Thursday, September 27, 2012

இராமநாதபுரத்தில் சரித்திர நிகழ்வு


இராமநாதபுரம், செப். 25, இராமநாதபுரம் நகரில் இன்று தமுமுக, எஸ்.டி.பி.ஐ, ஐ.என்.டி.ஜே , சுன்னத் ஜமாத்தார்கள் , அனைத்து உலமா பெருமக்கள், அனைத்து ஊர் ஜமாத்தினர்கள். இதர இஸ்லாமிய இயக்கங்கள், சங்கங்கள் ஆகியோர் இனைந்த இராமநாதபுரம் மாவட்ட அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் சார்பாக  இஸ்லாமியர்களின் உயிருனும் மேலான உன்னத நபி முகம்மது (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்தவர்களையும் அதை கண்டிக்க மறுக்கும் அமெரிக்கர்களையும் அந்த திரப்படத்தை வெளியிட்டுள்ள அனைத்து வலைத்தளங்களையும் தடை செயய மறுக்கம் மத்திய அரசை கண்டித்தும் ஒரு மாபெரும் கண்டன பேரணியும் கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது.


கொல்லம்பட்றைத்தெரு ஜமாத் நிர்வாகி ஜனாப் M.A. முத்தலிப் அவர்கள்

இராமநாதபுரம் நகர் கொல்லம்பட்டரை தெருவில் உள்ள இராமநாதபுரத்தின் மிக பழமையானதும் , முதல் பள்ளியுமான கொல்லம் பட்டறை பள்ளியில் இருந்து துவங்கிய இந்த பேரணிக்கு ஆலிம் கிராஅத் ஓத அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளரும் கொல்லம்பட்டறை தெரு ஜமாத் நிர்வாகியுமான ஜனாப் M.A. முத்தலிப் அவர்கள் துவக்கி வைத்தார்கள். பேரணியை வழி நடத்தும் விதமாக அனைத்து  இயக்கத்தவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் , மாவட்டத்தின் அனைத்து ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து இயக்க நிர்வாகிகள் வீர முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஒஞ்கி ஒலித்து வந்தார்கள்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் முகவை அப்துல் ஜமீல்


அல்லாஹ்வின்து£தர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், «لا يؤمن عبد حتى أكون أحب إليه من أهله وماله والناس أجمعين உங்கள் குடும்பத்தினரைவிட உங்கள் செல்வத்தைவிட உங்களுக்கு விருப்பமானவர்களைவிட என்னை அதிகமாக நேசிக்காதவரை நீங்கள் ஒருவரும் மூஃமின்கள் ஆகமாட்டீர்கள் (அறிவிப்பாளர் ; அனஸ்(ரலி), நு£ல் ; புஹாரி, முஸ்லிம்)


மேடையில் தலைவர்கள் எஸ்டிபிஐ பரமக்குடி ஜியாவுதீன்

இந்த நபிமொழிக்கினங்க மாவட்டமெங்கிலும் இருந்து இசுலாமிய வீர இளைஞர்கள் ஆர்ப்பரித்து வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கில் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி சின்க்கடை வீதியெங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து அன்னல் நபியை இழிவு படுத்தியதை கண்டித்தும் மாநபியின் வீர வேங்கைகள் கோசம் எழுப்பி பேரணியாக தெருவெங்கும் நடந்து வந்தது இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் காணத சரித்திர சம்பவம். இன்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் இராமநாதபுரத்தில் உள்ள அனைத்து இசுலாமிய வியாபார நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. 
தமுமுக வின் கோவை செய்யது


பொங்கி எழுந்த வீர இசுலாமியர்களின் ஆர்பரிப்பில் இராமநாதபுரம் தினறியது. தப்புக்கணக்கு போட்டு வாகனங்களில் வந்து முஸ்லிம்களை பீதியடைய செய்யலாம் என்று திறலாக குவிக்கப்பட்டிருந்த காவல்துறை எம் மாவட்ட இசுலாமிய வீரவேங்கைகளின் ஆக்ரோசத்தில் பின்வாங்கியது.


எஸ்.எம் பாக்கர் மற்றும் முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்

பேரணியி்ன் பின்னர் இராமநாதபுரம் தீரர் திப்பு சுல்தான் சந்தை திடலில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்த்தில் முதலாவதாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் முகவை அப்துல் ஜமீல் வீர உரையுடன் துவக்கினார் பின்னர் த.மு.மு.க வின் பேச்சாளர் ஜனாப் கோவை செய்யது அவர்கள் ஆக்ரோசத்துடன் கண்டன உரை நிகழ்த்தினர் அதன் பின்னர் உரையாற்ற வந்த முகவையின் மைந்தன் இந்திய தவ்ஹித் ஜமாத்தின் எஸ்.எம். பாக்கர் அவர்கள் தனது சிம்மக் குரலில் கண்டனத்தை பதிவு செய்தார்கள் ,  நிகழ்சியின் இறுதியில் த.மு.மு.க வின் சகோ. அன்வர் அவர்கள் நன்றியுரை கூற கண்டன பொதுக்கூட்டம் இனிதே முடிந்தது.நிகழ்ச்சிகளை அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் ஜனாப் M.A முத்தலிப் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

பதாகை ஏற்திய பாலகர்கள்


முகவை மாநகர சரித்திரத்தில் திரன்டிராத கூட்டமிது. காவல்துறையும் உளவுத்துறை உட்பட ஏனைய அனைத்து மக்களும் திரன்டிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் ஓழுக்கமான கூடலை பார்த்து ஆச்சர்யத்தில் வியந்தனர். கூட்டத்தில் சிறப்பம்சமாக பெண்கள் வரவேண்டாம் என கூறியும் பெரியபட்டினம் என்ற இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பென்கள் வாகனங்களில் வந்து மேடையின் பின்புறம் அமர்ந்திருந்தது வியப்பாக இருந்தது.


நமது உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப் படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து நடந்த இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்த்தில் பங்கெடுத்து அன்னல் நபிகளுக்கெதிரான அநீதிக்கு கண்டன் தெறிவித்தவர்களாக சரித்திரத்தில் தங்களை இம்மக்கள் பதிவு செய்து கொண்டனர். இறுதியாக இந்நிகழ்ச்சியை ஒருங்கினைத்த சகோதரர்கள் , இதற்காக ஊர் ஊராக ஓடி அழைப்பு விடுத்து கூட்டத்தை கூட்டிய சகோதரர்கள் என பல்வேறு சகோதரர்கள் இதில் முகம் காட்டாமல் தூரமாக நின்றார்கள். இவர்களுக்கு வல்ல ரஹ்மான் பரக்கத் செய்வானாக. இவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை இருந்தாலும் இவ்வரலாற்று நிகழ்வின் முக்கிய பங்கு இவர்களுக்குறியது. வாழ்த்துக்கள் சகோதரர்களே!!

மேலதிக படங்களுக்கு இராமநாதபுரத்தில் சரித்திர நிகழ்வு கிளிக் செய்து பார்க்கவும்

No comments: