Sunday, September 24, 2006

ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டது!! (FLASH NEWS)

ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டது !!


கடையநல்லூர் செப்டம்பர் 23, ஹைகோர்ட் உத்தரவிற்கினங்க கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் கள்ளத்தனமாக ஆக்கிரமித்த தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தினரிடமிருந்து கைப்பற்றப்பட்டு மீண்டும் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் வசம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

கடையநல்லுலர் ஆர்.டி.ஓ முன்னிலையில் தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தின் மாநில துனைத்தலைவர் சைக்கிள் ஓட்டி புகழ் சைபுல்லா ஹாஜா வகையராக்கள் இனி பள்ளியில் எந்த பிரச்சினையிலும் ஈடுபட மாட்டோம் என்று கையெழுத்திட்டு கொடுத்தனர்.

பள்ளியின் அனைத்து வக்ஃப் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் அதிகாரம் ஜாக்குக்கு மட்டுமே உள்ளது என்ற ஹைகோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் பள்ளி இன்று தமிழ்நாடு தரங்கெட்ட ஜமாத்தினரிடம் இருந்து ஆர்.டி.ஓ முன்னிலையில் மீண்டும் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் ஒப்படைக்கப்பட்டது. இன்று 23.09.2006 மஃக்ரிப் தொழுகையில் இருந்து அனைத்தும் ஜாக்கால் மீண்டும் நியமக்கப்பட்ட இமாம் ஜனாப் அப்துல்லாஹ் உமரி அவர்களாலேயே நடத்தப்பட்டதாக வரும் தகவல்கள் தெறிவிக்கின்றன.

மேற்கொண்டு விரிவான செய்தி மற்றும் புகைப்படங்களுடன் விரைவில் பட்டனத்தான் அவர்கள் பட்டய கிளப்ப வருவார்.

இத்துடன் எமது அடுத்த ஹாட் ஆர்ட்டிக்கிள் : ததஜ ஜெயாவுடன் செய்த ஹீதைபியா ஒப்பந்தம் மீறப்பட்டதா? விரைவில்.
Related Articles :

1 comment:

ஆத்தூர்வாசி said...

இது போன்ற குழாயடிச் சண்டையை விட்டுவிட்டு எப்ப உருப்பட வழியைப் பார்பீர்கள். இதோ பாருங்கள் உங்கள் எதிரிகள் இஸ்லாத்தை இஸ்லாமியர்களை அழிக்க செய்யும் செயலை இதை எதிர்த்துக் குரல் கொடுக்க மாட்டீர்களா....

http://www.ibnlive.com/videos/22247/look-whos-fighting-over-up-polio.html

வருத்தத்துடன்,