Friday, April 11, 2008

துபாயில் காயல் நல மன்ற கூட்டம்

ஏப்.18இல் அமீரக கா.ந.மன்ற பொதுக்குழு! செயற்குழுவில் அறிவிப்பு!!


ஐக்கிய அரபு அமீரகங்களில் செயல்பட்டுவரும் காயல் நல மன்றத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம், இம்முறை அமீரகத் தலைநகர் அபுதாபியில், மன்றத்தின் உறுப்பினர் ஹாஜி மக்ப+ல் அஹ்மது பி.இ. இல்லத்தில், 04-04-08 வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, மன்றத்தின் மூத்த உறுப்பினரும், துணைத் தலைவருமான ஹாஜி இம்தியாஸ் அஹ்மது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் துவக்கமாக மவ்லவீ ஹாபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1:
எதிர்வரும் 18-04-08 வெள்ளிக்கிழமை, மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை அல்குசைஸ் தவார் பூங்காவில் நடத்துவது. இதற்கான செலவினங்களில் பெரும்பகுதியை செயற்குழு உறுப்பினர்களே மனமுவந்து ஏற்றுக் கொள்வது.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.kayalpatnam.com/shownews.asp?id=1699

No comments: