Showing posts with label சமூக நல்லிணக்க விருது. Show all posts
Showing posts with label சமூக நல்லிணக்க விருது. Show all posts

Monday, October 05, 2009

சிராஜுல் மில்லத் 84- வது பிறந்த நாள் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா


இந்திய ய+னியன் முஸ் லிம் லீகின் மறைந்த மாபெ ரும் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாகிப் 84-வது பிறந்த நாள் விழா அக்..4-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில இந் திய ய+னியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையேற் றார்.

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஆலிம்கள் அணி அமைப்பாளர் என். ஹாமித் பக்ரி இறைமறை ஓதினார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநிலச் செயலாளர் கமுதி பஷீர் விழா அறிமுக வுரை நிகழ்த் தினார்.

உலமாக்கள் பணியா ளர் நலவாரியம் அமைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது, உல மாக்களின் சார்பில் மவ் லானா குடியாத்தம் அய்ய+ப் ரஹ்மானி ஹஜரத் ஆகியோர் உரையாற்றினர்.

சமூக நல்லிணக்க விருது பெறுவோருக்கான பாராட்டு குறிப்புரைகளை அரவாக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் ஹெச். அப்துல் பாசித், வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் ஆகியோர் வாசித்து உரையாற் றினர்.

இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா. சற்குணம் வாழ்த்துரை வழங்கினார்.

நூல்கள், குறுந்தகடு வெளியீடு
மறைந்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பெருந்தலைவர் ஜி.எம். பனாத் வாலா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற் றிய உரைகளின் தமிழாக் கமான முஸ்லிம் தனியார் சட்டத்தை முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் ஜீவகிரிதரன் மொழியாக் கம் செய்துள்ளார் அந் நூலும், பேரறிஞர் அண் ணாவின் பார்வையில் இஸ்லாம், முஸ்லிம், முஸ் லிம் லீக் என்ற தலைப்பில் மணிச்சுடர் செய்தியாளர் இரா.ச.மு. ஹமீது தொகுத்த நூலும், அய்யம் பேட்டை ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் தொகுத்த சிரா ஜுல் மில்லத் பாமாலை என்ற நூலும், பாபரி மஸ்ஜித் தகர்ப்பிற்குப் பின் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப் ஆற்றிய சமூக நல்லிணக்கம் தழைத் தோங்க வேண்டும் என்ற குறுந்த கடும் வெளியிடப் பட்டன. அவைகளை தமிழக நிதியமைச்சர் பேரா சிரியர் க. அன்பழகன் வெளியிட்டார். முதல் பிரதியை இ.அஹமது பெற்றுக் கொண்டார்.

இரண்டாம் பிரதியை மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அஹமது, மூன்றாம் பிரதியை காயல் பட்டினம் நகராட்சி தலைவர் வாவு. சா. செய்யது அப்துர் ரஹ்மான் ஆகி யோரும் பெற்றுக் கொண் டனர்.

உலமாக்கள் நல வாரியம் அமைத்ததற்கு நன்றி
உலமாக்கள் பணியா ளர் நல வாரியம் அமைத்த முதல்வர் கலைஞர் அவர் களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசியத் தலைவர் இ.அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேரா சிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் முதல்வர் கலைஞருக்கு நினைவுப் பரிசை பேராசிரி யர் அன்பழகனிடம் அளித் தனர். அதனைத் தொடர்ந்து சமூக நல்லிணக்க விருது கள் அருட்தந்தை சேவியர் அருள்ராஜ், மானுட வசந்தம் டாக்டர் கே.வி. எஸ். ஹபீப் முஹம்மது, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை மாண்புமிகு நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் வழங்கினார். பாராட்டுக் குறிப்புரை பத்திரங்களை மாண்புமிகு மத்திய அமைச்சர் இ.அஹமது வழங்கினார். பொன்னா டைகளை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அணிவித்தார் அமைச்சர் க.அன்பழகன் விழாப் பேருரை நிகழ்த்தினார்.

விருது பெற்ற அருட் தந்தை சேவியர் அருள்ராஜ், மானுட வசந்தம் டாக்டர் கே.வி. எஸ். ஹபீப் முஹம் மது, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய அமைச் சருமான இ.அஹமது வாழ்த்துரை வழங்கினார்.. தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவருமான பேரா சிரியர் கே.எம்.காதர் மொகி தீன் நிறைவுரை நிகழ்த்தி னார்.

மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் நன்றி கூறினார். மாநில மார்க் கத்துறை செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் துஆ ஓதினார். மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

முன்னதாக மாலை 4.30 மணிக்கு தாய்ச்சபை பாடகர் முகவை சீனி முஹம்மது குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

முஸ்லிம்களின் தேவைகளை கேட்காமலேயே செய்பவர் முதல்வர் கருணாநிதி சமூக நல்லிணக்க விருதுகளை வழங்கி அன்பழகன் பேச்சு


சென்னை, அக்.5-
முஸ்லிம்களின் தேவைகளை கேட்காமலேயே நிறைவேற்றுபவர் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று சமூக நல்லிணக்க விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பழகன் கூறினார்.
சமூக நல்லிணக்க விருது
இந்திய ïனியன் முஸ்லிம் லீக் சார்பில் அப்துல் சமது பிறந்த நாளையொட்டி சமூக நல்லிணக்க விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவுக்கு மாநில தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் தலைமை தாங்கினார்.
நிதி அமைச்சர் அன்பழகன், சமூக நல்லிணக்க விருதுகளை பனை தொழிலாளர் நல வாரிய தலைவர் குமரிஅனந்தன், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை துணைத் தலைவர் டாக்டர் ஹபீப் முகம்மது, சிறுபான்மையோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் சேவியர் அருள்ராஜ் ஆகியோருக்கு வழங்கி பேசினார்.
உடல்நிலை சரியில்லை
அமைச்சர் அன்பழகனுக்கு வாழ்த்தி பேசிய இந்திய சமூக நீதி இயக்க தலைவர் எஸ்றா.சற்குணம் குல்லா ஒன்றை பரிசாக வழங்க, அதனை காதர்மொய்தீன் அவருக்கு அணிவித்தார். அமைச்சர் அன்பழகன் அந்த குல்லாவை அணிந்தபடியே பேசினார். அவர் பேசியதாவது:-
இங்கு விருதுகளை வழங்கி பேச வேண்டிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எதிர்பாராத வகையில் 2 நாட்களாக காய்ச்சல் காரணமாக வரமுடியாத நிலையில் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். கழகம் சார்பில் நீயாவது கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறியதன் பேரில் அவர் சார்பில் நான் கலந்து கொண்டுள்ளேன்.
அனைவரும் திராவிடர்கள்
திராவிட இயக்கத்திற்கு இஸ்லாமிய சமூகத்தோடு நீண்ட தொடர்பு உண்டு. கருத்து ஒற்றுப்போனால் மன வேறுபாடு வராது. வன்முறை தவிர்க்கப்படுமேயானால் நியாயங்கள் தானாக நிலைக்கும். அந்த வகையில் நான் இந்த விழாவில் பங்கு கொண்டிருக்கிறேன். சிறுபான்மை, பெரும்பான்மை எல்லாம் எண்ணிக்கைக்காகத் தான். ஆனால் நாம் அனைவரும் சகோதரத்துவத்தால் ஒன்றாக இருக்கிறோம். மதம் வெவ்வேறாக இருந்தாலும் மொழி நமக்கு தமிழ் ஒன்று தான்.
நான் இந்த குல்லாவை அணிந்திருப்பதால் முழுக்க முஸ்லிமாகிவிடவில்லை. நண்பர்களை மதிப்பதற்கு தான் இந்த அடையாளம். நாம் அத்தனை பேரும் திராவிடர்கள். உலகிலேயே தென்னகத்து மக்கள் தான் மூத்த குடிமக்கள். தொன்மையான இனம் திராவிடம், தொன்மையான மொழி தமிழ். இஸ்லாமுக்கும், கிறிஸ்துவத்துக்கும் அன்பும், சமத்துவமும் அடிப்படையானவை. இதற்கு அடிப்படை காரணம் திராவிட அடிப்படை. அந்த அடிப்படையில் நாம் எல்லோரும் ஓர் இனம்.
பிற்பட்டோர் பட்டியலில்
இஸ்லாமியர்களுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கேட்காமலேயே கொடுக்கக் கூடியவர். இந்த சமுதாயத்திற்காக தி.மு.க. ஆட்சி செய்த சாதனைகளை, உதவிகளை அவர் பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறார். மிலாது நபிக்கு முதன்முதலாக விடுமுறை அளித்தது தி.மு.க. ஆட்சி தான். தெக்கனி, லெப்பை முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்தது, அரசு கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டியது, சிறுபான்மையினர் நல ஆணையம் அமைத்தது, ஓய்வூதியம் பெறும் உலாமாக்கள் எண்ணிக்கையை 2400 ஆக உயர்த்தியது தி.மு.க. ஆட்சி தான்.
98-ல் மதுரை வக்பு வாரிய கல்வி நிறுவனங்களை பராமரிக்க ரூ.5.95 லட்சம் வழங்கப்பட்டது. 99-ல் ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் உருவாக்கியது, முஜாபர்களுக்கும் ஓய்வூதியம் நீட்டிப்பு, உருது அகாடமி தொடங்கியதும் தி.மு.க. ஆட்சியில் தான்.
கேட்காமலேயே செய்வார்
ரூ.58.69 லட்சம் செலவில் காயிதே மில்லத்துக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது. இஸ்லாமிய ஆய்வு மையம் ஏற்படுத்தியது, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது, தனி இயக்குனரகம் அமைத்தது, உலாமாக்கள் வாரியம் ஏற்படுத்தியது போன்ற பணிகளை தி.மு.க. ஆட்சி தான் செய்தது. எனவே முஸ்லிம்களுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கேட்காமலேயே செய்யக் கூடியவர்.
இவ்வாறு அமைச்சர் அன்பழகன் பேசினார்.
மின்கட்டண சலுகை
முன்னதாக மசூதிகளுக்கும், மதரஸாக்களுக்கும் மின் கட்டணம் வணிக ரீதியில் அல்லாமல், வீட்டு கட்டண ரீதியில் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
விழாவில் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும் மத்திய மந்திரியுமான அகமது வாழ்த்தி பேசினார். மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் வரவேற்றார். அப்துல்ரஹ்மான் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலிலூர்ரஹ்மான், அப்துல்பாஷித், அய்ïப் ரஹ்மானி, செய்யது அகமது, மாவட்ட தலைவர் ஜெய்னுலாபுதீன், இளைஞர் அணி அமைப்பாளர் நிஜாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் அணி அமைப்பாளர் பாத்திமா முஸப்பர் நன்றி கூறினார்.

Wednesday, September 30, 2009

அக்டோபர் 4 சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா பாரீர்! தாய்ச்சபை அழைக்கிறது அணி திரண்டு வாரீர்!

அப்துஸ் ஸமத்
தேவையற்றவனின் அடிமை என்ற பொருள் பொதிந்த பெயருக்குச் சொந்தக்காரர்.

சிராஜுல் மில்லத்
சமுதாயம் தன் கிரீடமாக இவரை அலங்கரித்து கொண்டபோது ஹசமுதாயத்தின் ஒளிவிளக்கு என்ற மனம் நிறைந்த பட்டத்தை சூட்டி மகிழ்ந்தது. சந்தனத் தமிழ் மணக்கும் சிந்தனைச் செம்மல்

தமிழ் கொஞ்சி விளையாடிய அந்த நாவுக்கரசரை அறிவுலகம் இப்படி அழைத்த போது கருத்துச் சுரங்கமாகவும், காலப் பெட்டகமாகவும் பவனி வந்தவர். அவர் உரை கேட்க அறிஞர்களும் ஆசைப்பட்டனர்@ அவருடன் உறவாட அரசியல் மேதைகளும் ஆர்வப் பட்டனர்.

பொது மேடைகளில் அவர் சொற்பொழிவை துவக்கியதில்லை, ஹவார்த்தைகளைத் தொடங்கு வார். அதில் வரலாறு வலம் வரும்@ கருத்துக்கள் கண்ணியம் பெறும்.

சாதனைகளை அவர் சொல்லிக் காட்டும் போது ஹமன்னிக்கத்தக்க பெருமிதம் கொள்வார்@. மகிழ்வை அவர் பரிமாறும் போது ஹபுளகாங்கிதமடைவார்.

அவரது உச்சரிப்புகள் பெரும்பாலும் உபதேசங்கள் தான்.
வல்ல இறைவனை வணங்கி வாழ்வோம்
இல்லாதோர்க்கு வழங்கி வாழ்வோம்@
எல்லாருடனும் இணங்கி வாழ்வோம்!@
மதஉணர்வையும், மனிதநேயத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் ஒருங்கிணைத்துச் சொன்ன அற்புதச் சொற்றொடர் அது.
ஹவன்முறைக்கு துணியவும் கூடாது@ வன்முறைக்கு பணியவும் கூடாது என அவர் உதிர்த்தது வார்த்தை ஜாலமல்ல - இந்த தேசத்தின் நிலைப்பாடு! தமிழக முஸ்லிம்களை அவர் அடையாளப்படுத்திய போது, இஸ்லாம் எங்கள் வழி@ இன்பத்தமிழ் எங்கள் மொழி என்றார்.

இரண்டே சொல்லில் எல்லாவற்றையும் அடக்கி விட்ட இச் சொற்றொடர்தான் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளை அலங்கரித் தது. தி.மு.க.வுடன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அரசியல் உறவுக்கு அடித்தளம் அமைத்து கண்ணியத் திற்குரிய காயிதெமில்லத் அவர்களை அறிஞர் அண்ணாவுக்கு அறிமுகம் செய்தது என்பது சிராஜுல் மில்லத் அவர்களின் பழைய வரலாறு.

ஹநேருவின் மகளே வருக@ நிலையான ஆட்சி தருக! என்ற முழக்கத்தோடு இந்திரா அம்மையாரையும், டாக்டர் கலைஞரையும் கரம் கோர்க்க வைத்து அரசியல் அரங்கில் புதிய அத்தியாத்தை உருவாக்கி காட்டியது இவரது சாதனையின் மகுடம்.

அந்த சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிபின் 84-வது பிறந்த நாள்தான் அக்டோபர் 4.

தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் விழா எடுத்து மகிழ்கிறது. முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.

அவர் கரத்தால் சமூக நல்லிணக்க விருதுகளை இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், மானுட வசந்தம் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, அருட்தந்தை பேராயர் சேவியர் அருள்ராஜ் ஆகியோர் பெறு கின்றனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் மத்திய அமைச்சர் இ.அஹமது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கு கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், எச். அப்துல் பாஸித், பாராட்டுக் குறிப்புரைகளை படித்து மகிழ உள்ளனர்.

உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்த தமிழ்நாடு அரசுக்கு இந்த விழாவில் நன்றி அறிவிப்பு செய்யப்பட உள்ளது.

அருள்மறை குர்ஆனுக்கு தமிழில் முதன் முதலில் விளக்கவுரை எழுதிய அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள் புதல்வரின் பிறந்த நாள் விழாவில் சங்கைக்குரிய உலமா பெருமக்கள் இந்த நன்றியை செலுத்துகின்றனர். எவ்வளவு பொருத்தம்!

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா எம்.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹஸரத், மௌலானா அய்ய+ப் ரஹ்மானி ஹஸரத், முஸ்லிம் லீக் சார்பில் மாநில பொருளாளர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது ஆகியோர் முதல்வர் கலைஞருக்கு நன்றி கூறுகின்றனர்.

சமுதாய நலனே என் மூச்சு, தாய்ச்சபை வளமே என் பேச்சு என தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சமுதாயத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையேற்கிறார்.

முஸ்லிம் லீகை வசந்த காலமாக்கும் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் வரவேற்றுப் பேசுகிறார். தாய்ச்சபையின் மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் நன்றி கூறுகிறார்.

அக்.4 தலைநகரில் சமுதாயம் சங்கமிக்கட்டும்!
தலைநிமிர்ந்து வாழ தக்பீர் முழக்கம் ஓங்கி ஒலிக்கட்டும்!
இதயங்களை இணைப்போம்@ சமூக நல்லிணக்கம்
சமைப்போம்@ அணி திரண்டு வாரீர்!

- காயல் மகப+ப்

Tuesday, September 29, 2009

அக். 4-ல் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு


அக்.4 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் 84-வது பிறந்த தின சமூக நல்லிணக்க விருது வழங் கும் விழாவிற்கு சென்னை மற்றும் செனைன புறநகர் மாவட்டங்களிலிருந்து பெருந்திரளாக பங்கேற்கச் செய்வது என்று மாவட்ட நிர்வாகிகளின் ஆலோ சனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வடசென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், அணி களின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கிய செயல் வீரர்கள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் மாநிலத் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் நேற்று மாலை நடைபெற்றது.

வடசென்னை மாவட் டத் தலைவர் எம். ஜெய் னுல் ஆபிதீன் தலைமை யில் நடைபெற்ற இக் கூட் டத்திற்கு தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி. இஸ்மத் பாஷா, காஞ்சி புரம் மாவட்டத் தலைவர் கே.எம். அப்துல்லா பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.எச். இஸ்மா யில் இறைமறை ஓதி கூட் டத்தை துவக்கி வைத்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ப+வை முஸ் தபா அனைவரையும் வர வேற்றுப் பேசினார். இயக்கப் பாடகர் இ.வி.கே. முத்து முஹம்மது இன் னிசை வழங்கினார்.

மாநில நிர்வாகிகள் பங்கேற்பு
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், பொருளாளர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது, மாநில செயலாளர் கமுதி பஷீர், இளைஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர், மவ்லானா அப்துல் காதர் மிஸ்பாஹி, சலாஹ{தீன் அய+ப்கான், அப்துல் ரஹீம் ஆகியோர் உரையாற்றினர். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹப+ப், மாநில காயிதெ மில்லத் பேரவை அமைப் பாளர் திருப்ப+ர் சத்தார், மாநில கல்வி மேம்பாட்டு அணி அமைப்பாளர் முஸப்பர் அஹமது, காஞ்சி புரம் மாவட்டச் செயலா ளர் கே.எஸ். தாவ+து, வடசென்னை மாவட்டப் பொருளாளர் கேப்டன் பஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அக்டோபர் 4-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் பிறந்த நாள் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழாவிற்கு சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களிலிருந்து பெருந்திரளான சமுதாய மக்களை திரட்டுவது என்று முடிவு செய்யப்பட் டது. சென்னை மாநகரின் ஒவ்வொரு பகுதியிலிருந் தும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் உறுப்பி னர்கள் மற்றும் ஆதரவா ளர்களை அந்தந்த பகுதிக ளின் பொறுப்பாளர்கள் அழைத்து வருவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஜும்ஆக்களில் அறிவிப்பு செய்ய முடிவு
இந்த விழாவில் உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி அறிவிக்கவும், ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகி கள் முதல்வர் கலைஞருக்கு நினைவுப் பரிசும் வழங்க இருப்பதால் ஒவ்வொரு மஹல்லாக்களிலும் உள்ள ஜமாஅத் நிர்வாகிகள் சங்கைக்குரிய இமாம்கள், ஆலிம் பெருமக்கள் அனை வரையும் இவ் விழா வில் பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதற்காக வரக்கூடிய வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது, ஒவ்வொரு பள்ளியிலும் அறிவிப்புகள் செய்வ தோடு, ஜும்ஆ தொழு கைக்கு வருகின்ற மக்களி டம் துண்டுப் பிரசுரம் மூலம் இந்த விழா பற்றி அறிவிப்பு செய்வது என் றும் முடிவு செய்யப்பட் டது.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங் களில் விழாவிற்கு வருகை தருவோர் பச்சிளம் பிறைக் கொடியை கட்டிக் கொண்டு வருகை தர வேண்டும் எனவும், தங்கள் இல்லங்களிலிருந்து தங்கள் ஆண், பெண், உறவினர் களையும் அழைத்து வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட் டது. சென்னையிலுள்ள கல் லூரி மாணவர்களை திர ளான அளவில் இந் நிகழ்ச்சி யில் பங்கேற்கச் செய்யவும் ஆலோசனை வழங்கப் பட்டது.

முதல்வர் கலைஞர் பங்கேற்பு
இது முதல்வர் கலைஞர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் 4 மணிக்கே கலைவாணர் அரங்கத்திற்கு அனைவரும் வந்து விட வேண்டும் என்றும், சென்னைக்கு வெளியி லுள்ள பகுதிகளிலிருந்து வருகை தருகின்றவர் களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவர்க ளுக்கு கலைவாணர் அரங் கத்தில் இருக்கைகளை ஏற்பாடு செய்து தர வேண் டும் என்று கேட்டுக் கொள் ளப்பட்டது.

இவ் விழாவை முன் னிட்டு சென்னையில் விளம்பர தட்டிகள், கேபிள் தொலைக்காட்சி களில் ஒளிபரப்பு, கொடி தோரணங்கள் கட்டுதல் போன்றவைகளை செய் வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

வட சென்னை
இக் கூட்டத்தில் வட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ரப்பானி அப்துல் குத்தூஸ், துறைமுகம் ப+க் குளம் கப+ர், பஸல், இம் ரான், ஜே. மக்ரூப், ராயபுரம் காதர் பாய், ஜாபர், வண்ணை நாசர், எம். காதர் ஷா, பெரம்ப+ர் எம்.ஏ. உஸ்மான் அலி, ஹாரிஸ், ப+வை காதர், ஏ. ஹைதர் அலி, ஜே. ஜாஹீர், ஏ.கே. முஹம்மது ரபி, கஜினி, ஆவின் சாகுல், காதர் பாஷா, ஆர்.கே. நகர் ஹனீபா, கே.எம். யாஸின், சுலைமான் ஆலிம், திரு.வி.க. நகர் இர்பான், எம். முஸ்தபா, ஷெரீப், ஆர். ஜானுல்லா, கே. அப்துல் கபார், ஜே. முஹம்மது சலீம், வில்லிவாக்கம் ஷேக் தாவ+து, ரஹ்மானியா ஆட்டோ சங்கம் பரக்கத், நாசர், தென் சென்னை மாவட்டம் ஆலந்தூர் எம்.எஸ். அப்துல் வஹாப், கிண்டி மேத்தப்பிள்ளை மரைக்காயர், வி.என். அப்துல் ஜலீல், ஐ. முஹம் மது சலாஹ{தீன், எச். முஹம்மது சுபைர் பாஷா, எம்.எஸ். அப்துல் வஹாப், மேத்தா நகர் அப்துல் ரஹீம், ஹைதர் அலி கான், ஏ.எச். கான், கே.எம்.ஓ. நூருல் மியான், எம்.எஸ்.ஒ. அய்ய+ப்கான், கௌஸ் பேக், சேப்பாக்கம் ஆலம்கான், மீரான் முகைதீன், ஓ.எம். சாகுல் ஹமீது, கலீமுல்லா கான், திருவல்லிக்கேணி நாசர், கே.எம்.ஓ. நாகூர் மீரான்

காஞ்சிபுரம் மாவட் டம் - மாவட்ட அமைப்புச் செயலாளர் புதுப்பட்டி னம் ஜாஹீர், மாவட்டப் பொருளாளர் எஸ். அப்துல் ஹலீம், பொதுக் குழு உறுப்பினர் ஏ. அஸ் லம் பாஷா, காஞ்சி நகரத் தலைவர் எஸ்.எம். அப்துல் குத்தூஸ், செயலாளர் மக்ப+ல் பாஷா, பொருளா ளர் கே.எஸ். உஸ்மான், காஞ்சி ஒன்றியச் செயலா ளர் ஏ.எம். முஹம்மது அலி, தாம்பரம் அப்துல் ரஷீத், பனைய+ர் ய+னுஸ், ஷேக் அப்துல் காதர், முஸ்தபா, குர்ரான், அப்துல் அலி, பேரூர் முஹம்மது அப+பக் கர், இளைஞர் அணி எம். முஹம்மது ய+னுஸ், சர்தார் பாஷா, ஏ. ஆஸிப், ஷரீப், அப்துல் காதர், அன்சாரி, ஆரோக்கிய சுந்தரனார் உள்ளிட்ட முஸ்லிம் லீக் முன்னோடிகள், அணி களின் நிர்வாகிகள், இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=138