Sunday, August 27, 2006

முந்தானையால் மூக்கை சிந்துகிறார்கள்!!

"உன் பெயர் என்னவென்று கேட்டால் அந்தா ஆட்டுக்குட்டி என்றும் தொன்டிக்கு வழி சொல்லு என்று கூறினால் நான் அல்வா திங்கவே இல்லை என்றும் கூறுவது போல.."

Note :If any one wants to receive the attached documents by mail please mail to tmpolitics@gmail.com

முக்கிய அறிவிப்பு : தலைமறைவான தென்காசி பட்டனத்தான் அவர்களுக்கு, இங்கு ஆட்டம் ஓவராகிவிட்டதால் உங்கள் உதவி தேவைப்படுகின்றது எங்கிருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளவும். வரும்போது கையில் விளக்குமாறும் வேப்பங்கொளயும் கொண்டு வரவும். (யோவ்..எங்கய்யா போன ? அடலீஸ்ட் கொஞ்சம் சப்போர்ட் பன்னுய்யா..ஒத்த ஆளா எத்தன பேத்த சமாளிக்கிறது?)

கடையநல்லூர் பள்ளி யாருக்கு சொந்தம்? என்ற தலைப்பிட்டு ஏவி விடப்பட்ட ததஜ வின் அஹமது அலி என்பவர் எழுதுகையில்,

Please click over every picture to view it bigger



"கடையநல்லூர் முபாரக் பள்ளிவாசல் அந்த பகுதியை சேர்ந்த தவ்ஹித் சகோதரர்களின் உழைப்பால் உறுவானது. அது எந்த அமைப்புக்கும் சேராது அது அந்த பகுதி மக்களுக்கு சொந்தமானது என்றுதான் இதுவரை ததஜவினர் கூறியும்இ எழுதியும் வருகிறார்கள். ஆனால் மூலை கழுவி விடப்பட்ட இந்த கோமாளி அந்த பள்ளி ததஜவுக்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் என்று பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளார். அப்படி ததஜ எங்கெயாவது அந்த பள்ளி தங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறியதாக நிறுபிக்க முடியுமா?-ததஜ வின் அஹமது அலி"


என்று எழுதியுள்ளர். இதில் இருந்து நமக்கு புலனாக கூடியவை இரண்டு விஷயங்கள்.

1. பள்ளி ததஜ வினருக்கு சொந்தமில்லையென்று அவர்களாக ஒத்துக்கொள்கின்றார்கள்.

2. பள்ளி ததஜ விற்கு சொந்தமென்று ததஜ வினர் எங்காவது கூறியதாக நிருபிக்க முடியுமா என்று கேட்டுள்ளார்கள்.

முதலில் பள்ளி ததஜ வினருக்கு சொந்தமில்லை என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்றி ததஜ வினர் ஒருபோதும் பள்ளிக்கு உரிமை கொண்டாடவில்லை என்று கூறியுள்ளதற்கு எங்கள் விளக்கம்.

பள்ளி ததஜ விற்கு சொந்தமில்லை என்றும் கூறுகின்றீர்கள் ததஜ வினர் பள்ளிக்கு ஒருபோதும் உரிமை கொண்டாட வில்லை என்றும் கூறுகின்றீர்கள் ஆனால் அதே சமயத்தில் அழைப்பு பணிக்காக வசூல் செய்யப்பட்ட பணத்தினை கொண்டு வேன் வேனாக ஆட்களை பள்ளிக்கு கொண்டு சென்று இறக்குகின்றீர்கள். ததஜ வின் பத்திரிகை அதிகாரப்பூர்வ இணையதளம் ஆகியவற்றில் ததஜ விற்கு தொடர்பு இல்லாத பள்ளி பற்றி வேறு யாரோ இரு குழுக்களுக்கிடையில் நடந்த பிரச்சினையை இவ்ளவுதூரம் உணர்ச்சி வசப்பட்டு சித்தறித்து எழுதுவது ஏன்?

ததஜ விற்கும் பள்ளிக்கும் சம்பந்தம் இல்லையென்றால் , ததஜ பள்ளியில் உரிமை கோர வில்லை என்றால் ததஜ வின் மாநில செயளாலர் கிரிமினல் சைபுல்லா ஹாஜா அவர்களும் மாநில நிர்வாகிகளும் இதற்காக ததஜ வின் பணத்தினை செலவு செய்து உழைப்பது ஏன்? வெற்றி!! வெற்றி!! ஏன்று கூவுவது ஏன்? இத்தனை ஆர்ப்பாட்டமும் ஏன்?

உங்களுக்கு சம்பந்தமில்லை என்றால் பின்னர் நீஙகள் ஏன் இதில் தலையிடுகின்றீர்கள்? பள்ளியை என்ன இந்து வெறியர்களா கைப்பற்ற போகிறார்கள். இரு வேறுபட்ட முஸ்லிம் குழுக்கலுக்குள் பிரச்சினை அவர்கள் அதை தீர்த்து கொள்வார்கள் என்று விட்டு விட வேண்டியது தானே? வலைகுடா வாழ் தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் அழைப்ப பணிக்காக அளித்த பணத்தினை கொண்டு இதற்கு செலவு செய்வது ஏன்?

சரி அதை விட்டு விடுவோம் மேட்டருக்கு வருவோம் , ததஜ ஒரு போதும் பள்ளி ததஜவிற்கு சொந்தம் என்று கூறியதில்லை ஆனால் பள்ளி ததஜ விற்கு சொந்தம் என்று உரிமை கொண்டாடுகிறார்கள் என்று பொய்யான செய்தியை முகவைத்தமிழன் வெளியிட்டுள்ளார் அப்படி ததஜ அந்த பள்ளி தங்களுக்கு சொந்தம் என்று எங்காவது கூறியதாக நிருபிக்க முடியுமா என்று சவால் விட்டிருந்தார் ததஜவின் விசிலடிச்சான் குஞ்சு கிரிமினல் அஹமது அலி என்பவர்.




மேலே உள்ள மின்னஞ்சலில் ததஜவின் அடுத்த விசிலடிச்சான் குஞ்சு துபை நிஜாம் மைதீன் என்பவர் எழுதியுள்ளதை படிக்கவும் :


"இறைவனின் கிருபையால் கடையநல்லூர் முபாரக் பள்ளி அரசு ஆனைப்படி தவ்ஹித் ஜமாத்திடம் ஒப்படைப்பு இன்று மக்ரிப் முதல் தொழுகை ஆரம்பம்"

என்று எழுதியுள்ளார். இதற்கு என்ன அர்த்தம்? ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளே விளக்குவீர்களா? நீங்கள்தான் கிரிமினல்கள் (புத்திசாளிகள்) ஆச்சே!!

கீழே உள்ளது ததஜ வின் அதிகாரப்பூர்வ இணையத்தில் அவுத்து விட்ட பிளாஸ் நியுஸ்.

"மாவட்ட வக்பு தீர்ப்பாயத்தில் தொடர்ந்த வழக்கில் கிடைத்த தீர்ப்பின் அடிப்படையில் ஜாக்இ தமுமுக வினரின் அராஜகத்தால் மூடப்பட்ட கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் (23.08.2006) மாலை 5.45 மணிக்குத் திறக்கப்பட்டது ! மக்ரிப் முதல் தொழுகை ஆரம்பமானது அனைத்து புகழும் அல்லாஹ்வுக்கே! -tntj.net"


"மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசலை மீண்டும் மூட ஜாக், தமுமுக கும்பல் முயற்சி முறியடிப்பு

ஏகத்துவக் கொள்கை வளர்ச்சியடைந்த ஊர்களில் ஒன்றுதான் நெல்லை மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் ஆகும். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 1982 ம் வருடம் சகோதரர் எம். அப்துல் ஜலீல் மதனீ அவர்களின் தலைமையில் விதைக்கப்பட்ட ஏகத்துவம் என்ற விதை தழைத்து கடையநல்லூரைச் சுற்றிலும் தென்காசி, வடகரை, அச்சன் புதூர், வாவா நகரம், ஆலங்குளம், புளியங்குடி, வாசுதேவநல்லூர், வீராணம், வல்லம், பொட்டல் புதூர், தாழையூத்து, இன்னும் பற்பல ஊர்களில் சத்திய ஒளி பாய்ச்சிக் கொண்டிருக்கின்றது. இறையுதவிக்கு அடுத்த படியாக கடையநல்லூரைச் சார்ந்த தவ்ஹீத்வாதிகளின் மாபெரும் தியாகத்தினாலும், நல்லுள்ளம் கொண்டோர்களின் உதவியினாலும் 1995ம் வருடம் பல்வேறு...-tntj.net"


இதற்கு என்ன அர்த்தம்? துதஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளே விளக்குவீர்களா? நீங்கள்தான் கிரிமினல்கள் (புத்திசாளிகள்) ஆச்சே!!

தீன்முஹம்மது என்ற ததஜவின் அவிழ்த்து விடப்பட்டதின் பொய்யை மக்கள் உணர்ந்து சொல்லடிபட்டு கேவலப்படுத்தப்பட்டு செத்ததால் அடுத்ததாக அவிழ்த்து விடப்பட்ட அஹமது அலி என்பது எழுதுகையில் :

"நேற்று மக்ரிப் இஷா இன்று பஜர் ளுஹர் அசர் என்று தொடர்சியாக தவ்ஹித் ஜமாத்தை சேர்ந்த சகோதரர்களே இமாமாக இருந்து தொழுகை வைத்துள்ளனர். பள்ளியின் பொருப்பும் அவர்களிடமே உள்ளது. ஆனால் ளுஹரையும்இ அசரையும் தமுமுகவைச் சேர்ந்தவர்கள் தொழவைப்பார்கள் என்று பொய்யுரைத்த இந்த ரயிசுதீனுடைய ஒரு பொய்யன் என்பது மீண்டும் அம்பலமானது. ஒரு பள்ளிவாசல் விசயத்திலேயே தனது கற்பனைகளை அளந்து விட்ட இந்த நபர் ததஜ சகோ.பிஜெ சம்மந்தப்பட்ட செய்திகளில் என்னெல்லாம் பொய்யுரைத்து இருப்பார் என்பதை சகோதரர்களே சிந்தியுங்கள்?."

என்று கொங்கையை குலுக்கி முந்தானையால் மூக்கை சிந்துகிறார் ததஜ வின் அஹமது அலி. அவர்கூறியது பொய் என்றும் நாம் கூறியதுபோல் ஜாக் மற்றும் ததஜ வினர் அங்கு தொழுதுள்ளார்கள் என்பதையும் அவரையும் அறியாமல் அடுத்த பாராவிலேயே ஒப்புக்கொண்டுள்ளதையும் காணலாம்.

"தென்காசி பகுதியை சேர்ந்த தமுமுக குண்டர்கள் ஒரு குருப்பாக வந்து ஜமாத் தொழுகை முடிந்த பின் தொழுது இருக்கிறார்கள். ஜமாத் தொழுகைக்கு பிறகு யார் வந்து தொழுதாலும் அவர்கள் கையில்தான் பள்ளி உள்ளது என்று சொல்வது முட்டால்தனமாகும். -ததஜ வின் அஹமது அலி"


அது மட்டுமல்லாது நாம் கூறியது உண்மை என்று நிருபிக்கும் வகையில் ததஜவின் அதிகாரப்பூர்வ இணையத்திலும் வெளியாகயுள்ள செய்தியை கீழே தந்துள்ளோம் அதிலும் இவர்கள் ஜாக் மற்றும் தமுமுக வினர் தொழுகை நடத்தியுள்ளதை ஒத்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் ஏகத்துவவாதிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இந்த கூட்டத்தினரால் நடத்தப்படும் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தில் பள்ளிக்குள் தொழுத முஸ்லிம்களையும் தொழ வைத்த ஒரு இமாமையும் குண்டர்கள் என்றும் ரவுடிகள் என்றும் எழுதியுள்ளார்கள்.



"பின்னர் அஸர் நேரத்தில் பள்ளியில் ஜமாத் முடியும் வரை வேண்டுமென்றே காத்திருந்து மாலை 4.45 மணிக்கு ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி தலைமையில் ரவுடி கும்பல் சுமார் 20 நபர்கள் பள்ளிவாசலில் நுழைந்து நீதிமன்ற உத்தரவை மீறி மைக்கை ஆன் செய்து இரண்டாவது ஜமாத் நடத்தினர். பின்னர் ரிபாய் தலைமையில் கடையநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று பொய்யான தகவல்களைச் சொல்லி பள்ளியை மூடுவதற்குரிய முயற்சிகளை பல மணிநேரம் செய்தனர்.-tntj.net"


பகிரங்கமாக இஸ்லாத்தை மீறிய செயலாகும் !! தவ்ஹித் ஜமாத் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் இவர்கள் பள்ளிக்குள் தொhழுத முஸ்லிம்களையும் தொழ வைத்த ஒரு இமாமையும் குண்டர்கள் என்றும் ரவுடிகள் என்றும் கூறுவதுதான் தவ்ஹீதா?


இவ்வாறாக நாம் எழுதியது அனைத்தும் உண்மை என்று நிருபித்ததோடு ததஜ வினர் அனைவரும் பொய்யர்கள் என்ற கூற்றையும் மெய்ப்படுத்தி வருகின்றார்கள்.


இந்த பள்ளி தொடர்பான வழக்கு எம்.எஸ் சேகு உதுமான் மற்றும் வா.கொ.மசூது என்பவர்களுக்கும் ஜம்யத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பிற்கும் இடையில் நடந்ததாகும் இதில் ததஜ வினருக்கு என்ன வேலை ? இது ததஜ விற்கும் ஜம்யத்துல அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பிற்கும் இடையில் நடந்த விவகாரமா? அல்லது மேற்படி எம்.எஸ் சேகு உதுமான் மற்றும் வா.கொ.மசூது ஆகியோர் ததஜ வை சேர்ந்தவர்களா?



மற்றும் இந்த பள்ளி ஜம்யத்துலு; அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் என்ற அமைப்பிற்கு சொந்தமானதல்ல இது தமிழ்நாடு வக்ஃப்போர்டுக்கு சொந்தமானது பள்ளி மூடியிருப்பதால் தொழ முடியவில்லை பள்ளியை திறந்து தொழ அனுமதிக்க வேண்டும் என்பதுதான் வழக்கு அதற்கு ஆதாரங்களை நாம் கீழே தந்துள்ளோம்.


வணக்கமாய் கோர்டாரை பிறார்த்தித்தது


இல்லை முகவைத்தமிழன் கூறுவது பொய் என்று எழுதுவீர்களானால் அதற்குறிய ஆதாரங்களை வெளியிடுங்கள் மக்கள் தீர்மானிக்கட்டும் பொய்யன் யார் என்பதை.

நமது வாதமும் கேள்விகளும் மிகத்தெளிவாக உள்ளன மக்களும் அதை உணர்ந்துள்ளார்கள் ஆக உங்கள் தலைவன் கிரிமினல் பி.ஜே யைப்போல் "உன் பெயர் என்னவென்று கேட்டால் அந்தா ஆட்டுக்குட்டி என்றும் தொன்டிக்கு வழி சொல்லு என்று கூறினால் நான் அல்வா திங்கவே இல்லை" என்று சம்பந்தமேயில்லாமல் பதில் கூறுவதை நிறுத்திவிட்டு கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு மட்டும் நேரடியாக பதில் சொல்லவும் இல்லையேல் எம்மிடம் சரக்கு இல்லை நாங்கள் பொய்யர்கள் என்று ஒத்துக்கொள்ளுங்கள்.


எமது கேள்விகள் :

"இறைவனின் கிருபையால் கடையநல்லூர் முபாரக் பள்ளி அரசு ஆனைப்படி தவ்ஹித் ஜமாத்திடம் ஒப்படைப்பு இன்று மக்ரிப் முதல் தொழுகை ஆரம்பம்"

என்று பிளாஸ் நியுஸ் வுட்டதை அனைத்து சகோதரர்களும் அறிவார்கள் நீங்கள் வுட்ட பிளாஸ் நியுஸ் உண்மையானால் அரசு வெளியிட்ட ஆனையின் நகலை வெளியிடுங்கள்.


நீங்கள் கூறுவதுபேல் ததஜ விற்கும் பள்ளிக்கும் சம்பந்தம் இல்லையென்றால் , ததஜ பள்ளியில் உரிமை கோர வில்லை என்றால் இத்தனை கலோபரமும் ஏன்?


தாவா பணிகளுக்காக வசூலிக்கப்பட்ட பணத்தினை இதற்காக செலவளிப்பதும் அதிகாரப்பூர்வ இணையத்திலும் பத்திரிகைகளிலும் ததஜ இந்த ஆட்டம் போடுவதும் ஏன்?


அரசு ஆணை வெளியிடவில்லை நாம் கூறியது போல் தொழுவதற்குத்தான் வக்ஃப்போர்ட் (அரசு அல்ல) அனுமதித்துள்ளது அதுவும் ததஜ வினரை அல்ல என்றால் பிளாஸ் நியுசும் அனைத்து ஆர்ப்பாட்டங்களும் வலைகுடாவில் அடுத்த வசூலை போடுவதற்காக வேண்டி ததஜ வின் விசிலடிச்சான் குஞ்சுகளை குஷிப்படுத்துவதற்காக அடித்துவிடப்பட்டதுதான் என்பதை ஒத்துக்கொள்கின்றீர்களா?


நாம் கூறுவது , கூறியது அனைத்தும் உண்மை என்று தக்க ஆவன ஆதாரங்களுடன் நிருபித்துள்ளோம் நீங்கள் கூறுவதுபோல் நாம் பொய்யன் என்றால் அதை ஆவன ஆதாரங்களுடன் நீருபியுங்கள்.


விரக்தியில் அண்ணனுடன் தொலைபேசியில் பேசுவதற்காகவும் அண்ணனிடம் உங்கள் பெயர் போக வேண்டும் என்பதற்காகவும் எழுதுவதை நிறுத்திவிட்டு மறுமையில் இறைவனிடம் உண்மையாளனாக நிற்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக நியாயமாக நோர்மையாக உங்கள் தலைமையிடம் நாம் மேற்கூறிய கேள்விகளை கேளுங்கள் சரியான ஆதாரங்களோ முறையான பதிலோ கிடைக்காத பட்சத்தில் உங்களின் பொய்யான தலைமையை புறக்கனியுங்கள்.

நன்றி

முகவைத்தமிழன்


கடைசி செய்தி : இந்த சம்பவம் தொடர்பாகவும் மேலப்பாளையம் பள்ளி தொடர்பாகவும் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் மாநில தலைவர் ஜனாப் கமாலுத்தீன் மதனி மற்றும் இந்த வழக்குகளை கவணித்து வரும் ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் அமைப்பின் நெல்லை மாவட்ட நிர்வாகி ஜனாப் சிராஜீத்தீன் அவர்களும் நமது "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடைக்கு" அளித்த பிரத்யோக பேட்டி விரைவில் இங்கு இடம்பெறும் தொடர்ந்து படிக்கவும்..

No comments: