Friday, August 17, 2007

ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் - துபை

துபாயில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் என்ற அமைப்பினை ஏற்படுத்தி தங்களது ஊரில் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வமைப்பின் நிர்வாகக்குழுக்கூட்டம் துபாயில் ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துவக்கமாக பொதுச்செயலாளர் அல்ஹாஜ் சம்சுதீன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் அல்ஹாஜ் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆலிம் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் விபரம் வருமாறு : கெளரவ தலைமை ஆலோசகராக ஹெச்.ஹஸன் அஹமது , தலைவராக மெளலவி என்.எஸ்.ஏ. நிஜாமுதீன் ஆலிம் , துணைத்தலைவராக அல்ஹாஜ் சம்சுதீன் , பொதுச்செயலாளராக கே. முஹம்மது ஹிதாயத்துல்லா, பொருளாளராக ஏ.அஹமது இம்தாதுல்லா சேட், ஆடிட்டராக ஹெச். அமீர் சுல்தான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் செயற்குழு உறுப்பினர்களாக ஹெச்.இப்னு சிக்கந்தர் ( தேரா ) , ஏ.முஹம்மது தாஹா ( அல் கூஸ் ) , ஏ. ஜஹாங்கீர் ( அஜ்மான் ), முஹம்மது ரிஸ்வி ( ஷார்ஜா ), ஏ.அஹமது இஸ்மத்துல்லாஹ் சேட் ( சோனாப்பூர் ) , ஜாஹிர் உசேன் ( ராசல் கைமா ) மற்றும் எஸ்.அமீனுதீன் , கஸ்ஸாலி ( அபுதாபி ) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பத்தாம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை கெளரவிப்பது எனவும் , இம்முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் தாயகப் பிரதிநிதிகள் தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர் , மெளலவி எஸ். அஹ்மது பஷீர் சேட் ஆலிம் , மெளலவி ஏ உமர் ஜஹ்பர் ஆலிம், ஹெச்.ஏ. முஹம்மது சுல்தான் அலாவுதீன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

www.mudukulathur.com என்ற இணையத்தளத்தை ஏற்படுத்துவது, மின்னஞ்சலில் உலகெங்கும் உள்ள முதுகுளத்தூர் மக்களை muduvai@googlegroups.com ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் தொடர்புக்கு 050 5196433 எனும் அலைபேசியிலோ அல்லது
muduvaihidayath@gmail.com எனும் மின்னஞசல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

தகவல் : முதுவை ஹிதாயத்

No comments: