Friday, April 10, 2009

சென்னையில் ஒட்டுமொத்த நிர்வாகிகள் விலகல் - கலகலத்த IDMK கூடாரம்

சென்னையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

திரு. ஜான் பாஷா


இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை, ஆர்.கே நகர், மயிலாப்பூர், ராயபுரம், திருவல்லிக்கேணி உட்பட பல கிளை நிர்வாகிகள் தங்கள் கிளைகளை ஒட்டுமொத்தமாக கலைத்து இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்கள்.

பல்வேறு பட்ட கவர்ச்சியான வாக்குறுதிகளை அள்ளி வீசி, சமூக ஒற்றுமை, இரவல் அரசியலுக்கு விடை கொடுப்போம், என கூறப்பட்ட வாக்குறுதிகளை நம்பி பல்வேறு அமைப்புகளிலும் இருந்து விலகி இந்திய தேசிய மக்கள் கட்சியல் வந்து சேர்ந்தனர். தலைமை பதவியால் ஏற்பட்ட அகங்காரத்தாலும், சகோ.அமீர் ஜவஹர் போன்றோர் சமூக ஒற்றுமைக்காக இதன் தலைவர் குத்புதீன் ஐபக்கை இரு முறை அழைத்து தொலைக்காட்சியல் பேச செய்ததால் ஏற்ப்பட்ட மமதையாலும் தன்னிலை மறந்த இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் குத்பதீன் ஐபக், கட்சிக்காக அயராது உழைத்த தொண்டர்களால் ஏற்ப்பட்ட புகழ்ச்சியாலும் கிறங்கிப்போன குத்பதீன் ஐபக் இவை யாவும் தனக்கும் தன்னுடைய எழுத்தக்களுக்கும், பேச்சுக்கும் கிடைத்த பெருமை என தவறாக புறிந்து கொண்டு தலைகால் புறியாமல் நிர்வாகிகளிடம் அகம்பாவமாக நடந்ததால் இன்று சென்னையின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.

இந்திய தேசிய மக்கள் கட்சயில் இருந்து அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரும் வடசென்னை மாவட்ட அமைப்பாளருமான ஏ.கே ஜான்பாஷா அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் வெளியீடான "சந்தி சிரிக்கும் டாக்டர் கலைஞரின் சமூக நீதி" என்ற பிரசுரத்தை வெளியிட்டதால் கலைஞர் அரசால் கைது செய்யப்பட்டு அந்த செய்தி ஜீனியர் விகடன் உட்பட பல பத்திரிகைகளிலும் வந்து பிரபலமானவர். இன்றும் யாராலும் அறியப்படாமல் இருந்த இந்திய தேசிய மக்கள் கட்சியை சென்னை நகரெங்கும் அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்து கட்டமைத்தவர். இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவராக அகம்பாவம் பிடித்து தறியும் குத்புதீன் ஐபக் சென்னை வரும்போதெல்லாம் அவரது உணவு, தங்குமிடம் என அனைத்து செவுகளையும் இன்று வரை செய்தவர். இவரது தலைமையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை, ஆர்.கே நகர், மயிலாப்பூர், ராயபுரம், திருவல்லிக்கேணி உட்பட பல கிளைகளின் 50 க்கும் மேறப்பட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக கிளைகளை கலைத்துவிட்டு இராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர். இவர்கள் தங்கள் இராஜினாமாவிற்கான காரனங்களாக தெறிவித்துள்ளதாவது.

1) இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்கள் வாக்குறுதி தவறியது. வாய்மை இல்லாமல் பொய்மை நிறைந்த அவரது பேச்சுக்கள். கட்சியில் சேரும்போது இந்திய தேசிய மக்கள் கட்சி முறைப்படி பதிவு செய்யப்பட்டு , தேர்தல் கமிசனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்று பொய் சொல்லி ஏமாற்றியது. கட்சி இன்று வரை சங்கமாக கூட தமிழகத்தில் எங்குமே பதிவு செய்யப்படவில்லை. சென்னையில் பேட்டியில் தமுமுக, முஸ்லிம் லீக் தனித்து நின்றால் அவர்கள் நிற்கும் தொகுதிகளில் போட்டியிட மாட்டோம் என்று கூறிவிட்டு அதற்கு நேர்மாறக பணத்திற்காக வேட்பாளர்களை நிறுத்துவது. உளவுத்துறை மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளோடு கைகோர்த்து சமூகத்தை பிளவு படுத்தி அதை பலகீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது.

2) தலைக்கனம் பிடித்த குத்பதீன் ஐபக், வட சென்னை ஜான்பாசா உட்பட பல நிர்வாகிகளை பற்றி தரக்குறைவாக மற்றவர்களிடத்தில் விமர்சித்தது. ஒருவரை பற்றி மற்றவாரிடத்தில் தரக்குறைவாக கூறி இருவருக்கும் இடையில் பகைமையை ஏற்படுத்த முயன்றது. கையும் களவுமாக பிடிபட்டபோது அதை ஹிக்மத், அரசியல் சாதுர்யம் என்று பேசி ஏமாற்ற முயன்றது.

3) குத்புதீன் ஐபக் ஒரு முழுமையான முனாபிக்காக மாறியது, அதாவது குர்ஆன் ஹதீஸ்களில் இறைவன் முனாபிக் குறித்து கூறியுள்ள அனைத்து அம்சங்கள், அடையாளங்களை தன்னகத்தே கொண்ட மனிதராக உள்ளது. தொழுகை, இபாதத் இல்லாமை, ஒரு கூட்டத்தாரோடு இருக்கையில் தான் அவர்களோடு உள்ளதாகவும், மற்றொரு கூட்டத்தாரோடு இருக்ககையில் தான் அவர்களது ரத்த உரவு என்றும் அவர்களுக்கேஎன்றும் ஆதரவு என்றும் பேசுவது. முஸ்லிம்களுக்கிடையே பகைமையை வளர்க்க முனைந்தது. இந்திய தேசிய மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் பதவியை பயன்படுத்தி இஸ்லாத்தின் எதிரிகளோடு கைகோர்த்து மற்ற சமுதாய அமைப்புகளுக்கும் , கட்சிகளுக்கும் இன்னும் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கும் எதிராக செயலாற்ற திட்டமிட்டது.

4) இன்னும் குத்புதீன் ஐபக்கோடு இருக்கும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் சிலரும், கீழக்கரை, திருச்சி, தஞ்சையை சேர்ந்த சில மாநில நிர்வாகிகள் சிலரும் குத்புதீன் ஐபக் கட்சியையும், சமுதாயத்தின் பெயரையும் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறி முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த தனவந்தர்களிடம் வசூலித்த பணத்தின் சில லகரங்களுக்காகவும், அரசியல் பதவி ஆசையிலும் குத்புதீன் ஐபக்கிற்காக ஜல்ரா போடுவது. அதாவது ஜால்ரா போடும் மாநில நிர்வாகிகள் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள்.

5) இந்திய தேசிய மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட உழைக்கும் அடிமட்ட தொண்டர்களிடத்தில் தான் ஏதோ காயிதே மில்லத், கருனாநிதி போன்ற மிதப்பில் அகம்பாவமாகவும், உதாசீனமாகவும் குத்புதீன் ஐபக் பேசுவது, இன்றும் தன்னை காயிதே மில்லத், அறிஞர் அண்ணா அளவிற்கு தற்புகழச்சி செய்து கொண்டு மற்ற தலைவர்களை ஏமாளி, கோமாளி என்று சோட்டிஸ் போட்டு நக்கல் செய்வது.


என பல காரனங்களை இவர்கள் கூறியுள்ளார்கள். இன்னும் சென்னை மாநகரில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் முனாபிக் குத்புதீன் ஐபக் மற்றும் அவரோடு கூட இருக்கும் ஆடசி மன்ற குழு உறுப்பினர், மாநில நிர்வாகி ஆகியோரின் முகத்திரைகளை கிழித்து மக்களுக்கு இவர்களின் "சமுதாய துரோகிகள்" எனும் மறு முகத்தையும், குத்புதீன் ஐபக் இந்த சமுதாயத்திற்கு செய்த மாபெரும் துரோகத்தையும் மக்களுக்கு அம்பலப்படுத்தும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை என்றும் இந்நிர்வாகிகள் சூழுரைத்துள்ளனர்.

இராஜினாமா செய்துள்ள நிர்வாகிகளில் சிலர் :

1. ஏ.கே ஜான் பாசஷா - வட சென்னை மாவட்ட அமைப்பாளர்
2. எஸ் செய்யது நிஹமத் - ஆர்.கே நகர் கிளை தலைவர்
3. எச். சலீ்ம் பாஷா - ஆர்.கே நகர் கிளை செயலாளர்
4. முனீர் பாஷா - மயிலாப்பூர் கிளை தலைவர்
5. கவுஸ் பாஷா - ராயபுரம் கிளை தலைவர்
6. பசீர் அஹமது - 5 வது வட்ட கிளை
7. மகேந்திரன் - 13 வது வட்டம்
8. சர்தார் பாஷா -
9. பசீர் அஹமது - ஆர்கே நகர் கிளை து. தலைவர்
10. ஹமீது - 13 வது வட்டம் கிளை
11. ஜலால் - 10 வது வட்டம் கிளை
12. அஹமது புன்யாமின் - திருவல்லிக்கேணி செயலாளர்
13. ஹயாத் பாஷா - மயிலாப்பூர் கிளை
14. புர்ஹான்
15. மஹபூப் பாஷா (பின்சின் லைன்)
16. பாரூக் - 12 வது வட்டம்
17. தமீம் - நேதாஜி நகர்
18 . பாசா - ஆர்கே நகர் பொருளாலர்
19. சாகுல் ஹமீது
20. முஸ்த்தஃபா

6 comments:

சுட்டிப் பையன் said...

இந்நிகழ்ச்சியில் இருந்து த.மு.மு.கவும் மனிதநேய மக்கள் கட்சியும் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

rafiq said...

What ever information or comment,I request all our brothers please varify before post.you may check both bj group and mmk continously then you may come to a conclusion. dont put any bad back bit immediatly. it is very big sin in islam that all group moulanas explain/describe to you all from qur aan.

Anonymous said...

It is a lesson to MMK also, secondly, so called IDMK doesn't have any strong public support not does it have any Policy document to uplift Muslims?

It is shame on us that, even we don't scrutiny any organisation background, foundares character etc. It is unfortunate that, blindly we accept them as leader, at a later stage we back bit them? First we should learn Islam in correct way and practice as it is.

Maraicoir said...

தொண்டர்களின் எண்ணிக்கை மொத்தம் நம் கை விரல்களின் எண்ணிக்ககையில் அடக்கி விடலாமா

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..,

ஐடிஎம்கே வைத்து தூக்கி தலையில் வைத்து ஆடியது மிஸ்டர் முகவைதமிழன் தானே இந்த அடி அவருக்குத்தான் பேரிடியாக இருக்கும். ததஜவை திட்டி பக்கம் பக்கமாக எழுதினீர், தமுமுகவை திட்டி பக்கம் பக்கமாக எழுதினீர், தற்போது ஐடிஎம்கே பற்றி எழுத அரம்பித்து விட்டீர். தங்களை பற்றி எழுத எந்த பக்கமும் இல்லாமல் போய்விடப்போகின்றது. கவனம் கூடவே நிதானம். நல்லது.

வஸ்ஸலாம்.

Anonymous said...

Thanks very good for report, I follow your blog