Saturday, September 23, 2006

ஆயிரக்கணக்கில் தமுமுக வினர் கைது!!

ஜெயா வீட்டை முற்றுகையிட திரன்ட தமுமுக வினர்

சென்னை செப்டம்பர் 22, தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் தலைமைச்செயலாளர் ஜனாப் முனீர் ஹோடா அவர்களை தேசத்துரோகி என்றும் இவர் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டியவர் என்றும் தொடாந்து தனது முஸ்லிம் விரோத போக்கை காட்டி வரும் ஜெயலலிதாவை கண்டித்து அவரது இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தமுமுக கோவையில் கூடிய தனது மாநில செயற்குழுவில் அறிவித்திருந்தது.


கைதாகும் ஆன்களும் பென்களும்


அதன்படி இன்று மாலை 4 மணியளவில் ஆயிரக்கணக்காக முஸ்லிம்கள் ஆன்களும் பென்களும் குழந்தைகளுமாக கடற்கரை சாந்தி சிலை அருகில் கூடி ஜெயலலிதா வீட்டை நோக்கி முற்றுகையிட புறப்பட்டனர் அப்போது அவர்களை தடுத்து றிறுத்திய காவல்துறையினர் அங்கு திரன்டிருந்த ஆயிரக்கனக்கான முஸ்லிம்களை கைது செய்து வேணில் ஏற்றி அழைத்து சென்றனர்.

கைதான தமுமுக தலைவர்கள் செய்தியாளர்களிடம் பேசியபோது

முற்றுகைப் போராட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணை பொதுச் செயலாளர் கேப்டன் அமீருத்தீன், மாநிலச் செயலாளர்கள் அ. சாதிக் பாஷா, எஸ். முஹம்மது ஜைனுலாபிதீன், எம். தமிமுன் அன்சாரி, பி. அப்துஸ் ஸமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தடையை மீறி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் மாநில துணைச் செயலாளர்கள் எஸ்.எஸ். ஹாருண் ரஷீது, முஹம்மது கவுஸ், முஹம்மது சிராஜுதீன், முஹம்மது ஆரிப், சாதிக் அலி, ஹாஜாகனி உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் ஜெயலலிதாவைக் கண்டித்து அறவழியில் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாணவர்களும் அதிகளவில் கலந்து கொண்டனர்.

No comments: