Wednesday, February 28, 2007

தமுமுக நிர்வாகியின் சமூக அநீதி திருமணம் (HOT VIDEO)

தமுமுக நிர்வாகியின் சமூக அநீதி திருமணம் (HOT VIDEO)

சமுதாய கொடுமைகளுக்கெதிராகவும், சமூக அவலங்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதற்காக துவங்கப்பட்ட தமுமுக இது தனது துவக்க காலத்தில் இருந்தே பல்வேறு போராட்டங்களையும், விழிப்புனர்வு பிரச்சாரங்களையும் நடத்தி நமது தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் இந்த வரதட்சினை எனும் கொடிய அரக்கனுக்கு எதிராக களமிரங்கி போராடி நற்பெயரினை இந்த சமுதாயத்தில் நிலை நிறுத்தியுள்ளது. அதுபோல் பல வரதட்சினை ஒழிப்பு திருமணங்களையும் தமுமுக நடத்தி வைத்து சமுதாயத்தில் வரதட்சினை மற்றும் சமூக அவலங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று வரதட்சினைக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் மிக உறுதியாக தன்ன அடையாளப்படுத்தியுள்ளது தமுமுக.

ஆனால் சமீபத்தில் நமக்கு கிடைக்கப்பெற்ற தமுமுக நிர்வாகி ஒருவரின் இல்ல திருமன வைபவ சிடிக்கள் நம்மை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கின. தமுமுக வின் இந்த சவடால்கள் எல்லாம் வெறும் வெளித்தோற்றத்திற்கு தானா? என்ற கேள்விக்குறியையும் நம்முள் எழுப்பின. காரனம், நமக்கு கிடைக்கப்பெற்ற அந்த தமுமுக முக்கிய நிர்வாகியின் இல்லத் திருமனம் முழுக்க, முழுக்க இஸ்லாத்திற்கெதிரான முறையில் நடைபெற்றதாகும். மற்றும் எவற்றையெல்லாம், எந்த ஆடம்பரங்களையெல்லாம், எந்த பித்அத்துக்கைளயெல்லர்ம ஒழிக்க வேண்டும் என்று தமுமுக பிரச்சாரம் செய்து வருகின்றதோ அவை அணைத்தும் மற்றும் அதனையும் விட மேலான வகையில் மாாக்க் புறம்பான காரியங்களை உள்ளடக்கியதாக இருந்தது அந்த தமுமுக நிர்வாகியின் இல்லத் திருமணம். முக்கியமாக அந்நிகழ்வின் கொடுமையின் உச்சகட்டம் அந்த தமுமுக நிர்வாகி அந்த திருமனத்திற்காக லட்சக் கணக்கில் வரதட்சினையாக ரொக்கமும் நகையும் வாங்கியிருப்பதாக காண்பிக்கப்பட்டது தான்.


நாம் இதற்கு மன்னர் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் என்ற தரங்கெட்ட ஜமாத்தின் சவுதி அரேபிய (அல்கோபர்) கிளை நிர்வாகி ஒருவர் தனது தாடியை எடுத்து விட்டு தனது
தலைவர் பி.ஜே காட்டித்தந்த தூய தவ்ஹித் முறைப்படி அனைத்து அநாச்சாரங்களையும் செய்து தனது திருமனத்தை நடத்தியிருந்தார். அது குறித்து நமது வலைப்பதிவில் எழுதப்பட்ட பின்னர் உடனடியாக அந்த ததஜ நிர்வாகியை நீக்கினார்கள் அல்லது நீக்கப் பட்டதாக நாடகமாவது ஆடினார்கள் ததஜவினர்.


இவ்வளவு சீரும் சிறப்பும் வாய்ந்த உலகில் உள்ள இஸ்லாத்திற்கு புறம்பான அனைத்து அநாச்சாரங்களும் மிகுற்த திருமனத்தை நடத்திய பெருமை தமுமுக வின் ரியாத் மாகான தலைவர் உயர்திரு. ஆரிப் மறைக்காயாட அவர்களையே சேரும். இவர் தனது மகன் ஃபஹத் மறைக்காயருக்கு ரமீஸ் பர்வீன் என்ற பென்னுடன் நடத்திய திருமனத்தில் தான் இத்தனை அநாச்சாரங்களும். இத்திருமனம் நடந்து ஒரு வருடத்திற்கும் மேலான நிலையில் இது பற்றிய தகவல் தமுமுக தலைமை அறிந்திருந்தும் நடவடிக்கை எடுக்காதது அதன் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. தமுமுக வின் பிரச்சாரம் அனைத்தும் ஊருக்கத் தான் உபச்சாரம் என்ற்ற நிலைதானோ?

தமுமுக வின் ரியாத் மன்டல தலைவர் உயர்திரு. ஆரிப் மரைக்காயர் தனது மகன் ஃபஹத் மரைக்காயருக்கு இஸலாத்திற்கு புறம்பாகவும் தான் சார்ந்துள்ள இயக்கத்தின் கொள்கைகளுக்கு புறம்பாகவும் (தமுமுகவின் பைலாவில் சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடுவது முக்கிய பாயின்டாகும்) மிக விமரிசையாக நடத்திய திருமன சிடிக்களை பார்ப்பவர்கள் இப்படிப்பட்ட இயக்க விரோத, இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளை செய்யும் ஒருவரை தனது நிர்வாகியாக இன்னும் வைத்திருப்பதற்காக தமுமுக மீது காறித் துப்புவார்கள் அந்த அளவிற்கு மோசமாக சமூக விரோத, மார்க்க விரோத திருமனமாக அது நடைபெற்றிருந்தது தான். ஆரிப் மறைக்காயர் யாரோ ஒருவராக இருந்திருந்தால் இந்த கட்டுரைக்கு அவசியம் இருந்திருக்காது ஆனால் இவர் சமூக அவலங்கள், மற்றும் வரதட்சினை போன்ற சமுதாய கொடுமைகளுக்கு எதிராக களம் கண்ட தமுமுக வின் நிர்வாகியாக இருப்பதால்தான் இந்த கட்டுரை.


தான் முன்னி்ன்று நடத்திய தனது மகனின் திருமனத்தில் லட்சக்கணக்கான ரூபாய்களையும், நகைகளையும் வரதட்சினையாக அணவைரின் முன்னிலையில் பெற்றுள்ளார் தமுமுகவின் நிர்வாகியான ஆரிப் மறைக்காயர். அத்துடன் நின்றுவிடாது பல லட்சம் மதிப்புள்ள சீர் வகைகளையும் பெற்றுள்ளார், அத்துடன் இந்த திருமனத்தில் மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஆனும் பென்னும் ஹிஜாபின்றி விளையாடுதல் , அரிசியை ஒருவர் மீது மற்றவர் அள்ளி வீசி விளையாடுதல், பல்லாங்குழி போன்ற அனைத்து காரியங்களும் அரங்கேறியுள்ளன. தனது பகட்டினை காட்டுவதற்காக எழுதுகோலுக்கே கூசும் வகையில் தனது மகனின் முதலிரவு அறை வரை கேமரா சென்று புகுந்து விளையாடியுள்ளது.


பென்கள் அதிகமான அளவில் ஹிஜாபின்றி இருப்பதாலும் சிலரின் நன்மை கருதியும் முழு சிடியும் வெளியிடாமல் மக்கள் சமூக அநீதியான வரதட்சினைக்கெதிராக குரல் கொடுக்கும் தமுமுக வின் நிர்வாகி எப்படி தனது மகனுக்கு தனது இயக்கத்தின் கொள்கைகளுக்கு எதிராகவும் தான் சார்ந்துள்ள மதத்தின் கோட்பாடுகளுக்கு எதிராகவும் வரதட்சினை வாங்கி திருமனம் முடித்துள்ளார் என்பதை இந்த சமுதாயம் காண வேண்டும் என்பதற்காகவும், உண்மையிலேயே தமுமுக சமூக கொடுமையான வரதட்சினைக்கு எதிராகவும் மற்றும் பல சமமூக அநீதிகளுக்கு எதிராகவும் போராடக்கூடியதாக இருந்தால் உடனடியாக தனது நிர்வாகியான சவுதி அரேபியா நியாத் மன்டல தலைவர் ஆரிப் மறைக்காயர் மீது பாராபட்சமின்றி நடவடிக்கை எடுத்து அவரை அந்த பதவியில் இருந்து நீக்கி அதற்கு பொருப்பான் தூய ஒருவரை நியமித்து தனது பரிசுத்த தன்மையை நிறுபிக்கும் என்று நம்புகின்றோம்.

தமுமுக தனக்கு இது போன்ற மார்க்க நம்பிக்கை இல்லாத, தனது இயக்க கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவோர் வசூல் செய்து தருகின்றார்கள் என்பதற்காகவும், இவர்கள் நன்கொடைகள் அளிக்கின்றார்கள் என்பதாலும் இவர்களுக்கு தனது அமைப்பில் பதவிகள் கொடுத்து நிர்வாகிகளாக வைத்திருப்பது தமுமுக வின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிறிது சிறிதாக சிதைக்க கூடியதாகவே அமையும். மற்றும் தமுமுக வில் உள்ள தவ்ஹித் வாதிகளும் சமுதாய அக்கறையுள்ளவர்களும் இதுபோன்ற நிர்வாகிகளின் செயலால் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க இயலாதவர்களாக, அவமானப்பட்டவர்களாக தமுமுக வை விட்டு விலகும் வாய்ப்புக்களும் ஏராளம்.

தமுமுக இது போன்ற நிர்பந்தங்களுக்கு தன்னை ஆட்படுத்தியதால் இராமநாதபுரம் மாவட்டம் போன்று தமிழகததில் பல இடங்களிலும் இயக்கத்தை மூன்றாக உடைக்க கூடிய நிலைக்கு ஆளாக்கப்பட்டும் இன்னும் பல வலைகுடா நாடுகளிலும் ஏற்கனவே பலமுறை சரிவுகளை சந்தித்து உள்ளது. ஆரிப் மறைக்காயர் பிரச்சினையால் ஏற்கனவு ரியாத் மன்டல நிர்வாகிகள் பலர் தமுமுக வில் இருந்து தங்களது பொருப்புக்களை ராஜினாமா செய்துள்ளனர் இந்நிலையிலும் ஆரிப் மறைக்காயர் போன்ற நிர்வாகிகளை நிர்வாகத்தில் வைத்து அழகு பார்ப்பது தனது கொள்கைகளுக்கு எதிராக தமுமுக செயல்படுகின்றதோ என்ற ஐயத்தையும், தமுமுக வின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிகையின் மீது கேள்வி எழுப்பக்கூடிய வகையிலுமே அமையும். தமுமுக வின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இது குறித்து நன்கு அறிந்திருக்க கூடிய நிலையில் அவரிடம் இருந்து ஏனை தமுமுக சகோதரர்களும், பொதுமக்களும் ஆரிப் மறைக்காயர் மீது உடனடி நடவடிக்கையை எதிர் பார்க்கின்றனர்.


ஆரிப் மரைக்காயர் தனது மகனுக்கு வரதட்சினை வாங்கி முதலிரவு அறை வரை தனது ஆடம்பரத்தை காண்பித்து நடத்திய கல்யானத்தின் முக்கிய காட்சிகள் மட்டும் தொகுக்கப்பட்ட வீடியோவை காண கீழே சொடுக்கவும்:

வீடியோவை காண்பதற்கு CLICK HERE TO VIEW

வீடியோவை பதிவிறக்கம் செய்வதற்கு CLICK HERE TO DOWNLOAD


நன்றி : செய்திகள் மற்றும் வீடியோ சிடிக்கள் - புதுவை எம். அனஸ்
இஸ்லாம், காரைக்குடி

MUGAVAI MNP யினர் நடத்திய இலவச கண் மருத்துவ முகாம்


முகவை MNP யினர் நடத்திய இலவச கண் மருத்துவ முகாம்



முகவை மாவட்ட மனித நீதிப் பாசறையினர் கீழக்கரை யூசுப் சுலைஹா மருத்துவமனையினரோடும் முகவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இனைந்து முகவை மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் கடந்த 24.02.2007 அன்று இலவச கண் மருத்துவ முகாம் ஒன்றை நடத்தினர்.

இம்முகாமிற்கு பிரபல கண் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ஆர். முத்துச்சாமி M.B.B.S., D.O., யூசுப் சுலைஹா மருத்துவமனை, அவர்கள் வந்திருந்து சிகிச்சை அளித்தார்கள். கண்ணில் நீர் வடிதல், கண்ணில் நீர் அழுத்தம், மாறு கண், சர்க்கரை வியாதியால் கண்களில் ஏற்படும் பாதிப்பு, நீர்ப்பை அடைப்பு, கண்களில் உள்ள புரை போன்ற கண் சம்பந்தமான அணைத்து வியாதிகளுக்கும் பரிசோதனையும், சிகிச்சையும் மேற்க்கொள்ளப்பட்டது.

இம்மருத்துவ முகாமிற்கு தேவையான ஏற்பாடுகளை மனித நீதிப் பாசறையின் பெரியபட்டினம் கிளையினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். இம்முகாமில் நூற்றுக் கணக்கான சிகிச்சை பெற வசதி இல்லாத ஏழை மக்கள் சிகிச்சை பெற்று சென்றனர். அத்துடன் அறுவை சிகிச்சையின் மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற நிலையில் உள்ள முக்கிய நோயாளிகள் 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த நாள் 25.02.2007 அன்று கீழக்கரை யூசுப் சுலைஹா மருத்துவமனையில் இலவச அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.


கண் அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு கீழக்கரை யூசுப் சுலைஹா மருத்துவமனை நிர்வாகம் தங்கும் இடம், உணவு, அறுவை சிகிச்சை, IOL லென்ஸ், மருந்துகள், சசிகிச்சையின் பின்னர் வீடு திரும்ப பயன ஏற்பாடு முதலியவற்றை இலவசமாகவே செய்திருந்தனர்.

பெரியபட்டினம் என்ற இந்த கிராமத்தை சேர்ந்த ஏழை மக்களும் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்தவர்களும் இம்மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பலன் பெற்றனர்.


இம்மருத்துவ முகாம் சீரக நடப்பதற்கான ஏற்பாடுகளை பல வகைகளிலும் முகவை மூவட்ட மனித நீதிப் பாசறையினருடன் இணைந்து கீழக்கரை யூசுப் சுலைஹா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர். செய்யது அப்துல் காதர் M.B.B.S., FCCP., GMC (LON) அவர்களும், டாக்டர். N.S.லலிதா ராஜ குமாரி M.B.B.S , இணை இயக்குனர், நலப்பணிகள், அரசு தலைமை மருத்துவமனை, இராமநாதபுரம் அவர்களும் திரு. R. கிர்லேஷ் குமார் I.A.S மாவட்ட ஆட்சியர், இராமநாதபுரம் அவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

காரைக்குடி, இஸ்லாம்

Tuesday, February 27, 2007

சிறப்புச் செய்திகள்!! (SPECIAL NEWS)

தவ்ஹித், ஏகத்துவம் என்று பேசி மக்களை ஏமாற்றி திறியும் ஒரு கும்பல் எந்த அளவிற்கு வழிகேட்டில் உள்ளனர் என்பதை தமிழக மக்களும் இவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றி தங்கள் பொருளையும் நேரத்தையும் விரயமாக்கி கொண்டிருக்கும் வலைகுடா வாழ் ததஜ தக்லீத் தொண்டர்களும் அறிந்து கொள்வதற்கும் இவர்களிடம் இருந்து தனது மனைவி மக்களை பாதுகாத்து கொள்வதற்கும் இந்த கட்டுரை. இது போன்ற செய்திகளை வெளியிடுவதால் நமது முஸ்லிம் சமுதாயம் அசிங்கப்படுகின்றதே என்று பலர் கருதலாம், இது போன்ற அசிங்கங்களை அரங்கேற்றாமல் மறைத்ததனால்தான் இவர்கள் சமுதாய தலைவர்கள் என்ற போர்வையில் யாரும் நம்மை கேட்க மாட்டார்கள் நமது அந்தரங்கங்கள் அம்பலத்திற்கு வராது என்று மேலும் மேலும் நமது சமுதாயத்தை சீரழஜத்து வருகின்றார்கள். இதைப்படிக்க கூடியவர்கள் இத்தோடு நின்று விடாமல் நாளை இவர்கள் உங்களிடம் வரும்போது இது குறித்து கேள்வி கேளுங்கள் தாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று ஆதாரத்துடன் நிறுபிக்க சொல்லுங்கள்.
தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தின் சிறப்புச் செய்திகள்.
பாகம்-1

ஓரினச் சோக்கையில் ததஜ பள்ளி நிர்வாகிகள்

மவுலவி ஷம்சுல்லுஹா றஹ்மானீயின் மச்சான் (தங்கை கணவர்) தான் மவுலவி முஹம்மது அலி றஹ்மானீ. இவர் லூத் நபி சமுதாயத்தவர் செய்த செயலை செய்து வருகிறார் என்பது நீண்ட நெடிய நாள் குற்றச்சாட்டு. எனவே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.

த.மு.மு.க.விலிருந்து விலகி தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் கண்டவர்களுக்கு ஆள் பலமும் மவுலவி என்ற பெயரால் ஒரு கூட்டமும் தேவை என்றானது. எனவே த.த.ஜ. தலைவர் மாதிரி கிடைத்த கழிசடைகளையெல்லாம் தேடிப் பிடித்தார்கள். வருவாய்க்கு வழி வகுத்துக் கொடுத்தும் பதவி அளித்தும் சேர்த்துக் கொண்டார்கள்.

அந்த வரிசையில் சேர்க்ப்பட்டவர்தான் மவுலவி ஷம்சுல்லுஹா றஹ்மானீயின் மச்சான் முஹம்மது அலி றஹ்மானீ. ஏகத்துவம் என்ற பத்திரிக்கையில் எழுத்தாளராக சேர்த்தார்கள். தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தின் கடையநல்லூர் ஆண்கள் கல்லூரியில் பேராசியர் வேலை வழங்கினார்கள். வேலைக்குச் சேர்ந்த அவர் ஆண்கள் கல்லூரி மாணவர்களிடம் அவரது பேராசியத்தனத்தைக்; காட்டினார்.

அவரது பசிக்கு போதிய தீனி கடையநல்லூர் ஆண்கள் கல்லூரியில் கிடைக்கவில்லை. அதனால் மைத்துனர் அபகரித்துள்ள பள்ளிக்கு தொழ வரும் விடலைகளை மாடிக்குப் பிடித்துச் சென்று விளையாடியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் இரு இளைஞர்கள் எம்மிடம் வந்து கூறினர். இதனை அறிந்த நாம் 2005 செம்டம்பரில் ஆதம் ஆதம் என்ற மொட்டைக் கடித பேர்வழிக்கு பதில் அனுப்பியபொழுது அதன் கடைசியிலே, மானம் கெட்ட பெட்டைகளே பள்ளிவாசல் மாடியில் லாம் விவகாரம் பண்ணும் கூட்டமே சீச்சீ வெட்கக் கேடு தூ தூ மானக் கேடு என எழுதி இருந்தோம்.

இதில் எந்தப் பள்ளி? யார்? என்ற பெயர் குறிப்பிட்டு கூறவில்லை. லுஹாவோ எங்கள் பள்ளியில் ஹோமோ செக்ஸ் நடப்பதாக எழுதி உள்ளார்கள் என்று போலீஸில் கூறினார். இது பற்றி ஸல்லிநஸீர், இளையான்குடி மைதீன், சித்தீக், தாஜ் ஆகியவர்களுக்கு 19-09-2005 அன்று போர்ஜரிகள் எதுவும் சொல்வார்கள் எதையும் செய்வார்கள் என்ற தலைப்பில் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறோம்.

எந்தப் பள்ளி? யார்? என்ற பெயர் குறிப்பிடாமல் எழுதியபோது நடவடிக்கை எடுக்காமல் அவரது பசிக்கு தீனி கிடைக்க துணை நின்றார்கள். ஆண் கிடைக்க வழி வகுத்தார்கள். இப்பொழுது கடையநல்லூர் ஆண்கள் கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் போர்க் கொடி தூக்கி விட்டார்கள். கல்லூரி மானம் கப்பலேறும் நிலை. வேறு வழியின்றி மவுலவி ஷம்சுல்லுஹா றஹ்மானீயின் மச்சான் மவுலவி முஹம்மது அலி றஹ்மானீயை கல்லூரியிலிருந்து தூக்கி வீசியது போல் நடித்து இருக்கிறார்கள்.

மாணவர்களின் பெற்றோர்கள் செய்த நிர்ப்பந்தத்தால்தான் இந்த நீக்கல் நாடகம். முறையாக நடவடிக்கை எடுத்து முஹம்மது அலி றஹ்மானீயை நீக்கி விட்டதாக பகிரங்கமாக அறிவித்து இருப்பார்கள். அப்படி அறிவித்தால் லுஹா உட்பட பலரது வண்டவாளங்களை முஹம்மது அலி றஹ்மானி வெளியிட்டு மானத்தை வாங்கி விடுவார்.


தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தின் சிறப்புச் செய்திகள்.
பாகம்-2

ததஜ வின் துனைத்தலைவர் லாட்ஜில் விபச்சாரம்

(ததஜ வின் மாநில துனைத் தலைவரான இவர் குறித்து ஏற்கனவே "சைக்கிள் ஓட்டி புகழ் சைபுல்லாஹ் ஹாஜா" என்று தென்காசி பட்டனத்தான் எழுதிய கட்டுரையை நினைவு கூர்கின்றோம்)

31-01-2007 அன்று மதுரை மாட்டுத் தாவணி அருகில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ரூம் நம்பர் 101லிருந்து ஒரு மவுலவியும் அவரது மனைவி போன்று ஒட்டி உரசிய நிலையில் ஒரு பெண்ணும் காலை 10-10க்கு வெளிப்பட்டிருக்கிறார்கள். நம்ம கடையநல்லூர் மவுலவி ஸைபுல்லாஹ் ஹாஜா அல்லவா இவர். இவரது மனைவி இது அல்லவே யார் இது என ஆச்சரியத்தோடு பார்த்து இருக்கிறார் கடையநல்லூர்வாசி.

மதுரை பஸ் ஸ்டாண்டிலிருந்து ராஜபாளையம் பஸ்ஸில் ஏறிய அந்த ஜோடி முன்னும் பின்னுமாக தனித் தனியாக சீட்டுகளில் இருந்துள்ளது. அத்தோடு பஸ்ஸில் இருந்தவாரே செல் போனில் பேசிக் கொண்டே வந்திருக்கிறது. பிறகு ராஜபாளையத்திலிருந்து வேறு பஸ்ஸில் கடையநல்லூர் வந்து விட்டது அந்தக் கள்ளச் ஜோடி. அந்நிய பெண்ணுடன் த.த.ஜ. துணைத் தலைவர் தனித்து லாட்ஜில் தங்கிய செய்தி கடையநல்லூரில் காட்டுத் தீ போல் பரவி விட்டது.


ஹாஜா மைதீன் என்ற பெயரில் மாட்டுத் தாவணி ஸ்டார் ஹோட்டல் 101வது ரூமில் தங்கியவர் த.த.ஜ. துணைத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜாதான். அவருடன் தங்கிய அந்நிய பெண்ணின் பெயர் ஆமினா. திருமணமான இந்த ஆமீனாவின் கணவர் வெளிநாட்டில் உள்ளார். கணவருடன் சுமுகமான உறவு இல்லை. என்பது உட்பட பல விஷயங்கள் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

(இது குறித்து இன்னும் பல உண்மைகள் புகைப்பட ஆதாரத்துடன் வெளியிடப்படும்)

இந்த உண்மையை மறைக்க அண்ணன் வழியில் தம்பி ஸைபுல்லாஹ் ஹாஜா செயல்பட்டுள்ளார். இந்தச் செய்திகள் பொய் என்று கூறி ஆமினாவின் கையெழுத்துடன் அண்ணனுக்கு ஒரு கடிதம் அனுப்பியள்ளார். ஆமினாவின் கையெழுத்துடன் கடையநல்லூர் போலீஸிலும் அவதூறு புகார் கொடுத்துள்ளார் அண்ணனின் தம்பி ஸைபுல்லாஹ் ஹாஜா.

அவதூறு புகார் சம்பந்தமாக ஆமினா அவர்களிடம் உறவினர்கள் விசாரித்துள்ளனர். தான் எந்த புகாரும் கொடுக்கவில்லை என்று கூறி உள்ளார். பிறகு புகார் கொடுக்கப்பட்டது என தீர விசாரிக்கப்பட்டது. ஆமினா அவர்களிடம் வெத்து பேப்பரில் ஸைபுல்லாஹ் ஹாஜா கையெழுத்து வாங்கியுள்ள திடுக்கிடும் தகவல் வெளிப்பட்டது. ஆமினா அவர்களிடம் வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கியுள்ள ஸைபுல்லாஹ் ஹாஜா தனது விருப்பப்படி அண்ணனுக்கு ஒரு கடிதமும் போலீஸுக்கு புகாரும் எழுதியுள்ளார். தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தின் துணைத் தலைவர் என்றால் சும்மாவா?

சிறப்பு செய்திகள் : சப்பானி ஆலிம் தெரு மாப்பிள்ளை

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம், தமிழ் ஈழம்

Monday, February 26, 2007

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (PART-1)

மலர்மன்னன் என்பவரின் "கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது" தொடர் கட்டுரையை சிஃபி தமிழ்தளத்தில் படிக்க நேர்ந்ததும் அது குறித்து அத்தளத்தினருக்கு நான் எழுதிய மறுப்பு குறித்து அவர்கள் மவுனம் காத்து தங்கள் சார்பு நிலையை அப்பட்டமாக வெளிக்காட்டியது குறித்து முன்னுரையில் எழுதியிருந்தேன்.

முழுநேர இந்துத்துவா எழுத்தாளர்களை எல்லாம் விஞ்சும் விதமாக மலர்மன்னன் முஸ்லிம்களுக்கு எதிரான துவேசக் கருத்துக்களை அக்கட்டுரையில் எழுதியுள்ளார். வயிற்றுக்கு உணவின்றி எலிக்கறி திண்ணும் விவசாயிகளைப் பற்றியோ காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக இந்து அரசியல்வாதிகளைப் பற்றியோ கவலைப்படாமல், தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் மதச்சடங்குகளிலும் நம்பிக்கைகளிலும் தலையிடுவதன் மூலம், அமைதியுடன் வாழும் தஞ்சை இந்து-முஸ்லிம்களிடையே மதமோதல்களுக்கான முதற்கட்ட வேலைகள் தொடங்கப்பட்டு விட்டதோ என்ற அச்சத்தை எழுப்புகிறது மலர்மன்னனின் சிஃபிக் கட்டுரை!

குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையிலான அரசபயங்கரவாதங்களுக்குப் பிறகும் ஓயாத சங்பரிவார நரமாமிச உண்ணிகள் தென்னிந்தியாவின் மங்களூர்-பெங்களூர் என தனது நச்சுக் கரங்களைப் பரப்பி, தற்போது தென் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்ட முஸ்லிம்களைக் குறி வைத்துள்ளார்கள். விஜயபாரதம் மற்றும் இணைய ஊடகங்கள் மூலம் பல நச்சுக் கருத்துக்களைப் பரப்பி, தஞ்சை மாவட்ட முஸ்லிம்களுக்கு எதிரான மிகப்பெரும் சதிக்கு அடித்தளம் இட்டுள்ளனர்.

எங்கெல்லாம் இயலுமோ அங்கெல்லாம் இந்து-முஸ்லிம் ஒற்றுமை சீர்குலைத்து, கலவரங்களை 'உற்பத்தி' செய்து, பின்னர் 'இந்து ஒற்றுமை மாநாடு' என்ற வன்முறைக் கூட்டத்தை நடத்தி, அதன்மூலம் அப்பகுதி முஸ்லிம்களை அச்சுறுத்தி வைப்பதே சங்பரிவாரங்களின் கடந்தகால வரலாறாக இருக்கிறது. சமீப நிகழ்வான பெங்களூர் கலவரமும் இந்தவகையில்தான் ஏற்பட்டு, மத்திய அரசின் சாதுர்யமான துரித நடவடிக்கைகளால் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது. குஜராத்தில் முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு முன்பாக அனைத்து புள்ளி விபரங்களையும் திரட்டி, முன்னேற்பாடாக தாக்கப்பட வேண்டிய முஸ்லிம் வீடுகள், வணிக நிறுவனங்கள் பற்றிய ஸ்கெட்ச் போட்டு வைத்தே கலவரங்களில் இந்து பயங்கரவாதிகள் கச்சிதமாகச் செயல்பட்டு வந்துள்ளனர்.

மலர்மன்னன் அவர்களின் முஸ்லிம்களைப் பற்றிய வன்ம எழுத்துக்களை ஆழ்ந்து நோக்கினால், மதக்கலவரத்தை உண்டு பண்ணுவதற்கான சதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு விட்டதை ஓரளவு யூகிக்க முடிகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்குமுன் பக்ரீத் அன்று மாடுகளை வெட்டக்கூட மனம் வராத அளவுக்கு நமது பாரம்பரிய மரபுகளைமதித்த தஞ்சை மாவட்டத் தமிழ் முகமதியக்
குடும்பங்கள் எங்கிருந்தோ ஒட்டகங்களை அதிக விலை கொடுத்து வரவழைத்துச் சட்டத்திற்குப்புறம்பாக வெட்டிக் கொண்டாடும் மனப்போக்கை இன்று மேற்கொண்டது ஏன்?


ஆண்டாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்டு ஏழ்மை நிலையிலேயே இருந்த ஓட்டு வங்கி முஸ்லிம்கள், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பன்னெடுங்காலம் பின்தங்கியிருந்து,சமீப பத்துப் பதினைந்தாண்டுகளில் வளைகுடா நாடுகளில் இந்தியர்களுக்கான வேலைவாய்ப்புகள் திறந்து விடப்பட்ட பிறகே எஞ்சியதில் தகுதியான கடைநிலைப் பணிகளின் மூலம் கிடைத்த சம்பளத்தில் பொருளாதார ரீதியில் சற்று நிமிர்ந்துள்ளனர் .

பொங்கல், தீபாவளி போனஸ் போன்றவற்றை அந்தந்த நேரத்தில் கொடுத்து சந்தோஷப்படுத்தும் அரசுகள் பெருநாள் போனஸ் என்று முஸ்லிம்களின் பண்டிகைக் காலங்களில் கொடுத்து அவர்களும் பண்டிகையை கடனின்றி கொண்டாட 'மதசார்பற்ற அரசுகள்' வழி செய்வதில்லை. இந்நிலையிலேயே மதசார்பற்ற இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை இருந்து வருகிறது .

பெரும்பாலும் குர்பானி கொடுப்பது போன்ற மார்க்கக் கடமைகளில், குர்பானி இறைச்சியைத் தருகின்ற நிலையில் மிகச் சிலரும் பெருநாள் உணவுக்கென பெறுகின்ற நிலையில் மிகப் பலருமாக முஸ்லிம்கள் இருந்து வந்துள்ளனர். குர்பானி பிராணிகளாக ஆடு, மாடு,ஒட்டகம் ஆகியவற்றில் எது வசதிப்படுகிறதோ அதைக் கொடுக்கலாம். ஆடாக இருப்பின் நபருக்கு ஒரு ஆடுவீதமும், மாடு, ஒட்டகம் இவற்றை ஏழு பேர் சேர்ந்து கூட்டாகவும் குர்பானி கொடுக்கலாம்.(வசதியுள்ள தனிநபர் முழு மாடோ அல்லது ஒட்டகமோ அல்லது இரண்டும் சேர்ந்தோ கூட கொடுக்கலாம்).

சந்தையில் குர்பானிக்குத் தகுதியான ஒரு ஆட்டின் விலை சுமார் 3,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரையில் இருக்கிறது . மாட்டின் விலை ரூ.12,000 முதல் ரூ.15,000 வரையிலும், ஒட்டகம் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரையிலும் உள்ளது. தனியாக ஒரு ஆட்டைக் குர்பானி கொடுப்பதை விட ஏழுபேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஒட்டகத்தையோ குர்பானி கொடுப்பதன் மூலம் குறைந்த செலவில் மார்க்கக் கடமையை அதிகம் பேர் நிறைவேற்ற முடிவதோடு, பயன் பெறும் ஏழைகளின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

சங்பரிவார வெறியர்கள் முஸ்லிம்களின் மார்க்கக் கடமைகளில் முடிந்த மட்டும் இடையூறு செய்தே வந்துள்ளனர். குர்பானிக்காக மாடுகளைக் கொண்டு செல்லும் போது இந்தப் போலி பசுநேசர்களின் இடையூறுகள் கொஞ்ச நஞ்சமல்ல .(வடமாநிலத்தில் மாட்டை உணவிற்காக அறுத்ததற்காக சில தலித்துக்களைக் கொன்றவர்களும் இதே போலி பசுநேசர்கள்தான்.) மாட்டிற்குப் பகரமாக நம் நாட்டின் வடமாநிலச் சந்தைகளில் கிடைக்கும் ஒட்டகத்தை விலைக்கு வாங்கி குர்பானி கொடுக்கிறார்கள் .

பசுவை தெய்வமாக வணங்கும் இந்துக்கள், ஒட்டகக் குர்பானியை ஊக்குவிக்க வேண்டியதே யதார்த்தம்.

உலகிலேயே ஒரே இந்து நாடான நேபாளத்தில் சர்வ சாதாரணமாக மாட்டுக்கறியும் பன்றிக்கறியும் விற்கிறார்கள். அதனை எதிர்த்து எந்தவொரு போலிப் பசுநேசரும் குரல் கொடுப்பதில்லை. அவர்களின் குறியெல்லாம், இந்தியாவிலுள்ள முஸ்லிம்களும், தலித்களும்தாம்.

"மாடுகளை முஸ்லிம்கள் மாடுகளைப் பலியிடுகிறார்கள்" என்ற கூப்பாட்டுக்காவது இந்து மதத்தின் ஒரு சிறுபான்மை சமுதாயத்தின் 'கோமாதா' என்ற மதநம்பிக்கை என்பதாகக் கொள்ளலாம். ஆனால், ஒட்டகத்தைப் பலியிட்டு பகிர்ந்து உண்பதால் வயிறு எரியும் மலர்மன்னன் என்ன காரணம் சொல்லப் போகிறார்? எக்காரணம் கொண்டும் நம்நாட்டில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக இருந்து விடக்கூடாது என்பதைத் தவிர வேறுகாரணம் இருக்க முடியாது; அவ்வாறு ஒற்றுமையாக இருந்து விட்டால் சங்பரிவாரங்கள் அரசியல் பிழைப்புக்கு எங்கு செல்வார்கள்? என்ற சுயநலக்காரணமன்றி பண்பாட்டுக் கலாச்சார காரணமல்ல என்பதும் தஞ்சை மண்ணில் இந்துவும் முஸ்லிமும் மாமன்-மச்சானாய் வாழ்ந்து வருவது இந்து வெறியர்களின் கண்ணில் உறுத்துகிறது என்பதும் தெளிவு!

அடுத்து, அக்ரகாரங்கள் அழிந்து புதுப்புது மஸ்ஜித்கள் உருவாகியுள்ளதால் எழுந்த கவலையைப் பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்த பகுதியில் பார்ப்போம்.

பகுதி- 2 இன்சா அல்லாஹ் விரைவில்

ஆக்கம்: நல்லடியார்

நன்றி : சத்தியமார்க்கம்

என் தந்தை வருவாரா?

என் தந்தை வருவாரா?


யா அல்லாஹ் என் கண்ணீர் வற்றும் முன்னே...

என் கை பிடித்து பாட சாலைக்கு அழைத்துச் செல்ல...

என் தந்தை சிறையிலிருந்து வருவாரோ? ....என ஏங்கும் இது போன்ற பல சிறுவர்களின் ஏக்கத்தினை போக்கி நம் சமூக அவலம் துடைக்க ஒன்றுபடுவீர் உடைத்திடுவோம் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளின் விலங்குகளை!!

மார்ச்ச 11 - சமுதாய தலைமைகளின் சங்கமம்!! கோவையில்....வாருங்கள் எம் சமுதாயச் சொந்தங்களே !! ஒன்றுபடுவோம் தடைகளை தகர்த்தெறிவோம்!!

இந்திய மக்கள் தொகையில் நம் சதவிகிதத்டதிற்கும் அதிகமாக இந்திய சிறைச்சாலைகளில் நம் சமுதாய இளைஞர்கள் தம் மனைவி, மக்களை இழந்து எந்த வித வழக்குகளும் இன்றி அல்லது புனையப்பட்ட பொய் வழக்குகளின் கீழ் நீண்ட நெடுங்காலமாய சிறையிருந்து வருகின்றார்கள். அவர்களின் விடுதலைக்காக குரல் கொடுப்பதும், அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் மனைவி மக்களின் வேதனைகளை போக்குவதும் சமுதாயத்தின் அங்கங்களான நம் மீது கடமையல்லாவா? ஒன்றுபடுவோம் வாரீர் !! தமிழகத்தின் எல்லா சாலைகளும் கோவையை நோக்கியதாக இருக்கட்டும்!!

மார்ச் 11 - உங்கள் ஆதரவும் அனுசரனையும் எங்களுக்கு தேவை...உங்கள் பிரார்த்தனைகளில் தமிழக சிறைச்சாலைகளில் நீண்ட நெடுங்காலமாக வாடிக் கொண்டிருக்கும் உங்கள் தமிழ் முஸ்லிம் சகோதரர்களையுமு் நிணைவு கூறுங்கள்.

மேலதிக விபரங்களுக்கும்...அனுசரனைகள் வழங்குவதற்கும் தெர்டர்பு கொள்ளுங்கள் :

சகோ. கோவை தங்கப்பா (எ) முகம்மது சபேர்

தொலைபேசி : 0091-9443654473 / 0091-9944415560

Web : www.ctmcoimbatore.com

இஸ்லாம், காரைக்குடி,islam,muslim

Tuesday, February 20, 2007

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள் (முன்னுரை)index

மக்களாட்சி நடைபெறும் ஒரு குடியரசின் அடிப்படை நிலைநிற்றலுக்கு அவசியமான தூண்களில் தலையாயது கருத்துச் சுதந்திரமாகும். உண்மைகளை வெளிப்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலை ஓர் இடத்தில் இருந்தால் மட்டுமே அங்கு சுதந்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் கொள்ள முடியும். ஏனெனில் கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாகும்.

அந்த வகையில் சுதந்திர இந்தியாவில் கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு முழுமையாக வழங்கப்பட்ட ஓர் உரிமையை, மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்குப் பிறகு இந்தியாவை முழுமையாகக் கொள்ளை கொள்ளத் துடிக்கும் இந்துத்துவ சங்பரிவாரக் கூட்டங்கள் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு, இந்நாட்டின் மைந்தர்களான குடிமக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டவும், கலகம் விளைவிக்கவும் தக்க வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை தொடர்ந்து திரித்து வெளிப்படுத்தி வருகின்றன.

ஒரு பொய்யை வெவ்வேறு விதமாகத் திரும்பத் திரும்பச் சொன்னால், நாளடைவில் அது உண்மையாகிவிடும் என்பது ஹிட்லர்-கோயபல்ஸ் யுக்தி. நாஜியிச ஹிட்லரின் அடிவந்த சங்பரிவாரங்களும் இதே பாணியை பின்பற்றி வருகின்றனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் நடந்த அனைத்து கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் இவ்வாறு உண்மைக்குப் புறம்பாக வெளிப்படுத்தப்படும் செய்திகளும், கட்டுரைகளும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இதனை நன்றாக உணர்ந்து வைத்துள்ளதாலேயே சங்க்பரிவார சக்திகள் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து பரப்பி துவேஷத்தை வளர்த்து வருகின்றன.

உலகின் அதிவேக வளர்ச்சியில் இன்று மிகப்பெரும் சக்தியாக ஊடகத்துறையில் உருவெடுத்துள்ளது இணையமாகும். இங்கு கருத்துக்களை வெளியிட எவருக்கும் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமென்றாலும் செய்திகளை வெளியிடத் தக்க விதத்தில் இணையம் அமைந்துள்ளது தான் இதன் காரணமாகும். இந்தியாவின் எல்லாத்துறையிலும் மற்றவர்கள் கண் உணரும் முன்பே நுழைந்து அவ்விடங்களை ஆக்ரமித்துக் கொண்ட சங்க்பரிவார சக்திகள் இன்றைய அதிசக்தி வாய்ந்த இந்த ஊடகத்தையும் தங்களின் லட்சியத்திற்காக மிக அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

கடந்த இரு தினங்களில் பெங்களூரில் நடந்த தென்னிந்திய முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) நடத்திய எம்பவர் இந்தியா (Empower India) மாநாட்டில் கலந்து கொண்ட கர்நாடக உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கோ. சென்ன பாஸப்பா கூறிய வாசகங்கள் கவனிக்கப்பட வேண்டியதாகும். "இந்தியாவின் கிராமப்பகுதிகளில் கூட இன்று ஃபாஸிஸம் பரவத் தொடங்கியுள்ளது. அம்பேத்கர் மற்றும் பகத்சிங் போன்றவர்களை தங்களது வளர்ச்சிக்காக ஃபாஸிஸ்டுகள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட தேச துரோகியான சாவர்க்கரின் படத்தை இந்திய நாடாளுமன்றத்தில் வைக்கும் அளவுக்கு இன்று நிலை மாறியுள்ளது". நீதித்துறையின் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறியிருக்கும் இவ்வாசகங்கள் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸ்டுகளின் வளர்ச்சியைத் தெளிவாக உணர்த்துகிறது. இவர்களின் இந்த வளர்ச்சிக்கு ஊடகங்களின் பொய் பிரச்சாரம் சிறப்பான பங்கு வகித்துள்ளது என்பதை மறுக்க இயலாது. இந்நிலை மிகவும் கவலைக்குரியதாகும்.

ஊடகத்திற்கு என்று ஒரு தர்மம் உண்டு. அந்த தர்மத்தை இன்று காற்றில் பறக்கவிட்டுக் கொண்டு அவதூறுகளையும் பொய்களையும் பரப்புவதில் பெரும்பாலான ஊடகங்கள் முன்னணியில் நிற்கின்றன. உண்மைக்குப் புறம்பான விடயங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது, அதற்கான மறுப்பு கொடுக்கப்பட்டாலோ, உண்மையான நிலையை வெளிப்படுத்தும் விதத்தில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலோ அவற்றை உடனடியாக பிரசுரிப்பது கருத்துச் சுதந்திரத்தை காக்கும் ஊடகங்களின் தலையாய கடமையாகும். இதனைப் பெரும்பாலான ஊடகங்கள் செய்து, கருத்துப் பரிமாற்ற நேர்மையைக் காக்கின்றன.

ஆனால் என்ன காரணத்தினாலோ நடுநிலையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் சில ஊடகங்கள் கூட பல நேரங்களில் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுவதற்கும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பம் விளைவித்து கலகங்களை உருவாக்கவும், அதன் மூலமாக இந்துத்துவ சங்பரிவார கூட்டங்களின் வளர்ச்சிக்கும் துணை போய் விடுகின்றன.

இணையத்தில் சங்பரிவார ஃபாஸிஸ கூட்டத்தின் வளர்ச்சிக்காக, பொதுமக்களிடையே பொய்களையும் அவதூறுகளையும் எழுதிப் பரப்புவதற்காகவே ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவர்களின் எழுத்துக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நபர்களால் தோலுரித்து காட்டப்பட்டும் உள்ளது. அந்த வரிசையில் மலர்மன்னன் என்ற பெயரில் எழுதும் ஒரு இந்துத்துவ வெறியர் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது.

தனது எழுத்துக்களில் இந்துத்துவா தனது எதிரியாக வரையறுத்து வைத்துள்ள இஸ்லாம், கிறிஸ்தவம், கம்யூனிஸத்தைக் குறித்து உணமைக்குப் புறம்பான தகவல்களை வரலாறுகளாகவும், நிகழ்வுகளாகவும் தருவது தான் இந்த கோயபல்ஸின் முக்கிய வேலையாகும்.

காந்திஜியைக் கொன்ற மாபாதகன் கோட்சேயின் கொலைவெறியை தனது நாற்றம் பிடித்த எழுத்துக்களால் நியாயப்படுத்தி எழுதிய தேசதுரோகி மலர்மன்னன், முஸ்லிம்களை குறித்தும் இஸ்லாத்தை குறித்தும் நேர்மையாக எழுதுவார் என்று எதிர்பார்க்க முடியாது தான். திண்ணை டாட் காம் என்ற இணைய தளத்தில் இந்திய வரலாறுகளில் பல நிகழ்வுகளைத் திரித்து மக்களிடையே குழப்பத்தையும் துவேஷத்தையும் வளர்க்கும் விதத்தில் உண்மைக்குப் புறம்பாக எழுதியபோது, தோழர் கற்பக விநாயகம் அவர்களால் தோலுரிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட அவமானத்தால் கூனிக் குறுகி வாழ்க்கை வெறுத்துப் போய் இனி எதைப்பற்றியும் எழுதப் போவதில்லை என்று வடக்கிருந்த தேசத்துரோகி மலர் மன்னன், இன்று சிஃபி டாட் காம் என்ற தளத்தின் தமிழ் பகுதியில் அவதூறுகளை 'எழுத' வேண்டப்பட்டுள்ளார்.

இதே சிஃபி டாட் காம் இணைய தளம் இஸ்லாத்திற்கு எதிராக இணையத்தில் காழ்ப்பைக் கக்கி எழுதும் கயமை நிறைந்த போலி நபரான நேசகுமார் என்ற மற்றொரு இந்துத்துவ பார்ப்பனருக்கு சிஃபியில் தனி இடம் ஒதுக்கியதும் நினைவு கூரத்தக்கதாகும். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமெனினும் தங்கள் மன அழுக்கைக் கொட்டிக் கொள்ளட்டும். அதற்கு இடம் கொடுப்பதும், பிரித்து விடுவதும் அவரவர் விருப்பம் தான். ஆனால் சாதாரண ஊடகங்களுக்குரிய தர்மத்தை இவர்கள் கடைபிடிக்க வேண்டும் இல்லையா?

சமீபத்தில் இந்துத்துவா ஊதுகுழல் மலர் மன்னன், "கலைகள் தந்த தஞ்சை, கவலை தருகிறது" என்று எதுகை மோனையாகத் தலைப்பிட்டு எழுதி இருந்ததை சிஃபி டாட் காம் தமிழ் பதிப்பில் வெளியிட்டிருந்தார்கள். அதில் இருந்த உணமைக்குப் புறம்பான விஷயங்களையும் தவறுகளையும், பல யதார்த்தமான நிலைமைகளையும் சுட்டி சிஃபிக்கு ஒரு மறுப்புரை எழுதி பிரசுரிக்கும் படி கோரியிருந்தேன். மேலும் அக்கட்டுரை சமூகத்தில் மதக் கலவரைத்தைத் தூண்டும் வகையில் கயமை நோக்குடன் அவதூறாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.
மறுப்பு அனுப்பப்பட்டு மூன்று வாரங்களுக்கும் மிகுந்து நாட்கள் ஆகிவிட்டன. நினைவுறுத்தல் கடிதமும் அனுப்பப்பட்டாயிற்று. இதுவரை சிஃபி தமிழ் தள நிர்வாகியிடமிருந்து மறுப்புரையை பிரசுரிப்பது பற்றியோ அல்லது பிரசுரிக்க முடியாது என்றோ எவ்வித பதிலும் இல்லை. இந்த அளவுக்கு இருக்கிறது சிஃபி தமிழ் தளத்தின் எழுத்து நேர்மையும் கருத்துச் சுதந்திரமும்.

சங்பரிவாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் துணைபோகும் இது போன்ற ஊடகங்களின் உண்மை நிலையை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் வெளியிடப்படும் தகவல்களில் அடங்கியுள்ள உண்மைக்குப் புறம்பான விஷயங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பேரவாவில் பல தளங்களை தொடர்பு கொண்டு இறுதியில், தமிழ் முஸ்லிம்களின் இணைய குரலாக வளர்ந்து வரும் சத்தியமார்க்கம் டாட் காம் என்ற தளம் எனது மறுப்புரையை வெளியிட முன்வந்துள்ளது.

நம்மைப் பொறுத்தவரை இஸ்லாமும் முஸ்லிம்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்; ஆனால் அதே சமயம் அந்த விமர்சனத்தில் இருக்கும் தவறுகளையும் உண்மைக்குப் புறம்பான வரலாற்றுப் புரட்டுகளையும் சுட்டி தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்டால் ஏற்கும் அல்லது சான்றுகளுடன் மறுத்துரைக்கும் நேர்மை மட்டுமாவது விமர்சிப்பவர்களிடம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். சிஃபியிடம் இத்தகைய கருத்து நேர்மை இல்லையென்பது என்னுடைய மறுப்புரைக்கு அவர்கள் காட்டும் நீண்ட மவுனமும், தேசதுரோகி இந்துத்துவ ஊதுகுழல் மலர் மன்னனின் உணமைக்குப் புறம்பான நாற்றமெடுக்கும் அவதூறு எழுத்துக்களை தொடர்ந்து தங்களது தளத்தில் வெளியிடுவதும் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.

எனவே சிஃபி வெளியிடும் தேசவிரோதி மலர் மன்னனின் துவேஷ எழுத்துக்களில் உள்ள அவதூறுகளைத் தோலுரிக்கவும் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தவும் வாய்ப்பு நல்கிய சத்தியமார்க்கம் டாட் காம் தளத்திற்கு நன்றி கூறி, இங்கு மலர் மன்னனின் அவதூறுகளை மூன்று கூறுகளாகப் பிரித்துத் தொடராக எழுதவிருக்கிறேன். இந்த மறுப்புரைகளை இனி வரும் பகுதிகளில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: நல்லடியார்.

பகுதி 1 இன்ஷா அல்லாஹ் விரைவில் >

இஸ்லாம், இஸ்லாம், இஸ்லாம்

Monday, February 19, 2007

மார்ச் 11 ஏன்? எதற்கு?

மார்ச் 11 ஏன்? எதற்கு?
வாருங்கள்...நாளைய வரலாற்றின் பக்கங்களில் உரிமைக்காக போரடியவர்களில் ஒருவராக உங்களையும் பதிவு செய்யுங்கள்!!



வரும் மார்ச் மாதம் 11 ம் நாள் கோவையில் நடக்கவிருக்கும் சமுதாய தலைமைகளின் சங்கமத்தில் நமது தமிழ் முஸ்லிம் அமைப்புக்களின் அணைத்து தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளார்கள் இந்த சங்கமம் ஏன் எதற்கு என்று எம் சமுதாயத்தவர்களுக்கும் இன்ன பிற மக்களுக்கும் அறியத் தரவே இந்த விளக்க கட்டுரை.

கடந்த 9 ஆன்டுகாலமாக கோவை சிறை மட்டுமல்லாது தமிழகத்தின் பல சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கோவை குன்டு வெடிப்பு விசாரனை சிறைவாசிகள் உள்பட தாடர் கதையாகி கொண்டிருக்கும் தமிழகத்தின் சிறைச்சாலைகளில் வாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளின் சிறையிருப்பை 21 ஆம் நூற்றான்டு இந்திய முஸ்லிம் சமூகத்தின் பேரழிவாகவும் இழிவாகவும் வரலாறு பதிவு செய்யவிருக்கின்றது.

நீதி, நியாயம், ஜனநாயகம், சட்டத்தின் முன் அனைவரும் சமம், மதச்சார்பற்ற தன்மை, மனித உரிமை என்பதனை எல்லாம் கோட்பாடுகளாக கொண்ட ஒரு அரசமைப்பில் இருந்து நீண்ட நெடுங்காலமாக நீதி, நியாயம், சட்ட மனித உரிமைகள் மறுக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் இந்திய வரலாறு காணாத சிறை இருப்பில் உள்ள முஸ்லிம்களுக்கு நம்மாள் உரிய நீதி பெற்றுத்தர முடியவில்லை என்றால் அதனினும் ஒரு சமூக இழிவு,பேரழிவு வேறொன்று இருந்திடுமோ?

இந்தியாவில் இது வரை நடந்த வகுப்பு கலவரங்களின் சூத்திரதாரர்கள், மூலகர்த்தாக்கள் யாரென்று நடந்த ஆய்வில் முழுவதுமாக சங் பரிவாரக் கூட்டங்களே இருந்துள்ளனர். ஆனால் அக்கலவரங்களின் தொடாச்சியை ஆய்வு செய்ததில் பொருளாதார இழப்புக்கள், உயிர் இழப்புக்கள, உடமைகள் இழப்புக்கள், கைது நடவடிக்கைகள், வழக்குகள் என பாதிக்கப்பட்டோரின் பட்டியளில் முஸ்லிம்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர்.

அது போலவே கோவையிலும் தமிழகமெங்கும் நடைபெற்ற வகுப்புக்கலவரங்களின் சூத்திரதாரிகளான சங்பரிவார், பாசிஸ்ட்டுகள் மீது இது வரை உருப்படியான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முஸலிம்களை படுகொலை செய்தவர்கள, முஸ்லிம் உடைமைகளை சேதப்படுத்தியவர்கள், முஸ்லிம் பென'களை மானபங்க படுத்தியவர்கள் என இன்று ஒருவர்கூட சிறைச்சாலைகளில் இல்லை. அவர்களின் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளின் நிலை என்னவென்பதை கூட அறிய இயல முடிவதில்லை.

அவர்கள் கூடடம், கூட்டமாய் பெரும் சதித்திட்டத்தோடு கோவை முழுவதையும் தமிழகத்தின் பல பகுதிகளையும் கலவரக்காடாய் ஆக்கியபோதும் அவர்களில் யாரும் "சங்பரிவார தீவிரவாதிகள்" என்றோ "இந்து தீவிரவாதிகள்" என்றோ சொல்லப்பட வில்லை, அவர்களுக்காக தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை, அவர்கள் யாரும் கனிக் காண்காணிப்பு சிறைக் கொட்டடிகளில் அடைக்கப்படவில்லை, ஆனால் உண்மையில் இந்த சங்பரிவார இந்து தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்டு தங்கள் சொத்து சுகங்களை உயிர் உடமைகளை இழந்து நின்ற அப்பாவி முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக சிறுவர், இளைஞர், முதியவர் என பாகுபாடு இல்லாமல் கைது செய்யப்பட்டார்கள், வெறும் விசாரனைக்கைதிகளாய்
குற்றம் நிருபிக்கப்படாமலேயே "முஸ்லிம் தீவிரவாதிகள்" என்ற அவப்பெயரோடு ஒரே வழக்கில் சதித்திட்டம் என்ற காரணம் கூறி முடிவடைய முடியாத பிரமான்ட வழக்கை தொடுத்து கடந்த 9 ஆன்டுகளுக்கும் மேலாக இந்திய அரசியில் சாசன சட்டத்திற்கு புறம்பாக உலக நியதிகள், மனித உரிமைகள் என அனைத்ழைதயும் மீறி சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வருகின்றார்கள். ஆனால் இத்தனைக்கும் காரனமான சங்பரிவார "இந்து தீவிரவாதிகள்" மீது எந்த வித நடவடிக்கையும் இன்றி வெளியில் சுதந்திரமாக உலா வருகின்றார்கள். இது தான் இந்திய ஜனநாயகம்!!



இந்நீண்ட கால சிறைவாசத்தால் நோயுற்ற ஒரு முதியவருக்கு மரணமே விடுதலையை பெற்றுத்தந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!! விடுதலை நாட்களை என்ன வேண்டிய இன்னும் பலர் சிறை நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட தவறான மருத்துவத்தாலும், மறுக்கப்படும் மருத்தவ உதவிகளாலும் மரணத்தின் நாட்களை நோயுற்றவர்களாகவே என்னிக் கொண்டுள்ளனர். இதனினும் கொடுமை சிலர் விடுதலை வெளிச்சம் கூட தெறியாத நிலையில் தன் குடும்பத்தவர்கள் அனைவரையும் இழந்து விட்ட அநாதைகளாக...இனி இவர்கள் விடுதலை பெற்று யாரிடம் தஞ்சம் அடைவார்கள்?

அன்று பிரிட்ஷாரின் ஆட்சியின் கீழ் இருந்த அடிமை இந்தியாவில் சுதந்திரத்திற்காக ஆலி முஸ்லியார் என்ற முஸ்லிம் 1922ம் வருடம் பிப்ரவரி 17ம் நாள் தம் உயிரை விட்ட கோவை மத்திய சிறையில் எந்த சுதந்திரத்திற்காக உயிரை விட்டாரோ அந்த முஸ்லிம் அந்த சுதந்திர இந்தியாவில் இன்று பல நூறு அப்பாவி முஸ்லிம்கள் நீதி, நியாயம் மறுக்கப்பட்டு சுதந்திர தேசத்தில் சிறை வாழ்வு வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.

சங்கராச்சாரியார் என்ற மதவெறியர் படு பாதக கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சில மணித்துளிகளில் நாட்டின் அனைத்து சங்பரிவார அமைப:பக்களும் வீதி இறங்கி " குற்றம் சாட்டப்பட்டால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது" என்று சட்ட வியாக்கியானம் கூறி சங்கராச்சாரியை விடுவிக்க பல்வேறு சண்டித்தனங்களை செய்தது. அதே சமயம் 9 ஆன்டுகளுக்கும் மேலாக வெறும் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் நிரபராதிகளாய் சிறைவாசம் இருந்து வருகின்றார்கள். சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கோட்பாட்டினை கொண்ட இந்நாட்டில் படுபாதக கொலை புறிந்த சங்கராச்சாரி என்ற மத வெறியருக்கு ஒரு நீதி சாமானியர்களான அப்பாவி சிறுபான்மை முஸ்லிம்களுக்கு ஒரு நீதியா? என்று வீதி இறங்கி நீதி கேட்க நாதி அற்ற சமுதாயமாக அல்லவா நாம் இருக்கின்றோம். இந்த இழி நிலைமையை நாம் மறைக்கவோ, மறுக்கவோ அல்லது கண்டும் காணாது இருந்திடவோ நினைக்கலாம் ஆனால் அறிந்து கொள்ளுங்கள் வரலாறு நமது மனசாட்சியை விட நேர்மையாக உள்ளது என்பதனை!!

ஆக இது போன்ற நீதி, நியாயம், சட்ட உரிமைகள் மறுக்கப்பட்டு பட்டவாத்தனமாக உலக மனித உரிமை நியதிகள் மீறப்பட்ட நிலையில் தமிழகத்தின் சிறையெங்கும் பல்லான்டுகலாக மக்கள் தொகையில் தமது விகிதாச்சாரத்தை காட்டிலும் பல மடங்கு அதிக நிலையில் வாடிக் கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலையை வலியுருத்தியும், மறுக்கப்பட்ட நியாயங்களை வழங்க கோரியும், சங்கராச்சாரிக்கும் இந்து தீவிரவாதிகளுக்கும் ஒரு நியாயாம் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுபான்மையின முஸ்லிம் சமுதாய மக்களுக்கு மற்றோர் நியாயம் என்ற போக்கை மாற்றி இந்த இந்திய சுதந்திர நாட்டில் இதன் குடிமக்களான அனைவருக்கும் சமநீதி வழங்க கோரியும், சிறைக் கொட்டடிகளில் வாடிக் கொண்டிருக்கும் அனைத்து சிறைவாசிகளையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அரசை வலியுருத்தியும் நடக்குமு் இக்கருத்தரங்கில், தமிழகமெங்கும் இருந்து மனித உரிமை ஆர்வலர்கள், நமது சமுதாய தலைவர்கள், முன்னால் நீதிபதிகள், உயர்நீதி மன்ற, உச்ச நீதீ மன்ற வழக்குறைஞர்கள், சான்றோர்கள், ஜமாத்தினர்கள் என அனைவரும் பங்கேற்கும் இந்நிகழ்வில் பங்கேற்று சாட்சி பகர உங்களையும் அழைக்கின்றோம்!! பங்கேற்பீர் மக்களே...பதிவு செய்வீர் உங்களை நாளைய வரலாற்று பக்கங்களில் உரிமைக்காக, சமுதாயத்திற்காக, மறுக்கப்பட்ட நீதிக்காக போராடியோர் என்று!!

தாகத்தால் தவித்த நாய்க்கு தண்ணீர் வழங்கியதற்காக சுவனப்பேறு வழங்கப்பட்ட ஜீவகாருண்ய மார்க்கத்தின் சொந்தங்களே, இன்று பல நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் நீதி நியாயம் மறுக்கப்பட்டு பல்லான்டு காலமாக பெற்றோர்களை, குடும்பத்தினை இழந்து சகோதரிகளின் திருமணங்களை நடத்திட இயலாமல் அவர்களை முதிர் கண்ணிகளாக தவிக்க விட்ட விரக்தியிலும் மனைவி மக்களின் பாசப்பிரிவு என்று ஏக்க பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் உங்கள் சகோதரர்களான இந்த தமிழ் முஸ்லிம் சிறைவாசிகளுக்காக மறவாமல் நீதியை தேடி சங்கமமாகுங்கள் மார்ச் 11 அன்று இறைவன் நாடினால் நமக்கு நீதி வழங்கப்படும், நாளைய நமது தலைமுறையினர் இது போன்ற அநீதி இழைக்கப்படுவதில் இருந்தும் காக்கலாம்.



பர்க்காதவர்கள் இங்கு சொடுக்கி இவர்களின் அவலங்கள் குறித்து வெளியிடப்பட்ட வீடியோக்களையும் பார்க்கலாம்

1.அவலங்கள் மாறுமா?

2.கோவைக்கு ஒரு நீதி குஜராத்திற்கு ஒரு நீதியா?

3.நீதி கோரி ஒரு நெடும்பயனம்

4.முஸ்லிம் சிறைவாசி வழக்குகளின் இன்றைய நிலை


சிறுபான்மை உதவி அறக்கட்டளை
கோவை


மேலதிக தொடர்புகளுக்கு : கோவை தங்கப்பா
தொலைபேசி : +91-9443654473
www.ctmcoimbatore.com
இஸ்லாம், காரைக்குடி



Sunday, February 18, 2007

எது மிருக வதை? படத்தை பாருங்கள்!!


அமைதியான முறையில் எவ்வித வதையும் இன்றி, உணவுக்காக ஆடு மாடுகயையும் ஒட்டகங்களையும் இறைவனின் பெயரால் பலியிடுவதை கோரமானது கொடூரமானது மிருகங்களை வதை செய்கின்றார்கள் முஸ்லிம்கள் என்று கூறி இந்து தீவிரவாதிகள் பலர் வழக்கு தொடர்கின்றார்கள் நீதி மன்றமும் அவ்வாறு அமைதியான முறையில் பலியிடுவதற்கு பல முறை பல இடங்களில் தடைகளை விதித்துள்ளது.

ஜனநாயக இந்தியாவில் மாநிலங்களை ஆட்சி செய்யும் சில வெறி பிடித்த சில இந்து தீவிரவாத அரசுகள் அவ்வாறு தங்கள் மாநிலங்களில் முஸ்லிம்கள் அமைதியான முறையில் குர்பானி கொடுப்பதை தடை செய்துள்ளன.

மேலே உள்ள புகைப்படத்தை பார்த்தால் தெறியும் யார் மிருகங்களை உண்மையில் வதை செய்வது என்றும், வெறி பிடித்து மிருகங்களை உயிரோடு கடித்து குதறி கோரமான முறையில் கொலை செய்வது என்றும்.

மிருக வதை பற்றி பேசும் மேனகாவும் மற்ற அமைப்புக்களும் இப்போது சிந்திக்க வேண்டும் எது மிருக வதை மற்றும் உண்மையில் எந்த மதத்தினர் மிருக வதை செய்கின்றார்கள் என்றும்.

மக்காவிற்கு சென்று ஹாஜியாகி ஆசி வழங்க கூடிய தகுதி பெற்ற சுவனப்பிரியனின் தாத்தாவிடம் ஆசி பெற்றதால் இன்னும் புனிதராகி இன்று வரை முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், கொடூரமானவர்களாகவும், அசிங்கமானவர்களாகவும் ஒரு பென் எத்தனை பேருடன் வேண்டுமானாலும் உடலுரவு கொள்ளலாம் மாதாவிடாய் வருவதற்குள் அவள் பலருடன் உடலுரவு கொள்ளலாம் பூன்ற பல புனிதமான காரியங்களை எழுதியும் பேசியும் வரும் டோன்டு ராகவன் போன்றோரும், இந்து தீவிரவாதி நேசக்குமார் போன்றோரும் இது குறித்து என்ன எழுதப் போகின்றார்கள்? யார் உயிர் வதை செய்பவர்கள்? இந்துக்களா? முஸ்லிம்களா? எந்த மதம் உயிர் வதையை அங்கீகரிக்கின்றது? இஸ்லாமா இந்துத்துவமா?

இனியாவது இந்து தீவிரவாதி நேசக்குமாரும் பலருடன் உடலுரவு, கள்ள உடலுரவு போன்ற அசிங்கங்களை சுவனப்பிரியனின் தாத்தாவின் ஆசியோடு இனையத்தில் அரங்கேற்றிவரும் டோன்டு ராகவன் போன்றோரும் புறிந்து கொள்ள வேண்டும் மிருகங்களை வதை செய்வது முஸ்லிம்கள் அல்ல, இஸ்லாம் மிருக வதையை போதிக்க வில்லை என்பதை.

அன்புடன்
முகவைத்தமிழன்

இஸ்லாம், காரைக்குடி

Saturday, February 17, 2007

சென்னை ஏர்போர்ட் கிரைம்ஸ் உஷார்!!



சென்னை:கோவையில் இருந்து வந்து டில்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் தங்கியிருந்தவரிடம் ரூ.60 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்த விமான நிலைய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், விமான நிலைய அதிகாரிகள் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் போன்ற பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் "பிக்பாக்கெட்'டுகள் உலாவுவது போல சென்னை விமான நிலையத்திலும் தற்போது திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக துபாய், லண்டன் ஆகிய இடங்களில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை குறி வைத்து கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன.

சில வாரங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து திருடு போன பொருட்களும் மீட்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நடிகை கஸ்துõரியின் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, ரொக்கம் ஆகியவை கொண்ட கைப்பை மாயமானது. இது தொடர்பாகவும் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவு சென்னை விமான நிலையத்தின் அங்கீகரிக்கப்பட்ட தங்கும் விடுதியில் தங்கியிருந்த ஒரு பயணியின் ரூ.60 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (45). இவர் டில்லி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். டில்லி செல்லும் கடைசி விமானமும் சென்றுவிட்டதால், விமான நிலையத்தில் பயணிகள் தங்குவதற்காக "லிங்க் பில்டிங்'கில் அமைக்கப்பட்டுள்ள தங்கும் அறையில் தங்கினார். அங்கு தனது உடமைகளை வைத்துவிட்டு, அறையை பூட்டிக் கொண்டு அருகில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார்.பின்னர் திரும்ப வந்து பார்த்த போது அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே வைத்திருந்த சூட்கேசும் திறக்கப்பட்டு, அதில் இருந்த ரூ. 60 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன், இந்த சம்பவம் குறித்து உடனடியாக விமான நிலைய மேலாளர் ஸ்ரீவத்சவாவிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரை விமான நிலைய போலீசாருக்கு மேலாளர் பரிந்துரை செய்து அனுப்பினார். புகாரை பெற்ற விமான நிலைய போலீசார் விசாரணை நடத்துவதற்காக விமான நிலைய ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கும் "லிங்க் பில்டிங்' பயணிகள் தங்கும் விடுதிக்கு சென்றனர்.

ஆனால், விமான நிலையத்திற்குள் போலீசார் நுழைந்து, திருட்டு சம்பவம் குறித்து விசாரிக்கக் கூடாது என்று சில ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, இது குறித்து அந்த ஊழியர்கள் தங்கள் மேலதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினர். மீறி போலீசார் உள்ளே நுழைந்து விசாரணை நடத்தினால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்தனர். இதையடுத்து, விமான நிலைய ஆணையத்தின் சார்பில் விமான நிலைய போலீசாரிடம் கொடுக்கப்பட்ட புகார் வாபஸ் பெறப்பட்டது. பணம் திருடு போனதாக விமான நிலைய மேலாளரிடம் புகார் கொடுத்த ராமகிருஷ்ணன் நேற்று காலை புறப்பட்ட விமானத்தில் டில்லி சென்று விட்டார். அவர் வந்த பின்னர் நடந்த சம்பவம் குறித்து அவரிடம் விசாரிக்க விமான நிலைய அதிகாரிகளும், ஊழியர்களும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பலர் சிக்குகின்றனர்!:துபாய், லண்டன் ஆகிய இடங்களில் இருந்து சென்னை வரும் பயணிகளின் பெட்டிகளை உடைத்து, அவற்றில் உள்ள நகை, ரொக்கம், விலை உயர்ந்த எலக்ட்ரானிக் பொருட்களை திருடும் கும்பல் ஒன்று சமீபத்தில் சிக்கியது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் இதுபோல பலர் விமான நிலையத்தில் உள்ளே நடமாடிக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த வகையில் லண்டனில் இருந்து வந்த பெண் பயணி ஒருவரின் மூன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடிய ஒரு கும்பல் போலீசாரிடம் சிக்கியுள்ளது. இந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. விரைவில் சென்னை விமான நிலையத்தில் நடமாடும் அனைத்து திருடர்களும் சிக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thanks :

Sunday, February 11, 2007

சவுதியில் வேலை வாய்ப்பு (AL-SUWAIDI LTD)

சவுதியில் வேலை வாய்ப்பு

அன்பின் சகோதரர்களே,

அல் சுவைதி நிறுவனத்தில் பணிபுறியும் ஒரு தமிழ் முஸ்லிம் சகோதரர் எமக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் அவரின் நிறுவனத்தில் பல முக்கிய பதவிகளுக்கு ஆட்கள் எடுப்பதாக தெறிவித்துள்ளதுடன் அந்த பணிகளுக்கான பட்டியலையும் அனுப்பியுள்ளார்.

AL-SUWAIDI SERVICES CO. LTD. (SSC)
AL-SUWAIDI EQUIPMENT AND TRANSPORT CO. LTD (SET)
AL-SUWAIDI SCAFFOLDING SERVICES AND ACCESS SOLUTIONS (SSSAS)
AL-SUWAIDI REAL ESTATE ENTERPRISES CO. LTD. (SRE)
INFORMATION MANAGEMENT TECHNOLOGY (IMT)
PRECISION FORGING FACTORY (PFF)

போன்ற அல் சுவைதி குழுமத்தின் சகோதர நிறுவனங்களுக்கு மேனேஜர் முதல் ஹெல்ப்பர் வரை பல்வேறுபட்ட நூற்றுக்கணக்கான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்கின்றார்கள். தகுதி வாய்ந்த நமது சகோதரர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளவும். எந்த எந்த பதவிகளுக்கும் வேலைகளுக்கும் ஆட்கள் எடுக்கின்றார்கள் என்பதை கீழக்கண்ட தொடுப்பை சொடுக்கி டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Al SUWAIDI VACANCIES

AL SUWAIDI MEMO


தங்களுக்கு தேவையான பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் சகோதரர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தொலைநகல் (ஃபேக்ஸ்) நம்பருக்கோ தங்களது RESUME (BIODATA) வை அனுப்பவும்.

Mr. ShafaQattullah Khan
Recruitement Manager
E.Mail : shcrecruitment@alsuwaidi.com.sa
Fax : 00966 3 6670304 Ext. 252


இராமநாதபுரம்,காரைக்குடி,இஸ்லாம்,முஸ்லிம்

Thursday, February 08, 2007

PFI RELEASES SONGS - பாடல்கள் வெளியீடு



Existing socio-economic models of development have failed to alleviate the poverty and backwardness of the people of the country. Since independence, the ruling class has strengthened the business monopolies and the urban and rural elite, as it ignored the basic needs of the people below. The traditionally dominant social groups have also hijacked the democratic process. The fascist forces have deeply penetrated and corrupted the system and they work hand in glove with neo-colonial and racist forces. The dalits, the tribals, the religious, the linguistic and the cultural minorities, the backward classes and the women are denied their cultural and social space, making India one of the most backward areas in the world. Resistance against exploitation and deprivation is mostly local and isolated now with no co-ordination and pooling of resources at national level.

Popular Front of India is launched to co-ordinate and strengthen grass root level developmental activities throughout the country.

Popular Front of India is the movement for the realization of a society in which freedom, justice and security are equally enjoyed by all individuals and classes. It aims at the socio-economic, cultural and political empowerment of the deprived, the down trodden and the nation at large.It stands for a new India of equal rights to all Indians

Popular Front of India has released SONGS for its Empower India Conference, you can donwload or play the songs from online by clicking the below link:



PFI - EMPOWER INDIA SONGS (URDU)

வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் எழுச்சி பாடல்கள் (உருது)

01.Zindabad...zindabad

02.Bayan

03.Hindh Ki Jaan

04.Isse Pehle

05.Hindh Miakar

06.Thumse Bahadur

07.Wa Thippu hai Dhunya

08.Jo Ho Soore

09.Inqilabi hai hum

10.Bayan2



இஸ்லாம், முஸ்லிம், காரைக்குடி,, Islam, Muslim

ரியாத்தில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா Press Meet

ரியாத்தில் PFI நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு

PFI பற்றியும் Conferenec பற்றியும் விளக்குகிறார்கள்

பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் ல் 07-02-2007 இரவு 9 மணி அளவில் நடைபெற்றது. பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சவுதி அரேபிய கேம்பெயின் கமிட்டி கன்வீனர் மவ்லவி சிஹாபுத்தீன் அவர்கள் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா பற்றியும், நடைபெறவுள்ள எம்பவர் இந்தியா கான்பரன்ஸ் பற்றியும்அறிமுகவுரையாற்றினார்.

பாப்புலர் ஃபிரன்ட்டின் கேம்பெய்ன் கமிட்டி சேர்மேன் மவ்லவி சலீம் அல் காசிமி அவர்கள் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.NDF சார்பாக மவ்லவி அப்துல் அஜீஸ் அன்வரி மற்றும் பசீர் இங்கபுழா அவர்களும் MNP யின் சார்பாக சித்திக் பாஷா மற்றும் முஹம்மது ரஃபீக் மற்றும் KFD யின் சார்பாக சமீர் முஹம்மது அவர்களும்
உடனிருந்தார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள்

இந்நிகழ்சியில் கேரள பத்திரிக்கைகள் மாத்யமம், சந்திரிகா, கைராளி நியூஸ், வர்த்தமானம், தீபிகா, கல்ஃப் மலயாளி டாட் காம், தேஜஸ், தமிழ் பத்திரிக்கைகள் அல் ஹசனாத் மற்றும் விடியல் வெள்ளி நிருபர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி : செய்தி மற்றும் படங்கள் அ.ரமூஜுத்தீன் (ரம்ஜ்)

இஸ்லாம், முஸ்லிம், காரைக்குடி

வந்தே மாதரம் பாடலும் பின்னணியும்

வந்தே மாதரம் பாடலும் பின்னணியும்

தேசம் என்னும் கருத்தியல் உருவாகும் போது வலுவான அடையாளங்களும், அடையாளங்கள் வழியான கூட்டு நினைவுகளும், கூட்டு உணர்ச்சிகளும் வழிவழியாகப் பராமரிக்கப்படுவது அவசியமாகிறது. இதிகாசங்கள், புராணங்கள், பகவத் கீதை ஆகியவை பொது நினைவாய் இந்தியப் பொது மன அமைப்பில் ஆட்சி செலுத்துவது போலவே சென்ற நூற்றாண்டில் எழுச்சி பெற்ற தேசியம் என்று புதிதாக உருவான கருத்தாக்கத்திற்குப் புதிய கதைகளும் புதிய பாடல்களும் அடையாளங்களாய்த் தேவைப்பட்டன. சமூகக் குழு, சாதி, மதம், இனம் எல்லாவற்றிற்கும் தங்கள் கலாச்சாரம், வரலாறு குறித்த பெருமிதத்திற்கும் கூட்டுணர்வுக்கும் இந்த அடையாளங்கள் பொதுச் சரடாய் திகழ்கிறது.

இந்தியாவைப் பிரிட்டிஷார் ஆட்சி செய்தபோது தான் தேசம் சார்ந்த கருத்தாக்கம் இந்தியாவில் வலுப்படத் தொடங்குகிறது. இந்திய தேசம், தேச பக்தி என்ற உணர்வுகள் இக்காலகட்டத்தில் கலாச்சார வெளிகளிலும் அப்போது தீவிரமாய் பிரதிபலிக்கத் தொடங்குகிறது. அப்போது தேசம் முழுவதும் பல கலைஞர்கள் அவர்கள் சார்ந்த துறைகளில் தேச உணர்வைப் பிரதிபலிக்கும் படைப்புகளை வெளிப்படுத்துகின்றார். தமிழ்நாட்டிலிருந்து பாரதியார், வங்கத்தில் பக்கிம் சந்திர சட்டர்ஜி போன்றவர்கள் கவிதைகள், புனைக் கதைகள் வழி தேச உணர்வை எழுப்பியதில் முக்கியமானவர்கள்.

தேசபக்தி சார்ந்து வெளிப்பட்ட அனைவர் உணர்ச்சிக்கும் பின்னர் ஒரே நோக்கம் என்பது இல்லை. இந்திய சுதந்திரப் போராட்டத்தைக்கூட ஒற்றை நோக்கம் சார்ந்த பொது அபிலாசை கொண்ட இயக்கம் என்று சொல்ல இயலாது. வர்க்க நலம், மத நலம், சாதி நலம், சுய நலம் சார்ந்த ஆசைகளும், எண்ணங்களும், திட்டங்களும் கலந்து உருவான எழுச்சியாகவே அந்த இயக்கம் இருந்தது.

சுயச்சார்வு அற்ற மெய்மை உணர்நிலையை மதநலனோ, துவேஷமோ பாராட்டாத பொது லட்சிய வெளிப்பாட்டைப் பாரதியார் போன்ற வெகுசிலரிடமே காணமுடிகிறது. பாரதியிடம் கூட மதச்சாய்வை வாசிக்கும் அணுகுமுறை இப்போது தொடங்கியுள்ளது கவனிக்கத் தக்கது.

இந்து தேசியவாதத்தின் மிக முக்கியப் பிரதிநிதியாக கருதப்படும் பங்கிம் சந்தர் எழுதிய வந்தே மாதரம் மேற்கொண்ட பின்னணியில் தான் தேச விடுதலையின் மந்திர வாக்கியமாகவும் போராட்ட அடையாளமுமாகவும் ஆனது. வந்தே மாதரம் எழுதியவர் யாரென்றோ, அவரின் பின்னணி என்னவென்றோ முழுவதும் அறியாத பொது மக்களுக்கு இவ்வார்த்தைகள் சுதந்திர அறைகூவல் விடுக்கும் கருவிகள் ஆயின.

மக்களின் நனவிலியில் அடிப்படை அங்கங்களாய் உறைந்திருக்கும் மத, கலாச்சார நினைவு அடையாளங்களை வைத்து அரசியல் நடத்துவதில் கைதேர்ந்த பி.ஜே.பி யினர் வந்தே மாதரம் பாடலையும் அரசியல் செய்வதற்குக் கையிலெடுத்துள்ளனர். இத்தரப்பினர் ஒரு பிரச்சனையை கையிலெடுக்கும் போதே அந்த அடையாளத்தின் பின்னணியையும் தர்க்கத்தையும் ஆராய வேண்டியது முக்கியமாகியுள்ளது.

வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு ஒரு நூற்றாண்டு ஆகிறது. அந்த நாள் செப்டம்பர்-7ஆம் தேதி. அதையொட்டி இப்பாடலை இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் பாடலாம் என்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இந்தியாவைத் தாயென வணங்குவோம் என அர்த்தம் வருவதால், அல்லாஹ்வைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்காத இஸ்லாமிய சமுதாயத்தினர் இப்பாடலைப் பாடக் கட்டாயப்படுத்தக் கூடாது என அரசைக் கேட்டுக் கொண்டனர். இதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு விட்டது. பாரதீய ஜனதா கட்சியினர் விவாதிப்பதற்கு முக்கியப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் கூச்சல் இட்டனர்.

அதோடு பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள மதராஸக்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் செப்-7ல் வந்தே மாதரம் பாடலைப் பாட வேண்டுமென அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வாழும் இஸ்லாமிய மக்களுக்கான அடிப்படை உரிமையை, சுதந்திரத்தைப் பாரதிய ஜனதா மறுத்துள்ளது. அதோடு தேசபக்தி புனித அடையாளத்துக்குள் இப்பிரச்சனையை மாற்றி இஸ்லாமியர்களை தார்மீக நெருக்கடிக்குள்ளும் தள்ளியுள்ளது. தேச மக்களிடையே சகல பகுதிகளிலும் தன் செல்வாக்கை இழந்திருக்கும் பாஜகாவின் எண்ணற்ற தகிடுதத்த அரசியல்களில் இதுவும் ஒன்று. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு கோடிக்கணக்கான மக்களும், மாணவர்களும் ஜனகனமண, வந்தே மாதரம், சாரே ஜகாங்கே அச்சா போன்றவற்றே பெரும்பாலும் முழு அர்த்தம் தெரியாமலேயே சடங்குப் பூர்வமாய் படித்து வந்துள்ளார்கள். ஆனால், வந்தே மாதரம் பாடல் பாடக் கட்டாயப்படுத்தும் போது தான் வற்புறுத்தலுக்கான பின்னணியைத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.

வந்தே மாதரம் பாடல் ஆனந்த மடம் என்னும் பக்கிம் சந்திரரின் நாவலில் வருவது. ஆனந்த மடம், இஸ்லாமியரை கலாச்சாரத்திலிருந்தே அப்புறப்படுத்தும் செயல் திட்டத்தை உள்ளடக்கிய பொருள் கொண்ட நாவலாகும்.

1930களின் மத்தியிலே வந்தே மாதரம் பாடலை தேசிய கீதமாக்கும் முயற்சி நடந்தபோது பாடலின் அர்த்தத்திற்கு அப்பாற்பட்டு பாடல் இடம்பெற்ற பின்னணியின் காரணமாக இஸ்லாமிய இளைஞர்களிடேயே பதற்றம் எழுந்தது. அப்பின்னணியைச் சற்று சுருக்கமாகப் பார்க்கலாம்.

ஆனந்த மடம் நாவலில் தாயின் குழந்தைகள் அல்லது சாத்தான் என அழைக்கப்படும் துறவிகள் குழுவால் இசைக்கப்படுவதே வந்தே மாதரம். அதில் ஞானானந்தா என்னும் கதாபாத்திரம் தன் குழுவிடம் உற்சாகமூட்டிப் பேசும் உரையாடல் இது. இந்த கெடுதல் விளைவிக்கும் பறவைகள் கூட்டை நொறுக்கவும், இந்த முஸல்மான் நகரத்தை முற்றிலும் அழித்து அவர்களை ஆற்றிலிடவும் நீண்ட காலம் திட்டமாகி விட்டது. முஸல்மான் வாழும் நகரத்தை வெறும் தூசியாக்கக் கிளம்புவோம். வாருங்கள், அந்தப் பன்றிக் கூடங்களை நெருப்பால் தூய்மை செய்து அவற்றை நதியில் எறிவோம். ஆனந்த மடம் நாவலில் இஸ்லாமியருக்கு எதிரான வன்முறை பேச்சாகவும் செயலாகவும் பல இடங்களில் வருகிறது. நாவலின் நோக்கம் இதிலிருந்து வேறுபட்டது எனக் கருத இடமில்லை. சாத்தான்களின் புரட்சி வெற்றியடைவதோடு நாவல் முடிவடைகிறது. ஆனால், ஞானந்தாவோ விரக்தி அடைந்து சாத்தான் ஆசிரமத்துக்கு வந்து ஆன்மீகக் குருவிடம் தனது ஆதங்கத்தை சொல்கிறார்.

'முஸல்மான்கள் ஆதிக்கம் முடிந்து விட்டது. ஆனால் இந்து ராஜ்ஜியத்தை உருவாக்க இன்னும் முடியவில்லை' என்று சொல்லி 'ஐயோ தாயே! உன்னைக் காப்பாற்றுவதில் நான் தோல்வியடைந்து விட்டேன். நீ திரும்ப மிலேச்சர்களின் விலங்குகளுக்குள் சிறைப்பட்டு விட்டாய்' எனக் கரைந்துருகிறான். அதற்கு அந்த ஆன்மீகக் குரு பதிலளிக்கிறார். 'ஆங்கிலேயர் இந்த நிலத்தை ஆளவில்லையெனில் புராதன மதங்கள் மறுமலர்ச்சியடைய வாய்ப்பே இல்லை. அறிவு இரு கிளைகளாக பிரிகிறது. ஒன்று பொருளியலானது, மற்றொன்று ஆன்மீகமானது. இந்து மனம் என்பது பின்னதில் அதிக ஒட்டுதலும், பழக்கமும் கொண்டது. முன்னதில் அதற்கு பழக்கம் குறைவு. இந்த முறை வேறு ஏதாவது நாட்டிலிருந்தே நமக்கு அறிமுகப்பட வேண்டும். ஆங்கிலேயர்கள் தான் பொருளாதாய உலகுக்கு வழிவகுக்கும் முந்தைய குருக்கள். எனவே அவர்கள் தான் அதைக் கற்றுத்தரும் கலையில் வல்லவர்கள். அதனால் நாம் பிரிட்டிசாரை நமது ஆட்சியாளர்களாக்க வேண்டும்' என்கிறார்.

ஆனந்தமடம் நாவலின் நோக்கமும், வந்தே மாதரம் பாடலின் பின்னணியும் ஓரளவு நமக்குப் புரிந்திருக்கும். 'நாம்''நமக்கு' என ஆன்மிகக் குருவால் சொல்லப்படுபவர் யாரென்றும் செயல்திட்டம் என்னவென்றும் இப்போது தெரிந்திருக்கும்.

இப்பின்னணியைக் கொண்ட வந்தே மாதரம் பாடல் தான் சுதேசி இயக்கத்தின் உணர்ச்சியைத் தூண்டும் மந்திரமாய் ஆனது. ஆனாலும் வௌ;வேறு காலங்களில் இஸ்லாமியரைத் தாக்கும் இந்துத்துவ ஆயுதமாகவும் பயன்படுத்தப்படும் மறைப்பக்கத்தையும் இப்பிரதி கொண்டுள்ளது.

இந்தியா 51வது ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடிய போது கேரள மாநில அரசு தங்கள் பள்ளிகளில் வந்தே மாதரம் பாடலைப் பாட அறிவிப்பை அனுப்பியது. கேரளத்திலுள்ள வடக்கு மாவட்டங்களில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு ஏற்பட்டது. நிறைய முஸ்லிம் அமைப்புகள், வந்தே மாதரம் மதத்துவேஷத்தை வெளிப்படுத்துவதாய்க் கருதி அப்பாடல் பாட பத்வா விதித்தன. வந்தே மாதரம் பாடுவது உருவ வணக்கத்திற்கு ஆதரவாகவும் தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானதாய் இருப்பதாகவும் கருதி இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மலப்புரம் மாவட்டத்தில் பதற்றம் எழுந்தது. இஸ்லாமிய, இந்துத்துவ செயலாளிகள் பள்ளிகளைச் சுற்றி தங்கள் நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்க கேரளக் கல்வித் துறை வந்தே மாதரம் பாடுவது கட்டாயமென ஜூலை 27ல் உத்தரவு ஒன்றை அனுப்பியது. ஆனால் இஸ்லாமிய, கிறிஸ்துவ நிறுவனங்கள் வந்தே மாதரம் பாடல் தங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி உத்தரவைத் திருப்பியனுப்பினர்.

வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டு தினத்தினை ஒட்டி மீண்டும் பிரச்சனை தீப்பிடித்துள்ளது. பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் வந்தே மாதரம் பள்ளிகளில் கட்டாயமாய்ப் பாட சுற்றறிக்கைகளை விட்டு கட்டாயப்படுத்தியுள்ளது. குஜராத் மாநில அரசு சுற்றறிக்கை விட்டதோடு அல்லாமல் மாநில இளைஞர் மற்றும் கலாச்சாரத்துறை ஒரு ஏஜென்ஸியை நியமித்து வந்தே மாதரப் பாடல் ஒலிக்கும் ஒலித் தகடுகளையும் விநியோகித்து வருகிறது. தமிழக அரசும் பள்ளிகளுக்கு வந்தே மாதரம் பாடுவதற்கான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள பள்ளி முதல்வர் இராபென் தேசாய் இப்பிரச்சனை குறித்து பேசும் போது 'அரசியல் கட்சிகள் இது போன்ற சுற்றறிக்கைகள் விட்டு வீணான பிரச்சனைகளைக் கிளப்புகின்றன. எங்கள் பள்ளியில் எல்லா முஸ்லிம் மாணவர்களும் நவராத்திரி, ரக்ஷாபந்தனிலிந்து பக்ரித் விழாக்கள் வரை சேர்ந்து பங்கேற்கின்றனர். செப்டம்பர் 7ல் மட்டும் வந்தே மாதரம் பாட அரசு ஏன் தேர்ந்தெடுத்ததென்று தெரியவில்லை. பெரும்பான்மை சமூகத்தினர் நடத்தும் பள்ளிகளிலும் வந்தே மாதரம் பாடுவதில் ஒரு தடையும் இல்லை. ஆனால், ஒரே ஒரு நிபந்தனை தான், எனக்கு அது கட்டாயப்படுத்துவதாய் இருக்கக் கூடாது' என்கிறார்.

இந்தியாவின் தேசிய கீதத்தைப் பாடுவதற்குகூட இந்தியக் குடிமகன் மறுப்பதற்கான உரிமைகள் அரசியலைமைப்புச் சட்டத்தில் உண்டு. இதற்கு உதாரணமானது தான் கேரளத்தில் நடந்த பிஜோ இம்மானுவேல் வழக்கு.

கேரளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இருவர் தேசிய கீதம் பாடும் வேளையில் எல்லாரையும் போல் எழுந்து நின்று பாடாமல் இருந்துள்ளனர். அதன் காரணமாய் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் கிறிஸ்துவ மதப்பிரிவான 'ஜெவோகா விட்னஸ்' பிரிவைச் சேர்ந்தார்கள். அவர்களின் நம்பிக்கைப்படி தங்கள் கடவுளின் ஸ்லோகங்களைத் தவிர வேறெதையும் பாடக்கூடாது. ஆனால், தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுத்து எழுந்து நின்றும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இது தொடர்பாகத் தொடுக்கப்பட்ட வழக்குக்கு உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள 25வது ஷரத்தின்படி ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். 19(1)(எ) சட்டப்பிரிவு படி பேச்சுரிமையைப் போலவே மௌனமாய் இருப்பதற்கான உரிமையும் குடிமகன் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று தீர்ப்பு வழங்கி மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது.

ஆனால் அரசியலைமைப்புச் சட்டத்தின் விதிகளை, குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பா.ஜ.க போன்ற கட்சிகள் கேள்விக்குள்ளாகியுள்ளன. எளிய மக்களின் சிறுவர், சிறுமியரின் அன்றாடத்தில் தேவையற்ற நெருக்கடியை உருவாக்கித் துவேஷத்தை தூண்டி இழந்த செல்வாக்கை மீட்டு மையத்துக்கு வர விரும்பும் இக்கட்சியின் செயல்திட்டங்கள் இந்தியாவுக்கு இன்னும் என்னென்ன விநோதமான நெருக்கடிகள் தரக் காத்திருக்கிறதோ தெரியவில்லை.

வரலாற்றின் வேறு வேறு காலக்கட்டங்களில் சில குழுக்கள் தங்களின் லட்சியங்களுக்காகவும், நலன்களுக்காகவும் மதம், தேசம், சாதி போன்றவற்றின் பின்னணியில் மக்களின் பொது உணர்ச்சியை தூண்டிச் சமுகத்தின் பொது அமைதிக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்றன. சாதாரண மக்களின் பொது உணர்ச்சி என்பது எல்லாவிதமான நெருக்கடிகளையும், செரித்து தன்னை மீண்டும், மீண்டும் நிரூபனமாகியுள்ளது. வந்தே மாதரம் குறித்தும் பொது உணர்ச்சி செயல்பட்ட விதத்தை இக்கடைசி செய்தியிலிருந்து தெரிந்துகொண்டு கடைசி செய்தியுடன் பொது நினைவிலிருந்து வந்தே மாதரம் ஏற்படுத்திய நெருக்கடியை இத்துடன் துண்டித்து விடலாம். 'பலத்த சர்ச்சைக்கிடையே நாடு முழுவதும் உள்ள பல பள்ளிகளில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. தேசபக்தி பாடல், சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்துடன் முடிவுக்கு வர வேண்டும்' என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறினார். இவ்வளவு பிரச்சனைக்கும் காரணமான 'வந்தே மாதரம்' பாடலை எழுதிய பங்கிம் சந்திர சாட்டர்ஜி பிறந்த ஊரில் யாருமே பாடவில்லை. இது தான் பொது உணர்ச்சி தெரிவிக்கும் முரண்நகை.

நன்றி : ஏ1ரியலீஸம்.காம் (தமிழ் இஸ்லாம்)

காரைக்குடி, முஸ்லிம், இஸ்லாம், முகவை

Tuesday, February 06, 2007

சமுதாய தலைமைகளின் சங்கமம்...(Soon)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சொந்தங்களே,

இன்சா அல்லாஹ் இறைவன் நாடினால் நமது அனைத்து சமுதாய தலைமைகளின் சங்கமம் வருகின்ற மார்ச் மாதம் 11 ம் நாள் கோவையில் நடக்கும்.



இன்சா அல்லாஹ் இது குறித்த அறிவிப்புகள் விரைவில். மேலதிக விபரங்களுக்கு சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் தகவல் தளத்தை பாருங்கள்.

www.ctmcoimbatore.com

நன்றி,

என்றும் சமுதாய சேவையில்,

கோவை தங்கப்பா

இஸ்லாம், முஸ்லிம், கோவை, காரைக்குடி

Saturday, February 03, 2007

பெண்களிடம் பரவும் ஆபாச "CD' மோகம்

பெண்களிடம் பரவும் ஆபாச "சிடி' மோகம் வீடியோ பைரசி போலீசார் அதிர்ச்சி தகவல்
குறிப்பு : நமது சமுதாயத்திடமும் இந்த பழக்கம் பரவி வருவதால் இங்கு இந்த தகவலை பதிகின்றேன். நமது சமுதாயத்தில் இந்த பழக்கம் பரவுவதற்கு முக்கிய காரணம் வலைகுடா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இருந்து இல்லம் திரும்பும் நமது சமுதாயத்தை சேர்ந்தவர்களே இப்பழக்கத்தை தமது மனைவிகளுக்கு ஏற்படுத்தி வருகின்றார்கள் அதன் மூலம் இது மற்ற பென்களுக்கும் பரவும் அபாயம். இதை ஆதாரப்பூர்வமாக அறிந்ததால் நான் இதை இங்கு பதிகின்றேன். இந்த விஷயத்தை நாட்டை விட்டு திரும்பியவுடன் இங்கிருக்கும் நன்பர்களுடனும் பகிர்ந்து கொள்கின்றனர்.

இது போல் உள்ள சிலரை எனக்கு முகவை மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்திலும் மதுரையிலும் தெறியும். இன்னும் சில வருடங்களுக்கு முன் முகவை மாவட்டம் பனைக்குளத்திலும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளதை பலர் அறிவர். MNP சகோதரர்கள் இப்பகுதிகளில் பயங்கர விழிப்புணர்வுடன் பணியாற்றி வருவதால் பயத்தில் இந்த பழங்கங்கள் சற்று குறைந்துதுள்ளன ஆனால் இவற்றை நிரந்தரமாக நம் சமுதாயத்திடம் இருந்து போக்க வேண்டுமானால் MNP பியினரும் இன்ன பிற இயக்கத்தினரும் IFT செய்வது போல் வீட்டுக்கு வீடு சென்று மார்க்கம் குறித்த அறிவை நமது பென்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இது யாரையும் அவமானப்படுத்த வேண்டும் என்ற என்னத்தில் பதிந்ததல்ல ஆனால் சமுதாய அக்கறையால் பதிந்தது தேவைப்பட்டால் தெறிந்த ஆதாரங்களை வெளியிடவும் தயார். இயக்கங்கள் சரியான மார்க்க அறிவை நம் சமுதாய பென்களிடம் ஏற்படுத்த முன் வர வேண்டும்.

முக்கியமாக MNP யினருக்கு: பயத்தை ஏற்படுத்துவதும் கடுமையாக தன்டிப்பதும் தற்காலிக தீர்வையே தரும் ஆனால் நீங்கள் உங்கள் மகளிர் அணியினரின் துனை கொண்டு IFT போன்று வீட்டுக்கு வீடு தாவா செய்து மார்க்க அறிவை நம் சமுதாய பென்களிடம் ஏற்படுத்த முன் வர வேண்டும் அதன் மூலமே நாம் இதை நிரந்தரமாக அகற்றலாம்.

சென்னை:ஆபாச "சிடி' பார்க்கும் மோகம் பெண்களிடம் அதிகரித்து வருவதை அறிந்த மத்திய குற்றப்பிரிவு வீடியோ பைரசி போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மளிகைக் கடை, பாத்திரக்கடை, பால் கடையில் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆபாச, புதுப்பட "சிடி'க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை திருவொற்றியூர் பூங்காவனபுரத்தைச் சேர்ந்தவர் நாகராஜன்(40). இவர் அப்பகுதியில் 20 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்து செல்லும் பெண்களிடம் சகஜமாக பேசி பழகி வந்தார். கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களிடம் புதுப்பட தமிழ் பட "சிடி'க்களை வாடகைக்கு விட்டு வந்தார். அதில், ஒரு சில பெண்கள் ஆங்கில படங்களை விரும்பிக் கேட்டனர். ஆங்கில பட "சிடி'க்கள் ஒன்றுக்கு பத்து ரூபாய் வாடகை பெற்று வந்தார். ஆங்கில படங்களை விரும்பி பார்த்து விட்டு, மீண்டும் வேறு ஆங்கில படங்கள் வேண்டும் என்று சில பெண்கள் கேட்டனர். அப்பெண்களுக்கு "பெண்கள் மட்டும் நடித்திருக்கும்' ஆபாச "சிடி'க்களை வாடகைக்கு கொடுத்தார். ஒரு சில பெண்கள் ஆபாச "சிடி'க்களை மளிகைக் கடைக்காரரிடம் விலைக்கு வாங்கி வீட்டில் வைத்து போட்டு பார்த்தனர். பெண்களிடம் ஆபாச "சிடி' மோகம் அதிகரித்து வரும் ரகசிய தகவல் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்றது. முதலில் அதிர்ச்சியடைந்த போலீசார் குறிப்பிட்ட கடைகளில் சோதனையிட முடிவு செய்தனர்.கமிஷனர் லத்திகாசரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் குறிப்பிட்ட மளிகைக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். கடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை பறிமுதல் செய்தனர். மளிகைக் கடையில் "சிடி'க்களை போலீசார் பறிமுதல் செய்து கொண்டிருந்த போது, காய்கறி வாங்கச் சென்ற பெண்கள் "சிடி'யை கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, வேறு புதுப்பட "சிடி' கேட்டனர். அப்பெண்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

திருவொற்றியூர் எர்ணாவூரைச் சேர்ந்தவர் அசோக்(28). இவர் அப்பகுதியில் ஆனந்த் மெட்டல் என்ற பாத்திரக் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் உள்ள பாத்திரங்களில் சிறிய ஆபாச படங்களை போட்டு வைத்து விடுவார். வழக்கமாக பாத்திரம் வாங்கச் செல்லும் பெண்கள் பாத்திரத்தை எடுத்து பார்த்தனர். அப்போது, பாத்திரத்திற்குள் இருக்கும் ஆபாச படத்தை பார்த்து கடைக்காரரிடம் ஆபாச "சிடி'க்களை கேட்கின்றனர். பெண்கள் கடைக்கு வந்து பாத்திரம் வாங்குவது போல், கடையின் உரிமையாளர் அசோக்கிடம் ஆபாச "சிடி'க்களை வாங்கிச் சென்றனர். இத்தகவலை அறிந்த போலீசார் பாத்திரக் கடையில் திடீர் சோதனை நடத்தினர். பாத்திரங்களில் போட்டு வைத்திருந்த சிறிய அளவிலான ஆபாச படங்களுடன் "சிடி'க்களை பறிமுதல் செய்தனர்.

அண்ணாநகர் 13வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் தனசேகரன்(23). இவர் எஸ்.எஸ்.மில்க் என்ற பெயரில் பால் கடை நடத்தி வருகிறார். கடைக்கு வந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கு புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை விற்பனை செய்து வந்தார். பிராட்வே பகுதியில் "சிடி' விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் காசிம்(23). இவரது கடையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். கடையில் இருந்த ஆபாச, புதுப்பட "சிடி'களை பறிமுதல் செய்தனர். திருவொற்றியூரைச் சேர்ந்த கவிமணி(43) என்பவரது கடையில் இருந்து புதுப்பட மற்றும் ஆபாச "சிடி'க்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அண்ணாநகர் 10வது பிரதான சாலை பிளாட்பாரத்தில் புதுப்பட, ஆபாச "சிடி'க்களை விற்பனை செய்து வந்த முஸ்தபா(37) என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு நபர்களிடம் இருந்து ஆயிரத்து 500 "சிடி'க்கள் பறிமுதல் செய்யப்பட்டன. "சிடி'க்களின் மதிப்பு எட்டு லட்சம் ரூபாய்.

ஓட்டம் பிடித்த கல்லுõரி மாணவி:மத்திய குற்றப்பிரிவு வீடியோ பைரசி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாறு "சிடி' வேர்ல்டு என்ற கடையில் திடீர் சோதனை நடத்தினர். கடையில் இருந்த ஆபாச, புதுப்பட "சிடி'க்களை பறிமுதல் செய்து கொண்டிருந்தனர். அப்போது, கடைக்கு சென்ற கல்லுõரி மாணவி, போலீசாரை பார்த்ததும் திகைத்து நின்றார். வாடகைக்கு எடுத்துச் சென்ற "சிடி'யை திருப்பிக் கொடுக்க வந்ததாக மாணவி கூறினார். மாணவியின் கையில் இருந்த "சிடி'யை வாங்கிக் கொண்டு அவரை போலீசார் அனுப்பி வைத்தனர். அந்த "சிடி'யை கடையில் உள்ள கம்ப்யூட்டரில் போலீசார் போட்டுப் பார்த்த போது, அது ஆபாச "சிடி' என தெரிய வந்தது. சிறிது துõரம் மெதுவாக நடந்து சென்ற அந்த மாணவி பின்னர் ஓட்டம் பிடித்தார்.

நன்றி : தினமலர்

சின்னத்திரை சின்ன புத்திக்காரர்

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

பாராளு மன்றத்தை நோக்கி த.மு.மு.க. பேரணியும் சின்ன புத்திக்காரரின் சின்னத்தனமும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்த சச்சார் கமிட்டி அறிக்கையை அமல்படுத்த வேண்டும். இதில் சட்டச் சிக்கல் ஏற்பட்டால் உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்திரா காந்தி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கான 15 அம்ச திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 2007 மார்ச் 7 ஆம் தேதி பாராளு மன்றத்தை நோக்கி த.மு.மு.க. பேரணி நடத்த உள்ளது.

பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு மூல காரணமாக இருந்து த.மு.மு.க.வால் காப்பாற்றப்பட்ட சின்னத் திரைக்காரர் த.மு.மு.க.வை ஒழித்து விடுவேன் என சவால் விட்டார். அதற்காக முனைப்போடு செயல்பட்டு தோழ்வியும் அடைந்தார். அந்த சின்ன புத்திக்காரர் இப்பொழுது பாராளு மன்றத்தை நோக்கி த.மு.மு.க. நடத்த இருக்கும் பேரணியை தோழ்விறச் செய்வதில் முனைப்போடு உள்ளார். இதற்காக பேரணிக்கும் நமது வழி காட்டுதலை எதிர் நோக்கியுள்ள முஸ்லிம்களுக்கும் சம்பந்தம் இல்லை. அது தவ்ஹீது அமைப்பு இல்லை என்று ஒவ்வொரு மாநிலமாக செய்தி அனுப்பி வருகிறார்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும் பாபரி மஸ்ஜிதுக்காகவும் டிசம்பர் 6 இல் த.மு.மு.க. அறிவித்த முதல் போராட்டம் 1995 ஆம் ஆண்டில்தான். த.மு.மு.க. செயல்படத் துவங்கிய அந்தக் ஆண்டிலேயே த.மு.மு.க. அறிவித்த முதல் டிசம்பர் 6 போராட்டத்துக்கே எதிர்ப்பு வேலை செய்தார் ஒரு தலைவர். பத்திரிக்கையில் அறிக்கையும் விட்டார். அதிலும் தமது வழி காட்டுதலை எதிர்பார்த்துள்ள சமுதாயத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற வாசகம்தான் இடம் பெற்றிருந்தது.

அந்த தலைவராவது பத்திரிக்கையில் பகிரங்கமாக அறிக்கை விட்டார். சின்ன புத்தியுடைய சின்னத் திரைக்காரர் மாதிரி திரைக்குப் பின்னால் வேலை செய்யவில்லை. அந்த வகையில் அந்தத் தலைவர் ஆண் மகன். சின்னத் திரை சின்ன புத்திக்காரர் கூறி வரும் அதே வாசகத்துடன் கூடிய 1995ஆம் ஆண்டு அறிக்கை வந்த பத்திரிக்கை இதோ.


மு.லீக் தலைவரின் அறிக்கை


1995 ஆம் ஆண்டில் த.மு.மு.க. அறிவித்த முதல் டிசம்பர் 6 போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எழுதப்பட்ட இந்தப் பத்திரிக்கைக்கு இன்று அட்ரஸே இல்லை. அது போல்தான் சின்னத் திரை சின்ன புத்திக்காரருக்கும் ஏற்படும்.

இங்கே இன்னொன்றையும் நினைவில் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். குடும்பம் இருந்தும் பிரம்மச்சாரியாக, கணவன் என்ற தான் இருந்தும் தன் மனைவி விதவையாக வாழ 8 ஆண்டுகளாக அநியாய சிறையில் வாடும் குணங்குடி ஹனீபா அவர்கள்தான் 1995 ஆம் ஆண்டில் த.மு.மு.க.வின் தலைவராக இருந்தார்கள். அவர் விரைவில் வெளி வர வேண்டும் என்பது ஒவ்வொரு த.மு.மு.க.வினரின் உணர்வாக உள்ளது. அவர்தான் பாபரி மஸ்ஜிதுக்காக பாராளுமன்றத்தில் தொழுகை போராட்டம் என அறிவித்தவர்.

எனவே 2007 மார்ச் 7 ஆம் தேதி பாராளு மன்றத்தை நோக்கி த.மு.மு.க. நடத்த உள்ள பேரணியில் அவர் கலந்து கொள்ளும் வண்ணம் விரைவில் விடுதலையாக துஆச் செய்வோம். சின்னத் திரை சின்ன புத்திக்காரரின் சதிகள் முறியடிக்கப்பட்டு த.மு.மு.க.வின் டெல்லிப் பேரணி வெற்றி பெறவும் துஆச் செய்வோம் வஸ்ஸலாம்.

கா.அ. முஹம்மது பஸ்லுல் இலாஹி

Friday, February 02, 2007

கூண்டை விட்டு...

விரைவில் எதிர் பாருங்கள்...