Monday, April 14, 2008

முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், --வாஜ்பேயி

முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர்களுக்கு இருந்து வரும் சலுகைகளைப் பறிப்போம்

இவர்களின் திட்டம்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினர்களுக்கு இருந்து வரும் சலுகைகளைப் பறிப்போம் என்று பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இது ஒன்றும் அதிசயமானதல்ல!
இது அவர்கள் கட்சியின் திட்டம்தான்

- எடுத்துக்காட்டாக உத்தமராகத் தூக்கி நிறுத்தப்படும் அடல் பிஹாரி வாஜ்பேயி தெரிவித்த ஒரு கருத்தைத் தெரிவிந்து கொண்டால் இதன் தாத்பரியம் நன்கு விளங்கி விடும்.

1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான `ஆர் கனைசரில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதற்குரியவர் ஏ.பி. வாஜ்பேயிதான்.பாரதீய ஜனதா கட்சியின் வெப்சைட்டிலும் இடம் பெற்றதாகும்.``ஆர்.எஸ்.எஸ்.என் ஆன்மா என்ற அந்தக் கட்டுரையில் `வாஜ்பேயி என்ன சொல்லுகிறார்?

முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமாம்?

இதோ அவர் எழுதுகிறார்:

1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (டீசபயளைபே)

2) முஸ்லிம்களை உட்கொள்ளுவது (இதன் பொருள்; முஸ்லிம்களுக்கென்று உள்ள அடையாளங்களை அழித்து அவர்களை இந்து மயமாக்குவது).
அப்படி முஸ்லிம்களை உட்கொள்ளுவதற்கு அவர் கூறும் வழிகள் மூன்று

:1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.

2) முஸ்லிம்களை நமது வழியில் கொண்டுவர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரசின் அணுகுமுறை.

3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.

இம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான் நம் வழி என்றார் வாஜ்பேயி

.இப்பொழுது புரிகிறதா? ராஜ்நாத் சிங் கூறியுள்ள கருத்தின் மூலம் எங்கிருந்து வருகிறது என்பது?

http://viduthalai.com/20080412/snews02.html

No comments: