Friday, October 31, 2008

MNP - PFI தேசிய அரசியல் மாநாடு

தேசிய அரசியல் மாநாடு
சென்னையில் பிரச்சணிர துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம்
பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர் இ.எம். அப்துர் ரஹ்மான் பேட்டி


எதிர்வரும் 13, 14, 15 பிப்ரவரி 2009ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அரசியல் மாநாட்டை கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் நடத்தவுள்ளது. இதன் நோக்கம் ""ஆக்கப்பூர்வமான நேரடி அரசியலின் மூலம் முழுமையாக எல்லாத் துறையிலும் சமுதாயத்தை பலப்படுத்த வேண்டும்'' என்பதுதான்.
பலமான அரசியலமைப்பு மற்றும் சட்ட அடித்தளத்தைக் கொண்ட மிகச்சிறந்த ஜனநாயகத்தைக் கொண்டிருக்கும் இந்தியர்களாகிய நாம் அதிர்ஷ்டசாலிகள்.
ஜனநாயகம் என்பது பெரும்பான்மை மற்றவர்கள் மீது ஆட்சி செய்யும் என்று பொருள் கொள்ள முடியாது. அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவத்துடன் எல்லாக் குடிமக்களுக்கும் சமநீதி வழங்கக் கூடியதுதான் நமது அரசியல் அமைப்பு.

கடந்த அறுபது ஆண்டுகளாக பெரும் தொழில் நிறுவனக் குழுமங்கள் மற்றும் பாரம்பரிய உயர்சாதியினணிரக் கொண்டு ஆளும் அதிகணிர வர்க்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆளும் வர்க்கம் ஜனநாயகத்திலுள்ள பல்வேறு துறைகளை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு கீழுள்ள (அடிமைகள் போல கிடக்கும்) மக்களின் நியாயமான கோரிக்கைகளை காலில் போட்டு மிதித்து தங்களுடைய ஆளும் மேல்ஜாதி வர்க்கத்திற்காக மட்டும் சேவகம் புரிந்து வருகின்றது.

இவர்களின் அரசியல் சித்து விளையாட்டுகளுக்கு பலியாகக் கூடியவர்கள் ஏழைகள், கிரணிமவாசிகள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள்,சிறுபான்மையினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள். சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலத்தில் சோஷலிசம் நமது அரசியல் கட்சிகளின் கோஷமாக இருந்தது. இன்று அது காணாமல் போனது.

மேற்கத்திய உலகில் சிறிது சிறிதாக நொறுங்கிக் கொண்டிருக்கும் முதலாளித்துவம், வளர்ச்சி என்ற போர்வையில் நம்மிடம் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. விவசாய உற்பத்தி, வறுமை ஒழிப்பு, சம பங்கீடு போன்ற அடிப்படை பிரச்சினைகள் புறந்தள்ளப்படுகிறது.

ஜனநாயக வழிமுறையின் மூலமே இந்துத்துவ ஃபாசிஸம் நாட்டின் நிர்வாகத்தைக் கைப்பற்றியுள்ளது. சட்டம் ஒழுங்கு நிர்வாகம் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒடுக்குகிறோம் என்ற பெயரில் பல முஸ்லிம்களை சட்டவிரோத கஸ்டடியில் விசாரணை இல்லாமலும், பிணையில் விடுதலை செய்யாமலும் போலி என்கவுண்டர் மூலமாகவும் குறி வைத்து வருகிறது.

மண்டல் கமிஷன் அறிக்கைக்குப் பின் ஒரு சில பிற்பட்ட வகுப்பினணிரச் சேர்ந்த சாதியினர் நாட்டின் ஒரு சில பகுதிகளில் தேர்தல் அரசியலில் முன்னேற்றமடைந்துள்ளனர். எனினும் மதவாதிகள், ஆதிக்க வாதிகள் சட்டமியற்றும் சபைகளில் தொடர்ந்து கோலோச்சி வருகின்றனர். மற்ற சமூக மதப் பிரிவிக்ணிர ஒப்பிடும் போது முஸ்லிம்கள் என்ற இந்த வகுப்பினர் மட்டும் அரசியலில் மிகவும் பின்தங்கியுள்ளனர்.

இந்த பின்னடைவிற்கான காரணம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படுவது, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தொகுதியை ரிசர்வ் தொகுதியாக அறிவித்தல் மற்றும் ஹிந்துக்களுடைய ஓட்டுக்கள் கிடைக்காமல் எதிர்ப்புக்குள்ளாகலாம் என்று கருதி அரசியல் கட்சிகள் முஸ்லிம் வேட்பாளர்களை களத்தில் நிறுத்தத் தயங்குகின்றன. இந்தச் சூழலில், காலங்காலமாக ஓரங்கட்டப்பட்ட சமுதாயம் தங்களுடைய உடனடி (உள்ளூர்) எதிரிகளைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு முறையும் தங்களது ஆதரவு மாற்றும் போக்கைக் கைவிட வேண்டும். இந்த அணுகுமுறை, நாட்டின் கொள்கை முடிவுகளில் முடிவெடுக்கும்போது தங்களது உரிமைகளை தக்க வைக்கவும் (தங்களிடமுள்ள எல்லா வகையான) வளங்களையும் முறையாகப் பங்கீடு செய்து பயன்படுத்துவதிலும் பயனளிக்கிறது.

இந்த பிற்படுத்தப்பட்ட சக்திகளை அரசியல் ரீதியாக ஒன்றுபடுத்தி தங்களுக்குரிய அரசியல் உரிமையை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் மற்றும் இதர சமுதாயத்தினர் இதுவணிர கொடுத்து வந்த நிர்ப்பந்த அரசியல் (Pressure Group Politics) அவர்களின் அரசியல் வெறுமைக்கு தீர்வாகாது. ஓரங்கட்டப்பட்ட வகுப்பினர் அரசியல் சக்தியும், போதிய பிரதிநிதித்துவமும் பெற தேவையான வழிமுறைகளைப் பற்றி விவாதித்து தேவையான தீர்வுகளை செயல்படுத்த இருக்கும் நிகழ்ச்சிதான் தேசிய அரசியல் மாநாடு.

முதல் இரண்டு நாட்கள், நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சிறப்பு விருந்தினர்கள், அறிஞர்கள் மேற்கூரிய கருப் பொருளில் பல்வேறு கோணத்தில் விவாதிப்பர். ""அரசியலில் சக்தி பெறுதல்: மாற்று வழிக்கான தேடல்'' ""தீவிரவாத எதிர்ப்பு மாநாடு'' என்ற தலைப்புகளில் கருத்தரங்கங்கள் நடைபெறும்.

இதே கருத்தை நாடு முழுவதும் பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய அரசியல் மாநாட்டின் பிரச்சணிர துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் சென்னையில் நவம்பர் 2ம் தேதி நடைபெறுகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் சேர்மன் இ. அபூ பக்கர் அவர்கள் பொதுக்கூட்டம் வாயிலாக பிரச்சாரத்தைத் துவக்கி வைக்கிறார்கள். இந்நிகழ்ச்சியில் மனித நீதிப் பாசறையின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, துணைத் தலைவர் ஷேக்
முஹம்மது தெஹ்லான் பாகவி, கே.எஃப்.டி.யின் தலைவர் டாக்டர் மஹபூப் ஷரீஃப், மூத்த வழக்றிஞர் பவானி. பா. மோகன், வழக்கறிஞர் எம்.ஜி.கே. நிஜாமுத்தீன் Ex. M.L.A, மௌலானா மன்சூர் காஷிஃபி, முஸ்லிம் தொண்டு இயக்க செயலாளர் முஹம்மது ஹனீஃபா ஆகியோர் பொதுக் கூட்டத்தில் உணிரயாற்றுகின்றனர் என்று பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர்
இ.எம். அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். பேட்டியின் போது எம்.என்.பி.யின் தலைவர் முஹம்மது அலி ஜின்னா, செயலாளர் ஃபக்ருத்தீன், செயற்குழு உறுப்பினர்கள் செய்யது இப்றாஹீம் மற்றும் யூஸுஃப் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்திகள் : இ.எம். அப்துர் ரஹ்மான்
பொதுச் செயளாலர் - PFI

இந்துத்துவ பயங்கரவாதம் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகையில் செயல்பட்டு வருகின்றன.


இந்துத்துவ பயங்கரவாதம் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகையில் செயல்பட்டு வருகின்றன.

இவர்கள் திருமணமும் செய்து கொள்வதில்லை. (வாஜ்பேயி, ராமகோபாலன் போன்றோர் முழு நேரப் பிரச்சாரகர் ஆவர்). பஜ்ரங்தளம் இந்துத்துவத்தின் மற்றொரு கோரமுகமாகும். பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் முதலிய சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது இதன் முக்கிய வேலையாகும்.

இந்துத்துவ பயங்கரவாதமும் சிறுபான்மையினரின் அணுகுமுறையும்...

-பேரா. எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ்

அரசியல் சாசனச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை

தங்களது இந்துத்துவக் கோட் பாட்டை நிலைநாட்டுவதற்குப் பாடுபடாதவர்களை கோல்வால்கர் துரோகிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கோல்வால்கரும் அவரைச் சார்ந்த வர்களும் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் எவ்விதப் பங்கும் கொள்ளவில்லை. இது மட்டுமல்ல, வெள்ளைக்கார அரசின் சட்டங்களை மதித்து அதற்குக் கட்டுப் பட்டு நடப்பதாக எழுதிக் கொடுத்தவர் தான் கோல்வால்கர்.

இப்படித் துரோகம் செய்தவர்கள் நமது நாட்டின் அரசியல் சாசனச் சட்டத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. அரசியல் சாசனச் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது கோல்வால்கர் பின் வருமாறு எழுதுகிறார்:

துரதிருஷ்டவசமாக நமது நாட்டின் அரசியல் சாசனச் சட்டம் மண்ணின் மைந்தர்களையும் ஆக்கிரமிப்பாளர் களையும் சமமாக்கியுள்ளது. எல்லோருக் கும் அது சம உரிமை அளித்துள்ளது. ஒரு வீட்டில் தனது பிள்ளைகளுக்கும் திருட வந்தவர்களுக்கும் இடையே ஒரு மனிதன் சமமான உரிமையை அளித்து தனது சொத்தையும் அவர்கள் அனை வருக்கும் பகிர்ந்தளிப்பது போன்று அரசியல் சாசனச் சட்டத்தின் இந்த நிலைப்பாடு உள்ளது’’.

இந்துத்துவக் கோட்பாட்டைப் பிரதி பலித்துச் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். ஒரு பாசிச அமைப்பு என்பதில் சந்தேகம் இல்லை என்பதை கோல்வால்கரின் கருத்துக்களும் அதனை நடைமுறைப் படுத்தும் வகையில் சங்பரிவார அமைப்புகளும் செயல்படுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹிட்லரினால் தான் மிகவும் கவரப்பட்டதாக கோல்வால்கர் வெளிப்படையாகவே கூறியுள்ளார். நமது நாட்டில் தன்னிகரில்லாத வகையில் சமூகச் சேவை செய்யும் கிறிஸ்தவர்கள் பற்றி கோல்வால்கர் எழுதியுள்ள பின்வரும் கருத்துகள் அவரது பாசிச உணர்வுகளைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

மேலோட்டமாகப் பார்க்கும் ஒருவருக்கு கிறிஸ்தவர்கள் தீங்கிழைக்காதவர்கள் போலவும், இரக்கத்தின் வடிவமாகவும், மனிதகுலத்தின் மீது தீராத அன்பு கொண்டவர்கள் போன்றும் காட்சி அளிக்கிறார்கள்.

அவர்களது பேச்சுகளில் சேவை, மனிதர்களை இரட்சித்தல் போன்ற வார்த்தைகள் நிரம்பி இருக்கின்றன. எல்லாம் வல்லவனாகிய இறைவனால் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்காகவே இவர்கள் பிரத்யேகமாக அனுப்பப்பட்டுள்ளது போன்று அவர்கள் தோற்றம் அளிக்கிறார்கள்.

அவர்கள் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அநாதை நிலையங்கள் மற்றும் மருத்துவமனை களை நடத்துகிறார்கள். நம் நாட்டு மக்கள் சாமானியர்கள் என்பதால் இதனால் கவரப்பட்டு விடுகிறார்கள். ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளுக் காக கோடிக்கணக்கான ரூபாய்களை கிறிஸ்தவர்கள் கொட்டுவதற்கான உண்மை நோக்கம் என்ன?

நமது நாட்டில் வாழும் கிறிஸ்தவ மக்களின் செயற்பாடுகள் இப்படித்தான் உள்ளன. நமது நாட்டின் சமூக மதக் கட்டமைப்பைச் சிதைப்பது மட்டும் அவர்கள் நோக்கமல்ல, பல்வேறு பகுதிகளில் - முடிந்தால் நாடு முழுவதும் தமது அரசியல் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கும் அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். ஏசு நாதரின் தெய்வீக இறக்கையின் கீழ் மனிதகுலத்திற்கிடையே சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்துகிறோம் என்ற கவர்ச்சிகரமான போர்வையில் அவர்கள் செல்லுமிடமெல்லாம் இதனைச் செய்து வருகிறார்கள்’’. என எழுதியுள்ளார்

மதமாற்றம் பற்றி...

தன்னலமற்ற முறையில் சேவை செய்து வந்த பாஸ்டர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் போன்ற சமூக சேவகர்கள் ஈவிரக்கமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்படுவதற்கான பயங்கரவாதத்தின் ஊற்றாக கோல்வால்கரின் இந்த எழுத்துக்கள் அமைந்துள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களும் கண்ணியத்துடன் வாழ வேண்டுமெனில் இந்து கலாச்சாரத்தையும் மதக்கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ள கோல் வால்கர், மதம் மாற்றம் பற்றி எழுதியுள்ள பின்வரும் கருத்துகளும் அவரது பாசிச சிந்தனைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

இந்துக்கள் மற்ற மதங்களுக்கு மாறுவது அவர்கள் நாட்டின் மேல் கொண்ட மாசற்ற விசுவாசத்தைச் சிதைத்து விடுகின்றது. அது நாட்டின் பாதுகாப்பிற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. எனவே மதமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் அவசியமாகும். ஒரு தனி நபர் மதம் மாறுவது என்பது அவர் பல்வேறு தத்துவங்களை ஆய்வு செய்த பின் நடைபெறுவது அல்ல.

வறுமை, எழுத்தறிவின்மை மற்றும் அறியாமையைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் ஆசைகளை ஊட்டித்தான் மதமாற்றம் நடைபெறுகின்றது. உண்மையான மன மாற்றத்தினால் மதமாற்றம் நடை பெறுகின்றது என்று கூற இயலாது. இந்த அநீதியான நடவடிக்கையைத் தடை செய்வதுதான் சரியான நட வடிக்கையாக இருக்கும். அறியாமை மற்றும் வறுமையில் வாடும் நமது சகோதரர்களைப் பாதுகாக்க மத மாற்றத்தைத் தடைசெய்வது நமது கடமையாகும்’’.

சாதியத்தை போற்றும் கோல்வால்கர்

இந்துத்துவத்தின் சாதிய கட்டமைப்பினால் சிக்குண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைப் பெறு வதற்கு இஸ்லாத்திற்கோ கிறிஸ்தவத்திற்கோ மதம் மாறினால் இந்துத்துவம் அதனை வேடிக்கை பார்க் கக் கூடாது என்பதை கோல்வால்கரின் இந்தக் கூற்றிலிருந்து நாம் அறிந்துகொள்ள முடிகின்றது. சாதிய கட்டமைப்பை தனது எழுத்துக்களில் இந்துத்துவத்தின் பிதாமகன் கோல்வால்கர் புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் எழுதுகிறார்:

பண்டைய காலத்திலும் சாதிகள் இருந்தன. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நீடித்து நிலைத்த நமது சிறப்புமிகு தொன்மையான தேச வரலாறு முழுவதும் சாதிகள் இருந்துள்ளன. நமது சமுதாயத்தின் ஒற்றுமையையோ அல்லது நமது நாட்டின் முன்னேற்றத்தையோ தடுக்கும் வகை யில் சாதிய அமைப்பு செயல்பட்டது என்று எங்கும் எந்தவொரு நிகழ்வையும் நாம் காட்ட முடியாது. உண்மையில் அது சமூக ஒற்றுமைக்கு வலு சேர்த்துள்ளது.

திட்டமிட்டு பொய்களைப் பரப்பி மக்களை நம்ப வைப்பது தான் பாசிசத்தின் வெளிப்பாடு. அதைத்தான் கோல்வால்கரின் இந்தக் கூற்றில் நாம் காண முடிகிறது.

இந்துத்துவ சாதிய அமைப்பின் கொடுங்கோன்மைக்கு எதிராகத்தான் பௌத்தமும் சமணமும் தோன்றின என்பதை கோல்வால்கர் எவ்வாறு திட்டமிட்டு மறைத்துள்ளார் என்பதை நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

இதேபோல் தமிழகத்தில் மீனாட்சிபுரத்தில் தலித் மக்கள் இஸ்லாத்தைத் தழுவியது இந்துத்துவத்திற்கு ஒரு பேரிடியாக அமைந்தது.

ஆனால் அதே நேரத்தில் சமீபகால இந்தியாவில் இந்துத்துவம் தனது முழு அகோர வடிவத்தைக் காட்டுவதற்கும் அது ஒரு வாய்ப்பாக அமைந்து விட்டது.

ராமர் கோயில் பிரச்சனையை ஒரு தேசிய பிரச்சனையாக்கி முஸ்லிம்களுக்கு எதிராக நாடு முழுவதும் ஒரு வெறுப்புணர்வை தூண்டி - கலவரத்தைத் தூண்டி தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள இந்துத்துவம் எப்படியெல்லாம் செயல்பட்டது என்பது நாம் அறிந்த வரலாறு. இதே அடிப்படையில்தான் சமீபத்திய ஒரிசா நிகழ்வுகளையும் நாம் காணவேண்டும்.

ஒரிசாவில் பழங்குடி மக்கள் கல்வி கற்று தமது சொந்தக் காலில் நிற்பதற்கான முயற்சிகளை கிறிஸ்தவர்கள் செய்தால், அது இந்துத்துவம் பேணிப் பாதுகாக்க நினைக்கும் சாதிய கட்டமைப்பிற்கு எதிராக அமைந்து விடும். எனவேதான் கட்டாய மதமாற்றம் என்ற ஒரு மாயை உருவாக்கப்பட்டது மட்டுமில்லாமல் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளும் தேவாலயங்களும் ஒரிசா மட்டுமின்றி தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன.

சங்பரிவாரின் அமைப்பு முறை

பாசிச அமைப்புகள் போன்ற கட்டமைப்பைக் கொண்டதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்த அமைப்பின் தலைவர் `சரசங் சலாக்என்று அழைக்கப்படுகிறார். காரியக்காரி சமிதி (செயற்வீரர்கள் குழு) என்று அழைக்கப்படும் ஒரு உயர்மட்டக் குழுவை அவர் நியமிக்கிறார். இது அவருக்கு உறு துணையாக இருக்கிறது.

பிரதேஷ் பராமுக் என்ற பெயரில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைவர் உள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படை கிளை ஷாகா என்று அழைக்கப்படுகின்றது. நாடு முழுவதும் 60,000 ஷாகாக்கள் செயல்படுகின்றன.

இவை காலை அல்லது மாலை தினந்தோறும் செயல்படுகின்றன. காலையில் செயற்படும் ஷாகாக்கள் வணிகர்களுக்கும் மாலையில் செயற்படுபவை மாணவர் களுக்கும் அலுவலக ஊழியர்களுக்கும் உரியதாக உள்ளன. இந்த ஷாகாக்கள் பொது இடங்களில் செயற்படுகின்றன. இந்த ஷாகாக்களில் உறுப்பினர்களாகச் சேருபவர்கள் சுயம் சேவக் என்று அழைக் கப்படுகிறார்கள். இவர்களில் குழுத் தலைவர் முக்கிய சிக்சாக் (தலைமை ஆசிரியர்) என்று அழைக்கப்படுகிறார்.

சுயம்சேவக்குகளில் துடிப்பானவர்கள் அதிகாரிகள் பயிற்சி முகாமிற்கு அழைக்கப்படுகிறார்கள். மிகுந்த அர்ப்பணிப்பும் உத்வேகமும் உள்ளவர்கள் பிரச்சாரக் (பிரச்சாரர்களாக) முழு நேரப் பணியாளர்களாகத் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவர்கள் வாழ்நாள் முழுவதும் சங் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.

இவர்கள் திருமணமும் செய்து கொள்வதில்லை. (வாஜ்பேயி, ராமகோபாலன் போன்றோர் முழு நேரப் பிரச்சாரகர் ஆவர்). இவர்கள் பிரச்சாரகர்களாக ஆனவுடன் தங்கள் குடும்பத்தினருடனான உறவையும் துண்டித்துக் கொள்கிறார்கள். சங் பணிகளுக்காக இவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு அனுப்பப்படுகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அளிக்கும் பயிற்சி இரண்டு வகைப்படும். ஒன்று உடல்கூறு ரீதியான பயிற்சி. இதில் உடல் பயிற்சிகள் விளையாட்டுகள் அடங்கும், மற்றொன்று பவுதிக் (சிந்தனை ரீதியான பயிற்சி). இந்த சிந்தனை ரீதியான பயிற்சியில் தான் சுயம்சேவக்குகள் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்.
தனது இந்துத்துவ பாசிச குறிக்கோளை செயல்படுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் பல முகங்களைத் தரித்துள்ளது.

அரசியல் அரங்கில் முதலில் அது உருவாக்கிய கட்சி பாரதீய ஜனசங். இதன் தலைவராக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சியாம பிரசாத் முகர்ஜியை கோல்வால்கர் நியமித்தார். இவர் ஒரு சுயம்சேவக் அல்ல. ஆனால் இவரது தனி செயலாளராக நாவமை மிக்க ஒரு இளைய பிரச்சாரகராக பாரதீய ஜனசங்கத் திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர்தான் அடல் பிகாரி வாஜ்பேயி.

வாஜ்பேயி மட்டுமல்லாது இன்னும் ஏராளமான பிரச்சாரகர்கள் பாரதீய ஜன சங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது அதனை பல கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தன.

அவசர நிலை விலகிய பிறகு நடைபெற்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜெயபிர காஷ் நாராயணனின் முன்முயற்சியால் ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சியுடன் பாரதீய ஜனதா கட்சியும் இணைக்கப்பட்டது. தேர்தலில் ஜனதா கட்சி வெற்றிபெற்ற பிறகு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட அரசில் வாஜ்பேயி, அத்வானி போன்றோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றார்கள்.

ஆனால் இவர்கள் ஜனதா கட்சியில் உறுப்பினர்களாக இருந்த அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலும் உறுப்பினர்களாக இருந்தார்கள். இந்த இரட்டை உறுப்பினர் நிலையை ஜனதாக் கட்சியில் இருந்த மதுலிமாயி போன்ற சோசலிசவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இதன்காரணமாக ஜனதா கட்சியில் இருந்து வாஜ்பேயி உள்ளிட்ட முன்னாள் ஜனசங் கட்சியினர் விலகி 1980ல் பாரதீய ஜனதா கட்சியைத் தொடங்கினார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.சின் மாணவர் அணியாக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) அமைப்பும் தொழிலாளர் அமைப்பாக பாரதீய மஸ்தூர் சங்கும் செயல்பட்டு வருகின்றன. உலகளாவிய அளவில் இந்துத்துவத்தின் ஆதரவாளர் களை ஒருங்கிணைப்பதற்காக விஷ்வ இந்து பரிசத் அமைப்பு தொடங்கப்பட்டது. பெண்களுக்கிடையே இந்துத்துவ பாசிசத்தை வளர்ப்பதற்காக துர்கா வாகினி அமைக்கப்பட்டுள்ளது. இதில் சேரும் பெண்களுக்கும் வன்முறைப் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இளம்பிஞ்சுகளுக்கு மத்தியிலும் இந்துத்துவ பாசிச நஞ்சை விதைப்பதற்காக வித்யா மந்திர் என்ற பெயரில் பள்ளிக்கூடங்களையும் சங்பரிவார் நடத்துகின்றது.

சங்பரிவாரின் மிகவும் பயங்கரமான இரு அமைப்புகளாக பஜ்ரங் தளமும் வனவாசி கல்யாண் கேந்திரமும் அமைந்துள்ளன. கிறிஸ்தவ பிரச்சாரக் குழுக்களை எதிர்கொள்வதற்காக எனக் கூறி வனவாசி கல்யாண் கேந்திரம் அமைக்கப் பட்டுள்ளன.

இந்த அமைப்பு பழங்குடி மக்கள் மத்தியில் சேவை செய்வதற்காகத் தனது ஆட்களை அனுப்பிவைக்கின்றது. பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் மருத்துவ வசதிகளை பள்ளிக்கூட வசதிகள் போன்ற வற்றை இந்த அமைப்பு நிறுவி செயல் பட்டு வருகின்றது. இந்தப் பணிகளைச் செய்யும் அதே நேரத்தில் இந்துத்துவத் தின் கோட்பாடுகளை அவை பழங்குடி மக்கள் மத்தியில் போதிப்பதுடன் மறு மதமாற்றத்திலும் ஈடுபட்டு வருகின்றன. குஜராத், மத்திய பிரதசேம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு இந்த அமைப்பின் செயல்பாடுகள் முக்கியக் காரணமாக விளங்கின.

பஜ்ரங்தளம் இந்துத்துவத்தின் மற்றொரு கோரமுகமாகும். பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் முதலிய சிறு பான்மை மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது இதன் முக்கிய வேலையாகும்.

ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பு பஜ்ரங் தளத்தை `ஒரு தீவிரவாத அமைப்புஎன்று வர்ணித்துள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் ரோஸ் பஜ்ரங் தளத்தினரை நாஜிகளின் அதிரடி வன்கும்பலுக்கு இணையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரிசா கர்நாட கம் போன்ற மாநிலங்களில் தற்போது கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெறும் வன்செயல்களில் முன்னின்று நடத்தி வருவதும் பஜ்ரங்தளத்தினர் தான். மராட்டிய மாநிலம் நான்டெட், கான்பூர் போன்ற நகரங்களில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்த போது அவை வெடித்துச் செத்துப் போனவர்களும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான்.

பாசிச இந்துத்துவத்தை திணிப்பதற்காக பல்வேறு கோணங்களில் செயல்பட பின்வரும் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன

1. பாரதீய ஜனதா கட்சி (உறுப்பினர்கள் 1 கோடியே 70 லட்சம்)
2.
ஆர்.எஸ்.எஸ். (உறுப்பினர்கள் 25 லட்சம்)
3.
பாரதீய கிஸான் சங் (விவசாயிகள் சங்கம்) (உறுப்பினர்கள் 80 லட்சம்)
4.
பாரதீய மஸ்தூர் சங் (தொழிலாளர் சங்கம்) (உறுப்பினர்கள் 45 லட்சம்)
5.
ஆதிவாசி கல்யாண் கேந்திர் (உறுப்பினர்கள் 23 லட்சம்)
6.
மீனவர் கூட்டுறவு சங்கம் (உறுப்பினர்கள் 22 லட்சம்)
7.
விவேகானந்த் மெடிக்கல் மிஷன் (உறுப்பினர்கள் 17 லட்சம்)
8.
அதியபாக் பரிஷத் (உறுப்பினர்கள் 18 லட்சம்)
9.
விவேகானந் கேந்திர் (உறுப்பினர்கள் 18 லட்சம்)
10
பாரதீய விகாஸ் பரிஷத் (உறுப் பினர்கள் 18 லட்சம்)
11.
தீன்தயாள் சோத் சான்ஸ்தான் (உறுப்பினர்கள் 17 லட்சம்)
12.
ராஷ்ட்ரிய சேவிகா சமிதி (பெண்கள் பிரிவு) (உறுப்பினர்கள் 18 லட்சம்)
13.
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (உறுப்பினர்கள் 18 லட்சம்)
14.
ஜனதா யுவ மோர்ச்சா (உறுப்பினர்கள் 18 லட்சம்)
15.
சிக்கா பாரதி (21 லட்சம்)
16.
விஸ்வ இந்து பரிஷத் (28 லட்சம்)
17.
இந்து சுயம்சேவக் சங் (வெளி நாட்டு பிரிவு)
18.
சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (தேசிய விழிப்புணர்வு முன்னணி)
19.
சரஸ்வதி சிசு மந்திர் (பாலர் பள்ளிகளுக்கான அமைப்பு)
20.
வித்ய பாரதி (கல்வி நிறு வனங்கள்)
21.
வனவாசி கல்யாண் ஆசிரம்
22.
பஜ்ரங் தளம் (ஹனுமான் படை)
23.
விஞ்ஞான் பாரதி (அறிவியல் அமைப்பு)
24.
சங்கல்ப்
25.
சன்ஸ்கார பாரதி (கலைஞர்களுக்கான அமைப்பு)
26.
சாஹ்கார பாரதி (கூட்டுறவுக்கான அமைப்பு)
27.
ஆதிவக்தா பரிஷத் (வழக்குரைஞர்களுக்கான அமைப்பு)
28.
வித் சலஹாக்கர் பரிஷத் (கணக்காளர்களுக்கான அமைப்பு)
29.
சேவா பாரதி
30
பாரதீய விசார் கேந்திர்

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், இந்துத்துவத்தின் விஷ வேர்கள் சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையில் திட்டமிட்டு செயல்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த அமைப்புகள் சுதந்திர அமைப்புகளாகச் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் இந்த அமைப்புகளின் குறிக்கோள் தமக்கு அளிக்கப்பட்டுள்ள துறையில் இந்துத்துவத்தை நிலைநாட்டு வதுதான். தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டாலும் மற்ற அமைப்புகள் தமது பணியைத் தொடரும் வகையில் அவை செயல்பட்டு வருகின்றன.

படிக்க:

குண்டுவெடிப்பு பெண் சாமியார் (படங்கள் )

இந்துத்துவ சாமியாரினியின் 38 பேர் உயிரிழந்த குண்டு வைப்புக்கு ராணுவத்தினரின் உதவி அம்பலம்.


மாலேகான் குண்டு வெடிப்பு. ஹிந்துத்துவ சதி அம்பலம் .

மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களின் வீடுகள் வெடிகுண்டுகளின் கிடங்குகளாக மாறி வருகிறது.

குவியல் குவியலான பாஜக தலைவரின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து வெடிப் பொருட்கள்.

சூரத் வெடிகுண்டுகளுக்கு நரேந்திர மோடிதான் காரணம். பூரி சங்கராச்சாரியார்

மும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின!!

மும்பை குண்டு வெடிப்பு பின்னணியில் பஜ்ரங்தள்!

Thursday, October 30, 2008

இட ஒதுக்கிடா? மோசடியா? கீழக்கரையில் IDMK கருத்தரங்கம்

தமிழக இட ஒதுக்கீடும் , இந்திய தேசிய மக்கள் கட்சி கருத்தரங்கமும்

இடம் : ஹீசைனியா மஹால் - கீழக்கரை
நாள் : 03-11-2008 திங்கள் கிழமை
நேரம் : மாலை 6.30 மணி

தலைமை

திரு. எஸ். முஹைதீன் அடுமை அவர்கள்
நகர் தலைவர் - கீழக்கரை

முன்னிலை

திரு. முகவைத்தமிழன் அவர்கள்
ஆலோசகர் மற்றும், இணைய தள பத்திரிகையாளர்

திரு, எம்.ஐ. ஜஹாங்கீர் அவர்கள்
முகவை மாவட்ட செயளாலர்

திரு. ஏ. செய்யது இபுறாஹிம் அவர்கள்
நகர் துனை பொருளாலர் - கீழக்கரை

திரு. எஸ். அயூப்கான் அவர்கள்
நகர் துனை செயளாலர் - கீழக்கரை

வாழ்த்துரை

திரு. சான் பாஷா அவர்கள்
வட சென்னை மாவட்ட அமைப்பாளர்

திரு. அஹமது அனீஸ் அவர்கள்
முகவை மாவட்ட இளைஞாட அணி செயளாலர்

திரு. முகம்மது இக்பால் அவர்கள்
மாநில துனை பொதுச்செயளாலர்

திரு. எம். முகம்மது நஜீம் அவர்கள்
பொருப்பாளர் அமீரகம்

திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள்
திருப்புல்லானி ஒன்றிய செயளாலர்

திரு. தேவ சந்துரு அவர்கள்
மாநில செயளாலர் - தமிழ்நாடு சிறுபான்மை இளைஞர் பேரவை

திரு. க. நாகேஸ்வரன் அவர்கள்
தலைவர் - தமிழர் பாதுகாப்பு பேரவை

சிறப்புரை

தலைப்பு : முஸ்லிம் இட ஒதுக்கிடா ? மோசடியா ?
டாக்டர். பக்ருதீன் B.H.M.S அவர்கள்

தலைப்பு : சமுதாய அரசியல் வீழ்ச்சிக்கு யார் காரணம்?
திரு. காஞ்சி அப்துல் ரவூஃப் பாக்கவி அவர்கள்

தலைப்பு : இந்திய தேசிய மக்கள் கட்சியின் அவசியமும், அவசரமும்
திரு. குத்புதீன் ஐபக் அவர்கள்

தவைர் - இந்திய தேசிய மக்கள் கட்சி

நன்றியுரை

திரு முகம்மது நிரோஸ் அவர்கள்
நகரச் செயளாலர் - கீழக்கரை

குறிப்பு : உங்கள் வினாக்களுக்கு கருத்தரங்கத்தின் முடிவில் விடையளிக்கப்படும். விமர்சனங்கள், ஐயப்பாடுகள் வரவேற்கப்படுகின்றன. உங்கள் வினாக்களிலிருந்து சமூகத்தின் அரசியல் விடியல் பிறக்கட்டும்.

அனைவரும் வாரீர் !! அழைக்கிறது கீழக்கரை IDMK

விடுதலையும், விடியலும் வெகுதூரம் இல்லை...

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
9790318182, 994050565, 9842461363, 9443021050

Wednesday, October 29, 2008

தங்கம் தகடாக மாராது

என்ன கிடைக்கும்?
முஸ்லிம் லீகையும்,
முஸ்லிம் லீக் தலைவர்கலையும்
வறுத்தெடுத்து விமர்ச்சிக்க...
ஆஹா கிடைத்ததே!
தின மலத்தின் ஒரு நாள் மலம்,

படம் போட்டு தந்தோமே சமுதயத்திர்க்கு...
சந்தயில் எடுப்பட்டது
சமுதயத்திர்க்கு சந்தேகமும் ஏர்ப்பட்டது
சான்ருகள் கிடைத்ததும் சமாதானம் ஆனது. ஆம்...!

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால்
சாமியாருக்கு முன்பாக கையில் எலுமிச்சை பழம்,
அதே படத்தில் கையில் இன்று ஆப்பிள்....

பாவம்...!
திருடர்களுக்கு தப்பிக்க தெரிய வில்லை
தின மலத்தை கன்டித்து தலைவர் சொன்ன
அறிக்கயில் உண்மை வெளிவந்ததும்
உருகுலைந்து போனார்கள் உளவாளிகள்!

வேறு என்ன கிடைக்கும்?
கிடைத்ததே! இட ஒதிக்கீடு
உண்மைகளை தொலைத்துக்கட்ட...
ஒரு வார்த்தையில் ஒருவர் சொன்னார்!
இட ஒதுகீட்டிர்க்காக முஸ்லிம் லீக்
எதுவுமே செய்ய வில்லை என்று...

அவர்களுக்குத் தெரிய வில்லை
முஸ்லிம் லீகில் வரலாறு எழுத்திலும் இருக்கும்,
படத்திலும் இருக்கும்,
உயிறுடன் நடமாடும் ,எழுத்தரசு,
போன்ற பல்கலை கழகஙலிலும் இருக்குமென்று.

பாவம்....வாயடைத்துப் போனார்கள்
ஆதாரங்களின் அணிவகுப்பை அடுக்கிய போது..,
சிராஜுல் மில்லத்தின்
கண்டிப்பான வேண்டுகோளையும்
முதல்வரின் கனிவான பதிலையும்,
இறுதியிலே நன்றி கூறும்
வார்த்தைகளை உள்ளடக்கிய
படத்தை பார்த்து...
படபடத்து போனர்கள்...

இது தவிர வேறு என்ன கிடைக்கும்?
கிடைக்கும் எது கிடைத்தாலும்
சமுதாயத்தின் வலிமையான்
கோரிக்கைகள் வரலாறாக கிடைக்கும்...!

ஆம்..!
வரவு செலவு கணக்கில்
சிக்கிவம்பில் மாட்டியவர்கள் இல்லை...!

வாலிபர்களின் உண்ர்வுகளைத் தூண்டிவருடக் கணக்கில் வழக்குகளில் சிக்கவைத்த பெருமைக்குரியவர்களும் இல்லை...!

மானம்,மரியாதை உள்ள சமுதாயத்தை
இன்றும் கண்ணியதோடும்
கவுரவத்தோடும்
வழி நடத்திச் செல்லும் வரலாற்று நாயகர்கள்...!

தங்கம் தகடாக மாறாது
தாய்ச் சபையின் தலைவர்கள்
அன்றும்....இன்றும்....என்றும்...
தங்கத் தலைவர்கள்...!

அதனாலே தான்...!
நூறாண்டு வரலாறு கொண்ட
இயக்கத்தின் தலைவர்கள்
வரலாற்றில் மின்னிக்கொண்டிருக்கிரார்கள்.

(அல்ஹம்துலில்லாஹ்)

ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்,
அபுதாபி,

குர்அன் வசனங்களை வைத்து விளையாட்டு!

உலகின் மிகப்பெரிய வீடியோ விளையாட்டுக்களை தயாரிக்கும் சோனி நிறுவனம், குர்ஆனின் வசனங்களை தனது வீடியோ கேமில் பயன்படுத்தியதற் காக மன்னிப்புக் கேட்டுள்ளது. இத்த கவலை அமெரிக்காவின் சிக்காகோ டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்களிடம் மனம் வருந்தி மன் னிப்புக் கேட்பதாகவும், லட்சக்கணக்கான தங்களது கணினி மற்றும் வீடியோ கேம் பிரதிகளை திரும்பப் பெறுவதாகவும் சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின் மெண்ட் ஆஃப் அமெரிக்காவின் இயக்குநர் பேட்ரிக் செய்போல்டு அறிவித்திருக்கிறார்.
சோனியின் `லிட்டில் பிக் பிளானெட் கேம்’ எதிர்வரும் வெள்ளிக்கிழமை மார்க்கெட்டுக்கு வருவதாக இருந்தது. இந்த வீடியோ விளையாட்டில் இடம் பெறும் இசையுடன் கூடிய பாட்டில் திருக்குர்ஆனின் இரண்டு வசனங்கள் தேவையே இல்லாமல் (முஸ்லிம்களை சீண்டுவதற்காகவே) இடம்பெற்றதால் சர்ச்சைகள் எழுந்தன.
இன்றைய தேதி வரை சோனியின் பி53 மட்டுமே பிரபலமான வீடியோ விளை யாட்டாக இருந்து வந்தது.
தற்போது அந்த சாதனையை முறியடிப்பதற்காக வெளிவந்த சோனியின் லிட் டில் பிக் பிளானட் முஸ்லிம் களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுபிள்ளை விளையாட்டில் குர்ஆன் வசனங்களை சேர்த்தது சிறு பிள்ளை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் விதமாக வீடியோ மார்க்கெட்டுக்கு வரு வது இது முதல்முறையல்ல. ஜப்பான் நிறு வனம் ஒன்றும், அமெரிக்க நிறுவனம் ஒன்றும் இதைப்போன்று மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது

கோட்சே முதல் இன்றுவரை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் கூட்டத்தின் திரைமறைவுச் சதிகள்-கொலைகள்

சங்பரிவார்க் கும்பல் முன்னின்று நடத்தும் வன்முறைகளை முசுலிம்கள் நடத்தியதாகப் பழிபோடும் சூழ்ச்சிகளை தக்க ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.


அறிக்கை வருமாறு:-அண்மைக்காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும் குண்டு வெடிப்புகள் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டு இருக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகின்றன.


வேதனை! வேதனை!! வெட்கம்!!


இந்தக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் மதவெறித்தனம் கொம்பு சீவப்பட்டு இருக்கிறது.


பெரும்பாலும் இந்தக் குண்டுவெடிப்புகளுக்கெல்லாம் முசுலிம் தீவிரவாதிகள்தான் காரணம் என்பது போன்ற ஒரு தோற்றம் கொடுக்கப்பட்டும் வருகிறது!


ஊடகங்கள் கைகளில் இருக்கும் காரணத்தால்...ஊடகங்களில் 71 சதவிகிதம் உயர்ஜாதி பார்ப்பனர்களின் கைகளில் அடைக்கலம் தேடியுள்ளதால், முஸ்லிம் தீவிரவாதம் என்ற தலைப்பில் திட்டமிட்ட வகையில் பிரச்சாரப்படுத்தி வருகின்றனர்.


ஆனால், அண்மையில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் -


கண்டுபிடிப்புகள் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார்க் கும்பல் இதுபோன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு, அந்தப் பழியை முசுலிம்கள்மீது சுமத்தும் ஒரு தந்திரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபித்து வருகின்றன!


இதன்மூலம் பெரும்பான்மை மக்களான இந்துக்களை சிறுபான்மைமக்களான முசுலிம்கள் மீது வன்முறையை ஏவிவிடுவதுதான் இதன் திரைமறைவு நோக்கமாகும்.


பார்ப்பனர்கள் - ஆர்.எஸ்.எஸ். கும்பலைச் சேர்ந்தவர்கள் எப்போதும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடக் கூடியவர்கள் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு.


காந்தியாரைக் கொன்ற கோட்சே!


1. உதாரணமாக தேசப்பிதா என்று மக்களால் மதிக்கப்பட்ட காந்தியாரைச் சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பயிற்சி பார்ப்பனன் என்ன செய்தான்?


தனது கையிலே இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக்கொண்டான்; முசுலிம்களின் மார்க்கப்படியான சுன்னத்தும் செய்துகொண்டிருந்தான் என்றும் கூறுகிறார்கள்!


காந்தியாரைச் சுட்டுக் கொன்றவன் ஒரு முசுலிம் என்று பழி சுமத்தி, பிரச்சாரம் செய்து, இந்துக்களை முசுலிம்கள்மீது மோதவிடும் சூழ்ச்சிதானே இது?


காந்தியாரைக் கொன்றது முசுலிம் அல்ல - ஒரு இந்துப் பார்ப்பனன் என்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர்.


அந்த உண்மை வெளிவருவதற்கு முன்பாக சில ஊர்களில் இந்துக்களால் முசுலிம்கள் தாக்கவும் பட்டனர்.


சதுமுகையில்...


2. தமிழ்நாட்டில் சத்தியமங்கலத்தையடுத்த சதுமுகை என்ற ஊரில் விநாயகன் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டு இருந்தது. இன்னொரு சாமி சிலை பீடத்திலிருந்து கீழே தள்ளப்பட்டு இருந்தது


.3.ஊரில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினரின் புத்திசாலித்தன மான விசாரணையில் சிக்கியவர்கள் யார் என்றால், அவ்வூர் இந்து முன்னணியைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 17) மற்றும் செல்வக்குமார் (வயது 23) ஆகியோர்.தாங்கள்தான் அவ்வாறு செய்ததாக இந்து முன்னணியைச் சேர்ந்த இருவரும் ஒப்புக்கொண்டனர்.


திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள்மீது பழியைப் போடுவதுதான் அவர் களின் நோக்கம் என்ற குட்டும் உடைபட்டது. (தி இந்து, 18.2.2002).


தென்காசியில்...

3. அதேபோல, திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடந்த குண்டுவெடிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். 2006 ஜனவரி 24 இல் இது நடந்தது.


இந்து - முசுலிம் மதக் கலவரத்தைத் தூண்டவேண்டும் என்ற பின்னணியில் இந்து முன்னணியினர் இருந்தனர்.


தென்காசி நகர இந்து முன்னணியின் தலைவர் குமார்பாண்டியன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப் பட்டார். இதில் மூன்று முசுலிம்கள் கைது செய்யப்பட்டனர்.


மதக் கலவரம் ஏற்பட்டு, முசுலிம்களின் கடைகளும், வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன.நோக்கம் மதக் கலவரத்தைத் தூண்டுவதே!


இதன் பின்னணியில் தென்காசியில் இந்து முன்னணி அலுவல கத்தில் குண்டுவெடித்தது. இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப் பட்டனர். அத்தனைப் பேரும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள்.


குமார்பாண்டியன் கொலை செய்யப்பட்டபோது பெரிய அளவில் மதக்கலவரம் ஏற்படாததால், இந்தக் காரியத்தைச் செய்து அதன் மூலம் பெரிய அளவு கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்பதுதான் தங்கள் நோக்கம் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.


கடையநல்லூரைச் சேர்ந்த சிவா என்ற சிவானந்தம் தமிழக இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆவார். இவர் கேரளாவில் கல்குவாரியில் வேலை செய்தவர். பாறைகளை உடைக்கப் பயன்படும் அமோனியம் நைட்ரேட்டை வெடிகுண்டு தயாரிப்பதற்காக இவர் கொடுத்திருக்கிறார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.


கான்பூரில் நடந்தது என்ன?


4. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 2008 பிப்ரவரி 24 இல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலம் சங் பரிவார்க் கும்பல் வெடிகுண்டு தயார் செய்யும் தொழிற்சாலையையே நடத்திவரும் சங்கதி வெளியில் வந்தது.


5.பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஸ்ரா மற்றும் பூபீந்தர் சிங் ஆகியோர் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும்பொழுது எதிர்பாராதவிதமாக அவை வெடித்து உடல் சிதறிப் போனார்கள்.


மிகப்பெரிய தொடர் குண்டுவெடிப்பு வன்முறைக்கு அவர்கள் திட்டம் தீட்டியிருந்தது தெரிய வந்தது. கான்பூர் காவல்துறை அய்.ஜி. எஸ்.என். சிங் செய்தியாளர்களிடம் இதுபற்றி விளக்கினார்.


வெடிகுண்டு தயாரிப்புக்குத் தேவையான ஏராளமான பொருள் களும் கைப்பற்றப்பட்டன.இராணுவத்தில் பயன்படுத்தப்படக் கூடிய குண்டுகளுக்கு ஒப்பானவை அவை!


வரைபடங்களும், நாள்குறிப்பு, தாக்கப்படவேண்டிய முசுலிம் களுக்குச் சொந்தமான முக்கிய இடங்கள்பற்றிய விவரங்கள் எல்லாம் கிடைத்தன.


மகாராட்டிரத்தில்...


6. மகாராட்டிரத்தில் நந்தித் எனும் இடத்தில் இதேபோல, குண்டு களைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, வெடித்துச் சிதறியதால் பஜ்ரங்தள் தீவிரவாதிகளான நரேஷ்ராஜ் மற்றும் ஹிமான் ஷீ பான்சே ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர் (4.5.2006).


7. பெண் சாமியார் சிக்கினார்


மகாராட்டிர மாநிலம் மலேகானில் சிமி அலுவலகம் சக்தி வாய்ந்த குண்டுகளால் தகர்க்கப்பட்டது (29.9.2008).


ஆறு இசுலாமியத் தோழர்கள் பலியானார்கள்; 90 பேர் படுகாயமடைந்தனர்.மோட்டார் சைக்கிளில் மர்ம மனிதர்கள் வெடிகுண்டுகளை எடுத்துவந்து வெடிக்கச் செய்திருப்பது புலன் விசாரணையில் தெரிய வந்தது.


டைமர் கருவி பொருத்தப்பட்டு இருந்த அந்த வெடிகுண்டு ஆர்.டி.எக்ஸ் மற்றும் அமோனியம் நைட்ரேட் கலவையால் தயாரிக்கப்பட்டு இருந்தது.புலன் விசாரணையில் பெண் சாமியார் பிரக்யாசிங் பாரதி தாக்கூர் (வயது 38) என்பவர் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டுவிட்டார்.


வந்தே மாதரம் என்ற அமைப்பைத் தொடங்கிய இந்தப் பெண் சாமியாருக்கு உச்சநீதிமன்றத்தால் நீரோ மன்னன் என்று வருணிக்கப்பட்ட முதலமைச்சராகிய நரேந்திரமோடி, குஜராத் மாநில அரசின் உதவித் தொகையெல்லாம் கூட கிடைத்து வருகிறதாம்!


படிக்கும் காலத்தில் ஆர்.எஸ்.எஸின் மாணவர்ப் பிரிவான ஏபிவிபியில் (ஹக்ஷஏஞ) தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார். துர்காவாகினி, ஜாக்ரான் மஞ்ச் இவைகளில் தீவிர உறுப்பினராக இருந்திருக்கிறார் இந்தப் பெண் சாமியார்!


பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரிடம் நெருக்கமானவர் இந்தப் பெண் சாமியார். மேடைகளில் இந்து வெறித்தன நெருப்பைக் கக்கும் பேச்சாளர் இவர்.


இவரோடு மேலும் மூவர் இந்த வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளனர். மூவரும் இராணுவத்தில் பணி யாற்றிய அதிகாரிகள். இருவர் கைது செய்யப்பட்டு விட்டனர்;


இராணுவப் பணியில் இருக்கும் இன்னொருவரைக் கைது செய்ய இராணுவத் துறையிடமிருந்து அனுமதிக்காகக் காத்திருக்கின்றனர்.குல்கர்னி, உபாத்யா ஆகிய முன்னாள் இராணுவ அதிகாரிகள் ஆவார்கள். நாசிக் அருகே இராணுவப் பயிற்சி மய்யம் ஒன்றினை நடத்தி வருகின்றனர்.


வெடிகுண்டுகளைத் தயார் செய்வது எப்படி? அவற்றைக் கையாளுவது எப்படி என்கிற பயிற்சிகளையெல்லாம் சங் பரிவார்க் கும்பலுக்கு இவர்கள் கற்றுத் தந்துள்ளனர்.


பா.ஜ.க. மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இராணுவத்திலும் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களை நுழைத்தனர்.


விமானப் படைத் தளபதி விஷ்ணு பகவத் இதனை அப்பொழுதே வெளிப்படுத்தியதுண்டு.பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள், தளபதிகள் கலந்துகொண்டு விளக்கம் அளித்ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.


96 ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் பி.ஜே.பி.யில் சேர்க்கப்பட்டது ஏன் என்பது இப்பொழுது மகாராட்டிரத்தில் - வெடி குண்டு வழக்கில் இராணுவ அதிகாரிகள் மூவர் சம்பந்தப்பட்டதி லிருந்து தெரிந்துகொள்ளலாமே!


மகாராட்டிர மாநிலம் மலேகானில் குண்டுவெடித்த அதே நாளில் குஜராத் மாநிலம் மாடேகாவிலும் குண்டுவெடித்தது. இரண்டும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் இதற்குமுன் நடைபெற்ற அனைத்துக் குண்டுவெடிப்புகளின் பின்னணியில் சங் பரிவார்க் கும்பல் பெரும்பாலும் இருந்திருக்க வாய்ப்பு உண்டு என்று கருதப்படுகிறது.


இராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் பயிற்சி நிலையங்களையும், தொழிற்சாலைகளையும் வைத்து திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பல் செயல்பட்டதைப் பார்க்கும்பொழுது இந்த அபாயகரமானவர்கள் நாடு முழுவதும் வெடிகுண்டு வேலையை அரங்கேற்றுபவர்கள் என்பது எளிதில் விளங்கிவிடும்.


சூரத் நகரில் வெடிகுண்டு சேதத்தைப் பார்வையிட நரேந்திர மோடி வந்தபோது, பாதையில் மரங்களில் வைக்கப்பட்டிருந்த 18 வெடிகுண்டுகளைக் காவல்துறையினர் கண்டுபிடித்து எடுத்தனர். வைத்ததே அவர்களாகவே இருக்கக்கூடும் என்கிற அய்யம் நியாயமானதே!


சங் பரிவார்க் கும்பல் இப்படியெல்லாம் வன்முறைக்குத் தேவையான பொருள்களை உற்பத்தி செய்ய தொழிற்சாலை களையெல்லாம் வைத்துச் செயல்படும் பயங்கரமான தகவல்கள் அம்பலத்திற்கு வந்து கொண்டேயிருக்கின்றன.


வழக்கம்போல் எங்கள் மீது அபாண்ட பழி என்று கூறி கூக்குரல் போடுகிறார்கள் சங் பரிவார் மற்றும் பா.ஜ.க.வினர்.இந்த யோக்கியதையில் உள்ள ஒரு கூட்டம் சிறுபான்மை யினர்மீது வன்முறை முத்திரை குத்தி அவர்களுக்கு எதிரான வெறுப்பினைத் தூண்டும் ஒரு வேலையில் திட்டமிட்ட முறையில் இறங்கியுள்ளது என்பதுதான் உண்மை.


இதுபோலவே ஒரிசாவிலும் கிறித்தவர்கள்மீது பழி - படுகொலைகள்.
நடவடிக்கைகள் தேவை
மத்திய - மாநில அரசுகள் இந்த அமைப்புகளைப் பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியிலில் வைத்து சட்ட ரீதியான கடும் நடவடிக்கைகளை உடனடியாகச் செய்யாவிட்டால், நாடு பெரும் விலையைக் கொடுக்கவேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறோம்.
2008தலைவர், திராவிடர் கழகம்

சென்னை28.10..


குறிப்பு: இவ்வறிக்கை துண்டறிக்கையாகவும் கிடைக்கும்; வாங்கி ஊர்தோறும் பரப்புங்கள்.http://files.periyar.org.in/viduthalai/20081028/news01.html

படிக்கவும் >