"இஸ்லாமிய சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும்"
அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்
Al-Sheikh. Jamal Mohamed Madhani.
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
தமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.
"இஸ்லாமிய சகோதரத்துவமும், சமூக ஒற்றுமையும்"
அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்
Al-Sheikh. Jamal Mohamed Madhani.
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்கப் போகிறோம், வாருங்கள் என்று கூறி சமுதாயத்தை ஏமாற்றும் ஒரு கூட்டம் நம்மிடைய உளா வருவதை நாம் அறிந்ததே! இவர்கள் வோடதாரிகள் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இந்த ஆக்கம். இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம், அந்த இடங்களில் இஸ்லாத்தை எப்படி புரிந்து நடக்கிறார்களோ, அவ்வாறு இவர்கள் வோடமிட்டு மக்களை தங்களின் கொள்கையற்ற இயக்கத்தில் சேர்ப்பார்கள். இவர்களின் வோடத்தை அறிய இவர்கள் தற்போது செயல்படும் இடங்களை ஆராய்ந்தால் நன்றாக தெரிய வரும். இவர்களின் வோடத்தை பாருங்கள்,
தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர்களிடம் தவ்ஹீத் வோடத்தில் சென்று அவர்களிடம் வசுல் வோட்டை நடத்துவார்கள். சுன்னத் வல் ஜமாத் என்று கூறி கொள்பவர்களை அவர்களின் வோடத்தில் சென்று வசுல் வோட்டை நடத்துவார்கள். இவர்களின் வோடத்தால் அதிகமான மக்கள் ஏமாற்றப்பட்டு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் இணைகிறார்கள். இந்த இயக்கத்தில் இணைந்த பின்னர் இந்த இயக்கத்தை விட்டு வெளியேறவும் முடியாமல், உள்ளே இருக்கவும் முடியாமல் திணறுகிறார்கள். இந்த கொள்கையற்ற கோமான்கள், சவுதியில் இடும் முழு தவ்ஹீத் வோடத்தாலும், தமிழகத்தில் இடும் அரை தவ்ஹீத் வோடத்தாலும், தவ்ஹீத் கொள்கையில் உள்ள மக்களும் மற்றும் பல தவ்ஹீத் மார்க்க அறிஞர்களும் கூட இவர்களின் சதி வலையில் விழ்ந்து இவர்களை தூக்கி பிடிக்கிறார்கள். இஷ்வான்களின் கொள்கையை (இவர்களுக்கு கொள்கை என்று ஒன்று கிடையாது) ஆரம்பம் முதலே அதன் குறைகளை சுட்டிக்காட்டி எதிர்த்து வரும் ஸலபிகளின் கல்விக் கூடங்களில் படித்து வரும் பல ஆலிம்களும் கூட இவர்களின் சதி வளையில் சிக்கியுள்ளார்கள்.
நாங்கள் இஸ்லாமிய ஆட்சி அமைக்க போகிறோம் என்று ஏமாற்றும் இவர்கள், இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய எதையாவது செய்தார்களா என்றால், இல்லை என்பது தான் பதில். தியாகிகளை போல உலா வரும் இவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளுவது நல்லது. தமிழகத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் முன்னால் தலைவர் பொருந்தகை மு. குலாம் முஹம்மது க்கு இந்த கொள்கையற்ற இயக்கத்தில் மாத சம்பளம் ரூபாய் 22 ஆயிரம் ஆகும். நாங்கள் தஃவா செய்கிறோம் என்று கூறி மக்களை ஏமாற்றி பணம் வசுலித்து 22 ஆயிரம் ரூபாயை தங்களது தரிக்கா தலைவருக்கு சம்பளமாக கொடுத்து கொலுக்க வைத்தவர்கள், இவர்கள். இன்று அதை குறை கூறுகிறார்கள். அதுபோல, இந்த கொள்கையற்ற இயக்கத்தின் கொள்கையற்ற தலைவர் திருவாளர் குலாம் முஹம்மது தனது மகளின் திருமணத்தில் இந்த கொள்கையற்ற இயக்கத்தின் அனைத்து இயக்க பொருப்பாளர்களையும் அழைத்து திருமணத்தை ஆடம்பரமாகவும், பெண்களை ஃபர்தா இன்றி மேடையில் ஏற்றியும் சாதனை படைத்தார். இதை இயக்கத்தில் உள்ள சிலரும் இயக்கத்தில் வெளியில் உள்ளவர்களும் இந்த மேகா திருமணத்தைப் பற்றி கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள், அப்போது இந்த உத்தமா இயக்கம் என்ன செய்தது தெரியுமா? தனது இயக்க தாயிகளுக்கு (இந்த தாயிகளுக்கு 10 முதல் 15 திருக்குர்ஆன் வசனங்கள் மட்டும் தான் தெரியும் என்பது வேறு விஷயம்) திருவாளர் குலாம் நடத்திய திருமணத்திற்கு இஸ்லாமிய சாயம் புசுவது எப்படி? என்று பயிற்சி அளித்தது. இன்று அந்த திருமணம் தவறு என்று தம்பட்டம் அடிக்கிறது அதே கும்பல்.
அன்று ஜனநாயகம் ஷிர்க் என்று ஊர் ஊராக தம்பட்டம் அடித்து திரிந்த இந்த கும்பல் இன்று ஜனநாயகத்தை தனது தர்மிக வழியாக தேர்ந்தெடுத்து உண்ணா விரதம் இருக்கிறது. அல்லாஹ் தான் நமக்கு ஆட்சியாளன், அவனிடம் தான் நாம் எல்லாவற்றையும் கேட்க வேண்டும் என்று ஏமாற்றிய இவர்கள், இன்று சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறி கருணாநிதியிடம் பிச்சை கேட்கிறார்கள்.
இன்னும் இவர்களின் அறியாமையையும் ஏமாற்று வித்தையையும் கேளுங்கள். 'நான் இஸ்லாமிய ஆட்சி அமைத்து வெற்றியாளனக மதினா மற்றும் மக்காவில் நுழையும் போது செய்ய வேண்டிய முதல் காரியம் அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்பது தான் (நவுதுபில்லாஹ்)' என்ற இமாம் (?) கொமைனியின் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு, எதிர்ப்புகள் கிளம்பிய பின்னர் இமாம் கொமைனி இஸ்லாமிய ஆட்சிதான் அமைத்தார் என்றார்கள். பின்னர் இல்லை என்றார்கள். அபுபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் ஜனாஸாவை தோண்டி எடுப்போன் என்று சொன்னவருக்கு இஸ்லாமிய சாயம் புசினார்கள், இந்த மகான்கள். அதுபோல், 'கிலாஃபத் இல்லாததால் ஜும்ஆ தொழ தேவை இல்லை' என்று கூறி ஜும்ஆ தொழ மறுத்த உலக புகழ் (?) பெற்ற அறிஞர் (?) செய்யத் குதுப் அவர்களை போற்றி புகழ்ந்து 'நவீன இஸ்லாமிய எழுச்சியின் சிந்தனைச் சிற்பி' என்ற புத்தகத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்கள். இது போன்ற ஒரு அறியாமையை எவரும் உலகில் வெளிபடுத்தியது கிடையாது. இப்படிபட்ட அறிஞரை (?) இவர்கள் போற்றி மக்களையும் தனது இயக்கதவர்களையும் ஏமாற்றி வருகிறார்கள். இவர்கள் எளிதாக ஏமாற்ற காரணம், இவர்களின் இயக்கத்தில் உள்ளவர்களில் அதிகமானோர், செய்யத் குதுப் என்று எழுத கூட தெரியதா பள்ளி மாணவர்கள் மற்றவர்கள் தலையாட்டி பொம்மைகள்.
இன்று இவர்கள் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த போகிறார்களாம். நாம் இவர்களிடம் கேட்கிறோம், இன்று உங்கள் இயக்கத்தின் பலத்தை காட்ட வேண்டும் என்று உயரிய (?!) நோக்கத்தில் அணிவகுப்பு நடத்துகிறீர்கள். ஆனால், இஸ்லாமிய ஆட்சி செய்ய வேண்டிய ஒரு விஷயத்தை கூட இவர்கள் செய்யவில்லை. இசை ஹராம் என்று கருதும் உங்களின் கொள்கைப்படி இசையில்லாமல் இந்த அணிவகுப்பு நடக்குமா? அல்லது உங்களின் வழிகாட்டி அறிஞர் யுசுப் அல் கர்ளாவி அவர்களின் கருத்துப்படி இசை கூடும் என்று அடிப்படையில் இசை அடிக்க படுமா? அல்லது உங்களின் கேரளா பிரிவின் சுன்னத்துபடி இசை அடிக்கப்படுமா? என்ன? குழம்பிவிட்டிர்களா? பாவம்! இவர்கள் தான் குழப்பத்தின் மறு பெயர். இவர்களின் வோடங்கள் இனி கிழிக்கப்படும் இன்ஷா அல்லாஹ். கிழிக்க போவது யாருமல்ல, முன்னால் சகோதரர்களும் இவர்களின் கூற்றுப்படி இன்னால் முனாஃபிக்களுமான (இவர்களின் கருத்துப்படி இவர்களின் தவறை எதிர்த்தால் முனாஃபிக்) இந்த கொள்கையற்ற இயக்கத்திற்க்காக அல்லும் பகலும் உழைத்தவர்கள்.
குறிப்பு: தற்போது இவர்களிடம் என்ன குறை சொன்னாலும் குலாம் தான் அப்படி செய்தார், நாங்கள் அப்படி செய்வில்லை என்கிறார்கள். இது சுத்த பொய். குலாம் இவர்களுடன் இருக்கும் போது இவர்களும் முடிவெடுக்கும் விசயங்களில் ஈடுபட்டு இருந்தார்கள்.
"குர்ஆனை சங்கைப் படுத்துவோம்"
அஷ்ஷேய்க். முகம்மது அஸ்ஹர் ஸீலானி அவர்கள்.
Al-Sheikh. Mohamed Azhar Seelani
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
திரு. முகம்மது அலி ஜின்னா அவர்கள்
25.05.2008 அன்று தங்கள் தினமலர் நாளிதழில் 2ம் பக்கம் ""தமிழகத்தில் இளைஞர்களுக்கு அணிவகுப்பு பயிற்சி'' பின்னணி குறித்து போலீசார் விசாரனை'' என்ற தலைப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ள செய்தி முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டதாகவும் முஸ்லிம் விரோதப் போக்குடனும் அமைந்துள்ளது மனித நீதிப் பாசறைக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது.மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் தேசிய இயக்கமான ""பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா'' சார்பாக எதிர்வரும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின அணிவகுப்பு நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
தமிழகத்தில் மட்டுமல்ல; பாப்புலர் ஃபிμண்ட் ஆஃப் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக்கும் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் இந்த சுதந்திμதின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது.தமிழகத்தில் அதற்கான அணிவகுப்பு பயிற்சி மற்றும் ஒத்திகைகளை தமிழகம் முழுவதும் நடத்தி வருகின்றோம். ஆனால் அது போலீஸுக்கு இணையான அணிவகுப்பு பயிற்சி அல்ல.மேலும் தமிழக வீதிகள் முழுவதும் இந்த சுதந்திμதிக் அணிவகுப்பு சுவர் விளம்பμம் செய்து வருகின்றோம். காவல்துறை உயர் அதிகாரிகளிடம் இது குறித்து அதிகாரப் பூர்வமாக தெரிவித்துள்ளோம்.இந்நிலையில் தங்கள் நாளிதழில் எங்கள் அமைப்பின் சுதந்திμதின அணிவகுப்பு பயிற்சி குறித்தும் எங்கள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் தவறாகவும், அவதூறாகவும் உண்øமக்குப் புறம்பாகவும் எழுதியிருப்பது பத்திரிகை தர்மத்திற்கு எதிரானதாகும். அதுமட்டுமின்றி முஸ்லிம்களின் சுதந்திர உணர்வை களங்கப்படுத்தும் செயலாகும்.
நமது தேசத்தின் சுதந்திரம் என்பது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடிப் பெற்ற சுதந்திμம். 1757ம் ஆண்டு வங்காளத்தில் சிராஜ் உத் தவ்லா முதல் 1947ம் ஆண்டு வரை இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக இரத்தம் சிந்தி இருக்கிறார்கள் முஸ்லிம்கள். 1947ம் ஆண்டு நமது தேசம் விடுதலையடைந்தபோது இருந்த முஸ்லிம்களின் ஜனத் தொகையைவிட 2 மடங்கு முஸ்லிம்கள் இந்த சுதந்திர போரில் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்திருக்கின்றார்கள்.
சுதந்திரமடைந்த 60 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை வரலாற்றின் வீர வடுக்களிலிருந்து முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப்பட்டே வந்திருக்கின்றார்கள். போராடிப்பெற்ற சுதந்திμத்தில் முஸ்லிம்களின் உரிமையைப் பறைசாற்றும் விதமாகவும், இந்துக்களுடன் இணைந்து போராடிய ஒற்றுமையை நிலைநிறுத்தும் முகமாகவும் இந்த சுதந்திர தின அணிவகுப்பு நடக்கவிருக்கின்றது. நாங்கள் எப்பொழுதும் வெளிப்படையான அமைப்பு தான். எங்களிடம் எந்த திரைமறைவுமில்லை. பயங்கரவாதத்தை நாங்கள் ஆதரிப்பதும் இல்லை. மேலும் ஆள்கடத்தல், ஆயுதம் பதுக்கல் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டதாக எங்கள் இயக்கத்தினர் மீது கடலூர் போலீசில் சில ஆண்டுகளுக்கு முன் வழக்குப் பதிவாகியுள்ளதாக தாங்கள் குறிப்பிட்டுள்ளது முற்றிலும் பொய்யானதாகும்.
நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் நடத்தும் அணிவகுப்பை பயங்கμவாதக் கண்கொண்டு பார்க்காத உளவுத்துறையினர், மனித நீதிப் பாசறையின் அணிவகுப்பு ஒத்திகையை சீர்குலைக்க இதுபோன்ற தவறான செய்திகளை பத்திரிகைகளுக்கு வழங்குவது அவர்களுடைய துவேஷ சிந்தனையைத் தெளிவாகக் காட்டுகின்றது. இதுபோன்று சட்ட ஒழுங்கையும், சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் விதமாகவும், பாரபட்சமாக துவேஷ சிந்தனையுடனும் செயல்பட்டு வரும் காவல்துறை மற்றும் உளவுத்துறையில் உள்ள கருப்பு ஆடுகளை இனங்கண்டு அவர்களைக் களையெடுக்க வேண்டுமென தமிழக அμணிச மனித நீதிப் பாசறை கேட்டுக் கொள்கின்றது. ""இந்தியாவில் முஸ்லிமாக வாழ்வது தண்டனைக்குரிய குற்றமா? என்று கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி. பிருந்தா கரத் அவர்கள் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வியை மனித நீதிப்பாசறை இன்று மக்கள் மன்றத்தில் கேட்கின்றது. என்று மனித நீதிப் பாசறை சார்பாக அதன் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது.

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. ..
வ அலைக்கு முஸ்ஸலாம், வாங்க ஒமர் பாய். எங்க வல்லத்துல இருந்தா வர்றீங்க.
என்ன அஹமது? கிண்டல் பண்றீங்களா. வல்லம் மாநாடு தான் கால வாரி விட்டுடுச்சே. மொத நாளு வெளியான கூட்டத்தோடயே நான் ஓடி வந்துட்டேன்.
அப்போ ஏகப்பட்ட கூட்டம் வந்துடுச்சோ.
அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்ல. வந்த கூட்டமே மொத்தம் 40 இல இருந்து 50 ஆயிரம் தான் தேறும். அதுக்கே ஒழுங்கான வசதி செஞ்சு குடுக்காததுனால பல பேரு ஏந்தான் வந்தோமோன்ட்டு வருத்தத்தோட திரும்பி போயிட்டாங்க.
அப்போ.. .. 10 இலட்சம் பேரு கூடப்போறாங்க. 100 ஏக்கர்ல ISO (ஐஎஸ்ஓ) தரத்தோட பல ஏற்பாடுகள்ன்னு சொன்னாங்களே.
என்ன அஹமது தெரியாத மாதிரி கேக்குறீங்களே. பில்ட் அப் பண்றதுங்குறது நம்மாளு பிஜே ரத்தத்துலயே ஊறுனதாச்சே. தவிர ஒண்ண, பத்தா சொல்றது தன்னோட வளமைதான்னு சமீபத்துல WIN TV லயே அவரு சொன்னாரே மறந்துட்டீங்களா.
நாந்தான் அந்த கூத்தெல்லாம் பாக்குறதில்லைன்னு பல முற சொல்லிட்டேனே. சரி சரி நீங்க வல்லத்தப் பத்தி சொல்லுங்க.
கிட்டத்தட்ட 6 மாச காலமா, டிவில வளரும் சினிமா ரேஞ்சுக்கு ஒவ்வொரு நாளும் இதோ புல்டோசர் தரையை சமன் செய்கிறது. இதப் பாத்தீங்களா, சுத்தி மறைக்கிறதுக்கு ஷீட்டு வந்து ஏறங்குது. இதோ இப்போ பாக்குறீங்களே இது தான் ஷெட் போடுறதுக்கான தளவாட சாமான்கள். அப்புடி இப்புடின்னு தெனந்தோறும் ஒவ்வொரு ஸ்நாப் ஆ காமிச்சு என்னவோ அந்த எடத்த அப்புடியே ஒரு அவசர கால கேம்ப் ரேஞ்சுக்கு சொன்னாங்க. ஆனா ஒண்ணுமே செய்யல.
ஐயய்யோ. அப்புடீன்னா மக்கள் ரொம்ப செரமப்பட்டிருப்பாங்களே.
அதுனால தான் திருவிழா பாக்கன்னு வந்த கூட்டம் திரும்பிப் பாக்காம ஓடிடுச்சு. ஏகத்துவ பிரச்சாரத்த எல்லாம் பின்னால தள்ளிட்டு, எலும்பு கூடு பேசுது ஐயா வாங்க, அம்மா வாங்கன்னு சித்திர திருவிழா ரேஞ்சுக்கு கூப்பாடு போட்டாங்க. அத நம்பி திருவிழா வேடிக்கையைப் பாக்கலாம்னு வந்த கொஞ்ச நெஞ்ச பேரும் அடிக்கிற வெயிலுக்கு முகத்த கழுவக்கூட தண்ணி கெடக்ய்காம தள்ளாடிப் போயிட்டாங்க.
இருந்தாலும் பந்தல்ல கூட்டமா இருந்துச்சுன்னு கேள்விப்பட்டேனே.
வேற வந்த சனங்க இந்த வெயிலுல எங்க போயி நிப்பாங்க. அந்த கூட்டத்துலயும் அதிகமான பேரு தமுமுக காரனுவளாத்தான் தெரிஞ்சானுங்க. விசாரிச்சதுல என்ன இருந்தாலும் தவ்ஹீது மாநாடுன்னு சொல்லியிருக்காங்களே. ஷைத்தானே சொன்னாலும், ஆயத்துல் குர்ஸியோடய மகிமைய புறந்தள்ளாம ஏத்துக்கிட்டு இருக்குற நாம, பாகுபாடு பாக்காம மார்க்க பிரச்சாரங்கள்ல்ல கலந்துக்கத்தானே செய்வோம்னு சொல்லி ஆச்சரியப்பட வச்சுட்டாங்க.
இட ஒதுக்கீடுன்னு சொல்லி கும்பகோணத்துல கூட்டத்த சேர்த்து, கடைசில ஜெயாகிட்ட போயி கோனிகா பஷீருக்கு சீட்டு கேட்டு நின்னாப்ல, இப்போ தவ்ஹீது பேர்ல கூட்டத்த கூட்டி யாருகிட்ட போயி நிக்கப் போறாரோ.
அது தனியான அக்கப்போர் தான் போங்க. அதுக்கு அதுக்கு முன்னால இந்த தவ்ஹீதுங்குறத இவங்க எப்புடியெல்லாம் வித்து காசாக்குறாங்கன்னு கேளுங்க.
அதோட சேர்த்து ஓடாத குர்ஆன் CD யை குடுத்து காசு பாத்துட்டாங்களாமே.
சொல்றேன் அஹமது. விளக்கமா ஒன்னொன்னா சொல்றேன். பொறுமையா கேளுங்க. முதல்ல தமிழகத்தில் தவ்ஹீதின் வரலாறுன்னு, சுட்டுக்கிட்டு வந்த பத்திரிக்கைல ஒரு இஸ்ஸு முழுக்க எழுதியிருக்காங்க.
அதுல என்னங்க தப்பு கண்டுபுடிச்சீங்க. ஒரு வரலாறை அடுத்த தலைமுறைக்கு சொல்றது தப்பா.
அப்புடி இல்ல அஹமது. முஸ்லிம்களோட வரலாத்த சங்பரிவாரம் மாத்தி எழுதுதுன்னு சொல்லிட்டு, முஸ்லிம்களோட அடிப்படை அறிவான தவ்ஹீத் பத்துன கட்டுரைய முஸ்லிம்களே மாத்தி எழுதலாமா.
விரிவா சொல்லுங்க ஒமர் பாய்.
அஹமது, 1980 கள்ல்ல, மதீனாவுல இருந்து திரும்பி வந்த சில அறிஞர்களோட கடும் முயற்சியால தான் தமிழகத்துல தவ்ஹீத் பிரச்சாரம் தளிர்விட்டதுங்குறது தவ்ஹீத்வாதிகள் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் நம்ம தலைவரோட அந்த பழைய முன்னோடிகள் யாரும் இல்லங்குறதுனால, இப்போ கெடச்சுருக்குற புதிய ரசிகர்கள்கிட்ட தன்ன ஒரு ஹீரோ, தியாகி ரேஞ்சுக்கு காட்டிக்கிறதுக்காக, அவுங்கள எல்லாம் தடம் மாறிட்டாங்கன்னு கூசாம எளுதியிருக்காருங்க.
அடப்பாவமே. அப்போ இவரோட இல்லன்னா, அவுங்க கொள்கையே மாறிப்போச்சுன்னு இவரு சொல்றாரோ.
அதவிட தமாசு என்னான்னா, மவுத்தாப்போன ஒண்ணு ரெண்டு பேரு மட்டும் கொள்கைல உறுதியா இருந்து மரணிச்சுட்டதா எளுதியிருக்காங்க. அதுபடி பாத்தா, மவுத்தாப் போனா மட்டும் தான் கொள்கைல உறுதின்னு ஒத்துகிடுவாங்க போல.
வேற என்ன எளுதியிருக்காங்க.
சொல்றேன். அதவிட எதையெல்லாம் மறச்சுட்டாங்கங்குறதையும் சொல்றேன் கேளுங்க. தவ்ஹீது பிரச்சாரத்துல மும்முரமா ஈடுபட்டுகிட்டு இருந்தப்போ, எதுத்து வந்தவங்க அடிச்சதுல பல்லுப் போச்சே. அந்த மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி பத்தி ஒண்ணுமே எளுதல.
அதுதான் அவரு சீடரு அதிர பாருக்கு.. .. பல்லுப்போயி சொல்லுப் போன மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதின்னு ஒரு கட்டுரைல எழுதியிருந்தாரே.
பாவம் அந்த அதிரை, என்ன செய்வாரு? தலைவர் பாணியில எதுகை மோனையோட எழுதுறதா நெனெச்சு எளுதியிருப்பாரு. தவ்ஹீதுக்காகத்தான் பல்லுப் போச்சுங்குற வெவரம் அவருக்கு எங்க தெரிஞ்சுருக்கப் போவுது. அத தவிர, ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி என்ன தலைவர மாதிரி கருப்பு சாயத்த அள்ளி அப்பிக்கிட்டா வந்து நிக்குறாரு. அதுனால அதிரை அப்புடி எளுதியிருப்பாரு விடுங்க.
சரி விட்டுடுவோம். நீங்க தொடருங்க.
இம்தாதி மட்டுமில்ல, இந்த பிஜே சொன்னாருங்குறதுக்காக உண்மையான தவ்ஹீத்வாதிகளான JAQH ஆளுங்களோட மல்லுக்கட்டி, திருச்சி சிங்காரத் தோப்பு பள்ளிய PJ வுக்கு வாங்கிக் குடுத்தாரே. அந்த அலி அக்பர் உமரியப் பத்தியும் ஒண்ணும் எளுதல.
அடப்பாவமே. தவ்ஹீது பிரச்சாரத்துக்காக ஊரு ஊரா சுத்துனவராச்சே அவரு. தவிர இன்னைக்கு வரைக்கும் வீரியமான தவ்ஹீது பிரச்சாரத்துல தான ஈடுபட்டுக்கிட்டு இருக்காரு, பஹ்ரைன், குவைத், சவுதின்னு பல பகுதிகள்ல்ல அவரு போயி பிரச்சாரம் பண்ணுனதா சொன்னாங்களே. அந்த அலி அக்பர் உமரியவே விட்டுட்டாரா. அப்போ ஆத்தங்கர அலாவுதீன் பாகவிய பத்தியும் ஒண்ணுமே சொல்லலியா.
அட என்னங்க அஹமது. இஸ்லாமிய பிரச்சார மையங்கள்ல்ல அதிகாரப்பூர்வமான அழைப்பாளர்களா இருக்குற மவ்லவிகளையே கண்டுக்காம மறைச்சவரு, ஒரு கிராமத்துல இருந்தாலும் அழைப்புப் பணிக்காக தன்னோட ஓய்வு நேரத்த முழுமையாக செலவழிக்கிற அலாவுதீன் பாகவியப் பத்தியா சொல்லப்போறாரு.
ஒமர் பாய் அலாவுதீன் பாகவின்னு சொன்னதும் தான் ஞாபகம் வருது. நம்மள்ட்ட ஒரு அற்புத அலாவுதீன் இருந்தாரே. அவரு எங்க போனாரு. மாநாட்டுக்கு சிறப்பு அழைப்பாளரா கூட வரலியே.
என்ன அஹமது. புரியாத மாதிரி கேக்குறீங்க. டிவி சீரியல்ல நல்லா நடிக்காதவங்கள ஓரம் கட்டிட்டு நல்லா நடிக்கிறவுங்களத் தான போடுவாங்க. அத மாதிரி நம்ம அண்ணனோட மெகா சீரியல்ல அற்புத நடிகர் அலாவுதீனுக்கு ஓய்வு குடுத்துட்டு புதுப்புது நடிகர்கள எறக்கிட்டாங்கள்ல்ல.
அதுவுஞ் சரிதான். மெகா சீரியல் ரேஞ்சுக்குத்தான் இங்க பணிகள் நடக்குது. ஆமா இந்த மாநாட்டு விஷயங்களுக்கு டிவில ஒருத்தரு வந்து சாட்சி சொன்னாராமே.
அது ஒரு பெருங்கூத்து. கடைசில வேலிக்கு ஓணான் சாட்சிங்குற மாதிரி அது ஆகிப்போச்சு.
என்ன ஒமர் பாய், நடந்தது என்னன்னு கேட்டா பழமொழிய சொல்லிக்கிட்டு இருக்கீங்க.
அதாவது அஹமது, வேலி எவ்வளவு பலமானதுன்னு அத பொத்துக்கிட்டு வந்த ஓணான் சாட்சி சொன்னதா சொல்லுவாங்கள்ல்ல, அந்த கதயா, இவுங்களோட டிவில சம்பளம் வாங்குற ஒருத்தர புடிச்சுகிட்டு வந்து சாட்சி சொல்லச் சொன்னா, இவுங்களோட செயல்பாடுகள் சரியில்லண்ணா சொல்லுவாரு. தவிர அங்க அண்ணனும் பாக்கரும் போட்டிருந்த ஸ்டால்ல வித்த சிடி கள்ல்ல இவரு தான் வாய்ஸ் டப்பிங் பண்ணுனாராம்.
அதுசரி, பங்காளி சாட்சி சொல்லக் கூடாதுன்னு இஸ்லாமிய ஷரீஅத் சொல்லுதே. பங்காளின்னா சொந்தக்காரன் மட்டும் தான் இவரு போல பிஸினஸ் பங்காளி இல்லன்னு சொல்லி சமாளிப்பாரோ.
இந்த மாதிரி இஸ்லாமிய ஷரீஅத் பத்தியோ, உண்மையான தவ்ஹீதப் பத்தியோ யோசிக்காத கூட்டத்தத் தானே நம்ம அண்ணன் உருவாக்கிக்கிட்டு வற்றாரு. அவரு எளுதுன தர்ஜுமாவுக்கு T.ராஜேந்தர வச்சு வெளம்பரப்படுத்துனா மாதிரி, இப்போ T.S.S.மணிய வச்சு விளக்கம் குடுத்தாரோ என்னவோ.
அப்புடி என்னதான் சொன்னாரு அந்த மணி. அதத்தான் சொல்லுங்களேன்.
இவுங்க அவர வச்சு, அங்க ரொம்ப கூட்டமா இருந்துச்சுன்னு சொல்ல வக்க நெனச்சாங்க போல இருக்கு. ஆனா அவரு வந்து ஒக்காந்துகிட்டு, அங்க சுமாரா ஒரு 50 ஆயிரம் பேரு வந்திருப்பாங்ளான்னு – கேட்டு ஆரம்பிச்சு வைச்சதோட, நம்மாளு பதறிகிட்டு, நாம சேர் போட்டதுனால 60 இல இருந்து 70 னாயிரம் பேரு இருந்திருப்பாங்க. சேர் போடலைன்னா கொறஞ்சது ஒண்ணறை இலட்சம் பேரு அங்க இருந்திருக்க முடியும்னு வாக்கு மூலம் குடுத்தாரு.
அடக்கண்றாவியே, அப்போ 10 இலட்சம்னு டெய்லி கூவுனதுலாம் வெறும் நாடக வசனமாகவுல போச்சு. 1 இலட்சம் பேருக்கு கூட உக்கார வசதி செய்யலன்னா, அதுல எத்தனை பேருக்கு மத்த வசதிகள செஞ்சிருப்பாங்க. ஆக மொத்தம் அவுங்க சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லைன்னு நிரூபிச்சுட்டாங்க போங்க.
சரியாச் சொன்னீங்க அஹமது. இரண்டு பேருமே BJP அதாவது பாக்கரும், இன்று மாறிப்போன பிஜேவும் அவுங்க சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இல்லைன்னு பல முறை நிரூபிச்சுட்டாங்க. இத வெளங்குன நீங்களும் நானும் இப்போ அதப்பத்தி கவலப்பட்டுகிட்டு இருக்கோம். அத வெளங்காத கூட்டமாப் பாத்து மேடையேத்தி வச்சு, குளுப்பாட்டி, புதிய வசூல் ராஜாக்கள் ஆக்கி வச்சுருக்காரு.
ஒமர் பாய் கொஞ்சம் வெளக்கமாத்தான் சொல்லுங்களேன்.
அஹமது.. .. ..
அவரு தவ்ஹீதுன்னு சொன்னத நம்புனோம், ஆனா அது உண்மையான தக்லீதாப் போச்சு. அவரு பாக்கரு மேல பாலியல் குற்றச்சாட்டு சொன்னத நம்புனோம். ஆனா பாக்கரு மிரட்டுனவுடன அத புஸ்வானமாக்கிட்டு பாக்கருக்கே அதிகப்படியான பொறுப்ப குடுத்து நம்மள முட்டாளாக்கிட்டாரு. கும்பமேளாவுல 10 இலட்சம் பேரு கூடுனாங்கன்னு அடிச்சுச் சொன்னாரு. பல பேரு நம்பளன்னாலும் ஒங்களயும், என்னையும் மாதிரி சில பேரு நம்புனோம். ஆனா ஜெயலலிதா கிட்ட போனவுடன ஒரு இலட்சம் பேருன்னு பம்மிப் போயிட்டாரு.
அதே மாதிரி தான் ஜகாத்து, குர்ஆன் தர்ஜுமா, ஸஹாபாக்கள் பத்துன விமரிசனம்னு அவரு சொன்னத நம்புனோம். ஆனா கடைசில தான் அவரோட திருகுதாளம்லாம் வெளங்குச்சு. அதமாதிரி தான் இந்த வல்லம் கூத்தும், 10 இலட்சம் பேரு, 100 ஏக்கரு, ஐஎஸ்ஓ தரத்துல ஏற்பாடுன்னு சொன்னாரு, தவ்ஹீது பிரச்சாரத்துக்காக இல்லாட்டாலும், இந்த 100 ஏக்கர்ல நடக்குற பொருட்காட்சியாவது பாத்து வரலாம்னு, சித்திர திருவிழா, கந்தூரி சந்தனக்கூட்டுக்கு போற மாதிரி கூட்டம் கொஞ்சம் பேரு வந்தாங்க. இதுலயும் தான் சொல்றதுக்கும், யதார்த்தத்துக்கும் சம்பந்தமேயில்லைனு நிரூபிச்சுட்டாரு.
ஒமர் பாய், இது தான் கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குங்குற கதயா ஒவ்வொன்னா வெளுத்துப் போச்சே, நான் கேட்டது இதயில்ல. புது வசூல் ராஜாக்கள்னு சொன்னீங்களே, அந்த வௌரத்த சொல்லுங்க.
ஓ. அதக்கேட்டீங்களா. அஹமது.. .. .. தமுமுக நடத்துன நன்றி அறிவிப்பு மாநாட்டுல இயக்கத்துக்காக பாடுபட்ட பல சகோதரர்கள புறக்கணிச்சுட்டு, காசு குடுப்பாங்கங்குற எதிர்பார்ப்புல சில தொழிலதிபர்கள மேடையேத்தி வச்சுக்கிட்டாங்கன்னு புளுதி வாரி தூத்துனாரே ஞாபகம் இருக்கா.
நல்லா ஞாபகம் இருக்கு. சொல்லுங்க. ஆனா அன்னைக்கு இவரு சொல்ற யாருமே மேடைல கிடையாது. எல்லோருமே மேடைக்கு கீழ தான ஒக்காந்து இருந்தாங்க.
சரியாச் சொன்னீங்க. கீழ இருந்தவங்க முதலமைச்சருக்கு மரியாதை செலுத்துறதுக்காக மேடைல ஏறி எறங்குனதயே விமரிசிச்ச இவரு, தவ்ஹீது மேடைல எத்தி வச்சிருந்தது யாரண்ணு தெரியுமா. இங்க தமிழகத்துல தவ்ஹீதுனுடைய ஆரம்ப காலகட்டத்துல இருந்து அதாவது சரியாச் சொல்லணும்னா இந்த பிஜே, ஜாக்கில் இருந்தப்போ ஜாக்குலேயும், அத வுட்டுட்டு தமுமுகவுக்கு போனப்போ அங்கேயும் அங்க இருந்துக்கிட்டே அனைத்து தவ்ஹீது கூட்டமைப்புன்னு ஆரம்பிச்சப்போ அதுலயும், பெறகு அதே பேர ததஜன்னு மாத்திக்கிட்டாரே அப்பவும் கூடவே இருந்தாங்களே அவுங்கள்ல்ல யாரையும் மேடையேத்தல. மாத்தமா 2004ல தமுமுகவுல இருந்து ஓடுனாரே அப்போ, கல்ஃப்ல இருந்து ஏஜெண்டா வேல செஞ்சு காசு வசூல் பண்ணி அனுப்புனாங்களே அந்த வசூல் ராஜாக்களத்தான் அமர்வு தலைவரா உக்காரவச்சு அளகு பாத்தாரு.
அடக்கஷ்ட காலமே, அப்போ காசு குடுத்தா ததஜவுல தலைவர் போஸ்ட தவிர எதயும் வாங்கிடலாம் போல. சரி வேற ஒண்ணும் வல்லத்தப் பத்துன சேதி இல்லையா.
ஏன் இல்லாம. அது கெடக்கு வண்டி வண்டியா. எல்லாத்தையும் இப்பவே சொல்ல முடியாட்டியும், கடைசியா ஒண்ணே ஒண்ணு சொல்றேன், கேளுங்க.
என்னா, ரொம்ப செலவாயிடுச்சு. துண்டு வுளுந்துருச்சு. அதுனால காசு குடுங்கன்னு கேப்பீங்க. அது தான.
பரவாயில்லையே. நீங்க சொல்றது ஓரளவுக்கு சரிதான். அதாவது செலவாயிடுச்சு. துண்டு வுளுந்துருச்சுன்னு சொன்னாங்க. கூடவே இண்ணொன்னும் சொன்னாங்க பாருங்க. அதுதான் படா தமாசு.
அதச் சொல்லுங்க மொதல்ல.
அதாவது அஹமது, நான் என்னோட வார்த்தைல சொல்றத விட பாக்கர் சொன்னத அப்படியே சொல்றேன் கேளுங்க. அதாவதுமா, இரண்டாம் நாள் மீட்டிங்லாம் முடிஞ்சு போச்சு. கூட்டம்லாம் போயிகிட்டு இருக்கு. சுபுஹானகல்லாஹும்ம சொல்லியாச்சு. அப்பத்தான் ஒருத்தரு சொல்றாரு, இவ்வளவு பேரு வந்துட்டுப் போறாங்களே. ஒரு உண்டியல் வச்சுருந்தா கொஞ்சம் வசூலாவது ஆகி இருக்குமே. சமாளிச்சுக்கலாமேன்னு சொல்றாரு. மனசே இல்லாம அங்க கெடந்த பக்கெட்ட தூக்கி அனுப்புறேன். மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ். பாதிக்கூட்டம் போனபொறவு கூட முத ரவுண்டு கலெக்ஷன்ல 5 இலட்சம் ரூபாயும், இரண்டாம் ரவுண்டு கலெக்ஷன்ல 4 இலட்ச ரூபாயும் கெடச்சுது – அப்புடீன்னு பாக்கரு டிவில சொல்றாருங்க.
ஆஹா பரவாயில்லையே. படு பயங்கர கலெக்ஷனா இருக்கே. இது தவிர கடையநல்லூர் மஜீதுங்குறவரு மட்டுமே தன்னோட உள்ளூர் வசூல் 3 இலட்சம்னும், வெளிநாட்டுல உள்ள கடையநல்லூர் காரங்க மூலமாக வசூல் 13 இலட்சம்னும் எளுதியிருக்காரே பாத்தீங்களா.
ஆமா. இப்புடி எல்லாத்தையும் கூட்டிப்பாத்தா பல கோடிகள் வரும் போல இருக்கே. ஆனா இந்த கடைசி நாள்ல்ல இரண்டு ரவுண்டு வசூல்ல 9 லட்சம் கெடச்சுதுன்னு சொல்றது ஓவர் பிலட் அப் மாதிரி தெரியுது. உண்மையான வெபரம் தெரியணும்னா இந்த மாநாட்டு வசூல் சம்பந்தமான வெள்ளை அறிக்கைய பிஜேபியில யாராவது அதாவது பாக்கரோ அல்லது மாறிப் போன பிஜே வோ வெளியிடாம ஒருத்தருக்கும் தெரியாது. அல்லது முன்னால ஜெயலலிதாகிட்ட வாங்குனதா சொன்னாங்களே அந்த கோடிகளுக்கு கணக்கு காட்ட இப்புடி சொல்றாங்களோ என்னவோ. ஒண்ணும் புரியல.
வருத்தப்படாதீங்க ஒமர் பாய். 2000 ல நடந்த மாநாட்டு வரசு செலவு கணக்கு கேக்கப்போயி தான் ஒருத்தருக்கு திருட்டுப் பட்டமும், மனநோயாளி பட்டமும் கெடச்சுது. இந்த வல்லத்துல எத்தனை பேரு கரைசேரப் போறாங்களோ அல்லது எத்தனை பேத்த கவுக்கப் போறாங்களோ. நீங்க சும்மா இருங்க. இல்லண்ணா உங்க பேரையும் அண்ணன் சமூக விரோதிகள் பட்டியல்ல சேர்த்துடப் போறாரு.
அதுவும் சரிதான் அஹமது. சமூக விரோதிகள் பட்டியல் சம்பந்தமாவும் சில விஷயங்கள் பேசிக்கிடணும். ஆனா டயம் இல்ல. இன்ஷா அல்லாஹ் பிறகு சந்திக்கும் போது சொல்றேன். வரட்டுமா. வஸ்ஸலாம்.
முல்லா 23.05.2008
இஸ்லாமிய இணையப் பேரவையில் வெளிவந்துள்ள கட்டுரை. மேலும் பல கட்டுரைகள் படிப்பதற்கு இஸ்லாமிய இணையப் பேரவையின் இணையத் தளத்திற்கு (http://www.iiponline.org/) சென்று படியுங்கள்.
ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள(போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை.குர்ஆன் (8:53)
"இஸ்லாத்தின் பார்வையில் யூத, கிருஸ்த்தவர்கள்"
அஷ்ஷேய்க். ஜமால் முகம்மது மதனி அவர்கள்
Al-Sheikh. Jamal Mohamed Madhani.
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO

நான் சவூதிக்குப் போய் வந்ததைத் தெரிந்து கொண்ட ஐ.பி. போலீஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். `நீ அல்கொய்தா, லஸ்கர் - இ - தொய்பா அமைப்புகளின் தொடர்புகளை மேம்படுத்திக் கொள். அவர்களின் செயல் பாடுகளை எங்களுக்குச் சொன்னால் வேண்டிய பணம் தருவோம். உன் குடும்பத்திற்கும் உதவி செய்வோம். உன்னால் எளிதாக தொடர்புகளை ஏற்படுத்த முடியும்' என்றனர். நான்,`அப்படித் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் போலீஸ்,தீவிரவாதிகள் என ரெண்டு பக்கமும் எனக்கு ஆபத்து உள்ளது. என்னால் முடியாது' என்று சொல்லிவிட்டேன்.
நான் அல்கொய்தாவும் இல்லை. லஸ்கர் - இ - தொய்பாவும் இல்லை. என்னைப் படுகொலை செய்ய போலீஸார் செய்யும் சூழ்ச்சியை மாநிலம் முழுவதும் கூட்டம் போட்டு எங்கள் அமைப்பினர் அம்பலப்படுத்துவார்கள். அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபடத் திட்டமிட்டிருக்கிறோம்'' என்றதோடு முடித்துக் கொண்டார் தவ்ஃபீக்.
வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின்
மறைக்கப்பட்ட உண்மைகள்
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
"உறவைப் பேணுவோம்"
அஷ்ஷேய்க். அலி அக்பர் உமரி அவர்கள்.
Al-Sheikh. Ali Akbar Umari
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO


குறிப்பு : இன்றைய தேதிப்படி இன்னும் நூற்றும் மேற்ப்பட்ட சகோதரர்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் பலருக்கு ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் விடுதலைக்காக உசச் நீதி மன்றங்களில் முறையீடு செய்யவும், இவர்களின் குடும்ப உதவிக்காகவும் அதிகம் பொருளாதரம் தேவைப்படுகின்றது. இந்த குடும்பங்கள் உங்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். நம் சமுதாயம் என்றும் இவர்களை கைவிடாது என்ற நம்பிக்கையில் நம்மிடம் கையேந்தி உதவி கோரும் இம்மக்களை நம் சமுதாயம் கைவிடாது என்ற நம்பிக்கையில் நான் இதை இங்கு மீள் பதிகின்றேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே.,
நமது சமுதாய இயக்கங்கள் அனைத்தும் யாருடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனவோ அந்த முஸ்லிம் சிறைவாசிகள் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு நீண்ட நெடிய 8 ஆண்டுகளாகிவிட்டன. கொடிய சிறை வாழ்வு., இவர்களின் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி நான்கு சுவர்களுக்கு மத்தியில் விரயமாகிக் கொண்டிருக்கின்றன. இவை என்றுதான் முற்றுபெறுமோ? என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம்! இவர்களின் தேவை குடும்பங்களுக்கு அல்லவா மிக மிக அவசியம்.
எட்டு ஆண்டுகளில் இக்குடும்பங்கள் அடைந்திட்ட துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் வருமானங்கள் நிரந்தர தடையாகிவிட்டன. குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய நிர்பந்தத்தால் இக்குடும்பத்தின் மென்மையான சகோதரிகள் தங்களின் மென்தோல்கள் வலுவிழக்கும் அளவிற்கு ஆண்களைப் போல் கடினமாக உழைத்திட வேண்டிய பரிதாபமான நிலை. இக்காலத்தில் என்னதான் கடுமையாக உழைத்தாலும் குடும்பத்தை ஒப்பேற்ற ஆணுக்கே மிக கடினம் என்கின்றபோது பெண்களால் என்னதான் செய்ய இயலும்.
வயிற்றுப்பாட்டுக்கே தினம் தினம் பெரும் திண்டாட்டம், மூன்று வேளை உணவைக்கூட முறையாக உண்பதே பெரும்பாடு என்கின்றபோது, குடும்பத்தின் மற்ற அத்யாவசிய செலவினங்களுக்கு என்னதான் செய்வார்கள் இவர்கள். ஒருவர் திடீரென கடும் நோய்வாய்ப்பட்டால் வேறு வழியில்லை, இறக்க வேண்டியது தான். பெரும் மழையினால் வீட்டுக்கூரை சரிந்துவிட்டால்.. என்ன செய்வது? வானம் பார்த்த வீட்டில் தான் சிரமப்பட்டாக வேண்டும். இன்னுமின்னும் நெஞ்சை பிழியவைக்கும் ஏராளமான துன்ப துயரங்கள் சிறைப்பட்ட ஒவ்வொரு வீடடிலும் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நித்தம் தொடரும் தொடர் துயரங்களால் இவர்களின் குடும்பங்களில் வாழ்க்கையின் போக்கு திக்கு தெரியாத காட்டில் திசைமாறிச் செல்வது போல முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன..
இந்தச்சிறைவாசிகளின் சகோதரிகளிள் பலர் திருமணம் கூட
ஆகாமல் முப்பது வயதைத்தாண்டியும் முதிர்கன்னிகளாகதங்கள் வாழ்வை தொலைத்து நிராதரவாக நிற்கின்றனர். தங்கள் தந்தையரையும், தமயர்களையும் சிறைகளிள் தொலைத்தது போல். காரணம் பொருளாதாரம்.. தமது வாழ்வாதாரங்களான ஆண்களை சிறைக்கு அனுப்பியபின் இவர்களின் குடும்பங்கள் இன்று திக்குத்தெறியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றன.
எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணை
சிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது.
எட்டு ஆன்டுகளாக தங்கள் கணவரை, சகோதரனை, தந்தையை பிறிந்து தவிக்கும் நமது சமுதாயச் சகோதரிகளின் கண்ணீர்க் கதறல்களை காவியமாக வடித்துள்ளார்கள்.
''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்
இதுமட்டுமல்லாது இவர்களின் குழந்தைகள் தங்களின் கல்வியை தொடர இயலாது தவித்து வருகின்றார்கள் இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கின்றது.
இக்குழந்தைகளின் தந்தைமார்களும், சகோதரர்களும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் விதிவசத்தால் முடங்கிக்கிடப்பது போல் இவர்களது குழந்தைகளின் கல்வியறிவு முடங்கிப் போய்விட சமுதாயம் காரணமாகி விடக்கூடாது. ஒருபோதும் இப்பெரும் பாவத்திற்கு சமுதாயம் ஆளாகிவிடக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்திட நம் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தார்மீக பொறுப்புண்டு..
இந்த குழந்தைகளும் கூட நமது சமுதாயத்தின் செல்வங்கள்தான். இவர்களின் தந்தைமார்கள் சிறைவாசிகள் என்ற காரணத்திற்காக இவர்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. இக்குழந்தைகளின் விபரங்களும் இவர்களின் கல்வி செலவுகளும் (அதிகமில்லை சில ஆயிரங்களே இதை நமது சமுதாயம் கட்டாயம் ஏற்க வேண்டும்) இங்கு பதியப்பட்டுள்ளன. அவற்றை வேண்டுவோர் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
சிறைவாசி குழந்தைகளின் கல்வி விபரம் டவுன் லோட்
இவர்களுக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட அறக்கட்டளையின் முகவரிக்கு தங்கள் உதவிகளை அனுப்பலாம்.
CHARITABLE TRUST FOR MINORITIES
A/C NO. SB 57991
படிப்பறிவில்லாதவர்களின் கல்விக்கண்களை திறக்கச் செய்தமைக்காக பத்ருப்போரின் கடும் எதிரிகளையே விடுதலை செய்திட்டார் நம் அருமைத்தலைவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்.
நம் அருமைத் தலைவர் கல்விக்கு தந்திட்ட முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். படிக்காத உம்மி நபிதான் ஆனால் சமுதாயத்தில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாமல் இருந்திடக்கூடாது என அறிவுறுத்தத்தான் "தொலைந்து விட்ட பொருளை தேடுவது போல கல்வியை தேடிக்கொள்" என கல்வியின் மாண்பை எடுத்தரைத்தார்.
சமுதாயத்தில் நிகழ்ந்திட்ட கொடுமைகளை எதிர்த்ததற்காக இச்சிறை வாழ்வை பரிசாக பெற்றவர்களின் குழந்தைகளின் கல்விக்கண்கள் திறக்க எத்தடையும் இருந்துவிடக்கூடாது.
உதவியின்மையால் இவர்களின் கல்வி தடைபடுமானால் இதைவிடக்கொடுமை வேறெதுவும் இல்லை.
அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இவர்களின் கல்விக்கண் திறக்க தாராளமாய் முன்வந்து உதவிகளை வாரி வழங்கிட வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பைசா உதவியும் வீணாகி விடாது. இதுவே, உங்களின் உண்மையான (மறுமைக்கான) சேமிப்பு ஆகும்..
நிராதரவாகிப் போன இக்குழந்தைகளின் கல்விக்கு உதவுவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். உதவிகளிலே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். இக்குழந்தைகள் படிக்க, படிக்க, பட்டங்கள் வாங்க வாங்க இவர்களால் சமுதாயம் பயன் அடைய அடைய உங்களின் தர்மத்தின் நன்மை கணக்கில்லை மறுமை வரை பெருகிக்கொண்டே செல்லும்!
இவர்களின் அவலம் கட்டாயம் மாறும்.. மாற்றலாம் நாம் நினைத்தால்... (இறைவன் துணையுடன்)