Friday, May 30, 2008

ஆப்கானிலிருந்து ஒரு மழலையின் கேள்வி?......



என்ன பாவம் செய்தேன் என்று
என் முகத்தை இப்படி சிதைத்தீர்கள்?

உங்கள் ஆயூதங்களை உரசிப்பார்ப்பதற்கு
என் உடல் தானா கிடைத்தது?

அமெரிக்கா முதல் ஆப்கான் வரை
அரும்புகள் தானா உங்களின்
அகோசப் பசிக்கு ஆகாரம்?

குண்டுகள் துளைத்த என் குறுதிச் சிதறளில்
உங்கள் குழைந்தைகளின் உயிர் துடிப்பை
உணர முடியிவில்லையா உங்களால்?

ஒரே ஒரு கனமேனும் உங்கள் மனசாட்சி
உங்களை உழுக்கியதில்லையா?

என்ன பாவம் செய்தார்கள் என்று
என் பெற்றோர்களை கொன்று குவித்தீர்கள்
என் அண்ணன்களையும்,அக்காள்களையும்
இறை எடுத்துக் கொண்டீர்கள்.

நேற்று வரை!
அம்மாக்களின் மடியிலும் அப்பாக்களின் தோள்களிலும்
ஆடி பாடி(த்) திரிந்த பிஞ்சுகளை
அனாதைகளாகவும்,அகதிகளாகவும்
ஆக்கிய நீங்கள் பிணந்தின்னிகளா?

சின்னஞ்சிறு பிஞ்சுகளையெள்ளாம் நீங்கள்
சின்னா பின்னா படுத்தி விட்டு
சாதிக்கப்போவது தான் என்ன?

உங்களது பேராசைப் பேய்களுக்கு
இன்னும் எத்தனையெத்தனை பிஞ்சுகளை
கொன்று குவித்து கூத்தாடப் போகிறீர்கள்
புனிதப் போர் சிலுவை யுத்தம் என்ற பெயரால்
பூமியை இன்னும் எத்தனை காலத்துக்கு
போர் னெருப்பில் போட்டு வதைக்கப் போகிறீர்கள்?

நிழல் தரும் மரங்களுக்கெல்லாம் நெருப்பிட்ட பின்னர்
நீரெந்த நிழல்களில் ஓய்வெடுக்கப் போகிறீர்கள்?
Thanks USF

No comments: