Showing posts with label ரமழான். Show all posts
Showing posts with label ரமழான். Show all posts

Sunday, July 06, 2014

அன்பு சகோதரர் களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள் (மீள் பதிவு)


அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

புனித ரமழான் வாழ்த்துக்கள்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேலைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமழான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம்.

அந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.

சமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஷகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக் காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆற்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தலதில் பதிவு செய்து சாதனை பட்டியலாக்கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஷகாத், பித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.

ஆகவே, சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை ம்ற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்ஹாணாக்கள் போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்காண நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.

ஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்ற்சி செய்வோமாக.

வஸ்ஸலாம்
அ. சஜருதீன்
ரியாத் - சௌதி அரேபியா

Tuesday, September 07, 2010

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

WISH YOU ALL A HAPPY EID-EL-FITR AL MUBARAK

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


ஈமானின் சீமான்களே!
இறைநேச ரோஜாக்களே!

ரம்மிய ரமழான் நோன்பேற்று
வல்ல அல்லாஹ்வின் அழகிய
நற்கூலியை பெறப்போகும் அதிர்ஷ்ட்டசாலிகளே!

சுவனத்தின் தலைவாயிலாம்
'ரையானில்' சுகந்த தென்றலாய்
நுலையவிருக்கும் உங்கள் வாழ்வில்

இந்த இனிமையும், இன்பமும்
என்றும் நிலவ
கருனை ரஹ்மானின்
கனிவுக்கு வேண்டுகிறேன்

என்றும் அன்புடன்

முகவைத்தமிழன்



வாழ்த்து : சிறு வயதில் எங்கோ படித்தது

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை வாசகர்கள் அனைவருக்கும் மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

www.tmpolitics.net

Sunday, September 05, 2010

அன்பு சகோதரர் களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்

அன்பு சகோதரர் களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்

அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

புனித ரமழான் வாழ்த்துக்கள்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேலைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமழான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம்.

அந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.

சமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஷகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக் காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆற்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தலதில் பதிவு செய்து சாதனை பட்டியலாக்கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஷகாத், பித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.

ஆகவே, சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை ம்ற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்ஹாணாக்கள் போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்காண நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.

ஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்ற்சி செய்வோமாக.


வஸ்ஸலாம்

அ. சஜருதீன்

ரியாத் - சௌதி அரேபியா

+966 557316929

Tuesday, September 08, 2009

ரமழான் - இறுதிப் பத்து நாட்கள் (VIDEO)

அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி

ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் பற்றியும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் பற்றியும் தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ பதிவினை காண்பதற்கு இங்கு சொடுக்கவும்.



ரமளானின் இறுதிப் பத்து. லைலத்துல் கத்ர், இஃதிகாஃப்

புனித மிக்க ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நரகின் விடுதலையை உள்ளடக்கிய சிறப்புக்குரியதும், மேலும் லைலத்துல் கத்ர் இரவு போன்ற சிறப்பினை உள்ளடக்கியதுமான பெரும் சிறப்புகளைக் கொண்டதாகும். அருள்மிகு ரமளானின் இவ்விறுதிப் பத்து நாட்களில் பிரயாசைப் பட்டுச் செய்கின்ற நற்செயல்களுக்கு அதிகமதிகம் நன்மைகளும் பன்மடங்காகக்கப்பட்ட நற்கூலிகளும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் அதிக சிரத்தையுடன் நன்மைகள் செய்வதில் தீவிரம் காட்டுபவர்களாகவும் அழுத்தம் உடையவர்களாகவும் இருந்தார்கள்.

நபியவர்கள் ரமளான் இறுதிப் பத்தில் கருமமாற்றியது பற்றி ஆயிஷh (ரலி) அவர்கள் தெளிவாக அறிவிக்கின்றார் கள்: ரமளானின் கடைசி பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் கச்சை கட்டிக் கொண்டு அவற்றின் இரவுகளை விழித்திருந்து கழிப்பார்கள். தம் குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள் (புகாரி)

ஆயிஷh (ரலி) அவர்கள் அறிவிக்கும் பிரிதொரு ஹதீஸ் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது: நபியவர்கள் முந்தைய இருபது நாள் இரவுகளில் விழித்திருந்து தொழவும் செய்தார்கள். தூங்கவும் செய்தார்கள். ஆனால் இறுதிப் பத்து நாட்கள் வந்து விட்டால் கச்சை கட்டிக் கொண்டு அமல்களில் முழுமையாக ஈடுபடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ரமளான் மாதத்தின் இறுதிப் பத்தின் மகத்துவமும், சிறப்பும் பற்றி இந்த ஹதீஸ்கள் தெளிவாக விளங்குகின்றன. இந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் முதல் இருபது நோன்பு நாட்களையும் விட இந்நாட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கினறார்கள் என்பது தெளிவாகின்றது. குர்ஆன் ஓதுவது, அதிகமதிகம் திக்ருகளில் ஈடுவடுவது, அதிகமதிகம் தர்மம் செய்வது இவ்வாறான நன்மைகளாகும்.

இஃதிகாஃப்

இந்தப் பத்து நாட்களில் மற்றுமொரு சிறப்பு இஃதிகாஃப் இருப்பதாகும். இஃதிகாஃப் என்பது இலளகீக காரியங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் வழி பாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தங்கி விடுவதாகும். ஒரு முஸ்லிம் இப்படிச் செய்வது அல்குர்ஆனும் நபி மொழிகளும் வலியுறுத்தியுள்ளன. நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கிய சிறப்பயாகும். அவ்வாறு ஒருவர் ஈடுபடும்போது அவர் லைலதுல் கத்ர் இரவைப் பெறக் கூடிய வாய்ப்பைப் பெறுகினறார்.

அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெருவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி அறிவித்தார் : அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று. உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)

ஒருவர் பிற மனிதர்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாஃப் இருப்பதன் நோக்கம்; சங்கடங்களின்றி மனஒருமையோடு அல்லாஹ்வை வழிபடுவதற்காகவாகும். அவ்வாறு இருப்பதனால் அம்மனிதர் லைலதுல் கத்ர் எனும் மகத்துவம் மிக்க இரவை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றார்;. அத்தோடு உடலுறவு, அதற்கு முன்னுள்ள காரியங்களான முத்தமிடுதல், ஆசையுடன் தொடுதல், போன்ற காரியங்களும் இஃதிகாஃப் இருப்பவருக்கு விலக்கப்பட்டதாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:

இஃதிகாஃப் இருப்பவர்கள் திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில், நஃபிலான தொழுகைகளில், இன்ன பிற வழிபாடுகளில் ஈடுபட்டிருத்தல் அவசியமாகும். மேலும் உலக விஷயங்களில் ஈடுபடுதல் மற்றும் தேவையற்ற காரியங்களை விட்டும் தவர்ந்து இருத்தல் அவசியமாகும். ஆனால் ஏதேனும் முக்கிய நலனை முன்னிட்டு இஃதிகாஃப் இருப்பவர் தனது குடும்பத்தாருடன் ஆகுமான பேச்சுக்கள் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்: இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்த இருக்கும்போது மனைவியர்களுடன் கூடாதீர்கள். (2 : 187)

லைலதுல் கத்ர்

லைலதுல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். ரமளான் மாத இறுதிப் பத்தின் ஒற்றைப்பட்ட நாட்களில் இந்த இரவு வருமென அதிகமனா நபி மொழிகள் கூறுகின்றன. இவ்விரவு ஒரு ஆண்டில் 27லும் மற்றொரு ஆண்டில் 25, 23, 21 29 போன்ற நாட்களிலும் வர வாய்ப்பிருப்பதால் இவ்விரவு ஒவ்வொரு ஆண்டிலும் 27ல் தான் வருமெனத் எண்ணி அமல்கள் செய்வது தவறாகும். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகரை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97 : 1-5)

நபியவர்கள் நவின்றதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கனிறார்கள்: விசுவாசத்துடனும், நன்மையை எதிர் பார்த்தும் எவர் லைலதுல் கத்ர் இரவில் தொழுதாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகினறன. (புகாரி, முஸ்லிம்). .

யா அல்லாஹ்! வழிகேட்டில் ஆழ்த்தக் கூடிய குழப்பங்களை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக! நன்மையின் பக்கம் விரைந்து செல்லக்கூடிய, தீமைகளை விட்டும் விலகிச் செல்லக்கூடிய, சுவர்க்கத்து மாளிகைகளில் நிம்மதியாக தங்கி வாழக்கூடிய மக்களுடன் எங்களைச் சேர்த்து வைப்பாயாக! உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூடிய, அழகாய் உனக்கு வழிபட்டு நடந்து உனது நேசத்தைப் பெற்றோரின் குழுவில் எங்களையும் இணைத்து வைப் பாயாக! கருணை மிக்க இறைவனே! பயங்கரமான நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றி உனது கருணை கொண்டு எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும். மற்றும் எல்லர் முஸ்லிம்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!.

Saturday, September 05, 2009

பெரியபட்டினம் - சிறப்பு குர்ஆன் போட்டி

இந்த நோட்டிசை பெரிதாக்கி பார்ப்பதற்கு அதன் மேல் கிளிக் செய்யவும்.

Thursday, September 03, 2009

ஃபித்ரா - ஜக்காத் வசூல் - பார்வாளாக்களின் கமிசனும்- தமிழக முஸ்லிம் அமைப்புகளும்

ஜகாத் - ஃபித்ரா - வசூலிக்கும் தமிழக முஸ்லிம் அமைப்புகள் பற்றிய ஒரு எச்சரிக்கை - முந்தைய பதிவு வாசிப்பதற்கு இங்கு சொடுக்கவும்

அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்)

பித்ரா மற்றும் ஷகாத் கொடுப்பது விஷயமாக நான் பதிந்த பதிவின் தொடற்ச் சியாக இதை உங்கள் அணைவரின் மேலான பார்வைகளுக்கு பதிவு செய்கிறேன்.

ததஜ சம்பந்தமான இந்த பிரசுரங்கள் பார்-வாளா (தே நீர்) கொடுப்ப்வர்களிடம் இருந்து கிடைக்கப் பட்டது. இவர்கள் தினமும் தே நீர் வினியோகம் செய்தால் 25% கமிஷன் கிடைக்கும். இதுபற்றி கேட்ட போது அவர்கள் வாடிக்கையாளர் களிடம் மற்றும் நண்பர் களிடம் ஒவ்வொரு வருடமும் வசூல் செய்து கொடுப்பதாகவும் அவர்களுக்கும் சுமார் 30% முதல் 40% வரை இயக்க நண்பர்கள் கமிஷன் தருவார்கள் என்று சொன்னார்கள். அல்லாஹ் ஆலம். (பார்வாலாவிடம் பெறப்பட்ட ததஜ, தமுமுக டடாகுமென்ட்கள் இணைக்கப்பட்டுள்ளன டவுன்லோட் செய்து கொள்ளவும்)

சகோதரர்கள் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து உங்கள் மீது கடமையாக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாத்தை உஙளுடைய ஏழை சொந்தங்களுக்கும், உங்கள் அண்டை வீட்டார் களுக்கும் அல்லது நலிந்த மத்ரஷாக் களுக்கும் உங்கள் கைப்பட கொடுத்து இறைவனின் நற் கூலியை பெற முயற்ச்சி செய்வோமாக.
வஸ்ஸலாம்

அ. சஜருதீன்

குறிப்பு:

இத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் அறிக்கைகள் அவ்வளவும் புணையப்பட்ட பித்தலாட்டங்கள் என்பதை எளிதாக பார்ப்பவர்கள் அறிந்து கொள்ளாம்.

டவுன்லோட் செய்து கொள்ள :

த.த.ஜ டாகுமென்ட்ஸ்

தமுமுக டாகுமென்ட்ஸ்

Monday, August 24, 2009

ஜகாத் - ஃபித்ரா - வசூலிக்கும் தமிழக முஸ்லிம் அமைப்புகள் பற்றிய ஒரு எச்சரிக்கை

அன்பு சகோதரர்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்

அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

புனித ரமளான் வாழ்த்துக்கள்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேலைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமலான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஜகாத் ம்ற்றும் ஃபித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம்.

அந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.


சமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஜகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக்காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.


இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆற்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தளத்தில் பதிவு செய்து சாதனை பட்டியலாக்கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஜகாத், ஃபித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.

ஆகவே, சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட ஃபித்ரா மற்றும் ஜகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை ம்ற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்ஹாணாக்கள் போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்காண நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.

ஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்சி செய்வோமாக.


வஸ்ஸலாம்
அ. சஜருதீன்
ரியாத் - சௌதி அரேபியா
+966 557316929

Thursday, August 20, 2009

ரமழானின் பயனை பெறுவது எப்படி?" -மெளலவி முபாரக் மதனி(VIDEO)

மெளலவி முபாரக் மதனி அவர்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்-கோபர் இஸ்லாமிய மையமும் தமிழ் தஃவா கமிட்டியம் இணைந்து கடந்த 19-09-2007 அன்று இரவு அல்கோபர் நகரின் மையப்பகுதியில் அமைந்தள்ள அல்கோபர் இஸ்லாமிய மையத்தால் நடத்தப்படும் இஃப்தார் குடிலில் (நோன்பு திறக்கும் குடில்) சிறப்பான முறையில் ஒரு இஸ்லாமிய குடும்ப நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் பிரபல மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்களும், இந்தியாவை சேர்ந்த பிரபல அழைப்பாளர் மெளலவி அலி அக்பர் உமரி அவர்களும், இலங்கையை சோந்த பிரபல அழைப்பாளர் மெளலவி மன்சூர் மதனி அவர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்புகளின் கீழ் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கு தமிழ் தஃவா கமிட்டியின் நிர்வாகி மறியாதைக்குறிய மக்கீன் நலீமி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி தந்தார்கள்.

நிகழச்சிக்குறிய ஏற்பாடகளை அல்கோபர் இஸ்லாமிய மையத்துடன் இணைந்து அல்கோபர் தமிழ் தஃவா கடமட்டியிர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். அதன் தன்னார்வ தொண்டர்கள் அயராது உழைத்து இந்நிகழச்சியை சிறப்பாக நடத்தி தந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆன்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந்து பயன் பெற்றனர்.

நிகழச்சியில் இலங்கையை சேர்ந்த மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்கள் "ரமழானின் பயனை பெறுவது எப்படி?" என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் வீடியோ தமிழ் முஸ்லிம் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ் மக்கள் அணைவரும் இந்த வீடியோவை கண்டு இந்த ரமழானை நல்லபடியாக பணன்படுத்தி பயன் பெற வேண்டும். வீடீயோவை காண கீழே சொடுக்கவும்..


.
நிகழ்ச்சியின் அணைத்து வீடியோக்களையும் இன்னும் பல அற்புத தலைப்புக்களில் இஸ்லாமிய பயான் வீடியோக்களை காண :.
.

Thursday, September 25, 2008

இறுதிப் பத்து நாட்கள் (VIDEO) மீள் பதிவு

அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி

ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் பற்றியும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் பற்றியும் தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ பதிவினை காண்பதற்கு இங்கு சொடுக்கவும்.



ரமளானின் இறுதிப் பத்து. லைலத்துல் கத்ர், இஃதிகாஃப்

புனித மிக்க ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நரகின் விடுதலையை உள்ளடக்கிய சிறப்புக்குரியதும், மேலும் லைலத்துல் கத்ர் இரவு போன்ற சிறப்பினை உள்ளடக்கியதுமான பெரும் சிறப்புகளைக் கொண்டதாகும். அருள்மிகு ரமளானின் இவ்விறுதிப் பத்து நாட்களில் பிரயாசைப் பட்டுச் செய்கின்ற நற்செயல்களுக்கு அதிகமதிகம் நன்மைகளும் பன்மடங்காகக்கப்பட்ட நற்கூலிகளும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் அதிக சிரத்தையுடன் நன்மைகள் செய்வதில் தீவிரம் காட்டுபவர்களாகவும் அழுத்தம் உடையவர்களாகவும் இருந்தார்கள்.

நபியவர்கள் ரமளான் இறுதிப் பத்தில் கருமமாற்றியது பற்றி ஆயிஷh (ரலி) அவர்கள் தெளிவாக அறிவிக்கின்றார் கள்: ரமளானின் கடைசி பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் கச்சை கட்டிக் கொண்டு அவற்றின் இரவுகளை விழித்திருந்து கழிப்பார்கள். தம் குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள் (புகாரி)

ஆயிஷh (ரலி) அவர்கள் அறிவிக்கும் பிரிதொரு ஹதீஸ் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது: நபியவர்கள் முந்தைய இருபது நாள் இரவுகளில் விழித்திருந்து தொழவும் செய்தார்கள். தூங்கவும் செய்தார்கள். ஆனால் இறுதிப் பத்து நாட்கள் வந்து விட்டால் கச்சை கட்டிக் கொண்டு அமல்களில் முழுமையாக ஈடுபடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ரமளான் மாதத்தின் இறுதிப் பத்தின் மகத்துவமும், சிறப்பும் பற்றி இந்த ஹதீஸ்கள் தெளிவாக விளங்குகின்றன. இந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் முதல் இருபது நோன்பு நாட்களையும் விட இந்நாட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கினறார்கள் என்பது தெளிவாகின்றது. குர்ஆன் ஓதுவது, அதிகமதிகம் திக்ருகளில் ஈடுவடுவது, அதிகமதிகம் தர்மம் செய்வது இவ்வாறான நன்மைகளாகும்.

இஃதிகாஃப்

இந்தப் பத்து நாட்களில் மற்றுமொரு சிறப்பு இஃதிகாஃப் இருப்பதாகும். இஃதிகாஃப் என்பது இலளகீக காரியங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் வழி பாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தங்கி விடுவதாகும். ஒரு முஸ்லிம் இப்படிச் செய்வது அல்குர்ஆனும் நபி மொழிகளும் வலியுறுத்தியுள்ளன. நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கிய சிறப்பயாகும். அவ்வாறு ஒருவர் ஈடுபடும்போது அவர் லைலதுல் கத்ர் இரவைப் பெறக் கூடிய வாய்ப்பைப் பெறுகினறார்.

அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெருவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி அறிவித்தார் : அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று. உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)

ஒருவர் பிற மனிதர்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாஃப் இருப்பதன் நோக்கம்; சங்கடங்களின்றி மனஒருமையோடு அல்லாஹ்வை வழிபடுவதற்காகவாகும். அவ்வாறு இருப்பதனால் அம்மனிதர் லைலதுல் கத்ர் எனும் மகத்துவம் மிக்க இரவை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றார்;. அத்தோடு உடலுறவு, அதற்கு முன்னுள்ள காரியங்களான முத்தமிடுதல், ஆசையுடன் தொடுதல், போன்ற காரியங்களும் இஃதிகாஃப் இருப்பவருக்கு விலக்கப்பட்டதாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:

இஃதிகாஃப் இருப்பவர்கள் திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில், நஃபிலான தொழுகைகளில், இன்ன பிற வழிபாடுகளில் ஈடுபட்டிருத்தல் அவசியமாகும். மேலும் உலக விஷயங்களில் ஈடுபடுதல் மற்றும் தேவையற்ற காரியங்களை விட்டும் தவர்ந்து இருத்தல் அவசியமாகும். ஆனால் ஏதேனும் முக்கிய நலனை முன்னிட்டு இஃதிகாஃப் இருப்பவர் தனது குடும்பத்தாருடன் ஆகுமான பேச்சுக்கள் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்: இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்த இருக்கும்போது மனைவியர்களுடன் கூடாதீர்கள். (2 : 187)

லைலதுல் கத்ர்

லைலதுல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். ரமளான் மாத இறுதிப் பத்தின் ஒற்றைப்பட்ட நாட்களில் இந்த இரவு வருமென அதிகமனா நபி மொழிகள் கூறுகின்றன. இவ்விரவு ஒரு ஆண்டில் 27லும் மற்றொரு ஆண்டில் 25, 23, 21 29 போன்ற நாட்களிலும் வர வாய்ப்பிருப்பதால் இவ்விரவு ஒவ்வொரு ஆண்டிலும் 27ல் தான் வருமெனத் எண்ணி அமல்கள் செய்வது தவறாகும். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகரை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97 : 1-5)

நபியவர்கள் நவின்றதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கனிறார்கள்: விசுவாசத்துடனும், நன்மையை எதிர் பார்த்தும் எவர் லைலதுல் கத்ர் இரவில் தொழுதாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகினறன. (புகாரி, முஸ்லிம்). .

யா அல்லாஹ்! வழிகேட்டில் ஆழ்த்தக் கூடிய குழப்பங்களை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக! நன்மையின் பக்கம் விரைந்து செல்லக்கூடிய, தீமைகளை விட்டும் விலகிச் செல்லக்கூடிய, சுவர்க்கத்து மாளிகைகளில் நிம்மதியாக தங்கி வாழக்கூடிய மக்களுடன் எங்களைச் சேர்த்து வைப்பாயாக! உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூடிய, அழகாய் உனக்கு வழிபட்டு நடந்து உனது நேசத்தைப் பெற்றோரின் குழுவில் எங்களையும் இணைத்து வைப் பாயாக! கருணை மிக்க இறைவனே! பயங்கரமான நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றி உனது கருணை கொண்டு எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும். மற்றும் எல்லர் முஸ்லிம்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!.

Tuesday, October 02, 2007

இறுதிப் பத்து நாட்கள் (VIDEO)

அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி

ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் பற்றியும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் பற்றியும் தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ பதிவினை காண்பதற்கு இங்கு சொடுக்கவும்.



ரமளானின் இறுதிப் பத்து. லைலத்துல் கத்ர், இஃதிகாஃப்

புனித மிக்க ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நரகின் விடுதலையை உள்ளடக்கிய சிறப்புக்குரியதும், மேலும் லைலத்துல் கத்ர் இரவு போன்ற சிறப்பினை உள்ளடக்கியதுமான பெரும் சிறப்புகளைக் கொண்டதாகும். அருள்மிகு ரமளானின் இவ்விறுதிப் பத்து நாட்களில் பிரயாசைப் பட்டுச் செய்கின்ற நற்செயல்களுக்கு அதிகமதிகம் நன்மைகளும் பன்மடங்காகக்கப்பட்ட நற்கூலிகளும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் அதிக சிரத்தையுடன் நன்மைகள் செய்வதில் தீவிரம் காட்டுபவர்களாகவும் அழுத்தம் உடையவர்களாகவும் இருந்தார்கள்.

நபியவர்கள் ரமளான் இறுதிப் பத்தில் கருமமாற்றியது பற்றி ஆயிஷh (ரலி) அவர்கள் தெளிவாக அறிவிக்கின்றார் கள்: ரமளானின் கடைசி பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் கச்சை கட்டிக் கொண்டு அவற்றின் இரவுகளை விழித்திருந்து கழிப்பார்கள். தம் குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள் (புகாரி)

ஆயிஷh (ரலி) அவர்கள் அறிவிக்கும் பிரிதொரு ஹதீஸ் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது: நபியவர்கள் முந்தைய இருபது நாள் இரவுகளில் விழித்திருந்து தொழவும் செய்தார்கள். தூங்கவும் செய்தார்கள். ஆனால் இறுதிப் பத்து நாட்கள் வந்து விட்டால் கச்சை கட்டிக் கொண்டு அமல்களில் முழுமையாக ஈடுபடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ரமளான் மாதத்தின் இறுதிப் பத்தின் மகத்துவமும், சிறப்பும் பற்றி இந்த ஹதீஸ்கள் தெளிவாக விளங்குகின்றன. இந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் முதல் இருபது நோன்பு நாட்களையும் விட இந்நாட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கினறார்கள் என்பது தெளிவாகின்றது. குர்ஆன் ஓதுவது, அதிகமதிகம் திக்ருகளில் ஈடுவடுவது, அதிகமதிகம் தர்மம் செய்வது இவ்வாறான நன்மைகளாகும்.

இஃதிகாஃப்

இந்தப் பத்து நாட்களில் மற்றுமொரு சிறப்பு இஃதிகாஃப் இருப்பதாகும். இஃதிகாஃப் என்பது இலளகீக காரியங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் வழி பாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தங்கி விடுவதாகும். ஒரு முஸ்லிம் இப்படிச் செய்வது அல்குர்ஆனும் நபி மொழிகளும் வலியுறுத்தியுள்ளன. நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கிய சிறப்பயாகும். அவ்வாறு ஒருவர் ஈடுபடும்போது அவர் லைலதுல் கத்ர் இரவைப் பெறக் கூடிய வாய்ப்பைப் பெறுகினறார்.

அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெருவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி அறிவித்தார் : அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று. உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)

ஒருவர் பிற மனிதர்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாஃப் இருப்பதன் நோக்கம்; சங்கடங்களின்றி மனஒருமையோடு அல்லாஹ்வை வழிபடுவதற்காகவாகும். அவ்வாறு இருப்பதனால் அம்மனிதர் லைலதுல் கத்ர் எனும் மகத்துவம் மிக்க இரவை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றார்;. அத்தோடு உடலுறவு, அதற்கு முன்னுள்ள காரியங்களான முத்தமிடுதல், ஆசையுடன் தொடுதல், போன்ற காரியங்களும் இஃதிகாஃப் இருப்பவருக்கு விலக்கப்பட்டதாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:

இஃதிகாஃப் இருப்பவர்கள் திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில், நஃபிலான தொழுகைகளில், இன்ன பிற வழிபாடுகளில் ஈடுபட்டிருத்தல் அவசியமாகும். மேலும் உலக விஷயங்களில் ஈடுபடுதல் மற்றும் தேவையற்ற காரியங்களை விட்டும் தவர்ந்து இருத்தல் அவசியமாகும். ஆனால் ஏதேனும் முக்கிய நலனை முன்னிட்டு இஃதிகாஃப் இருப்பவர் தனது குடும்பத்தாருடன் ஆகுமான பேச்சுக்கள் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்: இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்த இருக்கும்போது மனைவியர்களுடன் கூடாதீர்கள். (2 : 187)

லைலதுல் கத்ர்

லைலதுல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். ரமளான் மாத இறுதிப் பத்தின் ஒற்றைப்பட்ட நாட்களில் இந்த இரவு வருமென அதிகமனா நபி மொழிகள் கூறுகின்றன. இவ்விரவு ஒரு ஆண்டில் 27லும் மற்றொரு ஆண்டில் 25, 23, 21 29 போன்ற நாட்களிலும் வர வாய்ப்பிருப்பதால் இவ்விரவு ஒவ்வொரு ஆண்டிலும் 27ல் தான் வருமெனத் எண்ணி அமல்கள் செய்வது தவறாகும். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகரை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97 : 1-5)

நபியவர்கள் நவின்றதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கனிறார்கள்: விசுவாசத்துடனும், நன்மையை எதிர் பார்த்தும் எவர் லைலதுல் கத்ர் இரவில் தொழுதாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகினறன. (புகாரி, முஸ்லிம்). .

யா அல்லாஹ்! வழிகேட்டில் ஆழ்த்தக் கூடிய குழப்பங்களை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக! நன்மையின் பக்கம் விரைந்து செல்லக்கூடிய, தீமைகளை விட்டும் விலகிச் செல்லக்கூடிய, சுவர்க்கத்து மாளிகைகளில் நிம்மதியாக தங்கி வாழக்கூடிய மக்களுடன் எங்களைச் சேர்த்து வைப்பாயாக! உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூடிய, அழகாய் உனக்கு வழிபட்டு நடந்து உனது நேசத்தைப் பெற்றோரின் குழுவில் எங்களையும் இணைத்து வைப் பாயாக! கருணை மிக்க இறைவனே! பயங்கரமான நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றி உனது கருணை கொண்டு எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும். மற்றும் எல்லர் முஸ்லிம்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!.