Friday, September 21, 2012

இராமநாதபுரத்தில் பள்ளிவாசல்கள் மீது குன்டுவீச்சு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பின் சொந்தங்களே,

இராமநாதபுரம் நகரில் இன்று அதிகாலை சுமார் 2.30 மனியளவில் இராமநாதபுரம் ரயில்வே ஸ்டேசன் அருகில் உள்ள சென்ட்ரல் மஸ்ஜிதிலும், இராமநாதபுரம் குமரய்யா புரத்தில் (பாரதிநகர்) உள்ள புஹாரி அப்பா பள்ளிவாசலிலும் சமூக விரோதிகள் , பாசிச சக்திகள் சமுதாய ஒற்றுமையை சீர் குழைத்து நமது உயிர் நபிகள் நாயகத்தை இழிவு படுத்தி படம் எடுத்தமைக்கு எதிராக நடக்க இருக்கும் அனைத்து மக்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையான கண்டன போராட்டத்தை சீர்குழைக்கும் முயற்சியில் முகவை மாநாகரத்தை கலவர காடாக்கி ரத்த ஆறு ஓடச்செய்யும் முயற்சியில் மேற்கூறிய இறை ஆலயங்கள் மீது பெட்ரோல் வெடிகுன்டினை வீசி தாககுதல் நடத்தியுள்ளார்கள்.



தற்சமயம் இராமநாதபுரம் நகரின் அனைத்து இசுலாமிய அமைப்புகளும் காவல்துறைக்கு குற்றவாளிகளை கைது செய்ய சொல்லி நாளை மாலை வரை கெடு விதித்துள்ளார்கள். காவல்துறை உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதன மூலம் எங்களின் ஒற்றுமையை ஒரு போதும் குழைக்க இயலாது என்பதை சமூக விரோத சக்திகள் புறிந்து கொள்ள வேண்டும். எங்கள் இரத்தம்...உயிர்...உடல்...உடமை இன்னும் எங்கள் தாய் தந்தையரும் எமது குழந்தைகளும் உங்களுக்கே அர்ப்பனம் எங்கள் நபியே!! இவை அனைத்தையும் இழந்தாவது உமது கண்ணியத்தை காப்போம் யா ரசூலல்லாஹ்...!!!

காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் இல்லையேல்மாபெரும் போராட்டத்தினை சந்திக்க நேரிடும் என்பதை இசுலாமிய அமைப்புகள் காவல்துறையிடம் கூறி எச்சரித்துள்ளன.

----------------------------------------------------------------------------------------------------

ராம‌நாத‌புர‌த்தில் ப‌ள்ளிவாச‌ல் மீது காவி பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டு வீச்சு - போலீசார் குவிப்பு...............!! 

ராமநாதபுரத்தில் இன்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் பார‌தி ந‌க‌ர் குமரய்யா கோயில் பஸ் ஸ்டாப் அருகே பள்ளிவாசல் உள்ளது. குழந்தைகளுக்கு காலை, மாலை நேரங்களில் மதரசாவும் இங்கு செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு தொழுகை முடிந்த பின்னர் அனைவரும் சென்று விட்டனர்.

துணை இமாம் சபியுல்லா மட்டும் பள்ளிவாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு சபியுல்லா எழுந்து வந்து பார்த்தார். தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே சபியுல்லா சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.இது பற்றி தகவல் அறிந்த இமாம் சையது அக்பர் மற்றும் முஸ்லிம்கள் ஏராளமானோர் பள்ளிவாசல் முன் குவிந்தனர். இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப் பட்டது. சிவகங்கை ஏடிஎஸ்பி கண்ணன், ராமநாதபுரம் டிஎஸ்பி முரளிதரன் தலைமையிலான போலீசார் வந்து பள்ளிவாசலை பார்வையிட்டு நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.


ராமநாதபுரத்தில் இன்று மாலை இந்து முன்னணி சார்பில் 28 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளன. இந்நிலையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘விநாயகர் சிலை ஊர்வலம் முடியும் வரை எந்த பிரச்னையிலும் ஈடுபட வேண்டாம், நாளை மாலைக்குள் குற்றவாளிகளை கைது செய்வோம்’ என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து முஸ்லிம்கள் கலைந்து சென்றனர்.

பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.இஸ்லாமிய‌ர்க‌ள் ம‌த்தியில் பெரும் கொந்த‌ளிப்பை ஏற்ப‌டுத்தியுள்ளது.குற்றவா
ளிக‌ளை உட‌ன‌டியாக‌ பிடிக்க‌ காவ‌ல்துறையின‌ரை வ‌ற்புறுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.
இன்று நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்காக நகர் முழுவதும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,வேண்டுமென்றே இருத‌ர‌ப்புக்கும் இடையில் க‌ல‌வ‌ர‌த்தை தூண்ட‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்துட‌ன் விஷ‌மிக‌ள் செய‌ல்ப‌ட்ட‌தாக‌ தெரிகிற‌து பள்ளிவாசல் அருகே உள்ள டயர் தடயங்களை வைத்துப் பார்க்கும் போது 3 பைக்குகளில் மர்ம நபர்கள் வந்துள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இவர்களை கைது செய்வோம்’ என்றனர்

No comments: