Friday, October 31, 2008

MNP - PFI தேசிய அரசியல் மாநாடு

தேசிய அரசியல் மாநாடு
சென்னையில் பிரச்சணிர துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம்
பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர் இ.எம். அப்துர் ரஹ்மான் பேட்டி


எதிர்வரும் 13, 14, 15 பிப்ரவரி 2009ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அரசியல் மாநாட்டை கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் நடத்தவுள்ளது. இதன் நோக்கம் ""ஆக்கப்பூர்வமான நேரடி அரசியலின் மூலம் முழுமையாக எல்லாத் துறையிலும் சமுதாயத்தை பலப்படுத்த வேண்டும்'' என்பதுதான்.
பலமான அரசியலமைப்பு மற்றும் சட்ட அடித்தளத்தைக் கொண்ட மிகச்சிறந்த ஜனநாயகத்தைக் கொண்டிருக்கும் இந்தியர்களாகிய நாம் அதிர்ஷ்டசாலிகள்.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மற்றவர்கள் மீது ஆட்சி செய்யும் என்று பொருள் கொள்ள முடியாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்துடன் எல்லாக் குடிமக்களுக்கும் சமநீதி வழங்கக் கூடியதுதான் நமது அரசியல் அமைப்பு.

கடந்த அறுபது ஆண்டுகளாக பெரும் தொழில் நிறுவனக் குழுமங்கள் மற்றும் பாரம்பரிய உயர்சாதியினணிரக் கொண்டு ஆளும் அதிகணிர வர்க்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆளும் வர்க்கம் ஜனநாயகத்திலுள்ள பல்வேறு துறைகளை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு கீழுள்ள (அடிமைகள் போல கிடக்கும்) மக்களின் நியாயமான கோரிக்கைகளை காலில் போட்டு மிதித்து தங்களுடைய ஆளும் மேல்ஜாதி வர்க்கத்திற்காக மட்டும் சேவகம் புரிந்து வருகின்றது.

இவர்களின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு பலியாகக் கூடியவர்கள் ஏழைகள், கிரணிமவாசிகள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள்,சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் சோஷலிசம் நமது அரசியல் கட்சிகளின் கோஷமாக இருந்தது. இன்று அது காணாமல் போனது.

மேற்கத்திய உலகில் சிறிது சிறிதாக நொறுங்கிக் கொண்டிருக்கும் முதலாளித்துவம், வளர்ச்சி என்ற போர்வையில் நம்மிடம் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. விவசாய உற்பத்தி, வறுமை ஒழிப்பு, சம பங்கீடு போன்ற அடிப்படை பிரச்சினைகள் புறந்தள்ளப்படுகிறது.

ஜனநாயக வழிமுறையின் மூலமே இந்துத்துவ ஃபாசிஸம் நாட்டின் நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு நிர்வாகம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒடுக்குகிறோம் என்ற பெயரில் பல முஸ்லிம்களை சட்டவிரோத கஸ்டடியில் விசாரணை இல்லாமலும், பிணையில் விடுதலை செய்யாமலும் போலி என்கவுண்டர் மூலமாகவும் குறி வைத்து வருகிறது.

மண்டல் கமிஷன் அறிக்கைக்குப் பின் ஒரு சில பிற்பட்ட வகுப்பினணிரச் சேர்ந்த சாதியினர் நாட்டின் ஒரு சில பகுதிகளில் தேர்தல் அரசியலில் முன்னேற்றமடைந்துள்ளனர். எனினும் மதவாதிகள், ஆதிக்க வாதிகள் சட்டமியற்றும் சபைகளில் தொடர்ந்து கோலோச்சி வருகின்றனர். மற்ற சமூக மதப் பிரிவிக்ணிர ஒப்பிடும் போது முஸ்லிம்கள் என்ற இந்த வகுப்பினர் மட்டும் அரசியலில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

இந்த பின்னடைவிற்கான காரணம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படுவது, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவித்தல் மற்றும் ஹிந்துக்களுடைய ஓட்டுக்கள் கிடைக்காமல் எதிர்ப்புக்குள்ளாகலாம் என்று கருதி அரசியல் கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தத் தயங்குகின்றன. இந்தச் சூழலில், காலங்காலமாக ஓரங்கட்டப்பட்ட சமுதாயம் தங்களுடைய உடனடி (உள்ளூர்) எதிரிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு முறையும் தங்களது ஆதரவு மாற்றும் போக்கைக் கைவிட வேண்டும். இந்த அணுகுமுறை, நாட்டின் கொள்கை முடிவுகளில் முடிவெடுக்கும்போது தங்களது உரிமைகளை தக்க வைக்கவும் (தங்களிடமுள்ள எல்லா வகையான) வளங்களையும் முறையாகப் பங்கீடு செய்து பயன்படுத்துவதிலும் பயனளிக்கிறது.

இந்த பிற்படுத்தப்பட்ட சக்திகளை அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்தி தங்களுக்குரிய அரசியல் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மற்றும் இதர சமுதாயத்தினர் இதுவணிர கொடுத்து வந்த நிர்ப்பந்த அரசியல் (Pressure Group Politics) அவர்களின் அரசியல் வெறுமைக்கு தீர்வாகாது. ஓரங்கட்டப்பட்ட வகுப்பினர் அரசியல் சக்தியும், போதிய பிரதிநிதித்துவமும் பெற தேவையான வழிமுறைகளைப் பற்றி விவாதித்து தேவையான தீர்வுகளை செயல்படுத்த இருக்கும் நிகழ்ச்சிதான் தேசிய அரசியல் மாநாடு.

முதல் இரண்டு நாட்கள், நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சிறப்பு விருந்தினர்கள், அறிஞர்கள் மேற்கூரிய கருப் பொருளில் பல்வேறு கோணத்தில் விவாதிப்பர். ""அரசியலில் சக்தி பெறுதல்: மாற்று வழிக்கான தேடல்'' ""தீவிரவாத எதிர்ப்பு மாநாடு'' என்ற தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெறும்.

இதே கருத்தை நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய அரசியல் மாநாட்டின் பிரச்சணிர துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னையில் நவம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் சேர்மன் இ. அபூ பக்கர் அவர்கள் பொதுக்கூட்டம் வாயிலாக பிரச்சாரத்தைத் துவக்கி வைக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் மனித நீதிப் பாசறையின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, துணைத் தலைவர் ஷேக்
முஹம்மது தெஹ்லான் பாகவி, கே.எஃப்.டி.யின் தலைவர் டாக்டர் மஹபூப் ஷரீஃப், மூத்த வழக்றிஞர் பவானி. பா. மோகன், வழக்கறிஞர் எம்.ஜி.கே. நிஜாமுத்தீன் Ex. M.L.A, மௌலானா மன்சூர் காஷிஃபி, முஸ்லிம் தொண்டு இயக்க செயலாளர் முஹம்மது ஹனீஃபா ஆகியோர் பொதுக் கூட்டத்தில் உணிரயாற்றுகின்றனர் என்று பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர்
இ.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். பேட்டியின் போது எம்.என்.பி.யின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, செயலாளர் ஃபக்ருத்தீன், செயற்குழு உறுப்பினர்கள் செய்யது இப்றாஹீம் மற்றும் யூஸுஃப் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்திகள் : இ.எம். அப்துர் ரஹ்மான்
பொதுச் செயளாலர் - PFI

இந்துத்துவ பயங்கரவாதம் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகையில் செயல்பட்டு வருகின்றன.


இந்துத்துவ பயங்கரவாதம் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகையில் செயல்பட்டு வருகின்றன.

இவர்கள் திருமணமும் செய்து கொள்வதில்லை. (வாஜ்பேயி, ராமகோபாலன் போன்றோர் முழு நேரப் பிரச்சாரகர் ஆவர்). பஜ்ரங்தளம் இந்துத்துவத்தின் மற்றொரு கோரமுகமாகும். பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் முதலிய சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது இதன் முக்கிய வேலையாகும்.

இந்துத்துவ பயங்கரவாதமும் சிறுபான்மையினரின் அணுகுமுறையும்...

-பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்

அரசியல் சாசனச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை

தங்களது இந்துத்துவக் கோட் பாட்டை நிலைநாட்டுவதற்குப் பாடுபடாதவர்களை கோல்வால்கர் துரோகிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கோல்வால்கரும் அவரைச் சார்ந்த வர்களும் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் எவ்விதப் பங்கும் கொள்ளவில்லை. இது மட்டுமல்ல, வெள்ளைக்கார அரசின் சட்டங்களை மதித்து அதற்குக் கட்டுப் பட்டு நடப்பதாக எழுதிக் கொடுத்தவர் தான் கோல்வால்கர்.

இப்படித் துரோகம் செய்தவர்கள் நமது நாட்டின் அரசியல் சாசனச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. அரசியல் சாசனச் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது கோல்வால்கர் பின் வருமாறு எழுதுகிறார்:

துரதிருஷ்டவசமாக நமது நாட்டின் அரசியல் சாசனச் சட்டம் மண்ணின் மைந்தர்களையும் ஆக்கிரமிப்பாளர் களையும் சமமாக்கியுள்ளது. எல்லோருக் கும் அது சம உரிமை அளித்துள்ளது. ஒரு வீட்டில் தனது பிள்ளைகளுக்கும் திருட வந்தவர்களுக்கும் இடையே ஒரு மனிதன் சமமான உரிமையை அளித்து தனது சொத்தையும் அவர்கள் அனை வருக்கும் பகிர்ந்தளிப்பது போன்று அரசியல் சாசனச் சட்டத்தின் இந்த நிலைப்பாடு உள்ளது’’.

இந்துத்துவக் கோட்பாட்டைப் பிரதி பலித்துச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். ஒரு பாசிச அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை என்பதை கோல்வால்கரின் கருத்துக்களும் அதனை நடைமுறைப் படுத்தும் வகையில் சங்பரிவார அமைப்புகளும் செயல்படுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹிட்லரினால் தான் மிகவும் கவரப்பட்டதாக கோல்வால்கர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். நமது நாட்டில் தன்னிகரில்லாத வகையில் சமூகச் சேவை செய்யும் கிறிஸ்தவர்கள் பற்றி கோல்வால்கர் எழுதியுள்ள பின்வரும் கருத்துகள் அவரது பாசிச உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

மேலோட்டமாகப் பார்க்கும் ஒருவருக்கு கிறிஸ்தவர்கள் தீங்கிழைக்காதவர்கள் போலவும், இரக்கத்தின் வடிவமாகவும், மனிதகுலத்தின் மீது தீராத அன்பு கொண்டவர்கள் போன்றும் காட்சி அளிக்கிறார்கள்.

அவர்களது பேச்சுகளில் சேவை, மனிதர்களை இரட்சித்தல் போன்ற வார்த்தைகள் நிரம்பி இருக்கின்றன. எல்லாம் வல்லவனாகிய இறைவனால் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்காகவே இவர்கள் பிரத்யேகமாக அனுப்பப்பட்டுள்ளது போன்று அவர்கள் தோற்றம் அளிக்கிறார்கள்.

அவர்கள் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அநாதை நிலையங்கள் மற்றும் மருத்துவமனை களை நடத்துகிறார்கள். நம் நாட்டு மக்கள் சாமானியர்கள் என்பதால் இதனால் கவரப்பட்டு விடுகிறார்கள். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளுக் காக கோடிக்கணக்கான ரூபாய்களை கிறிஸ்தவர்கள் கொட்டுவதற்கான உண்மை நோக்கம் என்ன?

நமது நாட்டில் வாழும் கிறிஸ்தவ மக்களின் செயற்பாடுகள் இப்படித்தான் உள்ளன. நமது நாட்டின் சமூக மதக் கட்டமைப்பைச் சிதைப்பது மட்டும் அவர்கள் நோக்கமல்ல, பல்வேறு பகுதிகளில் - முடிந்தால் நாடு முழுவதும் தமது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஏசு நாதரின் தெய்வீக இறக்கையின் கீழ் மனிதகுலத்திற்கிடையே சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்துகிறோம் என்ற கவர்ச்சிகரமான போர்வையில் அவர்கள் செல்லுமிடமெல்லாம் இதனைச் செய்து வருகிறார்கள்’’. என எழுதியுள்ளார்

மதமாற்றம் பற்றி...

தன்னலமற்ற முறையில் சேவை செய்து வந்த பாஸ்டர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் போன்ற சமூக சேவகர்கள் ஈவிரக்கமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்படுவதற்கான பயங்கரவாதத்தின் ஊற்றாக கோல்வால்கரின் இந்த எழுத்துக்கள் அமைந்துள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் கண்ணியத்துடன் வாழ வேண்டுமெனில் இந்து கலாச்சாரத்தையும் மதக்கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ள கோல் வால்கர், மதம் மாற்றம் பற்றி எழுதியுள்ள பின்வரும் கருத்துகளும் அவரது பாசிச சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

இந்துக்கள் மற்ற மதங்களுக்கு மாறுவது அவர்கள் நாட்டின் மேல் கொண்ட மாசற்ற விசுவாசத்தைச் சிதைத்து விடுகின்றது. அது நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. எனவே மதமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் அவசியமாகும். ஒரு தனி நபர் மதம் மாறுவது என்பது அவர் பல்வேறு தத்துவங்களை ஆய்வு செய்த பின் நடைபெறுவது அல்ல.

வறுமை, எழுத்தறிவின்மை மற்றும் அறியாமையைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் ஆசைகளை ஊட்டித்தான் மதமாற்றம் நடைபெறுகின்றது. உண்மையான மன மாற்றத்தினால் மதமாற்றம் நடை பெறுகின்றது என்று கூற இயலாது. இந்த அநீதியான நடவடிக்கையைத் தடை செய்வதுதான் சரியான நட வடிக்கையாக இருக்கும். அறியாமை மற்றும் வறுமையில் வாடும் நமது சகோதரர்களைப் பாதுகாக்க மத மாற்றத்தைத் தடைசெய்வது நமது கடமையாகும்’’.

சாதியத்தை போற்றும் கோல்வால்கர்

இந்துத்துவத்தின் சாதிய கட்டமைப்பினால் சிக்குண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைப் பெறு வதற்கு இஸ்லாத்திற்கோ கிறிஸ்தவத்திற்கோ மதம் மாறினால் இந்துத்துவம் அதனை வேடிக்கை பார்க் கக் கூடாது என்பதை கோல்வால்கரின் இந்தக் கூற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சாதிய கட்டமைப்பை தனது எழுத்துக்களில் இந்துத்துவத்தின் பிதாமகன் கோல்வால்கர் புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் எழுதுகிறார்:

பண்டைய காலத்திலும் சாதிகள் இருந்தன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்து நிலைத்த நமது சிறப்புமிகு தொன்மையான தேச வரலாறு முழுவதும் சாதிகள் இருந்துள்ளன. நமது சமுதாயத்தின் ஒற்றுமையையோ அல்லது நமது நாட்டின் முன்னேற்றத்தையோ தடுக்கும் வகை யில் சாதிய அமைப்பு செயல்பட்டது என்று எங்கும் எந்தவொரு நிகழ்வையும் நாம் காட்ட முடியாது. உண்மையில் அது சமூக ஒற்றுமைக்கு வலு சேர்த்துள்ளது.

திட்டமிட்டு பொய்களைப் பரப்பி மக்களை நம்ப வைப்பது தான் பாசிசத்தின் வெளிப்பாடு. அதைத்தான் கோல்வால்கரின் இந்தக் கூற்றில் நாம் காண முடிகிறது.

இந்துத்துவ சாதிய அமைப்பின் கொடுங்கோன்மைக்கு எதிராகத்தான் பௌத்தமும் சமணமும் தோன்றின என்பதை கோல்வால்கர் எவ்வாறு திட்டமிட்டு மறைத்துள்ளார் என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

இதேபோல் தமிழகத்தில் மீனாட்சிபுரத்தில் தலித் மக்கள் இஸ்லாத்தைத் தழுவியது இந்துத்துவத்திற்கு ஒரு பேரிடியாக அமைந்தது.

ஆனால் அதே நேரத்தில் சமீபகால இந்தியாவில் இந்துத்துவம் தனது முழு அகோர வடிவத்தைக் காட்டுவதற்கும் அது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.

ராமர் கோயில் பிரச்சனையை ஒரு தேசிய பிரச்சனையாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு வெறுப்புணர்வை தூண்டி - கலவரத்தைத் தூண்டி தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவம் எப்படியெல்லாம் செயல்பட்டது என்பது நாம் அறிந்த வரலாறு. இதே அடிப்படையில்தான் சமீபத்திய ஒரிசா நிகழ்வுகளையும் நாம் காணவேண்டும்.

ஒரிசாவில் பழங்குடி மக்கள் கல்வி கற்று தமது சொந்தக் காலில் நிற்பதற்கான முயற்சிகளை கிறிஸ்தவர்கள் செய்தால், அது இந்துத்துவம் பேணிப் பாதுகாக்க நினைக்கும் சாதிய கட்டமைப்பிற்கு எதிராக அமைந்து விடும். எனவேதான் கட்டாய மதமாற்றம் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது மட்டுமில்லாமல் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும் தேவாலயங்களும் ஒரிசா மட்டுமின்றி தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன.

சங்பரிவாரின் அமைப்பு முறை

பாசிச அமைப்புகள் போன்ற கட்டமைப்பைக் கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்பின் தலைவர் `சரசங் சலாக்என்று அழைக்கப்படுகிறார். காரியக்காரி சமிதி (செயற்வீரர்கள் குழு) என்று அழைக்கப்படும் ஒரு உயர்மட்டக் குழுவை அவர் நியமிக்கிறார். இது அவருக்கு உறு துணையாக இருக்கிறது.

பிரதேஷ் பராமுக் என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைவர் உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை கிளை ஷாகா என்று அழைக்கப்படுகின்றது. நாடு முழுவதும் 60,000 ஷாகாக்கள் செயல்படுகின்றன.

இவை காலை அல்லது மாலை தினந்தோறும் செயல்படுகின்றன. காலையில் செயற்படும் ஷாகாக்கள் வணிகர்களுக்கும் மாலையில் செயற்படுபவை மாணவர் களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் உரியதாக உள்ளன. இந்த ஷாகாக்கள் பொது இடங்களில் செயற்படுகின்றன. இந்த ஷாகாக்களில் உறுப்பினர்களாகச் சேருபவர்கள் சுயம் சேவக் என்று அழைக் கப்படுகிறார்கள். இவர்களில் குழுத் தலைவர் முக்கிய சிக்சாக் (தலைமை ஆசிரியர்) என்று அழைக்கப்படுகிறார்.

சுயம்சேவக்குகளில் துடிப்பானவர்கள் அதிகாரிகள் பயிற்சி முகாமிற்கு அழைக்கப்படுகிறார்கள். மிகுந்த அர்ப்பணிப்பும் உத்வேகமும் உள்ளவர்கள் பிரச்சாரக் (பிரச்சாரர்களாக) முழு நேரப் பணியாளர்களாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சங் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.

இவர்கள் திருமணமும் செய்து கொள்வதில்லை. (வாஜ்பேயி, ராமகோபாலன் போன்றோர் முழு நேரப் பிரச்சாரகர் ஆவர்). இவர்கள் பிரச்சாரகர்களாக ஆனவுடன் தங்கள் குடும்பத்தினருடனான உறவையும் துண்டித்துக் கொள்கிறார்கள். சங் பணிகளுக்காக இவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அளிக்கும் பயிற்சி இரண்டு வகைப்படும். ஒன்று உடல்கூறு ரீதியான பயிற்சி. இதில் உடல் பயிற்சிகள் விளையாட்டுகள் அடங்கும், மற்றொன்று பவுதிக் (சிந்தனை ரீதியான பயிற்சி). இந்த சிந்தனை ரீதியான பயிற்சியில் தான் சுயம்சேவக்குகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்.
தனது இந்துத்துவ பாசிச குறிக்கோளை செயல்படுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் பல முகங்களைத் தரித்துள்ளது.

அரசியல் அரங்கில் முதலில் அது உருவாக்கிய கட்சி பாரதீய ஜனசங். இதன் தலைவராக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சியாம பிரசாத் முகர்ஜியை கோல்வால்கர் நியமித்தார். இவர் ஒரு சுயம்சேவக் அல்ல. ஆனால் இவரது தனி செயலாளராக நாவமை மிக்க ஒரு இளைய பிரச்சாரகராக பாரதீய ஜனசங்கத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்தான் அடல் பிகாரி வாஜ்பேயி.

வாஜ்பேயி மட்டுமல்லாது இன்னும் ஏராளமான பிரச்சாரகர்கள் பாரதீய ஜன சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது அதனை பல கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தன.

அவசர நிலை விலகிய பிறகு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயபிர காஷ் நாராயணனின் முன்முயற்சியால் ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சியுடன் பாரதீய ஜனதா கட்சியும் இணைக்கப்பட்டது. தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்ற பிறகு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட அரசில் வாஜ்பேயி, அத்வானி போன்றோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றார்கள்.

ஆனால் இவர்கள் ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இருந்த அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்த இரட்டை உறுப்பினர் நிலையை ஜனதாக் கட்சியில் இருந்த மதுலிமாயி போன்ற சோசலிசவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இதன்காரணமாக ஜனதா கட்சியில் இருந்து வாஜ்பேயி உள்ளிட்ட முன்னாள் ஜனசங் கட்சியினர் விலகி 1980ல் பாரதீய ஜனதா கட்சியைத் தொடங்கினார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அணியாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பும் தொழிலாளர் அமைப்பாக பாரதீய மஸ்தூர் சங்கும் செயல்பட்டு வருகின்றன. உலகளாவிய அளவில் இந்துத்துவத்தின் ஆதரவாளர் களை ஒருங்கிணைப்பதற்காக விஷ்வ இந்து பரிசத் அமைப்பு தொடங்கப்பட்டது. பெண்களுக்கிடையே இந்துத்துவ பாசிசத்தை வளர்ப்பதற்காக துர்கா வாகினி அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் பெண்களுக்கும் வன்முறைப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இளம்பிஞ்சுகளுக்கு மத்தியிலும் இந்துத்துவ பாசிச நஞ்சை விதைப்பதற்காக வித்யா மந்திர் என்ற பெயரில் பள்ளிக்கூடங்களையும் சங்பரிவார் நடத்துகின்றது.

சங்பரிவாரின் மிகவும் பயங்கரமான இரு அமைப்புகளாக பஜ்ரங் தளமும் வனவாசி கல்யாண் கேந்திரமும் அமைந்துள்ளன. கிறிஸ்தவ பிரச்சாரக் குழுக்களை எதிர்கொள்வதற்காக எனக் கூறி வனவாசி கல்யாண் கேந்திரம் அமைக்கப் பட்டுள்ளன.

இந்த அமைப்பு பழங்குடி மக்கள் மத்தியில் சேவை செய்வதற்காகத் தனது ஆட்களை அனுப்பிவைக்கின்றது. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ வசதிகளை பள்ளிக்கூட வசதிகள் போன்ற வற்றை இந்த அமைப்பு நிறுவி செயல் பட்டு வருகின்றது. இந்தப் பணிகளைச் செய்யும் அதே நேரத்தில் இந்துத்துவத் தின் கோட்பாடுகளை அவை பழங்குடி மக்கள் மத்தியில் போதிப்பதுடன் மறு மதமாற்றத்திலும் ஈடுபட்டு வருகின்றன. குஜராத், மத்திய பிரதசேம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இந்த அமைப்பின் செயல்பாடுகள் முக்கியக் காரணமாக விளங்கின.

பஜ்ரங்தளம் இந்துத்துவத்தின் மற்றொரு கோரமுகமாகும். பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் முதலிய சிறு பான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது இதன் முக்கிய வேலையாகும்.

ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு பஜ்ரங் தளத்தை `ஒரு தீவிரவாத அமைப்புஎன்று வர்ணித்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் ரோஸ் பஜ்ரங் தளத்தினரை நாஜிகளின் அதிரடி வன்கும்பலுக்கு இணையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரிசா கர்நாட கம் போன்ற மாநிலங்களில் தற்போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்செயல்களில் முன்னின்று நடத்தி வருவதும் பஜ்ரங்தளத்தினர் தான். மராட்டிய மாநிலம் நான்டெட், கான்பூர் போன்ற நகரங்களில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த போது அவை வெடித்துச் செத்துப் போனவர்களும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்.

பாசிச இந்துத்துவத்தை திணிப்பதற்காக பல்வேறு கோணங்களில் செயல்பட பின்வரும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன

1. பாரதீய ஜனதா கட்சி (உறுப்பினர்கள் 1 கோடியே 70 லட்சம்)
2.
ஆர்.எஸ்.எஸ். (உறுப்பினர்கள் 25 லட்சம்)
3.
பாரதீய கிஸான் சங் (விவசாயிகள் சங்கம்) (உறுப்பினர்கள் 80 லட்சம்)
4.
பாரதீய மஸ்தூர் சங் (தொழிலாளர் சங்கம்) (உறுப்பினர்கள் 45 லட்சம்)
5.
ஆதிவாசி கல்யாண் கேந்திர் (உறுப்பினர்கள் 23 லட்சம்)
6.
மீனவர் கூட்டுறவு சங்கம் (உறுப்பினர்கள் 22 லட்சம்)
7.
விவேகானந்த் மெடிக்கல் மிஷன் (உறுப்பினர்கள் 17 லட்சம்)
8.
அதியபாக் பரிஷத் (உறுப்பினர்கள் 18 லட்சம்)
9.
விவேகானந் கேந்திர் (உறுப்பினர்கள் 18 லட்சம்)
10
பாரதீய விகாஸ் பரிஷத் (உறுப் பினர்கள் 18 லட்சம்)
11.
தீன்தயாள் சோத் சான்ஸ்தான் (உறுப்பினர்கள் 17 லட்சம்)
12.
ராஷ்ட்ரிய சேவிகா சமிதி (பெண்கள் பிரிவு) (உறுப்பினர்கள் 18 லட்சம்)
13.
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (உறுப்பினர்கள் 18 லட்சம்)
14.
ஜனதா யுவ மோர்ச்சா (உறுப்பினர்கள் 18 லட்சம்)
15.
சிக்கா பாரதி (21 லட்சம்)
16.
விஸ்வ இந்து பரிஷத் (28 லட்சம்)
17.
இந்து சுயம்சேவக் சங் (வெளி நாட்டு பிரிவு)
18.
சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (தேசிய விழிப்புணர்வு முன்னணி)
19.
சரஸ்வதி சிசு மந்திர் (பாலர் பள்ளிகளுக்கான அமைப்பு)
20.
வித்ய பாரதி (கல்வி நிறு வனங்கள்)
21.
வனவாசி கல்யாண் ஆசிரம்
22.
பஜ்ரங் தளம் (ஹனுமான் படை)
23.
விஞ்ஞான் பாரதி (அறிவியல் அமைப்பு)
24.
சங்கல்ப்
25.
சன்ஸ்கார பாரதி (கலைஞர்களுக்கான அமைப்பு)
26.
சாஹ்கார பாரதி (கூட்டுறவுக்கான அமைப்பு)
27.
ஆதிவக்தா பரிஷத் (வழக்குரைஞர்களுக்கான அமைப்பு)
28.
வித் சலஹாக்கர் பரிஷத் (கணக்காளர்களுக்கான அமைப்பு)
29.
சேவா பாரதி
30
பாரதீய விசார் கேந்திர்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், இந்துத்துவத்தின் விஷ வேர்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையில் திட்டமிட்டு செயல்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த அமைப்புகள் சுதந்திர அமைப்புகளாகச் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த அமைப்புகளின் குறிக்கோள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள துறையில் இந்துத்துவத்தை நிலைநாட்டு வதுதான். தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகையில் அவை செயல்பட்டு வருகின்றன.

படிக்க:

குண்டுவெடிப்பு பெண் சாமியார் (படங்கள் )

இந்துத்துவ சாமியாரினியின் 38 பேர் உயிரிழந்த குண்டு வைப்புக்கு ராணுவத்தினரின் உதவி அம்பலம்.


மாலேகான் குண்டு வெடிப்பு. ஹிந்துத்துவ சதி அம்பலம் .

மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகள் வெடிகுண்டுகளின் கிடங்குகளாக மாறி வருகிறது.

குவியல் குவியலான பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள்.

சூரத் வெடிகுண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் காரணம். பூரி சங்கராச்சாரியார்

மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!

மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்!

Thursday, October 30, 2008

இட ஒதுக்கிடா? மோசடியா? கீழக்கரையில் IDMK கருத்தரங்கம்

தமிழக இட ஒதுக்கீடும் , இந்திய தேசிய மக்கள் கட்சி கருத்தரங்கமும்

இடம் : ஹீசைனியா மஹால் - கீழக்கரை
நாள் : 03-11-2008 திங்கள் கிழமை
நேரம் : மாலை 6.30 மணி

தலைமை

திரு. எஸ். முஹைதீன் அடுமை அவர்கள்
நகர் தலைவர் - கீழக்கரை

முன்னிலை

திரு. முகவைத்தமிழன் அவர்கள்
ஆலோசகர் மற்றும், இணைய தள பத்திரிகையாளர்

திரு, எம்.ஐ. ஜஹாங்கீர் அவர்கள்
முகவை மாவட்ட செயளாலர்

திரு. ஏ. செய்யது இபுறாஹிம் அவர்கள்
நகர் துனை பொருளாலர் - கீழக்கரை

திரு. எஸ். அயூப்கான் அவர்கள்
நகர் துனை செயளாலர் - கீழக்கரை

வாழ்த்துரை

திரு. சான் பாஷா அவர்கள்
வட சென்னை மாவட்ட அமைப்பாளர்

திரு. அஹமது அனீஸ் அவர்கள்
முகவை மாவட்ட இளைஞாட அணி செயளாலர்

திரு. முகம்மது இக்பால் அவர்கள்
மாநில துனை பொதுச்செயளாலர்

திரு. எம். முகம்மது நஜீம் அவர்கள்
பொருப்பாளர் அமீரகம்

திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள்
திருப்புல்லானி ஒன்றிய செயளாலர்

திரு. தேவ சந்துரு அவர்கள்
மாநில செயளாலர் - தமிழ்நாடு சிறுபான்மை இளைஞர் பேரவை

திரு. க. நாகேஸ்வரன் அவர்கள்
தலைவர் - தமிழர் பாதுகாப்பு பேரவை

சிறப்புரை

தலைப்பு : முஸ்லிம் இட ஒதுக்கிடா ? மோசடியா ?
டாக்டர். பக்ருதீன் B.H.M.S அவர்கள்

தலைப்பு : சமுதாய அரசியல் வீழ்ச்சிக்கு யார் காரணம்?
திரு. காஞ்சி அப்துல் ரவூஃப் பாக்கவி அவர்கள்

தலைப்பு : இந்திய தேசிய மக்கள் கட்சியின் அவசியமும், அவசரமும்
திரு. குத்புதீன் ஐபக் அவர்கள்

தவைர் - இந்திய தேசிய மக்கள் கட்சி

நன்றியுரை

திரு முகம்மது நிரோஸ் அவர்கள்
நகரச் செயளாலர் - கீழக்கரை

குறிப்பு : உங்கள் வினாக்களுக்கு கருத்தரங்கத்தின் முடிவில் விடையளிக்கப்படும். விமர்சனங்கள், ஐயப்பாடுகள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் வினாக்களிலிருந்து சமூகத்தின் அரசியல் விடியல் பிறக்கட்டும்.

அனைவரும் வாரீர் !! அழைக்கிறது கீழக்கரை IDMK

விடுதலையும், விடியலும் வெகுதூரம் இல்லை...

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
9790318182, 994050565, 9842461363, 9443021050

Wednesday, October 29, 2008

தங்கம் தகடாக மாராது

என்ன கிடைக்கும்?
முஸ்லிம் லீகையும்,
முஸ்லிம் லீக் தலைவர்கலையும்
வறுத்தெடுத்து விமர்ச்சிக்க...
ஆஹா கிடைத்ததே!
தின மலத்தின் ஒரு நாள் மலம்,

படம் போட்டு தந்தோமே சமுதயத்திர்க்கு...
சந்தயில் எடுப்பட்டது
சமுதயத்திர்க்கு சந்தேகமும் ஏர்ப்பட்டது
சான்ருகள் கிடைத்ததும் சமாதானம் ஆனது. ஆம்...!

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால்
சாமியாருக்கு முன்பாக கையில் எலுமிச்சை பழம்,
அதே படத்தில் கையில் இன்று ஆப்பிள்....

பாவம்...!
திருடர்களுக்கு தப்பிக்க தெரிய வில்லை
தின மலத்தை கன்டித்து தலைவர் சொன்ன
அறிக்கயில் உண்மை வெளிவந்ததும்
உருகுலைந்து போனார்கள் உளவாளிகள்!

வேறு என்ன கிடைக்கும்?
கிடைத்ததே! இட ஒதிக்கீடு
உண்மைகளை தொலைத்துக்கட்ட...
ஒரு வார்த்தையில் ஒருவர் சொன்னார்!
இட ஒதுகீட்டிர்க்காக முஸ்லிம் லீக்
எதுவுமே செய்ய வில்லை என்று...

அவர்களுக்குத் தெரிய வில்லை
முஸ்லிம் லீகில் வரலாறு எழுத்திலும் இருக்கும்,
படத்திலும் இருக்கும்,
உயிறுடன் நடமாடும் ,எழுத்தரசு,
போன்ற பல்கலை கழகஙலிலும் இருக்குமென்று.

பாவம்....வாயடைத்துப் போனார்கள்
ஆதாரங்களின் அணிவகுப்பை அடுக்கிய போது..,
சிராஜுல் மில்லத்தின்
கண்டிப்பான வேண்டுகோளையும்
முதல்வரின் கனிவான பதிலையும்,
இறுதியிலே நன்றி கூறும்
வார்த்தைகளை உள்ளடக்கிய
படத்தை பார்த்து...
படபடத்து போனர்கள்...

இது தவிர வேறு என்ன கிடைக்கும்?
கிடைக்கும் எது கிடைத்தாலும்
சமுதாயத்தின் வலிமையான்
கோரிக்கைகள் வரலாறாக கிடைக்கும்...!

ஆம்..!
வரவு செலவு கணக்கில்
சிக்கிவம்பில் மாட்டியவர்கள் இல்லை...!

வாலிபர்களின் உண்ர்வுகளைத் தூண்டிவருடக் கணக்கில் வழக்குகளில் சிக்கவைத்த பெருமைக்குரியவர்களும் இல்லை...!

மானம்,மரியாதை உள்ள சமுதாயத்தை
இன்றும் கண்ணியதோடும்
கவுரவத்தோடும்
வழி நடத்திச் செல்லும் வரலாற்று நாயகர்கள்...!

தங்கம் தகடாக மாறாது
தாய்ச் சபையின் தலைவர்கள்
அன்றும்....இன்றும்....என்றும்...
தங்கத் தலைவர்கள்...!

அதனாலே தான்...!
நூறாண்டு வரலாறு கொண்ட
இயக்கத்தின் தலைவர்கள்
வரலாற்றில் மின்னிக்கொண்டிருக்கிரார்கள்.

(அல்ஹம்துலில்லாஹ்)

ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,
அபுதாபி,

குர்அன் வசனங்களை வைத்து விளையாட்டு!

உலகின் மிகப்பெரிய வீடியோ விளையாட்டுக்களை தயாரிக்கும் சோனி நிறுவனம், குர்ஆனின் வசனங்களை தனது வீடியோ கேமில் பயன்படுத்தியதற் காக மன்னிப்புக் கேட்டுள்ளது. இத்த கவலை அமெரிக்காவின் சிக்காகோ டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்களிடம் மனம் வருந்தி மன் னிப்புக் கேட்பதாகவும், லட்சக்கணக்கான தங்களது கணினி மற்றும் வீடியோ கேம் பிரதிகளை திரும்பப் பெறுவதாகவும் சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின் மெண்ட் ஆஃப் அமெரிக்காவின் இயக்குநர் பேட்ரிக் செய்போல்டு அறிவித்திருக்கிறார்.
சோனியின் `லிட்டில் பிக் பிளானெட் கேம்’ எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்க்கெட்டுக்கு வருவதாக இருந்தது. இந்த வீடியோ விளையாட்டில் இடம் பெறும் இசையுடன் கூடிய பாட்டில் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்கள் தேவையே இல்லாமல் (முஸ்லிம்களை சீண்டுவதற்காகவே) இடம்பெற்றதால் சர்ச்சைகள் எழுந்தன.
இன்றைய தேதி வரை சோனியின் பி53 மட்டுமே பிரபலமான வீடியோ விளை யாட்டாக இருந்து வந்தது.
தற்போது அந்த சாதனையை முறியடிப்பதற்காக வெளிவந்த சோனியின் லிட் டில் பிக் பிளானட் முஸ்லிம் களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுபிள்ளை விளையாட்டில் குர்ஆன் வசனங்களை சேர்த்தது சிறு பிள்ளை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் விதமாக வீடியோ மார்க்கெட்டுக்கு வரு வது இது முதல்முறையல்ல. ஜப்பான் நிறு வனம் ஒன்றும், அமெரிக்க நிறுவனம் ஒன்றும் இதைப்போன்று மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது

கோட்சே முதல் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின் திரைமறைவுச் சதிகள்-கொலைகள்

சங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.


அறிக்கை வருமாறு:-அண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன.


வேதனை! வேதனை!! வெட்கம்!!


இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.


பெரும்பாலும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முசுலிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டும் வருகிறது!


ஊடகங்கள் கைகளில் இருக்கும் காரணத்தால்...ஊடகங்களில் 71 சதவிகிதம் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.


ஆனால், அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் -


கண்டுபிடிப்புகள் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அந்தப் பழியை முசுலிம்கள்மீது சுமத்தும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபித்து வருகின்றன!


இதன்மூலம் பெரும்பான்மை மக்களான இந்துக்களை சிறுபான்மைமக்களான முசுலிம்கள் மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் இதன் திரைமறைவு நோக்கமாகும்.


பார்ப்பனர்கள் - ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.


காந்தியாரைக் கொன்ற கோட்சே!


1. உதாரணமாக தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பார்ப்பனன் என்ன செய்தான்?


தனது கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டான்; முசுலிம்களின் மார்க்கப்படியான சுன்னத்தும் செய்துகொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்!


காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று பழி சுமத்தி, பிரச்சாரம் செய்து, இந்துக்களை முசுலிம்கள்மீது மோதவிடும் சூழ்ச்சிதானே இது?


காந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல - ஒரு இந்துப் பார்ப்பனன் என்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர்.


அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பாக சில ஊர்களில் இந்துக்களால் முசுலிம்கள் தாக்கவும் பட்டனர்.


சதுமுகையில்...


2. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது


.3.ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்னணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர்.தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.


திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழியைப் போடுவதுதான் அவர் களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (தி இந்து, 18.2.2002).


தென்காசியில்...

3. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24 இல் இது நடந்தது.


இந்து - முசுலிம் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்தனர்.


தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண்டியன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப் பட்டார். இதில் மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர்.


மதக் கலவரம் ஏற்பட்டு, முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன.நோக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுவதே!


இதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவல கத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப் பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்.


குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டபோது பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.


கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயாரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


கான்பூரில் நடந்தது என்ன?


4. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது.


5.பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக அவை வெடித்து உடல் சிதறிப் போனார்கள்.


மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான்பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என். சிங் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கினார்.


வெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள் களும் கைப்பற்றப்பட்டன.இராணுவத்தில் பயன்படுத்தப்படக் கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை!


வரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்படவேண்டிய முசுலிம் களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள்பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.


மகாராட்டிரத்தில்...


6. மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதேபோல, குண்டு களைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, வெடித்துச் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர் (4.5.2006).


7. பெண் சாமியார் சிக்கினார்


மகாராட்டிர மாநிலம் மலேகானில் சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008).


ஆறு இசுலாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர்.மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரிய வந்தது.


டைமர் கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது.புலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர் (வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார்.


வந்தே மாதரம் என்ற அமைப்பைத் தொடங்கிய இந்தப் பெண் சாமியாருக்கு உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட முதலமைச்சராகிய நரேந்திரமோடி, குஜராத் மாநில அரசின் உதவித் தொகையெல்லாம் கூட கிடைத்து வருகிறதாம்!


படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர்ப் பிரிவான ஏபிவிபியில் (ஹக்ஷஏஞ) தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார்!


பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமானவர் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர் இவர்.


இவரோடு மேலும் மூவர் இந்த வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரும் இராணுவத்தில் பணி யாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர்;


இராணுவப் பணியில் இருக்கும் இன்னொருவரைக் கைது செய்ய இராணுவத் துறையிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர்.குல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மய்யம் ஒன்றினை நடத்தி வருகின்றனர்.


வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி? அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளையெல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.


பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை நுழைத்தனர்.


விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதே வெளிப்படுத்தியதுண்டு.பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.


96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டது ஏன் என்பது இப்பொழுது மகாராட்டிரத்தில் - வெடி குண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதி லிருந்து தெரிந்துகொள்ளலாமே!


மகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டுவெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சங் பரிவார்க் கும்பல் பெரும்பாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.


இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங்களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையை அரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.


சூரத் நகரில் வெடிகுண்டு சேதத்தைப் பார்வையிட நரேந்திர மோடி வந்தபோது, பாதையில் மரங்களில் வைக்கப்பட்டிருந்த 18 வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்து எடுத்தனர். வைத்ததே அவர்களாகவே இருக்கக்கூடும் என்கிற அய்யம் நியாயமானதே!


சங் பரிவார்க் கும்பல் இப்படியெல்லாம் வன்முறைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை களையெல்லாம் வைத்துச் செயல்படும் பயங்கரமான தகவல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன.


வழக்கம்போல் எங்கள் மீது அபாண்ட பழி என்று கூறி கூக்குரல் போடுகிறார்கள் சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர்.இந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் சிறுபான்மை யினர்மீது வன்முறை முத்திரை குத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை.


இதுபோலவே ஒரிசாவிலும் கிறித்தவர்கள்மீது பழி - படுகொலைகள்.
நடவடிக்கைகள் தேவை
மத்திய - மாநில அரசுகள் இந்த அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியிலில் வைத்து சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யாவிட்டால், நாடு பெரும் விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.
2008தலைவர், திராவிடர் கழகம்

சென்னை28.10..


குறிப்பு: இவ்வறிக்கை துண்டறிக்கையாகவும் கிடைக்கும்; வாங்கி ஊர்தோறும் பரப்புங்கள்.http://files.periyar.org.in/viduthalai/20081028/news01.html

படிக்கவும் >











Tuesday, October 28, 2008

உலகம் எங்கே செல்கிறது.....?


Monday, October 27, 2008

மாலேகான் குண்டுவெடிப்பு - பஜ்ரங்தளத்தினருக்கு இந்திய ரானுவத்தினர் உதவி அம்பலம்

இந்துத்துவ சாமியாரினியின் 38 பேர் உயிரிழந்த குண்டு வைப்புக்கு ராணுவத்தினரின் உதவி அம்பலம்.

38 பேர் உயிரிழந்த 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் முடமாகி நகரமே ரத்தமயமானதோடு - பிய்ந்துப்போன சதைகளுடன்... மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை.

இவர் இந்து ஜாகிரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்தவர். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உமாபாரதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

இந்த பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். சைக்கிள்களில் குண்டு வைத்து வெடிக்கப்பட்டது.

சைக்கிள்கள் சாதாரண மக்களின் வாகனம் என்பதிலிருந்து அது பயங்கரவாதிகளின் ஆயுதமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

மலேகன் நகரமே ரத்தமயமானதோடு - பிய்ந்துப்போன சதைகளுடன்... மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை.

குண்டுவெடிப்பு-2 ராணுவ வீரர்களுக்கு தொடர்பு!
ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 26, 2008

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக பெண் சாமியார் கைதாதியுள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஒரு மேஜர் உள்பட இரு முன்னாள் ராணுவத்தினரும் பிடிபட்டுள்ளனர்.

மாலேகானில் கடந்த மாதம் 29ம் தேதி சிமி அலுவலகம் முன்பு சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 5 பேர் பலியானார்கள். 90 பேர் படுகாயம் அடைந்தனர். இதேபோல குஜராத் மாநிலம் மோடாசா நகரிலும் குண்டுவெடித்தது.

அதில் ஒருவர் பலியானார்.இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை கட்டி எடுத்து வந்து வெடிக்க வைத்திருப்பது தெரிந்தது. டைமர் கருவி பொருத் தப்பட்டிருந்த அந்த வெடி குண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டிருந்தது.

தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் இது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள். மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்த போது, அது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டிருப்பது தெரிந்தது.

இது தொடர்பாக போலீசார் சியாம் சாகு, திலீப்நாசர், சிவநாராயண்சிங் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர்.அவர்கள் மூன்று பேரும் பெண் துறவி பிரக்யா தாகூர் என்பவருக்கு நெருக்கமானவர்கள்.

இவர் இந்து ஜாகிரன் மஞ்ச் அமைப்பைச் சேர்ந்தவர். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், உமாபாரதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் இந்து ஜாகிரண் மஞ்ச்சில் இணைந்த பின்னர் துறவியானார்.

பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். ராமஜென்மபூமி போராட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.சில ஆண்டுகளுக்கு முன்பு வந்தேமாதரம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அதற்கு குஜராத் அரசு நிதியுதவி அளித்ததால், குஜராத் மாநிலம் சூரத்திற்கு இடம் மாறினார் பிரக்யா.

மாலேகான் குண்டுவெடிப்பில் சிக்கிய மோட்டார் சைக்கிள் இவரது பெயரில்தான் பதிவாகியிருந்தது. இதையடுத்தே இவருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்ற முடிவுக்கு போலீஸார் வந்தனர்.

சிமி இயக்கத்தினரை பழிக்குப் பழி வாங்க இந்த குண்டு வெடிப்புகளை பெண் சாமியார் உள்ளிட்ட குழு நடத்தி இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதை தொர்ந்து பெண் சாமியார் பிரக்யாவை போலீசார் கைது செய்தனர். இது சங் பரிவார் அமைப்புகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராணுவத்தினருக்கு தொடர்பு:இதற்கிடையே இந்த வழக்கில் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 2 வீரர்களும் கைதாகியுள்ளனர். இருவரும் தற்போது இந்து ராணுவப் பயிற்சிக் கழகம் என்ற பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார்கள்.


இந்த பயிற்சிப் பள்ளியில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று வகுப்புகள் நடத்தப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.


அவர்களில் ஒருவர் பெயர் பிரபாகர் குல்கர்னி மற்றொருவர் பெயர் உபாத்யா. இவர் ராணுவத்தில் மேஜர் அந்தஸ்தில் பணியாற்றியவர். 2 ராணுவ வீரர்களும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஆவர்.

வெடிகுண்டு தயாரிக்க இவர்கள் ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்தை சேகரித்து அனுப்பி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

கைதான பெண் சாமியார் உள்பட 2 ராணுவ அதிகாரிகளையும் போலீசார் விசாரணைக்காக மும்பை கொண்டு சென்றுள்ளனர்.அங்கு அவர்களிடம் தீவிர விசாரணையில் நடத்தியதில் குண்டு வெடிப்பில் இந்து அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.


ராணுவ அதிகாரிகள் குல்கர்னியும், உபாத்யேயும் நாசிக் அருகே ராணுவ பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வந்தனர். இந்த பயிற்சி மையத்தை இந்து ராணுவ கல்வி கழகம் நடத்தி வந்தது.அதில் வெடிகுண்டுகள் தயாரித்தல், வெடிகுண்டு களை கையாள்வது குறித்து இரு அதிகாரிகளும் பயிற்சி அளித்து வந்துள்ளனர். மற்றும் ஆயுதப் பயிற்சியும் கொடுத்தனர்
.

இதற்கிடையே மாலேகானில் 2006-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பிலும் இந்து அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

http://thatstamil.oneindia.in/news/2008/10/26/india-2-ex-armymen-including-a-major-involved-in-malegoan.html

************************************************
படிக்கவும்:


மாலேகான் குண்டு வெடிப்பு. ஹிந்துத்துவ சதி அம்பலம் .

மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகள் வெடிகுண்டுகளின் கிடங்குகளாக மாறி வருகிறது.

குவியல் குவியலான பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள்.

சூரத் வெடிகுண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் காரணம். பூரி சங்கராச்சாரியார்
மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!

மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்!

நன்றி : வாஞ்சூர் அப்பா

Saturday, October 25, 2008

இந்துத் தீவிரவாதம் என்று சொல்லாதீர்கள்” – பாஜக வின் கண்டனம் சரியே

“இந்துத் தீவிரவாதம் என்று சொல்லாதீர்கள்” – பாஜக வின் கண்டனம் சரியே.

மகாராஷ்டிராவில் 2006 செப்டம்பரில் மாலேகாவ் என்கிற ஊரின் மசூதி ஒன்றின் வெளியே நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் சுமார் 35 பேர் உயிர் இழந்து நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இந்த தேசத்தின் எத்தனையோ குண்டுவெடிப்பு சம்பவம் போல் அதுவும் கிட்டத்தட்ட மறக்கப்பட்டிருக்கும்.

அப்போது இதன் பின்னணியில் பாகிஸ்தானும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு SIMI-யும் இருப்பதாகச் சொல்லப்பட்டு, இஸ்லாமியத் தலைவர்கள் பலரும், “இந்திய இஸ்லாமியர்களுக்கிடையே குழப்பம் விளைவிக்கும் இது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிட வேண்டும்” என்கிற ரீதியில் கண்டனம் தெரிவித்து ஒற்றுமையை வலியுறுத்தி அறிக்கைகள் வெளியிட்டதெல்லாம் எனக்கு நினைவிருக்கிறது.

அப்போது அமைக்கப்பட்ட விசாரணைக்குழு (ATS) தன் விசாரணையைத் தொடர்ந்து, இப்போது அந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் சாத்வி ப்ரக்யா சிங் டாக்குர் என்கிற ஒரு சாதுவின் பங்கினைக் கண்டறிந்திருக்கிறது. அவரும் அவருடைய கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சாத்வி என்கிற சொல் சாது என்பதன் பெண்பால் வடிவம். அவர் இந்து ஜன் ஜாக்ரன் மஞ்ச் என்கிற இந்துத்வா அமைப்பின் மகளிர் பிரிவின் முக்கியஸ்தர்; ABVP எனப்படும் மாணவர் அமைப்பு, பஜ்ரங் தள் போன்ற அமைப்புகளுடன் தொடர்பு உள்ளவர் என்கிற செய்திகள் வெளிவருகின்றன. அந்த அமைப்பினர் உடனடியாக அவற்றை மறுத்துள்ளனர். இந்துத்வா அமைப்புகளில் பொதுவாக உறுப்பினர் பதிவுகள் இருப்பதில்லை. வாலண்ட்டரி என்கிற பெயரில் எவரையும் எப்போதும் கழற்றிவிடத் தோதுவாகச் செயல்படும் அமைப்பினர் அவர்கள் என்பது விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும்.

“கூட்டத்தில் கோழி திருடியவன் தலையில் இறகு இருக்கும்” என்று கேட்ட மாத்திரத்தில் தலையைத் தடவிப் பார்க்கும் “உத்தமன்” போல் பாராளுமன்றத்தில் பாஜக தம் குரலை உயர்த்த ஆரம்பித்திருக்கிறது. “இந்துத் தீவிர வாதிகள்” (HINDU TERRORIST) என்கிற வார்த்தையே உபயோகப்படுத்தப்படக் கூடாது என்பது அவர்களின் வாதம்.

அவர்கள் சொல்வது முழுவதும் சரி. தீவிரவாதிகள் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்கள் மனநோயாளிகள்; பாதி மிருகங்கள். சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள். “இந்துத்வா தீவிரவாதம்” என்கிற வார்த்தை தான் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.

அமைப்பு பூர்வமான இயக்கத்தினர் அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களுடைய பணவரவு, அவர்தம் நடவடிக்கைகள் எல்லாமே தீவிரமாகச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு சந்தேகம் இம்மியளவு இருந்தாலும் அவை உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும். களையுனர் கைகொல்லும் காழ்த்த இடத்து முள்மரமாக வளர்ந்து விட்டால், அவர்கள் சமூகத்தை எப்படி அழிப்பார்கள் என்பதற்கு இன்னுமோர் எச்சரிக்கை இந்த நிகழ்ச்சி. "தண்டிக்கப்படாத கிரிமினல் குற்றங்கள் மேலும் கிரிமினல்களை உருவாக்கும்" என்கிற குஷ்வந்த் சிங்கின் வாதத்திற்கு இன்னோர் உதாரணம். 1992-ல் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் சரிவர தண்டிக்கப்பட்டிருந்தால் அதன் பிறகான பல தேசிய இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் இது போன்ற விஷயங்களைப் பூதாகரமாக்கி நாட்டினர் உணர்வுகளை இந்துப் பெரும்பான்மை என்கிற போர்வையில் பிளவு படுத்தும் சதியையும் இந்த மாபாவிகள் செய்வார்கள். பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.

நன்றி : முயல்

ஹஜ் செய்திக் குறிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்.

சென்னை: ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகளுக்கு பயிற்சி நடத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2008-ம் ஆண்டில் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளவிருக்கும் சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த புனித பயணிகளுக்கு சென்னையில் புத்தறிவுப் பயிற்சி முகாம் நடத்த தமிழ்நாடு மாநில ஹஜ் குழு கருதியுள்ளது. இந்த பயிற்சியின் போது சவூதி அரேபியாவில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், பயண விவரங்கள், ஹஜ் பற்றிய வழிமுறைகள், ஹஜ் குழு மற்றும் ஜெட்டாவிலுள்ள இந்திய துணை தூதரகத்தின் இதர ஏற்பாடுகள் மற்றும் தகவல்கள் பற்றி விரிவாக விளக்கி கூறப்படும். இந்த பயிற்சி முகாம், தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொஸைட்டியின் உதவியுடன் நடத்தப்படுகிறது. 27-ந் தேதி (தமிழ்) மற்றும் 28-ந் தேதி (உருது) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு பைத்துல் ஹுஜ்ஜாஜ், (ஹஜ் ஹவுஸ்), எண்.2, டிமெல்லோஸ் ரோடு, சூளை, சென்னை-600112 என்ற முகவரியில் நடைபெறும்.இப்பயிற்சி முகாம்களில், பெண் புனித பயணிகள் உட்பட அனைத்து ஹஜ் பயணிகளும் (தேர்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவர்கள்) கலந்து கொள்ளுமாறும், அதன்மூலம் ஹஜ் பயணத்திற்கான விதிமுறைகள், வழிவகைகள் மற்றும் நடைமுறைகளை விரிவாக தெரிந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பன்னாட்டு பாஸ்போர்ட்டில் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இருப்பவர்களும் விரும்பினால் இப்புத்தறிவு பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி முகாம்களை நடத்துவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களை மாநில ஹஜ் குழு அனுப்பி வைக்க உள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா நிறைவேற்றுவது பற்றிய விளக்கங்களை ஆலிம்கள் அளிப்பார்கள்.இது குறித்து மேலும் விவரங்களை அறிய தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவை 044-28252519 மற்றும் 044-28227617 ஆகிய தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thanks to source:www.thatstamil.com

Friday, October 24, 2008

மாலேகான் குண்டுவெடிப்பு: இந்து அமைப்பே காரணம்

மாலேகான் குண்டுவெடிப்பு: இந்து அமைப்பே காரணம்

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு இந்து ஜாகிரன் மஞ்ச் என்ற இந்து அமைப்பே காரணம் என கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் துறவி என்று கூறப்படுகிறது.

மாலேகான் நகரில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது.
அதே நாளில், குஜராத் மாநிலம் மோடாசா நகரிலும் குண்டுவெடித்தது. இதில் மொத்தமாக 6 பேர் உயிரிழந்தனர். மாலேகானில் 5 பேர் இறந்தனர்.

இரு சம்பவங்களிலும் மோட்டார் சைக்கிள்களில் குண்டுகள் வைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதாகியுள்ளனர் என்று மாலேகான் நகர காவல்துறை இணை ஆணையர் ஹேமந்த் கர்கரே தெரிவித்துள்ளார். மேல் விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் நாசிக் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

முன்னதாக ஷியாம் சாஹு, திலீப் நஹர், சிவநாராயணன் சிங் மற்றும் தர்மேந்திரா பைராகி ஆகிய நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வந்தனர். இவர்கள் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் ேசர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்து அமைப்பே காரணம்?

இதற்கிடைேய, இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற இந்து அமைப்பே மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் இதை இந்து ஜாகிரண் மஞ்ச் அமைப்பு மறுத்துள்ளது.

இருப்பினும் கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பிரக்யா சிங் தாக்கூர் என்கிற துறவி என்று கூறப்படுகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் (இதில்தான் குண்டு வைக்கப்பட்டிருந்தது) சூரத்தைச் ேசர்ந்த ஒருவருக்கு சொந்தமானது. இவருக்கு இந்து அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்கிருந்துதான் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான பல முக்கிய துப்புக்கள் போலீஸாருக்குக் கிடைத்தன.

மோடாசா குண்டுவெடிப்புக்கும் இந்து ஜாகிரண் மஞ்ச்தான் காரணமாக இருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

பாஜக மறுப்பு:

இந்து ஜாகிரண் மஞ்ச் அமைப்புக்கு தீவிரவாத தாக்குதலில் சம்பந்தம் இல்லை என்று பாஜக மறுத்துள்ளது.

இதுகுறித்து பாஜக பொதுச் செயலாளர் கோபிநாத் முண்டே கூறுகையில், இந்து அமைப்புகளுக்கு மாலேகான் குண்டுவெடிப்பில் எந்தத் தொடர்பும் இல்லை.

குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இந்து அமைப்புகளை தொடர்புபடுத்த முடியாது என்றார்.

ஆனால் சிபிஎம் எம்.பி. பிருந்தா காரத், இந்து அமைப்புகள்தான் மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் போலீஸார் கைது செய்துள்ள நபர்கள் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள். எனவே இதை யாரும் மறுக்க முடியாது என்றார் அவர்.

நன்றி : தட்ஸ்தமிழ்

ஏதோ ஒரு தமிழனிடமிருந்து வந்த ஒரு மடல்

இக்கடிதத்தை படித்தபொழுது எனது விழியிலிருந்து என்னையும்அறியாமல் சில கண்ணீர்த்துளிகள் பூமியில்விழுந்தன. ஏதோ ஒரு செப்டம்பர்11 அன்றைக்கு, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்தசம்பவத்தை இன்னும் மறக்காமல் நாம் விவாதித்துகொண்டிருக்கிறோம். ஆனால் நம் காலடியில்உள்ள தேசத்தில் நம்சொந்தங்களுக்கு தினம் தினம் செப்டம்பர்11 நடந்துகொண்டிருப்பதை நாம் இன்றுவரை கண்டுகொள்ளவில்லை அல்லது கண்டும்காணாததுபோல் இருந்துகொண்டிருக்கிறோம். ஒரு சீக்கியமாணவனின் மயிரைஅறுத்ததற்காக வெகுண்டெழுந்த சீக்கியஇனம்எங்கே, உன்தொப்புள்கொடிஉறவின் உயிரை அறுத்தபின்னும் வாய்மூடி வேடிக்கைபார்க்கும் நம்தமிழ்இனம்எங்கே!!!!!

இப்படிக்கு,இக்கடிதத்தை படித்தபிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்று எட்டிப்பார்க்கும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவன்

(கண்கள் நிறையக் கனவுகளோடும்,துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்தரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்துபோன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம்எழுதப்படுகிறது)

நலமுடன் இருக்கிறீர்களா?உலகத் தமிழர்களே?

குண்டு விழாத வீடுகளில்,அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள்,இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?

எனக்குத் தெரியும்,என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்களவிமானத்தின்குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக்கரைந்திருப்பீர்கள்......

எண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது,உங்கள் வீட்டு வரவேற்ப்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம்ஆடும்"மஸ்தானா,மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்குவந்திருக்கும்.

அண்ணனும்,தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா?அம்மா,அப்பாவின் மறைவுக்குப் பின்னால்,எனக்குத் தலை வாரிவிட்டு,பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை,நீண்டதேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும்,சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்......

அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு,நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை,இரவு பகல்ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்....அதனால் தான் எழுதவில்லை.........

ஒலிம்பிக்தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும்,என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும்,அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது,எனக்கு உங்கள்நினைவு வந்தது.....அதுமட்டுமல்ல,இந்திய அரசுகளின் உதவியோடு,இலங்கை ராணுவத்திற்குநன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.

ஒரு பக்கம்,இரங்கற்பா எழுதிக் கொண்டு,மறுபக்கம்,நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும்உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே?

இன்னொரு முறைஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள்,சாவின் மடியில்எங்களுக்கு ஒரு தமிழ்க்கவிதையாவது கிடைக்கும் அல்லவா?

மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலானவெளிச்சத்தில்,தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம்,

குழந்தைகள்இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போது நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள்,உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடைபடுமே என்று தான் அப்போது எழுதவில்லை,

எங்கள் இனப் போராளிகளை கொன்றுகுவித்து,நிர்வாணமாக்கி,இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல்,எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் " சார்க்" கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.

அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள்,பெண்களின் இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கியகேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள்,நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின்இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது,தமிழர்களே?

வயிற்றை அணைத்துக் கொண்டு,செப்பயான் குளத்தில் முங்கிஎழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு,வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து,அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்துவிடுகிறேன் அகதி முகாமில்.

முகாமின்,தகரத் தடுப்புகளின் இடைவெளியில்தெரியும் பள்ளிக்கூடமும்,அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும்,அம்மாவின்மடியில் இருந்து,எப்போதும் கிடைக்கும் அன்பையும் எண் பழைய வாழ்வையும் நினைவுபடுத்தும். ஆயினும் பாழும் வயிறு,பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில்நிறுத்தி விடும்,அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்......

அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு,ஆனால் நீங்கள்பீஸாக் கடைகளின்,வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள்,எழுதத் தோன்றவில்லை.....எனக்கு....

அமைதியாய் விடியும் பொழுதும்,
அழகாய்க் கூவும் குயிலும்,
தோகை விரிக்கும் மயிலும்,
காதல் பேசும்கண்களும்,
தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,
தாமரை மலரின்தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன்வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,
அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,
கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழையநினைவுகளும்,

இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத்தமிழர்களே?

எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம்வேண்டாம் அண்ணா,என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு,உங்கள் வீட்டில் கிழித்துஎறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள்,உலகத்தமிழர்களே........

ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டுபோன இனத்தின் விடுதலையும்,துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும்இருக்கிறது.

வலி கலந்த நம்பிக்கைகளுடன்.

Wednesday, October 22, 2008

காமம் - இஸ்லாத்தின் பார்வையில்...!

இங்கே அழுத்தி ஒலி கேட்கவும் ,முழுமையாக படிக்கவும் :

Tuesday, October 21, 2008

இனவெறியன் தீவிரவாதி ராஜ்தாக்கரே கைது

இனவெறியன் ராஜ்தாக்கரே

மும்பை: மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். இதையடுத்து மும்பையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ரயில்வே தேர்வு எழுத வந்த வட இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துமாறு தனது அமைப்பினரை தூண்டிவிட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவ சேனையிலிருந்து பிரிந்து வந்ததில் இருந்து ராஜ் தாக்கரேவின் அட்டூழியம் அதிகமாகிவிட்டது. மராட்டியர்கள் நலனுக்காக போராடுவதில் அதிகம் பாடுபடுவது யார் என்ற போட்டியில் சிவசேனாவும் நவ நிர்மாண் சேனாவும் போட்டி போட்டிக் கொண்டு இறங்கியுள்ளன.

மராட்டியர் நலன் என்ற பெயரில் உத்தரப் பிரதேச, பிகார் கூலித் தொழிலாளிகளைத் தாக்குவதையே வேலையாகக் கொண்டுள்ளனர் இந்த இரு அமைப்பினரும். அதிலும் ராஜ் தாக்கரே அமைப்பினரின் அராஜகம் மிக அதிகமாகி வருகிறது.

இந் நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரயில்வே தேர்வு எழுத வந்த பிகாரிகளை இவரது அமைப்பினர் அடித்து உதைத்தனர்.

இதற்கு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட வட இந்திய தலைவர்களிடம் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து ராஜ் தாக்கரே மீது மும்பையின் கார்வாடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முடிந்தால் தன்னை கைது செய்யலாம் என ராஜ் தாக்கரே மாநில காங்கிரஸ் அரசுக்கு சவால் விட்டார். என்னை கைது செய்தால் மகாராஷ்டிராவே பற்றி எரியும் என்றார்.

இந் நிலையில் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் ரத்னகிரி மாவட்டத்தில் வைத்து இன்று அதிகாலை அவர் செய்யப்பட்டார். பந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்காக அவர் மும்பை கொண்டு வரப்படுகிறார்.

இவரது கைதையடுத்து மும்பையில் பல இடங்களில் இவரது அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. பல டாக்சிகள் அடித்து உடைக்கப்பட்டுள்ளன.

போரிவிலி பகுதியில் லாரிகளை எரிக்க முயற்சி நடந்தது. முலுன்ட் பகுதியில் டோல் கேட் தீ வைத்து எரிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபமின் வீடு மீது கல்வீச்சும் நடந்துள்ளது.

இதனால் மும்பையில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. நகர் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Monday, October 20, 2008

குஜராத், ஒரிசா, கர்நாடகா… தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்!


மாதம் ஒன்றாகியும், மத்திய அரசு படைகளை அனுப்பியும், ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தும், ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது நிற்கவில்லை. ஒவ்வொரு நாளும் கலவரத்தின் கொடூரமான கதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பாதிரியார்கள் நிர்வாணமாக்கப்பட்டு இரக்கமின்றித் தாக்கப்படுகின்றார்கள். கன்னியாஸ்திரீகள் கும்பலால் கற்பழிக்கப்படுகிறார்கள். அகதி முகாமிலும், காடுகளிலும் தஞ்சமடைந்திருக்கும் கிறித்தவ மக்கள் நிர்மூலமாக்கப்பட்ட தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பினால் மீண்டும் அடித்து விரட்டப்படுகிறார்கள்.

"இந்துவாக மாறும்வரை யாரும் ஊருக்குள் நுழைய முடியாது''

என பஜ்ரங்தள் குண்டர்களால் மிரட்டப்படுகின்றார்கள். பார்ப்பன இந்து மதவெறியர்களின் கொலைப்படை கிராமம் கிராமமாகச் சுற்றிவந்து கிறித்தவர்களின் வீடுகளையும், தேவாலயங்களையும் தேடித்தேடி நொறுக்குகிறது. காந்தமால் மாவட்டத்தில் தாக்கப்படாத ஒரு கிறித்தவ வீடு கூட இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டு விட்டது.

சங்கபரிவாரக் கும்பலின் அட்டூழியங்களை போலீசு வேடிக்கை பார்க்கின்றது.
ஒரிசாவில் ருசிகண்ட ஒநாய்க்கூட்டம் கர்நாடகத்திலும் தாக்கத் தொடங்கிவிட்டது.

"கர்நாடகத்தை குஜராத் ஆக்குவோம்'

என்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது. கிறித்தவ இளைஞர்களைக் கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கின்றது. கிறித்தவ மக்களின் மீது தாக்குதல் நடத்தும் பஜ்ரங் தள்ன் கர்நாடக மாநில அமைப்பாளர் மகேந்திரக் குமாரை மட்டும் ஒப்புக்குக் கைதுசெய்து உடனே விடுதலையும் செய்திருக்கின்றது எடியூரப்பா அரசு. கேரளத்திலும், தமிழகத்திலும் கூட சர்ச்சுக்கள் தாக்கப்பட்டிருக்கின்றன.

"பிரதமர், குடியரசுத் தலைவர், சோனியா காந்தி என எல்லோரையும் சந்தித்து முறையிட்டு விட்டோம்; எந்தப் பயனுமில்லை'' என்று குமுறுகின்றார் ஒரிசாவின் பிஷப். கர்நாடகத்திலும் அதே நிலைதான். ஒரிசாவின் கலவரப் பகுதிகளுக்குள் சங்க பரிவாரத் தலைவர்கள் தடையின்றி வந்து செல்கின்றனர். ஆனால் உண்மையறியும் குழுக்களை மட்டும் அரசே தடுத்து நிறுத்துகின்றது. இவ்வளவு நடந்தும் வாய்திறக்காத கல்லுளிமங்கன் மன்மோகன் சிங் பிரான்சு அதிபர் சர்கோசி தன்னிடம் கண்டனம் தெரிவித்த பிறகு, "ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது தேசிய அவமானம்'' என்று மெல்ல வாயைத் திறக்கிறார். அவமானத்தைத் துடைத்தொழிக்கும் வழிதான் இன்றுவரை புலப்படவில்லை.

சென்ற தேர்தலில் தாங்கள் பெற்ற வெற்றியை, "மதச்சார்பின்மையின் வெற்றி' என்று கூறிக்கொண்ட காங்கிரசு, "மதக்கலவரம் செய்வோரை ஒடுக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்' என்று குறைந்தபட்ச செயல் திட்டத்தில் அளித்துள்ள வாக்குறுதியைப் பற்றி, வருடம் நான்காகியும் மூச்சுவிட மறுக்கின்றது. பார்ப்பன இந்து பயங்கரவாதிகளின் பாசிஸ்டுகளின் கலவரங்களைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டு, குண்டுவெடிப்புகள் நடக்கும்போது மட்டும் "பயங்கரவாதத்தைத் தடுக்கும்' செயல் திட்டத்தைத் தீவிரப்படுத்துகின்றது.

தற்போது நடைபெற்று வரும் தாக்குதல் தற்செயலானதல்ல; இது திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் என்பதைப் பாமரனும் கூடப் புரிந்துகொள்ள முடியும். இசுலாமியப் பயங்கரவாதத்தைக் காட்டி ஊடகங்கள் உருவாக்கும் பொதுக்கருத்து, தானாகவே தனக்கு ஓட்டுக்களை அறுவடை செய்துதரும் என்பதால், கிறித்தவ எதிர்ப்பைத் தீவிரப் படுத்தியிருக்கின்றது பா.ஜ.க.
வர இருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரசு அமல்படுத்தி வரும் மறுகாலனியாக்கக் கொள்கைகளால் அதிருப்தியில் இருக்கும் மக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்கு ஏற்ற முறையில் சவடால் பேசுவதற்குக் கூட பா.ஜ.க விடம் மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை.


மக்களின் அதிருப்தியை இந்து மதவெறியின் மூலம் உருமாற்றி அறுவடை செய்யும் நோக்கத்தில்தான் இந்தக் கலவரங்களை நடத்துகின்றது ஆர்.எஸ்.எஸ் கும்பல். மேலும் உ.பி.யில் செல்வாக்கை இழந்துவிட்ட பா.ஜ.க, அதை ஈடுகட்டுவதற்குத் தேவையான நாடாளுமன்ற நாற்காலிகளுக்கு தென்மாநிலங்களைக் குறிவைத்திருக்கின்றது.

இந்தக் கோணத்தில்தான் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பா.ஜ.கவின் தேசியக்குழுவில் செயல் திட்டங்கள் பேசப்பட்டன. ராமர் சேதுவை தேசிய சின்னமாக்குவது, அமர்நாத் செல்லும் சாலையையும், நிலத்தையும் தேசிய மயமாக்குவது, காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவை நீக்குவது, அப்சல் குருவைத் தூக்கில் போடுவது, மதமாற்றத்தைத் தடை செய்வது என்பவையே அங்கே மையப்பொருளாக இருந்தன. மொத்தத்தில் இந்து மதவெறியைக் கிளப்பும் அடுத்த சுற்றுத் தாக்குதலுக்கு பா.ஜ.க தயாராகி விட்டது. இந்துவெறியின் உண்மையான தீவிரவாத முகமாக மோடியும், மிதவாத முகமூடியாக அத்வானியும் முன்னிறுத்தப்படும் நாடகம் தயாராகி விட்டது.

சங்கபரிவாரத்தின் இந்தத் தாக்குதல் நிலைக்குப் பொருத்தமாக, நாட்டின் அதிகாரவர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் அனைத்தும் துணை நிற்கின்றன. குண்டு வெடிப்பை ஒட்டி நகரங்களில் கொத்துக் கொத்தாக இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள். சென்னை நகரில் இரவில் நடமாடும் இளைஞர்களிடம் "நீ முசுலீமா' என்ற கேள்வியையே முதல் கேள்வியாக எழுப்புகின்றது போலீசு.

வட மாநிலங்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை. போலீசால் கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையுமே "தீவிரவாதிகள்' என்று முத்திரை குத்துகிறது போலீசு. உளவுத்துறை கிளப்பும் வதந்திகள் உண்மைச் செய்தியாகின்றன.
டெல்லியில் விசாரைணக்காகக் கைது செய்யப்பட்ட இசுலாமிய இளைஞர்களுக்கு பாலஸ்தீனத்தின் இசுலாமிய இயக்கத்தினர் அணியும் முகமூடியை அணிவித்து ஊடகங்களின் முன் ஆஜர் படுத்துகின்றது போலீசு. வழக்கு, விசாரணை, தண்டனை எதுவும் சட்டத்தின்படியோ, நீதி உணர்வுடனோ நடப்பதில்லை.

பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் "இந்துத்துவ பொது உளவியல்'தான் அனைத்தையும் இயக்குகின்றது. காங்கிரசு முதல் திராவிடக் கட்சிகள் வரை யாரும் இந்து மதவெறிக்கு எதிராக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடும் திராணியற்றவர்கள் ஆகிவிட்டதால், இந்துவெறி மனோபாவம் மக்களிடையே தட்டிக் கேட்பாரின்றி ஆட்சி செலுத்துகின்றது.
பெரும்பான்மை இந்து வாக்கு வங்கியைக் குறிவைத்தே காங்கிரசும் இயங்குகின்றது. குண்டுவெடிப்பை வைத்து "தீவிரவாதிகளை' கைது செய்யும் வேகம், இந்து மதவெறியர்கள் நடத்தும் கலவரத்தை ஒடுக்குவதில் கடுகளவும் இல்லை. கான்பூரிலும், நான்டேடிலும் தயாரிக்கும் போதே குண்டு வெடித்து நான்கு பஜ்ரங்தள் காலிகள் செத்தனர்.

ஏராளமான வெடிமருந்துகளும், பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்யும் வரைபடங்களும் சி.பி.ஐ யிடம் சிக்கின. எனினும் இந்த வழக்குகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. அது மட்டுமல்ல, அவர்கள் சொல்லளவில் கூட பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படவில்லை.
சங்கபரிவாரங்கள் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை கடந்த 20 ஆண்டுகளில் திடீரென்று வந்து விடவில்லை. பெரிதும் சிறிதுமாகச் சிறுபான்மை மக்களைத் தாக்கும் கலவரங்கள் நாடெங்கும் ஆயிரக்கணக்கில் நடந்திருக்கின்றன. அனைத்திலும் அரசு, அதிகார வர்க்கம், நீதித்துறையின் உதவியோடு கேட்பாரின்றித் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் சிறுபான்மை மக்கள்.

இன்றைய இசுலாமிய இளைஞர்கள் எனப்படுவோர், 80 களின் பிற்பகுதி முதல் புதிய பரிமாணத்துடன் தலைவிரித்தாடத் தொடங்கிய இந்து மதவெறியின் சாட்சியங்களாகத்தான் வளர்ந்து இளைஞர்களாகி இருக்கின்றனர். அவர்கள் இந்திய ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரமாக ஒரு துரும்பைக் கூட யாராலும் எடுத்துக் காட்டமுடியாது.
இவர்கள் காலத்தில், 1987 இல் பகல்பூரில் 1000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலையை துணை இராணுவப் படையே முன்நின்று நடத்தியது. கொல்லப்பட்ட விவசாயிகள் காலிஃபிளவர் வயல்களில் புதைக்கப்பட்டனர்.

92 பம்பாய் படுகொலையின் குற்றவாளிகளாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பட்டியலிட்ட போலீசார் பதவிஉயர்வு பெற்றிருக்கின்றனர். முதல் குற்றவாளி தாக்கரே இன்னமும் மும்பையை ஆண்டு கொண்டிருக்கின்றான்.
2002 குஜராத் இனப்படுகொலையின் நேரடி ஒளிபரப்பை உலகமே கண்டது. அதன் பின்னும் மோடி முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டான். தெகல்கா ஏடு பதிவு செய்த குற்றவாளிகளின் வாக்குமூலம் நீதிமன்றங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றது.

காங்கிரசு முதல் மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகள் யாரும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக எதுவும் செய்ததில்லை. மாறாக குற்றவாளிகளைப் பாதுகாத்திருக்கின்றார்கள்.
அதே நேரத்தில் கோத்ரா ரயில்பெட்டி எரிப்பையொட்டிய பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட முசுலீம்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். குஜராத்தின் மக்கள் தொகையில் முசுலீம்களின் சதவீதம் ஒன்பதுதான். ஆனால் கைதிகளில் 25 சதவீதம் பேர் முசுலீம்கள்.

மும்பைக் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட முசுலீம்களில் எண்பது சதவீதம் பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் மும்பை கலவர வழக்குகளில் 0.8 சதவீதம் பேருக்குக் கூட தண்டனை கிடைக்கவில்லை. "குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவன் இந்த நாட்டின் மதிப்பிற்குரிய குடிமகன்; ஆனால் குண்டு வைப்பவர்கள் தேசத்திற்கு எதிராகப் போர் தொடுப்பவர்கள்'' என்று அவுட்லுக் வார ஏட்டில் திமிராக எழுதுகின்றார் பா.ஜ.க சார்பு பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா.

இந்து மதவெறியர்கள் தாங்கள் நடத்தும் கலவரங்கள் அனைத்தையும், இந்துக்களின் பதிலடி நடவடிக்கைகளாகத்தான் சித்தரிக்கின்றனர். இது அவர்களுடைய வழக்கமான கோயபல்ஸ் உத்தி. மும்பை ராதாபாய் சால் பகுதியில் இந்துக்கள் எரிப்பு, கோத்ராவில் ரயில்பெட்டி எரிப்பு, ஒரிசாவில் விசுவஇந்து பரிசத் தலைவர் லட்சுமாணந்தா சரஸ்வதி கொலை என்று ஒவ்வொரு கலவரத்துக்கும் ஒரு முகாந்திரத்தைக் காட்டுகின்றார்கள்.

ஒரிசா கலவரம் என்பது பொறுமையிழந்த இந்துக்கள் கொடுத்த பதிலடி என்கிறார் பா.ஜ.க தலைவர் இல. கணேசன். ஆனால் குஜராத் படுகொலைக்கு இந்தியன் முஜாகிதீன்கள் "பதிலடி' கொடுக்கும்போது மட்டும் அது பயங்கரவாதமாகி விடுகின்றது.

" வி.இ.பரிசத் தலைவரைக் கொன்றது நாங்கள்தான்'' என்று ஒரிசாவில் மாவோயிஸ்ட்டுகள் அறிவித்தாலும் "கிறித்தவர்கள்தான் அந்தக் கொலையைச் செய்தார்கள்' என்று கூறி "பதிலடி' கொடுக்கின்றது இந்து மதவெறிக் கும்பல். இப்படியொரு முகாந்திரம் கிடைக்கவோ, அல்லது முகாந்திரத்தை உருவாக்கினால் அடுத்தகணமே தாக்குதல் தொடுக்கவோ தயாரான ஒரு படுகொலை எந்திரம் அவர்களால் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் படுகொலை எந்திரத்தின் அடிப்படை இந்துப் பெரும்பான்மையின் பொதுக்கருத்தாக இருக்கிறது.
பார்ப்பனியத்தால் இந்து என்ற மாயையில் அடிமைப்படுத்தப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களை திரட்டுவதுதான் இதனை முறியடிப்பதற்கான ஒரே வழி. மற்றபடி அப்பாவி மக்களைக் கொல்லும் குண்டுவெடிப்புக்கள் எதிரிக்குத்தான் பயன்படும்.

சமீபத்திய குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்தியன் முஜாஹிதீன்களின் கூற்றில் உண்øமையிருந்தாலும் அதாவது இந்து மதவெறியர்களை இந்தியா தண்டிக்கவில்லை போன்ற இந்த வழிமுறை பார்ப்பன பாசிசத்தைத்தான் வலுப்படுத்தும். அவர்களுடைய குண்டுகள் கொல்லப்படுபவன் இந்துவா, முசுலீமா என்று மதம் பார்க்கவில்லையே தவிர வர்க்கம் பார்த்துத்தான் கொன்றிருக்கின்றன. இதுவரையிலும் மதவெறிக்குப் பலியாகாத ஏழை எளிய மக்களை இத்தகைய குண்டுவெடிப்புகள் மிகச்சுலபமாக இந்து மதவெறியர்களின் பால் சேர்த்து விடும்.

இந்து மதவெறியர்களோ உழைக்கும் மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் தமது இலக்கில் குறிவைத்துச் செயல்படுகின்றார்கள். ஒரிசாவில் பழங்குடி மக்களுக்கும் அதில் ஒரு பிரிவான தலித் பழங்குடி மக்களுக்கும் உள்ள சமூக, பொருளாதார மற்றும் இட ஒதுக்கீடு போன்ற முரண்பாடுகளை மதரீதியான பிளவாக இந்து மதவெறியர்கள் மாற்றியிருக்கின்றார்கள். இப்படி இரண்டு வகையிலும் பா.ஜ.க ஆதாயமடைந்திருக்கின்றது.

இந்து மதவெறியை எதிர்க்கும் மதச்சார்பற்ற சக்திகளையும் இத்தகைய குண்டுவெடிப்புகள் பலவீனமாக்குகின்றன. ஆத்திரம் மட்டுமே இந்த வழியை நியாயப்படுத்தி விடாது. குண்டு வெடிப்புகளையும் அதன் பயங்கரவாதத்தையும் பல இசுலாமிய அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. ஆனால் கிறித்தவர் மீதான தாக்குதலை எந்த இந்துமதத் தலைவரும் கண்டிக்கவில்லை.

மாறாக நியாயப்படுத்துகின்றார்கள். ஏனென்றால் கருத்துரீதியாக அவர்கள் தாக்குதல் நிலையில் இருக்கிறார்கள். இதனை முறியடிக்க இந்து மதவெறியர்களின் கலவரங்களுக்கு மவுன சாட்சியாக அங்கீகாரம் கொடுக்கும் இந்துப் பெரும்பான்மையை கருத்துரீதியாகப் போராடி வெல்வது ஒன்றுதான் வழி.

மஹாராஸ்ட்ரா நவநிர்மன் சேனா அமைப்பி்ன் இனவெறி செயல்களுக்கு USF கண்டனம்.

தேர்வு எழுதிய மாணவர்கள் மீது தாக்குதல், மஹாராஸ்ட்ரா நவநிர்மன் சேனா அமைப்பி்ன் இனவெறி செயல்களுக்கு USF யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் கண்டனம்.

மஹாராஸ்ட்ராவில் இன்று (19.10.2008) ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்ட் தேர்வு நடைபெற்றது இதில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர். ராஜ் தாக்கரேயின் மஹாராஸ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற இனவெறி அமைப்பு இதற்கு எதிர்ப்பு தெறிவித்தது.இந்த இனவெறி அமைப்பின் இடையூருகளுக்கு மத்தியிலும் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் இன்று காலை திட்டமிட்டபடி நடத்த ஆரம்பித்தது மத்திய ரயில்வே துறை.

இதில் ஆத்திரமடைந்த மஹாராஸ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற இனவெறி அமைப்பினர் மஹாராஸ்ட்டிராவை சேர்ந்தவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று முழக்கமிட்டவாரே தேர்வெழுதிய மாணவர்கள் மீது பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். மும்பை , தானே, அந்தேரி, டொம்பிவ்லி, நல்ல கோப்ரா, ஸோலாப்பூர் ஆகிய மையங்களில் தேர்வெழுதிக் கொண்டிருந்த வ்ட இந்திய மாணவர்கள் மீது மஹாராஸ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற இனவெறி அமைப்பினர் தாக்குதல் நடத்தி கேள்வித்தாள்களை கிழித்தெறிந்து ஓட, ஓட விரட்யுள்ளனர்.

இனவெறிகொண்டு மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி தேர்வை நிறுத்திய ராஜ்தாக்கரேயின் மஹாராஸ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற இனவெறி அமைப்பின் இந்த ஈனச் செயலை யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் வண்மையாக கண்டிக்கிறது. மாணவர்களின் எதிர்கால வாழ்வை பாழடிக்கும் வகையிலும், மாணவர் சமுதாயத்திற்கு எதிராகவும் அன்று சிவசேனா செயல்பட்டது. 2003ம் ஆன்டு நவம்பரில் ராஜ்தாக்கரே என்ற இனவெறியன்தான் அதை முன்னின்று நடத்தஜச் சென்றான். இன்று மஹாராஸ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற இனவெறி அமைப்பின் பெயரில் அதை தொடர்கின்றான்.

மாணவர்களுக்கு எதிரான இந்த இனவெறிப்போக்கை மத்திய, மாநில அரசுகள் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். RRB Group IV தேர்வை மீண்டும் நடத்தி பாதிக்கப் பட்ட மாணவர்கள் பயன்பெற உடன் ஆவன செய்யுமாறு USF கேட்டுக்கொள்கின்றது.

இந்தியக் கலாச்சாரத்திற்கும் , பன்முகத் தன்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், தேச ஒற்றுமைக்கும், எதிராக செயல்பட்டு வரும் ராஜ்தாக்கரே மீதும் , மஹாராஸ்ட்ரா நவநிர்மான் சேனா (MNS) என்ற இனவெறி அமைப்பின் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து இவர்களை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என USF கேட்டுக் கொள்கின்றது. இனவெறி சக்திகளுக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் பலியாகிவிடக் கூடாது என்று USF கேட்டுக் கொள்கிறது.
இவன்
யுனைட்ட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF)

Sunday, October 19, 2008

சிங்கள பேரினவாதிகளின் அரச பயங்கரவாதத்தை முறியடிக்க போராடுவோம்

இது ஒரு மீழ் பதிவு. தமிழ் இனப்படுகொலைகளை நடத்தி வரும் சிங்கள தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களையும், தளவாடங்களையும் வாரி வழங்கும் இந்திய அரசின் மானங்கெட்ட வெளியுரவுக் கொள்கையை வண்மையாக கண்டிக்கின்றேன்!! - முகவைத்தமிழன்
சிங்கள தீவிரவாதிகளின் அரச பயங்கரவாதம்
பாகிஸ்தான் வழங்கும் ஆயுதங்களால் கொல்லப்படும் எம் சிசுக்கள்
சிங்கள இனவெறியர்கள் நடத்திய படுகொலைகளை பாரீர் !!
கொல்லப்பட்ட தமிழ் இன சிசுக்கள் !!
இந்திய அரசே சிங்கள தீவிரவாதிகளுக்கு அளிக்கும் ஆதரவை நிறுத்து !!





பரந்தன் - முல்லைத்தீவு சாலையில் வல்லிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா வான்படையின் கிபிர் வானூர்திகள் மேற்கொண்ட கோரக்குண்டு வீச்சில் 59 பள்ளி மாணவிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் 163பேர் வரை படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் 42 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறியமுடிகிறது. செஞ்சோலை வளாகத்தில் இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த முதல் - உதவி பயிற்சி நெறியில் பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 7.00 மணியளவில் இவர்களை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா வான்படையின் கிபிர் குண்டு வீச்சு வானூர்திகள் நடத்தி கொலை வெறித்தாக்குதலில் 50 மாணவிகள் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் அகப்பட்ட அனைவரும் 13 வயது 14 வயது 15 வயதுச் சிறுமிகள் என அறியமுடிகிறது. எமக்கு கிடைத்த தகவல்களின்படி 59பேர் இறந்ததாகவும் 200பேர்வரை காயமடைந்ததாகவும் அறியமுடிந்தது எனினும் சில பிரபலமான ஊடகங்கள் இந்த உண்மை தொகையினை குறைத்து முரன்பாடான தகவல்களை வெளியிடுவதாக அறியமுடிகிறது. தற்போது சார்வதேச தொலைக்காட்சி ரி.ரி.என்கு விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தபடி 163 படுகாயமடைந்த மாணவிகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஆகவே இறப்புகளும் காயமடைந்த சிறுமிகளின் எண்னிக்கையும் அதிகரிக்கும் என்று அறியமுடிகிறது.

நன்றி : நிதர்சனம்




சிதறடிக்கப்பட்ட எம் இன மொட்டுக்கள்



தமிழக முதல்வர் அவர்களே!!

சிதறடிக்கப்பட்டு கிடக்கும் உம் இனப்பிஞ்சுகளின் குருதி உம் மனதை உருக்கவில்லையா ?

உத்தரவிடுங்கள் ஐயா உம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு !!

இவ்வினப்படுகொலையை வன்மையாக கண்டிக்க சொல்லி மத்திய அரசிற்கு உத்தரவிடுங்களய்யா!!

இச்சிங்கள பேரினவாதிகளின் தீவிரவாதத்திற்கு துனை நிற்கும் மத்திய அரசின் அனைத்து போக்குகளையும் வன்மையாக கண்டியுங்களய்யா!!

இதை நீர் செய்யாவிட்டால் ...வேறு யாரும் செய்வதற்கில்லை !!

தமிழினத் தலைவனான நீர் ஆட்சியிலிருக்கும் போது நம் இனம் அழிவுக்குள்ளாக்கப்படுகின்றதய்யா !!

இதை நீர் கேட்காவிட்டால், யார் கேட்பது??

தமிழினமே பொங்கி எழு ...சிங்கள பேரினவாதிகளின் அரச பயங்கரவாதத்தை முறியடிக்க போராடு!!



நன்றி
முகவைத்தமிழன்

யாழ் மட்டக்களப்பு மூதூர் வெருகல்

Saturday, October 18, 2008

முஸ்லிகளுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.மாபெரும் சதி




ஐக்கிய அமீரகத்திலுள்ள ஷார்ஜா ஒளிபரப்புச் சேவை (Sharjah broadcasting Channeல்) வெளிநாட்டு இலக்கியங்கள் (Foreign Writings) என்ற பெயரில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை நடத்துபவரான ராயத் அமான் என்பவர் இதை வெளிப்படுத்தியுள்ளார்.




டாக்டர். R. சிங் எழுதியுள்ள அனைத்து இந்துக்களும் விழிப்படையுங்கள் (All Hindus Wake up), "இந்துத் தலைவர்களின் உடன்படிக்கைக் குறிப்பேடு" என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் மற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் படியான அந்த 13 கட்டளைகள் என்ன?






1. இஸ்லாமியர்களைக் குறிவைத்து எதிர்மறையான செயல்களை இஸ்ரேல் தொடர்ந்து செய்து வருவதால் அந்நாட்டை இந்துக்கள் மிகவும் நேசமுடைய ஒரு நாடாக கருதவேண்டும்.






2. இயன்றவரையிலான தீய ஒழுக்கங்களையும், நெறிகளையும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே பரப்பிட வகை செய்ய வேண்டும்.






3. ஹிந்து கோயில்கள் இயன்றவரை அனைத்து இடங்களிலும் நிறுவப்படவேண்டும். ராமரின் உருவச் சிலைகள் பணியிடங்களில் வைக்கப்படல் அவசியம்.






4. இஸ்லாத்திற்கு எதிரான கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படவேண்டும்.






5. இஸ்லாமிய நாடுகளுக்கும், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையேயும் போதைமருந்துகள் விநியோகமும், விபச்சாரமும் பெருமளவு நடைபெற வழிவகை செய்திட வேண்டும்.






6. முஸ்லிம் சமூகத்தினுள் ஊடுறுவிச் சென்று முஸ்லிம் பெண்களுடன் உறவு கொண்டு கருத்தரிக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஹிந்துவாக பிறக்க வைப்பது மிகவும் வலியுறுத்தப்படுகிறது.






7. ஹிந்துவான நீங்கள் ஒரு மருத்துவராக இருக்கும் பட்சத்தில் முஸ்லிம்களுக்கு கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாக்கிவிட வேண்டும். இயன்றால் பிறவி ஊனமாக்கவும் முயற்சி செய்திடல் வேண்டும்.






8 நீங்கள் ஒரு ஹிந்து நர்ஸ் அல்லது டாக்டராக இருக்கும் பட்சத்தில் பிறந்த முஸ்லிம் குழந்தையின் காதில் ஓம் மந்திரம் ஓதி விட வேண்டும்.






9. நீங்கள் ஒரு இஸ்லாமியரின் கடையில் வேலை செய்தால் இயன்ற வரையில் அங்குள்ள பொருள்களை வீணாக்குவது அவசியம்.






10. முஸ்லிம்களுடன் ஒன்று சேர்ந்து நட்புடன் பழகுவதுபோல் நடித்து, முழு நம்பிக்கைக்கு உள்ளானபின்பு அவர்களின் முதுகில் குத்த வேண்டும்.






11. முடிந்தவரை அனைவரையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விட முயற்சி செய்திட வேண்டும்.






12. முஸ்லிகளின் வீட்டில் நீங்கள் பணிபுரிபவராக இருப்பின் அவர்கள் மனைவி மற்றும் குழந்தைகளை உங்களின் பால் ஈர்த்து உங்களை அவர்களின் மிகுந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும், அன்பிற்குரியவர்களாகவும் வைத்திருப்பது மிக அவசியம்.






13. கறுப்பு நிறக் கயிறை உங்கள் மணிக்கட்டில் கட்டிக் கொள்ளுங்கள்.






இவை அனைத்தும் நீண்டகால திட்டங்கள் வகுத்து தற்போது அமோக விளைச்சலைக் கொய்து வரும் ஆர்.எஸ்.எஸ் தனது தொண்டர்களுக்கு அளித்து வரும் பயிற்சியின் ஒருபகுதி என்பது அனைவரும் அறிந்த உண்மை தான்.




ஆனால் அதனை தற்போது புத்தகவடிவில் அச்சடித்து வெளிப்படையாக வினியோகிக்கும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் வந்திருப்பதற்கு இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமையின்மையும், பிரச்சினையின் வீரியத்தை சமூகம் சரியாக இன்னும் புரிந்து கொள்ளாமையுமே முக்கிய காரணங்களாகும்.




உலகளாவிய அளவில் முஸ்லிம்களை குறிவைத்து உலக வன்சக்திகள் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்,




இஸ்லாமிய நாடுகளில் பணிபுரிந்து தங்களது வருமானத்தை ஈட்டும் பெரும் அளவிலான இந்துக்களிடையில் கூட ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கக் கூடிய இவ்விஷக்கருத்துக்கள் பரப்பப்பட்டு அவர்களுக்கு தொடர்பயிற்சிகள் கொடுக்கப்படுவதை பார்க்கும்பொழுது,




முஸ்லிம் சமுதாயம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதோ என்ற அச்சம் மேலிடுவதை தவிர்க்க இயலவில்லை.




தகவல்:அப்துல்லாஹ்.லால்பேட்டை.com

இந்து வேதங்களில் இஸ்லாம்

இந்து வேதங்களில் இஸ்லாம் பற்றியும்,ஏக அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என அவைகள் கூறும் கூற்றுக்கள் பற்றியும்,நபிகள் கோமான் ஸல் பற்றியும் உள்ள இந்து வேத சமஸ்கிருத மந்திரங்கள் குறித்து...........!
பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் பூரணமாக:
”ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாதசிஷ்ய சாகா ஸமன்விதநிருபஸ்சேவ மஹாதேவமருஸ்தல நிவாஸினம்” (பவிஷ்ய புராணம் 3,3,5-8)இதன் பொருள்:“அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்). அவர் பாலைவனப் பகுதியைச் சேர்ந்தவராக இருப்பார்.”மேலும் அதே புராணத்தில் அந்த ஆசாரியாரின் இனம், தோற்றம்,பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றியும் கூறப்பட்டுள்ளது. ”அவர்கள் ‘கத்னா (லிங்கசேதி) செய்வார்கள், குடுமி வைக்கமாட்டார்கள், தாடி வைத்திருப்பார்கள், மாமிசம் உண்பார்கள், சப்தம் போட்டு (அதான்) அழைப்பார்கள், முஸைல (முஸல்மான்) என அழைக்கப்படுவார்கள்” என்று அது கூறுகிறது (பவிஷ்ய புராணம், 3:25:3) மேலும் காண்க, அதர்ணவேதம் 20வது காணம், ரிக்வேதம், மந்திரம்:5, சூக்தம்:28இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள், திருக்குர்ஆனில்:2:127. இப்ராஹீமும் இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது ”எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினர்).2:128. ”எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”2:129. ”எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும் பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (என்றும் பிரார்த்தித்தார்கள்)இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை, மார்க்கம், சமுதாயம் ஆகியவை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்படடிருந்தது.இறைத்தூதர் மோசே (மூஸா (அலை) அவர்களின் முன்னறிவிப்பு பழைய ஏற்பாட்டில்:”உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணுவார், அவருக்கு செவிகொடுப்பீர்களாக! (உபாகமம்,18:15)”உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்” (உபாகமம், 18:18)புதிய ஏற்பாட்டில்:மோசே (மூஸா (அலை) பிதாக்களை நோக்கி, உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார், அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்காளக. (அப்போஸ்தலர்,3:22)நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய புதல்வர் இஸ்ஹாக் (அலை) அவர்களின் பரம்பரையில் தோன்றியவர்களே இஸ்ரவேலர்கள். அவர்களுடைய சகோதரர் இஸ்மாயீல் (அலை) அவர்களது பரம்பரையில் வந்தவரே இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. (இப்னு கஸீர் அடிக் குறிப்பு)இந்து நண்பர்களே,நீங்கள் பின்பற்றப்பட வேண்டிய மார்க்கம் இஸ்லாம்தான்,நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரே தலைவர் நபிகள் நாயகம் மட்டுமே.சிந்தியுங்கள்.அல்லாஹ் நேர்வழி தர போதுமானவன்.இதே போல் பழைய,புதிய ஏற்பாட்டிலும் நபிகள் நாயகம் குறித்து முன் அறிவிப்பு உள்ளதை கிறிஸ்தவ நண்பர்கள் http://egathuvam.blogspot.com என்ற தளத்தில் காணலாம்.

PFI அரசியல் மாநாட்டு அலுவலகம் திறப்பு

PFI அரசியல் மாநாட்டு அலுவலகம் திறப்பு

திறப்பு விழாவில் உரையாற்றும் PFI தலைவர் அபுபக்கர் சாஹிப் அருகில் தலைவர்கள்

வரும் 2009 பிப்ரவரி 13,14,15 ஆகிய தேதிகளில் கேரள மாநிலம் காலிகட்டில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா நடத்த திட்டமிட்டுள்ள தேசிய அரசியல் மாநாட்டின் ஒருங்கினைப்பு கமிட்டி அலுவலக திறப்பு விழா இன்று பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. அபுபக்கர் சாஹிப் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

நடக்கவிருக்கும் இம்மாநாடு பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை இனத்தவர், ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் ரீதியாக பெரும் மாற்றத்திற்குள்ளாக்கி அவர்களை அரசியல் ரீதியாக வலிமை மிக்கவர்களாக மாற்றும். இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய ஆளும் வர்க்கம் இன்று முதலாலித்துவத்தையும், வகுப்புவாத்தையும் பாதுகாக் கூடியதாக மாறிவிட்டது என்றும் நாட்டை ஆளும் மத்திய அரசு சர்வதேச விலை இறக்கத்திற்கு ஏற்ப பெட்ரோலிய பொருட்களின் விலைவாசியை குறைக்கவில்லை என்றும், முஸ்லிம்களின் பெயரில் தீவிரவாதத்தை விதைத்துவரும் சங்பரிவார சக்திகளின் அக்கிரமங்களை கண்டு கொள்ள வில்லை என்றும் தெறிவித்தார்.

நிகழ்ச்சியில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் E.M அப்துல் ரஹ்மான், KFD மாநிலத் தலைவர் டாக்டர் மஹ்பூப் சரீப், தமிழக எம்என்பி தலைவர் முகம்மது அலி ஜின்னா , என்டிஎஃப் மாநிலத் தலைவர் அப்துல் ரஹ்மான் பாக்கவி ஆகியோர் உரையாற்றினர். மாநாட்டு ஒருங்கினைப்பு கமிட்டியின் தலைவர் கே.எம். சரீப் அவர்கள வரவேற்புரை நிகழ்த்தினார், திரு.OMA சலாம் நன்றியுரை வழங்கினார்.

தி.க. இந்து பாசிசத்துக்குக் கிடைத்த இளைய பங்காளி!

தி.க. இந்து பாசிசத்துக்குக் கிடைத்த இளைய பங்காளி!


செப்டம்பர் 5-இல் நடைபெற்ற தி.க. இளைஞரணி மாநாடு, "வேலைவாய்ப்புடன் உற்பத்தியும் கூடிய தொழிற்சாலைகளை ஏராளம் தொடங்குமாறு' அரசை வலியுறுத்தியது. ஆனால், அரசு வேலைகளில் ஆட்குறைப்பு செய்வதற்கென்று அரசால் நியமிக்கப்பட்ட "நிர்வாக சீர்திருத்தக் குழு' இயங்க அதே பெரியார்திடலில் வாடகைக்கு இடம் விட்டிருப்பவரே வீரமணிதான்.
தி.க. மகளிரணியோ "காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் மூக்கு, காதுகளில் நகைகளை மாட்டுவதால் அந்தத் துறைக்கான எடுப்பையும் கம்பீரத்தையும் குலைத்துவிடுவதாக, குறைத்து விடுவதாக அமைவதால் அந்த நிலையிலிருந்து அப்பெண்கள் விடுபடவேண்டும்'' எனத் தீர்மானம் போட்டுள்ளது. கூலிகேட்டுப் போராடினாலோ, மறியல் அறப்போரில் ஈடுபட்டாலோ ஆண்போலீசுக்குச் சற்றும் குறையாமல் பெண்போலீசும் வெறிநாய்கள் போல் உழைக்கும் மக்கள் மீது பாய்ந்து குதறுகின்றது . இந்தக் கொடூர மிருகத்திடம் "எடுப்பையும்' "கம்பீரத்தையும்' யாராவது ரசிக்க முடியுமா? நகைகளைத் துறந்து வந்து அடித்து உதைத்தால் "எடுப்பாக' இருக்கிறது என்று ரசிக்கத்தான் முடியுமா?

பெரியார் தி.க.வினருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள "தளபதி' வீரமணி, நீதிமன்றத்தில் தன்னை "இந்து' என்று குறிப்பட்டுள்ளார். "இந்து என்றால் திருடன்' என விளக்கவுரை கொடுத்துவந்த பெரியார் இயக்கத்திற்கு குழைத்து நாமம் சாத்திய வீரமணியின் விடுதலையோ ""பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதத் துறையில் பலமாக உள்ளதால் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க வேண்டும்''; "காஷ்மீர் எல்லையிலே மைனஸ் டிகிரி இருக்கிற இடத்திலே எதிரி வந்தால் சுடுகிறானே. நம்மவன் யாருக்காக இப்படிப் பாடுபடுகிறான்? இந்த தேசத்திற்காக!'' என்றெல்லாம் எழுதத் தொடங்கியுள்ளது.
ஜம்முகாஷ்மீரை மூன்றாகப் பிரிக்க அத்வானி சொன்ன யோசனைக்கு பக்கமேளம் வாசிக்கும் வகையில் "இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள காஷ்மீர் தனிமாநிலமாவது, மேலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்" என்று எச்சரித்துள்ளது. இந்து தேசியவெறியுடன் கை கோர்க்கும் தி.க.வின் பித்தலாட்டம் மேலும் ஒருபடி போய் "பாரதமாதா'வையும் உயர்த்திப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. தி.க. மாநாட்டை ஒட்டி நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் "2020இல் இந்தியா'' எனும் தலைப்பில் பாரதமாதாவை ஒளிரவைத்து அழகு பார்த்துள்ளனர். பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எங்கெல்லாம் பங்காளிகள் முளைத்து வருகிறார்கள், பாருங்கள்!!

ஆக்கம்: முத்து

நன்றி: புதிய ஜனநாயகம் அக்டோபர் 2008

Friday, October 17, 2008

தனி இட ஒதுக்கீடு வாபஸ் - தவிட்டை தங்கம் என்றவர்கள் தலைமறைவு

இட ஒதுக்கீட்டில் முஸ்லீம்களை மட்டுமே ஏமாற்றமுடியும். சிந்திப்பீர் - செயல்முடிக்க அரசியல் அதிகாரத்தை நோக்கி வாரீர்.

தமிழக அரசு முஸ்லீம்களுக்கும் கிருஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. இதில் போட்டி போட்டுக்கொண்டு யார் பெற்றுத்தந்தது. என்று “தாம்“ “தூம்“ என்று குதித்தனர். துரோகத்திற்கு துணிந்து நின்று நன்றி அறிவிப்பும், கோடிகளை செலவு செய்து பாராட்டு விழாவும் நடத்தினர். பாராம்பரிய நூற்றாண்டு பம்மாத்து பாடுபவர்களோ! இட ஒதுக்கீடு துரோகத்தை வரலாற்று சாதனை என்று கூனி குறுகி கூன்பிறையாய் கொக்கரித்தார்கள். இன்று என்ன பதில் சொல்லப்போகிறார்கள். சுனாமியை விட பயங்கரமான ஒரு தலைமுறையை பாதிக்கும் இட ஒதுக்கீட்டு பித்தலாட்ட சூழ்ச்சியை கிருஸ்துவ பெருமக்கள் புரிந்து கொண்டு போஸ்டர் அடித்து பாராட்டவில்லை. மாறாக புத்தியை தீட்டினார்கள். உயர்கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும், சுழற்சி முறையில் கிருஸ்தவர்கள் முன்பு இருந்ததை விட, அதிகமாக புறக்கணிக்கபடுவதை கண்டு தெளிந்து சூழ்ச்சியின் சூட்சமத்தை புரிந்து முன்பு இருந்த இடஒதுக்கீட்டை தருமாறு தமிழக அரசை வற்புறுத்தினார்கள். தமிழக அரசு கிருஸ்தவர்கள் கோரிக்கையை ஏற்று கொண்டது.

கிருஸ்தவர்கள் தமிழக அரசின் நயவஞ்சக இட ஒதுக்கீட்டை ஏற்று கொள்வதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல, என்பதை நிரூபித்து இருக்கிறார்கள். ஆம் வேகாத பொருளை வெள்ளி தட்டில் வைத்துக்கொடுத்தால் வாங்குவதற்கு நாங்கள் மதி கெட்டவர்கள் அல்ல என்பதை காட்டியிருக்கிறார்கள். கிருஸ்தவர்களின் இந்த இட ஒதுக்கீட்டு புரிதலை ஏற்றுக்கொண்ட முதல்வர் முஸ்லீம்களுக்கு மட்டும் அறிவித்தபடியே தொடரும் என்று அறிவித்துள்ளார். முஸ்லீம் களை தவிர வேறு யாரையும் முட்டாளாக்க முடியாது என்பதை வெளிப்படுத்திருக்கிறார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இடஒதுக்கீடு குளறுபடிகள் சரிசெய்யப்படும் என்றார். இன்றோ! சரிசெய்யப்படாமல் முஸ்லீம்கள் வரவேற்பதாக கூறுகிறார். இரட்டை நாக்கை சுழற்றுவதில் அரசியல் வாதிகள் கைதேர்ந்தவர்கள் என்பதை காட்டியிருக்கிறார்கள்.

பகுத்து பார்க்க கட்டளை பிறப்பித்த திருக்குர்ஆனை பின்பற்றும் முஸ்லீம்களில் சிலர் வாரியத்தை வாங்கியதால் வாய்மூடி இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு பித்தாலாட்டத்தை “ஆம்“ தவிட்டை தங்கம் என்று சொல்லி ஜோடிக்கிறார்கள் சர்வாதிகாரத்தில் மன்னர்களுக்கு ஜால்ரா போடுவதை போன்று ஜனநாயகத்தில் ஜால்ரா போடுகிறார்கள். முட்டாள்கள் முஸ்லீம்களாக இருக்க முடியாது. ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்பவர் மட்டுமே முஸ்லீம்களாக இருக்க முடியும். இளைஞர்களே, ஜமாத்தார்களே, அரசியல் சார்பற்ற அமைப்புகளே, போலிகளின் பொய் வேஷத்தை புரட்டி போட்டிட சமுதாயத்தை இட ஒதுக்கீட்டில் தலைகுனிய வைத்திருக்கும் தற்குறிகளை புறம் தள்ளி புதிய அரசியல் அத்தியாயம் படைக்க இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க துவண்ட சமுதாயத்தை தூக்கி நிறுத்திட முஸ்லீம்களின் முதல் பொது அரசியல் கட்சி (IDMK) ஆர்பரித்து வாரீர் வாரீர்.

இவன்
இந்திய தேசிய மக்கள் கட்சி
தொடர்புக்கு : 9344510369 9443021050 9790318182

கிறிஸ்தவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வாபஸ்! : பிஷப்புகள் கோரிக்கையை ஏற்றது அரசு

சென்னை: கிறிஸ்தவர்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீடு உத்தரவை வாபஸ் பெறுவதாகவும், இஸ்லாமியர்களுக்கு மட்டும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும், முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இதில், வேலைவாய்ப்பில் குறிப்பாக ஆசிரியர் நியமனத்தில் கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர்களுக்கு அதிகளவு இடம் கிடைக்காமல் போனதாக அப்பகுதியினர் அதிருப்தி தெரிவித்தனர்.இது தொடர்பாக முதல்வரிடம் கிறிஸ்தவப் பிரதிநிதிகள் முறையிட்டனர்.

மயிலை பேராயர் சின்னப்பா: இதுகுறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான கமிட்டிக்கு முதல்வர் பரிந்துரைத்திருந்தார். சிறுபான்மை சமூக பிரதிநிதிகளுடன் முதல்வர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.முதல்வர் கருணாநிதியை நேற்று தலைமைச் செயலகத்தில் சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, சி.எஸ்.ஐ., பேராயர் தேவகடாட்சம், காங்கிரஸ் சட்டசபை கொறடா பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தலா 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்த போது உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் அனுமதியிலும், வேலைவாய்ப்பிலும் கிறிஸ்தவர்கள் முன் பெற்ற வாய்ப்புகளை விட மிகக் குறைவாகவே பெற முடிந்துள்ளது. எனவே, கிறிஸ்தவர்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்று, முன்பிருந்தபடியே இட ஒதுக்கீட்டை தொடர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிறிஸ்தவர்களின் இந்த கோரிக்கையைப் பரிசீலித்த பின் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு:

பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க நல்லெண்ணத்துடன் கோரிக்கை வைக்கப்பட்டது. அரசு தனி இட ஒதுக்கீட்டுக்கான அவசரச் சட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கொண்டு வந்தது.இதில், கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புத் துறைகளில் உரிய இடம் கிடைக்காமல் பின்னடைவு ஏற்படக் கூடும் என்ற ஐயப்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

பழைய படியே இட ஒதுக்கீடு : கல்வி, வேலைவாய்ப்புகளில் பின்னடைந்துள்ள முஸ்லிம்களுக்கு இந்த தனி இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கிற ஆதாயத்தை அவர்கள் வரவேற்கின்றனர்.ஆனால், கிறிஸ்தவர்களுக்கு இந்த தனி இட ஒதுக்கீடு முன்பிருந்த வாய்ப்புகளைக் குறைத்துள்ளது. எனவே, பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பழைய படியே இட ஒதுக்கீடு தொடர, அவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவது என்றும், சட்டத்தில் தக்க திருத்தம் மேற்கொள்வது என்றும் அரசு முடிவெடுத்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய சூழ்நிலையைக் கருதி, அவர்களுக்கு மட்டும் இந்த தனி இட ஒதுக்கீடு ஆணையை நடமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

ஐக்கிய அமீரகத்திலும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கமா...?

ஐக்கிய அமீரகத்திலுள்ள ஷார்ஜா ஒளிபரப்புச் சேவை (Sharjah broadcasting Channeல்) வெளிநாட்டு இலக்கியங்கள் (Foreign Writings) என்ற பெயரில் ஒளிபரப்பும் நிகழ்ச்சியை நடத்துபவரான ராயத் அமான் என்பவர் இதை வெளிப்படுத்தியுள்ளார்.

டாக்டர். R. சிங் எழுதியுள்ள அனைத்து இந்துக்களும் விழிப்படையுங்கள் (All Hindus Wake up), "இந்துத் தலைவர்களின் உடன்படிக்கைக் குறிப்பேடு" என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தில் மற்றவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் படியான அந்த 13 கட்டளைகள் என்ன? கீழே படியுங்கள்:

1. இஸ்லாமியர்களைக் குறிவைத்து எதிர்மறையான செயல்களை இஸ்ரேல் தொடர்ந்து செய்து வருவதால் அந்நாட்டை இந்துக்கள் மிகவும் நேசமுடைய ஒரு நாடாக கருதவேண்டும்.

2. இயன்றவரையிலான தீய ஒழுக்கங்களையும், நெறிகளையும் இஸ்லாமிய சமூகத்தினரிடையே பரப்பிட வகை செய்ய வேண்டும்.

3. ஹிந்து கோயில்கள் இயன்றவரை அனைத்து இடங்களிலும் நிறுவப்படவேண்டும். ராமரின் உருவச் சிலைகள் பணியிடங்களில் வைக்கப்படல் அவசியம்.

4. இஸ்லாத்திற்கு எதிரான கூட்டங்கள் தொடர்ச்சியாக நடத்தப்படவேண்டும்.

5. இஸ்லாமிய நாடுகளுக்கும், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையேயும் போதைமருந்துகள் விநியோகமும், விபச்சாரமும் பெருமளவு நடைபெற வழிவகை செய்திட வேண்டும்.

6. முஸ்லிம் சமூகத்தினுள் ஊடுறுவிச் சென்று முஸ்லிம் பெண்களுடன் உறவு கொண்டு கருத்தரிக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஹிந்துவாக பிறக்க வைப்பது மிகவும் வலியுறுத்தப்படுகிறது.

7. ஹிந்துவான நீங்கள் ஒரு மருத்துவராக இருக்கும் பட்சத்தில் முஸ்லிம்களுக்கு கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாக்கிவிட வேண்டும். இயன்றால் பிறவி ஊனமாக்கவும் முயற்சி செய்திடல் வேண்டும்.

8 நீங்கள் ஒரு ஹிந்து நர்ஸ் அல்லது டாக்டராக இருக்கும் பட்சத்தில் பிறந்த முஸ்லிம் குழந்தையின் காதில் ஓம் மந்திரம் ஓதி விட வேண்டும்.

9. நீங்கள் ஒரு இஸ்லாமியரின் கடையில் வேலை செய்தால் இயன்ற வரையில் அங்குள்ள பொருள்களை வீணாக்குவது அவசியம்.

10. முஸ்லிம்களுடன் ஒன்று சேர்ந்து நட்புடன் பழகுவதுபோல் நடித்து, முழு நம்பிக்கைக்கு உள்ளானபின்பு அவர்களின் முதுகில் குத்த வேண்டும்.

11. முடிந்தவரை அனைவரையும் முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விட முயற்சி செய்திட வேண்டும்.

12. முஸ்லிகளின் வீட்டில் நீங்கள் பணிபுரிபவராக இருப்பின் அவர்கள் மனைவி மற்றும் குழந்தைகளை உங்களின் பால் ஈர்த்து உங்களை அவர்களின் மிகுந்த நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாகவும், அன்பிற்குரியவர்களாகவும் வைத்திருப்பது மிக அவசியம்.

13. கறுப்பு நிறக் கயிறை உங்கள் மணிக்கட்டில் கட்டிக் கொள்ளுங்கள்.

இவை அனைத்தும் நீண்டகால திட்டங்கள் வகுத்து தற்போது அமோக விளைச்சலைக் கொய்து வரும் ஆர்.எஸ்.எஸ் தனது தொண்டர்களுக்கு அளித்து வரும் பயிற்சியின் ஒருபகுதி என்பது அனைவரும் அறிந்த உண்மை தான்.

ஆனால் அதனை தற்போது புத்தகவடிவில் அச்சடித்து வெளிப்படையாக வினியோகிக்கும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் வந்திருப்பதற்கு இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமையின்மையும், பிரச்சினையின் வீரியத்தை சமூகம் சரியாக இன்னும் புரிந்து கொள்ளாமையுமே முக்கிய காரணங்களாகும்.

உலகளாவிய அளவில் முஸ்லிம்களை குறிவைத்து உலக வன்சக்திகள் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இஸ்லாமிய நாடுகளில் பணிபுரிந்து தங்களது வருமானத்தை ஈட்டும் பெரும் அளவிலான இந்துக்களிடையில் கூட ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கக் கூடிய இவ்விஷக்கருத்துக்கள் பரப்பப்பட்டு அவர்களுக்கு தொடர்பயிற்சிகள் கொடுக்கப்படுவதை பார்க்கும்பொழுது, முஸ்லிம் சமுதாயம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதோ என்ற அச்சம் மேலிடுவதை தவிர்க்க இயலவில்லை.

Thursday, October 16, 2008

இந்து தீவிரவாத அமைப்புகளைத் தடை செய்ய கோரிக்கை!

விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைத் தடை செய்யுமாறு ஜம்மா மஜித் தலைவர் சையத் அகமத் புகாரி வலியுறுத்தியுள்ளார்.
அண்மைக்காலமாக ஒரிசா மாநிலம் கந்தமாலில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் அவர்கள் குடியிருப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக அகில இந்திய முஸ்லீம் மதத் தலைவர்களின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய புகாரி, சிறுபான்மையினர் மற்றும் முஸ்லீம்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருவதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.
இந்தியா முன்னேற வேண்டும் என்று தாங்கள் விரும்புவதாகவும், ஆனால், சில தீவிரவாத அமைப்பினர் இதனை சீர்குலைக்க முயல்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நாட்டில் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவரும் இந்து தீவிரவாத அமைப்புகளான விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகளை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும் புகார் வலியுறுத்தினார்

தீண்டாமைக் கொடுமை

முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா திருபாம்புரம் ஊராட்சியைச் சேர்ந்த கிராமம் கம்பூர் ஆகும். கம்பூர் கிராமத்தைச் சுற்றி வடக்குவேரி, திருபாம்புரம், வள்ளார் கோவில்பத்து ஆகிய கிராமங்களைச் சுற்றி முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் வாழ்ந்து வருகின் றனர்.
கம்பூர் கிராமம் வடக்குத் தெரு, பள்ளிவாசல் தெரு, மெயின் ரோடு, புதுமனைத் தெரு ஆகிய நான்கு தெருக்களில் மட்டும் சுமார் 150 முஸ்லிம் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கம்பூர் பகுதியை இணைக்க பேரளம் - அன்னியூர் சாலையில் ரூ.69 லட்சத்தில் தார்சாலை போடப்பட்டது. அந்தந்த ஊர் பகுதியில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் திரும்பாம்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ், ரவி, ராமு, பாண்டியன், கலியபெருமாள் ஆகியோர் முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடித்துள்ளனர்.
கம்பூர் முஸ்லிம்கள் வாழும் பகுதி யாக உள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் நம் கிராமத்தை ஆக்கிரமித் தால் நமது கிராமமும் முஸ்லிம் கிராமமாக மாறிவிடும் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை செல்வராஜ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு கிராமத்தைச் சுற்றிலும் பரப்பி, அதன்மூலம் குளிர்காய திட்டமிட்டனர்.
அதன் ஒரு பகுதியாக கம்பூர் என்று பெயரிடப்பட்ட மஞ்சள் நிற அறிவிப்புப் பலகையை செல்வராஜ் தலைமையிலான கும்பல் கடப்பாரை, உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களைக் கொண்டு நாசப்படுத்தியுள்ளது.
பிறகு ``இதனை எந்த துலுக்கன் கேட்டாலும் வெட்டு’’ என்று கூறி அந்த அறிவிப்புப் பலகையை அங்கிருந்து அகற்றி ஊருக்குள் எடுத்துச் சென்றது.
பொறுமை காத்த முஸ்லிம் இளைஞர் களும் ஜமாஅத்தார்களும், கம்பூர் பெயர்ப் பலகை வைப்பதற்கு ஊராட்சி மன்றத் தலைவரிடம் அனுமதி பெற்று மீண்டும் பெயர்ப் பலகையை வைத்தனர். ஆனால் இரவோடு இரவாக அதுவும் பிடுங்கப் பட்டுள்ளது.
இதையடுத்து ஜமாஅத் தலைவர் சகாபுதீன், சம்பந்தப்பட்டவர்களிடம் ``ஏன் இப்படி செய்கிறீர்கள்?’’
என கேட்க, “வாயை மூடிக்கொண்டு போய்விடு. இல்லையென்றால் உன்னையும் உங்க ளது ஊரையும் தொலைத்து விடுவோம்’’ என்று மிரட்டியுள்ளனர்.
இச்செய்தியை அறிந்த ஜமாஅத்தார்களும், இளைஞர் கள் வெகுண்டெழுந்தனர். ஆன