இதனால் அதிகாலையில் குர்ஆன் பள்ளிக்குச் செல்லும் வழக்கம், வழக்கொழிந்து போனது.
.
இதனை உணர்ந்த சில உலமாக்கள் ஒன்றுகூடி சிறார்களுக்கான குர்ஆன் மதரசாவை புதுப்பொழிவுடன் நவீன கல்விமுறைகளுடன் துவங்கி ஓரிரு ஆண்டுகள் சிறப்பாக நடந்து வந்தது. ஆஸ்பத்திரித் தெருவில் இத்தகைய மதரஸா வெகுசிறப்பாக நடந்து வந்தது.
.
வழக்கமாக அலீஃ,பே, த்தே..ஆகிய அரபி எழுத்துக்களையும் ஸபர்,ஸேர் ஆகிய குறியீடுகளையும் இணைத்துப் படிக்கத் தெரிந்திருந்தாலே போதும் குர்ஆன் முடித்து விட்டதாகச் சொல்லி ஒருநாள் 'ஹத்தம்' ஓதி நார்ஸா வழங்கும் முறையை மாற்றியமைத்து, அரபு எழுத்துக்களுடன் இலக்கணம், பேச்சாற்றல் மற்றும் ஃபிக்ஹ் பற்றிய அறிவு, வயது வந்தவர்களுக்கான இஸ்லாமியக் குளிப்புமுறை,இளைஞர்களுக்குத் தாம்பத்ய ஆலோசனை போன்ற அவசிய மார்க்கக் கல்விகளையும் வழங்கி வந்தார்கள்.இதுவும் பிற்காலத்தில் செயலிழந்து போனது.
.
இப்படியாக குர்ஆன் பள்ளிகளிலிருந்து நமது மாணாக்கர்கள் தூரமானது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் குர்ஆன் போதனை செய்துவந்த லெப்பைகள் எனப்படும் உஸ்தாதுகளும் தங்கள் தொழிலை !? மாற்றிக் கொண்டார்கள். காசுக்காக குர்ஆனை விற்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுடன் குர்ஆனுக்கும் நபிமொழிகளுக்கும் மாற்றமானவற்றையும் போதிக்கிறார்கள் என்று சொல்லப்பட்டு புறந்தள்ளப்பட்டார்கள். (பெரும்பாலோர் வயிற்றுப் பிழைப்புக்காக குர்ஆன் போதனையையே பிரதானத் தொழிலாகச் செய்து வந்ததுடன் ஹத்தம்,பாத்திஹா போன்ற பித்ஹத்களையும் பயிற்றுவித்தும் செயல்படுத்தியும் வந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை).
.
சுயமாக குர்ஆன்-ஹதீஸைக் கற்று விளங்கிக் கொள்ளலாம் என்ற புரட்சி 1980களின் தொடக்கத்தில் வெடித்தது! ஏற்கனவே குர்ஆன் ஹதீஸ்களைக் கற்று அறிஞர்களாக அறியப்பட்ட உலமாக்களும் லெப்பைகளின் லிஸ்டில் சேர்க்கப் பட்டு, மார்க்கத்தைக் கற்றவர்களைவிட மார்க்க விவாதக்கலை உலமாக்கள் பரவலானார்கள்! பண்டைய 7-8 ஆண்டுகள் குர்ஆன், ஹதீஸ், ஃபிக்ஹ்களை விளங்கும் முறைமாறி ஒரே ஆண்டில் ஆலிமாகலாம் என்ற நிலை ஏற்பட்டு INSTANT உலமாக்கள் உருவானார்கள்!
.
லெப்பைகளின் புரோகிதம் மற்றும் குர்ஆன் சார்ந்த தொழிலை (ஹத்து, தாயத்து எழுதுதலைக் கிண்டல் செய்தவர்கள் பின்னர் புத்தகங்கள் எழுதியும், மார்க்க சீடிக்கள் விற்றும் தொழில் செய்யலானார்கள்! வசதி வாய்ப்புகள் பெருகியதும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாகவும் இஸ்லாத்தை எடுத்து வைக்கும் ஹைடெக் இணைய உலமாக்களானர்கள்!
.
பள்ளிகளை மூடச்செய்த பள்ளிக்கூட பாடமுறை,ஆலிம்களை அவமதித்தல் போன்றவற்றால் மாணவர்களுக்கும் இஸ்லாத்திற்கும்/குர்ஆன் கற்றலுக்கும் இடைவெளி அதிகரித்து விட்டது. "குர்ஆனும் நபிமொழியும் மட்டுமே எங்கள் வாழ்க்கை" என்றவர்கள்தான் பின்னர் குர்ஆன் வலியுறுத்தும் ஒற்றுமைக்கும், சகமுஸ்லிம் சகோதரனைக்குறை கூறி இகழ்ந்துரைக்க வேண்டாம் என்ற ஹதீஸுக்கும் மாறாக நடந்து கொண்டிருக்கிறார்கள்!
.
நான் மார்க்கத்தை முற்றிலும் அறிந்தவனல்லன்; பண்டைய உஸ்தாதுகள் மூலமும், பிற்கால ஹஜ்ரத்கள் மூலமும், நவீன புரட்சிகர உலமாக்கள் மூலமும் ஓரளவு மார்க்கத்தை அவ்வப்போது விளங்கியவன். தத்தமது தர்க்கங்களும் போதனைகளும் சரியா என்று சுயபரிசோதனை செய்யும் நிலையில் மேற்சொன்ன உஸ்தாதுகள்,ஹஜ்ரத்கள்,ஆலிம்கள் மற்றும் தொடர்புடைய அனைத்துப் பிரிவு முஸ்லிம்களும் உள்ளனர்.
.
இதை சுட்டிக்காட்ட வேண்டும் ஆவலில்தான் இப்பதிவை எழுதியுள்ளேன். யாரையும் புண்படுத்துவதற்காக இப்பதிவு எழுதப்படவில்லை; மாறாக நமது குழந்தைகளுக்கு குர்ஆனுடன் கொஞ்சம் நஞ்சமிருந்த தொடர்பை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற ஆவல் மிகைப்பில் எழுதப்பட்டது.
.
எது சரி? யார் பக்கம் தவறு? என்று பரஸ்பரம் வாதித்து மேலும் தாமதிப்பதை விட, குர்ஆன் ஆரம்பப் பள்ளிகளை மீண்டும் நமதூர்களில் எப்படிக் கொண்டு வருவது, என்று ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை முன்வைக்கலாமே!
.
- <அபூஅஸீலா-துபாய்>>
.

Friday, April 11, 2008

அச்சன்புதூர் ஆர்ப்பாட்டம்

அச்சன்புதூர் ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ளது அச்சன்புதூர் கிராமம். இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழக்கூடிய இடம் ஆகும். இவ்வூரில் ஏறக்குறைய 2500 க்கும் அதிகமான ரேசன் கார்டுகள் இருந்தும் ஒரே ஒரு ரேசன் கடை மட்டுமே இயங்கி வருகிறது.

இக்கடையை நடத்துபவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதால் நியாயமாக மக்களுக்கு சேர வேண்டிய பொருட்கள் கிடைக்காமல் போகிறது. பலமுறை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. மேலும், இவ்வூரில் ஊராட்சி நிர்வாகம் முற்றிலுமாக நிர்வாக அதிகாரியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.


தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி தலைவர் தனக்கு கிடைக்க வேண்டிய பங்குத் தொகை கிடைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளதால், எந்த மக்கள் பணியும் நடப்பதே இல்லை. அத்திட்டங்களுக்கான பணம் மட்டும் முறையாக பில்கள் அனுப்பப்பட்டு பணப்பட்டுவாடா அதிகார தரகர்களுக்குள் பங்கு வைக்கப்படுகிறது.

இவ்விரு பிரச்சினைகளையும் முன்னிலைப்படுத்தி அச்சன்புதூர் த.மு.மு.க. மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.



செய்தி தொகுப்பு

நெல்லை உஸ்மான் கான்.

துபாயில் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு

துபாயில் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் வாரந்தோறும் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் முதல் மஃரிப் வரை பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு பெண் ஆலிமா ஹிஸானா ஸமீரா கைறியா அஜீஸ் ரஹ்மான் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

தாய்மார்களும், சகோதரிகளும் கலந்தி சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

துபாயில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை ஏற்பாடு செய்யும் இஸ்திமா

துபாயில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை ஏற்பாடு செய்யும் இஸ்திமா

துபாயில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை ஏற்பாடு செய்யும் இஸ்திமா சோனாப்பூர் பலுதியா கேம்ப் பள்ளிவாசலில் 18.04.2008 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் தாயகத்தில் இருந்து வந்துள்ள JAQH ன் மௌலவி நூருல் அமீன் உமரி, எஸ்.எம்.புகாரி, அமீர் சுல்தான் உள்ளிட்டோர் உரை நிகழ்த்த உள்ளனர்.

தொடர்புக்கு - 050 - 7481187 055 - 9292424 055 - 8489410

சரியாக தூங்காத பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்!

லண்டன், மார்ச் 27- பெண்கள் போதுமான அளவுக்கு தூங்காவிட்டால் இருதய நோய் தாக்கும் என ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் எரிச்சல்படும் மனநிலையில் இருந்தால் அதற்கு காரணம் அவர்கள் சரியாக தூங்காததுதான் காரணமாக இருக்கும். ஆண்களை விட பெண்களுக்கு தான் தூக்கம் அதிகம் தேவைப்படுகிறது.

அவர்கள் போதுமான அளவுக்கு தூங்காவிட்டால், அவர்களுக்கு இருதய நோய், மனநோய் ஏற்படும். மன அழுத்தம் ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆண்களுக்கு தூக்கம் இல்லாவிட்டால் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால் பெண்களுக்கு தூக்கம் இல்லாவிட்டால் நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

இந்த தகவலை டியூக் பல்கலைக் கழகத்தில் உள்ள உளவியல் துறை தலைவர் டாக்டர் எட்வர் சவாரெஸ் தெரிவித்தார். அவர்தான் இந்த ஆராய்ச்சியை நடத்தினார். SOURCE: INTERNET.
படிக்க:>> மருத்துவம்
---------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் மீலாது விழா!

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் மீலாது விழா!


பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் கடந்த 23.03.2008 அன்று மீலாது விழா நடத்தப்பட்டது. முன்னதாக ரபீஉல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை தினமும் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது.

23.03.2008 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் பாங்காக் மஸ்ஜிதில் மீலாது விழா நடத்தப்பட்டது. துவக்க நிகழ்ச்சியாக, காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் ஹாஜி அஹ்மத் சுலைமான் தலைமையில் மீலாது விழா நிகழ்ச்சிகள் துவங்கின. காயல்பட்டணம் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ முன்னிலை வகித்தார்.

காயல்பட்டணம் ஹாஃபிழ் ஓ.எ.சி. செய்யிது முஹம்மத் கிராஅத் ஓதினார். சங்கத்தின் செயலாளர் ஹாஜி ஹ{மாயூன் வரவேற்புரையாற்றினார். ஹாஜி கத்தீப் மீராஸாஹிப், ரைட் ஜெம்ஸ் - ஹாஜி அஷ்ரஃப் ஆகியோர் பைத் பாடினர்.

ஹாஃபிழ் ஐதுரூஸ் ஆலிம் மற்றும் பாங்காக் மஸ்ஜித் இமாம் மவ்லவீ முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.

தொடர்ந்து சென்னை - மந்தைவெளி மஸ்ஜித் இமாம் மவ்லவீ இல்யாஸ் மீலாது சிறப்புரையாற்றினார். பின்னர் அனைவராலும் ஸலாம் பைத் பாடப்பட்டது. நன்றியுரைக்குப் பின், மவ்லவீ ஓ.எ.சி.ஷாதுலீ ஆலிம் துஆவுடன் விழா நிறைவுற்றது.

விழாவில் கலந்துகொண்ட சுமார் 300 பேருக்கு லுஹ்ர் தொழுகைக்குப் பின் மதிய உணவு விருந்துபசாரம் செய்யப்பட்டது.

விழாவில் பாங்காக் மஸ்ஜித் மக்தப் பிரிவு மாணவ-மாணவியரின் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன. விழாவில் பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டனர்.

விழா நிகழ்ச்சிகளை சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தொகுத்து வழங்கினார்.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=1698

துபாயில் காயல் நல மன்ற கூட்டம்

ஏப்.18இல் அமீரக கா.ந.மன்ற பொதுக்குழு! செயற்குழுவில் அறிவிப்பு!!


ஐக்கிய அரபு அமீரகங்களில் செயல்பட்டுவரும் காயல் நல மன்றத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம், இம்முறை அமீரகத் தலைநகர் அபுதாபியில், மன்றத்தின் உறுப்பினர் ஹாஜி மக்ப+ல் அஹ்மது பி.இ. இல்லத்தில், 04-04-08 வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, மன்றத்தின் மூத்த உறுப்பினரும், துணைத் தலைவருமான ஹாஜி இம்தியாஸ் அஹ்மது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் துவக்கமாக மவ்லவீ ஹாபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1:
எதிர்வரும் 18-04-08 வெள்ளிக்கிழமை, மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை அல்குசைஸ் தவார் பூங்காவில் நடத்துவது. இதற்கான செலவினங்களில் பெரும்பகுதியை செயற்குழு உறுப்பினர்களே மனமுவந்து ஏற்றுக் கொள்வது.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.kayalpatnam.com/shownews.asp?id=1699