Monday, October 05, 2009

சிராஜுல் மில்லத் 84- வது பிறந்த நாள் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா


இந்திய ய+னியன் முஸ் லிம் லீகின் மறைந்த மாபெ ரும் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாகிப் 84-வது பிறந்த நாள் விழா அக்..4-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில இந் திய ய+னியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையேற் றார்.

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஆலிம்கள் அணி அமைப்பாளர் என். ஹாமித் பக்ரி இறைமறை ஓதினார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநிலச் செயலாளர் கமுதி பஷீர் விழா அறிமுக வுரை நிகழ்த் தினார்.

உலமாக்கள் பணியா ளர் நலவாரியம் அமைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது, உல மாக்களின் சார்பில் மவ் லானா குடியாத்தம் அய்ய+ப் ரஹ்மானி ஹஜரத் ஆகியோர் உரையாற்றினர்.

சமூக நல்லிணக்க விருது பெறுவோருக்கான பாராட்டு குறிப்புரைகளை அரவாக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் ஹெச். அப்துல் பாசித், வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் ஆகியோர் வாசித்து உரையாற் றினர்.

இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா. சற்குணம் வாழ்த்துரை வழங்கினார்.

நூல்கள், குறுந்தகடு வெளியீடு
மறைந்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பெருந்தலைவர் ஜி.எம். பனாத் வாலா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற் றிய உரைகளின் தமிழாக் கமான முஸ்லிம் தனியார் சட்டத்தை முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் ஜீவகிரிதரன் மொழியாக் கம் செய்துள்ளார் அந் நூலும், பேரறிஞர் அண் ணாவின் பார்வையில் இஸ்லாம், முஸ்லிம், முஸ் லிம் லீக் என்ற தலைப்பில் மணிச்சுடர் செய்தியாளர் இரா.ச.மு. ஹமீது தொகுத்த நூலும், அய்யம் பேட்டை ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் தொகுத்த சிரா ஜுல் மில்லத் பாமாலை என்ற நூலும், பாபரி மஸ்ஜித் தகர்ப்பிற்குப் பின் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப் ஆற்றிய சமூக நல்லிணக்கம் தழைத் தோங்க வேண்டும் என்ற குறுந்த கடும் வெளியிடப் பட்டன. அவைகளை தமிழக நிதியமைச்சர் பேரா சிரியர் க. அன்பழகன் வெளியிட்டார். முதல் பிரதியை இ.அஹமது பெற்றுக் கொண்டார்.

இரண்டாம் பிரதியை மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அஹமது, மூன்றாம் பிரதியை காயல் பட்டினம் நகராட்சி தலைவர் வாவு. சா. செய்யது அப்துர் ரஹ்மான் ஆகி யோரும் பெற்றுக் கொண் டனர்.

உலமாக்கள் நல வாரியம் அமைத்ததற்கு நன்றி
உலமாக்கள் பணியா ளர் நல வாரியம் அமைத்த முதல்வர் கலைஞர் அவர் களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசியத் தலைவர் இ.அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேரா சிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் முதல்வர் கலைஞருக்கு நினைவுப் பரிசை பேராசிரி யர் அன்பழகனிடம் அளித் தனர். அதனைத் தொடர்ந்து சமூக நல்லிணக்க விருது கள் அருட்தந்தை சேவியர் அருள்ராஜ், மானுட வசந்தம் டாக்டர் கே.வி. எஸ். ஹபீப் முஹம்மது, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை மாண்புமிகு நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் வழங்கினார். பாராட்டுக் குறிப்புரை பத்திரங்களை மாண்புமிகு மத்திய அமைச்சர் இ.அஹமது வழங்கினார். பொன்னா டைகளை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அணிவித்தார் அமைச்சர் க.அன்பழகன் விழாப் பேருரை நிகழ்த்தினார்.

விருது பெற்ற அருட் தந்தை சேவியர் அருள்ராஜ், மானுட வசந்தம் டாக்டர் கே.வி. எஸ். ஹபீப் முஹம் மது, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய அமைச் சருமான இ.அஹமது வாழ்த்துரை வழங்கினார்.. தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவருமான பேரா சிரியர் கே.எம்.காதர் மொகி தீன் நிறைவுரை நிகழ்த்தி னார்.

மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் நன்றி கூறினார். மாநில மார்க் கத்துறை செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் துஆ ஓதினார். மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

முன்னதாக மாலை 4.30 மணிக்கு தாய்ச்சபை பாடகர் முகவை சீனி முஹம்மது குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

No comments: