Wednesday, September 30, 2009

அக்டோபர் 4 சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா பாரீர்! தாய்ச்சபை அழைக்கிறது அணி திரண்டு வாரீர்!

அப்துஸ் ஸமத்
தேவையற்றவனின் அடிமை என்ற பொருள் பொதிந்த பெயருக்குச் சொந்தக்காரர்.

சிராஜுல் மில்லத்
சமுதாயம் தன் கிரீடமாக இவரை அலங்கரித்து கொண்டபோது ஹசமுதாயத்தின் ஒளிவிளக்கு என்ற மனம் நிறைந்த பட்டத்தை சூட்டி மகிழ்ந்தது. சந்தனத் தமிழ் மணக்கும் சிந்தனைச் செம்மல்

தமிழ் கொஞ்சி விளையாடிய அந்த நாவுக்கரசரை அறிவுலகம் இப்படி அழைத்த போது கருத்துச் சுரங்கமாகவும், காலப் பெட்டகமாகவும் பவனி வந்தவர். அவர் உரை கேட்க அறிஞர்களும் ஆசைப்பட்டனர்@ அவருடன் உறவாட அரசியல் மேதைகளும் ஆர்வப் பட்டனர்.

பொது மேடைகளில் அவர் சொற்பொழிவை துவக்கியதில்லை, ஹவார்த்தைகளைத் தொடங்கு வார். அதில் வரலாறு வலம் வரும்@ கருத்துக்கள் கண்ணியம் பெறும்.

சாதனைகளை அவர் சொல்லிக் காட்டும் போது ஹமன்னிக்கத்தக்க பெருமிதம் கொள்வார்@. மகிழ்வை அவர் பரிமாறும் போது ஹபுளகாங்கிதமடைவார்.

அவரது உச்சரிப்புகள் பெரும்பாலும் உபதேசங்கள் தான்.
வல்ல இறைவனை வணங்கி வாழ்வோம்
இல்லாதோர்க்கு வழங்கி வாழ்வோம்@
எல்லாருடனும் இணங்கி வாழ்வோம்!@
மதஉணர்வையும், மனிதநேயத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் ஒருங்கிணைத்துச் சொன்ன அற்புதச் சொற்றொடர் அது.
ஹவன்முறைக்கு துணியவும் கூடாது@ வன்முறைக்கு பணியவும் கூடாது என அவர் உதிர்த்தது வார்த்தை ஜாலமல்ல - இந்த தேசத்தின் நிலைப்பாடு! தமிழக முஸ்லிம்களை அவர் அடையாளப்படுத்திய போது, இஸ்லாம் எங்கள் வழி@ இன்பத்தமிழ் எங்கள் மொழி என்றார்.

இரண்டே சொல்லில் எல்லாவற்றையும் அடக்கி விட்ட இச் சொற்றொடர்தான் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளை அலங்கரித் தது. தி.மு.க.வுடன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அரசியல் உறவுக்கு அடித்தளம் அமைத்து கண்ணியத் திற்குரிய காயிதெமில்லத் அவர்களை அறிஞர் அண்ணாவுக்கு அறிமுகம் செய்தது என்பது சிராஜுல் மில்லத் அவர்களின் பழைய வரலாறு.

ஹநேருவின் மகளே வருக@ நிலையான ஆட்சி தருக! என்ற முழக்கத்தோடு இந்திரா அம்மையாரையும், டாக்டர் கலைஞரையும் கரம் கோர்க்க வைத்து அரசியல் அரங்கில் புதிய அத்தியாத்தை உருவாக்கி காட்டியது இவரது சாதனையின் மகுடம்.

அந்த சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிபின் 84-வது பிறந்த நாள்தான் அக்டோபர் 4.

தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் விழா எடுத்து மகிழ்கிறது. முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.

அவர் கரத்தால் சமூக நல்லிணக்க விருதுகளை இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், மானுட வசந்தம் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, அருட்தந்தை பேராயர் சேவியர் அருள்ராஜ் ஆகியோர் பெறு கின்றனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் மத்திய அமைச்சர் இ.அஹமது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கு கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், எச். அப்துல் பாஸித், பாராட்டுக் குறிப்புரைகளை படித்து மகிழ உள்ளனர்.

உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்த தமிழ்நாடு அரசுக்கு இந்த விழாவில் நன்றி அறிவிப்பு செய்யப்பட உள்ளது.

அருள்மறை குர்ஆனுக்கு தமிழில் முதன் முதலில் விளக்கவுரை எழுதிய அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள் புதல்வரின் பிறந்த நாள் விழாவில் சங்கைக்குரிய உலமா பெருமக்கள் இந்த நன்றியை செலுத்துகின்றனர். எவ்வளவு பொருத்தம்!

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா எம்.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹஸரத், மௌலானா அய்ய+ப் ரஹ்மானி ஹஸரத், முஸ்லிம் லீக் சார்பில் மாநில பொருளாளர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது ஆகியோர் முதல்வர் கலைஞருக்கு நன்றி கூறுகின்றனர்.

சமுதாய நலனே என் மூச்சு, தாய்ச்சபை வளமே என் பேச்சு என தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சமுதாயத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையேற்கிறார்.

முஸ்லிம் லீகை வசந்த காலமாக்கும் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் வரவேற்றுப் பேசுகிறார். தாய்ச்சபையின் மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் நன்றி கூறுகிறார்.

அக்.4 தலைநகரில் சமுதாயம் சங்கமிக்கட்டும்!
தலைநிமிர்ந்து வாழ தக்பீர் முழக்கம் ஓங்கி ஒலிக்கட்டும்!
இதயங்களை இணைப்போம்@ சமூக நல்லிணக்கம்
சமைப்போம்@ அணி திரண்டு வாரீர்!

- காயல் மகப+ப்

No comments: