Friday, August 31, 2007

யார் போலி? யார் பொய்யர்?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் சகோதர சகோதரிகளே,

கடந்த சில காலமாக நமது உயிரினும் மேலான நபி முகம்மது (ஸல்) அவர்களை பொய்யரென்றும் போலியென்றும் அவதூறு கூறி இணையத்தில் கட்டுரைகள் எழுதி வருகின்றது ஒரு பொய்யர் கூட்டம்.

அவர்களின் கூற்றுக்களை பொய்யாக்கும் விதமும் அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களுக்கு தக்க பதிலடியாகவும் இஸ்லாமிய இணையப்பேரவையினர் தகுந்த விளக்கங்களுடன் பதில் கொடுத்து வருகின்றனர். அவற்றை நாம் அனைவரும் படித்து பயனடைய வேண்டும் என்பதற்காக இந்த பதிவு.

நன்றி
****************************************************


யார் பொய்யர்? (பாகம் - 1)

பொய்யர்கள் யார்? புளுகுவது யார்?

இவர்களின் கீழ்த்தரமான அவதூறுகளுக் கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை என்று முஸ்லீம்கள் இவர்களை அலட்சியம் செய்தனர். உண்மையில் அவதூறு ஒரு மனிதனை எடைப்போடும் கருவியல்ல என்பதையும் மக்கள் நன்கு அறிவர். மிகக் குறைந்தளவு அவதூறுக்கு உட்படுபவர் நல்லவர் என்றும் அதிகளவு அவதூறுக்கு பலியாபவர் கெட்ட மனிதர் என்றும் அறிவாளிகள் எவரும் மதிப்பிட மாட்டார்கள். புலி பதுங்குவது பயந்தல்ல பாய்வதற்கு என்பதை அறியாத இவர்கள், முஸ்லீம்கள் இவர்களின் பொய் புரட்டுகளைத் தள்ளுபடி செய்து கண்டுகொள்ளாமல் விட்டதின் விளைவாக, இவர்களின் பித்தலாட்டத் தனங்களுக்கு ஏதோ முஸ்லிம் அறிஞர்கள் பதிலளிக்க முடியாமல் திக்கித் திணறுவது போன்ற ஒரு பிரம்மையை உருவாக்க முயல்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் அதிகளவு அவதூறுகள் சுமத்தப்படுவது, ஏக இறைவனை மறுப்பவர்களை கோபமடையச் செய்யுமளவிற்கு அவர்களிடம் பெரும் சக்தி இருக்கிறது என்பதைத்தான் நிரூபிக்கிறது. ....மேலும் படிக்க....

யார் பொய்யர்? (பாகம் - 2)

இவர்கள் யாரைப் பொய்யன் என்று சொல்கிறார்கள்?

இன்றைய உலகில் கடவுளின் பெயரால் ஏய்ப்பவர்கள் அனைவரின் பின்னும் பேராசையும் பணவெறியுமே குடிகொண்டுள்ளது. முஹம்மது (ஸல்) அவர்கள் பொய்யர் என்றால், கடவுளின் பெயரால் அவர்கள் கற்பனை செய்து பொய் சொல்லினார் என்றால் அதற்கு நிச்சயம் ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். தனது 25 வயதில் வணிகராகவும் 40 வயதில் பெரும் செல்வந்தராகவும் இருந்த நபி (ஸல்) அவர்கள், இஸ்லாத்தை பிரச்சாரம் செய்த காரணத்தால் தன் செல்வங்கள் அனைத்தையும் இழக்கிறார்கள். தனது உயிருக்கு குறிவைக்கப்பட்டு மதினாவிற்கு வெறுங்கையோடு விரட்டப்படுகிறார்கள். இவ்வுலகில் எந்த மடையனாவது ஒரு பொய்யைச் சொல்லி தன் சொத்துக்கள் அனைத்தையும் இழக்க முன்வருவானா.? தனது உயிர் போகும் அளவிற்கு துன்புறுத்தப்படும் போதும் அப்பொய்யிலேயே அவன் நிலைத்திருப்பானா? உடுத்த ஆடையோடு ஊரைவிட்டும் விரட்டியபோதும் தன் பொய்யில் பிடிவாதமாக இருப்பானா? சற்று சிந்தியுங்கள். ...மேலும் படிக்க.......

இஸ்லாமிய இணையப் பேரவை

IIPONLINE.ORG


Saturday, August 25, 2007

பிஜேயின் கைதால் முஸ்லிம்கள் மகிழ்ச்சியா?

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்


அன்புள்ள நண்பர் சகோ.முஹம்மதுவுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..



இந்த வலைத்தளத்தில் வெளியான 'சென்ற இடமெல்லாம் செருப்பு' என்ற செய்திக்கு தாங்கள் எழுதிய விமரிசனம் கண்டேன். தங்களின் மேலான பார்வைக்கு கீழ்காணும் தகவல்களைத் தர விரும்புகிறேன்.

முதலாவதாக, ஒருவரைப் பற்றி அறிய வேண்டுமானால் அவரது நண்பரைப் பற்றி அறிவது நல்லது. அந்த அடிப்படையில் தாங்கள் மனம் வருந்தும் அளவிற்கு அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள திருவாளர் பிஜேயின் தற்கால உற்ற நண்பர் யார் தெரியுமா?

ரதி மீனா சொகுசு பஸ்ஸில், இஸ்லாத்தை கற்க வந்த நந்தினி என்ற பெண்ணோடு சல்லாபித்தபடி பிரயாணித்த சகா, திருவாளர் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் தான். இவரது வீர தீர பிரதாபங்களை சரச சல்லாபங்களைப் பற்றி அறிந்து கொள்ள ஆசைப்பட்டால் கடலூர் நிர்வாகிகளிடமோ ஒய்.கே.மேன்ஸன் (மண்ணடி) நிர்வாகிகளிடமோ கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

இப்ப மேட்டருக்கு வாங்க.

இந்த செய்தியில் (சென்ற இடமெல்லாம் செருப்பு) மூலமாக செய்தியாளர் சந்தோசப்படுவதாக தாங்கள் கருதினால் அது தவறாக கூட இருக்கலாம். ஒருவேளை அந்த செய்தியை வெளியிட்டவர், கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என கேள்விப்பட்டுள்ளோமே, ஆனால் கற்றவர் என பலராலும் நம்பப்படுகிற ஒருவர் ஒவ்வொரு நாட்டிற்கு செல்லும் பொழுதும் அங்குள்ள காவல் துறையினராலும் சுங்க குடியேற்ற அதிகாரிகளாலும் கைது செய்யப்படுவதும், விசாரிக்கப்படுவதும் பின்னர் உடனடியாக கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியேற்றப்படுவதும் தொடர்கதையாவதால் ஆதங்கத்தோடு கூட அந்த தலைப்பை இட்டிருக்கலாம்.

என்றாலும் சகோதரரே தாங்கள் எண்ணுவது போல் சந்தோஷப்படக்கூடியவர்களும் இல்லாமலில்லை.

ஏனெனில், அல்லாஹ்விற்காக ஒருவரை விரும்புவதும், அல்லாஹ்விற்காக ஒருவரை வெறுப்பதும் ஒரு உண்மை விசுவாசியின் பண்பு என அவர்கள் அறிந்துள்ளது தான் காரணம்.

இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஸகாத் விஷயத்தில் சமுதாயத்தை வழிகெடுக்க முனைந்தவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு முஸ்லீமும் சந்தோஷப்படவே செய்வான்.

அல்லாஹ் அருளிய வேதமான அல்குர்ஆனிற்கு தான்தோன்றித்தனமாக விளக்கம் எழுதியவர், அதிலே நபி ஸுலைமான் (அலை) அவர்களை கண்ணியக்குறைவாக எழுதியவர், அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு முஸ்லீமும் சந்தோஷப்படவே செய்வான்.

அகிலத்தின் அருட்கொடை, அண்ணல் எம் பெருமான் முஹம்மது ரஸுல் ஸல் அவர்களின் நேரடி கண்காணிப்பில் பயிற்சி பெற்ற அருமை நபித்தோழர் அம்ர் பின் அல் ஆஸ் (ரளி) அவர்களை, ஒருவர் கிரிமினல் என்று கேவலமாக விமர்சிப்பார் எனில் அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்படுவார் எனில் அதை குறித்து ஒரு உண்மை முஸ்லீம் சந்தோஷப்படவே செய்வான்.

அம்ர் பின் அல் ஆஸ் (ரளி) அவர்களை மட்டுமல்ல இன்னும் ஏராளமான நபித்தோழர்களையும் கண்ணியக்குறைவான வார்த்தைகளில் விமர்சிப்பார் எனில் அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்தியைக் கேட்டு ஒரு முஸ்லீம் சந்தோஷப்படாமல் இருக்க முடியுமா?

கஸ்டோடியன் ஆஃப் அபூஸானி (பாக்கரின் பாதுகாவலன்)கைது செய்யப்பட்டதை கேட்ட முஸ்லீம் சந்தோஷப்படாமல் என்ன செய்வார்?

பொய்யான காரணங்களைக் கூறி சமுதாயத்தை பிளவுபடுத்தி வரும் யூதர், பாப்பாத்தியின் கைக்கூலி, கருங்காலி ஒருவர் அவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் கைது செய்யப்படுவார் எனில் அதை குறித்து ஒரு உண்மை முஸ்லீம் சந்தோஷப்படவே செய்வான்.

அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில் அறைக்குள் ஒன்றும், அம்பலத்தில் ஒன்றுமாக உலவி (உளறி?!!!) வரும் ஒருவர் முஸ்லீமாக இருந்தாலும், முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் அவர் கைது செய்யப்பட்டால் எந்த ஒரு முஸ்லீமும் சந்தோஷப்படவே செய்வான்.

சமுதாயத்தின் பொருளாதாரத்தை சுனாமியின் பெயரால் வசூலித்து தனது சொந்த கட்சியை வளப்படுத்த, கட்சியின் குண்டர்களுக்கு சீருடைக்காக செலவழிப்பார் எனில், அவர் கைது செய்யப்பட்டார் எனில் அதைக் குறித்து எந்த ஒரு முஸ்லிமும் சந்தோஷப்படவே செய்வான்.

இப்படி அவரது கைது குறித்து முஸ்லிம்கள் சந்தோஷப்பட ஏராளமான காரணங்களும் இருக்கத்தான் செய்கிறது.

எனவே அதற்காக தாங்கள் வருத்தப்படாமல், தயவு செய்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

வல்ல அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்.

வஸ்ஸலாம்
அன்புடன் - அபூதாஹிர்

Friday, August 24, 2007

ஏகத்துவ எழுச்சி மாநாடு - ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் (ITJ)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


இன்ஷாஅல்லாஹ் ,

ஏகத்துவ எழுச்சி மாநாடு


அன்புடையீர், அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்தஹு

நாள்: 26/08/2007 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி

இடம் : மஞ்சை நகர் மைதானம், கடலூர்.


தலைமை: மவ்லவி. ராஜ்முஹம்மது மன்பஈ

முன்னிலை: மவ்லவி. தவ்லத்முஹம்மது

சிறப்புரை :

ஆலிமா. சல்சஃபீன்

(தலைப்பு : ஈமானை அசைக்காத இம்மை வாழ்வு)

மவ்லவி. முஃப்தி உமர் ¬ரீஃப்

(தலைப்பு: நரகில் தள்ளும் தனி மனித துதி)

மவ்லவி. அப்துல் காதிர் மதனி

(தலைப்பு : வணக்கம் என்ற போர்வையில் வழிகேடுகள்)

கோவை அய்யூப்

(தலைப்பு : மரணத்திற்கு பின்னும் மரணிக்காத நற்செயல்கள்)


* தூய இஸ்லாத்தின் ஒப்பற்ற கொள்கைகளை வாழ்க்கையில் பரிபூரணமாக ஏற்று செயல்படவும்!

* எந்த தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கும் அடிபணியாமல் இருக்கவும்!

* இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படும் போலி வணக்க வழிபாடுகளை இனங்கண்டு புறந்தள்ளவும்!

* நமது இறப்பிற்கு பிறகும் வல்ல அல்லாஹ்விடம் நற்பாக்கியம் பெற்றவர்களாக ஆகவும்!


குடும்பத்துடன் அனைவரும் வாரீர்! வாரீர்!!

என அன்புடன் அழைக்கிறது.


ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ஐ டி ஜே)

கடலூர் மாவட்டம்.



குறிப்பு : பெண்களுக்கு தனியாக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புக்கு : 9443402576, 9894671055, 9894897890, 9894677674

Wednesday, August 22, 2007

கோர்ட்டில் கைவிலங்கிட்டு ஆஜர் : PJ & BAKAR ரை நாடு கடத்த உத்தரவு

பி.ஜெ. பாக்கர் ஆகியவர்களை இன்றே நாடு கடத்த உத்தரவு.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. மலேசியா சென்ற பி.ஜெ. பாக்கர் கைது செய்யப்பட்டதை அனைவரும் அறிவீர்கள். குவாங் சிறையிலிருந்த பி.ஜெ. பாக்கர் கை விலங்குடன் இன்று காலை கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார்கள். மலேசிய நாட்டின் சட்டம் தெரியாமல் தாங்கள் நடந்ததற்காக நீதிபதி முன் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்கள். தாங்கள் தமிழகத்தில் பிரபலமான மத குருக்கள் என்பதால் அறியாமல் செய்த தவறுக்காக தண்டனை வழங்காமல் மன்னித்து விடுதலை செய்ய வேண்டி நின்றார்கள்.


மலேசிய நாட்டுக்குள் இனிமேல் நுழையவே கூடாது எனும் நோ என்ட்றி முத்திரை இவர்கள் பாஸ்போர்ட்டில் குத்த வேண்டும். இன்றைய தினமே இவர்களை நாடு கடத்த வேண்டும் என்று நீதிபதி உத்தர விட்டார்.


தீர்ப்புக்குப் பின் பி.ஜெ. பாக்கர் ஆகியவர்களை புத்துராஜெயா இமிகிரேசன் சிறையில் கொண்டு போய் அடைத்தனர். இன்று ஆயுளு விமானம் மூலம் ஏற்றி விடப்படுகிறார்கள். அந்த விமானம் இன்று இரவு 8.45 மணிக்கு சென்னை மீனாம்பாக்கம் வந்து சேருகிறது.

மலேசியாவில் 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட பி.ஜெ, பாக்கர் ஜாமீனில் வந்ததும் கைது செய்தியை பொய் என்று கூறினார்கள் த.த.ஜ.வினர். 21 ஆம் தேதி ஜாமீன் ரத்து செய்யப்பட்டு குவாங் சிறையில் தள்ளியது. உடனே மலேசியாவில் பி.ஜெ, பாக்கர் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று மலேசிய சென்னை தூதராகம் முன் ஆர்ப்பாட்டம் செய்ய த.த.ஜ. அழைப்பு விடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்பியது.

நாங்கள் தமிழகத்தில் பிரபலமான மத குருக்கள் என்பதால் அறியாமல் செய்த தவறுக்காக தண்டனை வழங்காமல் மன்னித்து விடுதலை செய்யுங்கள் என்று வேண்டி மன்னிப்பு கேட்டதால் சிறை தண்டனை இன்றி இன்று நாடு கடத்தப்பட்டு சென்னை வருகிறார் என்றதும் கைது செய்தியை மீண்டும் பொய் என்று கூறுகிறார்கள் . பொய்யர்களான த.த.ஜ.வினர்.

செய்திகள் தொகுப்பு : பஸ்லுல் இலாஹி

பி.கு : வந்தவுடன் ஹீரோயிசமாக புட்டிகளும் சி.டி க்களும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். கூடிய விரைவில் தமிழகத்திலும் ஒரு முக்கிய வழக்கில் பி.ஜே கைது செய்யப்படலாம் என்று எதிர் பாாக்்கப்படுகின்றது.

Tuesday, August 21, 2007

பி.ஜே & பாக்கர் மலேசிய மத்திய சிறையில் (குவாங்) அடைப்பு (BREAKING NEWS)

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

த.மு.மு.க.வுக்கு பாடை கட்டுவேன் என்று சொன்ன பி.ஜெ. அணிக்கு மலேசியாவில் பாடை கட்டியது யார்?



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

மலேசியாவில் த.த.ஜ. கூட்டம் சிறப்பாக நடந்த மாதிரி அவர்களது வெப் சைட்டில் செய்தி போட்டு பி.ஜெ.யின் ரசிகர்களை குஷp படுத்தினார்கள். அதற்கு ஆதாரமாக அவர்கள் வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியே அவர்களை பொய்யர்கள் என அடையாளம் காட்டியுள்ளது.

இவர்கள் உணர்வில் விளம்பரம் செய்த இடத்தில் நடத்தவில்லை. உணர்வில் விளம்பரம் செய்தபடி 9.30 முதல் 6.30வரை நடநத்தவில்லை. பத்துகேவ்ஸில் உள்ள எஸ்டி.சி. உணவு விடுதியில் (மொத்தமாக) பார்ட்டியாக வந்து சாப்பிடுவதாகக் கூறி சாப்பிட போன இடத்தில் பேசுவது போல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார்கள். தகவல் அறிந்து போலீஸ் வந்தது. கைது செய்வோம் என்றதும் ஓடி விட்டார்கள்.

மறுநாள் 20ஆம் தேதி மீண்டும் திருட்டுத்தனமாக நிகழ்ச்சி நடத்தினார்கள். தகவல் அறிந்து போலீஸ் வந்ததும் பி.ஜெ.யையும் பாக்கரையும் அம்போ என விட்டு விட்டு நொண்டியப்பாவான அபுபக்கர் என்ற தொண்டியப்பா கோவை ஜாபர் போன்றவர்கள் ஓடி விட்டார்கள். போலீஸ் பி.ஜெ.யையும் பாக்கரையும் கைவிலங்கு போட்டு இழுத்துச் சென்றது. பிறகு நிபந்தனை ஜாமீனில் விடப்பட்ட அவர்கள் 21ஆம் தேதி இஸ்லாமிய சமய விவகார துறை முன் ஆஜரானார்கள்.

இந்த துறையின் தலைவருக்கே லஞ்சம் தருவதாகக் கூறி ஒரு நாள் மட்டும் பேச அணுமதி தாருங்கள் என பி.ஜெ. பேரம் பேசியுள்ளார். பி.ஜெ. மீது வழக்கு தொடர விரும்புகிறீர்களா? என பி.ஜெ.யின் எதிர் தரப்பை இஸ்லாமிய சமய விவகார துறை கேட்டுள்ளது.

பி.ஜெ.யால் முன்னாள் சகாக்கள் எனப்படுவோர் பி.ஜெ.யை எதிர்த்து வேலை செய்தவர்களை அணுகி வழக்கு போடா வண்ணம் சமாதானம் செய்தார்கள். எனவே இஸ்லாமிய சமய விவகார துறை பி.ஜெ. பாக்கர் வகையறாக்களை போலீஸிடம் ஒப்படைத்து 24 மணி நேரத்திற்குள் நாடு கடத்த உத்தரவு இட்டது.

நுழலுந் தன் வாயாற் கெடும் என்பது போல் பத்துகேவ்ஸில் உள்ள எஸ்டி.சி. உணவு விடுதியில் பி.ஜெ. பாக்கர் ஆகியவர்கள் பேசியதை சி.டி.யாக ஆக்கி கொடுத்து எங்கள் பேச்சில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்டுள்ளார்கள். அதைப் பெற்ற மலேசிய போலீஸ் மலாய் விஸிட் விஸா அனுமதியை தவறாக பயன்படுத்தியதற்கு இதுவே ஆதாரம். இந்த ஆதாரம் இல்லாததால்தான் உங்கள் எதிர் தரப்பை வழக்கு போடச் சொன்னோம்.

உங்களுக்கு எதிராக நீங்களே ஆதாரம் தந்து விட்டீர்கள் என்று கூறி போலீஸ் ரவாங் பகுதியில் உள்ள குவாங் மத்திய சிறையில் பி.ஜெ, பாக்கர் ஆகியவர்களை அடைத்து விட்டது.


22ஆம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. த.மு.மு.க.வுக்கு பாடை கட்டுவேன் என்று சொன்ன பி.ஜெ. அணிக்கு மலேசியாவில் பி.ஜெ. அணியே பாடை கட்டி விட்டது.

இந்தியாவில்தான் இருக்கிற அமைப்புகளை இரண்டாக ஆக்கினார் என்றால் மலேசியாவிலும் கிம்மா தேசிய ஒருங்கிணைப்பு குழுவையும் உடைத்து விட்டார்.

செய்தி :மலேசிய சகோதரர்கள்

தொகுப்பு : பஸ்லுல் இலாஹி

Monday, August 20, 2007

FAKE ENCOUNTER KILLINGS கண்டன கருத்தரங்கம்

புதுவை சுகுமாரன் அவர்கள் உரையாற்றுகையில்

கோவையில் நேற்று "போலி மோதல் கொலை எதிர்ப்பு கூட்டு இயக்கம்" கண்டன கருத்தரங்கம் கோவை சேரன் டவர் பின்புறம் உள்ள திவ்யோதயா அரங்கத்தில் நடைபெற்றது. சரியாக மாலை 4.00 மனிக்கு துவங்கிய இந்த கருத்தரங்கிற்கு தமிழக மக்கள் உரிமை கழக ஒருங்கினைப்பாளர் திரு பாவேந்தன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தை சேர்ந்த வழக்குரைஞர். கா. கேசவன் அவர்கள் வரவேற்புரை நல்கினார்கள். அத்துடன் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த கீழக்கண்ட அறிஞர்கள் கண்டன உரையாற்றினார்கள்..

தோழர் கு.ராமகிருட்டினன் - பெதுச் செயலாளர்ஈ பெரியார் திராவிட கழகம்

தோழர் பேரா. அ. மார்க்கஸ் - PUHR மாநில ஒருங்கினைப்பாளர்

தோழர் திருமலைராஜன் - தமிழ்நாடு மற்றும் புதுவை வழக்குரைஞர் சங்க கூட்டமைப்பு தலைவர்

தோழர் முஜீபுர்ரஹ்மான் - செயலாளர் - DIFT தமிழ்நாடு

தோழர் நீலவேந்தன் - ஆதி தமிழர் பேரவை

தோழர் ஆ.நாகராசன் - புரட்சி புலிகள்

தோழர் சுகுமாறன் - மக்கள் உரிமை கூட்டமைப்பு - புதுவை

தோழர். உதயம் சுப மனோகரன் - ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்

தோழர். வழக்குரைஞர் ரஜினிகாந்த் - உயர் நீதி மன்ற வழக்குரைஞர் சங்க கூட்டமைப்பு

தோழர். வழக்குரைஞர் ப.பா. மோகன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தோழர். மா. செந்தில் - புதியன பண்பாட்டு இயக்கம்

தோழர் ந. மோகன் குமார் - PUHR கோவை

தோழர் அ.ஜீவானந்தம் - தமிழக மக்கள் விடுதலை இயக்கம்

தோழர். வழக்குரைஞர் பெ.தமயந்தி - பொதுச்செயலாளர் குடியுரிமை பாதுகாப்பு நடுவம்

தோழர் ருத்ரன் - எழுத்தாளர்

தோழர் வள்ளுவராசன் - புரட்சிகர இளைஞர் முன்னணி

தோழர் மு.சக்திவேல் - நிறுவனர் மனித நேய பாசறை

தோழர் வி.ராமச்சந்திரன் - ஒருங்கினைப்பாளர் மக்கள் விடுதலை இயக்கம்

தோழர் முத்து லட்சுமி வீரப்பன் - மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம்

தோழர் கமலா வெள்ளை ரவி - வெள்ளை ரவி துனைவியர்

தோழர் பூபதி மணியன் - மணல்மேடு சங்கரின் தாயார்

தோழர் DIFT முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்கள் ஆக்ரோஷமாக

* ஆகியோர் போலி மோதல் காவல்துறை படுகொலைகளை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள் , அவாக்ளது உரையில் குறப்பாக கீழக்காணும் விஷயங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன்.

* டெல்லி ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் ஷாப்பிங் சென்ற இரு முஸ்லிம்களை சுட்டு கொன்று விட்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளா என காவல் துறை ஆராய்ச்சி செய்கின்றதாம்.

* சுற்றுலா சென்ற நான்கு கல்லூரி மாணவாக்ளை செராத்தில் வைத்து சுட்டு கொன்று விட்டு முதல்வரை கொல்ல வந்ததாக கட்டுக்கதை கட்டியது.

* மும்பை கலவரத்தில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சிவசேனா குண்டர்களுடன் இணைந்து காவல்துறை நடத்திய கூட்டு படுகொலைகள்.




* கோத்ரா ரயில் எரிப்பை காரணம் காட்டி சிறுபான்மை இன முஸ்லிம் மக்கள் மீது குஜராத்தை ஆளும் இனவாத மோடி அரசும் R.S.S குண்டர்களும் நடத்திய இனப்படுகொலைகள்.

* கோவையில் பூலிஸ்காரர் படுகொலையை காட்டி R.S.S இந்துமுன்னணி குண்டர்களும் காவல்துறையும் நடத்திய வெறியாட்டம், தீவைப்பு, கொள்ளை மற்றும் துப்பாக்கிசூடு கோரப்படுகொலைகள்.

* வீரப்பனை தேடுவதாக கூறி காவல்துறை அப்பாவி பொதுமக்கள் 66 பேரை கொலை செய்து 14 பென்களை கற்பழித்த கொடூரம்.

* காஷ்மீர் தற்காப்பு படை என்ற பெயரில் காஷமீரில் நடத்தி வரும் பயங்கரவாதம்.

* நக்சல் எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்திலும், ஆந்திரத்திலும் காவல்துறை நடத்தி வரும் கோரப்படுகொலைகள்.

* மற்றும் இந்தியாவெங்கும் சிறுபான்மை இன மக்கள் மீதும் தாழத்தபட்டவாக்ள் மீதும் நடத்தப்படும் ஈவிரக்கமற்ற துப்பாக்கி சூடுகள்.

* இந்தியாவெங்கும் ரவுடிகளை ஒழிப்பதாக கூறி என்கவுன்டர் என்ற பெயரில் காவல்துறை நடத்தி வரும் போலி மோதல் படுகொலைகள்.




இவ்வாறாக இந்திய ஜனநாயக நாட்டில் நடந்து வரும் ஜனநாயக அத்துமீறல்களை சுட்டிக்காட்டி கண்டித்து பேசினார்கள். அத்துடன் கடந்த அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடுகையில் நடந்து வரும் கலைஞரின் ஆடசியில் அதிகரித்து வரும் போலி மோதல் காவல்துறை படுகொலைகளையும் அகில இந்திய அளவில் பல அமைப்புகள் அரசுக்கு சுட்டிக்காட்டிய பின்பும் சமீபத்தில் வெள்ளை ரவி என்பவரை காவல்துறை போலி மோதல் நாடகத்தில் சுட்டு கொன்றிருப்பதையும் சுட'டிக்காட்டினர்.

தமிழக அரசும் காவல்துறையும் பூலி மோதல்களை உடணடியாக நிறுத்த வேண்டும் என்றும்,

போலி மோதல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரியும்,

சித்திரவதைக் கூடங்களான அதிரடிப்படை முகாம்களை உடணடியாக கலைக்க கோரியும்,

தமிழகமெங்கும் நக்சல் வேட்டை என்ற பெயரில் பொதுமக்களை அச்சுருத்துவதை உடனே நிறுத்தக் கோரியும் அமைப்பின் சார்பாக கோரிக்க வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுருத்தி பேச்சாளர்கள் பேசினார்கள்.

நிகழச்சியின் இறுதியில் தோழர் வழக்குரைஞர் இளங்கோவன் அவர்கள் நன்றியுரை நல்கள் கருத்தரங்கம் முடிவுற்றது.இக்கருத்தரங்கில் அதிக அளவில் மனித உரிமை ஆர்வளர்களும், பாதிக்கப்பட்டவாக்ளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

செய்திகள் & புகைப்படம் : கோவை தங்கப்பா



Sunday, August 19, 2007

வக்ஃப் வாரியத் தலைவரின் அறிக்கை

பொறுப்புணர்வை மறந்து பொய்யான தகவல்களுடன் வெளியிடப்பட்ட அறிக்கை -ஜெயலலிதாவின் அறிக்கை குறித்து தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் விளக்கம்


பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஹைதர் அலி


ஆகஸ்ட் 17, 2007 அன்று ஹோட்டல் பிரசிடென்டில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவருமான செ. ஹைதர் அலி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை மதவாத பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்து மக்கள் மன்றத்தில் அம்பலமாகிப் போன ஜெயலலிதா, இப்போது முஸ்லிம்களுக்கு .ஆதரவாக இருப்பதுபோல அறிக்கை வெளியிட்டு, அதிலும் வழக்கபோலவே பொய்களைப் புனைந்துள்ளார்.

முஸ்லிம்களின் மத உணர்வுகளுக்கு எதிராக வக்ஃபு வாரியத்தை திமுக அரசு தூண்டிவிடுவதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.

இஸ்லாமிய சமயக் கோட்பாடுகள் பற்றியும், முஸ்லிம்களின் உணர்வுகள் பற்றியும் ஜெயலலிதா பேசியிருப்பது இந்த நூற்றாண்டின் மாபெரும் நகைச்சுவையாகத் தெரிகிறது.

ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையையும் திமுக இழந்து வருவதாகவும், ஜமாஅத் நிர்வாகங்களில் வக்ஃப் வாரியத்தைத் தலையிடச் செய்து முஸ்லிம்களின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக திமுக அரசு இழந்து விட்டதாகவும், நரேந்திர மோடியின் அரசியல் தோழி குற்றம்சாட்டியுள்ளார்.

அறிவார்ந்த விமர்சனத்திற்கும், ஜெயலலிதாவிற்கும் அறவே சம்பந்தம் இருக்காது என்பதை அவரது இந்த அறிக்கை அறுதியிட்டு உறுதி செய்துள்ளது.

பாபர் பள்ளிவாசலை இடிக்க தமிழ்நாட்டிலிருந்து ஆட்களை அனுப்பிய ஜெயலலிதா, வக்ஃப் வாரிய நிர்வாகிகள் சென்னை வியாசர்பாடியில் உள்ள கன்னிகாபுரத்தில் அமைந்துள்ள புனித மகான்களின் நினைவிடங்களை உடைத்துத் தரைமட்டமாக்கியுள்ளதாக உண்மைக்குப் புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா குறிப்பிடுவது போல எந்த ஒரு சம்பவமும் நடக்கவே இல்லை. வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான நிலங்கள் தமிழகமெங்கும் ஆக்கிரமிக்கப் பட்டிருக்கும் நிலையில், கன்னிகாபுரத்தில் உள்ள வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான பி. ஹைதர் அடக்கஸ்தலத்தை வியாசர்பாடி சுற்றுவட்டாரத்தில் 12 ஜமாத்துகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த பொது அடக்கஸ்தலத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சிலர் அத்துமீறி நுழைந்து கட்டடம் எழுப்ப முனைந்துள்ளனர். அடக்கஸ்தலத்தை ஆக்கிரமிக்க முயற்சித்தவர்கள் மீது வக்ஃபு வாரிய ஆய்வாளர் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதான் உண்மை.

ஜெயலலிதா, கனவுக் காட்சிகளிலும் கற்பனைக் காட்சிகளிலும் நடித்தவர். அந்த முன் அனுபவம் இப்போது அவருக்கு கைகொடுக்கிறது போலும்.

இறையில்லமான பாபர் பள்ளிவாசலை இடிக்க ஆதரவு கொடுத்தவர் ஜெயலலிதா என்பதும், 1992ம் ஆண்டில் நடைபெற்ற மாநில முதல்வர்கள் பங்கேற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் பாபர் பள்ளிவாசலை இடிக்கும் கரசேவையை ஆதரித்த ஒரே முதலமைச்சர் இவர்தான் என்பதும் நாடறிந்த உண்மை.

கூடியிருந்த பத்திரிகையாளர்கள் மத்தியில்

மதத்தின் புனிதத்தன்மையை பாழ்படுத்துவது பற்றி ஜெயலலிதா பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்குச் சமமானது.

இஸ்லாமிய இறைக் கோட்பாட்டுத் தத்துவம் பற்றி ஜெயலலிதா கூறியுள்ளார். திரைக்கோட்பாடு, தில்லானா நாடகங்கள் பற்றித் தெரிந்த அவருக்கு இஸ்லாமின் இறைக் கோட்பாடு பற்றி என்ன தெரியும்? இஸ்லாம் இறைக்கோட்பாட்டை அவர் படித்திருந்தால் முதலில் இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டிருக்கவே மாட்டார்.

வாக்குறுதிகளைப் பற்றி ஜெயலலிதா வாய்க்கூசாமல் பேசுகிறார். ''1999ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்திய 'முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில்...

''நான் ஒரு தவறு செய்துவிட்டேன். அதைத் தவறு என்று ஒத்துக்கொள்ளும் துணிவு எனக்குண்டு. பாஜகவுடன் நான் தேர்தல் உறவு வைத்ததுதான் வாழ்வில் நான் செய்த பெரும் தவறு. எதிர்காலத்தில் ஒருபோதும் பாஜகவுடன் உறவு வைத்துக் கொள்ளவே மாட்டேன்'' லி என்று மாநாட்டில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் வாக்குறுதி அளித்த ஜெயலலிதா, அதன்பிறகு பாஜகவுடன் எப்படியெல்லாம் உறவாடினார் என்பதை நாட்டு மக்கள் மறந்துவிட வில்லை.

குஜராத்தில் 2002ல் நடைபெற்ற முஸ்லிம் இனப்படுகொலைகள் நரேந்திர மோடியின் ஆசியுடனேயே நடைபெற்றது என்று சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த குஜராத் உள்துறைச் செயலாளர் கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைப் படுகொலை செய்து, லட்சக்கணக்கான முஸ்லிம்களை சொந்த நாட்டில் அகதிகளாக்கிய மாபாதக நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவுக்கு தனி விமானத்தில் பறந்து சென்று, பூச்செண்டு கொடுத்து வாழ்த்தியவர், முஸ்லிம்களின் உணர்வுகள் குறித்துப் பேசுவது வேதனையான வேடிக்கைதான்.

2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்காலம் முடியும்வரை முஸ்லிம்களை ஏமாற்றிவிட்டார்.

ஆந்திர முதல்வர் டாக்டர் ராஜசேகர ரெட்டி, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதைக் கடுமையாக கண்டனம் செய்து, எனது தலைமையில் முஸ்லிம்கள் அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டத்திற்கு ஆளானவர் ஜெயலலிதா.

வக்ஃப் வாரியத்திற்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் தனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகவும், இதன்காரணமாக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் இதைத் திறக்காமல் உள்ளதாகவும், இக்கட்டிடம் தற்போது சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார் ஜெயலலிதா.

இதுவும் முழுக்க முழுக்க பொய்யானதாகும். 2001ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டையிலிருந்து வக்ஃபு வாரிய புதிய அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். 2001ல் புதிய அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டாலும், அரசின் நிர்வாக அனுமதி கிடைக்கவில்லை. வக்ஃபு வாரியத்தின் நீண்ட போராட்டத்திற்குப் பின் அரசின் நிர்வாக அனுமதி 2004ம் ஆண்டில் மட்டுமே கிடைத்தது. இது ஜெயலலிதா ஆட்சியின் அவலத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். இதன்காரணமாக கட்டிடப் பணிகள் 30.1.2005ல் தான் தொடங்கப்பட்டது. மேலும் கட்டிடப் பணிக்கு அரசு மானியமாக 40 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்த ஜெயலலிதா, 2001லி2002ஆம் ஆண்டில் ரூ.24 லட்சம் மட்டும் ஒதுக்கினார். பிறகு மீதி தொகை 2005லி2006ஆம் ஆண்டில்தான் ஒதுக்கினார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று கட்டிடப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டாலும், ஜெயலலிதா ஆட்சியில் கட்டுமானப் பணியை கான்ட்ராக்ட் எடுத்துக்கொண்டவர்கள் செய்த குளறுபடிகள் கட்டட திறப்பை தாமதப்படுத்துகிறது.

புதிய கட்டிடம் திறக்கப்படாததற்கு ஜெயலலிதாவே காரணம் என்பதை குற்றம்சாட்டுகிறேன். காலதாமதத்திற்கு திமுக அரசு பொறுப்பல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இக்கட்டிடம் சமூகவிரோதிகளின் கூடாரமாக ஆகிவிடவில்லை என்பதையும், வக்ஃபு வாரியம் இவ்வலுவலகத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு முன்னாள் முதல்வர், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் பொறுப்பற்ற முறையில் பொய்யான தகவல்களுடன் அறிக்கை வெளியிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இனிமேலாவது அவர் பொறுப்புடன் நடந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

பத்திரிகை அறிக்கையினை டவுன்லோட் செய்வதற்கு

பக்கம் - 01

பக்கம் - 02

பக்கம் - 03

பி.ஜே யின் வெற்றிகர மலேசிய சுற்றுலா!!

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. முஸ்லிம் சமுதாயத்தின் சாபக் கேடானவரானவரும் தமிழகத்தில் நடந்த பல கொலைகளுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் மூல காரணமானவருமான பி.ஜெ. அவரால் விபச்சாரக் குற்றம் சாட்டப்பட்ட பாக்கர் என்பவருடன் மலேசியா சென்றுள்ளார்.

ஜாலான் அம்பாங் ஆடிட்டோரியம் என்ற மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அவரது கூட்டம் தடை செய்யப்பட்டது. பிறகு முத்தியாரா காம்ளக்ஸில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதுவும் தடை செய்யப்பட்டு விட்டது. 17.8.07 வெள்ளி மாலை ஜெட் விமானம் மூலம் பி.ஜெ.யும் அவரால் ரதி மீனா சொகுசு பஸ்ஸில் விபச்சாரம் செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்ட பாக்கரும் புறப்படுவதற்கு முன்பே இந்த தகவல்கள் கிடைத்து விட்டது. சமுதாய பணத்தை சீரழிக்காதீர்கள். உங்கள் பயணத்தை ரத்து செய்யுங்கள் என்று ஆலோசனை கூறி இருக்கிறார்கள்.

இதனை நிராகரித்த சமுதாய பணத்தில் மஞ்சள் குளியல் செய்து கொண்டிருக்கும் பி.ஜெ.யும் அவரால் நந்தினியுடன் இணைத்து விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பாக்கரும் மலேசியா சென்றார்கள். போலீஸ் தடையை மீறி வேறு பெயரில் ஜாலான் அம்பாங் ஆடிட்டோரியத்தில் நிகழ்ச்சி நடத்த கூடுதலாக பணம் தருவதாக பேரம் பேசினார்கள்.

கடைசியில் பத்து மலை என்ற இடத்தில் ஒரு மண்டபத்தில் கூட்டத்தை நடத்தினார். திருட்டுத்தனமாக நடத்திய இந்தக் கூட்டத்தில் முதலில் மற்றவர்களை பேச விட்டு வேவு பார்த்தார். பிறகு பி.ஜெ.யால் களியக்காவிளை விவாதத்தின் போது விபச்சாரம் செய்யச் சென்றவர் என்று குற்றம் சாட்டப்பட்ட பாக்கரை பேச வைத்தார். 2 மணி நேரம் பேசுவார் என சொல்லப்பட்ட பாக்கர் 25 நிமிடம் மட்டுமே பேசினார்.

அதன் பிறகு இறையில்லக் கொடை வள்ளல் நூருல் மில்லத் என்றழைக்கப்பட்ட எஸ்.பி. நூர் முஹம்மது போன்றவர்களை கொலை செய்ய பத்வா கொடுத்த பி.ஜெ. இஸ்லாம் ஒரு சம்பூர்ண மார்க்கம் என்ற தலைப்பில் பேசாமல் நாங்கள் என்ன சொல்கிறோம் என்ற தலைப்பில் பேசத் துவங்கினார். 20 நிமிடமே பேசிய அவர் கேள்வி கேளுங்கள் என திசை திருப்பல் வேலை செய்தார்.

அணுமதி இன்றி திருட்டுத்தனமாக கூட்டம் நடத்துவதை அறிந்த காவல் துறை அதிகாரிகள் பத்து மலை பகுதிக்கு விரைந்தனர். உடனே நிறுத்துங்கள். என மேடை ஏறிய காவல் துறை அதிகாரிகள் கூறினர். நாங்கள் ஒரு லட்சம் வெள்ளி வரை செலவு செய்து இருக்கிறோம். எனவே ஒரு மணி நேரமாவது பேச அணுமதி தாருங்கள் என கெஞ்சினார்கள். நீங்கள் கூட்டம் நடத்த அனுமதி இல்லை எனவே கலைந்து செல்லுங்கள் இல்லா விடில் உங்களை கைது செய்வோம் என காவல் துறை அதிகாரிகள் கூறினர்.

இந்திய போலீஸா காலையில் கைது செய்து மாலையில் விட. அரண்டு மிரண்டு விட்ட பி.ஜெ.யும் பாக்கரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என பத்து மலை மண்டபத்தை விட்டு ஓடி விட்டார்கள்.

செய்திகள் : மலேசிய சகோதரர்கள்
தொகுப்பு : ஃபஸ்லுல் இலாஹி

Friday, August 17, 2007

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் - துபை

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் என்ற அமைப்பினை ஏற்படுத்தி தங்களது ஊரில் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வமைப்பின் நிர்வாகக்குழுக்கூட்டம் துபாயில் ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துவக்கமாக பொதுச்செயலாளர் அல்ஹாஜ் சம்சுதீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆலிம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் விபரம் வருமாறு : கெளரவ தலைமை ஆலோசகராக ஹெச்.ஹஸன் அஹமது , தலைவராக மெளலவி என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆலிம் , துணைத்தலைவராக அல்ஹாஜ் சம்சுதீன் , பொதுச்செயலாளராக கே. முஹம்மது ஹிதாயத்துல்லா, பொருளாளராக ஏ.அஹமது இம்தாதுல்லா சேட், ஆடிட்டராக ஹெச். அமீர் சுல்தான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செயற்குழு உறுப்பினர்களாக ஹெச்.இப்னு சிக்கந்தர் ( தேரா ) , ஏ.முஹம்மது தாஹா ( அல் கூஸ் ) , ஏ. ஜஹாங்கீர் ( அஜ்மான் ), முஹம்மது ரிஸ்வி ( ஷார்ஜா ), ஏ.அஹமது இஸ்மத்துல்லாஹ் சேட் ( சோனாப்பூர் ) , ஜாஹிர் உசேன் ( ராசல் கைமா ) மற்றும் எஸ்.அமீனுதீன் , கஸ்ஸாலி ( அபுதாபி ) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கெளரவிப்பது எனவும் , இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் தாயகப் பிரதிநிதிகள் தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர் , மெளலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் , மெளலவி ஏ உமர் ஜஹ்பர் ஆலிம், ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

www.mudukulathur.com என்ற இணையத்தளத்தை ஏற்படுத்துவது, மின்னஞ்சலில் உலகெங்கும் உள்ள முதுகுளத்தூர் மக்களை muduvai@googlegroups.com ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தொடர்புக்கு 050 5196433 எனும் அலைபேசியிலோ அல்லது
muduvaihidayath@gmail.com எனும் மின்னஞசல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

தகவல் : முதுவை ஹிதாயத்

Thursday, August 16, 2007

தற்காப்புக்காக செய்யப்படும் கொலைகள்...(சட்டத்தின் பார்வையில்)

அஸ்ஸலாமு அலைக்கம் (வரஹ்)
இந்திய அரசியல் சாசன சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை நமது சமுதாய மக்கள் உணராததன் விளைவுகள்தான் ஒவ்வொரு முறையும் திட்டமிட்ட
கலவரங்களில் நமது சமுதாயத்தின் உடைமைகளும், சொத்துக்களும் குறிவைத்து தாக்கப்பட்டு நமது பொருளாதாரம் சீரழிவிற்கு உள்ளாக்கப்படுகின்றது அத்துடன் நமது உயிர்களும் உடமைகளும் சூரையாடப் படுகின்றன. நமது சொத்துக்களையம், உடமைகளயும், உயிரையம் பாதுகாக்க நமது சட்டம் எதிரியை கொல்லவும் அனுமதித்துள்ளது. அப்படி நடக்கும்
கொலைகள் சட்டத்தின் பார்வையில் குற்றம் அல்ல. நாம் இனி நம்மை தற்காத்து கொள்ள தயாராக வேண்டும் அத்துடன் நமது சமுதாய அமைப்புகள் இந்திய அரசியல் சாசனத்திற்குட்பட்ட சட்டம் அனுமதித்துள்ள வழிமுறைகளின்படி நமது சமுதாய மக்களுக்கு தகுந்த தற்காப்பு பயிற்சி அளிக்க வேண்டும். இனியும் ஒரு கோவையோ அல்லது குஜராத்தோ நிகழாது நம்மை நாமே தற்காத்து கொள்ள வேண்டும்.




நிஜமான என்கவுன்டர் – நீங்களும் நிகழ்த்தலாம்...??!!

என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகளும், நக்ஸலைட்டுகளும் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடும்போது கொல்லப்பட்டதாக வரும் செய்திகள்தான். அனைத்து என்கவுன்டரிலும் சில துணை ஆய்வாளர்கள் கையில் கட்டுடன் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு பேட்டி அளிப்பதும், அது போலி என்கவுன்டர் என்று மனித உரிமை அமைப்புகள் புகார் அளிப்பதும் வாடிக்கையான நிகழ்ச்சிகள்.

ஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா? என்பது பலரின் மனதுக்குள் உள்ள கேள்விதான். இந்த கேள்விக்கு பதில் அளிக்குமுன்னர் வேறு சில சங்கதிகளைப் பார்ப்போம்.

வாழ்வின் பல்வேறு காலக்கட்டங்களிலும் நாம் பல அனுபவங்களை பெறுகிறோம். நமது கண் முன்பே திருடர்கள் திருடுவதை பார்த்தும் பார்க்காததுபோல் நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில் தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து விடுகிறது..


ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது உறவினர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி கொள்ளை முயற்சி நடக்கலாம் அல்லது புறநகர்ப்பகுதியில் உள்ள வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்கள் தாக்கலாம். அப்போது என்ன செய்யலாம்?

சட்டம் வழங்கும் தற்காப்புரிமை

இது போன்ற சந்தர்ப்பங்களில் நம்மை தற்காத்துக்கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் சட்டம் வழங்குகிறது. நமது உயிர், உடைமை, உற்றார்-உறவினர்களின் உயிர் மற்றும் உடைமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்கான இந்த உரிமையை, “தற்காப்புரிமை செயல்” (ACT OF PRIVATE DEFENCE) என்று சட்டம் அங்கிகரிக்கிறது.

இந்த உரிமையை பயன்படுத்தும்போது விளையும் தீங்குகள் குற்றமாக கருதப்படுவதில்லை. உண்மையில் தற்காப்புரிமை செயல்களை சட்டம் அனுமதிப்பதோடு, ஊக்கமும் அளிக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டத்தை தொகுத்த ஆங்கில சட்ட நிபுணர்கள், நூறு ஆண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டு நிலையை கூறியிருக்கின்றனர். திருடர்களிடமும், முறைகேடாக நடப்பவர்களிடமும் இந்திய மக்கள் பணிந்து போவதாகவும், இதைத்தடுத்து மக்களிடையே தைரியத்தையும், வீரத்தையும் பெருக்குவதற்கு தற்காப்புரிமையை சட்டப்பூர்வமாக அங்கிகரிப்பது அவசியமாவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உடல் தற்காப்புரிமை

இந்திய தண்டனை சட்டத்தின் (INDIAN PENAL CODE) பிரிவுகள் 96 முதல் 106 வரை இந்த தற்காப்புரிமை குறித்த வரையறைகளை நிர்ணயம் செய்கின்றன.


பிரிவு 96: தற்காப்புரிமையை பயன்படுத்தும் பொழுது செய்யப்படும எச்செயலும் குற்றச்செயல் ஆகாது.

பிரிவு 97: முதலாவதாக, தனது உடலையும், மற்ற உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துக்கொள்ள உரிமை.


இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச்செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.


இந்த பிரிவின்படி நமக்கோ, நமது சுற்றத்தினருக்கோ, நாம் முன்பின் அறியாதவருக்கோ – உடலுக்கோ, உடைமைக்கோ, பெண்களின் மானத்திற்கோ ஆபத்து ஏற்படும் காலத்தில் நாம் தாராளமாக எதிர்வினை ஆற்றலாம். அந்த எதிர்வினைகள் நமது எதிரிக்கு ஆபத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.

பிரிவு 98: இளமை, புரிந்து கொள்ளும் பக்குவமின்மை, சித்தசுவாதீனம் இல்லாமை அல்லது போதை இவற்றின் காரணமாக ஒருவர் செய்யும் செயல் குற்றச்செயல் அல்ல என்று கருதப்பட்டாலும், அந்த செயல்களுக்கு எதிரான காப்புரிமை செயல்படும்.

அதாவது உரிய வயதடையாத மைனர் ஒருவரோ, மனநலம் குன்றியவரோ, போதைப்பொருளின் ஆக்கிரமிப்பில் உள்ள ஒருவரோ செய்யும் செயல் குற்றம் ஆவதில்லை என்பது சட்டத்தின் கருத்து. எனினும் இந்த செயல்களால் ஏற்படும் ஆபத்து குறைவானதல்ல. சிறுவன் ஒருவனோ, போதையால் பாதிக்கப்பட்டவரோ கொலை செய்யும்போது அது சட்டம் எவ்வாறு பார்த்தாலும் போன உயிர் திரும்ப வராது. எனவே இந்த சூழ்நிலைகளிலும் பாதுகாப்புரிமை செயல்படவே செய்யும்.

பிரிவு 99: 1 மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படும் என்னும் அச்சத்தை நியாயமாக விளைவிக்காத ஒரு செய்கையானது,-


(i) ஒரு பொது ஊழியரால் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால் அந்த செய்கையானது...


(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவின்படி செய்யப்பட்டால் அல்லது செய்ய முயற்சி செய்யப்பட்டால், அந்த பொது ஊழியரின் செய்கையோ, அல்லது பொது ஊழியரின் உத்தரவோ சட்டப்படி நியாயமானதாக இல்லையென்றாலுங்கூட அச்செயலைப் பொறுத்தமட்டில் தற்காப்பு உரிமையை பயன்படுத்த முடியாது.


2. எச்சமயத்தில் ஒருவன் தனது தற்காப்புரிமையை மேற்கண்ட பிரிவை பொறுத்து இழப்பதில்லை என்றால்,-


(i) ஒரு பொது ஊழியரால் அச்செயல் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் ஒருவன் தற்காப்பு உரிமையை பயன்படுத்தி இருந்தால் அது குற்றமாகாது.


(ii) ஒரு பொது ஊழியரின் உத்தரவுப்படி செயல் நடைபெறுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது குற்றமாகாது.

3. காக்கும் நோக்கத்திற்கு அவசியமாக எந்த அளவிற்கு கேடு உண்டாக்கலாமோ அதைவிட அதிகமான கேட்டை உண்டாக்குமளவிற்கு தற்காப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் நீடிக்காது.

காவல்துறை அதிகாரி, பொது ஊழியர் ஆவார். இவர் நம்மை கைது செய்தால் அது நமது சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் செயலாகும். ஆனால் அவர் பொது ஊழியர் என்பதால் அந்த செயல் குற்றச்செயல் ஆகாது. அந்த கைது நடவடிக்கைக்கு நாம் கட்டுப்பட வேண்டும்.

ஆனால் அந்த கைது சட்டப்படி அமைய வேண்டும். அவர் காவல் அதிகாரி என்பதையும், அவர் சட்டரீதியான நடவடிக்கையே மேற்கொள்கிறார் என்பதையும் உணரும் சூழலும் வேண்டும்.

அவ்வாறு அல்லாமல் அந்த நபர் யாரென்றே தெரியாமல், எதற்காக அழைக்கிறார் என்பதும் புரியாத நிலையில் நாம் உடன் செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்த நிலையில் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம். ஆனால் அதையும் தேவையான அளவிற்கே பயன்படுத்த வேண்டும்.

வெறும் கையுடன் நம்மை மிரட்டும் நபருக்கு எதிராக கடப்பாரையையோ, துப்பாக்கியையோ நீட்டக்கூடாது. ஆபத்தின் தன்மைக்கேற்பவே தற்காப்புரிமையை செயல்படுத்தலாம்.

மரணம் விளைவிக்கலாமா?

பிரிவு 100: உடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதை குற்றமாகக் கருத முடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.



1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற
அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்போது,


2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்க தக்கதான ஒரு தாக்குதலின்போது,


3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்பொழுது,


4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்து கொள்ளும் கருத்துடன் தாக்கும்பொழுது,


5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்போது,


6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில், ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்பொழுது,



மேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதல்களில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்த சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயத்தை ஏற்படுத்துவதோ குற்றமாவதில்லை.


பிரிவு 102: உடலுக்கு ஆபத்து ஏற்படப்போகிறது என்ற நியாயமான அச்சம் எழுந்த உடனேயே, உடலைப்பொறுத்து தற்காப்பு உரிமை தொடங்குகிறது. அந்த அச்சம் இருக்கும்வரை தற்காப்பு உரிமையும் நீடிக்கும்.



எதிரி நம்மை தாக்கும்வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. ஏனெனில் எதிரியின் முதலடியே மூர்க்கத்தனமாக விழுந்தால் அது நமது உயிரையே பறித்துவிடக்கூடும். எனவே நம்மைத் தாக்க முடிவெடுத்துவிட்டதும், அதன் மூலம் நமது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ, கொடுங்காயங்கள் விளையும் என்றோ உறுதியாக நம்பும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன் படுத்தலாம்.



அதேபோல எதிரி வன்புணர்ச்சி செய்யவோ, இயற்கைக்கு மாறான வகையில் பாலுறவுக்கோ முற்படுகிறார் எனத்தெரியும் போதும் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.


ஆளைக்கடத்தும் நோக்கத்துடனோ, அதன் மூலம் கடத்தப்படுபவரின் உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலையிலோ, இந்த அனைத்து நிகழ்வுகளின் போதும் பொது அதிகாரிகளான காவல்துறை அதிகாரிகளின் உதவியை நாடுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்னும்போது தயங்காமல் தற்காப்புரிமையை பயன்படுத்தலாம்.



பிரிவு 106: மரணம் ஏற்படும் என்னும் அச்சம் உண்டாக்கக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையைப் பயன்படுத்தும்போது, தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் நிரபராதி ஒருவருக்கு தீங்கு விளைவித்துவிட்டால் அது குற்றமாகாது.

தற்காப்புரிமையை பயன்படுத்தும்போது சில நேரங்களில் குற்றவாளி அல்லாத சிலருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.


உதாரணமாக, ஒருவரைக் கொல்ல வேண்டும் என்று சுமார் 20 அல்லது 30 பேர் கொண்ட கூட்டம் ஒன்று முனைந்து நிற்கிறது. அந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டால்தான் அந்த நபர் தப்பமுடியும் என்ற நிலை நிலவுகிறது. ஆனால் அந்த கூட்டத்தில் சில குழந்தைகளும் தற்செயலாக நிற்கின்றனர். துப்பாக்கியால் சுட்டதால் ஒரு குழந்தை உயிரிழக்க நேரிடினும் அது குற்றம் அல்ல.

இந்த தற்காப்புரிமைக்கு எல்லை உண்டு. நம்மை தாக்க வரும் நபர், நாம் பதில் தாக்குதல் நடத்த தயாராகிவிட்டதைக்கண்டு தப்பியோடும்போது அவரைப்பிடித்து தாக்கக்கூடாது.

நம்மை பலவந்தமாக ஒருவர் அறையில் அடைக்க முடற்சித்தால் தற்காப்புரிமையாக அவரை நாம் தாக்கலாம். ஆனால், நம்மை அவர் அடைத்துவைத்துவிட்டு சென்றபின் தப்பியோடி அவரை தாக்கக்கூடாது. காவல்நிலையத்தில் புகார்தான் செய்யவேண்டும்.

சொத்து தற்காப்புரிமை

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 97, 103, 104, 105 ஆகியவை சொத்து தற்காப்புரிமை குறித்த அம்சங்களை விளக்குகின்றன.

பிரிவு 97 (2): தம்முடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செய்கையிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காப்புரிமை அனைவருக்கும் உண்டு.


பிரிவு 103: கொள்ளை, இரவில் வீட்டை உடைத்து உள்ளே புகுதல், தீ வைத்து சொத்துகளை நாசம் செய்தல், வீட்டினுள் அத்துமீறி நுழைதல் போன்றவற்றில் விளைவு மரணமாகவோ, கொடுங்காயமாகவோ இருக்கும் என்ற அச்சத்தை உண்டாக்கக்கூடிய சூழ்நிலையில் சொத்தைப் பாதுகாக்க தற்காப்பு உரிமையை பயன்படுத்தினால் எதிராளிக்கு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் நிகழ்ந்தாலோ அது குற்றமாகாது.


பிரிவு 104: பிரிவு 103ல் கூறப்பட்ட குற்றங்களை சேர்ந்திராத திருட்டு, சொத்தை அழித்தல் அல்லது அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றங்களை செய்தாலும் செய்ய முயற்சி செய்தாலும், அப்பொருளை காக்கும் பொருட்டு தற்காப்புக்கென மரணத்தை தவிர வேறு எவ்வித காயத்தையும் விளைவிக்கலாம்.

பிரிவு 105:சொத்துக்கு அபாயம் நேரிடுமென்ற ஓர் அச்சம் தொடங்குகிறபோது, சொத்தை பொறுத்த தற்காப்புரிமை தொடங்குகிறது.


திருட்டிலிருந்து சொத்தை காத்துக்கொள்ளும் தற்காப்புரிமையானது, சொத்தை திருடனிடமிருந்து மீட்கும் வரையிலும் வரையிலும் அல்லது பொது அதிகாரிகளின் உதவி பெறப்படும் வரை தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும்.


குற்றமிழைப்பவர் அத்துமீறல் அல்லது சொத்து அழித்தல் குற்றங்களை தொடர்ந்து செய்யும் வரையில் தற்காப்புரிமை தொடர்ந்து இருக்கும்.


இரவில் கன்னமிடுவதன் மூலம் ஆபத்து தொடர்ந்திருக்கும்வரை தற்காப்புரிமையும் தொடர்ந்து இருக்கும்.


பொருளுக்கான தற்காப்புரிமைக்கும் எல்லை உண்டு. அப்பொருளை கயவர்கள் கவராவண்ணம் தடுப்பதற்காக தற்காப்புரிமையின் அடிப்படையில் அக்கயவனை தாக்கலாம். ஆனால் பொருளை மீட்டபின் அக்கயவனை தாக்கக்கூடாது.

இவ்வாறு கட்டுப்பாடுகள் இருந்தாலும் நியாயமான தேவை உள்ள சந்தர்ப்பங்களில் தற்காப்புரிமையை பயன்படுத்துவதை சட்டம் பரிந்துரைக்கிறது. எனினும் மக்களிடம் சட்டம் குறித்து தேவையான விழிப்புணர்வு இல்லாத நிலையில் திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் முதலான குற்றங்களை தடுக்க வாய்ப்பிருந்தாலும் சட்டம் குறித்த தெளிவின்மையால் அக்குற்றங்களை அனுமதிக்கிறோம்.

பொதுமக்கள் பயன்படுத்த வேண்டிய இந்த தற்காப்புரிமையை பரவலாக (தவறாக) பயன்படுத்துபவர்கள் காவல்துறை அதிகாரிகள்தான்.

பொதுமக்கள் தற்காப்புரிமையை சரிவர பயன்படுத்தாததால், ரவுடிகள் உருவாகின்றனர். இவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் குறிப்பிட்ட
காலத்திற்கு லாபம் பார்க்கின்றனர். இந்த ரவுடிகளின் தேவை முடிந்த பின்னரோ, ரவுடிகள் தங்கள் கட்டுப்பாட்டைமீறி நடக்கிறார்கள் என்று சந்தேகம் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த ரவுடி காவல்துறையினரின் போலி என்கவுன்டரில் தீர்த்துக்கட்ட படுகின்றனர். அரசு அமைப்புகளும், நீதிமன்றங்களும் கொலைக்குற்றவாளிகளான காவல்துறை அதிகாரிகளை பாதுகாக்கின்றன.


இந்த அனைத்து அவலங்களுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமாகிறோம். நமது தற்காப்புரிமையை முழுமையாக செயல்படுத்தினால் ரவுடிகள் உருவாவதையும் தடுக்கமுடியும். அவர்களை பயன்படுத்தி அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரிகளும் சுயலாபம் அடைவதையும் தடுக்கமுடியும். பின் ரவுடிகளை கொலை செய்தவர்கள் வீரர்களாகவும், நாயகர்களாகவும் உருவாவதையும் தடுக்க முடியும்.


-சுந்தரராஜன் M.Sc, MHR, LL M

நன்றி : மக்கள் சட்டம்

Wednesday, August 15, 2007

சுதந்திர திருநாள் சிந்தனை - இஸ்லாமிய இணையப் பேரவை (IIP)

முதல் சிப்பாய் கலகம் என்ற இந்தியாவின் முதல் சுதந்திரப் போரில் ஆக்ரோசத்துடன் ஆங்கிலேயருடன் யுத்தமிடும் இஸ்லாமியர்கள்.

அட பித்தலாட்டமே உந்தன் மறுபெயர்தான் குருமூர்த்தியோ?
கடந்த வெள்ளியன்று (10-08-2007) தினமணியில் 'முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது' என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது. அதைப் படிக்கும் நடுநிலையாளர்கள் எவரும் 'பிராடு பண்ணுவதில் கோயப்பல்ஸூக்கும் குருமூர்த்திக்கும் என்ன போட்டியா நடக்கிறது?' என்று என்னும் அளவிற்கு பொய்களும், வரலாற்று திரிபுகளும், முஸ்லீம்களுக்கு எதிரான துவேஷசமும் அதில் பொங்கி வழிந்தது. அதை ஆக்கம் என்று சொல்வதைவிட அபத்தம் என்று சொல்வதே மிகப் பொருத்தமானது. ஆக்கம் என்பதா அல்லது அவாள்களின் பாஷையில் அபிஸ்த்து என்பதா என்ற கேள்வியை எழுதிய குருமூர்த்தி ஐயரிடமே விட்டுவிடுவோம்.


குருமூர்த்தி ஐயரின் கோர முகத்தை அவரின் எழுத்துக்களின் வாயிலாக அறிந்தவர்கள் அவரை ஒரு பொருட்டாகவே கருதமாட்டார்கள். இருப்பினும் தேசபக்தியை இவர் முழுக்குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளது போன்று வேஷமிட்டு தமிழ் சமூகத்திடையே விஷவிதைகளைத் தூவும் இவர் போன்றவர்களை, தமிழ் மக்களுக்கு அடையாளம் காட்டுவது நம் கடமையாகும் என்பதால் இம்மறுப்புரையை பதிவுசெய்கிறோம்.

தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது இஸ்லாம்.

அநியாயமாக ஒருவரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலை செய்வதற்குச் சமமானதாகும் என்பது இஸ்லாம் கூறும் உயர் போதனை. மதங்கள் என்பது மனிதர்களுக்குள் அமையப் பெற்றதாகும், மிருகங்களுக்குள் மதப்பிரிவுகள் கிடையாது. எவ்வித குற்றமும் புரியாத அப்பாவி பொதுமக்களை குண்டு வைத்துக் கொல்லும் தீவிரவாதிகள் மனிதர்களாக இருக்க இயலாது. முஸ்லிம்களாகிய எங்களைப் பொருத்தவரையில் இவ்வாறு செய்பவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள். எனவே இந்துத் தீவிரவாதி, கிருஸ்தவத் தீவிரவாதி, முஸ்லிம் தீவிரவாதி என்று தீவிரவாதிகளை மத அடையாளங்களோடு சேர்க்கக் கூடாது என்பது எங்கள் நிலைபாடு.
முதல் சிப்பாய் கலகத்தில் பங்கேற்ற முஸ்லிம் இந்தியர்கள் ஆங்கிலேய பீரங்கியில் குற்றுயிராக கட்டப்பட்டு
ஆனால் குருமூர்த்தி ஐயர் போன்றவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கி தீவிரவாதிகளை மட்டும் இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி செய்தி பரப்புவதால், சங்பரிவார பார்ப்பனர்களின் பயங்கரவாத செயல்களை குறிப்பிடும்போது இந்துத் தீவிரவாதி என்று அடையாளப்படுத்துமளவிற்கு நடுநிலையாளர்களை நிர்பந்தத்திற்கு உள்ளாக்கி விட்டனர்.
பெங்களூரைச் சார்ந்த எவனோ ஒருவன் பிரிட்டனில் குண்டு வைத்தான் என்றால் அதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முஸ்லீம்கள் எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?

//பெங்களூரைச் சேர்ந்த இவ்விரு சகோதரர்களும் நம் நாட்டுக்கு, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு கெட்ட பெயரைச் சம்பாதித்துவிட்டார்களே என்ற கோபமும் வருத்தமும் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். - - குருமூர்த்தி//
முதல் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிடும் திப்புவின் வீரர்கள்
என்று முஸ்லீம்களின் நலனில் மிகுந்த அக்கரையுடன் தனது கட்டுரையை துவங்குகிறார் குருமூர்த்தி, ஆடு நனைகிறதே என்று கவலைப்படும் ஓநாய் போல. இஸ்லாம் தீவிரவாதத்தை வேறோடு சாய்க்கிறது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லீம் தீவிரவாதி என்று சொல்வது சூடான ஐஸ் கிரீம் என்று கூறுவதற்கு சமமாகும் என்பதை சுய சிந்தனையுள்ள எவரும் அறிவர். இவைகள் நம்ம குருமூர்த்தி ஐயருக்கு இன்னும் விளங்கவில்லை போலும்.

குருமூர்த்தி ஐயரின் அகழ்வாராய்ச்சியும் உண்மை விளக்கமும்.
மேலும் படிக்க.......
ISLAMIYA INAYAP PERAVAI

Tuesday, August 14, 2007

தென்காசி : ஹிந்து பயங்கரவாதிகள் தாக்குதல் 3 முஸ்லிம்கள் படுகொலை(LAST)



நெல்லை மாவட்டம் தென்காசியில் சில மாதங்களுக்கு முன்னர் கொலை, கொல்லைகளில் ஈடுபட்டு வந்த இந்து முன்னணியை சோந்த ஹிந்து பயங்கரவாதி குமார் பாண்டியன் என்பவனின் தேசவிரோத செயல்களாலும் பயங்கரவாத நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்டிருந்த சிலர் அவனை வெட்டிக் கொன்றனர். அதற்கு பதிலாக இந்து முன்னணியை சேர்ந்த ஹிந்து பயங்கரவாதிகள் சம்பந்தமில்லாமல் மத துவேஷத்தை உண்டாக்கும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் மன்னேற்றக் கழகம் என்ற தொண்டு நிறுவனத்தின் தென்காசி தலைவர் மைதீன் சேட்கான் மீது பயங்கரவாத தாக்குதல் தொடுத்து அதில் இறைவனின் அருளால் அவர் உயிர் பிழைத்து சிகிச்சை பெற்று வருகின்றார்.


இந்நிலையில் பயங்கரவாதி குமார் பாண்டியனின் கொலை வழக்கிலும் அது தொடர்பான பல்வேறு வழக்குகளிலும் கைது செய்யப்பட்ட சிலர் தற்போது நீதி மன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டு தென்காசி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல் நிலையத்தில் கையெழுத்திட வரும் இவர்களை படுகொலை செய்திடும் நோக்கில் பல நாட்களாக பயங்கரவாதி குமார் பாண்டியனின் சகோதரர்கள் பயங்கரவாதி சேகர், பயங்கரவாதி செந்தில் அகியோர் தலைமையில் இந்து முன்னணியை சேர்ந்த பயங்கரவாதிகள் பலர் திட்டம் தீட்டி தொடாந்து வந்துள்ளனர்.





இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் பயங்கரவாதி குமார் பாண்டியன் கொலை வழக்கில் ஜாமினில் விடுவிக்கப்பட்ட சில முஸ்லிம்கள் தென்காசி காவல் நிலையத்திற்கு கையெழுத்திட மோட்டர் பைக்குகளில் வந்துள்ளனர் அப்போது அவர்களை பின்தொடாந்து காரில் வந்த இந்து முன்னணியை சேர்ந்த பயங்கரவாத கும்பல் அவர்கள் மீது பயங்கர வெடிகுன்டுகளை வீசி கொடூர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் இதில் சம்பவ இடத்திலேயே அசன் கனி மற்றும் நசீர் என்ற முஸ்லிம்களும் மற்றும் மருத்துவமனையில் நாகூர் மீறான் என்ற முஸ்லிமும் வீர மரனமடைந்தனர்.மற்றும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகின்றனர்.


தொடர்ந்து இந்த ஹிந்த தீவிரவாதிகள் அங்குள்ள வணிகர்கள் மீதும் அப்பாவி முஸ்லிம் மக்கள் மீதும் வெடிகுன்டு போன்ற பயங்கர ஆயதங்களை கொண்டு கொடும் தாக்குதலில் ஈடுபட்டதால் அங்குள்ள மக்களும், முஸ்லிம்களும் தற்காப்பக்காக நடத்திய எதிர் தாக்குதலில் ரவி, சேகர், செந்தில் என்ற மூன்று இந்து முன்னணியை சேர்ந்த ஹிந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதைத்தொடாந்து பயங்கர கலவரம் மூன்டதால் மாவட்ட ஆட்சியர் பிரகாஷ் மற்றும் காவல் துறை அதிகாரி ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் சுமார் 2000 த்திற்கும் மேற்ப்பட்ட போலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படடுள்ளனர். கலவரத்தில் உயிரழந்தவர்களின் உடல்களை அப்புரப்படுத்துவதில் முஸ்லிம் அமைப்புக்களை சோந்த தொண்டர்களும், ஆம்புலன்சுகளும் காவல் துறைக்கு துனையாக ஈடுபட்டன.

தமிழக அரசு உடனடியாக செயல்பட்டு வெடிகுன்டு போன்ற பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ள பயங்கரவாத அமைப்பான ஹிந்து முன்னணியின் அலவலகங்களை தமிழகமெங்கும் சோதனை செய்து தமிழகத்தின் அமைதிக்கும் சமூக நல்லினக்கத்திற்கும் தீங்காக இருக்கும் இந்து முன்னணியின் தலைவரான பயங்கரவாதி ராமகோபாலனை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் அத்துடன் இந்த சம்பவத்திற்கு காரனமாயிருந்த அத்தனை ஹிந்து தீவிரவாதிகளையும் கைது செய்வதோடு பயங்கரவாத அமைப்பான இந்து முன்னணியையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

Monday, August 13, 2007

முஸ்லிம் இந்தியா!! சுதந்திரத்தில் முஸ்லிம்களின் தியாகம்!!


தியாகத்தின் நிறம் பச்சை!!
இந்திய சுதந்திரப்போரில் இஸ்லாமியரின் பங்களிப்பு

குறிப்பு : ஆகஸ்ட் 10,2007 தினமனி நாளிதழ் குருமூர்த்தி அய்யர் என்ற வந்தேறி பார்ப்பான் எழுதிய "முஸ்லிம் இந்தியன் - பெயர் மாறுகின்றது" என்ற தலைப்பில் ஒரு துவேஷக் கட்டுரையை பிரசுரித்திருந்தது. இந்த கட்டுரையை (தியாகத்தின் நிறம் பச்சை) டவுன்லோட் செய்து படித்தபின்பு சொல்லுங்கள் "முஸ்லிம் இந்தியன்" என்று மட்டுமில்லை "முஸ்லிம் இந்தியா" என்று பெயர் மாற்றக்கூடிய அளவிற்கு முஸ்லிம் இந்தியர்கள் இந்த இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்துள்ளார்கள்.

குருமூர்த்தி அய்யரின் ஜாதிக்காரர்களாகிய வாஜ்பாய், அத்வானி போன்று சுதந்திரப்போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்து சேவகம் செய்து வாழ்ந்தவர்களல்ல எம் முஸ்லிம்கள் மாறாக சுதந்திரத்திற்காக ஆங்கிலேய தோட்டாக்களையும், ஈட்டிகளையும் மாரில் தாங்கி தம் செங்குருதி சிந்தி இந்திய சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த உண்மை செம்மள்கள் எம் முஸ்லிம்கள். தேசத்துரோகிகளான கோட்சேயின் கூட்டங்கள் தேச பக்தர்களாக வேஷம் போடும் இந்தியாவில் இன்று இந்த தேசத்தை பூர்வீகமாக கொண்ட எம்இனம் தேச துரோகிகளாக குருமூர்த்தி போன்ற வந்தேறி அந்நிய பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்படுவது வேடிக்கையானது. - முகவைத்தமிழன்.



நன்றி கொல்வதை வாழக்கை வழியாகக் கொண்டவர்கள் மட்டுமே, இந்திய விடுதலைப் போரில் இஸ்லிம்களின் பங்கை மறைப்பார்கள் அல்லது மறுப்பார்கள்.

தேசப் பிரிவினை;க்கு முஸ்லிம்களே காரணம் என்றொரு பொய்யைக்கட்டவிழ்த்து விட்டார்கள் சில பாசிஸ்டுகள். இவர்கள இந்தப் பொய்யை இடைவிடாமல் பரப்பினார்கள். இதை ஒரு பெரும் பகுதி மக்கள் நம்பவும் செய்தார்கள்.

இந்த பாசிஸ்டுகள் மேலே நாம் குறிப்பிட்ட பொய்யைப் பரப்புவதோடு நின்று விடவில்லை. வரலாற்றின் ஒரு முக்கியப்பகுதியைக் குழி தோண்டிப் புதைக்கவும் செய்தார்கள். அப்படி அவர்கள் புதைத்த வரலாறுதான் இந்திய விடுதலைப் பேரில் முஸ்லிம்களின் பங்கு.

இந்த பாசிஸ்டுகள் இன்னொரு பாதகத்தையும் எந்தத் தயக்கமுமின்றி செய்து வருகின்றார்கள். அது இந்தியாவுக்கு இரண்டகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்றொரு வடி கட்டின பொய்யையும் பரப்பி வருகிறார்கள்.

இந்தப் பொய்கள் அவர்கள் எதிபார்த்த பலனை அவர்களுக்குத் தராமல் போய்விடவில்லை இந்தப் பொய்கள் இன்றைய முஸ்லிம்களிiயே ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தித் தலைதாழ்த்தச் செய்துவிட்டது என்றால் அது மிகையாகாது.

இந்த நூல் மறைக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட உண்மைகளை அகழ்ந்து வெளியே கொண்டு வந்து ஒரு வரலாற்று வெளிச்சத்தைத் தருகின்றது.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்து போராடி தங்கள் இன்னுயிரை ஈந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏராளம்!! இந்த வiலாறு, அதாவது ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம்கள் தொடுத்த போர் ஒரு நீண்ட நெடியகாலம் வரை நீடித்தது. ஆகவே முஸ்லிம்களின் விடுதலை;ப் போர் வரலாறு மிகவும் நீண்டதொரு வரலாறு.

இந்த வரலாறு இல்லாத வரலாறு குறையுடையதொரு வரலாறே!!

ஆதலால் இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் வரலாறு முழுமையாக மக்கள்முன் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும்.

இந்த வகையில் நூலாசிரியர் அப்துல் சமது அவர்கள் பக்கம் 11ல் குறிப்பிட்டுள்ளபடி ஆய்வுகள் தொடர வேண்டும்.

இதனாலெல்லாம் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கெதிரான இந்திய விடுதலைப் போர் வரலாறு இன்னும் நிறைவடையவில்லை. ஒரு பெரும் இடைவெளி கொண்டதாகவே இருக்கின்றது. இந்தியாவில் ஒரு வரலாற்றுப் படுகொலை ஒரு பலாத்காரத்தோடு திணிக்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மதுரை பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைக்கப்பட்டிருக்கும் ர்ளைவழசல ழுக குசநநனழஅ ளுவசரபபடந in ஐனெயை ஓர் எடுத்துக்காட்டு.

இதேபோல்தான், யாருக்கெல்லாம் இந்திய விடுதலைப் போரில் பங்கில்லையோ அவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரும் ஒரு டிபாய் வரலாறாக வரையப்பட்டு அரசு அங்கீகாரம் பெறத்துடித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு காலகட்டத்தில் இந்த நூல் இன்னும் இரடடிப்பு முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.

இந்தியாவின் விடுதலை வரலாற்றை வரைகின்றவர்கள் இந்த வரலாற்றை - இஸ்லாத்தின் சீரிய பங்கை மறந்து விடக்கூடாது! இதை இன்னும் குறிப்பாகச் சொன்னால் 'தேசியம்' என்பது பிற்றை நாட்களில் தோன்றிய ஒன்றுதான். ஆனால் முஸ்லிம்களின் விடுதலைப் போர் 'தேசியம்' என்ற கொள்கை அறிமுகப்படுத்;தப்படுவதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானது.

இந்தியாவில் முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கெதிராக போராடினார்கள். அதே காலகட்டத்தில் கவ்காஸ் பகுதியில் ஸார் மன்னர்களின் ஆதிக்கத்திற்கெதிராக இமாம் காசிமுல்லாஹ் ஷஹீத் இமாம் ஷாமில் ஆகியோர் போihடினார்கள்.

ஆங்கிலேயர்கள் தோல்வியை முதலில் முத்தமிட்டது ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களின் கைகளில்தான் (இந்த நூலின் பக்கம் 6). ஆங்கே முஸ்லிம்களை ஆதிக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிறுத்தியது இஸ்லாம்தான்.

இந்த நூலின் பக்கம் 16,17ல் குறிப்படப்படும் செய்யத் அஹ்மத் ஷஹீத் அவர்களை ஆங்கிலேயர்களுக்கெதிராக கிளர்ந்தெழச் செய்தது இஸலாம்தான். ஷஹீத் செய்யத் அஹ்மத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, 20ம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர் அல் மியான் என்ற அபுல் ஹஸன் அலி நத்வீ அவர்கள் இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்கள் வரிசையில் இணைத்துள்ளார்கள்

ஆங்கிலேயர்களுக்கெதிராக இந்தியாவில் முஸ்லிகள் போராடி தங்கள் உயிரைத் தந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் எகிப்தில் ஆங்கிலேயர்களுக்கெதிராக முஸ்லிம்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் போராட்டத்தில் அவர்களுக்கு உந்து சக்தியாக இருந்து உற்சாம் தந்தது இஸ்லாம்தான்.

இந்த உண்மைகளின் ஒளியில் இஸ்லாத்தின் பங்கு உரிய அழுத்தத்தோடு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இந்த நூலை 'இலக்கியச்சோலை'யின் வெளியீடாக வெளியிட முன்வந்து, இசைவும் தந்த பேரா. அப்துல் சமது அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

'இலக்கிச்சோலை'யின் இலக்கியப் பணியும் இஸ்லாமியப் பணியும் வல்லோன் அல்லாஹ்வின் பெருங்கருணையினால் தொடருகின்றது. அல்ஹம்ந்துலில்லாஹ்.

வாசகர்கள் வழக்கம் போல் தங்கள் ஆதரவைத் தருவர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இவண்,

மு. குலாம் முஹம்மது

காப்பாளர், இலக்கியச்சோலை

கட்டுரையை முழுமையாக படிப்பதற்கு இங்கு சொடுக்கி டவுன்லோட் செய்யவும்.

தியாகத்தின் நிறம் பச்சை (WORD DOCUMENT)

தியாகத்தின் நிறம் பச்சை (AS PDF FILE)

Saturday, August 11, 2007

புதிய நிலா வெளியீட்டு விழா



சிங்கப்பூரில் புதிய நிலா பத்தாம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீடு

சிங்கப்பூரில் புதிய நிலா மாத இதழ் பத்தாம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 19 ஆகஸ்ட் 2007 »¡ யிற்றுக்கிழமை ( Sunday ) எண் 3 மஸ்கட் தெருவில் ( அரபு தெரு அருகில் ) அமையப்பெற்றுள்ள சுல்தான் பள்ளிவாசல் இணை மண்டபத்தில் மாலை ஐந்து மணிக்கு நடைபெறும்.

தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் விழாவிற்கு தலைமை தாங்குகிறார். சிங்கப்பூர் நாணய மாற்று வணிகர் சங்க பொதுச்செயலாளர் எம்.ஒய். முகம்மது ரபீக் , மா.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

தமிழ்வேள் நற்பணி மன்ற பொதுச்செயலாளர் எம். இல்யாஸ் வரவேற்புரை நிகழ்த்துகிறார் .

புதிய நிலா பத்தாம் ஆண்டு நிறைவு தொகுப்பு நூலை திராவிடர் கழக தலைவர் டாக்டர் கி வீரமணி வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தொலைக்காட்சிப் படைப்பாளர் அ. முகம்மது அலி , சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆங்கில இலக்கிய பேராசிரியர் டாக்டர் சித்ரா சங்கரன் , பன்னூலாசிரியர் டாக்டர் ஹிமானா சையத் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ விழா நிகழ்ச்சிகளின் நெறியாளர்.

புதிய நிலா இதழின் சிறப்பாசிரியர் மு.ஜஹாங்கீர் ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நிகழ்த்துகிறார்.

தமிழக முதல்வர் தனது வாழ்த்துரையில் : இதழ் பணி என்பது மிகுந்த பொறுப்பு வாய்ந்தது. உண்மைச் செய்திகளை சமுதாய நன்மைக்காக நெஞ்சுரத்துடனும், நடுவு நிலையுடனும் வெளியிடுவது நாட்டில் நேர்மையும் நியாயமும் நிலைக்கச் செய்யும் திருப்பணியாகும். அற வழியில் மக்களை ஆற்றுப்படுத்திடும் அறப்பணியாகும்.



இப்பணியில் பத்தாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது இதழ் நடத்துவோருக்கு பெருமை சேர்ப்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய நிலா இதழின் முகவரி :

புதிய நிலா
390 விக்டோரியா தெரு
#01 - 11 கோல்டன் லேண்ட்மார்க் எஸ் சி
சிங்கப்பூர் 188061
தொடர்புக்கு : 9007 2961

செய்தி தொகுப்பு : முதுவை இதாயத்

Friday, August 10, 2007

துபாயில் உணர்வாய் உன்னை பயிற்சி முகாம்

ஜலால் அவர்கள் பேசும்போது

துபாயில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம்

துபாயில் கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் சார்பில் உணர்வாய் உன்னை எனும் தன்னம்பிக்கைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 10, 2007) அன்று கராமா பகுதியில் உள்ள விஸ்டம் இன்ஸ்டிடியூட்டில் நடைபெற்றது.

வளைகுடாவிற்கு வந்து விட்ட அவசரத்தில் ஒவ்வொருவரும் சம்பாதிப்பதில் மட்டுமே குறிக்கோளாய் இருந்து வரும் மனிதர்கள் தாங்கள் யார், தங்களிடம் உள்ள திறமைகள் என்ன, தேவையற்ற சிந்தனைகளை மனதில் புதைத்து வைத்துக் கொண்டு வாழ்வைத் தொலைத்து திரிகின்றனர் சிலர்.

இத்தகைய நிலையைப் போக்கிடும் முயற்சியாக கோட்டாறு நண்பர்கள் எடுத்த முயற்சியின் காரணமாய் பயிற்றுநர்கள் பொதக்குடி ஜலால் மற்றும் கள்ளக்குறிச்சி உசேன் பாஷா ஆகியோர் சிறப்பான முறையில் பயிற்சி அளித்தனர்.

ஆங்கிலத்தில் பெங்களூரைச் சேர்ந்த இஸ்லாமிக் வாய்ஸ் ஆங்கில மாத இதழ் ஆசிரியர் துபாயில் இம்முகாமை நடத்திய பின்னர் தமிழில் இத்தகைய பயிற்சி வகுப்புகள் பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் சிறப்புற நடைபெற்று வருகிறது.


கோட்டாறு நண்பர்கள் குழுமம் பல்வேறு கல்வி, சமூக மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை துபாயில் உள்ள தங்களது ஊர் நண்பர்களை ஒருங்கிணைத்து மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது.

உணர்வாய் உன்னை பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை கோட்டாறு நண்பர்கள் குழுமத்தின் தலைவர் நசீர் உசேன் ( 050 655 24 91 ), செயலாளர் ஜகபர் சாதிக் ( 050 734 6756 ) , அசன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இது போன்ற பயிற்சி முகாம்களை தமிழகத்திலும், அமீரகத்திலும் நடத்த விரும்புவோர் ஜலால் ( 050 614 2633) மற்றும் உசேன் பாஷா ( 050 385 1929 ) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

தகவல் : முதுவை இதாயத்

Wednesday, August 08, 2007

ஜீபைலில் மாபெரும் பட்டி மன்றம் (For NON MUSLIMS)

குறிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் முஸ்லிம் சகோதரர்கள் தங்களுடன் கட்டாயம் ஒரு முஸ்லிம் அல்லாத சகோதரரை அழைத்து வரவேண்டியது அவசியம்.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

வரும் (10.08.2007) வெள்ளிக்கிழமை அன்று சவுதி அரேபியா, ஜீபைல் மாநகரில் மாறடறுமத சகோதரர்களுக்கான மாபெரும் இஸ்லாமிய பட்டிமன்றம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அத்துடன் பேச்சுப் போட்டியும் நடைபெற உள்ளது.

பேச்சுப்பொட்டிக்கான தலைப்புகள்:


  • வரதட்சினை
  • வட்டி
  • போதைப்பொருள்
  • விபச்சாரம்
போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு பெருமதியான பரிசில்கள் வழங்கப்பட உள்ளன. அனைத்து பகுதிகளில் இரந்தும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலதிக தெர்ர்புகளுக்கு கீழ்க்காணும் தொலைபேசி என்களை தொடர்பு கொள்ளவும்.


0502561645 / 0553603792 / 0568500214
.
அணைவரும் கலந்து நிகழ்ச்சியில் பயன் பெறுமாறு ஜீபைல் அறக்கட்டளை தமிழ் பிரிவு அழைக்கின்றது.நிகழ்ச்சியின் அழைப்பிதழ் காண கீழே உள்ள புகைப்படத்தின் மீது சொடுக்கி பெரிதாக்கி காணவும்.





DUBAI ல் ஈமான் நடத்தம் மிராஜ் இரவு நிகழ்ச்சி

துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் புனித மிராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு


ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத்தலைநகராய் விளங்கும் துபாய் ஈமான் அமைப்பு அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அருளப்பெற்ற அஹ்மது நபி ( ஸல் ) அவர்களின் புனித மிராஜ் இரவையொட்டி சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை இஷாத் தொழுகைக்குப் பின்னர் நடத்துகிறது.

இந்நிகழ்ச்சி துபை தேரா பகுதியில் அமையப்பெற்றுள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) நடத்தப்படுகிறது.

ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமங்களின் மேலாண்மை இயக்குநருமான அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹபிதின் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்கிறார்.

லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மெளலவி அல்ஹாஜ் எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி மன்பயீ ''புனித மிராஜ் இரவு' குறித்து சிறப்புரை நிகழ்த்துகிறார்.

சிறப்புரைக்குப் பின்னர் தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு பள்ளியின் மேல் தளத்தில் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி குறித்து மேலதிக விபரங்களுக்கு ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் 050 58 53 888 மற்றும் ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ ஹமீது யாசின் 050 475 3052/042661415 ( மாலை 6 மணிக்கு மேல் ) ஆகிய தொடர்பு எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


தகவல் :
முதுவை ஹிதாயத்
ஊடகத்துறை பொறுப்பாளர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்

Tuesday, August 07, 2007

இந்தியாவின் மதச்சார்பின்மை பாரீர்!!

குருசாமிக்கு ஆப்பு வைக்க மறுப்பு தலைமை நீதிபதி

'ஜெயேந்திரரின் பக்தன் நான்' - வழக்கை
விசாரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதி மறுப்பு!


ஆகஸ்ட் 07, 2007

டெல்லி: நான் ஜெயேந்திரரின் பக்தன். எனவே புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில், தமிழக அரசு வக்கீல்கள் வாதாடக் கூடாது என்று கோரி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம் கூறி விட்டார்.

இதையடுத்து இந்த வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்படவுள்ளது.

சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை.

இதற்கு, இந்த வழக்கில் புதுச்சேரி அரசு வக்கீல்கள்தான் ஆஜராக வேண்டும், தமிழக அரசு வக்கீல்கள் ஆஜராகக் கூடாது என்று கோரி இரு சங்கராச்சாரியார்கள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனுதான் காரணம்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புதுச்சேரி நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. இதனால் இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.

இந் நிலையில், நேற்று சங்கராச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஜி.பி.மாத்தூர், பி.கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலசுப்ரமணியன் கூறுகையில், நான் சங்கராச்சாரியாரின் பக்தன். எனவே என்னால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது.

இம்மனுவை நான் விசாரிக்க மாட்டேன். 3 வாரங்களுக்கு விசாரணையைத் தள்ளி வைக்கிறேன். வேறு பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கும் என்றார்.

இதையடுத்து இந்த வழக்கு 3 வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது.
நன்றி : செய்திகள்
.
இது தான் இந்தியாவின் மதச்சார்பின்மை!! இந்திய அரசியல் சட்டத்தின் தலைமை பீடமான உச்ச நீதி மன்றம் வரை சாதீய, பார்ப்பனிய வேர் ஊடுருவி உள்ளது!! ஒரு விபச்சாரன், மத தலைவர் வேஷத்தில் காமலீலைகள் செய்தவன் தன்னிடம் பக்தியோடு வந்த பக்தைகளை காமத்தோடு தடவியவன், தனது ஊழல்களை மறைக்க பல கொலைகளை செய்த உலக மஹா அயோக்கியன் இந்த சங்கராச்சாரி என்பவன், இவனின் பக்தனாக இருக்கிறானாம் இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி!! என்ன கொடுமையாடா?
.
இந்தியர்கள் அணைவரையும் சமமாக நடத்தக்கூறும் அரசியல் சாசனத்தை அமல்படுத்த வேண்டிய நீதிபதி காமரசம் சொட்டும், மனிதர்களை தலையில் இருந்தும் காலில் இருந்தும் வந்தவன் என பாகுபாடு படுத்தும் மனுவின் சட்டத்தை அமலாக்க நினைக்கும் அயோக்கியன், தீவிரவாதி சங்கராச்சாரியின் பக்தனாம்!! இவனைப்போன்ற சங்கராச்சாரியின் பக்தர்கள் நீதிபதியாய் அமாந்திருக்கும் நீதிமன்றங்களில் இந்தியாவின் சாமான்ய மக்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? அய்யோ பாவம் இந்தியாவும் இந்திய குடிமக்களும்!! சுதந்திரமடைந்து பல ஆன்டுகலாகியும் இன்னும் மனுவின் பிடியில்!! பார்ப்பன ஆதிக்கத்தில் உள்ள இந்திய நீதி மன்றங்கள் என்று சுயமாக செயல்படும்? இதுதான் குஜராத் மற்றும் பாபரி மஸ்ஜித் வழக்குகளிலும் நடந்தது!!

Monday, August 06, 2007

கைவிடப்பட்ட முஸ்லிம்கள்....


1998 நவம்பர் மாதம் செல்வராஜ் என்ற போலிஸ்காரர் முஸ்லீம் இயக்கமாகிய அல் உம்மா அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து போலீஸ்ரவுடிகளும் இந்துத்துவ வெறியர்களும் கோவை வீதிகளெங்கும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை முன்னின்று ஏவினர். இக்கலவரத்தில் பத்தொன்பது முஸ்லீம்கள் கொல்லப்படுகின்றனர். முஸ்லீம்களின் உடைமைகள் சூறையாடப்படுகின்றன. ஷோபா என்னும் முஸ்லீம் ஒருவரால் நடத்தப்பட்ட ஜவுளிக்கடை அழிக்கப்படுகிறது.

'தான் தேர்தலில் ஜெயித்தால் முஸ்லீம்களைப் பயங்கரவாதிகளைப் போல கண்காணிக்கிற உக்கமேடு செக்போஸ்ட் உட்பட பல செக்போஸ்ட்களை நீக்குவேன்' என்று உறுதியளித்து அதை நிறைவேற்றவும் செய்த அப்போதைய கோவைச் சட்டமன்ற உறுப்பினர் சி.டி.தண்டபாணி என்னும் தலித் சமூகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ வேட்டி உரியப்பட்டு உள்ளாடையோடு இந்துத்துவ மற்றும் போலீசுக் குண்டர்களால் சாலையில் விரட்டப்படுகிறார்.

அதைத் தொடர்ந்து நிகழ்ந்த குண்டுவெடிப்புகளையட்டி அப்போதைய கருணாநிதி அரசு பொடா சட்டத்தைக் கொண்டுவந்து அல் உம்மாவைத் தடை செய்து நூற்றுக்கணக்கான முஸ்லீம் இளைஞர்களைச் சிறையிலடைத்தது. தன் கட்சியைச் சேர்ந்த தண்டபாணி எம்.எல்.ஏ இறந்தபோதுகூட அவரைப் போய்ப்பார்க்காத கருணாநிதி அப்போதைய பிஜேபி எம்.எல்.ஏ வேலாயுதம் உடல்நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சென்று உடல்நலம் விசாரித்தார். இதில் கருணாநிதியின் துரோகம் இத்தன்மையெனில் தமிழ்த்தேசிய அமைப்புகளின் துரோகம் வேறுமாதிரியானது.

ராஜிவ் கொலையையட்டி 24 அப்பாவித்தமிழர்கள் சிறையிலடைக்கப்பட்டு அவர்களில் ஆறுபேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர்தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு என்னும் அமைப்பு அவர்களின் விடுதலைக்கான இயக்கம் ஒன்றை அமைத்தது.

இது வெறுமனே அவர்களது வழக்கு நிதிக்கான நிதி சேகரிப்பு இயக்கமாக மட்டும் அமையவில்லை. மரணதண்டணை ஒழிப்பு இயக்கமாக மாறியது. முதன்முதலாக மரணதண்டனை ஒழிப்பு என்னும் கருத்தாக்கம் மக்கள் மத்தியில் வீச்சாக பிரச்சாரம் மூலம் முன்வைக்கப்பட்டது. இறுதியில் கருணாநிதியிலிருந்து சோனியா வரை அதை ஏற்குமளவிற்கு அவ்வியக்கம் வெற்றிகண்டது.

ஆனால் இந்த தமிழ்த்தேசியர்கள், முஸ்லீம் இளைஞர்கள் பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டபோது அவர்களுக்காய் இயக்கம் நடத்தவோ நிதி திரட்டித்தரவோ முன்வரவில்லை. பின்னால் கொண்டுவரப்பட்ட பொடாவை எதிர்த்த வீச்சும் வீரியமும் கருணாநிதியால் முஸ்லீம்களை ஒடுக்குவதற்காகவே கொண்டுவரப்பட்ட மூத்த பொடாவை எதிர்ப்பதில் இல்லை.

தமிழர்கள் என்பவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் என்பதாகவே இன்றுவரை தமிழ்த்தேசிய அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்கின்றன. மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் என்பதற்காகக் குரல்கொடுத்தவர்கள் அப்சலின் மரணதண்டனைக்கு எதிராய்ப் பேரளவு எதிர்வினை எதுவும் நிகழ்த்தவில்லை. இப்போது கோவைகுண்டுவெடிப்பு தொடர்பான தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. பாட்சா, அன்சாரி உட்படப் பலரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கும் இன்னும் சில நாட்களில் மரணதண்டனை விதிக்கப்படலாம். நாளை அவர்களுக்காக மரணதண்டணை ஒழிப்பு இயக்கத்தை நடத்த தமிழ்த்தேசிய அமைப்புகள் முன்வருமா?

கேரளாவில் இயங்கிவரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மதானி. மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தலில் நம்பிக்கையுள்ள ஒரு அரசியல்கட்சி. முஸ்லீம்கள் மட்டுமில்லாமல் கணிசமான தலித்துகளும் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வியக்கத்தின் தலைவர் மதானியைக் கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்று காவல்துறை கைதுசெய்து ஒன்பது ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

சிறைக்குச் செல்லும்போது 90 கிலோ எடையிருந்த மதானியின் தற்போதைய எடை 48 கிலோ. அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கைக்கால்கள் உடல் எடைக்குறைவால் பிரச்சினையானபோது அவரை குறைந்தபட்சம் மருத்துவசிகிச்சைக்காகப் பிணையிலாவது விடுதலை செய்யவேண்டுமென்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த ஆறுமாதங்களுக்கு முன் தமிழக எழுத்தாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒரு அறிக்கையை அரசுக்கு அனுப்பினர். இவ்வறிக்கையில் அ.மார்க்ஸ், சாருநிவேதிதா, 'புதியகலாச்சாரம்' தோழர்.வீராசாமி, கவிஞர்.சுகிர்தராணி, வழக்கறிஞர்.ரத்தினம், கோ.சுகுமாரன், பேரா.திருமாவளவன் உட்படப் பலரும் பெரியார்தி.க, ஆதித்தமிழர்பேரவை போன்ற அமைப்புகளும் கையெழுத்திட்டிருந்தனர். ஆனாலும் மதானி பிணையில் விடுவிக்கப்படவில்லை.

ஆனால் இப்போது மதானி குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனாலும் அவரை விடுதலை செய்துவிடவில்லை. பெரியமனதோடு அவரைப் பிணையில் விடுவிக்க சம்மதித்திருக்கிறது. ஒன்பது ஆண்டுகாலம் எந்த குற்றமும் செய்யாமல் சிறையிலிருந்த மதானியின் மன உளைச்சல், உடல்நலக் குறைபாடு, பொருளியல் இழப்பு ஆகியவற்றை அரசு, நீதிமன்றம், சட்டம், போலீசு எப்படி ஈடுகட்டும்? இது மதானிக்கு மட்டுமல்ல, நிறுவனங்களால் குற்றவாளிகளாக்கப்பட்ட அனைவருக்குமான கேள்வியே.

நன்றி : சுகுணா திவாகர்

Saturday, August 04, 2007

DIFT நடத்தும் "சாதி ஒழிந்தது' நூல் வெளியீட்டு விழா

ஏக இறைவனின் திருப்பெயரால்...

நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

சாதி கொடுமைகளுக்கெதிராக போர்க்களம் பல கண்டவர் T.M. மணி அவர்கள். நீலப்புலிகள் இயக்கத்தின் நிறுவனர். 51 ஆன்டுகால போராட்டத்திற்கு பின் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அவர் எழுதிய நூல் "சாதி ஒழிந்தது" இந்நூலின் வெளியீட்டு விழாவில் தாங்கள் தவறாது கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி
.
நாள் : 05-08-2007
.
நேரம் : மாலை 6.00 மணி
.
இடம் : ஃபைஸ் மஹால் - எழும்பூர்
.
தலைமை : மு.குலாம் முஹம்மது
தலைவர், தாருல் இஸ்லாம் ஃபவுன்டேசன் டிரஸ்ட்
.
வரவேற்புரை : மெளலவி முஜீபுர் ரஹ்மான் உமரி
செயலாளர், தாருல் இஸ்லாம் ஃபவுன்டேசன் டிரஸ்ட்
.
நூலை வெளியிடுபவர்
அல்ஹாஜ் J.M. ஹாரூன் M.P அவர்கள்
.
முதல் பிரதி பெறுபவர்
அமீர் ஜவஹர் B.A.B.L அவர்கள்
.
ஆய்வுரை : கவிக்கோ. அப்துல் ரஹ்மான்
.
சிறப்புரை : டாக்டர் ஆயிஷா
Managing Trustee, Hidaya Welfare Trust
.
ஏற்புரை : T.M. உமர் ஃபாரூக்
.
நன்றியுரை: மெளலவி. கே.எம். இல்யாஸ் ரியாஜி
பொருளாளர், தாருல் இஸ்லாம் ஃபவுன்டேசன் டிரஸ்ட்

இந்நிகழ்ச்சி தாருல் இஸ்லாம் ஃபவுன்டேசன் டிரஸ்ட் எனும் நிறுவனத்தால் நடத்தப்படுகின்றது.

DIFT,Darul islam Foundation Trust,M.Gulam Mohamed,An end to casteism,T.M.Mani

Wednesday, August 01, 2007

கோவை குண்டு வெடிப்பு தீர்ப்புக்கள்

கோவை குண்டு வெடிப்பில் இன்று வழங்கப்பட்டு வரும் தீர்ப்பின் விபரங்கள் சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் இணையத்தில் அப்டேட் செய்யப்படுகின்றன.

தீர்ப்பு விபரம் :மதானி உள்பட 8 பேர் விடுதலை, (4 பேர் தமிழ்நாடு, 4 பேர் கேரளா) - 153 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு (71 பேர் மீத பெரிய குற்றச்சாட்டுக்களும் 82 பேர் மீது சிறிய குற்றச்சாட்டுக்களும் நிறுபிக்கப்பட்டுளதாக அறிவிப்பு) 6 பேர் மீது தீர்ப்பு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு - விடுதலையானவர்கள் - நவ்சாத், சர்தார், அக்கோஜி, அப்துல் ஹமீத், அப்துல் நாசர் மதானி, சபேர், ஆர்மி ராஜீ, அஸ்ரப் -KK நகர் வழக்கில் அனைவரும் குற்றவாளிகளாக அறிவிப்பு, 45 பேருக்கு ஜாமினுக்கு அப்ளை செய்ய அனுமதி - 102 பேருக்கு மேல் குற்றவாளிகளாக அறிவிப்பு - தொடரும் அநீதி மக்கள் கொந்தளிப்பு - 45 பேருக்கு ஜாமின் அறிவிப்பு - பாராபட்சமான, அநியாயமான இந்த தீர்ப்பை சிறுபான்மை உதவி அறக்கட்டளை வண்மையாக கண்டிப்பு. அரசியல் உள்நோக்கம் உள்ள தீர்ப்பு அறிஞர்கள், சட்ட வல்லுனர்கள் கருத்து.



.
.
கேரள பி.டி.பி தலைவர் மதானி மீது குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்படாததால் விடுதலை. அரசியல் உள் நோக்கம் கொண்ட திர்ப்பு, மதானியை விடுவித்தால் அந்த பரபரப்பில் மற்றவர்களுக்க தண்டனை அளித்தாலும் மக்கள் கண்டகொள்ளமாட்டார்கள் என்ற அரசின் தவறான மனப்பொக்கு, அப்பாவிகள் பலர் அநியாயமாக, பாராபட்சமாக குற்றவாளிகளாக அறிவிப்பு. 45 பொருக்கு ஜாமின் அப்லை செய்ய அனுமதி. 100 க்கும் மேற்ப்பட்டவர்கள் குற்றவாளிகளாக அறிவிப்பு. கெ.கே நகர் வழக்கில் அணைவரம் குற்றவாளிகளாக அறிவிப்பு. மேலும் படிக்க...