Friday, April 18, 2008

மேலப்பாளையத்தில் மார்க்க விளக்க கூட்டம்

மேலப்பாளையத்தில் மார்க்க விளக்க கூட்டம்.



மேலப்பாளையம் I.P.P .சார்பில் 06.04.2008 அன்று மேலப்பாளையம், சாயன் தரகன் தெருவில் வைத்து மார்க்க விளக்கப் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வேர்க்கிளம்பி J.A.Q.H இமாம் யாஸின் இம்தாதி, சமூகக் கொடுமைகள் என்ற தலைப்பிலும், மௌலவி K.S. காசீம் பிர்தௌசி, இழிவுபடுத்தப்படும் இறை இல்லங்கள் என்ற தலைப்பிலும், மீரான் தாவூதி முஸ்லிம்களும், மூடநம்பிக்கைகளும் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து பயனடைந்தார்கள்.



ஏற்பாடுகளை நகர த.மு.மு.க.தலைவர் K.S..ரசூல் மைதீன், செயலாளர் மைதீன் பாதுஷா, பொருளாளர் காஜா, துணைத் தலைவர் அப்துல் அஜீஸ், E.M. அப்துல் காதர், தக்வா ஜமாத் தலைவர் இனாயத்துல்லா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி : நெல்லை உஸ்மான்

No comments: