Friday, April 11, 2008

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் மீலாது விழா!

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் மீலாது விழா!


பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் கடந்த 23.03.2008 அன்று மீலாது விழா நடத்தப்பட்டது. முன்னதாக ரபீஉல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை தினமும் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது.

23.03.2008 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் பாங்காக் மஸ்ஜிதில் மீலாது விழா நடத்தப்பட்டது. துவக்க நிகழ்ச்சியாக, காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் ஹாஜி அஹ்மத் சுலைமான் தலைமையில் மீலாது விழா நிகழ்ச்சிகள் துவங்கின. காயல்பட்டணம் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ முன்னிலை வகித்தார்.

காயல்பட்டணம் ஹாஃபிழ் ஓ.எ.சி. செய்யிது முஹம்மத் கிராஅத் ஓதினார். சங்கத்தின் செயலாளர் ஹாஜி ஹ{மாயூன் வரவேற்புரையாற்றினார். ஹாஜி கத்தீப் மீராஸாஹிப், ரைட் ஜெம்ஸ் - ஹாஜி அஷ்ரஃப் ஆகியோர் பைத் பாடினர்.

ஹாஃபிழ் ஐதுரூஸ் ஆலிம் மற்றும் பாங்காக் மஸ்ஜித் இமாம் மவ்லவீ முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.

தொடர்ந்து சென்னை - மந்தைவெளி மஸ்ஜித் இமாம் மவ்லவீ இல்யாஸ் மீலாது சிறப்புரையாற்றினார். பின்னர் அனைவராலும் ஸலாம் பைத் பாடப்பட்டது. நன்றியுரைக்குப் பின், மவ்லவீ ஓ.எ.சி.ஷாதுலீ ஆலிம் துஆவுடன் விழா நிறைவுற்றது.

விழாவில் கலந்துகொண்ட சுமார் 300 பேருக்கு லுஹ்ர் தொழுகைக்குப் பின் மதிய உணவு விருந்துபசாரம் செய்யப்பட்டது.

விழாவில் பாங்காக் மஸ்ஜித் மக்தப் பிரிவு மாணவ-மாணவியரின் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன. விழாவில் பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டனர்.

விழா நிகழ்ச்சிகளை சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தொகுத்து வழங்கினார்.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=1698

No comments: