Tuesday, August 21, 2007

பி.ஜே & பாக்கர் மலேசிய மத்திய சிறையில் (குவாங்) அடைப்பு (BREAKING NEWS)

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

த.மு.மு.க.வுக்கு பாடை கட்டுவேன் என்று சொன்ன பி.ஜெ. அணிக்கு மலேசியாவில் பாடை கட்டியது யார்?



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

மலேசியாவில் த.த.ஜ. கூட்டம் சிறப்பாக நடந்த மாதிரி அவர்களது வெப் சைட்டில் செய்தி போட்டு பி.ஜெ.யின் ரசிகர்களை குஷp படுத்தினார்கள். அதற்கு ஆதாரமாக அவர்கள் வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியே அவர்களை பொய்யர்கள் என அடையாளம் காட்டியுள்ளது.

இவர்கள் உணர்வில் விளம்பரம் செய்த இடத்தில் நடத்தவில்லை. உணர்வில் விளம்பரம் செய்தபடி 9.30 முதல் 6.30வரை நடநத்தவில்லை. பத்துகேவ்ஸில் உள்ள எஸ்டி.சி. உணவு விடுதியில் (மொத்தமாக) பார்ட்டியாக வந்து சாப்பிடுவதாகக் கூறி சாப்பிட போன இடத்தில் பேசுவது போல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார்கள். தகவல் அறிந்து போலீஸ் வந்தது. கைது செய்வோம் என்றதும் ஓடி விட்டார்கள்.

மறுநாள் 20ஆம் தேதி மீண்டும் திருட்டுத்தனமாக நிகழ்ச்சி நடத்தினார்கள். தகவல் அறிந்து போலீஸ் வந்ததும் பி.ஜெ.யையும் பாக்கரையும் அம்போ என விட்டு விட்டு நொண்டியப்பாவான அபுபக்கர் என்ற தொண்டியப்பா கோவை ஜாபர் போன்றவர்கள் ஓடி விட்டார்கள். போலீஸ் பி.ஜெ.யையும் பாக்கரையும் கைவிலங்கு போட்டு இழுத்துச் சென்றது. பிறகு நிபந்தனை ஜாமீனில் விடப்பட்ட அவர்கள் 21ஆம் தேதி இஸ்லாமிய சமய விவகார துறை முன் ஆஜரானார்கள்.

இந்த துறையின் தலைவருக்கே லஞ்சம் தருவதாகக் கூறி ஒரு நாள் மட்டும் பேச அணுமதி தாருங்கள் என பி.ஜெ. பேரம் பேசியுள்ளார். பி.ஜெ. மீது வழக்கு தொடர விரும்புகிறீர்களா? என பி.ஜெ.யின் எதிர் தரப்பை இஸ்லாமிய சமய விவகார துறை கேட்டுள்ளது.

பி.ஜெ.யால் முன்னாள் சகாக்கள் எனப்படுவோர் பி.ஜெ.யை எதிர்த்து வேலை செய்தவர்களை அணுகி வழக்கு போடா வண்ணம் சமாதானம் செய்தார்கள். எனவே இஸ்லாமிய சமய விவகார துறை பி.ஜெ. பாக்கர் வகையறாக்களை போலீஸிடம் ஒப்படைத்து 24 மணி நேரத்திற்குள் நாடு கடத்த உத்தரவு இட்டது.

நுழலுந் தன் வாயாற் கெடும் என்பது போல் பத்துகேவ்ஸில் உள்ள எஸ்டி.சி. உணவு விடுதியில் பி.ஜெ. பாக்கர் ஆகியவர்கள் பேசியதை சி.டி.யாக ஆக்கி கொடுத்து எங்கள் பேச்சில் என்ன தப்பு இருக்கிறது என்று கேட்டுள்ளார்கள். அதைப் பெற்ற மலேசிய போலீஸ் மலாய் விஸிட் விஸா அனுமதியை தவறாக பயன்படுத்தியதற்கு இதுவே ஆதாரம். இந்த ஆதாரம் இல்லாததால்தான் உங்கள் எதிர் தரப்பை வழக்கு போடச் சொன்னோம்.

உங்களுக்கு எதிராக நீங்களே ஆதாரம் தந்து விட்டீர்கள் என்று கூறி போலீஸ் ரவாங் பகுதியில் உள்ள குவாங் மத்திய சிறையில் பி.ஜெ, பாக்கர் ஆகியவர்களை அடைத்து விட்டது.


22ஆம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. த.மு.மு.க.வுக்கு பாடை கட்டுவேன் என்று சொன்ன பி.ஜெ. அணிக்கு மலேசியாவில் பி.ஜெ. அணியே பாடை கட்டி விட்டது.

இந்தியாவில்தான் இருக்கிற அமைப்புகளை இரண்டாக ஆக்கினார் என்றால் மலேசியாவிலும் கிம்மா தேசிய ஒருங்கிணைப்பு குழுவையும் உடைத்து விட்டார்.

செய்தி :மலேசிய சகோதரர்கள்

தொகுப்பு : பஸ்லுல் இலாஹி

No comments: