Sunday, June 03, 2007

உயிருக்கு போராடும் சிறைவாசி - அரசு நடவடிக்கை எடுக்குமா?


நீதிபதி இரத்தினவேலு அவர்கள் சிறைவாசி அபுத்தாஹிருக்கு எம்.ஏ பட்டத்தை வழங்குகின்றார் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோசல ராமன் டி.ஐ.ஜி எஸ்ரா ஆகியோர் விரைவில் பி.பி.ஏ தேர்வு எழுத இருந்தவர் ஆனால் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இன்று காவல் துறையின் நிராகரிப்பால் உயிருக்கு போராடுகிறார்.

உயிருக்கு போராடும் சிறைவாசி - அரசு நடவடிக்கை எடுக்குமா?

நடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாய் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விசாரனை கைதியாக வாடி வரும் 30 வயதே ஆன அபுதாஹிர் என்ற முஸ்லிம் வாலிபர் கடந்த சில மாதங்களாக மோசமான வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கொடிய நோயால் வடி வந்தார் இந்நிலையில் கடந்த மே 14ம் தேதி உடல் வீங்கிய நிலையில் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி கடந்ம மே 16ம் தேதி வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் சிறப்பு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அதனடிப்படையில் கடந்த மே 21 அன்று அரசு மருத்துவமனையில் சேர்த்து உடனடி சிகிச்சைக்கு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம் அவருடன் 2 உறவினர்களும் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கியிருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் நீதிமன்றத்'தின் இந்த தீர்ப்புக்க எதிராக செயல்பட்ட காவல்துறையின் காவிமயமாக்கப்பட்ட கருப்பு ஆடுகள் மனிதாபிமான அடிப்படையில் கூட உடல் வீங்கி உயிருக்கு போராடும் அபுத்தாஹிர் என்ற 30 வயதான முஸ்லிம் வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து சிறைக்கே கடந்த 26.05.2007 அன்று திருப்பி அனுப்பிவிட்டனர்.

கடந்த 28ம் தேதி மீண்டும் வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்குமாரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுச்செய்து உடனடியாக தனியார் மருத்தவமனையில் சிகிச்சைபெறவும் சிகிச்சையின்போது அபுத்தாஹிரின் சகோதரர் மற்றும் அவரது தந்தை உடனிருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 29ம் தேதி தனியார் மருத்தவமனைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவரது தந்தையையோ சகோதரரையோ நெருங்கவிடாமல் திரைமறைவில் மருத்துவமனை நிர்வாகத்தினரை மிரட்டி உடனடியாக திரம்பவும் சிறைக்கு அழைத்து சென்றுவிட்டனர். இது வரை இருமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் சரியான சிகிச்சை வழங்காமல் வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நடத்தி நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே நிலையில் நீதி மன்றம் பலமுறை உத்தரவிட்டும் காவி மயமாகிப்போன காவல் துறையின் கருப்பு ஆடுகளின் இடையூரால் முறையான சிகிச்சையின்றி இவ்வழக்கின் எதிரி என் 104 ஷெரீஃப் என்ற முஸ்லிம் உயிருக்கு போராடிய நிலையில் அரசு சிகிச்சைக்கு உத்ரவிட்டும் சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாதென உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கியது ஆனால் முஸ்லிம்கள் பெரும் அளவில் வெளியே போராட்டங்கள் நடத்தியதால் பின்னர் பின்வாங்கியது.

இதுபோலவே கடந்த இரன்டான்டுகளுக்கு முன் குடல் வால் அறுவை சிகிச்சைக்காக இவ்வழக்கின் எதிரி என் 49 அப்பாஸ் என்ற முஸ்லிம் வாலிபருக்கு எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் கொடுங்கொல்லி நோயை இவரது உடலில் செலுத்தி அவரை மரணத்தை நோக்கியவராக மாற்றியதும் இதே காவி மயமாக்கப்பட்ட காவல் துறைதான்.

கேரளாவை சேர்ந்த அப்துன் நாசர் மதனியினுடைய கதையோ சொல்லிப் புறிய வேண்டியதில்லை. இவ்வாறாக முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி விசாரனை சிறைவாசிகளுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் மறுத்து அவர்களை கொலை செய்து வருகின்றது காவல்துறை. நீங்கள் விடுதலையானாலும் உங்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்று கூக்குரலிடுகின்றது காவி வெறிபிடித்தவர்களால் நிறம் மாறி கிடக்கும் காவல்துறையின் புலனாய்வு துறைகள்.

தீர்ப்பு வரும் சமயத்தில் குன்டு வைக்க சதி, பயிற்சி அது இது என்று பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்களை பீதியடையச் செய்யும் செயலை உளவுத்துறையினர் செய்து வருகின்றார்கள். இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என் ஊடகங்களை கேட:டக் கொள்கின்றோம்.

தற்போது நீதிமன்றத்தின் பல உத்தரவுகளுக்கு பின்னரும் உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஏற்கனவே பலர் இதுபோன்று சிகிச்சை மறுக்கப்பட்டு காவல்துறையின் சதியால் சிறையிலேயே பலியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற அனுமதிக்க கூடாது எனவும் சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவாகள் நேற்று கோவையில் நடைபெற்ற பதிதிரிகையாளர் சந்திப்பில் தெறிவித்தார்.

உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி ஆபத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு உத்தரவிடக் கோரி தமிழக மனித உரிமை அமைப்புக்களும் மற்றும் தமிழக முஸ்லிம்களின் சமுதாய இயக்கங்களும் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவர்களுடன் சிறுபான்மை அறக்கட்டளை நிர்வாகிகள் கோட்டை தங்கப்பா, ஆபத்தாஙிர் மற்றும் வழக்கறிஞர்கள் பசீர் அகமது, கலையரசு ஆகியோர் உடனிருந்தனர்.

இஸ்லாம் முஸ்லிம்

No comments: