Wednesday, May 27, 2009
சாருநிவேதிதா என்ற உளறல் திலகம்
தமிழின் மிகப் பெரிய எழுத்தாள சிகாமணி என்று தன் முதுகைத் தானே சொறிந்து கொண்டிருக்கும் தமிழின் மிகப் பெரும் எழுத்தாள சிகாமணிகள் இருவரில் ஒருவரான சாருநிவேதிதா சமீபத்தில் துபாய் ஏசியாநெட் வானொலிக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.
உலகப் புரட்சிகள் குறித்து மேதாவித்தனமாகப் பேசும் இந்த ஞானபீடை எழுத்தாளருக்கு அருகில் இருக்கும் இலங்கைத் தமிழர்களின் ஆரம்ப கால வரலாறோ அல்லது அது குறித்த பிரக்ஞையோ கொஞ்சம் கூட இல்லை என்பதை இப்படி நிரூபிப்பார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை.
( பிரபாகரனின் 'மறைவு' குறித்து என்னிடம் பேசுமாறு ஏசியாநெட் வானொலி கேட்டபோது 'உறுதியற்ற தகவல்களை என்னால் பேசமுடியாது. தகவல் உறுதியாகும் வரை இதைச் செய்தியாக என் வாயால் நான் சொல்ல மாட்டேன் என்று தீர்மானமாக மறுத்து விட்டேன்.)
எனவே 'சிந்தனையாளரான' சாருவிடம் கேட்டபோது ' எதிர்பார்த்த ஒன்றுதான். ஏன்னா தமிழில் ஒரு பழமொழி இருக்கு. கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான்'' அப்படின்னு வேதாந்தம் ஓதினார் இந்தக் கட்டுடைப்புவாதி.
நெல்சன் மண்டேலா காந்தியவழியில் போராடியதால்தான் ஜெயிச்சாராம். அதை விட்டுட்டு ஆயுதமேந்திப் போராடியதால்தான் தமிழர்களுக்கு இந்த நிலையாம். ஈழத்துல 50கள்ல ஆயுதமேந்தியா செல்வா போராடினாராம்? இந்த 'சவத்து மூதி'க்கு செல்வாங்குறவரைப் பத்தியாவது தெரிஞ்சிருக்குமான்னு தெரியலை.
அதை விடக் கொடுமை என்னன்னா, ராஜ பக்ஷே என்னதான் கொடூரமா கொலை செஞ்சாலும் அவங்க கிட்ட போய் நட்பாப் பேசி பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சி செய்யணுமாம். அடங்கொய்யால!! கூட இருக்குற எழுத்தாளன் கிட்டயே சுமுகமா நட்பா பேசத் தெரியாதவரு ஊருக்கு எப்படி உபதேசம் பண்றாருன்னு பாருங்க மக்கா!
இதையாவது பொறுத்துக்கலாம்.
25 வருசத்துக்கு முன்னால வரைக்கும் சிங்களர்கள்-தமிழ்ர்கள் உறவு நல்லாத்தான் இருந்திச்சாம். இவங்கதான் ஈழம் வேணும்னு ஈழம் வேணும்னு போராடி மக்களை கொன்னுட்டாங்களாம். அதனாலதான் உலகம் முழுக்க அகதிகளாப் போயிட்டாங்களாம். எழுத்துல மட்டும் இல்லாம பேச்சுலயும் இப்படி சுருதி பிசகாம உளற இவரால எப்படி முடியுதுன்னு வியந்து போயிட்டேன்.
இதுதான் அப்படின்னா தன்னோட 'வன்முறையின் தோல்வி' கட்டுரையில் அஹிமசாவாதியாக அவதாரம் எடுத்திருக்கும் இந்த யுகபுருஷன் சொல்லும் பகடியை நினைத்து வாயால் சிரிக்க முடியாது போலிருக்கிறது
பாருங்கள் என்ன சொல்கிறாரென்று
குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்கு முன்னால் பேச்சு வார்த்தையை நிராகரிக்காமல் இருந்திருந்தால் இன்று ஈழம் ஒரு சுயாட்சி கொண்ட மாகாணமாகவாவது உருவாகியிருக்கும்... தெருவோரம் பிச்சை எடுக்குறவன் கூட இந்த மாதிரி கேணத்தனமா நம்பவோ பேசவோ மாட்டான்.
ஏதோ எலக்கியம் பேசுனமா, ஜெயமோகனைத் திட்டுனமா, எங்க குடிச்சோம், என்னத்தக் குடிச்சோம்னு நவீனம் எழுதுனமா, பார்க்காத படத்துக்கு விமர்சனம் எழுதி வாங்கிக் கட்டுனமான்னு இருக்குறதை விட்டுட்டு ஏன் தனக்குத் தெரியாத விசயத்துலயெல்லாம் மேதாவி மாதிரி உளறிக்கிட்டிருக்காரு இந்த எலக்கியத் திலகம்ன்னு புரியலை.
சும்மாவே துணியில்லாம ஆடிட்டு திரியுதானுவ. இதுல இம்மாதிரி உளறல்கள் வேற. நெனச்சாலே கொதிப்பா இருக்கு. என்னத்த பண்ணச் சொல்லுதிய?
நல்லா இருங்கடே!!
ஆசிப் மீரான்
Sunday, May 24, 2009
பத்மநாதன் விடுத்த அறிக்கை தவறானது - பிரபாகரன் உயிரோடு உள்ளார்

ஜி 2, கீழ்த்தளம், 58, மூன்றாவது முதன்மைச் சாலை, ஆழ்வார் திருநகர் விரிவாக்கம், சென்னை # 600 087.
தொலைபேசி : 91-44-2377 5536 தொலை நக- : 91-44-2377 5537
பழ.நெடுமாறன்
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
விடுதலைப்புலிகளின் சர்வதேசச் செயலகத்தின் பொறுப்பாளர் பத்மநாதன் பெயரில் ஓர் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதே பத்மநாதன் கடந்த 19.05.2009 அன்று பிரபாகரன் நலமாக இருக்கிறார் என அறிவித்தார்.
இந்த இடைக்காலத்தில் நடந்தது என்ன? யாருடைய நிர்ப்பந்தத்தின் பெயரிலோ தன் நிலையை மாற்றிக் கொண்டு இவ்வாறு அறிவித்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
சிறிதளவு கூட நம்பகத்தன்மையற்ற இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிங்கள
அரசும், இந்தியாவில் உள்ள சில ஊடகங்களும் பரப்பிய செய்திகளைப் போல இச்செய்தியும் நம்பகத் தன்மையற்றது. ஆழமான உள்நோக்கத்துடன் திட்டமிட்டு இச்செய்தி பரப்பப்படுகின்றது என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.
பிரபாகரனின் சக தளபதிகளைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் உரிமை இல்லை. வேறு யார் என்ன அறிவித்தாலும் அதை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.
இலங்கையில் சிங்கள இராணுவத்தின் கொடூரமானத் தாக்குதலின் விளைவாக 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களும் , போராளிகளும் படுகொலைசெய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் உடல், உறுப்புகளை இழந்தும் படுகாயம் அடைந்தும் மருத்துவ வசதியின்றி உயிருக்காக போராடி வருகின்றனர். மேலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து, குடிநீர்வசதி இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர்.
பாதுகாக்கப்பட்ட வலயங்கள் என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒருபுறம் ஏமாற்றிக்கொண்டு மறுபறம் எஞ்சியிருக்கும் தமிழ் மக்கள் மீதும் கொலைவெறித்தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இக்கொடுமைகளையெல்லாம் மறைப்பதற்காகவும், திசைதிருப்புவதற்காகவும் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாகப் பொய்யானச் செய்திகள் திட்டமிட்டுப்பரப்பப்படுகின்றன.
பிரபாகரன் எந்த இலட்சியத்திற்காகப் போராடி வருகிறாரோ அது இன்னமும் எட்டப்படவில்லை. தமிழீழ மக்களின் துயரம் தொடர்கிறது. அவரால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகளும் தளபதிகளும் பிரபாகரனின் வழிகாட்டலுடன் அந்த இலட்சியத்தை நிறைவேற்றும் உறுதியுடன் களத்தில் போராடி வருகிறார்கள்.
சொல்லொணாத் துன்பங்களுக்கு நடுவிலும் சிறிதளவும் மனந்தளராமல் தமிழீழமக்களுடன் உறுதியோடு போராளிகளுடன் ஒன்றிணைந்து நிற்கின்றனர். எனவே இந்தப் பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும். இதுதான் அவரை நாம் மதிப்பதற்கும், பின்பற்றுவதற்கும் உரிய அடையாளம் ஆகும்.
இப்படிக்கு
பழ. நெடுமாறன்
பத்மநாதனின் அறிவிப்பு துரோகச் செயல் ஆகும்,பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: வைகோ அறிக்கை
தமிழீழ தேசியத்தலைவர் பற்றி பத்மநாதன் விடுத்த அறிக்கை தவறானது எனது வைகோ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மதிமுக அலுவலகமான தாயகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் அறிக்கை:
தமிழ்த் தேசிய இனத்தின் தலைவரும், உலகத் தமிழர்களின் இதயநாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார். அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை. உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார்.
யுத்தகளத்தில் இருந்து வேனில் அவர் தப்பி ஓடும்போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று, ஒரு பொய்ச்செய்தியை சிங்கள அரசு முதலில் வெளியிட்டது. இரண்டு நாள்கள் கழித்து, நந்திக்கடல் பகுதியில் அவர் உடல் கண்டு எடுக்கப்பட்டதாக, இன்னொரு பொய்யைச் சொன்னது.
மே 19 ஆம் நாள் அன்று, ‘இதுதான் பிரபாகரனின் உயிர் அற்ற சடலம்’ என்று, முதலில் காட்டப்பட்ட அந்த உடலில், முகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்கள் பளிச்சிட்டன. முகம், நன்கு மழிக்கப்பட்டு இருந்தது. அவருடைய உடல் பருமனுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத உடல் அமைப்பு என்பதால், இது அக்கிரமமான பொய் என்பதை அறிந்து கொண்டோம்.
சில மணி நேரங்களில், வேறு ஒரு சடலத்தை சிங்கள இராணுவம் காட்டியது. இதில், வலது கண் மூடியும், இடது கண் இலேசாகத் திறந்தும் இருந்தது. முன் நெற்றியில் இருந்த காயத்தை, துணி போட்டு மறைத்து இருந்தனர். பகைவர்கள் சுட்டு இருந்தால், உடலில் எராளமான குண்டுகள் பாய்ந்து இருக்க வேண்டும். அவரே ஒருவேளை தன்னைச் சுட்டுக் கொண்டாரா என்பதையும் ஏற்பதற்கு இல்லை.
தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள முடிவு எடுத்தால், வலது காதை ஒட்டினாற்போல் கன்னப் பொருத்தில்தான் ரவையைச் செலுத்த வேண்டும் என்று, அவரே போராளிகளுக்குப் பயிற்சி அளித்தவர் ஆவார். மேலும்,இரண்டாவதாகக் காட்டப்பட்ட உடலும், முகத்தோற்றமும், இது சிங்கள இராணுவத்தின் செப்பிடுவித்தை, ஏமாற்று வேலை என்பதை எடுத்துக்காட்டியது.
அவரது சடலம் கிடைத்தது என்றால், அவரது குடும்பத்தினர், மெய்க்காப்பாளர்கள் சடலங்கள் எங்கே? என்ற கேள்விக்கு, சிங்கள இராணுவத்தின் பதில் ஏற்கத்தக்கதாக இல்லை. பிரபாகரனின் சடலம்தான் என்பதை, மரபு அணு சோதவீனையால் மெய்ப்பிக்க வேண்டியது சிங்கள அரசின் கடமை ஆகும். பிரபாகரனின் தந்தையார், உயிருடன்தான் இருக்கிறார். எனவே, அவருடைய உடம்பில் இருந்து, சோதனைக்குத் தேவையானவற்றை எடுத்து, டி.என்.ஏ. சோதனையை நடத்தி, சந்தேகத்துக்கு இடம் இன்றி, இறந்தது பிரபாகரன்தான் என்று உலக நாடுகளுக்கு, சிங்கள அரசு ஏன் அறிவிக்கவில்லை?
அவர்களிடம் இருப்பதாகச் சொல்லப்பட்ட பிரபாகரனின் சடலத்தை, அவசர அவசரமாக எரித்துச் சாம்பலாக ஆக்கி விட்டோம்; இந்துமாக் கடலில் கரைத்து விட்டோம் என்று சிங்கள இராணுவத் தளபதி, கொலை வெறியன் சரத் பொன்சேகா அறிவித்ததன் மர்மம் என்ன?
இந்நிலையில், மே 18 ஆம் நாள் அன்று, பிரபாபரகன் உயிருடன் இருக்கிறார் என்று, ‘சேனல் 4′ என்ற இலண்டன் தொலைக்காட்சியில் அறிவித்த விடுதலைப் புலிகளின் அனைத்து உலகத் தொடர்புப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன், திடீரென்று அந்தர் பல்டி அடித்து, ‘பிரபாகரன் இறந்து விட்டார்’ என்று அறிவித்தது, கடைந்து எடுத்த அயோக்கியத்தனமான துரோகச் செயல் ஆகும்.
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஏகப் பிரதிநிதியாக அறிக்கை விடும் அதிகாரம் அவருக்குக் கிடையாது. மிக அண்மையில்தான், அவர் இந்தப் பொறுப்புக்கே நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களோடும், துரோகம் செய்து வெளியேறியவர்களோடும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, விடுதலைப்புலிகள் அமைப்பில் குளறுபடிகளை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டு உள்ளதாகத்
தெரிகிறது. வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் பிடிக்குள் பத்மநாதன் சிக்கி இருப்பதற்கான ஆதாரங்களும் கிடைத்து இருக்கின்றன.
தமிழ் ஈழத்தில் துன்பமும், துயரமும் சூழ்ந்து, ஈழத்தமிழ் மக்கள், மனித குலம் சந்தித்து இராத அவலத்துக்கும் அழிவுக்கும் ஆளாகி இருக்கின்றனர். ஈழத்தமிழ் இளம்பெண்கள், சிங்கள இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படு கின்றனர். தமிழ் இனத்தையே வருங்காலத்தில் சிங்களக் கலப்பு இனமாக்க, கொடியவன் இராஜபக்சே திட்டமிட்டு விட்டான். இரத்த வெறி பிடித்த புத்த பிக்குகள், புராதனமான தமிழர்களின் ஊர்களுக்கு, சிங்களப் பெயர்களைச் சூட்ட வேண்டும் என்று அறிவித்து உள்ளதை எண்ணும்போது, நம் இரத்தம் கொதிக்கிறது. ஏற்கனவே போராளிகளும், தமிழ் மக்களும் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டு விட்டனர். இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள், உணவு இன்றி, மருந்து இன்றி, உயிர் துறக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இப்படிப்பட்ட கொடுந்துயரில் ஈழத் தமிழ் இனம் சிக்கி வதைபடும் நேரத்தில், செல்வராசா பத்மநாதனின் அறிவிப்பு மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். ஈழத்தமிழ் மக்களும், தாய்த்தமிழகத்திலும், தரணி எங்கும் உள்ள தன்மான உணர்வு கொண்ட தமிழர்களும், இதை நம்ப வேண்டாம்; தலைவர் பிரபாகரன் அவர்கள், உயிருடன் இருக்கிறார். தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் அனைத்து உலகப் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர், அறிவழகன்,
தனது அறிக்கையில், பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருப்பதை உறுதி செய்து உள்ளதையும் சுட்டிக்காட்டவிரும்புகிறேன்.
தலைவர் பிரபாகரன் அவர்கள் வென்றெடுக்கக் களம் அமைத்த இலட்சியங்களை வெல்லவும், ஈழத்தமிழர்களின் துயர் துடைக்கவும் உறுதிகொண்டு நம் கடமைகளைத் தொடர்வோம்.
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக விடுதலைப் புலிகள் உறுதி செய்துள்ளனர்
தொடர்ந்தும் ஜனநாயக வழியில் தாங்கள் போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவரது பேட்டியை இன்றைய தமிழோசையில் கேட்கலாம்

Wednesday, May 20, 2009
தமிழீழத் தலைவர் மரணம் - மக்கள் தொலைக்காட்சியின் ஆய்வு - இனவாத அரசின் பரப்புரை அம்பலம்
வா தமிழா வா...
வருக தமிழா வருக...
வந்து இங்கு குவிக...
தவறாய் வந்து தவறு சொன்னான்..
தவறுகளை தவறென்று தவறாமால் சொல்ல வைப்போம் தமிழா நீயும் வருக....
தவறானவன் தகவல் கேட்டு தடை போட்ட தவறாளனை தவறென்று சொல்ல வைப்போம்.. தமிழா நீயும் படை திரட்டி தவறாமல் வருக....
உந்தன் ஒப்பங்களை நீயும் இட்டு எங்கள் நீதி பக்கங்களை நீ..காக்க..
வருக தமிழா வருக படையாகி வருக....
பலமாக்கி ஒப்பமதை நீ பலமாக தருக... வா தமிழா வா...
வன்னி மைந்தன்
நன்றி : நிதர்சனம்
Tuesday, May 19, 2009
தமிழீழ தேசியத் தலைவர் உயிருடன் பாதுகாப்பாக உள்ளார்

"சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது" எனவும் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.
அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:
இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?
சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.
சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.
தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.
இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும், இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.
இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.
தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.
நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?
சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் தூரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.
'விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்' எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?
எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.
இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயறபடுவதற்கு நாம் விரும்புகின்றோம்.
தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்கான இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.
Sunday, May 17, 2009
திரு. ரித்தீஷ் அவர்கள் வெற்றி !! - முகவை தேர்தல் முடிவுகள்
ராமநாதபுரம் தொகுதியில்
தி.மு.க.வேட்பாளர் ரித்திஷ் வெற்றி
ராமநாதபுரம்,மே.17-
ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ரித்திஷ் வெற்றி பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை
பாராளுமன்ற தேர்தல் அறி விப்பு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி வெளியிடப்பட்டது. கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நடை பெற்றது.இதில் 68.7 ச தவீத வாக்குகள் பதிவாகியது. இதற்கான வாக்குஎண்ணிக்கை நேற்று ராமநாதபுரம் செய்யதம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான வாசுகி முன்னிலையில் தொகுதிவாரியாக தனி அறையில் சீல் வைக்கப்பட்டு இருந்த வாக்குபதிவு எந்திரங்கள் அந்ததந்த தொகுதி வாக்குகள் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
ராமநாதபுரம்,திருவாடானைசட்டசபை தொகுதிக் கான வாக்கு எண்ணிக்கை மைய கட்டிடத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தரைத் தளத்திலும்,திருச்சுழி,அறந் தாங்கிதொகுதி வாக்குஎண் ணிக்கை மேற்குபகுதியில்உள்ள தரைத்தளத்திலும், பரமக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை முதல் மாடியில்கிழக்குபகுயிலும், முதுகுளத் தூர் தொகுதி வாக்குஎண் ணிக்கை முதல் மாடியில் மேற்கு பகுதியிலும் நடந்தது.வாக்குகள் எண்ணுவதற்கு ஒவ்வொருசட்ட மன்றதொகுதிக்கும் 12 மேஜைகள் வீதம் 72 மேஜைகள்அமைக்கப்பட்டு ள்ளன. ஒவ்வொரு மேஜைக் கும் ஒரு மேற்பார் வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார் வையாளர் வீதம் மொத்தம் 216 அரசுஅலுவ லர்கள் வாக்கு எண்ணும் பணியில்ஈடுபட்டனர்.
வாக்குஎண்ணிகை மையத்துக்குள்வேட்பா ளர்கள், அனுமதி பெற்ற அவர்களது ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் ஆணைய அனுமதி பெற்றவர்கள் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தைசுற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில்ஏராள மான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
தி.மு.க.வெற்றி
வாக்கு எண்ணிக்கை மொத்தம் 27 சுற்றுகள் நடந்தது. இதன் முடிவில் தி.மு.க.வேட்பாளர் சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்திஸ் 69 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
மொத்தவாக்குகள் -11,30,489
பதிவானவை - 7,75,461
தபால்ஓட்டு - 2,378
செல்லாதவை - 499
ஜே.கே.ரித்திஷ்(தி.மு.க.வெற்றி)- 2,94,945
வ.சத்திய மூர்த்தி(அ.தி.மு.க.) - 2,25,030
சு.திருநாவுக்கரசர்(பா.ஜ.க.) - 1,28,322
சிங்கைஜின்னா (தே.மு.தி.க.) - 49,571
பிரிசில்லாபாண்டியன்(ப.சமாஜ்)- 39,086
சலிமுல்லாகான்(ம.ம.க.) - 21,439
முகமதுஅபிதலி(ஜா.மு.மோ) - 1,496
ஜகாங்கீர்(சுயேட்சை) - 5,872
முருகேந்திரன்(சுயே) - 3470
பாஸ்கரன் (சுயே) -2329
காளிமுத்து(சுயே) -1769
பாலமுருகன்(சுயே) -1244
செல்லதுரை(சுயே) - 1186
சண்முகையாபாண்டியன்(சுயே) -1119
சுவார்ட்ஸ்துரை (சுயே) - 961
பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் ரித்திசுக்கு தேர்தல் அதிகாரி வாசுகி சான்றிதழை வழங்கினார். அப்போது வேட்பாளர் ரித்திசை அமைச்சர் சுப.தங்கவேலன்,எம்.எல்.ஏ.க்கள்அசன்அலி, முருகவேல்,ராம்பிரபு,உதயம்சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், நகர்தி.மு.க.செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம், ïனியன் தலைவர்கள் திவாகரன், நல்லசேதுபதி, எம்எ.சேக், பெருநாழிபோஸ்,மாவட்டதுணை செயலாளர் அகமதுதம்பி, ராமர்,திசை வீரன், சேது கருணாநிதி, துரைச்சாமி, நாகநாதசேதுபதி உள்பட தி.மு.க.நிர்வாகிகள் வாழ்த்தினர்.
Thursday, May 14, 2009
தமிழகத்தில் எங்கிருந்தும் காவல் துறைக்கு புகார் தெரிவிக்க!
தானியங்கி கம்ப்யூட்டர்-தொலைபேசி சேவை
போலீஸ் டி.ஜி.பி அலுவலகத்தில் அறிமுகம்
சென்னை மைலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் நாள் முழுவதும் இயங்கும் தானியங்கி கணிணி வழி-தொலைபேசி மூலம் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமிழ்நாட்டின் எந்தப்பகுதிகளில் இருந்தும், எந்த நேரத்திலும் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். தமிழ்நாடு தவிர இதர மாநிலத்தில் உள்ள பொதுமக்களும் கூட இச்சேவையை பயன்படுத்தி உதவி கோரலாம்.
பொதுமக்கள் தங்களது புகார் மற்றும் குறைகளை பதிவு செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். அத்தகைய புகார்கள் அல்லது குறைகள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதுடன் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிக்கும் தக்க அறிவுரை வழங்கப்படும்.
டாடா இண்டிகாம் தொலைபேசி- 044 64555100, 64556100
(நேரடி அவசர உதவி தேவைப்படுவோர் எப்போதும் போல் 100 என்ற தொலைபேசியையும் பயன்படுத்தலாம்)
மேற்கண்ட தகவலை டி.ஜி.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.
Monday, May 11, 2009
மே 13 முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்!
ஆயினும் வாக்களிக்கும் அனைத்து முஸ்லிம் களும், வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம்களும் இஸ்லாமிய வரையறைக்குள் நின்று செயல்பட்டு 3:110-ல் அல்லாஹ் கூறுவதுபோல் மாற்றாருக்கு நேர்வழிகாட்ட வேண்டும். வாக்களிக்கும் முஸ்லிம் கள் தங்களின் பொன்னான விலை மதிப்பற்ற வாக்குகளை 1000ஃ-க்கும் 5000ஃ-க்கும் விற்க ஒரு போதும் துணியக் கூடாது. அப்படி மக்களுக்குப் பணம் கொடுத்து அதன் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறவர்கள், தாங்கள் செலவழித்ததைப் பன் மடங்காக பெருக்கி கோடி கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கத் துணிவார்களே அல்லாமல், மக்களுக்குத் தொண்டு செய்யவோ, சேவை செய்யவோ, முன்வரமாட்டார்கள் என்பதை முஸ்லிம் ஆண்களும், பெண்களும் மனதில் இருத் திக் கொள்ள வேண்டும். எனவே தங்கள் வாக்கு களை ஒருபோதும் பணத்திற்கு விற்கக் கூடாது.
அடுத்து வெற்றி பெறுபவருக்கே நமது வாக்கையும் அளிக்க வேண்டும் என்ற மூட எண்ணமும் கூடாது. பணம் கொடுத்து வாக்குகளை வாங்காமல், தொண்டு செய்து மக்கள் மனதில் இடம் பிடிப்பவர்களுக்கே முஸ்லிம்கள் தங்கள் வாக்கை அளிக்க வேண்டும். நாம் வாக்களிக்கும் வேட்பாளர் தோற்றாலும் பரவாயில்லை ; அதனால் மக்களுக்குத் தொண்டு செய்வதை விட்டு விட மாட்டார் என்ற அடிப்படையில் நல்லவர்களுக்கே, தொண்டு செய்பவர்களுக்கே நமது வாக்குகளை அளிக்க வேண்டும். தோற்பவர்களுக்கு வாக்களிக்க லாம். ஆனால் தொண்டைத் தொழிலாக்கிக் கோடிகோடியாக சுருட்டுகிறவர்களுக்கு ஒரு போதும் வாக்களிக்க கூடாது.
நாம் வாக்களித்து அதன் மூலம் வெற்றி பெற்றுப் போகிறவர்கள் செய்யும் அநியாயங்கள், அட்டூழியங்கள் அனைத்திற்கும் நாமும் துணை போன குற்றத்திற்கு ஆளாக நேரிடும். அதனால் வாக்களிக்காமல் இருப்பதே சிறந்தது என சிலர் வாதிடலாம். இந்த எண்ணத்தில் நாம் வாக்களிக் கத் தவறினால், நமது வாக்கு கள்ள வாக்காக மாறி நிற்பவர்களில் ஆகக் கொடியவர்கள் தேர்வு பெறக்காரணமாகலாம். அதனால் வாக்களிக்காமல் இருந்து எந்தப் பாவத்தைத் தவிர்க்க எண்ணினோமோ அதை விடப் பெரும் பாவத்தை இரட்டிப் பாக அடைய நேரிடும் என்பதை இப்படிப்பட்ட எண்ணமுடையவர்கள் உணர வேண்டும்.
எனவே நிற்பவர்களில் குறைந்த தவறுடைய வர்களைப் பார்த்து நமது வாக்கைப் பதிவு செய்யலாம். அப்படிப்பட்டவர்களும் வேட்பாளர் களில் தென்படாவிட்டால், தேர்தல் அதிகாரியிடம் கூறி அதற்குரிய படிவத்தைப் பெற்று, வேட்பாளர் களில் யாரும் தகுதியானவர்கள் இல்லை. எனவே எனது வாக்கை யாருக்கும் அளிக்கவில்லை என பூர்த்தி செய்து கொடுத்து, முஸ்லிம்களின் வாக்குகள் கள்ள வாக்குகளாக மாறுவதைத் தடுக்கலாம். ஆக முஸ்லிம்கள் 100மூ தவறாது ஒவ்வொரு தொகுதியிலும் வாக்களித்துள்ளார் கள் என்ற சாதனையின் மூலம் ஆட்சியாளர்களின், அதிகாரிகளின் கவனத்தை முஸ்லிம் சமுதாயத் தின் பக்கம் திருப்ப முடியும். இது முஸ்லிம் ஆண், பெண் வாக்காளர்களின் கடமையாகும்.
அடுத்து முஸ்லிம் வேட்பாளர்கள், ஜாதி, மதம், இனம் என வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் தொண்டு, சேவை செய்யும் எண்ணத்துடனும், முஸ்லிம்களின் உரிமைகளை கட்டிக்காக்கும் குறிக்கோளுடனும், வேட்பாளர்களாக நிற்க வேண்டும். இன்று அரசியலைவிட ஆதாயம் தரும் வியாபாரம் வேறு ஒன்றுமில்லை; முதல் இல்லாமலேயே கோடி கோடியாகப் பொருள் ஈட்ட முடியும் என்ற தீய நோக்குடன் வேட்பாளர்களாக ஒரு போதும் நிற்கக் கூடாது. அற்ப உலக ஆதாயம் கருதி தொண்டைத் தொழிலாக்கி மக்கள் பணத்தை லஞ்சம் போன்ற தவறான வழிகளில் சுருட்ட முற்படுகிறவர்கள், தூய மார்க்கத்தை மதமாக்கி தொண்டைத் தொழிலாகக் கொண்ட புரோகித மவ்லவிகள் தங்கள் வயிறுகளில் நரக நெருப்பை நிரப்பிக் கொள்வது போல், இவர்களும் நரக நெருப்பையே தங்கள் வயிறுகளில் நிரப்பிக் கொள்கிறார்கள் (பார்க்க 2:174).
அது வட்டி, பன்றிக் கறி சாப்பிடுவதை விட மிகக் கொடிய ஹராம் என்பதை நினைத்து சதா அஞ்சிக் கொள்வார்களாக. ஆயினும் அன்று ஆட்சி செய்த கலீஃபாக்கள், கவர்னர்கள் அரசிடமிருந்து ஊதியம் பெற்றது போல், இவர் கள் அரசு கொடுக்கும் ஊதியத்தை அடைவதில் தவறில்லை. சேவை செய்யும் தூய நோக்குடன் மட்டுமே வேட்பாளர்களாக நிற்க வேண்டும்.
மக்களுக்கு உண்மையிலேயே சேவை மனப்பான்மையுடன் தொண்டு செய்தவர்கள் பிரபல கட்சிகளை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றிவாகை சூடிய வரலாறெல் லாம் தமிழகத்தில் உண்டு. இதை முஸ்லிம் வேட்பாளர்கள் முன்மாதியாகக் கொள்ள வேண்டும்.
மற்ற வேட்பாளர்கள் கடைபிடிக்கும் சிலை களுக்கெல்லாம் மாலையிடுதல், கோவில், சர்ச், தர்கா, பள்ளி என ஏறி இறங்குவது, கண்டவர் களுக்கெல்லாம் கூழைக் கும்பிடு போடுதல், வணக்கம் செலுத்துவது, ஆரத்தி எடுக்க அனுமதிப்பது, பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது, இல்லாத சிறப்புகள் இருப்பதாக மற்றவர்கள் தங்களை புகழ்ந்து பேச வைப்பது, தேர்தல் வேலை செய்பவர்களுக்கு ஹராமான மது, சாராயம், கள்ளசாராயம் என வாங்கிக் கொடுத்து வேலை வாங்குவது, வாக்காளர் களுக்குப் பணம் கொடுப்பது இத்தியாதி, இத்தி யாதி செயல்களை ஒருபோதும் செய்ய முற்படக் கூடாது. மற்ற வேட்பாளர்களுக்கு 3:110 இறைக் கட்டளைப்படி ஓர் அழகிய முன்மாதிரியாகத் திகழ வேண்டும். மற்ற வேட்பாளர்கள் இவர்களைப் பார்த்து வெட்கித் தலை குனிய வேண்டும். இவர்களே உண்மையிலேயே தொண்டு செய்யும் உள்ளம் படைத்தவர்கள் என அவர்களின் உள் மனம் அவர்களை எச்சரிக்கும் நிலையில் முஸ்லிம் வேட்பாளர்கள் செயல்பட வேண்டும்.
தொண்டு செய்வது கொண்டு மட்டுமே, தொகுதி மக்களின் ஆகுமான தேவைகளை எவ்வித சுயலாபத்தையும் எதிர்பாராமல் செய்து கொடுப்பது கொண்டு மட்டுமே அந்த தொகுதி மக்களின் உள்ளங்களில் இடம் பிடிக்க வேண்டும். அந்த மக்கள் விரும்பியே இவரை முனைந்து வேட்பாளராக நிற்க வைக்கவும், வேலை செய்து வெற்றி பெறச் செய்யவும் கூடிய நிலையில் இவர்களின் சேவைகள் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் இஸ்லாமிய நெறி முறைகளை முறிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. இப்படிப் பட்ட தூய எண்ணத்தோடு முஸ்லிம் வேட்பாளர் கள் செயல்பட்டால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாத தொகுதி மக்களும், தங்கள் இன வேட்பாளரை விட இவரை விரும்பி தேர்ந் தெடுக்கும் நிலை கண்டிப்பாக உண்டாகவே செய்யும்.
முஸ்லிம் வேட்பாளர்கள் மற்ற கட்சிகளில் இணைந்து அந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படுவதின் மூலம் முஸ்லிம்களுக்கு சேவையாற்ற முடியும் என்பது அப்பட்டமான பொய்யே ஆகும். சுதந்திரம் கிடைத்த 1947-லிலிருந்து கடந்த 62 ஆண்டுகளாக முஸ்லிம்கள் பிற கட்சிகளால் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதும், முஸ்லிம்கள் ஏமாந்த சோனகிரிகளாக இருக்கிறார்கள் என்பதுமே உண்மையாகும். அதற்காக அக்கட்சிகளை குறை சொல்லவும் முடியாது. நமது நாட்டில் ஜனநாயக ஆட்சிமுறை இருப்பதால் சிறுபான்மையினருக்கு நல்லது செய்து, அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வெறுப்புக்கும், கோபத்திற்கும் ஆளாகி, அதன் மூலம் அவர்களின் வாக்குகளை இழப்பதற்கு எந்தக் கட்சியும் முன் வருமா? ஒரு போதும் முன் வராது. வாய் இனிக்கப் பேசி முஸ்லிம்களை ஏமாற்றவும், அவர்களின் ஒற்றுமையை குலைக் கவும் சதி செய்வார்களே அல்லாமல், ஒரு போதும் முஸ்லிம்களுக்கு நல்லது செய்து, அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் ஆதரவை இழக்கத் துணிய மாட்டார்கள். அதுவும் முஸ்லிம்களைப் பற்றிய வெறுப்புணர்வு நாட்டு மக்களிடையே இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதி என தொடர்ந்து அவதூறுகள் பரப்பி வளர்க்கப் பட்டு வருவதால், எந்தக் கட்சியும் முஸ்லிம் களுக்கு நல்லது செய்ய ஒருபோதும் துணியாது. எனவே “தன் கையே தனக்குதவி” என்ற அடிப் படையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து தனித்து நின்று தனி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதுவே முஸ்லிம்களின் நலனுக்கு நல்லது.
யாரெல்லாமோ, எந்த உருப்படியான கொள்கையோ, இலட்சியமோ இல்லாமல், வெறும் சீட்டுகளுக்காக மட்டும் கூட்டணி அமைக்கும் போது, ஒரே இறைவனையும், ஒரே தூதரையும், ஒரே குர்ஆனையும், தௌ;ளத் தெளிவான ஓரிறைக் கொள்கையையும், தௌ;ளத் தெளிவான வழிகாட்டலையும் பெற்றுள்ள, முஸ்லிம்கள் ஓரணியில் ஒன்றுபடுவதில் தயக்கம் ஏன்? அற்ப உலக ஆதாயமும், சுயநலமும் மட்டுமே ஒன்று சேரத் தடையாக இருக்கிறது. தங்களுடைய அற்ப உலக ஆதாயங்களையும், சுய நலப்; போக்கை யும் தலைவர்கள் தியாகம் செய்ய முன் வந்தால் முஸ்லிம் சமுதாய ஒற்றுமை எளிதாக ஏற்பட்டு விடும். மார்க்க விஷயத்தில், கொள்கைகளில் வேறுபட்டாலும் அவற்றின் உண்மை நிலையை நாளை மறுமையில் அவரவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அவற்றை காரணம் காட்டி சமுதாயத்தை இவ்வுலகில் பிளவு படுத்துவது கூடாது. அல்லாஹ்வே தனது தீர்ப்பளிக்கும் அதி காரத்தை மறுமைக்கென்று ஒத்தி வைத்;திருக்கும் நிலையில், அதைத் தங்கள் கையில் இவ்வுலகி லேயே எடுத்துக் கொள்வதைவிட கொடிய ஷிர்க், இணை வைக்கும் பாவச் செயல் பிறிதொன்று இல்லை என்பதை முஸ்லிம்களும், முஸ்லிம் அறி ஞர்களும் உணர்ந்து செயல்பட வேண்டும். 21:92, 23:52 இறைக் கட்டளைகள்படி சமுதாய ஒற்றுமை காக்க முன் வந்தால் சமுதாய ஒற்றுமைக்கு வழி பிறக்கும்.
அந்த அடிப்படையில் பிரிந்து கிடக்கும் முஸ்லிம் கட்சிகள், கழகங்கள் அனைத்தும் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டு செயல்பட்டால், குறைந்தது 5 அல்லது 4 தொகுதிகளை பிற கட்சிகளிடம் பேரம் பேசி பெற முடியும் என சென்ற இதழில் எழுதி இருந் தோம். முஸ்லிம் கட்சிகள், கழகங்கள் அப்படி யொரு தேர்தல் கூட்டணி அமைக்க முன் வர வில்லை. அதனால் 4,5 சீட்டுகள் கிடைப்பதற்குப் பதிலாக ஒரேயொரு சீடடு அதுவும் அவர்களின் சின்னத்திலேயே அவர்களின் கட்சியில் ஒருவராக போட்டியிட மட்டுமே வாய்ப்புக் கிட்டியது.
வெற்றி பெற்றாலும் அவரால் முஸ்லிம் சமுதாயத்திற்கு குறிப்பிடும் அளவுக்கு பலன் கிடைக்கப் போவதில்லை. சமுதாயப் பிரச்சினை களை துணிந்து மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் வாய்ப்பு இல்லை. அடக்கி மட்டுமே வாசிக்க முடியும். பிற கட்சிகள் மூலம் போட்டி யிட்டு தேர்ந்தெடுக்கப்படும் எந்த முஸ்லிமின் நிலையும் இதுதான். எனவே அவர்களுக்காக பெரும் பாடுபட்டு முஸ்லிம்கள் அவர்களை வெற்றி பெறச் செய்தாலும், முஸ்லிம் சமுதாயம் அத னால் பெரும் பலன் அடையப் போவதில்லை.
அதனால், பிற கட்சிகள் பின்னால் செல்லும் அவல நிலை மாற வேண்டும். “தன் கையே தனக்குதவி” என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தி பாடுபட்டு அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். முஸ்லிம்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் அனைத்தும் அப்படிப்பட்ட வேட்பாளர் களுக்கு விழுமானால் சில தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற முடியும். எக்காரணத்தைக் கொண்டும் முஸ்லிம்களின் வாக்குகள் சிதறக் கூடாது. ஒட்டுமொத்தமாக அந்த வேட்பாளர்களுக்கே விழ வேண்டும்.
ஆயினும் பிற கட்சிகள் முஸ்லிம்களின் இந்த ஒற்றுமையைக் குலைத்து சிதறச் செய்யவே பெரும்பாடு படுவார்கள். இதற்காக அவர்களைக் குறை சொல்ல முடியாது. அவர்களின் சமூக, கட்சி ஆதாயத்திற்காக அப்படிச் செயல்படு கிறார்கள். ஆனால் அவர்கள் கூறும் ஆசை வார்த் தைகளில் மயங்கி, கொடுக்கும் அற்பப் பதவி களுக்கு ஆசைப்பட்டு சமுதாயத்தைப் பிளவு படுத்த முற்படும் முஸ்லிம் பெயர் தாங்கிகளே குற்றவாளிகள். அவர்களுக்கு சமுதாய நலனை விட, அவர்களின் அற்ப உலக ஆதாயமே பெரிதாகத் தெரிகிறது. அப்படிப்பட்டவர்களாலேயே முஸ்லிம் சமுதாயம் அன்றிலிருந்து இன்று வரை சீரழிந்து வருகிறது. அவர்கள் சமுதாய தலைவர்களாக இருப்பதற்கே தகுதியற்றவர்கள். அப்படிப்பட்ட சுயநலப் பேர்வழிகளை தலைவர்களாக ஏற்று அவர்களுக்கு வெண் சாமரம் வீசும் போக்கை முஸ்லிம்கள் கைவிட வேண்டும். அவர்கள் பின்னால் செல்வதைத் தவிர்க்க வேண்டும். சுயநலத்திற்கும், அற்ப உலக ஆதாயத்திற்கும் முதலிடம் கொடுக்காமல், சமுதாய ஒற்றுமையையும், சமுதாய நலனையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்களை மட்டுமே வழிகாட்டிகளாக முஸ்லிம் சமுதாயம் ஏற்க வேண்டும்.
அப்போதே சமுதாயம் உருப்படும், மேம்படும். இவ்வுலக இன்னல்கள் மட்டுமாவது நீங்கும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் பிளவு படாமல் ஒன்றுபட்டு, பிற கட்சிகளில் நிற்பவர்களை ஓரங் கட்டி, முஸ்லிம் சமுதாயத்திற்கென்றே நிற்கும் முஸ்லிம்களுக்கே வாக்களிக்க வேண்டும். அவர்கள் சில சமயம் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், முஸ்லிம்கள் அனைவருடைய வாக்குகளும் சிந்தாமல் சிதறாமல் 100மூ விழுவதால், தேர்தல் கமிஷனிடம் கட்சி அங்கீகார மும், குறிப்பிட்ட சின்னமும் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்வரும் தேர்தலில் தவறாது தங்கள் வாக்குகளைச் செலுத்துவதோடு, நடக்க முடியாதவர்களையும் தூக்கிச் சென்று வாக்க ளிக்க உதவுமாறு கோரிக்கை வைக்கிறோம். முஸ்லிம்களின் 100% வாக்கும் பதிவாக வேண்டும். அதற்குரிய தீவிர முயற்சிகளில் முஸ்லிம்கள் முனைந்து ஈடுபட வேண்டும்.
கடந்த தேர்தலில் உயிரைக் கொடுத்துப் பாடுபட்டு, அம்மாவை ஆட்சியில் அமர்த்தப் போவதாக சூளுரைத்த ததஜ தலைமைப் புரோகிதர் இத்தேர்தலில் உயிரைக் கொடுத்து பாடுபட்டு முஸ்லிம்களுக்காக நிற்கும் முஸ்லிம் வேட்பாளர்களை டிபாஸிட் இழக்கச்செய்யப் போவதாக சூளுரைத்துள்ளார். சமுதாய நலனில் அக்கறை யுள்ள எந்த ஒரு முஸ்லிமும் இப்படி சூளுரைக்க முடியாது. அதற்காகக் கூறும் காரணமோ அதை விட நகைப்புக்குரியது. சுனாமி பணத்தை சுருட்டி விட்டார்களாம். இன்னும் பல மோசடிகளைச் செய்தார்களாம். கூறுவது யார்? உலக மகா பொய்யர் வாயிலிருந்து வெளி வருவது அனைத் தும் பொய்களே என்பதை 29.3.2009 தொண்டி விவாதத்திற்குப் பின்னர் அவர் பரப்பிவிட்ட பொய் களே போதிய சான்று. அது மட்டுமா? தமுமுக கழகத்திற்கென்று நன்கொடை கொடுப்பவர்கள் அதற்காகவே கொடுங்கள் என்று இவர் கைப்பட எழுதிய கடிதமே ஆதாரமாகவே இருக்கும் போது, அப்படிக் கூறி வசூலித்த நிதியிலிருந்து வாங்கிய கட்டிடங்களையும், உணர்வு வார இதழையும் சுருட்டிக் கொண்ட மகா யோக்கியர் இப்படிக் கூறுகிறார். ததஜ அமைப்புக்காக ஒருவர் கொடுத்த பெரும் மதிப் புள்ள சொத்தை, தனது பெயரிலேயே பதிவு செய்து கொண்ட இவர், நாளை ததஜவை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால், ததஜவுக்குரிய அந்தச் சொத்தை சுருட்ட மாட்டார் என்பது என்ன நிச்சயம்? அப்படிப்பட்ட யோக்கியர் இப்படிக் கூறுகிறார். இதே நபர் உணர்வு உரிமை 05 குரல் 06, அக். 20-26,2000 இதழின் 12-ம் பக் கம் கூறியுள்ளதைப் பாருங்கள்.
தமுமுக எனும் சமுதாயப் பேரியக்கம் இன்று அவசியத்திலும் அவசியம் என்பதை உங்களை விட நான் அதிகமாகவே நம்புகிறேன். இந்தக் கழகம் சிதறுண்டுவிட்டால் மீண்டும் இந்தச் சமுதாயத்தை ஒன்று திரட்டுவதற்கு எத்தனையோ ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் இக்கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நான் விலகுவதாக இல்லை.
தமுமுகவின் இன்றைய தலைமை நிர்வாகிகள் மீது நான் அதிருப்தியடைந்து ஒதுங்குவதாகவும் யாரும் நினைத்து விட வேண்டாம். இன்று இருக்கின்ற தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் உறுப்பினராக நான் இருப்பதே இதற்குச் சான்று.
மறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத் தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி மோகத்தையும், பணம் திரட்டும் குறிக் கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியைச் செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன்.
ஆனால் உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காகத் துவக்கப்பட்ட தமுமுகவின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காணவில்லை.
தமுமுகவின் தலைமை நிர்வாகிகளில் எவருக்கும் இப்பொறுப்பைச் செய்வதற்காக மாத ஊதியம் இல்லை.
கூட்டங்களில் பேசச் சென்றால் அதற்காகக் கட்டணம் கேட்பதில்லை.
எந்த நேரத்தில் கதவைத் தட்டினாலும் சொந்த வேலையைப் புறந்தள்ளிவிட்டு பிரச்சினைகளைத் தீர்க்கும் தியாக மனப் பான்மை.
எந்தப் பிரச்சனையை யாருக்கு முடித்துக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து எந்தப் பிரதி பலனையும் எதிர்பாராத தன்மை.
எத்தகைய மிரட்டலுக்கும் அடக்கு முறை களுக்கும் அஞ்சாத துணிவு.
கலவரத்தீ மூண்ட நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்துச் சென்று களப்பணியாற்றும் பாங்கு.
தங்களை முன்னிறுத்தாமல் கழகத்தை முன்னிறுத்தும் அடக்கம்.
எந்தவொரு பிரச்சனை குறித்தும் கலந்து ஆலோசித்து அல்லாஹ்வின் திருப்தியையே குறிக்கோளாகக் கொண்டு முடிவெடுத்தல்.
சிறை செல்லும் நிலை ஏற்பட்டால் தங்களை முதலில் நிறுத்திக் கொள்ளக் கூடிய பொறுப்புணர்வு.
உணர்வுகளைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்காமல் சமுதாயத்தால் தாங்கிக் கொள்ளக் கூடிய முடிவுகளை மேற்கொள்ளுதல்.
இப்படிச் சரியான தலைமைக்கு உரிய எல்லா பண்புகளையும் மாநில தலைமை நிர்வாகிகளிடம் நான் காண்கிறேன். தன்னலமற்ற இந்தத் தலைவர்களை வழங்கியதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.
இதன் பிறகும் வேறு காரணங்களை யாரேனும் கற்பித்தால் மறுமை நாளில் அவர் களுக்கு எதிராக நான் அல்லாஹ்விடம் முறையி டுவேன். உணர்வு அக்.20-262000 பக்கம் 12.
இப்போது, அன்று பீ.ஜை. சொன்னதை ஏற்பதா? அல்லது இன்று அவர் சொல்வதை ஏற்பதா? அதுவும் தமுமுகவின் மாநில அமைப் பாளர் மற்றும் அனைத்துப் பொறுப்புளிலிருந்தும் விலகும்போது, “மனம் திறந்த மடல்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஆக்கத்திலுள்ள வரிகள் இவை. தமுமுக தலைவர்களைப் பற்றி யாரும் குறை கூறினால் நாளை மறுமையில் அல்லாஹ் விடம் முறையிடுவதாகவும் கூறியுள்ளார். அப்படியானால் நாளை மறுமையில் இவரைப் பற்றி இவரே அல்லாஹ்விடம் முறையிடப் போகிறாரா?
ஆம்! பீ.ஜை. கூறும் அனைத்திற்கும் ஆமாம் சாமி போட்டால், அளவுக்கு மீறிய மிதமிஞ்சிய தங்களிடமில்லாத சிறப்புகள் நிறைந்த வஞ்சகப் புகழுரைகள் எல்லாம் கிடைக்கும். அவரது வழிகெட்ட கருத்துக்களுக்கு மறுப்புத் தெரிவித்தால், மறுப்புத் தெரிவிப்பவர்களுக்கு எதிராக அவர் களிடமில்லாத இழிகுணங்ளும், ஒழுக்கக் கேடுகளும் இருப்பதாக ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்களும், அவதூறுகளும் அரங்கேறும். இதுவே பீ.ஜையின் இரண்டு கோர முகங்கள்.
குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்பது போல் பீ.ஜையின் பேச்சுக்களையும் கணக்கில் கொள்ளவே முடியாது; கூடாது. “இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று உலகம் முழுவதும்; உலா வரும் ஊனுயைப் பார்ப்பவர் கள், இவரது முன்னுக்குப் பின் முரணான பேச்சுக்களையும், மரத்துக்கு மரம் தாவும் குரங்குப் புத்தியையும், இதுவரை அடித்துள்ள அந்தர் பல்டிகளையும் தெரிந்து கொள்ள முடியும். இவரைவிட மானங்கெட்ட ஒருவர் இருக்க முடியாது என்பதும் தெரிய வரும். அவரது அறிவுரைகளை இறைவாக்காக எடுத்து நடப்பவர்கள் இவ்வுலகிலும் கேட்டை அனுபவிப் பார்கள். நாளை மறுமையிலும் நரகையே சென்ற டைவார்கள் என்பதை 7:3, 33:21,36,66,67,68 இறை வக்குகளை சுயமாக நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் மறுக்க முடியாது.
இதுவரை நூற்றுக் கணக்கானவர் மீது அப்பட் டமான பொய்களையும், அவதூறுகளையும், அவரும், அவரது கைத்தடிகள், பக்தர்கள் மூலமும் உலகம் முழுவதும் பரப்பி இருக்கிறாரே, அவற்றில் ஒன்றையாவது உரிய ஆதாரங்களை எடுத்துக் காட்டி முறைப்படி நிரூபித்திருக்கிறாரா? இல்லையே! அவர் ஜமுக்காளத்தில் வடித் தெடுத்த பொய்யர், அயோக்கியர் எனும் போது முஸ்லிம் வேட்பாளர்களைப் பற்றி அவர் சொல்லுவதை எப்படி ஏற்பது?
ஒரு வாதத்திற்கு அவரது இந்தப் பொய்க் கூற்றை ஏற்பதாக இருந்தாலும், அவரது நடத்தை எப்படி இருக்க வேண்டும்? போட்டியிடும் எந்த வேட்பாளரையும் ஆதரித்து பிரசாரம் செய்யக் கூடாது. இவர் பிரசாரம் செய்ய களம் இறங்கும் வேட்பாளர்கள் அனைவரும், இவர் முஸ்லிம் வேட்பாளர்கள் பற்றி கூறும் குறைகளை விட்டும் தூய்மையாளர்களா? குறைகளைப் பட்டியலிட்டால் அனைத்திலும் முஸ்லிம் வேட்பாளர்களைவிட பல படிகள் மேலே அல்லவா அவர்கள் இருப்பார்கள். அவர் களில் ஒருவரையாவது முஸ்லிம் வேட்பாளர் களைவிட நல்லவர்கள் என பீ.ஜை.யால் நிலை நாட்ட முடியுமா? பின்னர் எந்த முகத்தோடு தேர் தல் பிரசார களத்தில் இறங்கி முஸ்லிம் சமுதாய முஸ்லிம் வேட்பாளர்களைத் தோற்கடிக்கப் போகிறார்? விளக்க முடியுமா? ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும் அல்லாஹ்வையும், மறுமையையும், கேள்வி கணக்கையும் நம்புகிறவர்கள். அவர்கள் வாக்ளித்தபடி அவர்கள் மக்களுக்கு தொண்டு செய்யாமல், மக்கள் பணத்தை சுருட்டினால், இங்கு தப்பினாலும் அங்கு தப்ப முடியுமா? அவர் களை அல்லாஹ்வின் முன்னால் நிறுத்தி குற்றப்படுத்தி நட்ட ஈடாக அவர்களின் தொழுகை, நோன்பு, ஜகாத், நற்செயல்களில் ஈடு வாங்கிக் கொள்ள முடியுமே. அதற்கு மாறாக பீ.ஜை. முஸ்லிம் வேட்பாளர்களை தோற்கடிக்க களத்தில் இறங்கி பிரசாரம் செய்து மாற்றாரை வெற்றி பெறச் செய்தால், அவர்கள் பதவியில் செய்யும் அட்டூழியங்களுக்கு நாளை மறுமையில் நட்ட ஈடு பெற முடியுமா? வழி இருக்கிறதா? இல்லையே! அவர்களது சுமையின் ஒரு பங்கை இவரல்லவா சுமக்க வேண்டும்.
பின் எப்படி முஸ்லிம் சமுதாயத்திற்காக வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம்களை கடும் பிரசாரம் செய்து தோற்கடிப்பதாக பொதுக் குழுவில் தீர்மானம் போட்டிருக்கிறார்கள். பீ.ஜை.யின் அற்ப உலக ஆதாய, சுயநல கோர முகம் தெரிகிறதா? இல்லையா?
ஆக, ததஜ தலைமைப் புரோகிதர் பீ.ஜை. யின் இப்படிப்பட்ட உளறல்களை குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்ற அடிப்படையில் தூக்கி குப்பைத் தொட்டிகளில் எறிந்துவிட்டு, பீ.ஜை.யின் கைத்தடிகளும், பக்தர்களும் முஸ்லிம் சமுதாயத்தின் நலனையே குறிக் கோளாகக் கொண்டு (பீ,ஜையின் நலனை அல்ல) 62 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத் தில் முதல் முதலாக முஸ்லிம் சமுதாயத் திற்கென்றே வேட்பாளர்களாக நிற்கும் முஸ்லிம் களை முழுமையாக ஆதரித்து தங்களின் பொன்னான வாக்குகளைச் செலுத்துவதோடு, முஸ்லிம்கள் அனைவரும் ஒருவர் கூட விடுபடா மல் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க முழு மூச்சாகப் பாடுபடுவதே அவர்களுக்கு அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுத் தரும். முஸ்லிம் சமுதாயத்திற்கு நலன் ஏற்பட்டு இழந்த உரிமைகளை மீட்கவும், இருக்கும் உரிமைகளை காக்கவும் வழி ஏற்படும் என்பதை உணர்வில் கொள்வார்களாக. பீ.ஜை.யின் சொந்த நலனை விட முஸ்லிம் சமுதாய நலன் கோடி கோடி மடங்கு மேலானது என்பதை அவரது ஆதர வாளர்கள் உணர்வார்களாக.
எனவே முஸ்லிம் சமுதாய மக்களே உங்களது மார்க்கக் கொள்கை கோட்பாடுகளை அல்லாஹ்வின் மறுமைத் தீர்;ப்புக்கென்று ஒத்தி வைத்துவிட்டு, இவ்வுலகில் மட்டிலுமாவது ஏற்றம் பெற, முஸ்லிம்களின் உரிமைகள் காக்கப்பட சிந்தாமல் சிதறாமல் முஸ்லிம் வாக்குகள் அனைத் தும் முஸ்லிம் சமுதாயத்திற் கென்றே நிற்கும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே கிடைக்க முழு மூச்சாகப் பாடுபடுங்கள். முஸ்லிம்கள் ஒன்று பட்டால் அல்லாஹ் வெற்றியைத் தருவான்.
- அபூ அப்தில்லாஹ்
- அந்நஜாத் இதழிலிருந்து வாசகர்: இக்பால்
Sunday, May 10, 2009
இமயம் தொலைக்காட்சியில் வராத நேர்காணல்!
பதில் : எங்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தமிழகஅரசு 3.5% இட ஒதுக்கீடு கொடுத்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ததஜ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கும் என்று வாக்குறுதி கொடுத்தோம். அதை தற்போது நிறைவேற்றுகிறோம்.
கேள்வி: 3.5% இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்குச் சரியானபடி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சொன்னீர்களே?
பதில்: உண்மைதான்! அதைதேர்தலுக்குப் பிறகு சரிசெய்வதாக எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றபிறகே எங்கள் ஆதரவை வழங்குகிறோம்!
கேள்வி: ஆட்சியிலிருக்கும்போதே அதைச் சரிசெய்ய ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வரலாமே! ஏன் நீங்கள் வலியுறுத்தவில்லை?
பதில்: தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபிறகு அரசாங்கம் எவ்விதச் சலுகையோ அல்லது அதற்கான உத்தரவோ போடமுடியாது.
*****
கேள்வி: சென்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்தீர்கள். இந்தத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கிறீர்கள்?
பதில் : சென்ற தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்று முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வ்ய் செய்வதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டியின் ஆயுளை நீட்டித்து உத்தரவிட்டதால் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக எங்கள் ஆதரவை அதிமுகவுக்கு வழங்கினோம்!
கேள்வி: தேர்தல்விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபிறகு அரசாங்கம் எவ்விதச்சலுகையோ அல்லது அதற்கான உத்தரவோ போடமுடியாது என்று சொன்னீர்களே?
பதில்: தேர்தல்தேதி அறிவித்தாலும் முன்தேதியிட்டு உத்தரவிட்டதால் அது தேர்தல் விதிமுறையை மீறியதாகாது!
கேள்வி: தற்போதும் முன்தேதியிட்டு உத்தரவிட்டிருக்கலாமே?
பதில் : ஹி...ஹி....
*******
கேள்வி: நீங்கள் எதற்காக தமுமுகவிலிருந்து பிரிந்தீர்கள்?
பதில் : ஜெனீவாவில் ஜவாஹிருல்லாஹ் என்பவரை பேசஅழைக்கப்பட்ட பிறகும், எங்களுடனிருக்கும் பத்துலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களின் கூட்டத்தைப் பார்த்தபிறகும் தமுமுகவிலுள்ள சிலருக்கு பதவியாசை வந்து தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்ற அடிப்படைக் கொள்கையிலிருந்து விலகி அரசியல்வாதிகளுடன் சமரசம் செய்யத் தொடங்கினார்கள். இதனால் தவ்ஹீதுப் பிரச்சாரம் செய்யமுடியவில்லை என்பதால்தான் விலகினோம்!
கேள்வி: ஜெனீவாவிற்குத் தமுமுகவின் பிரதிநிதியாகத்தானே சென்றார்?
பதில் : ஆமாம்!
கேள்வி: பேராசிரியர், பேச்சாளர் மற்றும் தமுமுகவின் முக்கியத்தலைவர் என்பதால் தமுமுக சார்பில் சென்றுள்ளார். இதில் பதவியாசை இல்லையே?
பதில்: ஹி..ஹி...(மனதிற்குள் "ஏன் என்னை அனுப்பியிருக்கலாம்ல?")
கேள்வி: 10 லட்சத்திற்கும் அதிமான முஸ்லிம்கள் உங்களுடன் உள்ளதாகச் சொல்கிறீகள்.முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தபோது ஒருலட்சம் என்று சொன்னீர்களாமே?
பதில்: முதல்வரிடம் உண்மையத்தானே சொல்ல முடியும். உளவுத்துறையும் எத்தனைபேர் எங்கள் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள் என்று தகவல் கொடுத்து விட்டதாக எங்களுக்கும் ரகசியத் தகவல் கிடைத்ததால் பத்து லட்சம் என்று சொல்ல முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
கேள்வி: அப்படியென்றால், கூட்டத்தைப் பார்த்து தேர்தலில் போட்டியிட்டுப் பதவி பெறும் ஆசை வந்ததாகச் சொல்வது தவறுதானே?
பதில் : ஹி...ஹி....
கேள்வி: தேர்தலில் போட்டியிட்டு அரசியல்வாதிகளிடம் கொள்கையை அடகு வைக்க மாட்டோம் என்று சொல்லியே தமுமுகவிலிருந்து பிரிந்து வந்ததாகச் சொன்னீர்கள். நீங்களும்கூட தற்போது அரசியல்வாதிகளிடம் தஞ்சமடைந்துள்ளீர்களே?
பதில் : ததஜ பைலாவில் கொள்கைகளில் நான்காவதாக "சூழ்நிலைக்கேற்ப எந்தக்கட்சிக்கு ஆதரவளிப்பது என்று கருத்து சொல்வோம்" என்று உள்ளது!
கேள்வி: தவ்ஹீது பிரச்சாரம் செய்யபோவதாகச் சொல்லிவிட்டு அரசியல் பிரச்சாரம் செய்வது நியாயமா?
பதில் : ஹி....ஹி....
கேள்வி:சென்றதேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவகாக கருத்து சொன்னீர்கள், அதிமுக தோற்றது! தற்போது திமுகவுக்கு ஆதரவாகக் கருத்து சொல்லி இருக்கிறீர்கள்! திமுக தோற்குமா?
பதில் : வெற்றி/தோல்வியைக் கொடுப்பவன் அல்லாஹ்வே என்பதில் தவ்ஹீதுவாதிகள் உறுதியாக உள்ளோம்.
கேள்வி: மமகவை தோற்கடித்தே தீருவோம் என்று சபதம் எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறதே?
பதில் :ஆமாம்! மமக ஏன் தோற்கடிக்கப்படவேண்டும் என்று சென்னை மண்ணாடியில் விளக்கமாகப் பேசியுள்ளேன்.சிடி எங்கள் தலைமையகத்தில் கிடைக்கும். ப்ராட்பேண்ட் இருந்தால் www.onlinepj.com இலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்!எங்கள் உயிரைக் கொடுத்தாவது மமகவை தோற்கடித்தே தீருவோம்!
கேள்வி : வெற்றி/தோல்வியைக் கொடுப்பவன் அல்லாஹ்வே என்பதில் தவ்ஹீதுவாதிகள் உறுதியாக இல்லையோ?
பதில் : ஹி..ஹி....
*******
நேயர்களே! நமது நிகழ்ச்சிக்கு வந்து அதிகமாக "ஹி...ஹி..." என்று பதில் கொடுத்ததால் பேட்டியை மேற்கொண்டு தொடர முடியாது. நமது சிறப்புச் செய்தியாளர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், பேட்டியாளரின் எண்ணஓட்டத்தின்படியும் கீழ்கண்ட முடிவுக்கு வந்துள்ளோம்.
* பேரா.ஜவாஹிருல்லாஹ் ஜெனீவாவில் பேசுவற்கு அழைக்கப்பட்டதால் ததஜ தலைவர் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.
* பத்து லட்சம் பேர் கூடினார்கள் என்பது உண்மையல்ல.
* ததஜவின் பேச்சை தமிழக முஸ்லிம்கள் கேட்டிருந்தால் சென்றதேர்தலில் அதிமுக வென்றிருக்கும்!
* இந்த தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் தோற்றால் அதற்கு ஈழப்பிரச்சினையில் அதன் நிலைப்பாடே காரணம். நிச்சயமாக ததஜ அல்ல!
* மமக தோற்றால் அதற்கு 100% ததஜவின் பேச்சை தமிழக முஸ்லிம்கள் கேட்டதே காரணமாகும். ஆகவே! இனி தமிழக முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற ஒரே அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தே என்பதால் வக்ப்வாரிய சேர்மன் பதவியையும், சவூதிக்கான இந்தியத் தூதர் பதவியையும்.....................
(நேயர்களே! எமது அடுத்த நிகழ்ச்சி "போங்கடா நீங்களும் உங்க அரசியலும்" என்ற திரைப்படம் என்ற அறிவிப்பு குறுக்கிட்டதால் இறுதிவரியைச்சொல்ல முடியவில்லை ;-)
நன்றி: அதிரை அபூசாலிஹா
நச் கேள்விகள் தொடரும்...
Saturday, May 09, 2009
IDMK யின் தி.மு.க ஆதரவு பிரசுரம்
பக்கம் - 02
திரு. மேலை நாசருடன் தி.மு.க ஆதரவு பிரச்சாரத்தில்
திரு. தயாநிதி மாறன் அவர்களோடு ஆலோசனையில் திரு. மேலை நாசர்
தி.மு.க அங்கம் வகிக்கும் கூட்டணிக்காக தமிழ்நாடு சுன்னத் ஜமாத் ஐக
பேரவை திரு. மேலை நாசர் அவர்களும், இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L(9894262100)திரு. முகவைத்தமிழன் (9047507665) ஆகியோர் தமிழகத்தின் முக்கிய தொகுதிக் எங்கும் பிரச்சாரததில் ஈடுபட்டுள்ளனர்.
திரு. மேலை நாசர் அவர்களோடு திரு. அக்பர் ராஜா, திரு. முகவைத்தமிழன் ஆகியோர்.
நேற்றைய தினம் தேனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திரு. ஜே.எம். ஆரூன் அவர்களுக்காக 3 நாள் பிரச்சாரத்தை முடித்து கொண்டு இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஷ் அவர்களுக்கு பிரச்சாரம் செய்வதற்காக வந்திருந்த திரு. மேலை நாசர் அவர்களும், திரு. அக்பர் ராஜா, திரு. முகவைத்தமிழன் ஆகியோர் வேட்பாளர் திரு. ரித்தீஷ் அவர்களை அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெறிவித்தனர்.
இராமநாதபுரம் தொகுதியில் வேட்பாளர் திரு. ரித்தீஷ் அவர்களோடு பிரச்சாரத்தின்போது.
திரு. இரகுமான்கான் அவர்களுடனான சந்திப்பின்போது, திரு. முகவைத்தமிழன், திரு. மேலை நாசர், திரு. அக்பர் ராஜா ஆகியோர்.
அதன் பின்னர் மாலையில் முன்னால் அமைச்சரும் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க தேர்தல் கண்காணிப்பாளருமான திரு. ரகுமான்கான் அவர்களை சந்தித்து பேசினர். திரு. ரகுமான்கான் அவர்களின் வேண்டுதலுக்கு இனங்க போகளுர் ஒன்றியம், பரமக்குடி, சாயல்குடி, மேலக்கொடுமளுர், நரிப்பையூர், போன்ற இடங்களில் ஜமாத்துகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது.பிரச்சாரத்தின்போது . அக்பர் ராஜா, திரு. முகவைத்தமிழன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதன்பின்னர் சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளரும் விடுதலைச்சிறுத்தைகள் தலைவருமான திரு. திருமாவளவன் அவர்களின் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்காக திரு. மேலை நாசர் அவர்களின் சிறிய பிரச்சார உரை ஒன்று பதிவு செய்யப்பட்டது. திரு. திருமாவளவன் அவர்களின் அழைப்பிற்கினங்க சிதம்பரம் தொகுதியில் இறுதி கட்ட பிரச்சாரத்திற்கு வருவதாக தெறிவிக்கப்பட்டது.
Friday, May 08, 2009
மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) நிகழ்ச்சியில்
பரமக்குடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) தமிழ்நாடு தலைவர் டாக்டர். சுரேஸ் கண்ணன் M.A., B.L., M.Ed., HDCM., Phd.மாநில பொருளாலர் திருமதி. ஆனந்தி M.L., M.L.S., D.L.A.L., Phd., பொதுச்செயலாளர் திரு.ஜெயபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரபல பத்திரிகையாளர் திரு. திலிப்குமார் அவர்கள்
மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) கிழக்கு மாவட்ட அமைப்பாளர் வளுதூர். திரு. பாஸ்க்கரன், மனித உரிமைகள் கழகத்தின் (Human Rights Organization International) இராமநாதபுரம் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு. அக்பர் ராஜா B.A.B.L பிரபல பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமைகள் இதழ் நிருபர் பரமக்குடி திரு. திலிப் குமார் , வளுதூர் திரு. மூர்த்தி, திரு. கோபால், திரு. சவுக்கத், முதுவை டிம்பர் உரிமையாளர் மற்றும் முன்னால் தே.மு.தி.க பிரமுகர் திரு. ராஜா முகம்மது, இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முதுவை டிம்பர் திரு. ராஜா முகம்மது மற்றும் திரு. பாஸ்கரன்
திரு. அக்பர் ராஜா, திரு. ராஜா முகம்மது, திரு. முகவைத்தமிழன், திரு. கிருஸ்னன், திரு.வீரக்குமார்
Thursday, May 07, 2009
சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம்
மனித உடலின் மின்காந்தத் திறனை
சீர்ப்படுத்தும் சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவம்
அஸ்ஸலாமு அலைக்கும்.
தகவல் தொழில் நுட்பத் துறையில் பல மணி நேரம் உட்கார்ந்தபடியே கணினியில் பணி செய்யும் இளைஞர் களுக்கு உடலில் உள்ள மூட்டுகளில் வரும் வலியால் அதிகம் பாதிக்கப்படுகின் றனர். இந்த வலியை போக்குவதற்கு சைனீஸ் அக்குபஞ்சர் மருத்துவப்படி உடலில் மின் காந்த திறனை சீர்ப்படுத்துவது குறித்து சைனீஸ் அக்கு பஞ்சர் மருத்துவ நிபுணர் டாக்டர் மு.சாதிக் தெளிவாக எடுத்துக் கூறுகிறார்.
இன்றைய நவீன உலகத் தில் எந்த ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு தகவல் தொடர்பு தொழில் நுட்ப வளர்ச்சியால், தொடர்பு கொண்டு கல்வி, மருத்துவம், வர்த்தகம், தொழில் நுட்பப் பரிமாற்றங் கள் உடனுக்குடன் பெற்று பல்வேறு துறைகளில் அதிகளவில் வளர்ச்சி பெற்று வருகிறோம்.
குறிப்பாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் தகவல் தொழில் நுட்ப துறையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. படித்த இளைஞர்கள் உட னுக்குடன் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
தகவல் தொழில் நுட்பத் துறையில் மிக முக்கிய பங்கு வகிப்பது கணினி, இணைய தளத்தின்மூலம் தகவல் பரி மாற்றங்கள் உலகம் முழுவதும் தொடர்பு கொண்டு பெறுவதுதான். இப்பணியில் இரவு - பகலாக பல மணி நேரங்கள் ஆண் - பெண் இருபாலரும் அமர்ந்த இடத்திலே பணி செய்யும் நிலையில் உள்ளனர்.
இதன் மூலம் நல்ல வருமானம் கிடைத்தாலும், சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வதால் இளம் வயதிலேயே உடலில் எங்கெல்லாம் மூட்டுகள் உள்ளதோ அங்கெல்லாம் வலி ஏற்பட்டு தொடர்ந்து பணி செய்ய முடியாத நிலை உருவாகிறது.
இம்மூட்டு வலி நோய்க்கு ஆங்கிலம் மருத்துவம் இருந்தாலும், எளிமையான இயற்கை மருத்துவமான சைனீஸ் அக்குபஞ்சர் சிகிற்சை முறையில் விரைவில் மூட்டு வலியைப் போக்குவதுடன், மேற்கொண்டு வராமல் தடுப்பதற்கான உடலில் மெலிந்த ஊசிகளை செலுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் உடலில் மின்காந்த சக்தியினை சீர்படுத்தி நோய் அகற்றப் படுவதால் நிரந்தரத் தீர்வு ஏற்படுகிறது.
இம்மருத்துவத்தில் முழு மையான நாடி பரிசோதனை, சைனீஸ் மருந்துகள், ஆஸ் டியோ அக்குபஞ்சர், எளிய முறையில் உடற்பயிற்சி போன்றவைகள் மேற்கொள்ளப்படு வதன் மூலம் கணினித் துறையில் பணி செய்பவர் களுக்கு வரும் மூட்டு வலிகள் நிரந்தரமாகப் போக்கப்படு கிறது.
மற்றும் உடலின் நோய் எதிர்ப்புசக்தி குறையும்போது பலவித நோய்களும் நமது உடலை எளிதில் தாக்கி பாதிப்ப்பிற்குள்ளாக்க்குகிறது. இந்த நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் சமநிலையில் வைத்திருக்கும்போது எந்த அலர்ஜியோ, எளிதில் வரும் சளி, இருமல் போன்ற நோயோ வர வாய்ப்பேயில்லை. ஆரோக்கியமாக வாழலாம்.
ஸோரியாஸிஸ், எயிட்ஸ், ஆஸ்துமா, கேன்ஸர், பெண்களுக்கான கற்பப்பை பிரச்சினைகள் உட்பட, சிறுநீரகம் பாதித்தவர்கள் போன்ற அனைத்து நோய்களையும் மிக அற்புதமாகக் குணப்படுத்தலாம் இன்ஷா அல்லாஹ். கற்பப்பையை அகற்ற அனுமதிக்காதீர்கள், அதனால் உங்களது உடலுக்கு மேலும் பற்பல தொந்தரவுகளைத் (தூக்கமின்மை, கை கால் வலி, இடுப்பு வலி etc.) தந்து கொண்டே இருக்கும் பிற்காலத்தில். ஆங்கில மருத்துவத்தில் அதற்கு தீர்வு இல்லாததால், கற்பப்பையை அகற்றக் கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறு. அதை முழுமையாகக் குணப்படுத்தலாம் அக்குபஞ்சர் மருத்துவம் மூலம் இன்ஷா அல்லாஹ்.
மேற்கொண்டு விபரத்திற்கு:
மருத்துவர் சாதிக் - 09443389935 - நாகர்கோவில்.
Tuesday, May 05, 2009
அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?
அந்த 40ஆயிரம் வாக்கு யாருக்கு...?
என்பதோடு மட்டுமில்லாமல் முஸ்லிகளிடையே குழப்பதை ஏற்படுத்தும் முகமாக அல் அமீன் பள்ளி சம்மந்தமாக பொய்களை மக்கள் மத்தியில் பரப்புரைத்து வருவதாகவும் அரசியல் வேண்டாம் எனக்கூறிவிட்டு அரசியல் ஆதாயத்திற்காக இறையில்லத்தையே விட்டுக்கொடுக்கச் சொல்லும் இவர்களை எப்படி "ஏகத்துவ வாதிகள்" என கூற முடியும்...?
இதிலிருந்தாவது இவர்களை சமுதாயம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் என்கிறார் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தஞ்சை மாவட்ட (தெற்கு) செயலாளர் AJ. ஜியாவூதீன் அவர்கள் !
அது அவருடைய கேள்வி மட்டுமன்று அதிராம்பட்டினம், அதை சுற்றியுள்ள முத்துப்பேட்டை,மல்லிப்பட்டினம்,மதுக்கூர்,புதுப்பட்டினம் உள்ளிட்ட அனைத்து ஊர் முஸ்லிம்களின் வினாவும் இதுதான்!
என்ன பதில் சொல்லப்போகிறது தவ்ஹீத் ஜமாஅத் தலைமை?
தமிழ் மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்:
இதற்கிடையே கடந்த டிசம்பர் மாதம் அதிரையில் ஒட்டப்பட்ட போஸ்டரும் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள்தான் ஒட்டினார்கள் என்ற செய்தியும் ஊர் சுற்றி வருகிறது. அது உன்மையா அல்லது வதந்தியா என்பதையும் அதன் தலைமை விளக்கவேண்டிய அவசியத்தில் உள்ளது.
//அல் அமீன் பள்ளி விஷயத்தில் ஒருதலைபட்சமாக செயல்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர் மணிவன்னனை ஆதரித்து இஸ்லாமிய சங்ககளின் சார்பில் அதிரைநகர் முழுவதும் நேற்று நள்ளிரவு மர்மஆசாமிகள் "வேண்டுகோள்" என்ற தலைப்பிலான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.

இதை பார்த்த அதிரை இளைஞர்கள் சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பை தொடர்புகொண்டு இதுவிஷயமாக கேட்டபொழுது இதுபற்றிதங்களிடம் யாரும் அனுமதி கேட்கவில்லை எனவும், எங்கள் பெயரை கலங்கபடுத்தும் நோக்கோடு செயல்பட்ட இவர்களை நாங்கள் வண்மையாக கண்டிக்கிறோம் என சம்சுல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு போஸ்ட்டர் ஒட்டியும் உள்ளனர். அல்அமீன் பள்ளி விஷயத்தில் விளையாடிய காவல்துறையின் கறுப்புஆடு மணிவன்னனை இடமாற்றம்செய்ய இஸ்லாமிய அமைப்புகள் பெரும் முயற்சி மேற்கொண்டு இடமாற்றம் செய்தது. இதை பொறுக்காத சில "தலைகள்" இதுபோன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.// நன்றி:அதிரைXpress
தமிழக முஸ்லிம் சமுதாயமே உங்கள் கருத்து என்ன...?
தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த இறைவிரோத செயலை ஆதரிக்கீர்களா...?
இறைவனை தொழ இறையில்லம் எழுப்புவது குற்றமா...?
தி மு கவை ஆதரிப்பதால் இறைவிரோத செயல்களில் ஈடுபடலாமா...?
கடைசி செய்தி:
தி மு க , காங்கிரஸ் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிகளுக்கு துரோகம் செய்ததைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் பள்ளி நிர்வாக குழுவினரை சந்த்தித்து தங்கள் கட்சிக்கு ஆதரவு தருமாறு கோரிவருகின்றனர்!
ஆனால், தங்களது முடிவை நாளை (06/05/09) அறிவிக்கிறார்கள்!!
சில இடங்கள் தவிர்த்து தி மு க கூட்டணியை PFIஆதரித்தாலும் அதிரையில் அல் அமீன் பள்ளியை மீட்டேடுக்கும் முயற்ச்சியில் முழுமையாக அற்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது!
மேலும் செய்திகளை அறிந்துக்கொள்ள....!
அதிரை POST
நோயில்லா உலகம் படைப்போம்
இன்று நம்மில் பல்வேறு நபர்கள் நோயினால் அவதிப்பட்டு, ஆங்கில மருந்துகளின் பின்விளைவுகளாலும் மற்றும் அதற்கு சிகிற்சை அளிக்க போதிய வருமானமில்லாது இறந்து போகும் நிலமையையும் நாள்தோறும் கண்டுவருகிறோம்.
இதற்கெல்லாம் விடைகொடுக்கும் விதமாக, எளிமையான எந்த பக்க விளைவுகளுமின்றி நாடி முறைப்படி நோயறிந்து அதற்கு தகுந்த முறையில் அக்குபஞ்சர் சிகிற்சை அளித்து பூரண குணப்படுத்தி வருகிறோம். நோயாளிக் கூறாமலேயே அவர்களது உடலில் உள்ள நோய்களை பட்டியலிட்டு கூற இயலும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிறப்புக் கருவியின்மூலம். பின் கண்டறியப்பட்ட நோய்களுக்குத் தகுந்த முறையில் சிகிற்சையும் அளிக்கிறோம்.
ஒருவரது உணவுப்பழக்கமும், உடல்பயிற்சியும், நல்ல தூக்கமும் நல்ல ஆரோக்கியத்திற்கு அடிப்படை. ஐவேளை தொழும்பொழுது மனதை ஒருமுகப்படுத்தி கட்டுபடுத்தவும் முடியும். சரியான வேளையில் தொழுகையை நடத்த கூறுவதுபோல், சரியான வேளையில் உணவையும் உட்கொள்ளவேண்டும். அப்போது நாம் சந்திக்கும் பற்பல நோய்களிலிருந்தும், விடுபடலாம் இன்ஷா அல்லாஹ். இது மிகவும் இன்றியமையாதது.
மேலும் அதிக விபரத்திற்கு அல்லது அக்குபஞ்சர் சிகிற்சைக்கு தொடர்பு கொள்ளவும் >
- மருத்துவர் சாதிக் > 09443389935
- "தாருல்ஸஃபா அக்குபஞ்சர் சிகிற்சை நிலையம்" > நாகர்கோவில்.
சிகிற்சையின் போது தகுந்த ஆலோசனைகளும் அளிக்கப்படும். அப்போது மீண்டும் நோய் வருவதிலிருந்து உங்களைப்பேணி பாதுகாத்துக் கொள்ளலாம். BP, Diabetics-ற்கு தொடர்ந்து மருந்து சாப்பிடத் தேவையில்லை. இம்மருத்துவம் செய்வதன்மூலம் முழுமையாக அந்த மாத்திரைகளை நிறுத்தி சிறந்த உடல்நலத்தோடு வாழலாம். BP மற்றும் Diabetics-ற்கு தொடர்ந்து மாத்திரை சாப்பிடுவதன்மூலம் இறுதியில் சிறுநீரகத்தை இழக்க நேரிடும் என்பதையும் மறவாதீர்கள்.
உங்களது இடத்தில் ஒருநாள் இலவச அக்குபஞ்சர் விழிப்புணர்வு முகாம் நடத்தவும் மேற்குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொண்டு தேதியைப் பெற்றுக்கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ். எல்லோரும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எங்களது ஆவல்; நோயற்ற உலகம் படைப்போம் இன்ஷா அல்லாஹ்.
குறிப்பு: அனாதைகளுக்கும், ஆதரவற்ற வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் ஏழைகளுக்கும் இலவசமாக சிகிற்சை அளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.
அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து மருத்துவர் சாதிக்.
Mobile: 09443389935.
திரு. இரகுமான்கான் அவர்களுடன் சந்திப்பு

இந்த தேர்தலில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் பரப்புரைகள் குறித்தும், மாவட்டம் முழுவதும் ஒன்றிய ரீதியாக இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி, அவற்றை தி.மு.க விற்கு ஆதரவாக திரப்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் திரு. இரகுமான் கான் அவர்கள் அறந்தாங்கி, திருவாடானை பகுதிகளில் பிரச்சாரத்தை சற்று கடுமையாக்க கோரினார், மற்றும் பிரச்சாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும், இந்திய தேசிய மக்கள் கட்சியின் தீவிர செயல்பாடுகள் குறித்து தி.மு.க தலைமையிடம் எடுத்து கூறுவதாகவும் கூறினார். I.D.M.K மாவட்ட தலைவர் வழக்கறிஞர். திரு. அக்பர் ராஜா B.A.B.L மற்றும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிறுவனர் திரு. முகவைத்தமிழன் ஆகியோருக்கு தனது பாராட்டுக்களையும் வாழத்துக்களையும் தெறிவித்து கொண்டார்.
Monday, May 04, 2009
உயர் கல்வி வழிகாட்டும் முகாம் - நாகர்கோவில்
Saturday, May 02, 2009
முகவையில் த.மு.மு.க தலைவர் ஜவாஹிருல்லா பிரசாரம்

கீழக்கரை: ராமநாதபுரம் தொகுதி மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லா கானை ஆதரித்து த.மு.மு.க., மாநில தலைவர் ஜவாஹிருல்லா கீழக் கரை முஸ்லிம் பஜாரில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்," குஜராத் கலவரத்துக்கு எதிர்ப்பு கூட தெரிவிக்காதவர் கருணாநிதி. தி.மு.க., தருவதாக இருந்த ஒரு சீட்டுக்கு ஆசை பட்டிருந்தால் தி.மு.க., வுக்கு நாங்கள் அடிமையாகிருப்போம்.

சென்னையில் தி.மு.க., வேட்பாளர்கள் ஜெயிப் பதே முஸ்லிம்கள் ஓட்டுகளால் தான்.அ.தி.மு.க., மக்களை ஏமாற்றும் கட்சி'என்றார். மேலும் அவர் ராமநாதபுரம் தொகுதியில் திருச்சுழி, காரியாபட்டி, பூலாங்கல், பெருநாழி, சாயல்குடி, ஒப்பிலான், மாரியூர், வாலிநோக்கம், சிக்கல், ஏர்வாடி பகுதியில் பிரசாரம் செய்தார். மாவட்ட பொறுப்பாளர் சல்மான், ஒன்றிய செயலாளர் வாவா ராவுத்தர், சம்சுதீன் சேட், மாவட்ட துணை தலைவர் ஹிமாயுன் கபீர், மாவட்ட தலைவர் சாதிக், தேர்தல் பொறுப் பாளர் சிராஜ் பங்கேற்றனர்.


