Friday, April 11, 2008

சரியாக தூங்காத பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்!

லண்டன், மார்ச் 27- பெண்கள் போதுமான அளவுக்கு தூங்காவிட்டால் இருதய நோய் தாக்கும் என ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் எரிச்சல்படும் மனநிலையில் இருந்தால் அதற்கு காரணம் அவர்கள் சரியாக தூங்காததுதான் காரணமாக இருக்கும். ஆண்களை விட பெண்களுக்கு தான் தூக்கம் அதிகம் தேவைப்படுகிறது.

அவர்கள் போதுமான அளவுக்கு தூங்காவிட்டால், அவர்களுக்கு இருதய நோய், மனநோய் ஏற்படும். மன அழுத்தம் ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

ஆண்களுக்கு தூக்கம் இல்லாவிட்டால் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால் பெண்களுக்கு தூக்கம் இல்லாவிட்டால் நோய் தாக்குதல் ஏற்படுகிறது.

இந்த தகவலை டியூக் பல்கலைக் கழகத்தில் உள்ள உளவியல் துறை தலைவர் டாக்டர் எட்வர் சவாரெஸ் தெரிவித்தார். அவர்தான் இந்த ஆராய்ச்சியை நடத்தினார். SOURCE: INTERNET.
படிக்க:>> மருத்துவம்
---------------------------------------------------
மற்ற பதிவுகளை படிக்க:>> வாஞ்ஜுர்

No comments: